கொடிவழுதலை (தூதுவளை)
-----------------------
சேவூர் அருகே உள்ளது குடவோடு என்னும் ஊர். ஈரோடு, பேரோடு, வெள்ளோடு, சித்தோடு, பச்சோடு (பாப்பினி), எரியோடு, .... போலக் குடவோடு என்ற ஊர்ப்பெயர். காபாலிக, காளாமுக சமயம் கொங்குநாட்டின்கண் மிகுந்திருந்ததை விளக்கும் ஊர்ப்பெயர்கள் இவை. ஈர ஓடு = ஈரோடு. அங்கே சிவனின் பெயர்: ஆர்த்ரகபாலீசர். < ஈர ஓட்டு ஈசன். புலவர் செ. இராசு பழைய ஆவணங்கள் எல்லாவற்றிலும் உள்ள பெயர் ஈரோடு தான் என்று சொல்கிறார். மாணிக்கவாசகர் பாடிய குடவோட்டு மொக்கணீச்சரத்தில் கிடைத்துள்ள வட்டெழுத்துக் கல்வெட்டில் முள்ளி குலத்தானின் மனைவி எறுழங்கோதை குறிப்பிடப்படுகிறாள். இது தமிழில் எறுழ் (= சிவப்பு; Cf. எறுபு (தெலுகு)) மரம் பற்றிய மூன்றாம் குறிப்பு. கல்வெட்டின் முன்னர் சங்க இலக்கியத்தில் இரண்டுமுறை எறுழ் வருகிறது. உயரமான மலைகளின் சோலைகளில் (
https://en.wikipedia.org/wiki/Shola ) மட்டுமே, குன்றின் மேல் இட்ட விளக்காக எறுழ மரங்கள் வளர்கின்றன. இதனால், “எரி புரை எறுழம்” என்று தீயை ஒத்த எறுழம் என்றார் குறிஞ்சிப் பாட்டில் கபிலரும். குறிஞ்சித் திணைக் கடவுள் கந்தவேளின் குறவள்ளிக்கு எறுழ மலர் விருப்பமான மலர் என்பதாற்போலும் எறுழங்கோதை எனப் பெண்களுக்குப் பெயர் வழங்கியிருக்கிறது. “முருகு அமர் மாமலை”யில் எறுழ மலர் பூப்பதை ஐங்குறுநூற்றுப் பாடல் பதிகிறது.
https://groups.google.com/forum/#!msg/mintamil/u8HGlQ1_BXo/KJZwDFhuCQAJ கெழு- >> எழு-/எறு- >> எறுழ் (எறுபு) எனத் தென்மொழிகளில் ஆனது போலும். கெழு-/கேழ்- = செம்மை நிறம். கேழ்வரகு, கேழையாடு, கேழல், ... (கொழு (கலப்பையில்) :: குழை- . உழு- உழவு .... இவை போல சொல்முதல் ககரம் இழந்து எழு-/எறு-எடு- (Cf. கெழு- ‘சிவப்பு’). எறுபு, எறுழ் தோன்றியது. இந்த (1) எறுழ் ‘சிகப்பு’ மரத்திற்கும், (2) எறுழ் ‘தண்டாயுதம், வலி’ என்பதற்கும் சொற்பிறப்பியலில் வேறுபாடுகள் உண்டு.
All languages exhibit homophones, i.e., similar sounding words but having entirely different origins. An excellent example is "eRuzh" in Tamil:
(1) eRuzh = red color, coming from ker̤u 'red'. eṟur̤ < ker̤u (Cf. kEr̤varaku, kEr̤ai ATu 'mouse deer', kEr̤al 'male boar', kEr̤/ker̤ 'red color')
(2) eRuzh = daNDAyudha as in Pazhani DaNDAyudhapANi svamin's daNDam, strength etc., Even though both have same sound, their origins are entirely different. eRuzh = daNDAyudha does not have any word-initial consonant during its formation, whereas eRuzh = red had a word-initial k- in PD stage that was lost subsequently. (PD = Proto-Dravidian, PD is like well-researched PIE. PD research is in early stages.)
கொங்கு வெள்ளாளரில் குலக்குறியீடுகளாக வெண்டை, காடை, செங்கூன், ... என்று பல இருக்கும். இங்கே, முள்ளி என்பது கண்டங்கத்திரி வகை. முள்ளி என்ற தாவரமும், அதன் சமையலும் பற்றிப் பேரா. ச. கண்மணி (சிவகாசி) விளக்கினார்கள். அப்போது, நாலடி வெண்பா ஒன்றை ஆராயும் வாய்ப்பமைந்தது:
நன்றியில் செல்வம்
புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடையா ரிருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே,
பட்டும் துகிலும் உடுத்து. (264)
கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் செல்வத்துக்குரிய புண்ணியம் என்பது அறிவுக்குரிய புண்ணியத்தினின்றும் வேறாகவே இருக்கிறது. எவ்வாறெனின், கல்வி அறிவுடையார் ஒரு பொருளுமின்றி வறுமையுற்று இருக்க, கறிமுள்ளியும் கத்தரியும் போன்ற அற்பர் விலையுயர்ந்த பட்டாடையும் பருத்தி ஆடையும் உடுத்து வாழ்வர். (கறிமுள்ளியும் கண்டங்கத்தரிச் செடியும் மிகுதியாக இருப்பினும் அவை, கொள்வாரை முள்ளால் குத்தும். அதுபோல பழைய புண்ணியத்தால் செல்வம் பெற்று வாழினும் அறிவிலாரிடம் ஈகைத் தன்மை இல்லை!)
வினைப்பயன் பற்றிப் பேசுகிறது பாடல். நல்வினை தீவினைப் பயன்களை அறிந்தவர்கள் புவியில் எளிய வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வு பிறருக்கு இன்னல் தராத வாழ்வு. சொல்லப்போனால் அவர்களிடம் டாம்பீகம் இருக்காது. தம்மை/ வாழ்வை அப்படியே பிறருக்காக அர்ப்பணிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் வினைப்பயனின் விளைவு பற்றி அறியாமல் பட்டும் பந்தாவுமாக வாழ்பவர் பிறருக்கு இன்னல்களைக் கொடுப்பர்---முள்ளிக்காய் &கண்டங்கத்தரிக்காய் போல..... உணர்ந்து எழுதிய உவமை அருமை. அழகான இச் செய்யுளில், வட்டும், வழுதுணையும் எங்கும் இருப்பதும், அவற்றின் சிறுமையும் (முள்) தோன்ற நின்றன.
வட்டு, வழுதுணை (நாலடியில்) முள்ளி இனங்கள் = Solanum plants
--------------------------------------------------------
(1) வட்டு = முள்ளிக்காய் (கண்டங்கத்தரி, கறிமுள்ளி - கறி சமைக்கப்படும் முள்ளிக்காய்).
Yellow berried Nightshade:
https://en.wikipedia.org/wiki/Yellow-fruit_nightshadeSolanum xanthocarpum
(2) வழுதுணை = (சிறு)வழுதுணை =
https://commons.wikimedia.org/wiki/Category:Solanum_lasiocarpumஇதுவும் ஒரு வகை கண்டங்கத்தரி. கண்டம் = முள்.
சிறுவழுதுணை (p. 1464) ciṟu-vaḻutuṇai சிறுவழுதுணை ciṟu-vaḻutuṇai , n. < id. +. 1. Indian nightshade, m. sh., Solanum indicum; செடிவகை. (W.) 2. Species of solanum. See கண்டங்கத்திரி. (M. M.)
https://commons.wikimedia.org/wiki/Category:Solanum_indicum நாலடி வெண்பாவிலே, வழுதுணை என்பது: (Indian nightshade = Solanum indicum (in Botany) )
https://www.flickr.com/photos/dinesh_valke/4745985224 கொடிவழுதலை (தூதுவளை)
-----------------------
கத்தரிகளில் பல இனங்களைப் பார்த்தபோது (Solanum species) தூதுவளையின் பழைய தமிழ்ப் பெயரை அறியமுடிகிறது. தூதன் - அங்குமிங்கும் தூது செல்வோன். அதுபோல் ஓரிடத்தில் இருந்து பிறிதோர் இடத்துக்குத் தூது செல்லும் கொடி ஆதலால், தூதுவளை என்ற பெயர். தூது = dūta (வடசொல். பார்க்க: மஹாகவி காளிதாசரின் மேகதூதம்). தூதுவளையின் “தூது” தன்மையைப் பழைய தனிப்பாடல்களிலும், கண்ணதாசனின் இசைப்பாடலிலும் காண்கிறோம், கேட்டு இன்புறுகிறோம்.
கொடிவழுதலை = ஓர் வழுதுணை.
இந்த அளவிலே, 1842 யாழ்ப்பாண அகராதி விட்டுவிடுகிறது. இதுவே அகராதிகளில் தொடர்கிறது.
https://archive.org/details/AManualDictionaryOfTheTamilLanguag/page/n209J.P.Fabricius Tamil and English Dictionary
கொடிவழுதலை, a kind of brinjal.
University of Madras Lexicon
கொடிவழுதலை koṭi-vaḻutalai n. id. +.A kind of nightshade, Solanum; வழுதுணைவகை.(யாழ். அக.)
தூதுவளை (வடசொல்) அதன் பழைய தமிழ்ச்சொல் = கொடிவழுதலை.
தூதுவளை tūtu-vaḷai , n. prob. id. + வளை-. [M. tūduvaḷam.] Climbing brinjal, m. cl., Solanum trilobatum; கொடிவகை. (மலை.).
https://www.rarepalmseeds.com/solanum-trilobatum (Thai Nightshade)
https://en.wikipedia.org/wiki/Solanum_trilobatumhttp://www.flowersofindia.net/catalog/slides/Purple%20Fruited%20Pea%20Eggplant.htmlhttps://www.thehindu.com/thehindu/mag/2002/10/13/stories/2002101300420700.htmஈழத்திலே, கொடிவழுதலை என்று தூதுவளைக்கான தமிழ்ப்பெயர் வழங்கியுள்ளது. இந்தக் கொடி வளைந்த முட்களைக் கொண்டது. பந்தல், மரத்தில் படரும்.
https://www.femina.in/tamil/health/home-remedies/medicare-benefits-of-embroidery-937.htmlஅத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே ! (1962)
https://www.youtube.com/watch?v=ztShZkR6aCoசொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
https://isaipaa.wordpress.com/2013/07/07/aththi/2011-ல் நடந்த மடலாடல்:
அத்திக்காய் காய் காய்:
https://www.youtube.com/watch?v=ztdjFKPW6Ukபாடல் விளக்கம்:
http://kavimagudeswaran.blogspot.com/2011/08/http://tamilpaatu.blogspot.com/2011/05/blog-post.htmlவெள்ளரிக்காயா விரும்பு அவரைக்காயா
உள்ள மிளகாயா ஒரு பே(ய்)ச் சுரைக்காயா
'வெள்ளரிக்காயா? விரும்புகின்ற அவரைக்காயா? பெருந்தொகையாக உள்ள மிளகாயா? ஒரு பேச்சுரைக்காயா?" என்று நாம் உண்ணுகின்ற மரக்கறி வகைகளை நிலைப்படுத்துவதாக இப்பாடலைக் கொள்ளுதல் ஒருவகை.
வெள் அரிக்கு ஆயா! விரும்பும் அவரைக் காயா!
உள்ளம் இளகாயா! ஒரு பேச்சு உரைக்காயா"
'வெண்மையான காப்பை அணிந்த பெண்ணே! (உன்னை) விரும்புகின்ற அவரைச் சினக்க வேண்டாம்! (உன்) உள்ளம் இளக மாட்டாயா! ஓ (என்னுடன்) ஒரு பேச்சு உரைக்கமாட்டாயா!" என்று இன்னொரு வகையிலும் பொருள் கொள்ளலாம். இவ்வாறு இரட்டுற மொழியக் கூடிய பாடல் அமைவதற்குத் தமிழ் ஒட்டுமொழிப் பண்பே வகை செய்கின்றது. 'வெள்ளெருக்கஞ் சடைமுடியான்...." என்னும் கம்பராமாயணப் பாடலிலே 'ஒரு வன் வாளி" என்று முடியும் இறுதி அடியினையும் 'ஒருவன் வாளி" என்று பிரிக்கும்போது 'ஒரு வலிமை மிக்க அம்பு" என்னும் பொருளையும் தருவது இத்தகைய ஒட்டணிப் பாங்கேயாகும்.
---------------
https://groups.google.com/forum/#!msg/mintamil/OOcikINGiDo/bFbIf8udzOIJ2010/2/11 Madhurabharathi <
madhura...@gmail.com>
”அத்திக்காய் காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே, இத்திக்காய் காயாதே, நீ என்னைப்போல் பெண்ணல்லவோ” என்றால் “ஆலவட்டம் போட்டுக் காய்கிற நிலவே, இந்த திக்கில் காய்ந்து என்னைச் சுட்டெரிக்காதே, வேறு திக்கில் போய்க் காய், நீயும் ஒரு பெண்ணாயிற்றே, உனக்குப் புரியாதா என்ன!” என்று காதலி விரகதாபத்தில் சொல்வதாக அமைந்தது என்மனார் புலவர்.
இதற்கு மூலபாடம் சங்கப்பாடல் என்றும் அறிஞர் உரைப்பர்.
வெள்ளரிக்காயா விரும்பு மவரைக் காயா
உள்ள மிளகாயா ஒருபேச் சுரைக்காயா --
என்று தொடங்கும் இடைக்கால வெண்பா அது. முழுப்பாடல் எனக்கு பலவருடங்களாகக் கிடைக்கவில்லை. (அத்திக்காய் பாடலுக்கு மின்தமிழில் உரையே எழுதியாச்சுங்ணோவ்!)
--
அன்புடன்,
ஹரிகி.
--------------------
ஆனால், டாக்டர் மு. வ. ஒரு தனிப்பாடல் வெண்பாத் தந்துள்ளார்:
அதனை முன்னர் கொடுத்துள்ளேன்
https://groups.google.com/forum/#!msg/mintamil/Ow-eiFR_2J8/rAavIFO7VWMJமு.வ., இலக்கியத் திறன், பக். 183,
அத்திக்காய் காய்காய்காய் ஆலங்காய் வெண்மதியே
இத்திக்காய்க் காய்ந்துனக் கென்னபயன் - சற்றுமென்மேல்
பற்றற் றவரைக்காய் பாவைக்காய்க் கோவைக்காய்
சொற்றக்காய் தூதுவிளங் காய்.
முழுநூலும் இங்கே:
http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=175&pno=183இந்த வெண்பாவை விரித்துள்ளார் சினிமாவுக்காகக் கவிஞர்.
அவருக்குத் தனிப்பாடல்கள், குற்றாலக் குறவஞ்சி, நளவெண்பா, .... அத்துபடி.
இப்போது தங்கிலீஷ் பாட்டு சினிமாவில் எழுதுவோரில் இலக்கியம் அறியார் பலர்.
நா. கணேசன்