> --http://www.geocities.com/nayanmars
2008-03-26
தக்ஷிணாமூர்த்தி
போற்றி -
2
---------------------------------
(கலி
விருத்தம் -
"மா
மா மா மா"
என்ற
வாய்பாடு)
1)
பாலில்
நெய்போல் பயில்வாய் போற்றி
ஆலின்
அடியில் அமர்வாய் போற்றி
நூலின்
பொருளை நுவல்வாய் போற்றி
மாலின்
இருள்தீர் மதியே போற்றி.
மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - 26-Jun-09 (India 27th?)
சிவனே குருவாக வந்து அருள்புரிந்த அன்பர்.
திருவாசகத்தில் போற்றித் திருவகவலில் சில அடிகள்:
"................
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக் காரமு தானாய் போற்றி
..............................
............."
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/
2)
வேலை
விடம்சேர் மிடறா போற்றி
மேலை
வினைதீர் விமலா போற்றி
காலை
உதிக்கும் கதிரே போற்றி
மாலை
நீக்கும் மருந்தே போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2008-03-26
தக்ஷிணாமூர்த்தி போற்றி - 2
---------------------------------
(கலி விருத்தம் - "மா மா மா மா" என்ற வாய்பாடு)
1)
3)
சின்முத்
திரைசேர் கையா போற்றி
சன்மத்
தொடரைத் தடுப்பாய் போற்றி
புன்மை
தீர்க்கும் புனிதா போற்றி
நன்மை
நல்கும் நாதா போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அங்கை அனலோய் அரனே போற்றி!
மங்கை இடமாய் வகுத்தாய் போற்றி!
கங்கைச் சடையோய் கழலே போற்றி!
சங்கைத் தீர்க்கும் சதுரா போற்றி!
அன்புடன்,
தங்கமணி.
On Jun 21, 7:36 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> சின்முத் திரைசேர் கையா போற்றி
> சன்மத் தொடரைத் தடுப்பாய் போற்றி
> புன்மை தீர்க்கும் புனிதா போற்றி
> நன்மை நல்கும் நாதா போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2009/6/20 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>
> --http://www.geocities.com/nayanmars
நானும் எழுதலாமா?
அங்கை அனலோய் அரனே போற்றி!
மங்கை இடமாய் வகுத்தாய் போற்றி!
கங்கைச் சடையோய் கழலே போற்றி!
சங்கைத் தீர்க்கும் சதுரா போற்றி!
அன்புடன்,
தங்கமணி.
On Jun 21, 7:36 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:> 2009/6/20 Siva Siva <nayanm...@gmail.com>
> 3)
> சின்முத் திரைசேர் கையா போற்றி
> சன்மத் தொடரைத் தடுப்பாய் போற்றி
> புன்மை தீர்க்கும் புனிதா போற்றி
> நன்மை நல்கும் நாதா போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
>
> > 2)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>
> --http://www.geocities.com/nayanmars
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
4)
ஆசான்
ஆகி அமர்வாய் போற்றி
பேசா
துரைக்கும் பிரானே போற்றி
ஆசா
பாசம் அறுப்பாய் போற்றி
நேசா
கல்லால் நிழலா போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
//'த்' மிகாமல் 'சங்கை தீர்க்கும்' என்றிருக்கவேண்டும்.//
அன்புள்ள சிவசிவா!மிக்கநன்றி!'த்'எடுத்து விட்டேன்.
அன்புடன்,
தங்கமணி.
On Jun 22, 5:41 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2009/6/21 thangamani <tvthangam...@gmail.com>
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -
5)
கறையை
உடைய கண்டா போற்றி
பிறையை
அணிபூ ரணனே போற்றி
குறைகள்
தீர்க்கும் கோவே போற்றி
மறைகள்
சொல்லும் மணியே போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Jun 23, 4:58 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> கறையை உடைய கண்டா போற்றி
> பிறையை அணிபூ ரணனே போற்றி
> குறைகள் தீர்க்கும் கோவே போற்றி
> மறைகள் சொல்லும் மணியே போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2009/6/22 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>
> --http://www.geocities.com/nayanmars
அன்புடன்,
தங்கமணி.
6)
உறவில்
லாதார்க்(கு)
உறவே
போற்றி
இறவில்
லாத ஈசா போற்றி
பிறவிப்
பிணிக்கு மருந்தே போற்றி
அறவ
ஆல மர்ந்தாய் போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
ஆரா அமுதே அரனே போற்றி!
பேரா யிரமும் பெற்றாய் போற்றி!
வாரா துவந்த மணியே போற்றி!
தீரா வினையைத் தீர்ப்பாய் போற்றி!
அன்புடன்,
தங்கமணி.
On Jun 24, 5:12 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> உறவில் லாதார்க்(கு) உறவே போற்றி
> இறவில் லாத ஈசா போற்றி
> பிறவிப் பிணிக்கு மருந்தே போற்றி
> அறவ ஆல மர்ந்தாய் போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2009/6/23 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 5)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>
> --http://www.geocities.com/nayanmars
7)
உழையின்
உரியை உகந்தாய் போற்றி
பழைய
வினைதீர் பரமா போற்றி
குழைய
ணிந்த குழகா போற்றி
அழக
ஆல மர்ந்தாய் போற்றி.
8)
மானை
ஏந்தெம் மானே போற்றி
வானைக்
கடந்து வளர்வாய் போற்றி
மோனத்
தாலே மொழிவாய் போற்றி
ஞானச்
சுடரே போற்றி போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
நான்காம் அடியை மாற்றியுள்ளேன்.
அன்புடன்,
தங்கமணி.
அன்புடன்,
தங்க்மணி.
On Jun 25, 5:55 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> உழையின் உரியை உகந்தாய் போற்றி
> பழைய வினைதீர் பரமா போற்றி
> குழைய ணிந்த குழகா போற்றி
> அழக ஆல மர்ந்தாய் போற்றி.
>
> 8)
> மானை ஏந்தெம் மானே போற்றி
> வானைக் கடந்து வளர்வாய் போற்றி
> மோனத் தாலே மொழிவாய் போற்றி
> ஞானச் சுடரே போற்றி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2009/6/24 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 6)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>
> --http://www.geocities.com/nayanmars
9)
தன்போல்
இல்லாத் தனியா போற்றி
இன்பால்
ஆடும் இறைவா போற்றி
தென்பால்
நோக்கும் தேவே போற்றி.
அன்பர்க்
கறங்கள் அருள்வாய் போற்றி.
10)
சத்தி
இணையும் சத்தே போற்றி
அத்தி
முகத்தன் அத்தா போற்றி
சித்தி
அளிக்கும் சித்தே போற்றி
முத்தி
அளிக்கும் முத்தே போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Jun 26, 6:50 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> தன்போல் இல்லாத் தனியா போற்றி
> இன்பால் ஆடும் இறைவா போற்றி
> தென்பால் நோக்கும் தேவே போற்றி.
> அன்பர்க் கறங்கள் அருள்வாய் போற்றி.
>
> 10)
> சத்தி இணையும் சத்தே போற்றி
> அத்தி முகத்தன் அத்தா போற்றி
> சித்தி அளிக்கும் சித்தே போற்றி
> முத்தி அளிக்கும் முத்தே போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2009/6/25 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 7)
>
> > 8)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>
> --http://www.geocities.com/nayanmars
இத்தொடரின்
கடைசிப் பாடல்கள்.
11)
முன்பின்
இல்லா முதல்வா போற்றி
இன்பின்
வடிவாய் இருப்பாய் போற்றி
அன்பி
னால்ஆல் அமர்வாய் போற்றி
துன்பின்
கருவைத் துடைப்பாய்
போற்றி.
12)
கோதி
லாத குணத்தாய் போற்றி
நீதி
வழுவார் நேசா போற்றி
போதிக்
கின்ற பொருளே போற்றி
ஆதி
குருவே போற்றி போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2009-06-26
(இன்று
மாணிக்க வாசகரின் குருபூஜை
- ஆனி
மகம்)
1)
-- (கலிவிருத்தம்
- 'புளிமா
புளிமா புளிமா தேமா'
என்ற
வாய்பாடு)
--
பணியா
பரணன் பணியே என்றும்
பணியா
உருகிப் பலபா மாலை
அணிவித்
தரனார் அடிசேர் அன்பர்
மணிவா
சகர்தா மரைத்தாள் போற்றி.
பணி
ஆபரணன் -
நாகாபரணன்;
2) -- (கலித்துறை
? - 'மா
மா மா மா காய்'
என்ற
வாய்பாடு)
--
ஆலம்
உண்ட அரனே அன்போ டன்றொருநாள்
ஞாலம்
உய்யக் குருவாய் நணுகிக்
குருந்தின்கீழ்க்
காலைக்
காட்டி ஆட்கொள் அடியார்,
கழல்மறவாச்
சீலர்,
திருவா
தவூரர் செய்ய தாள்போற்றி
3)
-- வெண்பா
--
உறங்குவோர்
எல்லாம் உணர்வெய்தி
இந்தப்
பிறப்பிறப்
பில்லாப் பெருவாழ் -
வுறநெஞ்சே
எம்பாவை
பாடிய எம்மணி வாசகன்
செம்பொற்
கழல்சிந்தை செய்.
பதம்
பிரித்து:
உறங்குவோர்
எல்லாம் உணர்(வு)
எய்தி,
இந்தப்
பிறப்(பு)
இறப்(பு)
இல்லாப்
பெருவாழ்(வு)
- உற,
நெஞ்சே,
எம்பாவை
பாடிய எம் மணிவாசகன்
செம்பொற்கழல்
சிந்தை செய்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
மாணிக்கவாசகர் குருபூஜை
2010-07-14
----------------
(வெண்டளையால்
வந்த ஆறடித்தரவு கொச்சகக்
கலிப்பா)
அம்மானை
சிந்தைய ராய்வணங்கத்
தீயாய்நீள்
அம்மானை,
ஆலமுண்ட அண்ணலை,
ஓர்கையில்
அம்மானை
ஏந்தும் அழகனை,
வாயார
அம்மானை
பாடி அடிபணிந்த வாதவூர்
எம்மானை
எம்மொழியால் எப்படி
ஏத்துவேன்
அம்மாநை
கின்றேன் அவர்பொற்றாள்
சிந்தித்தே.
பதம்
பிரித்து:
அம்
மால் நை சிந்தையராய் வணங்கத்
தீயாய் நீள்
அம்மானை,
ஆலம் உண்ட அண்ணலை,
ஓர் கையில்
அம்
மானை ஏந்தும் அழகனை,
வாயார
அம்மானை
பாடி அடிபணிந்த வாதவூர்
எம்மானை
எம்மொழியால் எப்படி
ஏத்துவேன்;
அம்மா;
நைகின்றேன்
அவர் பொற்றாள் சிந்தித்தே.
அம்மான்
- கடவுள்;
எம்மான்
- எம்
சுவாமி;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2)
--
நாலடித் தரவு
கொச்சகக் கலிப்பா --
வெம்பாவம்
சேராவே வெற்புவில்லில்
திருமாலை
அம்பாவைத்
தன்றுபுரம் அட்டானே
வந்தெழுதத்
தம்பாவைச்
சொல்மணிவா சகனாரின்
விழிப்பூட்டும்
எம்பாவை
இருபதையும் இசைபாடும்
அடியார்க்கே.
வெற்பு
- மலை;
அம்பா
- அம்பாக;
மேருமலையே
வில்லாக அதில் திருமாலைக்
கணையாகச் சேர்த்து,
முப்புரங்களையும்
எரித்த சிவபெருமானே வந்து
எழுதிக்கொள்ள அப்பெருமானுக்குத்
தம் திருவாசகத்தைச் சொன்ன
மாணிக்கவாசகரின்,
விழிப்பைத்
தரும் திருவெம்பாவைப் பாடல்கள்
இருபதையும் இசையோடு பாடும்
அடியவர்களைக் கொடிய பாவங்கள்
நெருங்கமாட்டா.
==================
http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=4
2012-06-24
மாணிக்கவாசகர்
குருபூஜை -
2012 (ஆனி
மகம் -
2012-06-24)
-----------------------------------------------
1)
-- நாலடித்
தரவு கொச்சகக் கலிப்பா
--
கள்ளாரும்
கடிமலர்மேல் உறைவானும்
கரியானும்
புள்ளேன
மாய்ப்பறந்தும் புவியிடந்தும்
காண்பரிய
வெள்ளேற்றன்
விரைகழலை விழைமனத்தால்
மிகவுருகித்
தெள்ளேணம்
பாடுமணி வாசகர்சே வடிபோற்றி.
கள்
ஆரும் கடி மலர் -
தேன்
மலிந்த வாசம் மிகுந்த பூ -
தாமரை;
கரியான்
-
திருமால்;
புள்
ஏனம் -
பறவையும்
பன்றியும்;
புவி
இடந்து -
நிலத்தை
அகழ்ந்து;
வெள்
ஏற்றன் -
வெள்ளை
இடபத்தின்மேல் வரும்
சிவபெருமான்;
விரைகழல்
- மணக்கும்
திருவடி;
தெள்ளேணம்
-
திருத்தெள்ளேணம்
-
திருவாசகத்தில்
ஒரு பகுதி;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2) -- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா --
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
2012-06-24
மாணிக்கவாசகர் குருபூஜை - 2012 (ஆனி மகம் - 2012-06-24)
-----------------------------------------------
1) -- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா --
கள்ளாரும் கடிமலர்மேல் உறைவானும் கரியானும்
புள்ளேன மாய்ப்பறந்தும் புவியிடந்தும் காண்பரிய
வெள்ளேற்றன் விரைகழலை விழைமனத்தால் மிகவுருகித்
தெள்ளேணம் பாடுமணி வாசகர்சே வடிபோற்றி.
2)
-- நாலடித்
தரவு கொச்சகக் கலிப்பா
--
ஆத்தங்கொள்
மனத்தாலே அரிவையொரு
பாகத்தன்
பூத்துன்று
சடையான்றன் பொன்னடிக்கே
சென்றூதாய்
கோத்தும்பி
என்றென்று கோதில்லாத்
தமிழ்மாலை
கோத்தீந்த
வாதவூர்க் கோமான்றன்
தாள்போற்றி
ஆத்தம்
- ஆப்தம்
- அன்பு;
பூத்
துன்று சடையான் -
பூக்கள்
செறிந்திருக்கும் சடையினன்;
கோத்தும்பி
- அரசவண்டு;
(திருக்கோத்தும்பி
-
திருவாசகத்தில்
ஒரு பகுதி);
கோத்து
ஈந்த -
தொடுத்து
அளித்த;
கோமான்
- பெருமையிற்
சிறந்தோன்;
குரு;
மாணிக்க
வாசகர் குருபூஜை -
ஆனி
மகம் (2013-07-11)
2013-07-10
மாணிக்கவாசகர்
வாழ்த்து
----------------------------------
(அறுசீர்
ஆசிரிய விருத்தம் -
'விளம்
மா தேமா'
- அரையடி
வாய்பாடு)
சாற்றிய
அச்சப் பத்தில்
..
சழக்கரைச்
சாடி எந்தை
நீற்றினைப்
புனைந்து வம்மின்
..
நீர்களெல்
லாமென் றோதிப்
பேற்றினை
அடையும் மார்க்கம்
..
பெரிதுவந்
தெமக்கிங் கீந்தார்
மாற்றிலாச்
செம்பொன் எங்கள்
..
வாதவூர்
அடிகள் தாமே.
பெரிதுவந்
தெமக்கிங் கீந்தார்
-
பெரிது
உவந்து எமக்கு இங்கு
ஈந்தார்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2012/6/24 Siva Siva <naya...@gmail.com>
2012-06-24
மாணிக்கவாசகர் குருபூஜை - 2012 (ஆனி மகம் - 2012-06-24)
-----------------------------------------------
1) -- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா --
2014-06-28 (மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2014-07-01 USA / 2014-07-02 India)
--------------------
"தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.
(பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -
सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्);
"ஸத₃ஞ்சித முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ ஜ₂லஜ₂லஞ்சலித மஞ்ஜு கடகம்")
1)
குருந்தடி அமர்ந்தகு ரவன்றன பதந்தனை நினைந்துரு குநெஞ்சின ருரம்
பொருந்திய பெரும்புர வியின்றொகை தொடர்ந்திட இவர்ந்தடை அரன்சசி தரன்
கருந்திரை விடந்தனை அருந்திய பரன்சிறு பிரம்படி கொளும்படி வரும்
பெருந்தவ ரிருந்தமி ழதன்பொரு ளறிந்தனு தினஞ்சொல விடும்பவ பயம்.
பதம் பிரித்து:
குருந்து அடி அமர்ந்த குரவன்தன பதந்தனை நினைந்து உருகு நெஞ்சினர்; உரம்
பொருந்திய பெரும் புரவியின் தொகை தொடர்ந்திட இவர்ந்து அடை அரன், சசிதரன்,
கரும் திரை விடந்தனை அருந்திய பரன் சிறு பிரம்படி கொளும்படி வரும்
பெரும் தவர் இரும் தமிழ் அதன் பொருள் அறிந்து அனுதினம் சொல விடும் பவபயம்.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் (2013-07-11)
2013-07-10
2014-06-28 (மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2014-07-01 USA / 2014-07-02 India)
--------------------
"தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.
(பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -
सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्);
"ஸத₃ஞ்சித முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ ஜ₂லஜ₂லஞ்சலித மஞ்ஜு கடகம்")
1)
குருந்தடி அமர்ந்தகு ரவன்றன பதந்தனை நினைந்துரு குநெஞ்சின ருரம்
பொருந்திய பெரும்புர வியின்றொகை தொடர்ந்திட இவர்ந்தடை அரன்சசி தரன்
கருந்திரை விடந்தனை அருந்திய பரன்சிறு பிரம்படி கொளும்படி வரும்
பெருந்தவ ரிருந்தமி ழதன்பொரு ளறிந்தனு தினஞ்சொல விடும்பவ பயம்.
பதம் பிரித்து:
குருந்து அடி அமர்ந்த குரவன்தன பதந்தனை நினைந்து உருகு நெஞ்சினர்; உரம்
பொருந்திய பெரும் புரவியின் தொகை தொடர்ந்திட இவர்ந்து அடை அரன், சசிதரன்,
கரும் திரை விடந்தனை அருந்திய பரன் சிறு பிரம்படி கொளும்படி வரும்
பெரும் தவர் இரும் தமிழ் அதன் பொருள் அறிந்து அனுதினம் சொல விடும் பவபயம்.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
புலவர் கோவில்!
2015-06-09
மாணிக்கவாசகர்
குருபூஜை -
ஆனி
மகம் -
(2015-06-21)
--------------------------------------
1) ---
நேரிசை
வெண்பா ---
பெருந்துறை
தன்னிற் குருந்தமர்ந்
தானை
அருந்துணை
அண்ணலை அன்பால் -
இருந்தமிழால்
ஏத்திய
வாதவூர் ஏந்தல் இணையடியை
வாழ்த்தல்
மயல்தீர் மருந்து.
அன்பொடு,
வி.
சுப்பிரமணியன்
--You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2)
அரியன்
பெரியன் அடியார்க் கெளியன்
நரியைப்
பரிசெய்த நம்பன் -
கரியமணி
கண்டன்
கழற்கே கசிந்தமணி வாசகர்சொல்
மண்டுவினை
நோய்க்கு மருந்து.
அன்பொடு,
வி.
சுப்பிரமணியன்
2015-06-09
மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - (2015-06-21)
--------------------------------------
1) --- நேரிசை வெண்பா ---
3)
திருவா
சகமென்ற தேறலைத் தந்த
அருளாளர்
வாதவூர் அண்ணல் -
இருதாள்
பெருவாதை
நல்கநமைப் பின்னே தொடர்ந்து
வருதீ
வினைதீர் மருந்து.
அன்பொடு,
வி.
சுப்பிரமணியன்
மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - (2015-06-21)
Final song.
4)
--- இன்னிசை
வெண்பா ---
கொல்விடமுண்
டானைக் குருவெனப் பெற்றவர்
செல்வழி
காட்டும் திருவா சகமுரைத்த
செல்வரணி
வாதவூர்ச் செம்மல்
திருவடிகள்
வல்வினைக்கு
நல்ல மருந்து.
அன்பொடு,
வி.
சுப்பிரமணியன்
--
2016-07-03
மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் ( 07-July-2016 (USA) / 08-July-2016 (India))
----------------
(வெண்பா)
1)
குருந்தடியில் ஞான குருவின் வடிவில்
பெருந்துறையில் வந்த பெருமான் திருந்தடிக்கே
கோத்தும்பி சென்றூதக் கூறியவர் தீந்தமிழை
நாத்தழுவி வாழ்தல் நலம்.
அன்பொடு,
வி.
சுப்பிரமணியன்
மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் ( 07-July-2016 (USA) / 08-July-2016 (India))
----------------
2)
உத்தர கோசமங்கை உத்தமன்தாள் தம்மனத்தே
வைத்தமணி வாசகர் மண்ணோர்க்கு முத்தி
வழிகாட்டிச் சொன்னதமிழ் மாலைமொழி நாவே
பழிபாவம் தீரும் படி.
அன்பொடு,
வி.
சுப்பிரமணியன்
2016-07-03
மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் ( 07-July-2016 (USA) / 08-July-2016 (India))
----------------
(வெண்பா)
1)
2017-06-10
மாணிக்கவாசகர்
குருபூஜை -
2017 (ஆனி
மகம் -
2017-06-28)
--------
(ஷட்பதி
அமைப்பில் -
மா
விளம் மா விளம்
மா
விளம் மா விளம்
மா
விளம் மா விளம் மா விளங்காய்)
சுட்ட
நீறணி சொக்கன் மதுரையில்
பிட்டை
உண்டருள் பித்தன் மலரடி
பட்ட
உச்சியர் பரமன் மெச்சிய
பாக்கள் பாடவலார்
கட்டு
வல்வினைக் கயிற றுத்திடும்
மட்டு
வார்திரு வாத வூரர்சொல்
இட்ட
மாய்நிதம் எண்ணி அவர்கழல்
இணையை ஏத்திடுவோம்.
அன்பொடு,
வி.
சுப்பிரமணியன்.
Very great on the holy day.
N V Subbaraman
2017-06-10
மாணிக்கவாசகர் குருபூஜை - 2017 (ஆனி மகம் - 2017-06-28)
--------
(ஷட்பதி அமைப்பில் -
மா விளம் மா விளம்
மா விளம் மா விளம்
மா விளம் மா விளம் மா விளங்காய்)
சுட்ட நீறணி சொக்கன் மதுரையில்
பிட்டை உண்டருள் பித்தன் மலரடி
பட்ட உச்சியர் பரமன் மெச்சிய பாக்கள் பாடவலார்
கட்டு வல்வினைக் கயிற றுத்திடும்
மட்டு வார்திரு வாத வூரர்சொல்
இட்ட மாய்நிதம் எண்ணி அவர்கழல் இணையை ஏத்திடுவோம்.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
-- திருவாசகம்
-
திருப்பூவல்லி
-
8.13.1
இணையார்
திருவடிஎன் தலைமேல்
வைத்தலுமே
துணையான
சுற்றங்கள் அத்தனையும்
துறந்தொழிந்தேன்
அணையார்
புனல்-தில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன்
சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ.
2017-06-10
மாணிக்கவாசகர் குருபூஜை - 2017 (ஆனி மகம் - 2017-06-28)
--------
(ஷட்பதி அமைப்பில் -
மா விளம் மா விளம்
மா விளம் மா விளம்
மா விளம் மா விளம் மா விளங்காய்)
சுட்ட நீறணி சொக்கன் மதுரையில்
பிட்டை உண்டருள் பித்தன் மலரடி
பட்ட உச்சியர் பரமன் மெச்சிய பாக்கள் பாடவலார்
கட்டு வல்வினைக் கயிற றுத்திடும்
மட்டு வார்திரு வாத வூரர்சொல்
இட்ட மாய்நிதம் எண்ணி அவர்கழல் இணையை ஏத்திடுவோம்.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்.
2018-07-16
மாணிக்கவாசகர் குருபூஜை - 2018 (ஆனி மகம் - 2018-07-16 India)
----------------------------------------
வரம்பில் கருணையன் வந்தியின்பிட் டுண்டு
பிரம்படி பெற்றபெரும் பித்தன் - பரம்பரன்
சீர்பாடு வாதவூர்த் தேசிகனார் செங்கமலம்
நேர்பாதம் நெஞ்சே நினை.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2019-07-04
மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் (2019-07-06)
-------------
("கந்த பத்யம்" - அமைப்பில்)
குருவாய் நால்வர்க் கருளும்
பெருமான் கையா லெழுதிய பீடுடை நூலாம்
திருவா சகமது பாடிய
அருமணி வாசக ரிருமல ரடிகள் போற்றி.
குருவாய் நால்வர்க்கு அருளும்
பெருமான் கையால் எழுதிய பீடுடை நூலாம்
திருவாசகம்-அது பாடிய
அரு மணிவாசகர் இரு மலரடிகள் போற்றி.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2018-07-16
--
திருச்சிற்றம்பலம்
...
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/santhavasantham.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNi%3D1Gm5KwXq5UOgrQspX59i1tDz0YJjc%3DsnL-3-omwkg%40mail.gmail.com.
2019-07-05
மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் (2019-07-06)
--------------
2) ---- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) -----
குருந்தடியில் வீற்றிருந்த குருபரன்முன் மதுரைநின்று
வருந்தமிழ்நாட் டமைச்சரென வணங்கிநின்று மறைப்பொருள்கேட்
டருந்தமிழை நாமுய்ய அளித்ததிரு வாதவூர்ப்
பெருந்தகையார் மலரனைய திருந்துகழல் இணைபோற்றி.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2019-07-04
மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் (2019-07-06)
-------------
("கந்த பத்யம்" - அமைப்பில்)
குருவாய் நால்வர்க் கருளும்
பெருமான் கையா லெழுதிய பீடுடை நூலாம்
திருவா சகமது பாடிய
அருமணி வாசக ரிருமல ரடிகள் போற்றி.
குருவாய் நால்வர்க்கு அருளும்
பெருமான் கையால் எழுதிய பீடுடை நூலாம்
திருவாசகம்-அது பாடிய
அரு மணிவாசகர் இரு மலரடிகள் போற்றி.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
--
2020-06-22
மாணிக்கவாசகர் குருபூஜை - 2020 (ஆனி மகம் - 2020-06-25 USA / 2020-06-26 India)
-------------------------
1) --- (சந்தக் கலிவிருத்தம் - “தனனா தனனா தனனா தனனா" என்ற சந்தம்) ---
கடைபாற் கடலின் விடமுண் மிடறன்
சடையிற் புனலன் தனையே குருவா
அடையும் புகழார் அருள்வா சகம்நற்
படைநம் பழவல் வினைபாற் றிடுமே.
வி. சுப்பிரமணியன்
2020-06-22
மாணிக்கவாசகர் குருபூஜை - 2020 (ஆனி மகம் - 2020-06-25 USA / 2020-06-26 India)
-------------------------
2) --- (சந்த வஞ்சித்துறை - “தனாதனா தனாதனா" என்ற சந்தம்) ---
பெருந்துறைக் குருந்தடி
இருந்தரன் புரிந்தருள்
அருந்தவர் மொழிந்தன
மருந்துயிர்க் கருந்துமே.
வி. சுப்பிரமணியன்
2020-06-22
மாணிக்கவாசகர் குருபூஜை - 2020 (ஆனி மகம் - 2020-06-25 USA / 2020-06-26 India)
-------------------------
1) --- (சந்தக் கலிவிருத்தம் - “தனனா தனனா தனனா தனனா" என்ற சந்தம்) ---
கடைபாற் கடலின் விடமுண் மிடறன்
சடையிற் புனலன் தனையே குருவா
அடையும் புகழார் அருள்வா சகம்நற்
படைநம் பழவல் வினைபாற் றிடுமே.
வி. சுப்பிரமணியன்
2020-06-22
மாணிக்கவாசகர் குருபூஜை - 2020 (ஆனி மகம் - 2020-06-25 USA / 2020-06-26 India)
-------------------------
1) --- (சந்தக் கலிவிருத்தம் - “தனனா தனனா தனனா தனனா" என்ற சந்தம்) ---
கடைபாற் கடலின் விடமுண் மிடறன்
சடையிற் புனலன் தனையே குருவா
அடையும் புகழார் அருள்வா சகம்நற்
படைநம் பழவல் வினைபாற் றிடுமே.
வி. சுப்பிரமணியன்
2021-07-02
மாணிக்கவாசகர் குருபூஜை - 2021 (ஆனி மகம் - 2021-07-13)
------------------------
1) --- சந்தக் கலிவிருத்தம் - "தானன தனதானா தானன தனதானா" ----
(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடிவுடை மழுவேந்தி மதகரி யுரிபோர்த்துப்")
கூடலில் நரியெல்லாம் குதிரைகள் எனநல்கும்
ஆடலை மகிழ்வானை ஆரணப் பொருளானை
தோடணி பெருமானைத் துதிமணி மொழிபாடி
வீடடை திருவாத வூரர தடிபோற்றி.
வி. சுப்பிரமணியன்
2021-07-02
மாணிக்கவாசகர் குருபூஜை - 2021 (ஆனி மகம் - 2021-07-13)
------------------------
2) --- சந்தக் கலிவிருத்தம் - "தானாதன தானாதன தானாதன தானா") ----
(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா")
கருமாலொடு மலரானிவர் காணற்கரி தானான்
தருநீழலில் அவனேயொரு குருவாயடை சீரார்
திருவாசகம் உரைசெய்தவர் சிவனும்படி எழுத
வருநோயறு மணிவாசகர் மலராரடி போற்றி.
வி. சுப்பிரமணியன்
2021-07-02
மாணிக்கவாசகர் குருபூஜை - 2021 (ஆனி மகம் - 2021-07-13)
------------------------
2) --- சந்தக் கலிவிருத்தம் - "தானாதன தானாதன தானாதன தானா") ----
(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா")
கருமாலொடு மலரானிவர் காணற்கரி தானான்
தருநீழலில் அவனேயொரு குருவாயடை சீரார்
திருவாசகம் உரைசெய்தவர் சிவனும்படி எழுத
வருநோயறு மணிவாசகர் மலராரடி போற்றி.
வி. சுப்பிரமணியன்
On Sat, Jul 10, 2021 at 10:26 AM Siva Siva <naya...@gmail.com> wrote:2021-07-02
மாணிக்கவாசகர் குருபூஜை - 2021 (ஆனி மகம் - 2021-07-13)
------------------------
1) --- சந்தக் கலிவிருத்தம் - "தானன தனதானா தானன தனதானா" ----
(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடிவுடை மழுவேந்தி மதகரி யுரிபோர்த்துப்")
கூடலில் நரியெல்லாம் குதிரைகள் எனநல்கும்
ஆடலை மகிழ்வானை ஆரணப் பொருளானை
தோடணி பெருமானைத் துதிமணி மொழிபாடி
வீடடை திருவாத வூரர தடிபோற்றி.
வி. சுப்பிரமணியன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPCMMZMZn_PSrELv1-zO9S7BCSt5ZT-ko5eyvaAO1n35A%40mail.gmail.com.
2021-07-02
மாணிக்கவாசகர் குருபூஜை - 2021 (ஆனி மகம் - 2021-07-13)
------------------------
On Sat, Jul 10, 2021 at 10:26 AM Siva Siva <naya...@gmail.com> wrote:2021-07-02
மாணிக்கவாசகர் குருபூஜை - 2021 (ஆனி மகம் - 2021-07-13)
------------------------
1) --- சந்தக் கலிவிருத்தம் - "தானன தனதானா தானன தனதானா" ----
(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடிவுடை மழுவேந்தி மதகரி யுரிபோர்த்துப்")
கூடலில் நரியெல்லாம் குதிரைகள் எனநல்கும்
ஆடலை மகிழ்வானை ஆரணப் பொருளானை
தோடணி பெருமானைத் துதிமணி மொழிபாடி
வீடடை திருவாத வூரர தடிபோற்றி.
வி. சுப்பிரமணியன்
--
மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய
அக்கினொ டரவசைத் தீரே
அக்கினொ டரவசைத் தீரும தடியிணை
தக்கவ ருறுவது தவமே.
"திருவாதவூரரது அடிபோற்றி" என்பது ஓசையிலோ இலக்கணத்திலோ சரியாக இல்லையா?3.94.5
மாணிக்கவாசகர் குருபூஜை - (ஆனி மகம் - 2022-07-03 USA / India )
----------------
(வண்ணவிருத்தம்;
தனதனதனத் .. தனதான )
(பகலிரவினில் - திருப்புகழ் - சென்னிமலை)
தருநிழலினிற் .. குருவாகிச்
.. சடையிடைநதிப் .. பெருமானே
வருமொருசிறப் .. புடைநேயர்
.. மணிமொழியுரைத் .. துலகோர்கள்
இருவினையறுத் .. திடுமாறே
.. இனிதருளுநற் .. றவர்தூய
திருவடிகளைப் .. பணிவோமே
.. சிவனுலகினைப் .. பெறுவோமே.
V. Subramanian
மாணிக்கவாசகர் குருபூஜை - (ஆனி மகம் - 2023-06-23 USA)
------------------------
(ருபாயி அமைப்பில்)
(சந்தக் கலிவிருத்தம் - தானா தனனா தானதனா தானதனா )
(1,2,4-ஆம் அடிகளின் ஈற்றில் இயைபு)
தீரா வினையால் சேர்வதுநாம் காண்மிடியே
ஓராய் மனமே உம்பரிலேற் றும்படியே
வாரார் முலையாள் கோன்குருவாய் வந்தருளும்
சீரார் மணியார் வாசகரின் சேவடியே.
தீரா வினையால் சேர்வது நாம் காண்-மிடியே - தீராத வினையால் வந்தடைவது நாம் அனுபவிக்கும் துன்பம்/வறுமை; (மிடி - தரித்திரம்; துன்பம்);
ஓராய் மனமே உம்பரில் ஏற்றும்படியே - மனமே எண்ணுவாயாக, நம்மைச் சிவலோகத்திற்கு ஏற்றுமாறு / ஏற்றும் படியை; (ஓர்தல் - எண்ணுதல்); (உம்பர் - வானம்); (ஏற்றும்படி - 1. ஏற்றுமாறு; 2. ஏற்றும் படி - ஏற்றுகின்ற படியை);
வார் ஆர் முலையாள் கோன் குருவாய் வந்தருளும் - கச்சு அணிந்த முலையையுடைய உமைக்குக் கணவன் குருவாகி வந்து அருள்செய்த;
சீர் ஆர் மணி ஆர் வாசகரின் சேவடியே - பெருமை மிக்க, மணி போன்ற வாசகங்களைப் பாடியருளிய, மாணிக்கவாசகரது சிவந்த திருவடியை;
V. Subramanian
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMKkTMeDrZZMPP2-DSX58XOsbq2_FXYihtBtwP%2BTOSgYw%40mail.gmail.com.
2024-05-04
மாணிக்கவாசகர் துதி - ஆனி மகம் - 2024 (July 9)
----------------
(வஞ்சித்துறை - தனனா தனதான - சந்தம்)
1)
பணியே ஒருதாரா
அணிவான் குருவாய்ச்சேர்
மணிவா சகர்பாடல்
பிணிதீர் அமுதாமே.
பணியே ஒரு தாரா அணிவான் குருவாய்ச் சேர் - பாம்பையே ஒரு மாலையாக அணிந்த பெருமானே குருவாகி அடைந்த; (பணி - பாம்பு); (தார் - மாலை);
மணிவாசகர் பாடல் பிணி தீர் அமுது ஆமே - மாணிக்கவாசகரது பாடல்கள் நம் பிறவிப்பிணியைத் தீர்க்கும் அமுதம் ஆகும்;
2024-08-13
2)
குருவாய் அரனாரே
வருமோர் சிவஞானி
அருள்வா சகமோதில்
மருவா வினைதானே.
குருவாகிச் சிவபெருமானே வரப்பெற்ற ஒப்பற்ற சிவஞானியான மாணிக்கவாசகர் பாடியருளிய திருவாசகத்தை ஓதினால் வினையெல்லாம் நீங்கும்.
V. Subramanian
வழியில் குருவாகி
மொழியில் பொருளாகும்
எழிலன் திறமோதில்
பழியும் ஒழிவானே!
புலவர் இராமமூர்த்தி
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMPT3MixYQDuCL9YB8YVbG%2BQ9-a_gb%2BG6XxLxYWjG3R3w%40mail.gmail.com.
2025-04-18
மாணிக்க வாசகர் துதி - மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2025
----------------
(ஈரடிமேல் வைப்பு ;
தானான தானான தானா - தான
.. தானான தானான தானான தானா - என்ற சந்தம்)
(அப்பய்ய தீக்ஷிதரின் மார்கபந்து ஸ்தோத்திர அமைப்பில்)
(mārgabandhu stotram - https://sanskritdocuments.org/doc_shiva/maargabandhu.html?lang=iast
A clip on YouTube: https://www.youtube.com/watch?v=1n1BxKU2cJg )
முற்குறிப்பு: இப்பாடலில், ஓர் அடியில் தானா என்ற சந்தம் அமையும் இடங்களில் நிறுத்திப் பாடப்பெறும். ஒவ்வோர் அடியிலும் அந்த இடங்களிடையே இயைபுத்தொடை அமைந்த பாடல்கள்.
ஆடும்பி ரான்தன்னை ஏரார் - சொற்கள்
.. ஆர்வாச கம்கொண்டு நைந்தேத்து சீரார்
பாடும்தொ ழும்பர்க்கு வானம் - தந்து
.. பற்றோடு பாவங்கள் தீர்க்கின்ற கானம்
அல்நெஞ்சை விட்டோடு மன்றே - தாழும்
.. அவ்வாத வூரர்க்கு நம்சென்னி இன்றே.
ஆடும் பிரான்தன்னை ஏர் ஆர் சொற்கள் ஆர் வாசகம்கொண்டு நைந்து ஏத்து சீரார் - கூத்தப்பெருமானை அழகும் நன்மையும் மிகுந்த சொற்கள் நிறைந்த திருவாசகத்தால் உருகித் துதித்த புகழினர்;
பாடும் தொழும்பர்க்கு வானம் தந்து பற்றோடு பாவங்கள் தீர்க்கின்ற கானம் - பாடுகின்ற தொண்டர்களுக்குச் சிவலோகத்தை அளித்து, அவர்களது பற்றுகளையும் பாவங்களையும் தீர்க்கின்ற பாட்டு;
அல் நெஞ்சை விட்டு ஓடுமன்றே - மனத்தில் இருந்த இருள் நீங்கும்;
தாழும் அவ்-வாதவூரர்க்கு நம் சென்னி இன்றே - (அத்தகைய திருவாசகத்தை நமக்கு அளித்த) அந்தத் திருவாதவூர் அடிகளுக்கு நம் தலை இன்று வணங்கும்;
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPKYpxi183diBHbvzbX%2Bhr%2BUyrsTOrF7WYytZaDKSNt4A%40mail.gmail.com.
On Jun 29, 2025, at 00:13, Siva Siva <naya...@gmail.com> wrote:
On Jun 29, 2025, at 08:47, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
மிக அருமை.
2026-05-10 (ஆனி மகம் - 19-Jun-2026)
மாணிக்க வாசகர் துதி - மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2026
-------------
(வண்ணவிருத்தம்;
தானத்த தானன .. தனதான)
மோனத்தில் நான்மறை .. விரியாலன்
.. மூவர்க்கு(ம்) நாதனொர் .. குருவாகி
ஞானத்தை ஓதிட .. வரவாரா
.. நாருற்று வார்கழல் .. அடைநேயர்
கானத்தில் ஆடிய .. பெருமானைக்
.. காதற்சொல் மாலைகள் .. அவைபாடி
வானத்து வாழ்வினை .. அடைதூயர்
.. மாணிக்க வாசகர் .. அடிவாழ்க.
பதம் பிரித்து:
மோனத்தில் நான்மறை விரி-ஆலன்,
.. மூவர்க்கு(ம்) நாதன், ஒர் குரு ஆகி
ஞானத்தை ஓதிட வர, ஆரா
.. நார்-உற்று வார்கழல் அடை-நேயர்;
கானத்தில் ஆடிய பெருமானைக்
.. காதற்-சொல்-மாலைகள் அவை பாடி,
வானத்து வாழ்வினை அடை-தூயர்;
.. மாணிக்க வாசகர் அடி வாழ்க.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
மோனத்தில் நான்மறை விரி-ஆலன் - (மோனம் - மௌனம்); (விரித்தல் - உபதேசித்தல்); (ஆலன் - கல்லாலமரத்தின்கீழ் இருப்பவன்);
மூவர்க்கு(ம்) நாதன் -
ஒர் குரு ஆகி ஞானத்தை ஓதிட வர, ஆரா நார்-உற்று வார்கழல் அடை-நேயர் - (நார் - அன்பு; ஆரா நார் - போதும் என்று அமையாத அன்பு); (வார்தல் - நீள்தல்); (அடைதல் - சரண்புகுதல்);
கானத்தில் ஆடிய பெருமானைக் காதற்-சொல்-மாலைகள் அவை பாடி வானத்து வாழ்வினை அடை-தூயர் - (கானம் - காடு - சுடுகாடு); (வானம் - இங்கே, சிவலோகம்);
மாணிக்க வாசகர் அடி வாழ்க -
V. Subramanian