Groups
Groups
Sign in
Groups
Groups
சந்தவசந்தம்
Conversations
About
Send feedback
Help
நவராத்திரி நாள் 1
2 views
Skip to first unread message
KKSR
unread,
Sep 22, 2025, 11:46:40 AM (yesterday)
Sep 22
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to santhav...@googlegroups.com
உ
ஓம் ஶ்ரீ மாத்ரே நம:
எண்ணியெண்ணி சக்தியுன் எண்ணத்தில் நான்திளைக்க
எண்ணத்தை ஆள்வதற்(கு) என்னுடனே - எண்ணெழுத்தாய்
வந்துதிக்க தும்பிக்கை யானைத் துணையனுப்பு
சிந்துகவி பாடச் சிறந்து!
நவராத்திரி 1
உள்ளமொரு கோவில் - அதில்
உன்னை ஏற்றிவைத்தேன்
வெள்ளமென அன்பை - அங்கு
விரவி நிற்பவளே!
துள்ளும் எண்ணமெலாம் - சக்தி
தூண்டும் வண்ணமன்றோ
விள்ள விள்ள விள்ள - அதை
வேண்டும் சக்தியன்றோ!
முள்ளை எடுத்துவிட்டே - ஆங்கு
மோன விதைவிதைத்தே
கள்ளம் கபடமில்லா - அவள்
கருணை மழைபொழிவாள்!
அள்ளக் குறையாத - அன்பை
அமுதமெனப் பொழிவாள்
எள்ளல் செய்வோர்முன் - அவள்
ஏற்றம் தந்திடுவாள்
தள்ள வருவோர்க்கும் - அவர்
தவற்றை உணர்த்திடுவாள்
பள்ள மேடெல்லாம் - அன்னை
பருவ விளையாடல்
பிள்ளை எனைக்கண்டால் - அவள்
பித்துக் கொண்டிடுவாள்
அள்ளி அணைத்தெனையே - அவள்
ஆனந்தம் அடைவாளே!
வள்ளல் எனவாழ்த்தி - அகம்
வாரிதிபோல் பொங்கி
துள்ளும் அழகினிலே - அட(த்)
தூக்கம் தொலைப்பாளே!
குள்ளக் குறள்போல - அவள்
குரலொலித்திடுமே
உள்ளக் களிப்பாகி - அது
உலகை அளந்திடுமே
பள்ளி கொண்டவளை - எனைப்
பாலித்திருப்பவளை
விள்ள வகைசெய்தே - இன்று
விழியில் கலந்தாளே!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்! - அம்மே
ஓம் சக்தி துர்க்கையளே!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்! - அம்மே
ஓம் சக்தி! உனைச் சரணே!
~ சுரேஜமீ
22.09.2025 காலை 09:08
Sent from Mobile
Reply all
Reply to author
Forward
0 new messages