கவிதைகளை இடுமுன், அவரைப் பற்றிய குறிப்பையும் இவண் இடுகிறேன்.
--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com
சந்தக்கவிமாமணி தமிழழகன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
--பொற்கிழிக்கவிஞர்டாக்டர். ச.சவகர்லால்கைபேசி : +91- 9790846119
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்: இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில், santhavasanth...@googlegroups.com. இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்: http://groups.google.com/group/santhavasantham?hl=ta
வாழ்க்கைவாழும் வேள்வி
நாளும் கேள்விசிரமமே சேர்க்கும் - அவ
சரமுமே யார்க்கும்.வழுக்குமே வாழ்க்கை - பின்
இழுக்குமே யாக்கைவாழ்க்கை வெறும்கல்
வேட்கை பெரும்கல்.சதிகளின் கூட்டு
எதிர்கொளும் பூட்டுஉழைத்தால் பிழைப்பு
பிழைத்தால் களைப்புசந்தர்ப்பச் சேர்க்கை
வந்தொப்ப வாழ்க்கைகதிகளின் தாளம்
விதிகொளும் மேளம்கூலி ஒருபுறம்
கேலி மறுபுறம்நிலவரம் போலும்
நலமுற ஏறும்
சில கவிகள் நன்றாக இருக்கின்றன.. ஆயின் பல செயற்கை.. என்று சொல்லித்தான் ஆகவேண்டும்.
துளித் துளி - கவிதைஉள்மொழி ஊற்று
பண்மொழி மாற்றுயதார்த்தங்க ளோடும்
பதார்த்தங்கள் கூடும்செஞ்சொல் சிலிர்ப்புகள் - உள்
நெஞ்சின் ஒலிப்புகள்கருத்தெனும் கவிநயம் - சொல்
பொறுத்துநம் செவிநயம்சுருக்கஎச் சொல்லும் - நமைச்
சுருக்கென வெல்லும்எழுத்துகள் முன்படும்
எண்ணங்கள் பின்படும்கற்பனை கவிதைக்கு - அதன்
விற்பனம் உவகைக்கு
1) யாப்பிலக்கணப்படி இவை எவ்வகைப் பாடல்கள்?
துளித் துளி - கவியரங்கம்(இன்றையக் கவியரங்கங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்)அவிநயம் ஆச்சு
கவிநயம் போச்சுபட்டியல் நீண்டது
பாட்டியல் மாண்டதுசொற்களின் பந்தல் - வெறும்
புற்களின் கந்தல்யாப்புக்கே ஆப்பு - அரை
யாப்புக்கே வாய்ப்புஇலக்கண வரட்டி - அதை
விலக்கணும் விரட்டி
சீரங்கம் திருச்சிதான்
பாரெங்கும் முறிச்சுத்தான்
துளித் துளி - வேண்டுதல் வேண்டாமைசாதிப்போர் வேண்டும் - வெறும்
சாதிப்போர் வேண்டாம்
....
--நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதிபடைப்பு:சக்தி சரணமெனச்
.. சாற்றிப் படைப்பதற்கே
பக்தியொடும் தமிழைப்
.. பாடினேன், அம்பிகைக்கே.காப்புவந்தாதி யாய்நின்ற வண்ணக்கா மாட்சியின்மேல்
அந்தாதி பாடுவதற் கஞ்சலித்தேன் - சிந்தாத
நம்பிக்கை யோடு நடக்குமிந் நூலுக்குத்
தும்பிக்கை யானே துணைஅந்தாதிநாமாட்சி செய்ய நலம்வரும் வாணர்க்கு
.. நல்லிசையோ(டு)
ஆமாட்சி செய்ய அணிவரும் சொல்யாப்(பு)
.. அரவணைத்துப்
பூமாட்சி செய்யப் புகழ்வரும் வண்ணையம்
.. பொற்கொடியாம்
காமாட்சி செய்ய கருணை வரும்வழி
.. கண்டதுமே. (1)
கண்ட பிணிபோம் கவலை களும்போம்
.. கவனமின்றிக்
கொண்ட பிறவிக் கொடுமைகளும் போம்வெறும்
.. கொள்கைகளாய்
விண்ட பெருமையும் வீராப்பும் போம்புகழ்
.. வெற்றியுமே
செண்டு புடைதரச் சேரும்கா மாட்சியைச்
.. சிந்திக்கவே. (2)சிந்திப்போம் நாளெல்லாம் சிந்திப்ப தோடும்
.. செழுந்தமிழால்
வந்திப்போம் வாழ்வெலாம் வந்திப்ப தோடும்
.. வழித்துணையாய்
முந்திப்போம் புண்ணிய மூர்த்தியு மாமவள்
.. மொய்ம்புணர்ந்தே
சந்திப்போம் வண்ணையஞ் சக்திகா மாட்சி
.. சரணங்களே. (3)
நிதியே நிதியின் நிறைபயனே எம்
.. நினைவிலுறு
மதியே மதியின் மயமாம் தெளிவே
.. மதியையும்வெல்
விதியே விதியின் விளைவே எமக்கதில்
.. வெற்றியையும்
கதியே தருவண்ணைக் காமாட்சி யாமுமைக்
.. கற்பகமே (8)கற்பகத் தாளைஎம் காமாட்சி யாளைக்
.. கமலமுகப்
பொற்பகத் தாளைப் பொலிவுடை யாளைமுன்
.. புண்ணியமாம்
சொற்பகுத் தாளைச் சுவையுடை யாளைச்
.. சுயம்புருவாம்
தற்பகத் தாளைத் தொழுதவள் தாளைத்
.. தழுவுமினே (9)
வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி(பாடல்கள் 11 - 20)வாக்குக் கினியாள் மனத்துக் கினியாள்
.. வளருமனப்
போக்குக் கினியாள் புலனுக் கினியாள்
.. புலனமையும்
நோக்குக் கினியாள் நுகரற் கினியாள்
.. நுகருமருள்
தேக்குக் கினியாள் திருவண்ணைக் காமாட்சி
.. தேவியுமே (11)தேவி அவளென்போம் தெய்விகம் பூக்கத்
.. திகழ்மணிப்பூ
வாவி அவளென்போம் வாழ்வாங்கு வாழ்ந்து
.. வளம்தருவோர்க்(கு)
ஆவி அவளென்போம் அப்பாலும் தத்துவம்
.. அத்தனைக்கும்
சாவி அவளென்போம் சந்ததம் காமாட்சி
.. சாரணியே (12)
பாடல்களைப் பகிர்ந்துகொள்வதற்கு சந்தக்கவிமாமணி அவர்களுக்கும், சந்தர்
அவர்களுக்கும் நன்றிகள்.
அன்புடன்,
அர்விந்த்
http://mstamil.com
2012/7/1 Siva Siva <naya...@gmail.com>:
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
சாம்பவி சங்கரி சாரும் பிரணவி
.. சத்தியம்போல்
தாம்பவித் தேமுன் தழையும்கா மாட்சி
.. தருமிணிவாய்
தேம்புவித் தெம்குறை தீர உனக்கே
.. தெரியவைத்தோம்
யாம்புவிக் காட்பட யாதினி மேற்றடை
.. யாமளையே (24)யாமளை அன்பொன்றே யாதுமாய் வாழமெய்
.. யாண்டுமுற்றோம்
போமளை போட்டி பொறாமை புகைச்சலும்
.. பொய்ம்மையுமே
தாமுளை சாகும் தருமம் வளரும்
.. தயாபரியாம்
கோமளை வண்ணைக்கா மாட்சி எனும்தாய்
.. குளிர்க்கண்ணிலே (25)கண்ணிலே அன்னவள் காட்சியே வைகும்
.. கருதுநெஞ்சம்
எண்ணிலே அன்னவள் எங்ஙன் வசப்படல்
.. என்பதுறும்
பண்ணிலே அன்னவள் பாடலே வந்து
.. பரிணமிக்கும்
மண்ணிலே அன்னைகா மாட்சியல் லாற்பிறர்
.. மாண்புமென்னே (26)
என்னே உனையாம் இகபர மென்னும்
.. இரண்டிலும்தான்
முன்னே வணங்கும் முதுபெரு ளென்ற
.. முறைமைகண்டு
பொன்னே எனவும் பொருத்தக் கருதிப்
.. பொலிவதுற்றோம்
அன்னேகா மாட்சி யருளுக யாமுன்
.. அடைக்கலமே (27)அடைக்கல மாம்எம் அறிவைத் தெளிவாய்
.. அனைத்துவரும்
நடைக்கல மாம்எது நன்றுதீ தென்று
.. நடுவுறுத்தும்
விடைக்கல மாம்எவ் விளைவையும் வென்று
.. விரைந்தெழவே
படக்கல மாம்வண்ணைக் காமாட்சி பக்தி
.. படைமின்களே (28)
படைகொண் டெழுவோம் பதிகொண் டெழுவோம்
.. பவனிவெற்றிக்
குடைகொண் டெழுவோம் குடிகொண் டெழுவோம்
.. குவலயமே
தடைகொண் டெழினும் தயார்தயார் என்றே
.. தகர்த்தெறியக்
கடைகொண் டெழுகுவம் காமாட்சி தணையங்
.. கால்பணிந்தே (29)
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி(பாடல்கள் 31 - 40)அறிந்த தனைத்தும் அவளென் றறிந்தோம்
.. அதன்வழியே
புரிந்த தனைத்தும் அவளென்று போந்தோம்
.. புலனொடுக்கித்
தெரிந்த தனைத்தும் அவளென்று தேர்ந்தோம்
.. தெளிவிலிவை
விரிந்த தனைத்தும்கா மாட்சியியேல் நெஞ்சம்
.. வியக்குமன்றே (31)
வியக்கும் படியவள் விந்தைவிஞ் ஞான
.. விளக்கமுமாய்
இயக்கும் படியினி தேயிருப் பாள்நலம்
.. எண்ணிலவாய்ப்
பயக்கும் படியெந்தப் பஞ்சை யையும் ஒரு
.. பார்வையிலே
கயக்கும் படியறுத் தாளுவள் காமாட்சி
.. காவியமே (32)காவிய மேஎனக் கல்லொடு மண்ணும்
.. கனிவித்துயிர்
ஓவிய மேஎன உன்னொளி கூட்டி
.. உரைப்பதற்கே
மேவியம் மேநினை மேன்மேலும் வேண்டினம்
.. மேலெழுந்து
தாவியு மேமடல் தாழைசூழ் வண்ணைத்
.. தரங்கிணியே (33)தரங்கிணி காமாட்சி தாள்மற வா(து)உன்
.. தயைபெறவே
நெருங்கணி யாகமுன் நின்றெம் குறையெலாம்
.. நேர்ந்துரைத்தோம்
குரங்கணி யாய்க்கனி கோடெறிந் தாடக்
.. குளிர்வனம்சூழ்
மருங்கணி யாம்வண்ணை மாமதிற் கோயில்
.. மகிழவந்தே (34)
--> விரிந்த தனைத்தும்கா மாட்சியியேல்? விரிந்த தனைத்தும்கா மாட்சியேல்?
ஆம். மாட்சியேல் என இருக்க வேண்டும்
--> நாலாகமும்நீ = ?
அப்படித்தான் நூலில் உள்ளது. கவிஞரிடம் கேட்டுச் சொல்கிறேன்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
கைகுவிப் பாரெனில் காணவர் நெஞ்சக்
.. கமலத்திலே
பொய்குவிப் பாரவர் பூசனை யாறு
.. பொழுதிலுமே
செய்குவிப் பாரவர் சிந்தை யெலாம்சிவ
.. கீர்த்தி என்றே
மெய்குவிப் பார்வண்ணைக் காமாட்சி பக்தி
.. மிகைபெறவே (56)
வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி(பாடல்கள் 61 - 70)இருப்பவ ளாய்மனம் எண்ணும் அனைத்தும்
.. இயன்றபிழை
பொறுப்பவ ளாயந்தப் பொய்ம்மை களைமுன்
.. பொறுத்திருக்கும்
அறுப்பவ ளாயெமை யாதரித் தாண்டாங்(கு)
.. அறநெறியில்
திருப்புவ ளாகிய தேவிகா மாட்சி
.. திறம்பெரிதே (61)பெரிதே எனவுனைப் பேணிக்கொண் டாடிப்
.. பெறுவதற்கும்
அரிதே உலகம் உடங்கலும் ஆன்ற
.. அருண்மொழிகள்
வறிதே உனையாம் வணங்கவும் ஆசைகா
.. மாட்சியதாற்
சிறிதே புகன்றதிச் சேயரும் வேறென்ன
.. செய்வதுண்டே (62)
வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி(பாடல்கள் 71 - 80)சார்பவர்க் கெல்லாம் சரணா லயமும்
.. சலனமறுத்(து)
ஓர்பவர்க் கெல்லாம் உறுதிப் பொருளாய்
.. உணர்ந்துணர்ந்து
நேர்பவர்க் கெல்லாம் நிலைகொள் துணையும்
.. நிகழ்பவளாய்த்
தேர்பவள் ஆவதும் வண்ணைக்கா மாட்சி
.. திருமகளே (71)திருமகள் வானுறு தேவரும் கூடித்
.. திரண்டுதொழ
ஒருமகன் ஆகம உட்பொருள் யாவுமே
.. உய்த்துணர
வருமகள் செல்வியும் வாக்கெனும் கல்வியும்
.. வாய்த்தவிழிப்
பெருமகள் ஆகிப் பிறங்குவள் காமாட்சி
.. பெண்கிளியே (72)
கிளியே கிளிதரும் கின்னரி யாகிக்
.. கிளர்சுகமே
எளியே மெனயாம் இருந்துமுன் மாண்பினை
.. என்னென்றெலாம்
ஒளியே பெறுநெஞ் சுரைவாய்ப் படுத்தி
.. உணர்ந்தனம் நின்
அளியேகா மாட்சி யணைவதி லேஎமக்
.. கார்தடையே (73)
மூடமை என்னினும் முந்தப் பலவாய்
.. முறைதொகுத்துச்
காடமை நீற்றுக் கறைக்கண்ட னாரைக்
.. கருதித்தவ
பீடம மர்ந்தநின் பெண்மையைப் போற்றும்
.. பெருமையில்வான்
வீடமை வாமன்றோ காமாட்சி வெற்றி
.. விளையுமதே (85)
விளையும தாய்எம் வினைக்கொரு மூலமும்
.. விண்டறிந்து
களையும தாய்ச்சிவ காட்சியு மெந்தம்
.. கடைவிழிக்கே
திளையும தாய்நவ தேவிகா மாட்சியுன்
.. சீரடியில்
வளையும தாகஎம் சென்னியை வைத்தோம்
.. வணக்கமென்றே (86)வணக்கமென் றோர்க்கெலாம் வானர சாளும்
.. வளமுமவள்
இணக்கமென் றோர்க்கெலாம் இங்கித வாழ்க்கையும்
.. ஈந்தவள்தான்
மணக்குமென் றோர்க்கெலாம் மங்கலப் பேறும்
.. மதித்தருள்வாள்
சுணக்கமின் பேறபல் சுழல்மெத்தை சூழ்வண்ணைச்
.. சுந்தரியே (87)
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
அருளே பொருளாய் அறிவே விரிவாய்
.. அமர்ந்துலகுத்
திரளே சிவமாய்த் தெளிவே நவமாய்த்
.. திளைத்திருக்க
மருளே கடந்துகா மாட்சியாம் அன்னை
.. மனோன்மணியாய்
இருளே கடிய எழுந்தனை ஞான
.. இரவியன்றே (96)இரவியும் திங்களும் எண்ணுசேய் மாலும்
.. இரண்டரவும்
முருவிய பொன்னொடு மங்கல வெள்ளியும்
.. மந்தனுமாய்
நிரவிய கோளெலாம் நேர்பெறக் காமாட்சி
.. நின்னன்பர்பால்
கருவியு மாயவர் காலடி வைகுமோர்
.. கண் இமையே (97)இமையே இமயா இமையோரும் மண்ணோரும்
.. ஏத்தவரும்
உமையே சிவானந்த உத்தமி காமாட்சி
.. ஊழ்வலியின்
சுமையே உயிர்க்கெலாம் சூழ்தல் தவிர்க்கச்
.. சுகவண்ணையில்
நமையே புரந்தும் நடந்தனள் என்றோதும்
.. நான்மறையே (98)
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
இங்கும் பிற இழைகளிலும் ஒரு பாடலைச் சிறப்புறச் செய்யும் இலக்கண
நுட்பங்களைச் சுட்டிக் காட்டுவதற்கு மிக்க நன்றி.
அர்விந்த்
2012/7/24 Subbaier Ramasami <elan...@gmail.com>: