ஐயன்தீர்த்தல் ஆன்றோர் கடனே

17 views
Skip to first unread message

Swaminathan Sankaran

unread,
Sep 9, 2012, 6:19:00 PM9/9/12
to santhav...@googlegroups.com
கீழே வரும் பாடலில் காணும் அரும்பெறர் கற்பின்  'அயிராணி' யார்?
இந்திராணியா?

நாலடி நானூறு

அரும்பெறற கற்பி னயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும் - விரும்பிப்
பெருநசையார் பின்னிறபா ரின்மையே பேணு
நறுனுதலா ணன்மைத் துணை.

(முதலடியிலும் மூன்றாமடியிலும் வல்லின 'ற'வும், வல்லின 'ற' ஒற்றும் தவறி விட்டன - கணினி ஒத்தாசை செய்ய மறுத்துவிட்ட காரணத்தால்!)

சங்கரன்
--
 Swaminathan Sankaran

Siva Siva

unread,
Sep 9, 2012, 6:48:11 PM9/9/12
to santhav...@googlegroups.com


2012/9/9 Swaminathan Sankaran <swamina...@gmail.com>
*அயிராணி ayirāṇi

n. < அயிராவணி, `consort of அயிராவணன், owner of airāvaṇa.' 1. Indrāṇī, Indra's consort; இந்திராணி. (நாலடி, 381.) 2. Pārvatī; பார்வதி. (திவா.)

*அயிராவணம் ayirāvaṇam
, n. < airā- vaṇa. 1. Indra's elephant; இந்திரன் யானை. (பிங்.) 2. Elephant of Kailāsa, said to have 2000 tusks, vehicle of Šiva; கயிலாயத்திலுள்ள ஒரு யானை. (தேவா. 713, 1.) ஈராயிரமருப் பேய்ந்துடற்றத் தயங்குந் திற லயிராவணம் (தணிகைப்பு. களவு. 92). 3. State elephant; பட்டத்து யானை. (சீவக. 30, 46.)


381. அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன


பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும் - விரும்பிப்

பெறுநசையாற் பின்னிற்பா ரின்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை.

(பொ-ள்.)அரும்பெறல் கற்பின் அயிராணி அன்ன பெரும் பெயர்ப் பெண்டிர் எனினும்-பெறற்கரிய கற்பொழுக்கமுடைய அயிராணி என்னுந் தேவர்கோன் மனைவிபோல் வாழ்க்கையிற் பெரிய புகழ்வாய்ந்த மகளிராயினும், விரும்பிப் பெறு நசையால் பின் நிற்பார் இன்மையே பேணும் நறுநுதலாள் நன்மைத்துணை - அவருள், உணவு முதலிய பொருள்களை விரும்பி அவற்றை அடையும் வேட்கையால் தன் பின்னே இரந்து நிற்கும் இரவலர் இல்லாமையையே தனது இல்லற வொழுக்கத்தாற் காத்தொழுகும் இயற்கை மணங் கமழு நெற்றியையுடைய பெண்ணே அவ் வில்லறத்தின் பயன்களாகிய மேன்மேல் நன்மைகட்குத் துணையாவாள்.

(க-து.)கற்புடை மகளிர்க்கு விருந்து புறத்தரும் இயல்பு இன்றியமையாதது.

(வி-ம்.)கற்பாவது, கணவன்பால் ஆழ்ந்த அன்புணர்வுடைமை. அயிராணியின் கற்புக் கூறவே இவரது கற்பும் பெறப்பட்டது. படவே, பின்னிற்பாரென்றது இரவலர்க்காயிற்று. அயிராணி கூறப்பட்டமையின், கற்பொழுக்கத்தோடு திரு உரு முதலிய ஏனைப் படைப்புக்களும் பெறப்பட்டன. இல்லறவொழுக்கமாவது, அறவோர்க்களித்தல் முதலியன; அவற்றுள்ளும் விருந்து புறந்தருதல் மிக இன்றியமையாததாதலின், ‘பின்னிற்பாரின்மையே பேணும் நறுநுதலாள் துணை' யெனப்பட்டது, "இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்"1 டென்றார் நாயனாரும். வீடுபயக்கும் அருணெறிக்கு ஏதுவாய்ப் பொருள்களிற் பற்றின்றி நின்று உலகில் அறம் வளர்க்கும் பயிற்சியே இல்லறத்தின்கண் நடைபெறுதற்குரியதாகலின், ஒரு பயனுங் கருதாது ஆருயிர்களை ஓம்புதலாகிய விருந்து புறந்தருதலின் இன்றியமையாமை இவ்வாறுணர்த்தப்பட்டது. இல்லம் போதுவார் குறிப்பறிந்து, அவரை இரவலராக்காது உடனே விருந்தாக ஏற்றொழுகுக வென்பார், பின்னிற்பா ரின்மையே பேணும்' என்றார். ஏகாராம்; தேற்றம். நன்மையென்றது, தவம் முதலிய துறவற நிலைகளை.


Swaminathan Sankaran

unread,
Sep 9, 2012, 8:27:57 PM9/9/12
to santhav...@googlegroups.com
நன்றி. நானும் அயிராவணத்துடன் சேர்த்து இந்திராணியாக இருக்கும் என்று ஊகித்தேன். உங்கள் விளத்திற்கு மீண்டும் நன்றி.

சங்கரன்


2012/9/9 Siva Siva <naya...@gmail.com>




*அயிராணி ayirāṇi

n. < அயிராவணி, `consort of அயிராவணன், owner of airāvaṇa.' 1. Indrāṇī, Indra's consort; இந்திராணி. (நாலடி, 381.) 2. Pārvatī; பார்வதி. (திவா.)

*அயிராவணம் ayirāvaṇam
, n. < airā- vaṇa. 1. Indra's elephant; இந்திரன் யானை. (பிங்.) 2. Elephant of Kailāsa, said to have 2000 tusks, vehicle of Šiva; கயிலாயத்திலுள்ள ஒரு யானை. (தேவா. 713, 1.) ஈராயிரமருப் பேய்ந்துடற்றத் தயங்குந் திற லயிராவணம் (தணிகைப்பு. களவு. 92). 3. State elephant; பட்டத்து யானை. (சீவக. 30, 46.)



[...]
--
 Swaminathan Sankaran
Reply all
Reply to author
Forward
0 new messages