கொடுத்த கருத்திற்கு விடுத்த வெண்பா- 6

1 view
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Feb 13, 2026, 5:41:09 PM (9 hours ago) Feb 13
to santhavasantham

கொடுத்த கருத்திற்கு விடுத்த 

வெண்பா- 6


நண்பரின் கருத்தும் வேண்டுகோளும்:


கொடுத்த கருத்து:


என்னில் இருப்பவன் உன்னில் இருக்கையில் (அத்வைத வேதாந்தத்தின் சாரம்), யார்நல்லோன்,யார் தீயோன்யார் குற்றம்யார்செய்தார் யாரறிவார்யாமொன்றும் அறியோம்பராபரமே." இது எந்தன் கூற்று.


(கடவுளின் இயக்கத்தில் குற்றம் புரிந்தவனும்குற்றமற்றவனும்பகைவனும்,நண்பனும்பங்காளிகள் ஆகி விடுகின்றோம்)


இரண்டாவது


மெய் என்றால் உண்மை என்றும்,உடல் என்றும் கூறுவர்அவ்வாறு இருக்கையில்,


"காயமே இது பொய்யடா,வெறும் காற்றடைத்த பையடாஎன்று பாடிச் சென்றிருக்கிறார் ஒருஞானி


இங்கே மெய்பொய்யாகிறது அல்லது இரண்டிற்கும் வித்தியாசமின்றி போகிறதுஆகவேமெய்யும்பொய்யும் ஒன்றே என்று எடுத்துக்  கொள்ளலாமோஇது மனிதன் ஏற்படுத்திக்கொண்ட பாகுபாடு or concept என்பது என் தாழ்மையான கருத்து.


ஒன்று வேதாந்தம்இன்னொன்று தத்துவம்இது பற்றி

பஃறொடை வெண்பா செய்தால் நன்றாக

 இருக்கும்.


விடுத்த வெண்பா:


பலவிகற்பப் பஃறொடை வெண்பா


ஒன்றாகும் மெய்ப்பொருள் உண்மை 

உணருங்கால்

புன்மனத்தார் நன்மனத்தார் என்றாமோ -

ஒன்றாம்

அவனமைத்த அண்டத்தில் யாவரும் 

என்னில் 

தவறாமோ., மெய்யாம் தகைமை  -

பவந்தன்னில்

காயமும்  காற்றடைத்த பொய்ப்பையாய்க் கண்டக்கால்

மாயுலகில் பொய்ம்மெயெனும் மாற்றமிலை - ஏய

உணர்த்திட ஈசன் உதவிடமுன் தோன்றக்

கணநேரத்(துஉள்ளில் களிப்பு.


அன்பன்

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

14/02/2026

இமயவரம்பன்

unread,
Feb 13, 2026, 5:54:54 PM (9 hours ago) Feb 13
to santhav...@googlegroups.com, santhavasantham
மிக அருமையான கருத்தை விரித்துரைத்த அற்புதப் பாடல்!

“கணநேரத்து உள்ளுதல்” - திருமூலரின் “மாத்திரைப் போது மறித்து உள்ளே நோக்கல்” நினைவுக்கு வருகிறது.

“என்னில் இருப்பவன் உன்னில் இருக்கையில் (அத்வைத வேதாந்தத்தின் சாரம்)”

இந்த மிகப்பெரிய உண்மையை வெறும் வேதாந்தமாகக் கருதும்வரையில் அது வேதாந்தக் கருத்தாக மட்டுமே நமக்குத் தோன்றும். ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல் நம் உள்ளுணர்வின் உள்ளே உணர்ந்தால் தான் உலகில் போரும் பூசலும் நீங்கும் என்று நினைக்கிறேன்.

“The realisation of it, the feeling of it, the feeling in your guts if I may use that word, is totally different from mere verbal acceptance of that” - J Krishnamurti

Ram Ramakrishnan

unread,
Feb 13, 2026, 7:31:04 PM (7 hours ago) Feb 13
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன்.

உங்களது இலக்கிய அறிவு வியக்க வைக்கிறது.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

இமயவரம்பன்

unread,
Feb 13, 2026, 9:05:58 PM (5 hours ago) Feb 13
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்!
Reply all
Reply to author
Forward
0 new messages