. வினை கடந்தேன்!
இல்லாத பொருள்தேடிக் களைத்தேன், கண்முன்
இருப்பவற்றைக் காண்பதற்கு மறுத்தேன். வாழ்வில்
கல்லாத தில்லையென நினைத்தேன், ஆனால்
கற்றவையோர் கைப்பிடிதான் புரிந்தி ளைத்தேன்.
நல்லார்முத் தமிழோடு மறைகள் பாடும்
நளிர்மணிநீர்ப் பயிர்வயல்சூழ் தில்லை மூதூர்,
நில்லாது நடம்பயிலும் சிவனே வந்தேன்
நின்னிடமென் துயர்தந்தேன் வினைக டந்தேன்!
-- தில்லைவேந்தன்