திருவெவ்வுட் பஞ்சகம்

7 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Feb 12, 2026, 6:36:17 AM (2 days ago) Feb 12
to Santhavasantham

திருவெவ்வுட் பஞ்சகம்

(தரவு கொச்சகக் கலிப்பா)


திருவிளங்கும் மலர்மடந்தை சிறந்துறையும் வலமார்பும்

கரம்விளங்கும் புரிசங்கும் கதிர்புரையும் சக்கரமும்

அருள்விளங்கும் கழலிரண்டும் அணிவிளங்க ஒருமலைபோல் 

உருவிளங்கும் அரவணைமேல் ஒளிரெவ்வுள் கிடந்தானே.


தொழுதெழுநல் லடியவர்தம் துயர்தணிய வருமதியாய்ப்

பழவினைகள் முழுதொழியப் பதமருளும் ஒருகதியாய்ச்

சுழலுலகில் இருள்மறையச் சுடர்மழையைப் பொழிமுகிலாய்

அழலுமிழ்வாய் அரவணைமேல் அருளெவ்வுள் கிடந்தானே. 


கலியனுரை கவிதையிலே களித்திடுநற் செவியுடையான்

ஒலிமழிசைப் பரன்மொழியின் உறுசுவையில் உருகிடுவான்

நிலமுழுதும் அளவிடவான் நெடிதுயரும் அடியுடையான்

வலிமிகுவாள் அரவணைமேல் மணியெவ்வுள் கிடந்தானே.


கமலவனம் எனத்திகழும் கவின்மிகுகண் விழியுடையான்

கமழ்துளவம் திகழ்முடியான் கருவிளைபோல் நிறமுடையான்

குமுதமெனும் இதழ்களிலே குமிண்சிரிப்பு மலர்ந்திடுவான்

தமர்பரவும் அரவணைமேல் தலையெவ்வுள் கிடந்தானே.


குறைவறியாப் பெருநிதியாய்க் குணமருளும் அருமருந்தாய்ப்

பிறவியெலாம் வருமுறவாய்ப் பிரிவறியா உயிர்த்துணையாய் 

உறுபெருவான் தமிழமுதாய் உணர்வினிலே நிறைமகிழ்வாய்ப்

பொறிவிழிசேர் அரவணைமேல் புகழெவ்வுள்  கிடந்தானே.


(கலியன் = திருமங்கையாழ்வார்;

அளவிட = அளக்க;

வாள் = ஒளி பொருந்திய;

மணி எவ்வுள் = அழகிய எவ்வுள் பதி;

கருவிளை = சங்குப்பூ) 

  • இமயவரம்பன் 


Parthasarathy S

unread,
Feb 12, 2026, 6:59:00 AM (2 days ago) Feb 12
to சந்தவசந்தம்
அருமை! திரு இமயவரம்பரே!

திருயெவ்வுள் திகழெங்கள் சகமேத்தும் நாரணனை
அருட்கவியில் அமுதுடைத்த ஐங்கவியும் அலங்காரம்
பொருளுடைத்த புகழ்மாலைப் பொழிமழையாய் வரக்கண்டோம்
இருளகற்றி அடிநிலையில் இடவுதவும் இனித்தடையோ?!

அடியார்க்கடியான் புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

இமயவரம்பன்

unread,
Feb 12, 2026, 7:07:14 AM (2 days ago) Feb 12
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அழகிய பாட்டால் அடியேனை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி, திரு. பார்த்தசாரதி.

Ram Ramakrishnan

unread,
Feb 12, 2026, 8:22:05 AM (2 days ago) Feb 12
to santhav...@googlegroups.com
அற்புதமான பஞ்சகம். நல்ல ராகத்தில் மெட்டமைத்துப் பாடலாம் எனத் தோன்றுகின்றது.

வளரட்டும் திருவள்ளூராரின் தமிழ்ப்பணி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 12, 2026, at 06:36, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/F3240527-214F-48D8-A509-D1676C5E939D%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Feb 12, 2026, 8:55:02 AM (2 days ago) Feb 12
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி, திரு. ராம்கிராம் !

Siva Siva

unread,
Feb 12, 2026, 9:51:41 AM (2 days ago) Feb 12
to santhav...@googlegroups.com
Nice.

/ எவ்வுள்  கிடந்தானே /

எவ்வுளில் கிடந்தான் என்ற பொருளில் - எவ்வுட் கிடந்தானே - என்று வரும் என்று எண்ணுகின்றேன்.

( 6.86.8
ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ
    டயன்தேடி நாடரிய அம்மான் தன்னைப்  )

ஒளிரெவ்வுள் - ஒளிர் - எவ்வுளுக்கு அடைமொழியா?

/கமலவனம் எனத்திகழும் கவின்மிகுகண் விழியுடையான்  /

இருகண்களைத் தாமரைக்காடு என்று சொல்வது உண்டா.
கமலமலர் ?

வி. சுப்பிரமணியன்

On Thu, Feb 12, 2026 at 6:36 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

திருவெவ்வுட் பஞ்சகம்

(தரவு கொச்சகக் கலிப்பா)


திருவிளங்கும் மலர்மடந்தை சிறந்துறையும் வலமார்பும்

கரம்விளங்கும் புரிசங்கும் கதிர்புரையும் சக்கரமும்

அருள்விளங்கும் கழலிரண்டும் அணிவிளங்க ஒருமலைபோல் 

உருவிளங்கும் அரவணைமேல் ஒளிரெவ்வுள் கிடந்தானே.


...

இமயவரம்பன்

unread,
Feb 12, 2026, 10:09:15 AM (2 days ago) Feb 12
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி!

/“எவ்வுளில் கிடந்தான் என்ற பொருளில் - எவ்வுட் கிடந்தானே - என்று வரும்”/ - நீங்கள் சொல்வது சரியே! மாற்றுகிறேன் .

/“ஒளிரெவ்வுள் - ஒளிர் - எவ்வுளுக்கு அடைமொழியா?” / - ஆம்

/இருகண்களைத் தாமரைக்காடு என்று சொல்வது உண்டா./
ஆம்!
தாமரைக் காடு மலர்க் கண்ணொடு” - நம்மாழ்வார் (திருவாசிரியம்)

Siva Siva

unread,
Feb 12, 2026, 10:14:45 AM (2 days ago) Feb 12
to santhav...@googlegroups.com
Thanks.

/கவின்மிகுகண் விழியுடையான்/

கண்விழி = ?

கவினாரும் கண்ணுடையான்?

==

இமயவரம்பன்

unread,
Feb 12, 2026, 10:16:42 AM (2 days ago) Feb 12
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
நன்றி!

“கவினாரும் கண்” makes more sense. Will change.
Reply all
Reply to author
Forward
0 new messages