வணக்கம்,
'தீராத விளையாட்டுப் பிள்ளை' பாடலில்,
புள்ளாங் குழல்கொண்டு வருவான்-அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,
கள்ளால் மயங்குவது போலே அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்
என்று பாரதி எழுதுகிறார்.
புல்லாங்குழல் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால், புள்ளாங்குழல் என்று பாரதி எழுதியது ஏன்? எதுகை நயத்திற்காகவா? .
எனில், 'ஞானரதம்' கதையில் 'புள்ளாங்குழல்' என்று ஏன் அவர் எழுத வேண்டும்?
சான்றோர் பெருமக்கள் அடியேனுக்கு வெளிச்சம் பாய்ச்சி அறிவு கொளுத்துமாறு வேண்டுகிறேன்.
நன்றி,
நிரஞ்சன்