#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்:
நூல் அறிமுகம்: பதிற்றுப் பத்து
• சேர மன்னர்களைப் பற்றி மட்டுமே பாடும் இலக்கியம்.
• முதல், இறுதிப் பத்துகள் கிடைக்கவில்லை.
• 2-9 பத்துகளில் பாடப்படும் சேர மன்னர்கள்:
2. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,
3. இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
4. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
5. கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
6. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
7. செல்வக் கடுங்கோ வாழியாதன்
8. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
9. குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை
• 2-9 பத்துகளில் பாடிய புலவர்கள்:
4. காப்பியாற்றுக் காப்பியனார்
6. காக்கைபாடினியார் (நச்செள்ளையார்)
• தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
• முழுவதும் பாடாண் திணையில் அமைந்துள்ளது.
• ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர்
• கிடைத்துள்ள ஒவ்வொரு பத்துக்கும் பதிகம் ஒன்று காணப்படுகிறது.
• அது பாடல் மன்னன் மெய்க் கீர்த்திபோல் நின்று,
• பாடினோர், பாடப்பட்டோர், பாடிய பாட்டு,
• பாடிப்பெற்ற பரிசில், பாடல் வேந்தன் ஆட்சிக் காலம் ஆகிய விவரங்களைத் தருகிறது.
• பதிகங்கள் பழைய உரையில் இருந்தாலும் மூல ஏடுகளில் இல்லை.
• தூக்கு என்பது செய்யுள் அடிவரையறை கொண்டு இன்ன பா என்று
• செந்தூக்கு என்பது அளவடியால் இயலும் நேரிசை ஆசிரியப்பா.
• வஞ்சித் தூக்கு என்பது வஞ்சியடிகள் இயல்வன.
• இரண்டும் விரவி வருவதை இந்நூலிற் சில பாடல்களிற் காணலாம்.
• இவ்வாறு வருவதைச் செந்தூக்கும், வஞ்சித் தூக்கும் என்று குறிப்பர்.
• பாடல் சீர்களில் வரும் சந்த வேறுபாடு.
• தொல்காப்பியர் தரும் 20 வண்ணங்களில் ஒழுகு வண்ணம், சொற்சீர் வண்ணம்
ஆகிய இரண்டும் பதிற்றுப் பத்தில் காணப் படுகின்றன.
• ஒழுகிய ஓசையால் செல்லும் சந்தம் ஒழுகு வண்ணம் ஆகும்.
• சொற்சீர் அடிகளால் செல்வது சொற்சீர் வண்ணம்.
• சொற்சீர் அடி என்பது அளவடியில் குறைந்து, வஞ்சி ஓசை இல்லாமல்
பதிற்றுப்பத்து: ப02.03. பூத்த நெய்தல்
(இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மேல் குமட்டூர்க் கண்ணனார் பாடியது;
ஒழுகு வண்ணம், செந்தூக்கும் வஞ்சித் தூக்கும்)
• அகவற் பாக்களை வெண்பாவாக எழுதுகையில், பெரும்பாலும்,
• செந்தூக்கு அளவடிகளில் இயற்சீர் வெண்டளை பயிலுமாறும்,
• வஞ்சித் தூக்கு அடிகளில் வெண்சீர் வெண்டளை பயிலுமாறும் அமைத்துள்ளேன்.
• இவ்வாறு ஓர் அகவற் பாடல் முழுவதும் கலிவெண்பாவாக அமைதல் காணலாம்.
சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பகைவர் நாட்டைச் சீரழித்த விதமும், அவன் தன் நாட்டைக் காக்கும் விதமும் சொல்வது.
ஆனிரைகள் புல்மேய ஆரல்மீன் துள்ளிவிழும்
ஏனங்கள் செய்போரில் ஏருழவே இல்லாமல்
ஈனங்கொள் சேற்றினிலே வித்திடுவர் வேளாளர்
கன்னல் விளைநிலம் நெய்தல் கமழ்நிலம்
பென்னம் பெருங்கண் எருமை இருத்தும் 5
கலித்த துணங்கை நடனக் களத்தில்
தலைவளை ஆனிரை ஆம்பலை வாய்கொளும்
ஓங்கிவளர் தென்னைமரம் பூதவத்தில் புள்ளொலிக்கும்
வாங்குபுனல் கால்வாய்கள் பூம்பொய்கை ஆரப்
[பூதவம்: பூமருது; பதிநிறை: ஊர்கள் நிறைந்த]
பதிற்றுப்பத்து: இரண்டாம் பத்து
பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன்
பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்
தொறுத்தவயல் ஆரல்பிறழ்நவும்
ஏறுபொருதசெறு உழாதுவித்துநவும்
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங்கண் எருமையின் நிரைதடுக் குநவும்
கலிகெழு துணங்கை ஆடிய மருங்கின் 5
வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்
பாடல் சான்ற பயம்கெழு வைப்பின்