அடுத்த கவியரங்கம்-எண்30தலைவர்- கவியோகி, கவிமாமணி வேதம்தலைப்பு: உயர உயர. .நாள்: 10ஜூலை 2009புதிய கவிஞர்கள் தங்கள் விவரங்களைக் கவியோகிக்கு நேரடியாக அனுப்பினால் அவர் அழைக்க ஏதுவாக இருக்கும்.முதல் ஒப்புதல்- இலந்தை
தங்கமணி அம்மை,ஹரி கி்ருஷ்ணன்(ஹரியண்ணா),
அன்புடன்,
தங்கமணி.
துண்டாகும் வைரங்கள் துருப்பிடித்துப் போகாவாம்
கொண்டாடும் வகையினிலே கொடிபிடித்தார் நம் வேதம்
தலைமைக் கவிதையிலே தான்தொட்டார் தொட்டபெட்டா
கலையழகு கொஞ்சுமக் கவிதையினைப் போற்றுகிறேன்
இலந்தை
போகமும் யோகம் என்ற
புதுவழி காட்டு வித்தே
யோகியாய் இருக்கும் எங்கள்
உத்தமக் கவிஞர் இங்கே
ஏகமாய்க் கவிதை மாரி
இதமுடன் பெய்துவிட்டார்
தாகமும் தணிந்தோம் வேதத்
தலைமக்கென் நல்வணக்கம்!
பாராட்டு கின்றநற் பண்பாளர் தீங்கவிதைத்
தேரோட்டம் கொள்ளும்வே தம்.
பறவையே, வானத்தின் உறவையே நாடியே
பறக்கின்ற எழிலூர்தியே
பரவிய வான்வெளி விரிவதன் வீச்சிலே
பயணங்கள் செய்நேர்த்தியே
குறியையும் மண்ணிலே உறுதியாய் நாட்டியே
கொண்டாட்டம் கொள்ளுகின்றாய்
குத்திய பார்வையில் கொத்திய இரையினைக்
கும்பியில் தள்ளுகின்றாய்
குறைபடும் வாழ்விலே சிறைபடும் நானிங்கு
குந்தியே மேல்பார்க்கிறேன்
கும்பிக்கு வேண்டியே தம்பிக்கும் போட்டியில்
கூத்தாடி நான்வாழ்கிறேன்
அறிவெனும் தறியிலே அடிபடும் நானிங்கே
ஆகாயம் காண வேண்டும்
ஆகாய ஊர்தியே, வாகாகவே வேயெனை
ஆற்றுப்படுத்துவாயே!
எல்லைகள் உனக்கெதும் தொல்லைகள் இல்லையே
இடம்மாறிச் செல்லுகின்றாய்
இத்தேசம் அத்தேசம் என்கின்ற தடைகளை
எளிதிலே வெல்லுகின்றாய்
வல்லைநீ, உன்னைநான் வாழ்த்துவேன் வாயுவின்
மாசக்தி பெற்றுளாய்நீ
வான்வெளி நீச்சலும் மாகடல் பாய்ச்சலும்
வகையுடன் கற்றுளாய்நீ
நல்லைநீ ஆகிட நானுமோர் வாய்ப்பினை
நல்குவேன் உன்றனக்கு,
நாளெலாம் தரையிலே வாளா யிருக்கின்ற
நானுனை வேண்டுகின்றேன்
ஒல்லையிவ் வான்வெளி உயரப் பறந்திந்த
உலகினைப் பார்க்க வேண்டும்
உத்திநீ என்றனின் புத்தியில் சேர்த்தருள்
ஒருகோடி வந்தனங்கள்!
மண்ணிலே வந்ததும் எண்ணியே நாட்களை
வாளாக் கழிப்பதற்கா?
வாதுக்கும் வம்புக்கும் வாய்க்கத்தி வீச்சுக்கும்
மாறியே வேர்ப்பதற்கா?
எண்ணிலாச் சிகரங்கள் ஏறியே பார்த்திட
எத்தனை ஆசைகொண்டேன்
ஏறியே ஏறியே ஏறியே செல்கிறேன்
எதுவழி தோன்றவில்லை.
கண்ணிலே காண்கிறேன் வண்ணங்கள் ஆயிரம்
கவர்ச்சியில் மயங்கிவிட்டேன்
காதங்கள் ஒருநூறு கால்களில் சேர்த்திடும்
கடமையில் தயங்கிவிட்டேன்
விண்ணிலே காண்கின்ற நட்சத்திரங்களை
வேடிக்கை பார்க்க வேண்டும்
மேகத்தின் மேலேயும் உயரங்கள் காண்கின்ற
வித்தகம் சேர்க்க வேண்டும்
உள்ளமே, உணர்வுகள் வெள்ளமே, நீயினும்
உயரங்கள் காணவேண்டும்
உன்னையே எண்ணிடும் உன்மத்தம் நீங்கிடும்
உன்னதம் பேணவேண்டும்
அள்ளிடும் கவிதையில் ஆனந்தம் ஆனந்தம்
அடுத்தடுத்(து) உயரவேண்டும்.
அதனையும் கொள்பவர் எதனையும் விஞ்சிடும்
ஆனந்தம் கொள்ளவேண்டும்
எள்ளலும் போற்றுதல் விள்ளலும் ஒன்றென
இதமுடன் ஏற்கவேண்டும்
இதனையே உயரத்தின் உயரமாய் எண்ணுவேன்
ஈடிதற் கில்லை யென்பேன்!
தெள்ளரும் செந்தமிழ்ச் செல்வியே, தெய்வமே
தேனிசைக் கலைவாணியே,
தீர்க்கமாய் ஓர்மொழி சொல்லுக ‘வெல்கநீ
வெல்கநீ, வெல்க’ வென்றே!
ஆதார முலத்தில் அடங்கிக் கிடக்கின்ற
அரவமே கண்விழிப்பாய்
அடுத்தடுத்(து) உயருவாய் அமுதமே பெய்குவாய்
அங்கங்கு நீநடிப்பாய்
காதோரம் ஓரொலி கணகண என்றிடும்
கண்களில் வண்ணமூட்டம்
கறங்கிடும் வளையங்கள் கழன்றிடும் நினைவுகள்
கட்டிலே மனத்தினோட்டம்
ஏதோவோர் நாளிலே எங்கேயோ ஒர்தூளி
எட்டியே பார்த்ததுண்டு
இன்பத்தின் எல்லைக்கே ஏதோவோர் கவிதையும்
இழுத்துவந் தார்த்ததுண்டு
ஓதாமல் உணராமல் ஒழுகாமல் இதுவரை
ஒருவாறிங்(கு) ஓட்டிவிட்டேன்
ஒன்றையும் கருதாமல் தெய்வமே, ஆதாரம்
உயரவே செய்தருளுவாய்!
இலந்தை
11-10-2009
ஆகாய ஊர்தியே, வாகாகவே வேயெனைஆற்றுப்படுத்துவாயே!
பல அடிகளில்
சீர்களிடையே எதுகை அமைந்த
ஒலிநயம் மிகுந்த பாடல்.
//
உள்ளமே, உணர்வுகள்
வெள்ளமே, நீயினும்
....உயரங்கள்
காணவேண்டும்
....உன்னையே
எண்ணிடும் உன்மத்தம்
நீங்கிடும்
....உன்னதம்
பேணவேண்டும் //
நல்ல
கருத்து.
முதல்
பாடலில் எழிலூர்தியே,
செய்நேர்த்தியே,
என்பன போல் கொள்ளுகின்றாய்,
தள்ளுகின்றாய்
என்பனவற்றையும் கொள்கின்றனை,
தள்ளுகின்றனை, எனக்
கனிச்சீராக அமைத்திருக்கலாமோ?
"வாளா
யிருக்கின்ற" - 'வாளாவிருக்கின்ற'
என்றிருக்கவேண்டுமோ?
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
வானில் பறந்திடும் புள்ளினம் போல மகிழ்ந்திட ஆவல்கொண்டார் - அதை
.. வாழும் முறையில் அடைவதற் குவரம் வாணியைக் கேட்டுநின்றார்
அனந்த்
பி.கு. .. ’ஏறியே செல்கிறேன் எதுவழி தோன்றவில்லை’ - எதுவழி தெரியவில்லை எனலாமோ?
"உள்ளமே, உணர்வுகள் வெள்ளமே, நீயினும்
உயரங்கள் காணவேண்டும்
உன்னையே எண்ணிடும் உன்மத்தம் நீங்கிடும்
உன்னதம் பேணவேண்டும்"
".....ஆகாய ஊர்தியே, வாகாகவே வேயெனை
ஆற்றுப்படுத்துவாயே!"
//மண்ணிலே வந்ததும் எண்ணியே நாட்களை
வாளாக் கழிப்பதற்கா?
வாதுக்கும் வம்புக்கும் வாய்க்கத்தி வீச்சுக்கும்
மாறியே வேர்ப்பதற்கா?//
//உள்ளமே, உணர்வுகள் வெள்ளமே, நீயினும்
உயரங்கள் காணவேண்டும்
உன்னையே எண்ணிடும் உன்மத்தம் நீங்கிடும்
உன்னதம் பேணவேண்டும் //
எள்ளலும் போற்றலும் எளிதாக ஒன்றென்னும்
உள்ளமே உயரத்தின் உச்சியென்ற இலந்தைவெல்க!
அன்புடன்,
தங்கமணி.
On Jul 11, 2:48 pm, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
> போகமும் யோகம் என்ற...
>
> read more »
>
> புதுவழி காட்டு வித்தே
>
> யோகியாய் இருக்கும் எங்கள்
>
> உத்தமக் கவிஞர் இங்கே
>
> ஏகமாய்க் கவிதை மாரி
>
> இதமுடன் பெய்துவிட்டார்
>
> தாகமும் தணிந்தோம் வேதத்
>
> தலைமக்கென் நல்வணக்கம்!
>
> பாராட்டு கின்றநற் பண்பாளர் தீங்கவிதைத்
>
> தேரோட்டம் கொள்ளும்வே தம்.
> **
> இலந்தை
> **
> *உயர , உயர.. *
> 2009/7/11 Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>
>
>
>
> > ஓகோகோ! அப்படியா?வருந்துகிறேன். நல்லவேளை ஒரு ஆபத்தும் இல்லையென நீவிர்
> > சொன்னதும் ஆறுதலாயிருந்தது.இடுகைஇரு கையால் இடுக..
> > விரைவில் இலந்தையின் பாகுக் கவிதை
> > இரைதரும்!-- நெஞ்சே! இரு!
> > யோகியார்்
>
> > 2009/7/11 SUBBAIER RAMASAMI <eland...@gmail.com>
>
> > அன்புள்ள வேதம்,
>
> >> இரண்டு நாட்களாக 'இண்டெர்நெட்' இழுபறி. . நேற்று இரவு வீட்டு மின்சார
> >> மெயினில் நியூட்ரல் எரிந்துவிட்டதால் இரண்டு மடங்கு வோல்ட்டேஜுக்கு எகிறி
> >> மின்விசிறி அசுரவேகத்தில் ஒட டியூப் லைட் வெடிக்க ஒரே களேபரம்.
> >> கெட்டதிலும் ஒரு நல்லதாக, இங்கே லோவோல்டேஜாக இருப்பதால் இரண்டு மடங்கு
> >> 440க்குப் பதிலாக 280க்குள் இருந்ததால் கம்ப்யூட்டர், டி.வி ஃப்ரிட்ஜ் ஆகியவை
> >> பழுதூபடாமல் உடனே காப்பாற்ற முடிந்தது.
> >> சரியான வோல்டேஜ் (220) இருந்திருந்தால் எல்லாம் 'பணாலாகியிருக்கும்.
> >> இந்த இக்கட்டுக்கு இடையில் தான் கவிதை எழுதினேன். அதை அடுத்த இடுகையில்
> >> இடுகிறேன்.
>
> >> இலந்தை
>
> >> 2009/7/11 Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>- Hide quoted text -
>
> - Show quoted text -
பல அடிகளில் சீர்களிடையே எதுகை அமைந்த ஒலிநயம் மிகுந்த பாடல்.
// உள்ளமே, உணர்வுகள் வெள்ளமே, நீயினும்....உன்னதம் பேணவேண்டும் //
....உயரங்கள் காணவேண்டும்
....உன்னையே எண்ணிடும் உன்மத்தம் நீங்கிடும்முதல் பாடலில் எழிலூர்தியே, செய்நேர்த்தியே, என்பன போல் கொள்ளுகின்றாய், தள்ளுகின்றாய் என்பனவற்றையும் கொள்கின்றனை, தள்ளுகின்றனை, எனக் கனிச்சீராக அமைத்திருக்கலாமோ?
நல்ல கருத்து.
"வாளா யிருக்கின்ற" - 'வாளாவிருக்கின்ற' என்றிருக்கவேண்டுமோ?
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
சிவ சிவா கேள்விகளுக்கு நன்றி
உடம்படு மெய்யில் யகரம் வகரம் இரண்டுக்கும் இடமுண்டு. சில உயிர்களுக்கு வகரமும் வேறு சிலவற்றிற்கு யகரமும் வரும் என்று சொல்கிறவர்களும் உண்டு.
எ.கா :கோ+இல் என்பதைக் கோயில் கோவில் என்று இரண்டு வகையாக எழுதுகிறோம். ஆனால் கோவில்தான் சரி என்று தேர்ந்த இலக்கணப் புலவர்கள் சொல்கிறார்கள்.
கொள்கின்றனை என்பது சரியாக இருக்கும் ஆனால் தள்ளுகின்றனை என்னும் போது ஓசை கூடிவிடும்.
இலந்தை
அனைவரும் வாழ்க நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
குறைபடும் வாழ்விலே சிறைபடும் நானிங்கு
குந்தியே மேல்பார்க்கிறேன்
கும்பிக்கு வேண்டியே தம்பிக்கும் போட்டியில்
கூத்தாடி நான்வாழ்கிறேன்
அவை வணக்கம்
============
நேச வசந்தக் கவிஞர்களை,
. நீலாங் கரைவாழ் தலைவர்தமை,
வீசம் அறிவில் லாஅடியேன்
. மெத்த வணங்கித் தொடங்கிடுவேன்.
ஈசன் கருணை கிடைத்திடுமோ?
. இடுகை கவியாய் மாறிடுமோ?
வாசிப் போர்கள் என்குறைகள்
. மன்னித் தருள வேண்டுகிறேன்
தலைவர் வாழ்த்து
===============
உவமை பிளிறும் கவிவேழம்,
. உணர்ச்சி அவரின் காண்டீபம்;
நவமாய்ப் பாடற் கருவமைத்து
. நகையும் தெளிக்கும் மாமணியார்;
கவிதைப் பரிசு பெற்றகுறுங்
. காவ்யம் படைத்த கவியோகி;
தவமார் 'அன்னை சக்தியில்ல'த்
. தலைவர் வேதம் வாழியவே!
அரங்கக் கவிதை
============
உயர ! உயர !
<><><><><><>
'உயர்வென்றால் எவரெஸ்டு; அதனைத் தவிர்த்தால்
. உனையுந்தும் இலக்(கு)உலகில் இல்லை! இல்லை!' -- என்று
அயராதே! சரிவுள்ள வாழ்க்கைக் குன்றில்
. அனைவர்க்கும் ஒருசிகரம் உண்டு! உண்டு! (1)
எல்லையற்ற வானம்நம் முன்னே விரிய
. இசைப்புள்கள் பறக்குதுபார், உயர! உயர! -- அதுபோல்
எல்லோரும் அகச்சிறகை அடித்தே உயர்ந்தால்
. எட்டாத விண்ணுண்டோ? ஜெயமே! ஜெயமே! (2)
உயர்வென்னும் உன்னதம் எதுவோ என்றுன்
. உள்ளத்தைத் தட்டின்அது சொல்லும்! சொல்லும்! -- சிறிதும்
தயங்காமல் நம்பிக்கைச் சிறகை விரித்துத்
. தனிவானில் பறந்திடுவாய், உயர! உயர! (3)
வெற்றிமங்கை அரவணைப்பை விரும்பு வோருள்
. வினைத்திட்பம் கொண்டவர்கள் உண்டு! உண்டு! -- அவர்தம்
உற்சாகத் துளிர்கள்மேல் நிறைய வெந்நீர்
. ஊற்றிடுவோர் உலகினிலே உண்டு! உண்டு! (4)
"உயரத்தில் பறந்தாலும் சின்னஞ் சிறிய
. ஊர்க்குருவி பருந்தாமோ? சொல்லு! சொல்லு!" -- என்றுன்
செயம்நாடும் ஊக்கத்தைச் சிதைத்தே விடுவார்!
. சிகரங்கள் உன்கண்முன் சாயும்! சாயும்! (5)
"பக்கத்தில் நிற்பவனின் பாதம் அடியே
. பள்ளமொன்று பறித்தால்நீ உயர்வாய்! உயர்வாய்!" -- என்று
வக்கிரமாய்ப் பரிந்துரைப்போர் சொல்லைக் காதில்
. வாங்காதே வாழ்வினிலே, என்றும்! என்றும்! (6)
பயனுள்ள அறிவுரைக்கா நாட்டில் பஞ்சம்?
. பழங்கதையும் உதவிடுமே கொஞ்சம்! கொஞ்சம்! -- நீயும்
தயங்கிநின்ற அனுமானைத் தட்டிக் கொடுத்த
. ஜாம்பவனை நினைத்தெழுவாய், உயர! உயர! (7)
விழுவதுண்டு நெடிதுயர்ந்த வலிய மரங்கள்
. வீசிடுமோர் புயல்காற்றில் கீழே! கீழே! -- ஆனால்
தழைந்துநிற்கும் நாணலுமே அந்தப் புயலில்
. தலைவணங்கிப் பின்நிமிரும் உயர! உயர! (8)
பணிவுள்ள வாமனன்போல் இன்றுன் வெற்றிப்
. பயணத்தைத் தொடங்கிவிடு தம்பி! தம்பி! -- பின்பு
மணிவண்ணன் உலகளக்க மாறி யதுபோல்
. வளர்ந்திடுவாய் விக்ரமனாய் உயர! உயர! (9)
'வெள்ளத்த னையதுமலர் நீட்டம் மாந்தர்
. உள்ளத்த னையதுயர்வு' கேளீர்! கேளீர்! -- அந்த
வள்ளுவனின் மணிமொழியை நாமும் வாழ்வில்
. மறக்காமல் கடைபிடிப்போம்! வாரீர்! வாரீர்! (10)
~*~*~<><>~*~*~
(*கவியோகியார் இட்ட கவிஞர் பட்டியலில் ‘ஒரு சஸ்பென்ஸ் அன்பர்’ எனக்
குறிப்பிடப்பட்டவர!்)
அனந்த்
12-7-2009
> 2009/7/12 Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>
>
>
>
>
>
> > அன்பர் டாக்டர் கவிஞர் பசுபதி;-(கானடா)
> > $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
> > சென்னையிலே பட்டம் பெற்றார்;
> > ..டொறோண்டோவில் சேவை செய்தார்;
> > முன்னைப்ப ழம்பொருள் “டிஜிடலில்’
> > ..மூவாத ஆய்வு பண்ணி
> > தென்னையைப்போல் மிக,மிக் குயர்ந்தே
> > ..தெங்கிள-வி ருதெலாம் பெற்றே
> > இன்னமும்வா லிபம்த தும்ப
> > ..எல்லோர்க்கும் உதவும் “பசுபதி”!
> > ..
> > விஞ்ஞானம்,சங்கீதம்,’கவிகள்”-என்றே
> > ..விதவிதமாய் வித்தகங்கள் பெற்று,-இவர்,
> > அஞ்ஞானம் போக்குகிற இலக்கியத்தில்,
> > ..அழகுறவே நுழைந்தாரே!..ஆய்வுசெய்வார்,
> > மெய்ஞ்ஞானம் தருகிறநற் கவிநுட்பம்
> > ..மின்னிடத்தான் தனியிழையில் கற்பிப்பார்!
> > ‘சொய்’ என்றே தோசைசுடு மாப்போல்,-நாம்
> > ..தொடர்ந்துயர உயர்கவியிங்(கு) இடுவாரே!
> > ..
> > பசுபதீ! வருக! பரவசம் தருக!
> > *************************(யோகியார்)
>
> --
>
> பசுபதிhttp://groups.google.ca/group/yAppulagam- Hide quoted text -
"எல்லோரும் அகச்சிறகை அடித்தே உயர்ந்தால்
. எட்டாத விண்ணுண்டோ? ஜெயமே! ஜெயமே! (2) உயர்வென்னும் உன்னதம் எதுவோ என்றுன்
. உள்ளத்தைத் தட்டின்அது சொல்லும்! சொல்லும்! -- சிறிதும்
தயங்காமல் நம்பிக்கைச் சிறகை விரித்துத்
. தனிவானில் பறந்திடுவாய், உயர! உயர! "
"பக்கத்தில் நிற்பவனின் பாதம் அடியே
. பள்ளமொன்று பறித்தால்நீ உயர்வாய்! உயர்வாய்!" -- என்று
வக்கிரமாய்ப் பரிந்துரைப்போர்" --- இந்திய நாட்டிலே இவர்கள் பெயர் அரசியல்வாதிகள்
என்றன் கவிதை தனைப்பற்றி
எழுத நினைத்த பெரியோர்க்கும்
நன்றே கருத்துச் சொன்னோர்க்கும்
நன்றி நெஞ்சால் சொல்லுகிறேன்
இலந்தை
வானில் பறந்திடும் புள்ளினம் போல மகிழ்ந்திட ஆவல்கொண்டார் - அதை
.. வாழும் முறையில் அடைவதற் குவரம் வாணியைக் கேட்டுநின்றார்தேனில் அமிழ்ந்த பலாச்சுளை போலவே தித்திக்கும் பாடலிலே -என்
.. சிந்தை யிழந்து செயல் மறந்தேன் ஒரு தெய்வக் கவிதையிதுஅனந்த்
பி.கு. .. ’ஏறியே செல்கிறேன் எதுவழி தோன்றவில்லை’ - எதுவழி தெரியவில்லை எனலாமோ?
அயர அயரக் கண் விழித்துக் கவியரங்கம் நடக்கையிலே
பெய(¨)ரப் பெய(¨)ர இழுக்கின்றீர்
ஊர்-உறவுக் கனெக்ஷனெனும்
ஒயர ஒயர இழுக்கின்றீர்! ஷாக் அடிக்க வைக்கின்றீர்!
இக்கவியரங்கத்தில் ஏறக்கூடாத/முடியாத, பன்னரும், பன்னறும் [ pun+நறும்]
கவிதை!
பிறருக்குப் போடுவதாகப் பிரசித்தமானதைத் தனக்குப் போட்டுக்கொள்ளாத
பெருமையை விளம்பிய தங்கள் நாமம் வாழ்க!
நகுபோலியன்
On Jul 10, 9:04 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/7/9 Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>
>
> > தங்கமணி அம்மை,ஹரி கி்ருஷ்ணன்(ஹரியண்ணா),
>
> ஆகாகா அடடாடா அற்புதம் அற்புதம். யான் எனது நோட்டுப்புத்தகத்தில் குறித்து
> வைத்துக் கொண்டேன். :-))
> தங்கமணிக்கு அம்மையா? நல்ல திடகாத்திரமா மாரியம்மன் பாத்துப்பா.
> அம்மையெல்லாம் போட்டாதீங்க அரங்கத் தலைவரே!
>
> அப்புறம் இன்னொண்ணு. அடியேனை கடைசிப் பந்தியில் அழைக்குமாறு விக்ஞாபித்துக்
> கொள்கிறேன். அடியேன். தாஸோஹம். (நகுபோலியரே! எல்லாம் சகவாச தோஷம்தான்! நான்
> அதே வரகூர் சங்க்ருதி கூட்டத்தவன்தான்.....என் நெத்தியில் எப்பவும்
> போடுவதைத்தான் போட்டுக் கொண்டிருக்கிறேன்!)
>
> அட்டகாசம் அட்டகாசம்! அற்புதம் அற்புதம்! யான் ஆனந்தமாய் ரசிக்கிறேன்!
> தொடருங்கள் மறையரே!
> --
> அன்புடன்,
> ஹரிகி.
கலியன் புரிந்த அருள்
கலியன்மேல் காதல்கொண்டு கலியனது திருமொழியை
வலியவலிய படித்துவந்தேன்; விரைவாக வாசித்தேன்;
ஒலிநயத்தில் மூழ்கிட்டேன்; ஒன்பதெனும் திருமொழியின்
வலிச்சுழலில் அகப்பட்டேன்; மீளமீள மூழ்கிட்டேன். 1
திருமலையில் குடிகொண்ட தேவனிடம் ஆட்பட்டே
அருமைமிகும் பாடல்களில் ஆழ்ந்திழந்தேன் என்மனத்தை;
இருந்தவிடம் மறந்தொழிந்தேன்; இரைந்திரைந்து பாடலுற்றேன்;
ஒருசொல்லும் என்னைவிட்டு ஓடாமல் ஒட்டியதே. 2
தாய்தந்தை முதலாக தாரமெனும் சொந்தமெலாம்
நோய்களையே தருவனவாய் நலிவடையச் செய்ததெலாம்
நாய்போன்ற என்றனுடை நினைவினிலே தோன்றினவே;
பாய்கின்ற ஆறுபோல பாடல்களைத் தொடர்ந்திசைத்தேன்! 3
பெண்களெனும் வலையில்நான் பட்டபெரும் துன்பமெலாம்
கண்ணெதிரே நிறுத்திவிட்டார் கலியனெனும் நல்லாழ்வார்!
உண்மையிலே இரக்கமின்றி ஒருவருக்கும் நற்செயலை
எண்ணிலேனாய் இருந்தவனாய் இவ்வாழ்வை வீணடித்தேன்! 4
இப்பிறப்பில் நிகழ்ந்ததெலாம் இப்படியென்றால் என்னுடைய
முப்பிறப்பில் எந்நலனும் முயலாமல் இருந்திருப்பேன்!
அப்படியே செய்திருந்தேன் ஆகிலுமென் நலம்தனையே
தப்பாமல் மனத்திருத்தி நல்வணிகம் செய்திருப்பேன்! 5
சுயநலமே மனத்திருப்பத் திருவேங்கடத் தானையேநான்
நயந்தவனாய் ஒருநாளோர் நிமிடமோதான் என்மனத்தில்
பெயரினையே எண்ணிடவோ புகன்றிடவோ வணங்கிடவோ
முயலாமல் வாழ்வெல்லாம் முடித்திருப்பேன் ஐயமில்லை! 6
மண்ணாலும் நீராலும் மஞ்சுலவும் இடத்தாலும்
பண்ணியவென் ஆக்கைகளைப் பலவெடுத்தும் புரிந்தேனா
புண்ணியங்கள்? அல்லவல்ல; பாவங்களே செய்திருப்பேன்!
எண்ணங்கள் இப்படியே என்மனத்தில் எழுந்தனவே! 7
கலியனது இவ்வரிகள் கற்களென ஊன்றினவாய்
செலத்தொடங்கி நடந்திட்டேன் நீள்வழியே; ஓரிடத்தில்
நலம்கேட்டு எனைநிறுத்தி நயமுடனே யாரோஓர்
நலமனிதர் பேசுகையில் நானுரைத்தேன் எனைப்பற்றி! 8
வயதாகிப் போனதனால் வசதியுள்ள இருப்பிடத்தை
விழைந்தடியேன் தேடிலுமே வெறுமையே ஆனதென்றன்
முயற்சியினைத் தெரிவித்தம் மனிதரைநான் பார்த்துநின்றேன்;
வியப்புடனே எனைப்பார்த்து வலிந்தவரே சொன்னாரே! 9
‘வேறெங்கு போகவேண்டும், விரையார்திரு மலையிருக்க?
நாறுமலை தாழ்வரையில் நிலைகொண்ட அலர்மங்கை
ஊரிலேஓர் அமைப்புளது! உமக்கேற்கும் நன்றாக!
சேருமங்கே!’ என்றுசொல்லி நகர்ந்துபோனார் அம்மனிதர்! 10
யாராரோ பிடித்தேநான் அவ்விடத்தை அறியலுற்றேன்;
நேரத்தை வீணாக்கா தங்கேநான் ஏகினனே;
சீருடனே இயங்கிவரும் நல்லமைப்பைக் கண்ணுற்றேன்;
வாருமென அன்புடனே வரவேற்றார் அடியனையே! 11
இன்றிருக்கும் வீட்டினுக்கோர் ஏற்பாடு செய்துவிட்டு
என்றேனும் ஒருநாள்யான் ஏழுமலை அடிவாரம்
சென்றிடலாம் என்றெல்லாம் செழுங்கனவு பன்னாட்கள்
நன்றுகண்டும் அக்கனவும் நனவாகா தாயிற்றே! 12
அவ்வமைப்பில் தங்கியபோ தரியதொரு வாய்ப்பதனால்
செவ்வியசீர் மலைசென்று தேவனுடை தரிசனமே
பவ்வியமாய்க் கிட்டியதால் பெருமகிழ்ச்சி உற்றேன்நான்!
அவ்வளவே அண்டியது! அதன்பின்னர் வேதனையே! 13
என்வீட்டை ஏதும்செய இயலாமல் தொடர்ந்ததுவே
என்வாழ்வு தனிமையிலே; எத்தனையோ நாட்களுந்தான்
தன்னாகக் கழிந்திடவே திருப்பதிக்குச் செலும்வாய்ப்பு
என்னைவிட்டு அகன்றதுவே ஏதேதோ சிந்தைகளால்! 14
என்வீட்டில் தனிக்காவல் கைதிபோல அல்லலுற்றேன்;
என் தெய்வம் மலையப்பன் என்வீட்டில் நுழைந்திட்டான்!
என்னெதிரே தொலைக்காட்சிப் பெட்டிதன்னுள் பாங்காக
வந்துவந்து செல்கின்றான், மலையினிலே வீற்றிருந்தே! 15
கிட்டத்தில் வந்துநின்று களைநிறைந்த தன்முகத்தைத்
தொட்டிடவே அழைப்பான்போல் துணிவுடனே காட்டுகின்றான்
பட்டாடை நடுவினிலே பளிச்சென்று தன்கரத்தை
விட்டொழிப்பாய் கவலையென வலிந்தவனே காட்டுகின்றான்! 16
“விண்ணோர்தொழும் வேங்கடத்தில் வெகுதொலைவில் இருந்தாலும்
நண்ணியுன்னை நான்நாடி நெருங்கிவந்து உன்வீட்டின்
முன்னறையில் நிற்கின்றேன் மறவாமல் அனுதினமும்
எண்ணிலாத முறைகளென்றன் எழிற்சேவை தருகின்றேன்! 17
மலையடிக்கீழ் வாழ்வதனால் மீளமீள எனைநேரில்
வலியிலாது அணுகிவந்து நெடுநேரம் காண்பாயோ?
அலைபாயும் கூட்டத்தில் அங்கெங்கே எனைக்காண்பாய்?
சிலநொடிகள் காண்பதற்கே செலவாகும் பலநாட்கள்! 18
நானிலாத இடமுண்டோ? நானிலாத நொடியுண்டோ?
நானிலாத நினைவெல்லாம் நன்றாக அமைந்திடுமோ?
நானிலாத செயல்பாடும் நலமாக நடந்திடுமோ?
நானிலாது நீயுளயோ? நெருங்கியுளேன் உணராயா? 19
இருப்பிடமே வைகுண்டம் எனையேநீ நினைத்தாயேல்!
இருப்பிடமே திருமலையாம், என்‘சானல்’ பார்த்தாயேல்!
இருக்குமிடத் திருந்திடுவாய் எனையேநான் தருகின்றேன்!
வருத்தமேது என்னடியை விட்டிடாமல் உளம்கொண்டால்? 20
என்னைநினை! அன்புடனே எனைபூசி! எனைவணங்கு!
என்னைஉடன் கொள்வாய்!நீ எனைவிட்டு அகலாமல்
என்னிலேயே மனம்வைப்பாய்! எனைக்காண்பாய் எங்கிலுமே!
என்னில்நீ இருந்தாயேல், என்னிடமாய் உனைக்கொள்வேன்!” 21
இத்தனையும் அவன்சொல்ல எடுத்துரைப்பார் வல்லுநர்கள்
எத்தனையோ முறைகள்தாம் என்முன்னே எழுந்தருளி
பத்தியினைப் புகட்டுவர்கள்! புவிதனிலே இதைவிடவே
மெத்ததென ஒன்றுளதோ? மெய்கண்டேன் மெய்தானே! 22
-- 0 --
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
முனைப்புடன் உழைப்பைநல்க முன்னேற்றம் கண்டிடலாம்
வினைத்திட்பம் வெல்லுமென்றார் மெச்சுகவி பசுபதியார்!
(சிந்தில் சின்ன முயற்சி)
சிந்துகவி தந்தவுயர் சந்தம்!சந்தம்!--அதுதான்
...செந்தமிழின் உயர்வினுக்குச் சொந்தம்!சொந்தம்!
சந்தமணம் தங்குகின்ற தென்றல்!தென்றல்!--மெதுவாய்த்
...தவழ்ந்துவந்து வீசுமிந்த மன்றில்!மன்றில்!
அன்புடன்,
தங்கமணி.
> 2009/7/12 Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>
>
>
>
>
>
> > அன்பர் டாக்டர் கவிஞர் பசுபதி;-(கானடா)
> > $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
> > சென்னையிலே பட்டம் பெற்றார்;
> > ..டொறோண்டோவில் சேவை செய்தார்;
> > முன்னைப்ப ழம்பொருள் “டிஜிடலில்’
> > ..மூவாத ஆய்வு பண்ணி
> > தென்னையைப்போல் மிக,மிக் குயர்ந்தே
> > ..தெங்கிள-வி ருதெலாம் பெற்றே
> > இன்னமும்வா லிபம்த தும்ப
> > ..எல்லோர்க்கும் உதவும் “பசுபதி”!
> > ..
> > விஞ்ஞானம்,சங்கீதம்,’கவிகள்”-என்றே
> > ..விதவிதமாய் வித்தகங்கள் பெற்று,-இவர்,
> > அஞ்ஞானம் போக்குகிற இலக்கியத்தில்,
> > ..அழகுறவே நுழைந்தாரே!..ஆய்வுசெய்வார்,
> > மெய்ஞ்ஞானம் தருகிறநற் கவிநுட்பம்
> > ..மின்னிடத்தான் தனியிழையில் கற்பிப்பார்!
> > ‘சொய்’ என்றே தோசைசுடு மாப்போல்,-நாம்
> > ..தொடர்ந்துயர உயர்கவியிங்(கு) இடுவாரே!
> > ..
> > பசுபதீ! வருக! பரவசம் தருக!
> > *************************(யோகியார்)
>
> --
>
தெள்ளரும் செந்தமிழ்ச் செல்வியே, தெய்வமே
தேனிசைக் கலைவாணியே,
தீர்க்கமாய் ஓர்மொழி சொல்லுக ‘வெல்கநீ
வெல்கநீ, வெல்க’ வென்றே!
உயர்வென்னும் உன்னதம் எதுவோ என்றுன்
. உள்ளத்தைத் தட்டின்அது சொல்லும்! சொல்லும்! -- சிறிதும்
தயங்காமல் நம்பிக்கைச் சிறகை விரித்துத்
. தனிவானில் பறந்திடுவாய், உயர! உயர!
உள்ளத்தின் குரலைக்கேள் உயர உயர
உள்ளவழி ஏதெனவே செப்பும் செப்பும் - என்று
பிள்ளைக்கு உரைத்தார்ப்போல் பிரித்துச் சொன்னார்
பேராசான் பசுபதி நன்றே! நன்றே!!
நடராஜன்.
சிந்தினிலே புதிய உத்தி கொண்டு கொண்டு- வந்த
சிறப்பான பாடலினைக் கண்டு கண்டு
பந்தமுடன் நாமிதனைப் போற்றுகின்றோம்- இப்
பாடலிலே உயரங்கள் உண்டு! உண்டு!
நிறுத்தற்குறிகள் இங்கே அழகாகப் பயன்பட்டிருக்கின்றன!
இலந்தை
----- Original Message -----From: Kaviyogi VedhamSent: Tuesday, July 14, 2009 9:04 PMSubject: Re: Kaviyarangam-30- Vedham Thalaimai
--
Thanks and Regards
Girija
Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP: 91852063
Email: girijavar...@gmail.com
சிந்தினிலே புதிய உத்தி கொண்டு கொண்டு- வந்த
சிறப்பான பாடலினைக் கண்டு கண்டு
பந்தமுடன் நாமிதனைப் போற்றுகின்றோம்- இப்
பாடலிலே உயரங்கள் உண்டு! உண்டு!
நிறுத்தற்குறிகள் இங்கே அழகாகப் பயன்பட்டிருக்கின்றன!
இலந்தை
--
கற்களையெல்லாம் செதுக்கி சிற்பங்களாக்கும் உளியைப் போல்
வாழ்க்கை உன்னை அனுதினமும் செதுக்குகிறது
வலியைப் பொறுத்துக் கொள் - பொறுத்தாரே
வையத்தில் என்றும் பூமி ஆள்வார்
நாடோறும் படித்து அறிவைக் கூராக்கு
வளமான சிந்தனையால் புத்தியைச் சீராக்கு
கதையில் படித்த காக்கையைப் போல் சாதுர்யமாக இரு
சாதுர்யமாக இருந்தால் மட்டும் போதாது நல்லவனாகவும் இரு
கடலில் கலந்து களிக்கும் வரையில்
நதியின் உறுதியைக் கண்டாயா ?
அஃதே போல்
எதைச் செய்தாலும் உறுதியாக நில்
துணிவாக இருந்து காரியத்தில் வெல் !
வெற்றியைப் பெற்றவுடன் அமைதியாக இரு !
உலகம் உந்தன் காலடியில் விழும்
ஒரு உயர்ந்த மனிதனைப் பெற்றுவிட்டோம் என்று !!
#########################################
அன்புடன்,
நிரஞ்சன்
அன்புடன்,
தங்கமணி.
On Jul 14, 9:12 am, Niranjan bharathi <niranjanbhara...@gmail.com>
wrote:
> எல்லோர்க்கும் வணக்கம்....
>
> சந்தவசந்தத்தில் இது அடியேனின் இரண்டாவது கவியரங்கம்.
>
> இதில் பங்கேற்பதில் பேருவகை அடைகிறேன்.
>
> இம்முறையும் கவிதை கொஞ்சம் நீளம். மன்னித்தருளுக.
>
> இனி அடியேனின் கவிதையை இவண் சமர்ப்பிக்கிறேன்.
>
> *தமிழ்த்தாய் வாழ்த்து*
>
> வானம் கொஞ்சும் வெண்ணிலவே - உன்
> வனப்பில் இறுமாந்து இருக்காதே !
> வாசம் தடவிய பூங்காற்றே - உன்
> இளமையை நினைத்துத் திமிராதே !
> அரும்பெரும் இலக்கணத்தின் இளமையிலும்
> இன்னரும் சொற்களின் அழகினிலும்
> தரணியெங்கும் திகழுதடி தகத்தகாய தமிழ்மொழி !
> அடடா !! நிதமும் நிதமும்
> தமிழோசை கேட்டு உள்ளமெலாம் இமிழும் !
> தமிழென்னும் சொல்லில் என் நாடியெல்லாம் அமிழும் !
> தமிழென்னும் மொழியையே என் இதழ்கள் உமிழும் !
> தமிழ்க்கவியைப் புனைந்தே என் ஜீவன் கமழும் !
>
> தமிழ்த்தாயே !!
>
> எளிதாய் நானும் கவிதை புனைய
> இன்னருள் புரிவாய் தனயனுக்கு !
>
> #####################################
>
> *அவைத் தலைவர் வாழ்த்து
> *
>
> அவர்
> ஆரணம் என்பதைப் பேரில் கொண்டவர்
> காரணம் எதையும் முன்னின்று மொழியாமல்
> 'மா'ரணம் வந்து மறித்து நின்றால் - அவர்
> முறுவலைக் கண்கள் கண்டாலே போதும்
> வாட்டிய துன்பமெல்லாம் காணாமல் போகும்
> கன்னல் கவிபாடும் கவியோகி வேதமய்யா !
> கனிவாய்க் கவியை நல்கிட பணிந்தேன் நின்றன் பாதமய்யா !
>
> ஆன்றமைந்த கவிஞர்காள் !!
> அரங்கத்தின் முன்னே கவியைச் சமைக்கின்றேன்
> பிழையேதும் இருந்தால் மன்னித்தருளுக !
>
> #######################################
>
> *உயர உயர*
> read more »
//உளிகொண்டு கல்லினைச் செதுக்கும் போது
கல்லொன்றும் கலங்கி அழுவதில்லை - ஒரு
கல்லுக்கு "கல்" நெஞ்சம் இருப்பதில்லை//
- வளமான உவமை கூறும் 'உயர வழி', 'வைர மொழி'.
'கல்லும் கருத்து சொல்லும்'.
நான் மிகவும் ரசித்தவை
துயரம் பெரிதாய்த் தெரிந்துவிட்டால் இதயம்
சிறகை மடித்துக் கொள்ளும்
உயரம் பெரிதாய்த் தெரிந்துவிட்டால் இதயம்
சிறகை அடித்துக் கொள்ளும்
கல்லுக்கு "கல்" நெஞ்சம் இருப்பதில்லை
எந்தத் தொழிலைச் செய்தாலும் அதை விரும்பிச் செய்துவிடு - அன்றி
எதைச் செய்ய விரும்புகிறாயோ அதை தொழிலாய் மாற்றிவிடு
அனந்த் 15-7-2009
தலைப்பு: “உயர உயர”
தலைவர்: கவிமாமணி கவியோகி வேதம்
<> இறை வணக்கம் <>
விண்கண்ட இமயமலை மீதுறையும் சிவபரனே!
தண்கொண்டல் தவழுமுயர் திருமலைவாழ் நெடுமாலே!
கண்கண்ட கடவுளெனும் பழனிவளர் கந்தையா!
பண்கொண்ட பாவிசைக்கப் பரிந்தெனக்கின் றருள்வீரே
<> தலைமை வணக்கம் <>
அறிவில், அயரா உழைப்பினில், அன்பு
நெறியில் நெடிதுயர்ந்து நிற்கும் - மறைப்பெயரார்
இன்றிவ் வரங்கத்து உயர்தலைமை தாங்குகின்றார்
நன்றுநமைத் தாமுயர்த்தத் தான்
<> அவையடக்கம் <>
கற்கண்டு வைக்குமிடம் கல்கொண்டு வைத்ததுபோல்
அற்பன்யான் யாத்த சிறுகவியைச் - சொற்கொண்டு
பாப்புனையும் உம்முன் படைக்கின்றேன் ஏற்றென்றன்
தாப்பொறுத்தல் உங்கள் தரம் <>
(தா = குற்றம், குறை)
<> உயர உயர <>
(அறுசீர்ச் சமனிலைச் சிந்து, 1,5 மோனை)
ஓங்கி வளர்ந்திடு உயரப் பறந்திடு
உச்சியைத் தொட்டுவிடு - எங்கும்
.. உன்னை நிகர்த்தவர் இல்லை யெனும்படி
உன்னதம் பெற்றுவிடு
ஏங்கி வருந்திட ஏதுமில் லையென
ஏற்றத்தை எட்டிவிடு - பாரில்
.. எங்கும் சிறந்து விளங்கும் வகைநம்
இனப்பெயர் நாட்டிவிடு
பெற்றோரும் உற்றோரும் போதித்தார் இங்ஙனம்
பிள்ளைப் பிராயத்திலே - அதைப்
.. பேணியோர் பொக்கிஷம் போலஎன் நெஞ்சில்
பெரிதும் மதித்துவந்தேன்
வற்றாத ஊற்றென உற்சாகம் பொங்கிடும்
மாணவனாய்த் திகழ்ந்து - செல்லும்
.. வகுப்பில் முதல்வனாய்த் தேறிய வாறென்றென்
வாழ்வைத் துவக்கிவைத்தேன்.
பட்டங்கள் பற்பல பெற்றுப்பின் மேலைப்
படிப்பும் முடித்துவந்து - வேலை
.. பார்த்த இடத்திலும் முந்திநிற் கப்பெரும்
பாடுபட் டேன்செயித்தேன்
தொட்ட எவற்றிலும் வெற்றியே அன்றிநான்
தோல்வியைக் காணவில்லை - என்னைச்
.. சோதனை செய்பவர் வேதனை கண்டுளம்
சோர்ந்திடச் செய்துவிட்டேன்
வானில் பறந்திடும் புள்ளையும் தாண்டிவிண்
மீனையும் தொட்டிடுவேன் - ஒரு
.. மட்டெதும் இல்லை எனக்கினி என்(று)இறு
மாந்திருந்தே மகிழ்ந்தேன்
ஏனைய யாவரும் என்னை உயர்ந்தவன்
என்று புகழ்ந்து நிற்க - நான்
.. என்னை வளர்த்தவர் சொன்ன படிசெய்தேன்
என்று திளைத்திருந்தேன்
உயர உயரப் பறந்திடும் நோக்கத்தில்
ஒன்றி இருந்ததனால் - என்னை
.. ஒட்டி இருந்த மனைவியும் மக்களும்
ஓரத்தில் நிற்பதையும்
வயது முதிர்ந்தஎன் தந்தையும் அன்னையும்
வாடிக் கிடப்பதையும் - என்றன்
.. மனத்தில் ஒருகண மாயினும் எண்ணிட
வாய்ப்புக் கிடைக்கவில்லை
எட்டிட இன்னும் இலக்கென ஏதுமே
இல்லையென் றானபின்னர் - நான்
.. இருக்கும் உயரத்தில் என்னைத் தவிரவே
றெவரையும் காணவில்லை
எட்டத்தில் கீழே இருப்பவர் காதினில்
என்குரல் கேட்கவில்லை - என்
.. ஏற்றத்தைப் பார்த்தொரு வார்த்தையைக் கூறிட
எவருக்கும் நேரமில்லை
துடிப்பு நிறைந்தஎன் வாழ்வில் ஏதோவொரு
சோகம் பரவக் கண்டேன் - அதைச்
.. சொல்லி அரற்றிடத் தோன்றிடும் எண்ணத்தைத்
துரத்த முடியவில்லை
படிப்பில் பணத்தில் பதவியில் உச்சத்தைப்
பற்றிய பின்னருமேன் - என்றன்
.. பாழும் மனத்தினில் திருப்தி யெனும்ஒரு
பக்குவம் கிட்டவில்லை?
நாளை உணவுக்கு நாதியில் லாதவன்
நன்றாகத் தூங்கிடுங்கால் - ஏன்
.. நான்கு நிமிடங்க ளேனும் துயின்றிட
நானிங்கே ஏங்குகின்றேன்?
மூளையில் மோதிடும் எண்ணங்கள் மற்றோரை
முந்திடல் பற்றியவாய் - என்னை
.. முற்றும் இயந்திரம் ஆக்கிஎன் வாழ்க்கையை
மூளியாய் மாற்றினவோ?
வாடும் மனிதரின் வாழ்க்கையை எள்ளிநான்
வாழ்ந்ததை எண்ணிநின்றேன் - அண்டி
.. வந்தவரை என்னில் தாழ்ந்தவ ராய்எண்ணும்
வழக்கை நினைத்தயர்ந்தேன்
தேடத் தகுந்தது அன்பெனும் பண்பெனத்
தெரியா திருந்துவிட்டேன் - உண்மைச்
.. செல்வம் அடக்கமே என்ற குறள்மொழி
தேரா திருந்துவிட்டேன்
நானே உயர்ந்தவன் என்னும் அகந்தையே
நாசத்தின் வித்தென்பதை - இந்த
.. நாள்என துள்ளம் உணர்ந்திடக் கண்(டு)இனி
நல்ல படிவாழ்ந்து,
தானும் உயர்ந்து பிறரும் உயர்ந்திடச்
செய்வோர் உயர்ந்தவராம் - என்று
.. சாத்திரங்கள் செப்பும் உண்மை அறிந்துள்ளில்
சந்த வசந்தம்; கவியரங்கம் - 30தலைப்பு: “உயர உயர”
தலைவர்: கவிமாமணி கவியோகி வேதம்
<> இறை வணக்கம் <>
விண்கண்ட இமயமலை மீதுறையும் சிவபரனே!
தண்கொண்டல் தவழுமுயர் திருமலைவாழ் நெடுமாலே!
கண்கண்ட கடவுளெனும் பழனிவளர் கந்தையா!
பண்கொண்ட பாவிசைக்கப் பரிந்தெனக்கின் றருள்வீரே
<> தலைமை வணக்கம் <>
அறிவில், அயரா உழைப்பினில், அன்பு
நெறியில் நெடிதுயர்ந்து நிற்கும் - மறைப்பெயரார்
இன்றிவ் வரங்கத்து உயர்தலைமை தாங்குகின்றார்
நன்றுநமைத் தாமுயர்த்தத் தான்
<> அவையடக்கம் <>
கற்கண்டு வைக்குமிடம் கல்கொண்டு வைத்ததுபோல்
அற்பன்யான் யாத்த சிறுகவியைச் - சொற்கொண்டு
பாப்புனையும் உம்முன் படைக்கின்றேன் ஏற்றென்றன்
தாப்பொறுத்தல் உங்கள் தரம் <>
(தா = குற்றம், குறை)
வானில் பறந்திடும் புள்ளையும் தாண்டிவிண்
மீனையும் தொட்டிடுவேன் - ஒரு
.. மட்டெதும் இல்லை எனக்கினி என்(று)இறு
மாந்திருந்தே மகிழ்ந்தேன்
ஏனைய யாவரும் என்னை உயர்ந்தவன்
என்று புகழ்ந்து நிற்க - நான்
.. என்னை வளர்த்தவர் சொன்ன படிசெய்தேன்
என்று திளைத்திருந்தேன்
உயர உயரப் பறந்திடும் நோக்கத்தில்
ஒன்றி இருந்ததனால் - என்னை
.. ஒட்டி இருந்த மனைவியும் மக்களும்
ஓரத்தில் நிற்பதையும்
வயது முதிர்ந்தஎன் தந்தையும் அன்னையும்
வாடிக் கிடப்பதையும் - என்றன்
.. மனத்தில் ஒருகண மாயினும் எண்ணிட
வாய்ப்புக் கிடைக்கவில்லை
எட்டிட இன்னும் இலக்கென ஏதுமே
இல்லையென் றானபின்னர் - நான்
.. இருக்கும் உயரத்தில் என்னைத் தவிரவே
றெவரையும் காணவில்லை
எட்டத்தில் கீழே இருப்பவர் காதினில்
என்குரல் கேட்கவில்லை - என்
.. ஏற்றத்தைப் பார்த்தொரு வார்த்தையைக் கூறிட
எவருக்கும் நேரமில்லை
எவருக்கும் நேரமில்லை" //
'எவருக்கும் ஆர்வமில்லை' என்றால் இன்னும் பொருந்துமோ?
சந்த வசந்தம்; கவியரங்கம் - 30தலைப்பு: “உயர உயர”
தலைவர்: கவிமாமணி கவியோகி வேதம்
நானே உயர்ந்தவன் என்னும் அகந்தையே
நாசத்தின் வித்தென்பதை - இந்த
.. நாள்என துள்ளம் உணர்ந்திடக் கண்(டு)இனி
நல்ல படிவாழ்ந்து,
தானும் உயர்ந்து பிறரும் உயர்ந்திடச்
செய்வோர் உயர்ந்தவராம் - என்று
.. சாத்திரங்கள் செப்பும் உண்மை அறிந்துள்ளில்
சாந்திபெற்(று) ஓங்கிடுவேன்
அனந்தனின் சிந்து அடியனைச் சிந்திக்க வைத்ததையா
அவரது உழைப்பின் உயர்வினை அறைந்தன பலபாடல்
தனதுடை மனதும் தன்னுடன் தாவி வந்தததையும்
சிகரத்தின் உச்சியைத் தொட்டதும் சிந்திக்கத் தொடங்கியதும்
மனத்திலே உண்மையின் வெளிச்சம் பட்டெனத் தோன்றியதும்
வளர்ச்சியின் துரிதத்தில் விட்டவை எல்லாம் தெரிந்திட்வே
கனத்தது கவலை கனிவினைத் துணைகொளாமல் இருந்ததனைக்
கண்டுதன் இறுமாப்பைக் கணத்தில் தள்ளினாரிக் கவிதையினாலே.
அன்புடன்
தாஸன்
அன்பில் சீனிவாஸன்
2009/7/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
2009/7/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
துடிப்பு நிறைந்தஎன் வாழ்வில் ஏதோவொரு
சுயானுபவம் சுடர்விடுகின்ற போது கவிதை ஒளிபெற்றுவிடுகிறது.
எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டுமோ அதை ஒதுக்கிவிட்டு முன்னேறி
உயர்ந்து அக்கடா என்று உட்காரும் போதுதான் நாம் இழந்ததை எண்ணிப் பார்க்கிறோம். மிகவும் அருமையான ஆழமான கவிதை
இலந்தை
வ்வ்[கடைசி வரியை எதோ செய்து தட்டிக்கொட்டி ஒரு கவிதை வரி மாஅதிரி
உருவத்துக்குக் கொண்டு வரவேண்டும் - நேரமில்லை.]
நல்லவேளை இதோடு விட்டீர். இல்லாவிட்டால், இந்த
இழைக்குச்சம்பந்தமில்லாமல்
பர்சனல் பூர்வோத்தரவிவரங்களை
ஸாத்ய-ஸாங்க்ருத்ய-கௌரிவீதத் த்ரயார்ஷேயப் ப்ரவராந்விதஹ்
ஸங்க்ருதிகோத்ரஹ்
ஆபஸ்தம்ப-ஸூத்ரஹ் யஜு:சாகாத்யாயீ
நகுபோலியன் இதி ச்சத்மநாமா மழநாட்டு பிருகச்சரணம்
என்றெல்லாம் வெளியிட்டிருப்பீர்போல!
அதுபோகட்டும்: மற்றவர்களுக்குப்போடாததைத் தான் போட்டுக்கொள்ளும் உம்
நெற்றி விளங்குக!
நகுபோலியன்
*************************************************************************
On Jul 10, 9:04 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/7/9 Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>
>
> > தங்கமணி அம்மை,ஹரி கி்ருஷ்ணன்(ஹரியண்ணா),
>
> ஆகாகா அடடாடா அற்புதம் அற்புதம். யான் எனது நோட்டுப்புத்தகத்தில் குறித்து
> வைத்துக் கொண்டேன். :-))
> தங்கமணிக்கு அம்மையா? நல்ல திடகாத்திரமா மாரியம்மன் பாத்துப்பா.
> அம்மையெல்லாம் போட்டாதீங்க அரங்கத் தலைவரே!
>
> அப்புறம் இன்னொண்ணு. அடியேனை கடைசிப் பந்தியில் அழைக்குமாறு விக்ஞாபித்துக்
> கொள்கிறேன். அடியேன். தாஸோஹம். (நகுபோலியரே! எல்லாம் சகவாச தோஷம்தான்! நான்
> அதே வரகூர் சங்க்ருதி கூட்டத்தவன்தான்.....என் நெத்தியில் எப்பவும்
> போடுவதைத்தான் போட்டுக் கொண்டிருக்கிறேன்!)
>
> அட்டகாசம் அட்டகாசம்! அற்புதம் அற்புதம்! யான் ஆனந்தமாய் ரசிக்கிறேன்!
> தொடருங்கள் மறையரே!
> --
> அன்புடன்,
> ஹரிகி.
அன்புடன்,
தங்கமணி.
On Jul 16, 9:24 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> *சந்த வசந்தம்; கவியரங்கம் - 30*...
>
> read more »
>
> தலைப்பு: “*உயர உயர**”*
>
> தலைவர்: கவிமாமணி கவியோகி வேதம்
>
> <> இறை வணக்கம் <>
>
> விண்கண்ட இமயமலை மீதுறையும் சிவபரனே!
>
> தண்கொண்டல் தவழுமுயர் திருமலைவாழ் நெடுமாலே!
>
> கண்கண்ட கடவுளெனும் பழனிவளர் கந்தையா!
>
> பண்கொண்ட பாவிசைக்கப் பரிந்தெனக்கின் றருள்வீரே
>
> <> தலைமை வணக்கம் <>
>
> அறிவில், அயரா உழைப்பினில், அன்பு
>
> நெறியில் நெடிதுயர்ந்து நிற்கும் - மறைப்பெயரார்
>
> இன்றிவ் வரங்கத்து உயர்தலைமை தாங்குகின்றார்
>
> நன்றுநமைத் தாமுயர்த்தத் தான்
>
> <> அவையடக்கம் <>
>
> கற்கண்டு வைக்குமிடம் கல்கொண்டு வைத்ததுபோல்
>
> அற்பன்யான் யாத்த சிறுகவியைச் - சொற்கொண்டு
>
> பாப்புனையும் உம்முன் படைக்கின்றேன் ஏற்றென்றன்
>
> தாப்பொறுத்தல் உங்கள் தரம் <>
>
> (தா = குற்றம், குறை)
>
> * *
>
> *<**> **உயர உயர** **<>***
> 2009/7/15 Kaviyogi Vedham kaviyogi.ved...@gmail.com
>
>
>
> > ..
> > சான்றோரே! இனி’அநந்த்’ அவர்களை அழைக்கின்றேன்!
> > ..
> > எனக்கு நெருங்கிய இனிய நண்பரிவர்;
> > கனடாவில்,சிங்கையிலே எனக்கரங்கம்(பேச) தந்தவர்;
> > ..
> > பௌதிகத்தில் பல’சிக்சர்’ போட்டவர்; ஆய்வுகள்
> > பலசெய்தே மாணவர்தமைப்- Hide quoted text -
>
> - Show quoted text -
அனந்த்
17-7-2009
>பாப்புனையும் உம்முன் படைக்கின்றேன் ஏற்றென்றன்
>தாப்பொறுத்தல் உங்கள் தரம் <>
(தா = குற்றம், குறை)
"தா" - வெண்பா விரும்பியின் தாக்கமோ? :)
ஆம்!
>'நான் காணவில்லை' எனல் இக்காலத்திற்குச் சரிதானோ?
சரியென்னும் நினைப்பில் எழுதியுள்ளேன்.
>"என் .. ஏற்றத்தைப் பார்த்தொரு வார்த்தையைக் கூறிட
எவருக்கும் நேரமில்லை" //
>'எவருக்கும் ஆர்வமில்லை' என்றால் இன்னும் பொருந்துமோ?
பொருந்தும். எனினும், நான் கருதியதாவது, உயரச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தனக்கு மட்டுமே வேறெதற்கும் நேரம் கிட்டாத கெடுபிடி
வரும் என்று நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு இப்போது மற்றவர்களுக்குத் தன்னைப் பார்க்கவோ கேட்கவோ நேரமில்லை என்ற அதிர்ச்சி
உண்டாகிறது என்பதே.
உலகிலே உயர்ந்ததும் உன்னதக் கட்டமைப்பும் கொண்டது சி.என். டவர்.
இருந்தாலும் தனித்தே நிற்கிறது.; அதன் தலை சுற்றுகிறது (சுழலும் உணவகம்
மேல்மாடியில் உள்ளது).
உயர்வது ஒன்றே இலக்கென ஓங்கி
. . உலகிலே முதலிடம் பெற்றதும்-காண்பவர்
வியப்பினில் வீழ்ந்தே விண்ணினை நோக்கி
. .வேடிக்கை பார்த்திடும் சி.என்.டவர்
தானே உயர்ந்தது என்னுமோர் தலைக்கனம்
. . தாங்கிடும் தன்மையால் நிற்கும் தனிமரம்!
தேனே போன்றதும் தித்திக்கும் அனுபவம்
. . தேடித் தருவதே நீர்கூறும் கனிமரம்.
சௌந்தர்
உயர உயர--
*************சுதா வேதம்
அன்புடன்,
தங்கமணி.
> 2009/7/17 Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>:
>
>
>
> > _____________________
> > இனிவரும் எழிற்கவி சுதாவேதம்;-
> > ******************************
> > *
> > நல்லரும் பண்பினள்;நாட்டியம் கற்றவள்;(வங்கியில்)
> > ..நற்காசுக ளெண்ணுபவள்;
> > கொல்லனின் பட்டறை உள்ளேயும் ்போய்-ஊசி
> > ..கொடுக்கும்தி றம்பெற்றவள்!
> > எல்லோரும் இவள்கவியைப் பாராட்டிப் பாராட்டி
> > ..என்னையே விஞ்சுபவள்!
> > முல்லைச் செடியருகே பூத்தஓர் ரோஜாவே!
> > ..முனகாமல் கொஞ்சுகவே!
> > $$$$$$$$$$$$$$$$$$$$$$$$(யோகியார்)- Hide quoted text -
//பிறகு’பி றகென்றே தள்ளிப் போடப்,
..பிடிவா தங்கள் முளைத்துநிற்கும்!//
பிடிவாதத்தின் வேரை அடையாளம் காட்டியது நன்று.
//தூக்கம் என்னும் ’மயக்கம்’ ஒன்றால்
..சோதனை வைத்தான் இறைவன்!//
அனந்த் 18-7-2009
பி.கு. ‘உயரப் பறக்க நோங்கும் பறவை’ - நோங்கும்? நோக்கும் என்றிருக்க வேண்டுமோ?
2009/7/18 Siva Siva <naya...@gmail.com>:
--
சுதாவேதம்
தூக்கம்² , n. < தூக்கு-. 1. [T. tūkamu, K. tūka.] Weighing; நிறுப்பு. தூக்கம் ஒன்றுக்கு பண இடை பத்தாக தூக்கம் இருபது (S. I. I. ii, 339). 2. Rise in price; விலை யேற்றம். விலை தூக்கமாயிருக்கிறது. 3. Height; உயரம். (உரி. நி.)
2)-உடம்பு நிமிர்தல்.. என்பது இங்கே ego-அல்லது திமிர் பிடித்து(சோம்பலால் கூட)
அலைதல்..எனக் குறிக்க வந்தது...நன்றாக யோசித்துப்பாருங்கள்.கவிதையில்
சொற்செட்டு வேணுமென்பீர்களே..உள்ளுறைப் பொருளால்தானே சொல் இங்கு
குறிப்பிட முடியும்..
அகராதி பார்க்கவும்..” நிமிர்தல்” என்பது அகம்பாவத்தினால் கூட வரும்
என்று சொல்லியிருப்பானே?...பார்த்து எனக்குத் தெளிவு படுத்த
வேண்டுகின்றேன்.உங்களைத்தவிர “இந்த’ இடத்தில்் மற்ற ரசிகர்கள்.. நான்
சொல்லிய அர்த்தத்தில் புரிந்துகொண்டிருக்கிறார்கள்..அல்லவா..?.மேலும்
உற்சாகம்.. (நீங்கள் சொல்லியவாறு...)மனத்தை அழகாய் நிமிர்த்தும்.. உடம்பை
அல்ல..!அப்பாடி.. கடைசி வரியிலாவது
என் கவி பற்றி ஒரு வார்த்தை பாராட்டிச் சொன்னீர்களே..மெத்த நன்றி அங்கிள்..
நிச்சயம் நீங்கள் சரியாகக் கருத்து சொன்னால் இந்த சின்னப்பெண் திருத்திக்கொள்வாள்.
ஆகவே சொல்க.. சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் என் கவியும் ஊன்றிப்படிப்பது கண்டு.
தங்கள் அன்பு உள்ளம் எனக்குப்பிடித்திருக்கிறது.
இப்பாடலில் நிமிர் என்ற சொல்லிற்கு இப்பொருளும் பொருந்தும் போல்.
நிமிர்தல் - 6. To bend, shake; நுடங்குதல். மின்னுநிமிர்ந் தனையராகி (மதுரைக். 679).
3)-- இனி அநந்த்.. அங்கிள் குறிப்பிட்ட..’நோங்கும்’ எனும் சொல்.
இது சின்ன வயசிலிருந்து என் பாட்டி(அம்மாவின் தாயார்) அதைப்பயன்படுத்தும்
தாக்கத்தினால் எனக்கு இக்கவியில் வந்திருக்கலாம்... என்னடா.(என்
தம்பியைப்பற்றி..உலுக்கி எழுப்பி)சனிக்கிழமை, ஞாயித்துக்கிழமைன்னா.. 10
மணி வரை தூங்கரே..?சீக்கிரம் எழுந்து குளித்து காரியத்தில்
நோங்குடா(ஆழ்ந்து ஈடுபடுடா..?).எவ்வளவு ஹோம் வொர்க் இருக்கு..வேலை
இருக்கு.. இப்படித் தூங்கி வழிந்தால் எப்படி பிற்காலத்தில்
ஆபீஸ் வேலை பார்ப்பே..அங்கு மேனேஜர் விரட்டும்போதுதாண்டா
உங்களுக்கெல்லாம் புத்திவரும்..? என்று அதட்டுவாள்..
என் தம்பி ஸ்வாமியோ ..போ பாட்டி. ஒரு லீவு நாளில் கூட எக்ஸ்ட்ரா
தூக்கம் தூங்கவிட மாட்டேங்கறே.என் மேனேஜர் மத்யானம் தூங்கரதுக்குன்னே
அங்கே ஒரு டேபிள் போட்டிருப்பான்..பார்!.பாட்டி... அப்பேற்பட்ட
ஆபீஸில்தான் நான் வேலைக்குச் சேரப்போகிறேனாக்கும். என்று.. அவளை
டபாய்ப்பான்..நல்ல தமாஷ்.. ஒவ்வொரு லீவின் போதும்.
நூங்கு
என்ற சொல் பேச்சில் நோங்கு
என்று வந்திருக்குமோ?
நூங்கு²-தல்
, 5 v. intr. < நூங்கு.
To be great, intense or abundant; to exceed; மிகுதல்.
(W.)
நன்றி.. என் கவிச்சொற்களைப்பற்றி.. பல அங்கிள்,மற்றும் .தங்கமணி ஆண்ட்டி
ஆகியோருக்கு.குறிப்பாய் எழிலவன் அங்கிள் அப்படியே தூக்கி ஆகாசத்தில்
போட்டுவிட்டார்.
என் தலை,”நிமிராமல்’இருக்கணுமே..காமாக்ஷீ காப்பாத்து..!
சுதாவேதம்--
2009/7/18 Siva Siva <naya...@gmail.com>:
> // தூக்கம் என்னும் ’மயக்கம்’ ஒன்றால்
> ..சோதனை வைத்தான் இறைவன்!
> ஊக்கம் இன்றி உடம்பு நிமிர்ந்தால்
> ..உதவ மறுப்பான் தலைவன்!
> ஆக்கம் நினைத்தே ‘உயரும்’ நெஞ்சில்
> ..ஆணி அடித்தே அமர்வான்;
> நோக்கம் ஒன்றே குறியாய் உழைத்தால்
> ..நொடியில் பாதை அமைப்பான்!-வெற்றிப்
> ..படியில் ‘உயரே’ சேர்ப்பான்! //
>
> தூக்கம் தான் நாம் உயர்வதைத் தடை செய்கிறது என்றுவிட்டீர்கள்! தூக்கம் என்றாலே
> 'உயரம்' அன்றோ!! :)
>
> ஊக்கம் இன்றி உடம்பு நிமிர்தல் - புரியவில்லை. ஊக்கம் இல்லாவிடில் உடம்பு
> தளருமன்றோ? உற்சாகம்தானே உடம்பை நிமிர்த்தும்?
>
> உழைப்பவர்க்கே ஈசன் உதவுவான் - நல்ல கருத்து.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>