சந்தவசந்தம் கவியரங்கம் -46: மிறைப்பா கவியரங்கம்: முன்னோட்டம்

178 views
Skip to first unread message

ramaNi

unread,
May 13, 2018, 1:39:01 AM5/13/18
to santhav...@googlegroups.com
======================================================================
சந்தவசந்தம் கவியரங்கம் -46: மிறைப்பா கவியரங்கம்: முன்னோட்டம்
======================================================================
இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கும் மிறைப்பா கவியரங்க நெறியாளராக இலந்தையார் அடியேனை அமர்த்தியுள்ளார்.  இதற்கு முன் அசோக் சுப்ரமணியம் அவர்கள் தலைமையில், அன்பர்கள் பலர் பங்கேற்றுப் பிரமாதமாக நடைபெற்று இவ்வகையில் முதலெனும் முத்திரை பதித்த சித்திரக்கவியரங்கம் போல், இந்த மிறைக்கவியரங்கத்திலும் அன்பர்கள் பேரளவில் பங்கேற்று முத்திரை பதிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

பல்வேறு அலுவல்களுக் கிடையில் இலந்தையார் பயிற்றுவிக்கும் மிறைப்பா பயிற்சி இழையில் அன்பர்களும், சந்தவசந்த அனுபவக் கவிஞர்களும் இதுவரை பெரிதளவு பங்கேற்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் மிறைப்பா கவியரங்கம் தொடங்கவிருப்பதால், இனி வரும் நாட்களில் அன்பர்கள் இலந்தையார் பயிற்சி இழையில் பங்கேற்று அவர் தந்துள்ள வகைகள் அனைத்தையும் முயல்வார்களாக!

இவ்வகையில், அன்பர்களுக்கு உதவியாகவும் ஓர் சடுதிக் குறிப்பாகவும் (quick reference), மிறைப்பா பயிற்சி இழையில் இலந்தையார் பயிற்றுவித்த சித்திரமில்லா மிறைக்கவிகளின் முன்னோட்டம் இவ்விழை.

இலந்தையார் இதுவரை பயிற்றுவித்த மிறைக்கவி வகைகள் இவை:
01. பிந்துமதி வெண்பா, 02. பிரேளிகை, 03  காதை கரப்பு, 04. திரிபாகி, 05. அசைச்சுதகம், 06. பங்கி: திரிபங்கி, 07. இதழகலி, 08. பிறிதுபடு திரிபங்கி, 09. நடுவெழுத்தலங்காரம், 10. வினாவுத்திரம் (வினாவிடை), 11. பிறிது படுதலும் பங்கியும், 12. கால் கொம்பில்லா ஸ்துதி.

இவ்வகைகளை முயவோர் தம் பதிவுகளை இவ்விழையில் இடாமல், அவர் பயிற்றிவிக்கும் மிறைப்பா பயிற்சி இழையிலே இடுவார்களாக. அப்போதுதான் அவர் பார்த்துச் செப்பனிடவியலும்.

==============================================
01. பிந்துமதி வெண்பா
==============================================
விதிகள்
1. ஈற்றுச் சீர் தவிர்த்து அனைத்தும் காய்ச்சீர்.
2. முதற்சீரின் இரண்டாம் எழுத்திலிருந்து அடுத்தடுத்த எழுத்துகள் மெய்யெழுத்தாக (ஒற்று) இருத்தல் வேண்டும்.
3. ஈற்றுச் சீரின் ஈற்றெழுத்தும் ஒற்றாக இருத்தல் வேண்டும்.
4. காய்ச்சீர் என்பதால் ஒவ்வொரு சீரிலும் மூன்று ஓற்றுகள் பயிலும்.
5. காய்ச்சீரின் இறுதி ஒற்று வரும் சீருடன் சந்திசேரும் போது மறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சான்றுகள்
இலந்தையார்
என்னென்பேன் தன்னன்பால் முன்நின்றாய் பின்னந்நாள் 
நின்னன்பின் விஞ்சத்தான் நேர்கின்றேன் – முன்னன்பில்
வெல்லேன்நான் தோற்பேன்நான் சிந்தித்துச் சொல்கின்றேன்
வெல்வாய்முன் தோற்பேன்வெல் வேன்!

சந்தத்தில் முந்தித்தான் தந்தால்தான் கொள்ளென்றேன்
வந்தித்தேன் சிந்தித்தேன், மன்றத்தில் – பின்னுன்சொல்
பந்தத்தில் பூட்டித்தான் பார்த்துத்தான் தந்துள்ளேன்
தந்தத்தத் தந்தத்தத் தான்.

***
கவிஞர் இக்குவனம்
கற்றில்லேன் நன்னூல்கள் கற்றோர்முன் நின்றில்லேன்
பற்றில்லேன் பண்பில்லேன் பார்போற்றும் -- நல்லோர்தம்
பொற்பில்லேன் தெய்வத்தின் பூண்பில்லேன் என்செய்வேன்
கற்றூண்போல் நிற்கின்றேன் காண்

***
பசுபதியார்
பார்தன்னில் மாந்தர்செய் வாழ்வென்னும் போர்தன்னில்
சோர்வென்னும் நோய்பற்றித் துன்புற்றால் – சீர்மல்கும்
செந்தில்வாழ் தெய்வத்தின் தாள்போற்றிக் கும்பிட்டால்
கந்தப்பன் வேல்காக்கும் காண்!

*****
==============================================
02. பிரேளிகை
==============================================
சொல் அல்லது பொருளை மறைத்துப் பாடுவது.

சொற்பிரேளிகை
சொற்பிரேளிகை. கிட்டத்தட்ட விடுகதை போல்தான். ஒரு சொல் மறைந்திருக்கும் . கண்டு பிடிக்க வேண்டும்

சான்றுகள்
இலந்தையார்
விதையிருக்கும் ஆனாலோ கனியு மன்று
      வீச்சிருக்கும் அரிவாளோ இல்லை, உள்ளே
பதமுடைய பண்கொஞ்சும் குயிலோ இல்லை
       பாவாண்ர்க் குறவாகும், ஆனால் அஃதோ
இதமுடைய எழுத்தாணி  தானு மன்று
       இடைவிட்டுக் கதைசொல்லும் , பாட்டி யன்று
எதுவெனவே நீர்கணித்துச் சொல்க, இன்றேல்
       இதிலிரண்டால் உமைக்கடித்துக் குதற வைப்பேன்.

விடை
கவிதை    
இடையெழுத்து வி போனால் கதை என்றாகும் 
இதிலிரண்டு-  கவி   கவி அதாவது குரங்கு . குரங்கை ஏவிக் கடிக்க வைப்பேன் என்பது பொருள்.

***
ரமணி
நாலெழுத்தாய் மாலையில் நாம்செல் இருசொற்சொல்
சோலைமுன் நிற்கக் குறும்பூழ் முதற்கடையில்
ஆனமுதற் சொல்லங்கம் அஃதின்றேல் இல்வாசல்
நான்கெழுத்தால் மந்தை நடை.

(ஈற்றடியை யோசிக்க விடை காணலாம்.)
விடை
கால்நடை

*****

பொருட்பிரேளிகை

ஒரே விடைதான் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் பொருள் ஒத்துப்போக வேண்டும். வெண்பாவிலோ விருத்தத்திலோ அகவலிலோ எழுதலாம்

சான்றுகள்
இலந்தையார்
கொங்கை பிடித்திழுப்பான், கூடவே வாய்புதைப்பான்
எங்கேயும் முத்த-இதம் பெறுவான் - சங்கையின்றி
ஆடையும் இன்றி அலைவான், இதைப்பார்த்துப்
பீடையெனத் திட்டப் பெறான்  

விடை
ஆண்குழந்தை, பாலன் என்றும் சொல்லலாம், பாலகன் என்னலாம்.
ஆனால் பொருள் ஒன்றுதான். எனவே இது பொருட்பிரேளிகை.

***
ரமணி
மூங்கிலால் ஆனலும் மூச்சிசைத்தே ஊதலிலை
தாங்குவது கையெனினும் தக்கபயன் கைக்கில்லை
பற்றுக்கோ டென்றாலும் பற்றுவ துள்ளமில்லை
உற்றதுணை யாம்காலுக் கொன்று.

விடை
கைத்தடி அல்லது ஊன்றுகோல்.

*****
==============================================
03  காதை கரப்பு 
==============================================
ஒரு பாட்டுக்குள் வேறொன்றைக் கரந்திருக்கச் செய்வது.

கீழ்க்காணும் இன்னிசை வெண்பாவில் ஒரு திருக்குறள் மறைந்திருக்கிறது. இதை இரண்டு வகையாகச் செய்கிறார்கள்

மறைந்திருக்கும் பாட்டின் எழுத்துகள் படிக்கும் போதே அங்கங்கே வரிசையாக வரவேண்டும்.  ஆனால் இடம்விட்டிருக்கலாம். 

இன்னொன்று. எழுத்த்கள் முன்னும் பின்னும் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.  அவறைத் தொகுத்தால் மறைந்துள்ள பாடல் வெள்வரவேண்டும். கீழே உள்ள பாடல் முதல் வகை

சான்றுகள்
இலந்தையார்
ஆகா தெனவே முயல்வதின்றி எய்த்திருப்போய்
ஏகாத அம்பினில் என்ன பயன்? ஓயாமல்
வானைப்பார்த் துப்பிழைத்த வாழ்வேது? பேனாவைத்
தானெடுத்தல், ஏந்தல் இனிது.

கரந்துள்ள குறள்:
கான முயலெய்த அம்பினில் யானை 
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

கரந்துள்ள பாடல் சொற்கள் வரிசையாக இருக்கின்றன. முன்னும் பின்னும் எங்குவேண்டுமானாலும் இருக்கலாம் என்பது அடுத்த வகை. அதைப் பின்பு பார்ப்போம். 

***
ரமணி
காக்கையை வேண்டிக் கரம்வால் மலர்கொண்டேன்
யாக்கை கரைந்து மனமுண்ணு - மார்க்கமுடன்
மன்பதையின் னல்தீர் மழைநீரார்க் கேயுள
மன்புருவாய்ப் பெய்யவே வான்.

இதில் மறைந்துள்ள திருக்குறள்
காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு
மன்னநீ ரார்க்கே யுள.

பொருள்
காப்பாற்றுதலை (இறைவனிடம்) வேண்டி என்கையில் வெள்ளை மலர்கொண்டேன், படைப்பதற்கு.
என் உடல் கரைந்து, மனம் அனுபவிக்கும் சன்மார்க்கத்துடன்
மக்களின் இன்னல் தீர்க்கும் மழிநீரார்க்கே (வருணனுக்கே) உள்ளம் இறங்கி
அன்பின் உருவாக வான் பெய்யவே.

*****
==============================================
04. திரிபாகி
==============================================
திரிபாகி யென்றால் மூன்றெழுத்துச் சொல்லொன்று ஒரு பொருளைக் கொடுக்க, அதில் முதல் எழுத்தை நீக்கி இரண்டெழுத்துச் சொல்லாகி வேறு பொருளையும் நடு எழுத்தை நீக்கி  மீத முள்ள இரண்டெழுத்துச் சொல் வேறொரு பொருளையும் கொடுப்பது. இது வெண்பாவிலோ குறள்வெண்பாவிலோ நடப்பதால் எடுக்கும் மூன்றெழுத்துச் சொல் நெடிlல் நெடில் குறில் என அமைவது நன்று  எ.கா  பூமாரி  மாரி பூரி என்றாகும்

சான்றுகள்
இலந்தையார்
ஏகாதென் றேசெவிப்பூ இப்படியும் சொல்லிடலாம்
போகாது காதுபோ து

போகாது, காது  போது,   ஏகாது – போகாது  செவி- காது , பூ- போது

***
ரமணி
மூன்றெழுத்துச் சொல்லாகி முன்பாய்ந்து செல்விலங்கின்
ஆன்றமுதல் நீக்க அதுமறைக்கும்! - மூன்றில்
பொதுநடு நீக்கப் பொறாதொலிக் கும்வவ்!
குதிரை திரைபின் குரை!

*****
==============================================
05. அசைச்சுதகம்
==============================================
அசைச் சுதகம் வகையில் ஒரு சொல்லின் முதலில் இருந்து ஒவ்வொரு அசையாக நீக்க வேறொரு சொல்வரச் செய்யுள் அமையும். இப்படி அமையும் சொற்கள் செய்யுளின் இறுதி அடியில் குறிக்கப்படும்.

சான்றுகள்
ரமணி
போராக்கக் கலம்!
(கலிவிருத்தம்: அசைச் சுதகம்)

பல்லவ சாளுக்கியப் பகையால் பொருதநிலம்
நல்லவை ஆக்கம் நன்மையைக் குறிக்கும்சொல்
வல்லலை வீசும் வாரியில் செல்லுமிது
சொல்மணி மங்கலம் மங்கலம் கலமே.

***
இலந்தையார்
பட்டமிது நாதம் படைப்பதிது ஆபரணம்
கட்ட ஒளிரும் கனகமிது- இட்டமுடன்
தாமணிந்து பார்க்கத் தமிழ்தந்த நற்-கவி
மாமணி மாமணிம ணி


*****
==============================================
06. பங்கி: திரிபங்கி
==============================================
ஒரே செய்யுள் மூன்று செய்யுள்களாகப் பிரிந்து ஒவ்வொன்றும் தனித்தனியே பொருளுடன் நிற்றல்.

சான்று
ரமணி
முன்னை வினைகள் இற்றுப் போகவே! 
(எழுசீர் விருத்தம்: தேமா புளிமா தேமா கூவிளம் மா மா காய்)

முன்னை வினைகள் முற்றும் சூழ்வது குன்றச் செய்வீர் கோமானே!
இன்னும் வினைகள் இற்றுப் போகவே என்றும் அருள்வீர் பெம்மானே!
உன்னத் தெரியேன் சுற்றம் ஆகுவீர் துன்மை யுரைப்பீர் முக்கண்ணா!
மன்னித் தருள்வீர் பற்றை நீக்கியே நன்மை விளைப்பீர் கங்காளா! 

வஞ்சித் துறை
முன்னை வினைகள் 
இன்னும் வினைகள்
உன்னத் தெரியேன்
மன்னித் தருள்வீர்! ... 1.

வஞ்சித் துறை
முற்றும் சூழ்வது
இற்றுப் போகவே
சுற்றம் ஆகுவீர்
பற்றை நீக்கியே! ... 2.

வஞ்சி விருத்தம்
குன்றச் செய்வீர் கோமானே!
என்றும் அருள்வீர் பெம்மானே!
துன்மை யுரைப்பீர் முக்கண்ணா!
நன்மை விளைப்பீர் கங்காளா! ... 3. 

*****

இதன் விரிவாகச் சதுர்பங்கி, பஞ்சபங்கி என்று ஒவ்வொரு எண்ணாக ஏற்றிச் செய்யலாம். பாம்பன் சுவாமிகள் ஒரே செய்யுளில் 125 செய்யுள்கள் வருமாறு செய்திருக்கிறார்.

இலந்தையார் செய்த ஒன்று பலவாக ... 32 பங்கி இங்கே:
மிறைப்பா பயிற்சி இழை: ஏப்.14, 2018

*****
==============================================
07. இதழகலி
==============================================
உ ஒ வ, ம ப  ஓ, அவைசார்ந்த உயிர்மெய்கள் வரக்கூடாது. அதாவது உதடு ஒட்டவோ குவியவோ கூடாது. அதாவது பல்லைக் காட்டிக்கொண்டே படிக்கவேண்டும்.

சான்றுகள்
இலந்தையார்
நினைந்தேன் நெகிழ்ந்தேன்   நினையெண்ணிச் சிந்தை
நனைந்தேன், அடடா  நறுந்தேன் - இனித்தேன்
அதையன்றி இல்லையென் றிந்தேன், அதனால்
கதிகந்தா   நின்றன் கழல்

***
ரமணி
கழுதை - கதிர் - காரிகை!
(இதழகல் குறள் வெண்பா)

காள்காள் எனநால் கரங்கள் கதறின
ஆளில்லாச் சாலை யனல்!
[கரம் = கழுதை]

***
கதிர்!
(இதழகல் நேரிசை வெண்பா)

நீண்டகார்ச் சாலை நிழல்கள் சிறிதாய்க்கால்
தீண்டிக் கதிரால் சிரங்காயத் - தாண்டிக்
கடைநின்றே தண்டேன் கனிச்சா றிறக்க
நடையிற் செறிந்த நசை.

***
காரிகை!
(இதழகல் இன்னைசை வெண்பா)

இட்டலி சட்னி இனிநீரே அட்டிலில்!
கட்டளை யிட்டனள் காரிகை - சட்டென!
சீட்டாட்டக் கச்சேரித் திண்ணை இனியில்லை!
கேட்ட கணத்தில் கிலி.

*****
==============================================
08. பிறிதுபடு திரிபங்கி
==============================================
ஒரே வெண்பா மூன்றாகப் பிரிதல்.

சான்றுகள்
இலந்தையார்

மூன்று வெண்பாக்கள்
அந்தியில் செக்கர் அழகினைச் செப்பச்சொல்
எந்தவகை சிக்கும்? எழுதிடவே - சிந்தையிலே 
மிக்க விழிப்புடனே வந்தித்து வேண்டிட
தக்க மொழிபார்க்குந்  தான்

 செக்கர் அழகினைச் செப்பச்சொல் எந்தவகை 
 சிக்கும்? எழுதிடவே  சிந்தையிலே - மிக்க
 விழிப்புடனே வந்தித்து வேண்டிடத் தக்க
 மொழிபார்க்குந்  தானந்தி யில்

அழகினைச் செப்பச்சொல் எந்தவகை சிக்கும்
எழுதிடவே சிந்தையிலே மிக்க - விழிப்புடனே 
வந்தித்து வேண்டிடத் தக்கமொழி பார்க்குந்தான்
அந்தியில் செக்கர் அழகு

*****
==============================================
09. நடுவெழுத்தலங்காரம்
==============================================
நடுவெழுத்தலங்காரம்: முதல் வகை

இதில் இரண்டுவகை, முதல் வகை எளிது. இரண்டாவது வகை கொஞ்சம் கடினம்.

“சொற்குரை மூன்றெழுத்தாம் தூய நடுவெழுத்து
நற்பாட்டுடைத் தலைவனாம்  “ என்பது சூத்திரம்.

அதாவது சொல்லுக்குப் பொருள் மூன்றெழுத்தில் வரும் அப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளாக வரும் மூன்றெழுத்துச் சொற்களின் நடுவெழுத்துகளை முறையே தொகுக்கப் பாட்டுடைத் தலைவன் பெயர் வரும்.

இரண்டாவது வகையில்  மூன்றெழுத்துச் சொற்களில் நடுவெழுத்தை எடுத்த பிறகும் வரும் பொருள்பொதிந்த சொற்களை இணைத்துப் பின்பகுதியில் பாடலை அமைப்பதாகும்.

இரண்டையும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். முதலில் எளிமையானது. இதில் பாட்டுடைத் தலைவன் என்றில்லாமல்  சந்தவசந்தத்தைப் பாட்டுடைத்தலைமையாகக் கொணர்ந்திருக்கிறேன். பாடலைப் பார்க்கலாம். பாடலின் பொருளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்.

சான்றுகள்
இலந்தையார்

சுகம், குழி  பொன் துறவு, மட்டிமுன் செல்ல
தகவிதழ் இப்பிறப்பு  சார- அகம்வாழ்ந்தே
முந்தும் தளமாக முன்நிற்கும் நம்முடைய
சந்த வசந்தம் தனி.

சுகம் என்ற சொல்லுக்கு வசதி என்று மூன்றெழுத்துப்பொருள் உண்டு. இவ்வண்ணம் எல்லாச் சொற்களுக்கும் பொருள் எழுதிக்கொள்ளலாம்
சொல்  => பொருள் =>நடுவெழுத்தை நீக்கியபின் வரும் சொல்
சுகம் => வசதி => வதி
குழி => பொந்து => பொது
பொன் => புதன் => புன்
துறவு => தவம் => தம்
மட்டி => அசடு => அடு
முன்செல்ல => முந்து => முது
தகவிதழ் => உதடு => உடு
இப்பிறப்பு => இம்மை => இமை
நடுவெழுத்துகளை மேலிருந்து கீழாகச் சேர்க்கச்  சந்தவசந்தம்  வரும்

***
ரமணி
வான்மருந்து கோலநிறம் மாமேனி யென்பக்கம்
ஊன்வாசம் கொள்துன்ப மின்றிநான் - தேன்மொழியால்
எக்கணமும் பாடி இறைஞ்சுவன் நன்றியுடன்
முக்கண்ணன் காப்பிலென்றன் மூப்பு.

முதலிரண் டடிகளின் பிரதிச் சொற்கள்
வான்மருந்து => அமுது => மு => அது
கோலநிறம் => பாக்கு => க் => பாகு
மாமேனி => ஆகம் => க => ஆம்
பக்கமுற => அண்மை => ண் => அமை
ஊன்வாசம் => மணம் => ண => மம் (அமைதி)
கொள்துன்ப => சன்ம => ன் => சம
நடுவெழுத் தலங்காரம்: முக்கண்ணன்

*****

நடுவெழுத்தலங்காரம்: இரண்டாம் வகை
சான்றுகள்
இலந்தையார்
சுகம், குழி பொன் துறவு, மட்டிமுன் செல்ல
தகவிதழ் இப்பிறப்பு  சார- அகம்வாழ்ந்தே
யாவர்க்கும் கேடு சொந்த மாய்ச் சமைக் கும்கிழவன்
மேவுவிண்மீன் கண்காவ லர்

சொல்         பொருள்      நடுவெழுத்து நீக்கிய சொல்    பொருள்      பாடலில் சொல்
சுகம் => வசதி => வதி => வசித்தல் => அகம்வாழ்தல்
குழி => பொந்து => பொது => எல்லோருக்கும் =>  யாவர்க்கும்
பொன்  => புதன் => புன் => புன்மை => கேடு
துறவு => தவம் => தம் => தமது => சொந்தமாய்
மட்டி => அசடு => அடு => உணவாக்குதல் => சமைக்கும்
முன்செல்ல =>  முந்து => முது => முதுமை  => கிழவன்
தகவிதழ் => உதடு => உடு => நட்சத்திரம் => விண்மீன்
இப்பிறப்பு =>  இம்மை  => இமை => கண்காவலர்
நடுவெழுத்துகளை மேலிருந்து கீழாகச் சேர்க்கச்  சந்தவசந்தம்  வரும்

***
ரமணி
வான்மருந்து கோலநிறம் மாமேனி யென்பக்கம்
ஊன்வாசம் கொள்துன்ப மஃதில்லை - தேனிளகும்
பண்ணாகும் பாடலுறும் நிம்மதியில் உள்ளப்போர்
முக்கண்ணன் தீர்த்தான் மொழி.

முதலிரண் டடிகளின் பிரதிச் சொற்கள்
சொல் => பிரதி => நடுவெழுத்து => நீக்கியபின் => பொருள் => செய்யுளின் பொருளின் பிரதிச்சொல்

வான்மருந்து => அமுது => மு => அது => அஃறிணை ஒருமைப் பெயர் => அஃது (இல்லை)
கோலநிறம் => பாக்கு => க் => பாகு => இளகிய வெல்லம், தேன்பாகு => தேனிளகும்
மாமேனி => ஆகம் => க => ஆம் => ஆகிவரும் => பண்-ஆகும்
பக்கமுற => அண்மை => ண் => அமை => அமைதல் => பாடல்-உறும்
ஊன்வாசம் => மணம் => ண => மம் => அமைதி => நிம்மதி
கொள்துன்ப => சன்ம => ன் => சம => சமம் => (உள்ளப்) போர்
நடுவெழுத் தலங்காரம்: முக்கண்ணன்

*****
==============================================
10. வினாவுத்திரம் (வினாவிடை)
==============================================
பல மொழிகளாகப் பிரிந்து பொருள்படத்தக்க ஒரு சொல்லையோ சொற்றொடரையோ எடுத்துக்கொண்டு, அம்மொழிகளே விடைகளாமாறு வினாக்களை வினவி, அச்சொற்றொடரையும் கூறி முடிப்பது வினாவுத்திரமாகும்.

சான்றுகள்
சித்திரக் கவி விளக்கம் (பரிதிமாற் கலைஞர்)
பூமகள்யார் போவானை ஏவுவான் என்னுரைக்கும்
நாமம் பொருசரத்திற் கென்னென்பர் - தாமழகின்
பேரென் பிறைசூடும் பெம்மா னுவந்துறையும்
சேர்வென் திருவேகம் பம்.

வினாக்களின் விடைகள் முறையே:
திரு + ஏகு + அம்பு + அம்.

***
இலந்தையார்
வாலிறைவன் நெஞ்சத்தில் மாறா திருக்கின்ற
.ஞாலம் புரக்கின்ற நாமமெது?-சீலமுடை
தெய்வத்தை ஊராரும் செப்புமுறை எவ்வாறு?
மெய்யாய் இராம சாமி!

(வாலிறைவன்=அனுமன்--ஊரார்தெய்வங்களைச்,'சாமி' என்பர்)

*****


Subbaiyar Ramasami

unread,
May 13, 2018, 3:17:30 AM5/13/18
to santhavasantham
நல்ல தொகுப்பு. அன்பர்கள் முயல்வார்களாக!  முனைவார்களாக!

2018-05-13 11:09 GMT+05:30 ramaNi <sai...@gmail.com>:
======================================================================
சந்தவசந்தம் கவியரங்கம் -46: மிறைப்பா கவியரங்கம்: முன்னோட்டம்
======================================================================
இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கும் மிறைப்பா கவியரங்க நெறியாளராக இலந்தையார் அடியேனை அமர்த்தியுள்ளார்.  இதற்கு முன் அசோக் சுப்ரமணியம் அவர்கள் தலைமையில், அன்பர்கள் பலர் பங்கேற்றுப் பிரமாதமாக நடைபெற்று இவ்வகையில் முதலெனும் முத்திரை பதித்த சித்திரக்கவியரங்கம் போல், இந்த மிறைக்கவியரங்கத்திலும் அன்பர்கள் பேரளவில் பங்கேற்று முத்திரை பதிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

பல்வேறு அலுவல்களுக் கிடையில் இலந்தையார் பயிற்றுவிக்கும் மிறைப்பா பயிற்சி இழையில் அன்பர்களும், சந்தவசந்த அனுபவக் கவிஞர்களும் இதுவரை பெரிதளவு பங்கேற்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் மிறைப்பா கவியரங்கம் தொடங்கவிருப்பதால், இனி வரும் நாட்களில் அன்பர்கள் இலந்தையார் பயிற்சி இழையில் பங்கேற்று அவர் தந்துள்ள வகைகள் அனைத்தையும் முயல்வார்களாக!

இவ்வகையில், அன்பர்களுக்கு உதவியாகவும் ஓர் சடுதிக் குறிப்பாகவும் (quick reference), மிறைப்பா பயிற்சி இழையில் இலந்தையார் பயிற்றுவித்த சித்திரமில்லா மிறைக்கவிகளின் முன்னோட்டம் இவ்விழை.

இலந்தையார் இதுவரை பயிற்றுவித்த மிறைக்கவி வகைகள் இவை:
01. பிந்துமதி வெண்பா, 02. பிரேளிகை, 03  காதை கரப்பு, 04. திரிபாகி, 05. அசைச்சுதகம், 06. பங்கி: திரிபங்கி, 07. இதழகலி, 08. பிறிதுபடு திரிபங்கி, 09. நடுவெழுத்தலங்காரம், 10. வினாவுத்திரம் (வினாவிடை).

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Vivek Bharathi

unread,
May 13, 2018, 3:56:25 AM5/13/18
to santhav...@googlegroups.com
அடேயப்பா! கண்டாலே கண்ணைக் கட்டுகிறது. நான் இன்னும் ஒன்று கூட முயலவில்லை. ஏனோ சித்திரக் கவிதையில் இருந்த ஆர்வம் இதில் எழவில்லை. அடியேனைக் கடைசியாக அழைக்குமாறு கவியரங்கத் தலைவரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அதற்குள் பராசக்தி அருளால் ஏதேனும் எழுத முயற்சி செய்கிறேன். நன்றி.

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

Subbaraman NV

unread,
May 13, 2018, 4:34:02 AM5/13/18
to santhav...@googlegroups.com
இவையெல்லாம் என்னைப்போன்ற இளைஞர்கள் தலையில் உள்ளேறாத விஷயம்.
என் வி சுப்பராமன் 

On Sun, May 13, 2018 at 1:26 PM, Vivek Bharathi <tamiludanvi...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (tamiludanvivekbharathi@gmail.com) Add cleanup rule | More info

அடேயப்பா! கண்டாலே கண்ணைக் கட்டுகிறது. நான் இன்னும் ஒன்று கூட முயலவில்லை. ஏனோ சித்திரக் கவிதையில் இருந்த ஆர்வம் இதில் எழவில்லை. அடியேனைக் கடைசியாக அழைக்குமாறு கவியரங்கத் தலைவரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அதற்குள் பராசக்தி அருளால் ஏதேனும் எழுத முயற்சி செய்கிறேன். நன்றி.

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

2018-05-13 12:47 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:



--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101


Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

ramaNi

unread,
May 13, 2018, 7:03:31 AM5/13/18
to சந்தவசந்தம்
இது கவியரங்க அறிவிப்பில்லை. இலந்தையாரின் மிறைப்பா பயிற்சி இழையின் தொகுப்பே. எனவே, விவேக் சில வகைகள் முயன்று அவ்விழையில் உடனே பதிவாயாக.
அன்புடன், ரமணி

ramaNi

unread,
May 13, 2018, 7:08:16 AM5/13/18
to சந்தவசந்தம்
பிரேளிகை, திரிபாகி, அசைச்சுதகம் போன்ற வகைகளை நீங்கள் முயன்றுபார்க்கலாம் சுப்பராமன் ஸார்.
ரமணி

ramaNi

unread,
May 13, 2018, 9:08:36 AM5/13/18
to சந்தவசந்தம்
==============================================
10.  வினாவுத்தரம் அல்லது வினா விடை
==============================================
பாவலர் மா. வரதராசன் அவர்கள் பயிற்றுவிக்கும் பைந்தமிழ்ச் சோலை மரபுகவிதை முகநூல் தளத்தில் வினாவுத்தரம் அல்லது வினா விடை மிறைக்கவி பற்றிய உரையாடலில் வினாவுத்தரம் கீழ்வரும் நான்கு வகைகளில் இயற்றப்பட்டன.
==============================================
வினா-விடை வெண்பா வகை 1.
==============================================
(முதலேழு சீர்களில் வினா, மீதமுள்ள சீர்களில் விடை,
என்று அமைவது: மகடூஉ முன்னிலை சிறப்பு. மகடூஉ முன்னிலை
என்பது ஒரு பெண்ணை முன்னிலையில் விளித்துப் பாடுவது.)

காக்கையும் ஆகும் கரி!
(நேரிசை வெண்பா)

நாணயம் இல்லாதார் நாநயத்தைப் பேணுவதேன்?
நாணயமே ஆள்வோரின் ஞானமோ? - மாணவியே!
வாக்காளர் அத்துடன் வாளா விருப்பதால்
காக்கையும் ஆகும் கரி!

*****
==============================================
வினா-விடை வெண்பா வகை 2.
==============================================
(ஈற்றடியில் உள்ள விடையின் ஒவ்வொரு சொற்பகுதியும்
ஒரு வினாவின் விடையாக வருமாறு அமைவது)

சிவநாமம்!
(இன்னிசை வெண்பா)

எரிவ தெதுவோ விளக்கிலே? மன்னன்
அரிவை இடம்பின் பதமெது? முன்பதம்?
’கன்று’ முதலசை கண்டுசேர் வந்தசி
வன்திரிபு ராந்தகன் வாக்கு.

விடை
விளக்கில் எரிவது => திரி
மன்னன் பெண் வாழும் இடம் => அந்தப்புரம்
அதன் பின்பதம் => புரம்
முன்பதம் => அந்த
கன்று முதலசை => கன்

இவற்றைச் சேர்த்தால் வரும் சிவநாமம்: திரிபுராந்தகன்

*****
==============================================
வினா-விடை வெண்பா வகை 3.
==============================================
(ஈற்றடியில் இல்லாத விடையின் ஒவ்வொரு சொற்பகுதியும் ஒரு வினாவின் விடையாக வருமாறு அமைந்து விடையைப் படிப்போர் கண்டறியுமாறு அமைவது)

யானை வழிபட்ட சிவத்தலம்!
(இன்னிசை வெண்பா)

வரதுங்க ராமமன்னன் அந்தாதி சொல்லும்
கருவைத் தலமிது! யானையின்னோர் பேரெதுவோ?
அம்மைக்கெப் பக்கமத்தன்? ’போன’ எதிர்ப்பதம்?
செம்மைநல் லூர்சேர்க்க வே.

விடை
கரி + வலம் + வந்த + நல்லூர் = கரிவலம்வந்த நல்லூர்

*****
==============================================
வினா-விடை வெண்பா வகை 4.
==============================================
(வினாக்களுக்கு விடையாக வரும் சொற்கள் இணைந்த 
சொற்றொடரே இறுதி விடையாக அமைவது)

ஔவை மொழி காண்!
(பஃறொடை வெண்பா)

ஆம்பல் விழியாளே! ஔவை மொழிகாண்பாய்!
சாம்பலை இப்பெயரில் சாற்றுவர்! இல்லாள்
இறுதியொற்றை நீக்கி இணைத்திடுவாய்! பொட்டினை
வைத்த இடமெது? வற்றிய பூமிக்கு
வைத்தபேர் முன்சொல்லை மாட்டு இறுதியாய்!
பொய்த்ததே ஔவைசொற் போக்கு!

விடை
’நீறில்லா நெற்றி பாழ்’

--ரமணி, 25/08/2016

***
அன்றே சொன்னார் ஔவையார்!
(நேரிசை வெண்பா)

யார்க்குப் பரிசளிப்பான் ஏந்தல்? தளைவேறு
சேர்விலாப் பாவென்? எதன்பேர் - தரக்கு?
கலைமிக ஔவையார் காணீற் றடியென்?
புலவர்க்கு வெண்பா புலி. ... 1

***
மூவறமும் தள்ளுதிறன் யார்க்கு? பரிசளிப்பான்
பாவகைக்கு யாவன்? பருவுலக்கை - நாவில்
உறவிக்கென்? ஔவையின் சொல்லிவையாய்ச் சேர்வென்?
துறவிக்கு வேந்தன் துரும்பு! ... 2

[யாவன் = எவன்; நாவில் = நாக்கு இல்லாத;
உறவி = எறும்பு]

***
கூறியே சொல்லெதிரென் றாவதெது? உள்ளுயிர்
ஏறியுணர் சாதனையாய் ஏற்பதெது? - ஏறுபரி
ஈறுகாட்டி ஏற்பதெது? ஔவைசொல் என்னிதுபோல்?
கூறாமல் சந்நியாசம் கொள்ளு. ... 3

--ரமணி, 13/04/2017

*****
அன்பர்கள் தாம் விழையும் வகை(கள்) முயன்று பதியலாம்.


ramaNi

unread,
May 31, 2018, 11:15:01 PM5/31/18
to சந்தவசந்தம்
==============================================
11. பிறிது படுதலும் பங்கியும் 
==============================================
கட்டளைக் கலித்துறை 
கற்கின்ற போதினில் கற்றுக்கொள் கின்றவன் கண்ணியத்தைச் 
அற்பமென் றெண்ணுத லாகாது சொற்பமும் ஆற்றலுண்டு 
பொற்புடன் கற்றிடத் தாகங்கொள் முன்முயல் போற்றிசெய்வர் 
எற்றிறத் தேனும் இனிதுகொள் மற்றதும் ஏற்புடைத்தே 

இதே எந்தச் சொல் மாற்றமுமின்றி அறுசீர் விருத்தமாகவும் ஆகும் 

கற்கின்ற போதினில் கற்றுக்கொள் கின்றவன் கண்ணி யத்தைச் 
அற்பமென் றெண்ணுத லாகாது சொற்பமும் ஆற்ற லுண்டு 
பொற்புடன் கற்றிடத் தாகங்கொள் முன்முயல் போற்றி செய்வர் 
எற்றிறத் தேனும் இனிதுகொள் மற்றதும் ஏற்பு டைத்தே 
!(குறிப்பு: கடைசிச்சீரை இரண்டு மாச்சீர்களாகப் பிரியும் 
விளங்காய்ச்சீராக அமைத்துக்கொள்ளவேண்டும் அவ்வளவே!) 

வெண்பா 

கற்கின்ற போதினில் கற்றுக்கொள் கின்றவன் 
அற்பமென் றெண்ணுத லாகாது சொற்பமும் 
பொற்புடன் கற்றிடத் தாகங்கொள் முன்முயல் 
எற்றிறத் தேனும் இனிது 

குறள் வெண்பாக்கள் 

கற்கின்ற போதினில் கற்றுக்கொள் கின்றவன் 
அற்பமென் றெண்ணுதலா காது. 

பொற்புடன் கற்றிடத் தாகங்கொள் முன்முயல் 
எற்றிறத் தேனும் இனிது 

*****
 

ramaNi

unread,
Jun 2, 2018, 10:45:50 PM6/2/18
to சந்தவசந்தம்
==============================================
12. கால் கொம்பில்லா ஸ்துதி
==============================================
இலந்தை இராமசாமி
1 ஸ்ரீ வாராகி சரண துதி(அதிகால் துதி). 
(நேரிசை வெண்பா) 
ஒவ்வொரு சீருக்கும் குறைந்த பட்சம் ஒரு கால் வரவேண்டும்.

ஏராளம் தாராளோ? தாராளம் தாராளோ
வாராவோ, சேராவோ வாகாக? – தீராது
சீராகத் தாவென்றே செப்பத்தான் வேண்டுவதோ
வாராகி தாவேயேன்? வா!

(தாவாயேன் – தாவா  ஏன்,? தாவாயேன்
 ஸ்ரீவாராகி கொம்பு வெண்பா

ஒவ்வொரு சீருக்கும் குறைந்த்து ஒரு கொம்பு வேண்டும்( கொ, கோ, கி, கீ போல)

கொடுப்பாள், கொடுமையின் கொட்டம் பொடிப்பாள்
தொடுப்பாள், நலம்செய் தொழில்கள் – திடமெடு
தேக வடிவொடு தெளிவாகச் சொற்களை
வேகம் கொடுத்திடுவா ளே!
ஸ்ரீ வாராகி சரண ச்ருங்க ரஹித ஸ்துதி
(கொம்புகள் இல்லாமல்)

இணக்க உளமுடன் எண்ணத்துத் தூய
மணமுற அன்பு மலரக் – கணங்கள்
முழுதும் அவளகத் துள்வர உன்னுள்
வழுத்தத் தருவள் வரம்.

இ என்பது கொம்பில்லை

★★★
குருநாதன் ரமணி
சீர்தோறும் ஒற்றைக் கொம்பெழுத்தில் தொடங்கும் வெண்பா:

சொன்னாலே பொற்காசு கொட்டும் பொழிவாகிச்
சொன்னசொல் சொக்குப் பொடிபோட்டுக் - கொன்றையின்
பொன்னிற மொன்றிடும் மென்னிறச் சொற்களில்
வென்றிடும் வெண்பா வெது?
சீர்தோறும் இரட்டைக் கொம்பெழுத்தில் தொடங்கும் வெண்பா:

கேட்டாலோ கேள்வியி லேஞானம் மேலுறும்
வேட்டாலோ தேன்நிறச் சேயிழை - கோட்டமிலா
நோட்டத்தில் தேனருவி யோட்டத்தில் மேன்மேலும்
கேட்டிடு வோம்‍அவ்வைத் தேட்டு!

[சேயிழை=நல்லணி=நல்ல அணியிலக்கணம்; கோட்டம்=வளைவு, கோணல்]
சீர்தோறும் படுக்கைக் கொம்பெழுத்தில் தொடங்கும் வெண்பா:

கைப்பொருள் வைப்பினில் நைந்திடும் வையகத்தில்
கைப்பணி வைத்திடும் மைத்திரம் - கைப்பற்றக்
கைப்பற்றும் தையலார் மைதுன மையலுறும்
கைப்பினில் வையக வைப்பு.

[கைப்பணி=குற்றேவல்; மைத்திரம்=நட்பு; கைப்பு=குடிவெறி]
கொம்பில்லா வெண்பா

அன்னையின் இன்னருள் கன்னலாம் புன்சிரிப்பு
மின்னலாம் நன்னுதற் சின்னமாம் - பின்னிடும்
என்னுள வின்னங்கள் குன்னிட வன்னங்கள் 
மன்னிடப் பன்னுவன் நன்கு.

[வின்னம்=பின்னம், மாறுபாடு; குன்னுதல்=குறைதல்; வன்னம்=நிறம்;
மன்னுதல்=நிலைபெறுதல்; பன்னுதல்=பாடுதல்]
ஒவ்வொரு சீரிலும் கால்வாங்கும் எழுத்துடன்

காதோரம் காலாடும் காளகண்டன் பாவாடும்
நாதனவன் தாளாட நானாடும் - வாதங்கள்
தாமாகக் காணாமல் தாளோடிப் போகாதோ?
சாமான்யன் நானாவேன் சாது!

*****

சௌந்தர்

unread,
Jul 6, 2018, 8:59:56 PM7/6/18
to சந்தவசந்தம்
மிறைப்பா வகைகளில் இதுவரை பட்டியல் இடப்படாத வேறு ஒரு ஆச்சர்யமான அமைப்பு, 'அநுலோம-விலோம காவியம்' வடமொழி இலக்கியத்தில் கிடைக்கிறது. மிகவும் கடினமே. இருப்பினும், வேங்கடாத்வரி (17-ம் ம்நூற்றாண்டு) என்னும் கவிஞர் 30 பாடல்கள் ஒருசேர யாத்துள்ளார். 

இந்த அமைப்பின் இலக்கணத்தை இவ்வாறு கூறலாம்.

ஒவ்வொரு பாடலிலும், முதல் எழுத்து தொடங்கி வரிசையாகப் படித்தால் ஒரு பொருளைப் பற்றிய செய்தியும், கடைசி எழுத்தில் தொடங்கி (மாலை மாற்று வகைபோல) எதிர்வரிசையாகப் படித்தால் முற்றிலும் வேறு பொருளைப் பற்றிய செய்தியும் கிடைக்கும்.

மேற்சொன்ன கவிஞரின் 30 பாடலும் இவ்வாறே அமைந்துள்ளன. முதல் எழுத்து தொடங்கி வரிசையாகப் படித்தால் இராம காதையும், எதிர்வரிசையாகப் படித்தால் க்ருஷ்ணலீலையும் அமையும். இந்தக் காவியத்தின் பெயர் 'ராகவ யாதவீயம்' என்பதாம்.

இந்தக் காவியத்திலிருந்து ஒரு பாடல் கீழே காணலாம். 

பாடலில் முதல் சொல் 'வந்தே' என்று இருக்கும். இதை எதிர்வர்சையாகப் படித்தால் அதன் ஈற்றுச் சொல் 'தேவம்' என்பதாக அமையும். தமிழ் எழுத்துருவத்தைப் பார்த்தால் இது முழுமையாகப் புரியாது. வடமொழி எழுத்துருக்களைக் கொண்டு நோக்கினால் சரிவர புரிந்து கொள்ளமுடியும். 

ராகவனைப் பற்றி:

वन्देऽहं देवं तं श्रीतं रन्तारं कालं भासा यः ।
रामो रामाधीराप्यागो लीलामारायोध्ये वासे ॥

க்ருஷ்ணனைப் பற்றி:

सेवाध्येयो रामालाली गोप्याराधी मारामोरा ।
यस्साभालंकारं तारं तं श्रीतं वन्देहं देवं ॥

சிவசிவாக்கும், ரமணிக்கும் சவாலாக அமைந்த 'அநுலோம-விலோம காவியம்' முயற்சிக்கலாமே!

சௌந்தர்

Subbaiyar Ramasami

unread,
Jul 7, 2018, 12:21:59 AM7/7/18
to santhavasantham
இது நீலகண்ட தீக்ஷிதர் எழுதியதல்லவா?

இலந்தை

Subbaiyar Ramasami

unread,
Jul 7, 2018, 1:15:34 AM7/7/18
to santhavasantham

 

கம்பனும் பாரதியும்- ஒரு  கேவலமான முயற்சி

(குறிப்பு: கேவலம் என்றால் தனியான என்று பொருள்)

 

விககாம திரபா  விகசதே ரதபா

விகருத விருத்தம் கம்பரச மாபா

கம்பன்

விககாம - பல விகற்பங்களை உடைய சிருங்காரம்

திரபா ஸ்திரமான பாடல்

விகசதே - சதா விகசிக்கும் படி
ரத பா- தேரோட்டம் போன்ற கவி

விகருத மிகவும் கருதும் படி
விருத்தம் - விருத்தப்பாவில் கம்பரச -கம்பன் ரசமாகத் தரும் பா

மாபா -மிகப்பெரிய காவியம்

 

பாரதி

 

மிகச்சிறப்பு வாய்ந்த பாச்சரபம் தலைமையிடத்தில் தத்ரூபமாக அருவிபோல தருகின்ற பாரத தேசகவி பாரதி மகாகவி      

 

பாமா சரபம் - சிறப்பு வாய்ந்த பாடல்கள் தரும் கவிச்சரபம்

கம் - தலை (தலைமையிடத்தில்)

தத்ருவி- தத்ரூபமாக அருவிப்பொழிவாக

தருகவி பாரத தேச கவி பாரதி மகாகவி

இலந்தை

Ashok Subramaniam

unread,
Jul 7, 2018, 1:29:27 AM7/7/18
to santhavasantham
அடடாவோ அடடா போட வைத்துவிட்டார் வேழம் மீண்டும்..  விகடகவிப் பாடலில். காஞ்சி மகாஸ்வாமி, எப்போதோ, தண்டி எழுதிய ஒரு ஸ்லோகத்தைக் குறிப்பிட்டு (நான்கே வரிகள்தாம்) முன்னோக்கிப் படித்தால் இராமாயணச் சுருக்கமும், பின்னிலிருந்து படித்தால் க்ருஷ்ணாவதாரச் சுருக்கமும் வரும்படி இருப்பதை விளக்கியிருப்பார்.. எந்த புத்தகத்தில் என்று நினைவில்லை.. (யாராவது இதைக் கேள்விப்பட்டிருந்தால் பகிர்ந்து கொள்ளவும்)

இலந்தையவர்கள் இங்கு ஒரே நாளில் அசத்திவிட்டார்..  "கவிக்கலாநிதி" என்றே சொல்லவேண்டும்!

ஒரே சொல்! அற்புதம்!

Ashok Subramaniam

unread,
Jul 7, 2018, 1:39:39 AM7/7/18
to santhavasantham
ராகவயாதவீயத்தை எழுதியவர் பெயர் கவி வேங்கடாத் வரி.. 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்

இந்த இணையச்சுட்டி மூன்று கவிகளை இவ்வரிய சாதனையைச் செய்ததாகக் குறிக்கிறது.. 


ramaNi

unread,
Jul 7, 2018, 2:44:06 AM7/7/18
to சந்தவசந்தம்
இலந்தையாரின் அநுலோம விலோமம் பிரமாதம். தேவாரத் தமிழில் சிவசிவா ஒன்று எழுதுவாரா?
ரமணி

K.R. Kumar

unread,
Jul 7, 2018, 4:26:42 AM7/7/18
to santhav...@googlegroups.com
இதில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்கள் தானா ?

ஒன்றிரண்டைத் தவிர கேள்விப்பட்டதே இல்லை !!

குமார்(சிங்கை)

Sent from my iPhone
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Subbaiyar Ramasami

unread,
Jul 7, 2018, 6:38:45 AM7/7/18
to santhavasantham
எல்லாம் தமிழ்ச் சொற்கள் இல்லை. சில வடமொழிச் சொற்கள் விரவி வரும்.

சித்திர கவிகளில் சில சொற்களின் பகுதி வந்தாலே முழுச்சொற்களையும்  சொன்னதாக எடுத்துக்கொள்வது உண்டு. அதன் கடினம் கருதி இச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.
எ.கா - விக - விகற்பவைச் சுட்டுகிறது.
விகசதே - இட்து சதா விகசித்தல் என்று விரிக்கப்படுகிறது. 
தத்ருவி- இதில் அருவி மறைந்துள்ளது
வி, சு என்னும் எழுத்துகள் உயர்வைச் சுட்டும். எனவே வி கருத என்பது நன்றாகக் கருத என்று கொள்ளப்படுகிறது.
எளிமையான கவிதைகளுக்கெல்லாம் இப்படிப் பயன்படுத்தக் கூடாது. மிகக் கடிமான சித்திர கவிகளில் இப்படிப் பயன்படுத்தப்படுவதைப் பார்த்திருக்கிறேன். 

சே என்ற ஒரு எழுத்துக்குப் பல பொருள்கள் சொல்லப்படுகின்றன, சேய்மை, முருகன், ஆடு, . நிகண்டுப் பயிற்சி இருந்தால் சித்திரகவியில் கைகொடுக்கும்

2018-07-07 3:26 GMT-05:00 K.R. Kumar <krish...@gmail.com>:
இதில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்கள் தானா ?

ஒன்றிரண்டைத் தவிர கேள்விப்பட்டதே இல்லை !!

குமார்(சிங்கை)

Sent from my iPhone

On 7 Jul 2018, at 14:44, ramaNi <sai...@gmail.com> wrote:

இலந்தையாரின் அநுலோம விலோமம் பிரமாதம். தேவாரத் தமிழில் சிவசிவா ஒன்று எழுதுவாரா?
ரமணி

On Saturday, July 7, 2018 at 10:45:34 AM UTC+5:30, கவிமாமணி wrote:

 

கம்பனும் பாரதியும்- ஒரு  கேவலமான முயற்சி

(குறிப்பு: கேவலம் என்றால் தனியான என்று பொருள்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

K.R. Kumar

unread,
Jul 7, 2018, 7:02:18 AM7/7/18
to santhav...@googlegroups.com
நன்றி, இலந்தையாரே.!

குமார்(சிங்கை)

Sent from my iPhone
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Subbaiyar Ramasami

unread,
Jul 7, 2018, 7:40:22 AM7/7/18
to santhavasantham

கவிதை கணக்கு

தைவிக தேனவா தைமிகு தபிற்க

கற்பித வானதே கணித கவிதை

கணக்கு

தைவிக- தெய்வீகமானது

தேனவா- மிகவும் இனிமையான விருப்பம் கொண்டு
தை- கணித்தல் அல்லது இணைத்தல் அல்லது தொடுத்தல்

தபிற்க- இனித்தாங்கமுடியாது என்ற அளவுக்குக் கொதிப்போடு முனைதல்

கற்பித - கற்பனை செய்து

வானதே - உயரமானது

கணித கவிதை- கற்பனையை அடிப்படையாகக் கொண்ட கணிதமும் ஒரு கவிதைதான்.

 

கவிதை

தைவிக - தெய்வத்தன்மை

தணிக - தணிந்து வர

தேனவா- இனிமையான உந்துதல்

தபிற்க- அழுத்த

கற்பித - கற்பனையில்

குமி- குவி

தை- இணைத்தல் , புனைதல்
வானதே - உச்சமானது கவிதை- கவிதையாவது

ilanthai

Pas Pasupathy

unread,
Jul 7, 2018, 7:47:49 AM7/7/18
to Santhavasantham
இது அருமை!

2018-07-07 7:40 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

கவிதை கணக்கு

தைவிக தேனவா தைமிகு தபிற்க

கற்பித வானதே கணித கவிதை

கணக்கு

தைவிக- தெய்வீகமானது

தேனவா- மிகவும் இனிமையான விருப்பம் கொண்டு
தை- கணித்தல் அல்லது இணைத்தல் அல்லது தொடுத்தல்

தபிற்க- இனித்தாங்கமுடியாது என்ற அளவுக்குக் கொதிப்போடு முனைதல்

கற்பித - கற்பனை செய்து

வானதே - உயரமானது

கணித கவிதை- கற்பனையை அடிப்படையாகக் கொண்ட கணிதமும் ஒரு கவிதைதான்.

 

கவிதை

தைவிக - தெய்வத்தன்மை

தணிக - தணிந்து வர

தேனவா- இனிமையான உந்துதல்

தபிற்க- அழுத்த

கற்பித - கற்பனையில்

குமி- குவி

தை- இணைத்தல் , புனைதல்
வானதே - உச்சமானது கவிதை- கவிதையாவது

ilanthai

Subbaiyar Ramasami

unread,
Jul 7, 2018, 11:36:22 AM7/7/18
to santhavasantham
கணபதி-   முருகன்  -   முன்னும் பின்னும் - அநுலோம விலோமம்


வலவேழ தொகைகருத தருக பாபா

குருமு கமே தந்தி பதிந்த  நாதா

கணபதி

வலவேழ- வலம்புரி விநாயகனே
தொகை கருத-  செல்வம் வேண்டக்
தருக- கொடுப்பாயாக!

பாபா- ஞானத் தலைவ

குருமுகமே- குருவடிவில் வருபவனே
தந்தி பதிந்த நாதா-  கொம்பு முகத்தில் பதிந்துள்ள தலைவனே

முருகன்

தாநா தந்தி பதிந்த மேக, முருகு பாபா

கருத தருக கைதொழ  வேலவ

எனக்குச் சிறந்த முறையில் பேசும் நாவைத் தருக தெய்வயானை நாயகனே மேகம் போன்ற கருணை வடிவுள்ளவனே, முருகா, தலைவனே, நான் வேண்டிக் கைதொழ தருக வேலவனே!

சந்திப்பிழைகளைக் கருத வேண்டாம்


Siva Siva

unread,
Jul 7, 2018, 11:40:29 AM7/7/18
to santhavasantham
Impressive effort!

Kaviyogi Vedham

unread,
Jul 7, 2018, 11:50:34 AM7/7/18
to santhavasantham
wonderful. Enna vidhvatvam!!,
 yogiyar

Kaviyogi Vedham

unread,
Jul 7, 2018, 11:55:33 AM7/7/18
to santhavasantham
 Sure Ashok!,
 Ilandhai oru Nidhi asaththal kavi!,
 yogiyar

Ramamoorthy Ramachandran

unread,
Jul 7, 2018, 12:06:13 PM7/7/18
to santhav...@googlegroups.com
அடடாவோ அடடா!

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
     

 

 

 

  




--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Subbaiyar Ramasami

unread,
Jul 7, 2018, 1:09:46 PM7/7/18
to santhavasantham
நன்றி

Siva Siva

unread,
Jul 7, 2018, 1:26:16 PM7/7/18
to santhavasantham
மாலைமாற்றை ஒத்த அமைப்புடைய இவ்வகைப் பாடலைத் தமிழ் எழுத்துமுறையில் எழுதுவது எளிது அன்று!
சம்யுக்தாக்ஷரம் இருவழியிலும் ஒன்றாகவே அமைவதால் அவ்வகை எழுத்துமுறை உள்ள சம்ஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகள் இவ்வகைப் பாடல்கள் எழுத உதவுகின்றன.

என் பங்கிற்கு ஒரு பாடல்:

2018-07-07

"அனுலோம விலோமம்"

------------------------------------------

இடவலமாகப் படித்தால்:

தேய மேமின் வார்நீர் வேணியா

னேய னேகா வரதா காலமே


வலமிடமாகப் படித்தால்;

மேல காதா ரவகா னேயனே

யாணி வேர்நீர் வான்மி மேயதே


பொருளை "மதிசூடி துதிபாடி" இழையில் இடுகின்றேன்.


அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

2018-07-06 20:59 GMT-04:00 சௌந்தர் <rsou...@gmail.com>:
மிறைப்பா வகைகளில் இதுவரை பட்டியல் இடப்படாத வேறு ஒரு ஆச்சர்யமான அமைப்பு, 'அநுலோம-விலோம காவியம்' வடமொழி இலக்கியத்தில் கிடைக்கிறது. மிகவும் கடினமே. இருப்பினும், வேங்கடாத்வரி (17-ம் ம்நூற்றாண்டு) என்னும் கவிஞர் 30 பாடல்கள் ஒருசேர யாத்துள்ளார். 

இந்த அமைப்பின் இலக்கணத்தை இவ்வாறு கூறலாம்.

ஒவ்வொரு பாடலிலும், முதல் எழுத்து தொடங்கி வரிசையாகப் படித்தால் ஒரு பொருளைப் பற்றிய செய்தியும், கடைசி எழுத்தில் தொடங்கி (மாலை மாற்று வகைபோல) எதிர்வரிசையாகப் படித்தால் முற்றிலும் வேறு பொருளைப் பற்றிய செய்தியும் கிடைக்கும்.

மேற்சொன்ன கவிஞரின் 30 பாடலும் இவ்வாறே அமைந்துள்ளன. முதல் எழுத்து தொடங்கி வரிசையாகப் படித்தால் இராம காதையும், எதிர்வரிசையாகப் படித்தால் க்ருஷ்ணலீலையும் அமையும். இந்தக் காவியத்தின் பெயர் 'ராகவ யாதவீயம்' என்பதாம்.

இந்தக் காவியத்திலிருந்து ஒரு பாடல் கீழே காணலாம். 

பாடலில் முதல் சொல் 'வந்தே' என்று இருக்கும். இதை எதிர்வர்சையாகப் படித்தால் அதன் ஈற்றுச் சொல் 'தேவம்' என்பதாக அமையும். தமிழ் எழுத்துருவத்தைப் பார்த்தால் இது முழுமையாகப் புரியாது. வடமொழி எழுத்துருக்களைக் கொண்டு நோக்கினால் சரிவர புரிந்து கொள்ளமுடியும். 

ராகவனைப் பற்றி:

वन्देऽहं देवं तं श्रीतं रन्तारं कालं भासा यः ।
रामो रामाधीराप्यागो लीलामारायोध्ये वासे ॥

க்ருஷ்ணனைப் பற்றி:

सेवाध्येयो रामालाली गोप्याराधी मारामोरा ।
यस्साभालंकारं तारं तं श्रीतं वन्देहं देवं ॥

சிவசிவாக்கும், ரமணிக்கும் சவாலாக அமைந்த 'அநுலோம-விலோம காவியம்' முயற்சிக்கலாமே!

சௌந்தர்



--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

சௌந்தர்

unread,
Jul 7, 2018, 6:38:07 PM7/7/18
to சந்தவசந்தம்
வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை மட்டும் வைத்து எழுதினால், ஒவ்வோரினத்திலும் ஆறு எழுத்துகள் இருப்பதால், இந்த விதிமுறையை மேலும் இறுக்கமாக்கி, மூன்றே எழுத்துக்களை மட்டும் வைத்து எழுதப்பட்ட ஒரு வடமொழிப் பாடல் இங்கே இடுகிறேன். இந்த அமைப்பில் ஒரு வல்லினம், ஒரு மெல்லினம், ஒரு இடையினம் மட்டுமே உள.

'வர்ண சித்திரக் கவிதை' என்னும் வகையைச் சேர்ந்தது.

த,ந,வ ( "द", "न", "व") என்னும் மூன்று எழுத்துகளைத் தேர்ந்து, நரசிம்மாவதாரத்தில் ஹிரண்யகசிபுவைக் கொன்ற சரித்திரத்தைக் கூறும் பாடல்.

देवानां नन्दनो देवो
नोदनो वेदनिन्दिनाम् ।
दिवं दुदाव नादेन
दाने दानवनन्दिनः ।।

செய்திக்காக மட்டும் இங்கே இடுகிறேன்.

Subbaiyar Ramasami

unread,
Jul 7, 2018, 8:41:50 PM7/7/18
to santhavasantham
வ, ர, ல எனும் மூன்றெழுத்து இடையின வகையில் அமைந்த பாடல்
வரவிலா வேலை
வலிவிலா வீரர்
வரைவிலா வேலி 
வலிவிலா வேரே! 

இலந்தை 


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Subbaiyar Ramasami

unread,
Jul 7, 2018, 8:59:39 PM7/7/18
to santhavasantham
த ந வ  


தொந்தி நந்தி
விந்தி வந்து
 தந்த தந்த
வந்தி தந்ததே!

வந்தி முன்பு தந்த பிட்டை மிச்சம் வைத்திருந்த நந்தி விந்திவந்து சிவனிடம் தந்தான்

இலந்தை

ramaNi

unread,
Jul 8, 2018, 10:45:32 AM7/8/18
to சந்தவசந்தம்
மிறைக்கவி: அனுலோம விலோமம்
(குறள் வெண்செந்துறை)
(வலமிடம் ஒரு பொருளும், இடம்வலம் வேறு பொருளும் வரப் புனையும் செய்யுள்)

திருமால் வாருவகை தியாகி வனமாலி 
கிருதி மேகமே குளவி காலமே!

மேலகா விளகு மேகமே திருகிலி
மானவ கியாதி கைவருவால் மாருதி!

***
முதலெழுத்திலிருந்து வலமிடம் 
.. போற்றும் திருமால்:

திருமால் வாருவகை தியாகி வனமாலி 
கிருதி மேகமே குளவி காலமே!

பொருள்
திருமாலானவர், வாருவகை => நீரில் உறையும் வகையினர், 
.. தியாகி=> கொடையாளி, வனமாலி => துளசிமாலை அணிந்தவர்
அவரைப் போற்றும் கிருதி => கீர்த்தனை, மேகமே => மழைநீர் வளமாகும்
.. குளவி => மலைமல்லிகை கொண்டு போற்றும்வோம், காலமே => காலை வேளையில்!

வாருவகை => வார் (நீரில்) உவகையுடன் உறைபவர் என்றும் பொருள்.

***

ஈற்றெழுத்திலிருந்து இடம்வலம்
.. போற்றும் மாருதி

மேலகா விளகு மேகமே திருகிலி
மானவ கியாதி கைவருவால் மாருதி!

பொருள்
மேலகா => மேன்மையை அகத்தில் கொண்டவனே, விளகு => இளகுவாய் மனம்
.. மேகமே => மழைபோல் வளந்தருவோனே, திருகிலி => கோணல்/குற்றம் இல்லாதவனே,
.. மானவ => மனிதர்க்கு உதவுவோனே, உன் கியாதி => புகழ்
.. கைவருவால் => நினைத்தபோது உதவும் பெருமை,
.. ஆகும் மாருதி => வாயுமைந்தனே!

மேலகா => மரம் மேல் உறையும் இனம் சார்ந்தோனே என்றும் பொருள்.
கைவருவால் => கையால் பற்றும் வால் என்றும் பொருள்.

--ரமணி, 08/07/2018

*****

M. Viswanathan

unread,
Jul 8, 2018, 12:55:36 PM7/8/18
to Santhavasantham
எதிலும் புகுந்து புறப்படும் அன்புக் கவிஞர் ரமணியின் "அனுலோம விலோமம்" அருமை. (கவிமாமணி இலைந்தையார் அவர்களோ ஆணிவேர்.)
அன்பன்,
மீ.வி.

Ramamoorthy Ramachandran

unread,
Jul 10, 2018, 8:07:38 PM7/10/18
to santhav...@googlegroups.com
இரமணியின்.அனுலோம விலோமம்.
உலகு குலவு மழகு! குழம வுலகு குலவும்!
உலகே போற்றும் அழகு!
இளைய மனவுலகம் எழுந்தாடும்! -
அன்புடன் புலவர் இராமமூர்த்தி. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

ramaNi

unread,
Jul 10, 2018, 10:15:10 PM7/10/18
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, புலவரே. உங்கள் மாலைமாற்றுப் பின்னூட்டம் அழகு.
ரமணி

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 13, 2018, 5:20:05 PM7/13/18
to சந்தவசந்தம்

பிந்துமதிச் செய்யுட் சிறப்பு


பொட்டுக்கள் நட்டந்தச் சட்டத்தைப் பின்பற்றுங்

கட்டத்துள் காட்டுங்காண் வான்!

(கட்டம் = கஷ்டம்; வான் = வானம்)

.. அனந்த்


Reply all
Reply to author
Forward
0 new messages