கொடுத்த கருத்திற்கு விடுத்த வெண்பா - 4
கொடுத்த கருத்து:
*எந்தவொரு பிரச்சனைக்கும் மூன்று வகையான தீர்வுகள் உள்ளன...!!*
*1.ஏற்றுக் கொள்வது.,*
*2.மாற்றிக் கொள்வது.,*
*3.விட்டு விடுவது.,*
*ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை மாற்றிக் கொள்வது..,*
*மாற்றவே முடியாத விஷயங்களை விட்டு தள்ளுவது.
விடுத்த வெண்பா:
ஏற்றலு மோர்வழி; ஏலாக்கால் தூற்றாதே
மாற்றிடுவீர்; அன்றேல் மனமுவந்து - தேற்றமுடன்
ஒப்புதலே மேலாம்; ஒழிக்கவொண்ணா வல்வினையைத்
தப்புதலே தீர்வாய்த் தகும்.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
11/02/2026