"அறிந்து வாழப் பழகு"
(மீ. விசுவநாதன்)
தேவைக் கதிகம் சேர்க்காதே - பின்
தெருவில் கொண்டு கொண்டாதே
தேவை உள்ள வயிற்றை - நீ
தெரிந்து கொடுக்கத் தவறாதே
கடின உழைப்பின் வியர்வைதான் - நம்
கவலை மறையக் கூலிதரும்
நொடியில் இதைநாம் மறக்கின்றோம் - மனம்
நொந்து பிறகு தவிக்கின்றோம்
பிறரின் வளர்ச்சி இன்பமெனும் - நல்
விதையை மனத்தில் பதித்துவிடு
பிறகு பாருன் உள்ளுக்குள் - அருள்
விருட்ச மாக வளர்ந்திருக்கும்
குருவி வாய்க்குத் தகுந்தபடி - நெல்
கொத்திக் கொண்டு பறக்கிறது
உருவில் சிறிய பறவையது - ஒரு
உயர்ந்த கருத்தை விததைக்கிறது.
(02.02.2026 22.49 pm)