"அரியும் அரனும்"
(மீ. விசுவநாதன்)
"நாக பஞ்சணை நாரணன் கொண்டான்
நாக மாலையை நம்சிவன் பூண்டான்
தேகம் பாதியை தேவியே என்றான்
ஏக லட்மியை நெஞ்சிலே வைத்தான்.
ஆதி மூலனில் பேதமே இல்லை
சாதி பேதமே சாற்றுவ தில்லை
நீதி தேவனில் பொய்நிழல் இல்லை
ஓதி வாழுவோம் ஒர்குறை இல்லை."
(16.02.2026) 13.50 pm
(பா வகை: நிலைமண்டல ஆசிரியப்பா)