தனிக்கவிதைகள் ( புதிது)

138 views
Skip to first unread message

Lalitha & Suryanarayanan

unread,
Nov 30, 2015, 12:29:05 AM11/30/15
to santhav...@googlegroups.com
தினமணி கவிதைமணி 30-11-2015 மின்னிதழில் வெளிவந்த கவிதை:

தனிக்கவிதை 1


பேயெனப் பெய்த மழை 

ஐப்பசியில் மழைபொழிந்தால் - இங்கு 
அத்தனையும் தழைக்குமென்பர்!
இப்படி நீ பொழிந்தபடி - இன்று 
எம்நாட்டை அழிப்பதுமேன் ?
எப்பசியோ தீரவென - நீ 
இவ்வாட்டம் போடுகிறாய்?
எப்பாவம் செய்தமென -எமை 
இன்றழிக்க ஆடுகிறாய்?

மன்னவரை ஒழித்தவர்கள் - தாமே 
மந்திரியாய் ஆனவர்கள் 
பொன்வயலில் புரளுகிறார் - பெரும் 
போதையிலே உருளுகிறார்! 
தன்னரிய வாக்களித்தோர் - இன்று 
தத்தளித்துத் தவித்திடவே 
இன்னலெனும் கடற்படுதல் - அது 
இன்றுனக்கும் உடன்பாடோ!

மாளிகைகள் கட்டியின்று - அதில் 
மந்திரிமார்  வாழுகிறார்!
தூளிகட்டும் இடமுமின்றி - வெறும் 
தொங்குமரக் கிளையினிலே 
ஆளவந்த குழந்தைகளை - அங்கே 
அன்புடனே தூங்கவிட்டோம்!
நீள்மரங்கள் நீமுறித்தாய்! - இனி 
நிழலேதும் எமக்கில்லை!

வானமே கூரையென - நாங்கள் 
வாழ்வாங்கு வாழ்ந்துவந்தோம்!
மானமே பெரிதென்று - இங்கு 
மண்தரையில் கிடந்திருந்தோம்!
ஈனமிகு அரசியலால் - பெரும் 
இன்பத்தில் மிதப்பவர்கள் 
ஊனமுடை உள்ளத்தோர் - அவர் 
உயிரை நீ பறிக்காயோ!

கண்ணகியாம் பெண்ணொருத்தி - தன் 
கந்தகமா முலையெறிந்து 
வண்ணமிகு மதுரையினை - ஓர் 
வளர்நெருப்பில் எரியவிட்டாள்!
மண்புவியில் தீயவரை 
மட்டுமவள் கரியவிட்டாள் !
கண்ணெதிரில் ஏழையரை - நீ 
கண்ணீரில் ஆழ்த்துகிறாய்! 
விண்ணதிர வீழ்மழையே - அந்த 
வீணரையே மாய்த்துவிடு!

தூயவர்கள் துடிக்கின்றார் - அவர் 
துயர்நெருப்பில் வெடிக்கின்றார்!
மாசுடையோர் வாழுகின்றார் - அவர் 
வளத்தையெலாம் நீக்கிவிடு!
காசுபண முதலைகளாம் - அந்தக் 
கயவர்களைப் போக்கிவிடு! 
பேய்மழையாய்ப் பெய்துவிடு! -அந்தப் 
பேயர்களைக் கொய்துவிடு!

சிவ. சூரியநாராயணன்.
24-11- 2015.

Kaviyogi Vedham

unread,
Nov 30, 2015, 1:02:58 AM11/30/15
to santhavasantham
மிக அட்டகாசமான கவிதை சூரி.. வாழ்க,
 யோகியார்


வாழ்க.என் அன்பர்கள் அனைவரும்..!..
.தற்போதைய என் முகவரி(ஜனவரி 11 வரை), pl. write in English.
( My present Address Till 11th jany 2016)-
 Kaviyogi vedham,
c/o N. balasubramanyam,CEO,
Flat D 022,Royale Classic Garden,
 Hennur main Road, Bangalore-560043
(Near iCIC BAnk)
 செல் cel no--09686679017
.
 PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/








--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Lalitha & Suryanarayanan

unread,
Nov 30, 2015, 3:16:37 AM11/30/15
to santhav...@googlegroups.com
கவியோகியாருக்கு நன்றி.

சிவசூரி.

M. Viswanathan

unread,
Nov 30, 2015, 7:16:31 AM11/30/15
to Santhavasantham
கவிஞர் சிவசூரி அவர்களின் கவிதை அற்புதமாக இருக்கிறது.
"கண்ணெதிரில் ஏழையரை - நீ 
கண்ணீரில் ஆழ்த்துகிறாய்! 
விண்ணதிர வீழ்மழையே - அந்த 
வீணரையே மாய்த்துவிடு!

தூயவர்கள் துடிக்கின்றார் - அவர் 
துயர்நெருப்பில் வெடிக்கின்றார்!
மாசுடையோர் வாழுகின்றார் - அவர் 
வளத்தையெலாம் நீக்கிவிடு!"

அன்பன்,
மீ.வி.

Pas Pasupathy

unread,
Nov 30, 2015, 8:05:31 AM11/30/15
to Santhavasantham
>>காசுபண முதலைகளாம் - அந்தக் 
கயவர்களைப் போக்கிவிடு! 
பேய்மழையாய்ப் பெய்துவிடு! -அந்தப் 
>>பேயர்களைக் கொய்துவிடு!

ramaNi

unread,
Nov 30, 2015, 8:10:40 AM11/30/15
to சந்தவசந்தம்
பஞ்சபூதங்கள் பாவியரை விடுத்துப் பாமரரை ஆட்டிவைப்பதில், இந்த ஐப்பசி அடைமழையின் பங்கைச் சாடியது அற்புதம்! ஏற்கனவே பணமழை, பதவிமழை, பாவமழை, போதை மழையில் மூழ்கித் திளைப்பவர்க்கு முன் நான் எளியன் என்று வருணனும் ஒதுங்கிவிட்டானோ?

ரமணி

Lalitha & Suryanarayanan

unread,
Nov 30, 2015, 10:08:15 AM11/30/15
to santhav...@googlegroups.com
கருத்துரைத்தவர்களுக்கு என் நன்றி.
சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Dec 8, 2015, 2:53:57 AM12/8/15
to santhav...@googlegroups.com
தனிக்கவிதை 2

தினமணி கவிதைமணி மின்னிதழில் இன்று (8-12-15) வெளிவந்த கவிதை:

யாசகம்
1)
மகன்மகளைப் பெற்றளித்த தாய்தான் இன்று
   வயிறார உணவின்றி வீதி வந்து
முகம்பார்த்துக் கண்ணிரண்டால் கெஞ்சிக் கொண்டு
   முன்நீளும் கரமிரண்டும் நடுங்கி நிற்க
அகம்நிறைய ஆரிடுவார் அமுதம் என்றே
   அலைகின்றார் ஊரெங்கும் ஓய்வும் இன்றி,
சகந்தன்னில் ஓர்வயிறே எரிந்தா லுந்தான்
   சகத்தினையே எரியென்றான் தமிழன் அன்று!

2)

மயிர்நீப்பின் வாழாத மானைப் பற்றி
    வள்ளுவமும் பலபடவே பேசிப் போகும்!
வயிறிருக்கும் உயிர்க்கெல்லாம் சோற்றை ஈயும் 
    வள்ளண்மை இல்லாத நிலையைக் கண்டு 
கயிறிருக்கும் எமனொருநாள் படைத்தான் தன்னைக்
   கட்டையிலே கொண்டேகச் சாபம் ஈயும்!
பயிற்றுவித்த பத்தெல்லாம் பசியின் முன்னே
   பகலோன்முன் பனியெனவே மறைந்து போகும்!

3)

கணமெல்லாம் குடலதனைக் குடலே தின்னும்!
   கடகடெனக் கண்ணிரண்டும் கடலாய் மாறும்!
பணமென்னும் பேர்பெற்ற பொருளில் லாதோர்
   பசியாலே புழுவெனவே துடித்துப் போவர்!
குணமென்னும் குன்றேறி நிற்கும் பண்பு
   குவலயத்தை விட்டெங்கோ  ஓடிப் போக,
பிணமென்னும் நிலையதனை அடைதல் கூட
   பேறெனவே எமதுள்ளம் ஏங்கிச் சாகும்!

4)

ஆணிப்பொன் ஊசலிலே ஆடிப் பாடி 
    அமரர்போல் வாழ்ந்திருப்பர் செல்வர் கோடி!
மாணிக்கம் வைரங்கள் இடையில் கட்டி
    மணம்வீசும் மலர்போல மக்கட் செல்வம் 
காணக்கண் கூசச்செய் ஒளியின் வெள்ளம்
   காட்டுகின்ற மாமனையில் வளரும் நன்றாய்!
பூணப்பொன் பட்டாடை வண்ணம் கோடி
   பொதியமென நிறைந்திருக்கும் வீட்டில் எங்கும்!

5)

திரையிருக்கும் சித்திரம்போல் எம்தே கம்மேல்
    தினம்சதையைச் சதையேதான் தின்றி ருக்கும்!
நரையிருக்கும் முடைநாற்றப் பிசுக்கி ருக்கும்!
   நடுக்கிருக்கும் நரம்பெல்லாம்  புடைத்தி ருக்கும்! 
அரையிருக்கும் பள்ளத்தில் ஆடை என்றே
  அசைகந்தல் மானத்தை மறைத்தி ருக்கும்!
இரையிருக்கும் இடந்தேடி ஏக்கம் கொண்டே
   இழிவிலங்காய் இரந்துண்ணத் தோன்றும் தோன்றும்!

6)

ஏசுகின்ற மக்கள்நீர் எம்மைப் பார்ப்பீர்!
   இனியிழக்க எம்மிடமே ஏதும் இல்லை!
யாசகத்தை இழிவாகச் சொல்லும் கூட்டம்
   எம்மைப்போல் ஓர்நாளே இருந்தாற் போதும்!
மாசகத்தில் இல்லாமல் வாழும் நாங்கள்
   மரிக்கின்ற வழியறியா மாக்கள் என்னும் 
வாசகத்தை நெஞ்சில்நீர் வைத்துக் கொண்டு 
   வாழவொரு வழிசெய்வீர்  எமக்கெல் லாமே!


சிவ.சூரியநாராயணன்.


M. Viswanathan

unread,
Dec 8, 2015, 7:50:58 AM12/8/15
to Santhavasantham
அன்புக் கவிஞர் சிவசூரி அவர்களின் கவிதை அருமை.
அதிலும் இந்த வரிகள் சுடும்.

"யாசகத்தை இழிவாகச் சொல்லும் கூட்டம்
   எம்மைப்போல் ஓர்நாளே இருந்தாற் போதும்!"

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 8, 2015, 9:23:56 AM12/8/15
to சந்தவசந்தம்
ஒவ்வொரு வரியும் உணர்ச்சிப் பிழம்பாக அமைந்த பாடல். இரந்துண்ணல் இழிவு என்ற கருத்திற்கெதிராக, இறப்பினும் கொடியனவான பசியும் வறுமையும்  தரும் அவலநிலையைக் காட்டிச் சிந்திக்க வைக்கும் கவிதை.

அனந்த் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ramaNi

unread,
Dec 8, 2015, 10:20:42 AM12/8/15
to சந்தவசந்தம்
உணர்ச்சி ததும்பும் பாடல்!
ரமணி

Lalitha & Suryanarayanan

unread,
Dec 9, 2015, 1:29:49 AM12/9/15
to santhav...@googlegroups.com
கருத்துரைத்த அன்பர்களுக்கு நன்றி.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Dec 10, 2015, 9:38:28 AM12/10/15
to santhav...@googlegroups.com
தனிக்கவிதை 3

மேகத்துக்கோர் விண்ணப்பம் 

வெள்ளமாக ஓடுவண்ணம் வேகமாக மாமழை
   வினைப்பயன் முளைத்ததால் வீழ்ந்துநாசம் தந்ததோ
பள்ளமாக வீதியெங்கும் பாண்டியாடி மாய்க்குதோ
   பாரமான உயிரையெல்லாம் பார்த்துக்கொண்டு போகுதோ
கள்ளமான மக்களெல்லாம் கால்பதித்த நாள்முதல்
   காசுகாசு என்றுகோடி ஆசைகொண்ட பேயென
அள்ளியள்ளிச் சேர்த்துக்கொண்ட பாவமூட்டை கரைக்கவோ
   ஆறுபோல வீறுகொண்ட ஆலகாலம் ஆனதோ!

ஏரியேரி எங்களேரி எங்குகாணோம் என்குதோ
   ஏறியேறி மேடுபள்ளம் எல்லாம்தேடி மாயுதோ
பாரிகாரி ஆண்டநாட்டில் பாவவெள்ளம் சேர்ந்ததால்
  பறையடித்துக் கொண்டுபோக பாழடிக்க வந்ததோ
சீர்மிகுந்த நாட்டின்சீரைத் தேடிமீட்க வந்ததோ
  சீறுகின்ற சிங்கம்போல தெருவின்மீது வந்ததோ
தேரமர்ந்து தெய்வம்வந்து காத்துநிற்கும் நாடிதன்
   செம்மைதேடி வெம்மையோடு தீயுமிழ்ந்து போகுதோ!

நதிநடக்கும் பாதைதேடி நம்மைநீதி கேட்குதோ
   நாளும்கோளும் கூடநின்று ஞானமூட்ட வந்ததோ
மதுகுடித்துக் கெட்டழிந்த மக்கள்முன்னர் நிற்குதோ
   மடுவழித்து மனையமைத்து மாண்பிழந்த நாட்டிலே
சதிசமைத்துச் சனமழித்துத் தனிநடக்கும் அரசியல்
   தனையழிக்கச் சினமெடுத்துச் சீறிவந்த கோலமோ
நிதியழித்து நிலமழித்து நிலையிழக்கச் செய்வதோ
   நினையழைத்து வேண்டும்போதும் நெஞ்சிரங்க மறுக்குமோ!
   
கருணைகாட்டும் மேகமிங்கு கனலைக்கொட்ட லாகுமோ
   கடலெடுத்து நகரின்மீது கவிழ்த்துமூட லாகுமோ
இருளழித்து மருளழிக்க இழைத்ததெல்லாம் போதுமே
    இனிதெடுத்து முறுவலித்தும் இன்பம்சேர்க்க வேண்டுமே 
கருவழித்துக் கனவழித்துக் கடன்மறக்க லாகுமோ
   கதிரெடுத்து வழியமைத்துக் கதிகொடுக்க வேண்டுமே
திருவளித்து மகிழ்வளைத்துத் திறமளிக்க வேண்டுமே
   செயலளித்துப் பயனளித்துச் சிறப்பளிக்க வேண்டுமே!


சிவ.சூரியநாராயணன்.
(சந்தம் : ஹரியின் தேவி நித்ய நர்த்தனம் "வெள்ளமாக சொற்கள்வந்து..")

ramaNi

unread,
Dec 10, 2015, 9:57:42 AM12/10/15
to சந்தவசந்தம்
அருமையான பாடல், அழகிய சந்தம்!
ரமணி

Subbaiyar Ramasami

unread,
Dec 10, 2015, 8:59:55 PM12/10/15
to santhav...@googlegroups.com
அர்மையான பாடல்கள்.

Subbaiyar Ramasami

unread,
Dec 10, 2015, 9:00:35 PM12/10/15
to santhav...@googlegroups.com
அருமையான பாடல்கள். அழகான சொற்தேர்வு

இலந்தை

Lalitha & Suryanarayanan

unread,
Dec 11, 2015, 1:08:12 AM12/11/15
to santhav...@googlegroups.com
​நண்பர் ​ரமணிக்கும் தலைவருக்கும் நன்றி.

சிவசூரி.

2015-12-11 7:30 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
அருமையான பாடல்கள். அழகான சொற்தேர்வு

இலந்தை

Lalitha & Suryanarayanan

unread,
Dec 11, 2015, 1:10:52 AM12/11/15
to santhav...@googlegroups.com
​தனிக்கவிதை 4

விண்ணப்பம் 2 : எழுக எழுக எழுகவே!

நீர்த்தடத்தை அழித்துவிட்ட நீசர்செய்த செயலினால்
போர்த்தடத்தில் இறங்குவண்ணம் பொழிந்துநின்ற புயலதாய்
ஆர்த்தெடுத்து மோதுகின்ற ​ஆழிவெள்ளம் முழுவதும்
பேர்த்தெடுத்து வீசுகின்ற பேய்மழையே போய்விடு!

பூத்தொடுத்துப் பரமனுக்குப் போட்டுமகிழ் புண்ணியர்
பாத்தொடுத்துப் பாசமோடு பரிமளிக்கும் பாவலர்
காத்தெடுத்துக் கருணையோடு காதல்செய்யும் கண்ணியர்
சேர்த்தெடுத்துத் தீயரோடும் ஆர்த்தெரிப்ப தாகுமோ!

குண்டிருந்து குழியிருந்து குடியழிக்கும் தெருவினைக்
கண்டிருந்த கண்ணிரண்டில் கடலெழுந்து நிற்பினும்
உண்டிருந்து குடியிருந்த உயிர்வளர்த்த எங்களைக்
கொண்டிருந்து போகவோ கொண்டலாகி வந்தனை!

கலியிருக்கும் காலமென்று காத்திருக்கும் மக்களைக்
கிலிபிடிக்கும் கேடளிக்க நீசிரிக்க லாகுமோ
பலிகொடுக்கும் வேகமோடு பாரிறங்க லாகுமோ
நலமளிக்கும் வாழ்வளிக்கும் குணமறக்க லாகுமோ. 

கள்ளிருக்கும் கடைவிரித்துக் களித்திருக்கும் அரசினால்
முள்ளிருக்கும் முடியெடுத்து முகர்ந்திருக்கும் மூடரின்
வெள்ளெருக்கு முளைத்திருக்கும் விதமிருக்கும் வாழ்விலே
உள்ளிருக்கும் ஒளியழிக்க வழிவகுக்க லாகுமோ.

கொட்டிவிட்ட நீரெலாம் குட்டைபோல நிற்குதே
எட்டுகின்ற இடமெல்லாம் கிருமிகோடி தெரியுதே
எட்டநிற்கும் கதிரெடுத்தே இவையழிக்க வேண்டுமே
மொட்டுபோலும் எங்கள்வாழ்வு மீண்டும்மலர வேண்டுமே.

வீழ்த்திவிட்ட மரங்கள்போல வீழ்ந்திருக்க லாகுமோ
ஆழ்த்திவிட்ட துயர்க்கடலில் அமிழ்ந்துபோக லாகுமோ
காழ்ப்பழித்துக் கருணையோடு காலம்நாங்கள் வாழவே
தாழ்த்திருக்கும் தலைநிமிர்த்த தபனந்தோன்ற வேண்டுமே.

கல்லிருக்கும் முள்ளிருக்கும் கழிவிருக்கும் நாளிலே
சொல்லிருக்கும் துயரிருக்கும் தூய்மைகண்டு தேவனே
புல்லிருக்கும் புழுவிருக்கும் பூண்டிருக்கும் பூமியில்
நெல்லிருக்கும் வயலிருக்க நீயருள வேண்டுமே.

பணிவிருக்கும் பண்பிருக்கும் புகழிருக்கும் பூமியில்
துணிவிருக்கும் தோளிருக்கத் துயரிருக்க லாகுமோ
துணையிருக்க நீயிருக்க சோர்விருக்க லாகுமோ
பணையிருக்கும் தோளிருக்கப் படுத்திருக்க லாகுமோ.


சிவ. சூரியநாராயணன்.

11-12-2015.




Lalitha & Suryanarayanan

unread,
Dec 11, 2015, 1:55:49 AM12/11/15
to santhav...@googlegroups.com
​(தவறுதலாக விடுபட்ட பாடலைச் சேர்த்து மீண்டும் அனுப்புகிறேன். பொறுத்துக்கொள்க)

தனிக்கவிதை: 4

விண்ணப்பம் 2 : எழுக எழுக எழுகவே!

1)

நீர்த்தடத்தை அழித்துவிட்ட நீசர்செய்த செயலினால்
போர்த்தடத்தில் இறங்குவண்ணம் பொழிந்துநின்ற புயலதாய்
ஆர்த்தெடுத்து மோதுகின்ற ​ஆழிவெள்ளம் முழுவதும்
பேர்த்தெடுத்து வீசுகின்ற பேய்மழையே போய்விடு!

2)
பூத்தொடுத்துப் பரமனுக்குப் போட்டுமகிழ் புண்ணியர்
பாத்தொடுத்துப் பாசமோடு பரிமளிக்கும் பாவலர்
காத்தெடுத்துக் கருணையோடு காதல்செய்யும் கண்ணியர்
சேர்த்தெடுத்துத் தீயரோடும் ஆர்த்தெரிப்ப தாகுமோ!

3)
குண்டிருந்து குழியிருந்து குடியழிக்கும் தெருவினைக்
கண்டிருந்த கண்ணிரண்டில் கடலெழுந்து நிற்பினும்
உண்டிருந்து குடியிருந்த உயிர்வளர்த்த எங்களைக்
கொண்டிருந்து போகவோ கொண்டலாகி வந்தனை!

4)

கலியிருக்கும் காலமென்று காத்திருக்கும் மக்களைக்
கிலிபிடிக்கும் கேடளிக்க நீசிரிக்க லாகுமோ
பலிகொடுக்கும் வேகமோடு பாரிறங்க லாகுமோ
நலமளிக்கும் வாழ்வளிக்கும் குணமறக்க லாகுமோ. 

5)

கள்ளிருக்கும் கடைவிரித்துக் களித்திருக்கும் அரசினால்
முள்ளிருக்கும் முடியெடுத்து முகர்ந்திருக்கும் மூடரின்
வெள்ளெருக்கு முளைத்திருக்கும் விதமிருக்கும் வாழ்விலே
உள்ளிருக்கும் ஒளியழிக்க வழிவகுக்க லாகுமோ.

6)

கொட்டிவிட்ட நீரெலாம் குட்டைபோல நிற்குதே
எட்டுகின்ற இடமெல்லாம் கிருமிகோடி தெரியுதே
எட்டநிற்கும் கதிரெடுத்தே இவையழிக்க வேண்டுமே
மொட்டுபோலும் எங்கள்வாழ்வு மீண்டும்மலர வேண்டுமே.

7)

வீழ்த்திவிட்ட மரங்கள்போல வீழ்ந்திருக்க லாகுமோ
ஆழ்த்திவிட்ட துயர்க்கடலில் அமிழ்ந்துபோக லாகுமோ
காழ்ப்பழித்துக் கருணையோடு காலம்நாங்கள் வாழவே
தாழ்த்திருக்கும் தலைநிமிர்த்த தபனந்தோன்ற வேண்டுமே.

8)

கல்லிருக்கும் முள்ளிருக்கும் கழிவிருக்கும் நாளிலே
சொல்லிருக்கும் துயரிருக்கும் தூய்மைகண்டு தேவனே
புல்லிருக்கும் புழுவிருக்கும் பூண்டிருக்கும் பூமியில்
நெல்லிருக்கும் வயலிருக்க நீயருள வேண்டுமே.

9)

பணிவிருக்கும் பண்பிருக்கும் புகழிருக்கும் பூமியில்
துணிவிருக்கும் தோளிருக்கத் துயரிருக்க லாகுமோ
துணையிருக்க இறையிருக்கச் சோர்விருக்க லாகுமோ
பணையிருக்கும் தோளிருக்கப் படுத்திருக்க லாகுமோ.

10)

மாறுகொண்டு மதியிழந்து கதியிழக்க லாகுமோ
கூறுபோடும் கொள்கையெலாம் குப்பையென்று நீக்கிடு
வீறுகொண்டு வேகவேகம் வேலைசெய்ய வேண்டுமே
ஏறுபோல இளைஞரெல்லாம் எழுகஎழுக எழுகவே.


சிவ. சூரியநாராயணன்.

11-12-2015.




GMAIL

unread,
Dec 11, 2015, 2:57:56 AM12/11/15
to santhav...@googlegroups.com
அன்புள்ள சிவசூரி,

அற்புதமான பாடல்கள். அழகான சொற்தேர்வு. 

குழுவினர் அனைவரும் கொடுத்துவைத்தவர்கள்.

நம் நட்பு என்னைப் பரவசமாக்குகிறது. 

ஆண்டவனுக்கு அளப்பிலா நன்றி.

இப்பொழுது லண்டனில் பூர்ணிமாவுடன் இருக்கிறேன்.

அன்புடன்,
குமார்(சிங்கை)

Sent from my iPhone

Lalitha & Suryanarayanan

unread,
Dec 11, 2015, 4:16:14 AM12/11/15
to santhav...@googlegroups.com
​குமார், உங்களின் அன்புக்கு நெஞ்சார்ந்த நன்றி. 

சிவசூரி.

ramaNi

unread,
Dec 11, 2015, 5:01:58 AM12/11/15
to சந்தவசந்தம்
அன்பிருக்க அருளிருக்க ஆர்த்தெழுந்த உணர்விலே
என்புருக்கும் சொல்லிறுக்கி ஏற்றதொரு ஜதியிலே
துன்பிழைத்துத் துடிக்கவைத்துச் சூதுசெய்த மூடரைத்
தென்பிழந்து ஓடவைக்கும் சிவசூரியின் பாடலே!

--ரமணி

M. Viswanathan

unread,
Dec 11, 2015, 9:47:54 AM12/11/15
to Santhavasantham
அற்புதமான கவிதை.
"பணிவிருக்கும் பண்பிருக்கும் புகழிருக்கும் பூமியில்
துணிவிருக்கும் தோளிருக்கத் துயரிருக்க லாகுமோ
துணையிருக்க நீயிருக்க சோர்விருக்க லாகுமோ
பணையிருக்கும் தோளிருக்கப் படுத்திருக்க லாகுமோ."

ஆசுகவி சிவசூரி பின்னி எடுக்கிறார்.

Lalitha & Suryanarayanan

unread,
Dec 11, 2015, 10:03:36 AM12/11/15
to santhav...@googlegroups.com
நண்பர் ரமணிக்கு நன்றி.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Dec 11, 2015, 10:04:25 AM12/11/15
to santhav...@googlegroups.com
நண்பர் மீவியின் அன்புக்கு நன்றி.

சிவசூரி.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 11, 2015, 3:51:56 PM12/11/15
to சந்தவசந்தம்
சூரியின் பாடல் மிக அருமை.  ரமணியின் பின்னூட்டமும் அழகு.

அனந்த் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Lalitha & Suryanarayanan

unread,
Dec 11, 2015, 8:54:11 PM12/11/15
to santhav...@googlegroups.com
பேராசானுக்கு நன்றி.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Dec 14, 2015, 1:10:01 AM12/14/15
to santhav...@googlegroups.com
தனிக்கவிதை 5

தினமணி கவிதைமணி மின்னிதழில் இன்று ( 14 12 2015 வெளிவந்துள்ள கவிதை :

​மனிதநேயம்


கூவமும் இருகரை புரளவும் - உடன்
     குடிபடை கண்டதை மருளவும்
பாவியர் மனவிருள் அகலவும் - உயர்
     பாசக் கதவம் திறந்ததே!

தூவிடு மாமழை பொழியவும் - பல
     தோணிகள் தெருவினில் நுழையவும்
மேவிய ஊழியில் தழையவும் - உடன்
     நேயமும் நெஞ்சில் பிறந்ததே!

மாளிகைக் கதவினைத் திறந்தனர் - அவர்
      மக்களை வாவென அழைத்தனர்!
தூளியாய்த் தோளினைத் தந்தனர்! - பெரும்
      தூணெனத் துணையாய் வந்தனர்!


திக்கைக் கும்பிடு வோரும் - பல
     தெய்வம் தொழுதிடு வோரும்
ஒக்கக் கூடினர் ஓரிடம் - அங்கு
      ஓங்கி வளர்ந்தது மானிடம்!

வீட்டில் சமைத்திடும் உணவினை - நல்
     விருந்தென அனைவரும் உண்டிட
ஏட்டில் வந்திடும் சமரசம் - விழி
     எதிரினில் முந்திடும் பரவசம்!

எத்தனை எத்தனை வேதனை! - அவை
   யாவும் அரசியல் சாதனை!
எத்தனை எத்தனை சோதனை - அவை
   இயம்பும் பற்பல போதனை!

சாக்கடை ஆகிய அரசியல்-  முகம்
     சட்டெனக் கிழித்தது மாமழை!
பாக்கடை பெருகிய நாடிதன் - பெரும்
     பாவமும் துடைத்தது தூமழை!


ஈசனின் கோவிலை அண்டி - அங்கே
    இருந்திடும் பற்பல மதத்தோர்
நேசமாய் நிற்கும் காட்சி - அது
    நேர்நிகர் இல்லா மாட்சி!

பள்ளி வாசலில் துருக்கர் - உடன்
    பார்ப்பனர் கிறித்தவர் இருந்தார்!
அள்ளித் தழுவினர் ஒன்றாய் - அவர்
    அன்பினில் முழுகினர் நன்றாய்!

நேத்திரம் திறந்தத னாலே - மனம்
     நிர்மலம் நிறைந்தத னாலே
சாத்திரம் கோத்திரம் இல்லை - ஒரு
     சட்டமும் திட்டமும் இல்லை!

ஆத்திர அவசரம் இல்லை - வெறும் 
     ஆடம் பரங்கள் இல்லை!
தோத்திரம் தொழுகை உண்டு - பெரும்
     துணையெனத் தெய்வமும் உண்டு!

அன்பது பூத்தது கண்ணில் - அது
     ஆருயிர் ​காத்தது மண்ணில்!
மன்பதை ஈர்த்தது நேசம் - என
      மணமுடன் ஆர்த்தது தேசம்!

ஆயிரம் ஆயிரம் இடங்கள் - தனில்
     ஆக்கினர் உணவினை மக்கள்!
பாயிரம் பாடிட வேண்டும் - இந்தப் 
     பாரதைப் புகழ்ந்திட வேண்டும்!


போக்கிடம் இன்றித் தவித்தோர் - இடம்
      போந்துப் புயலென நுழைந்து
தூக்கித் தோளினில் சுமந்து - மிகத்
     துணிவுடன் காத்தனர் மக்கள்!

நேயம் நிறைந்தது கண்டு - காளி
      நெஞ்சம் நிறைந்திவண் நின்றாள்!
மாயம் புரிந்தது மழையென - இனி
      மங்கலம் ஆகுக என்றாள்!

சிவ.சூரியநாராயணன், சென்னை.
09-12-2015

     

2015-12-12 7:24 GMT+05:30 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
பேராசானுக்கு நன்றி.

சிவசூரி.

Pas Pasupathy

unread,
Dec 14, 2015, 8:13:20 AM12/14/15
to Santhavasantham
வெள்ளப் பெருக்குக் கவிதை! மிக மிகச் சிறப்பு! 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Swaminathan Sankaran

unread,
Dec 14, 2015, 8:16:22 AM12/14/15
to santhav...@googlegroups.com
மிக மிக அருமையான கவிதை. கருத்துச் செறிவும் சந்த வெள்ளமும் சிறப்பாகக் கூடி இருக்கின்றன.
சங்கரன் 

Kaviyogi Vedham

unread,
Dec 14, 2015, 8:20:06 AM12/14/15
to santhavasantham
ஆம்.. 
நீராய்த் தெறித்தது அம்மழை-எனில்
..நிலவாய்த் தும்முது உம்மழை!
வேராய்த் துளிர்க்குதே  எம்மனம்-சூரி!
..விம்மிதம் விம்மிதம் எங்கணும்!
.
 வாழ்க சூரியார்,
 யோகியார் 







2015-12-14 18:43 GMT+05:30 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:
வெள்ளப் பெருக்குக் கவிதை! மிக மிகச் சிறப்பு! 
2015-12-14 1:10 GMT-05:00 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
தனிக்கவிதை 5

தினமணி கவிதைமணி மின்னிதழில் இன்று ( 14 12 2015 வெளிவந்துள்ள கவிதை :

​மனிதநேயம்


கூவமும் இருகரை புரளவும் - உடன்
     குடிபடை கண்டதை மருளவும்
பாவியர் மனவிருள் அகலவும் - உயர்
     பாசக் கதவம் திறந்ததே!
இல்லை - வெறும் 
     

போலம் ஆகுக என்றாள்!

சிவ.சூரியநாராயணன், சென்னை.
09-12-2015

     

2015-12-12 7:24 GMT+05:30 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
பேராசானுக்கு நன்றி.

சிவசூரி.


தனிக்கவிதை: 4


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Siva Siva

unread,
Dec 14, 2015, 9:35:07 AM12/14/15
to santhavasantham
Nice.

What are the rules for the meter used?



2015-12-14 1:10 GMT-05:00 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
தனிக்கவிதை 5

தினமணி கவிதைமணி மின்னிதழில் இன்று ( 14 12 2015 வெளிவந்துள்ள கவிதை :

​மனிதநேயம்


கூவமும் இருகரை புரளவும் - உடன்
     குடிபடை கண்டதை மருளவும்
பாவியர் மனவிருள் அகலவும் - உயர்
     பாசக் கதவம் திறந்ததே!

தூவிடு மாமழை பொழியவும் - பல
     தோணிகள் தெருவினில் நுழையவும்
மேவிய ஊழியில் தழையவும் - உடன்
     நேயமும் நெஞ்சில் பிறந்ததே!

மாளிகைக் கதவினைத் திறந்தனர் - அவர்
      மக்களை வாவென அழைத்தனர்!
தூளியாய்த் தோளினைத் தந்தனர்! - பெரும்
      தூணெனத் துணையாய் வந்தனர்!

--> / மக்களை வாவென அழைத்தனர்/ 
வா - ஒருமையோ?
வாருமென் றழைத்தனர்?



திக்கைக் கும்பிடு வோரும் - பல
     தெய்வம் தொழுதிடு வோரும்
ஒக்கக் கூடினர் ஓரிடம் - அங்கு
      ஓங்கி வளர்ந்தது மானிடம்!

--> /பல  தெய்வம் தொழுதிடு வோரும்/ ?
பல  திருவுரு வாழ்த்திடு வோரும் ?


11.8 - சேரமான் பெருமாள் நாயனார் அருளிய திருக்கயிலாய ஞானஉலா
....
.....
எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும்.
தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்குக் காண்பரிய எம்பெருமான் ஆனாத
....
....


--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 14, 2015, 3:06:22 PM12/14/15
to சந்தவசந்தம்
மாமழை வெளிப்படுத்திய மனித நேயத்தைப் பாமழை அழகாக விரித்துக் காட்டுகிறது. 

அனந்த்  
ஈற்றில் 'புரிந்தது  மழையென' என்ற இடத்தில் ஓசை தட்டுவது போலத் தெரிகிறது. 
மாயம் புரிந்த மழையே - இனி மங்கலம் ஆகிடும் என்றாள்' என்பது போல மாற்றலாம். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Vis Gop

unread,
Dec 15, 2015, 12:28:10 AM12/15/15
to santhav...@googlegroups.com

அற்புதம், சிவசூரி!
மனித நேயம் வெளிவந்ததற்கான காரணத்தை இந்த வரிகள் கூறுகின்றன! எளிமையாக இருப்பினும் என் நெஞ்சில் கிளர்ச்சி ஊட்டும் வரிகள் இவை. 'நேத்திரம் திறப்பது' அரிய நிகழ்வு. யோகாப்பியாசத்தாலும் நிறைவேறாதது  இந்த நிகழ்வு. மழை வெள்ளத்தால் வந்த அவலம், அனைவருடைய ஆணவத்தையும் சிறிது நேரம் அகற்றி, அவர்களின் கண் திரைகளை உடைத்தது போலும்!
நேத்திரம் திறந்தத னாலே - மனம்
     நிர்மலம் நிறைந்தத னாலே
சாத்திரம் கோத்திரம் இல்லை - ஒரு
     சட்டமும் திட்டமும் இல்லை!

உட்கண் திறந்திடில் உண்மை தெரிந்திடும்
எட்டற் கரிய இறை!
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Lalitha & Suryanarayanan

unread,
Dec 15, 2015, 1:45:42 AM12/15/15
to santhav...@googlegroups.com
​கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி. தலைவர் இக்கவிதையின் அமைப்பை மீண்டும் சரிபார்க்கச் சொன்னார். சிவசிவாவும் யாப்பைப் பற்றிக் கேட்டிருந்தார். எனவே பல மாற்றங்களைச் செய்ய நேரிட்டது. வெள்ளத்தில் விளைந்த மனித நேயத்தை மீண்டும் இடுகிறேன்.

நன்றி.

சிவசூரி.

மனிதநேயம் ( மாற்றப்பட்டது)


கூவமும் இருகரை புரளவும் - உடன்
     குடிபடை கண்டதை மருளவும்
பாவியர் மனவிருள் அகலவும் - உயர்
      பாசநெ டுங்கடை திறந்ததே!
      

தூவிடு மாமழை பொழியவும் - பல
     தோணிகள் தெருவினில் நுழையவும்
மேவிய ஊழியில் தழையவும் - உடன்
     நேயமும்  நெஞ்சினில் பிறந்ததே!

மாளிகைக் கதவினைத் திறந்தனர் - அவர்
      மக்களை  வந்திட அழைத்தனர்!
தூளியாய்த் தோளினைத் தந்தனர்! - பெரும்
      தூணெனத் துணையென வந்தனர்!


திக்கைக் கும்பிடு வோரும் - பல
     தெய்வம் தொழுதிடு வோரும்
ஒக்கக் கூடினர் ஓரிடம் - அங்கு
      ஓங்கி வளர்ந்தது மானிடம்!

வீட்டினில் சமைத்திடும் உணவினை - நல்
     விருந்தென அனைவரும் உண்டிட
ஏட்டினில் வந்திடும் சமரசம் - விழி
     எதிரினில் முந்திடும் பரவசம்!

எத்தனை எத்தனை வேதனை! - அவை
   யாவும் அரசியல் சாதனை!
எத்தனை எத்தனை சோதனை - அவை
   இயம்பும் பற்பல போதனை!

சாக்கடை ஆகிய அரசியல்-  முகம்
     சட்டெனக் கிழித்தது மாமழை!
பாக்கடை பெருகிய நாடிதன் - பெரும்
     பாவமும் துடைத்தது தூமழை!


ஈசனின் கோவிலை நாடி  - அங்கே
    இருந்திடும் பலமதம் சார்ந்தோர்
நேசமாய் நிற்கும் காட்சி - அது
    நேர்நிகர் இல்லா மாட்சி!

பள்ளி வாசலில் துருக்கர் - உடன்
    பார்ப்பனர் கிறித்தவர் இருந்தார்!
அள்ளித் தழுவினர் ஒன்றாய் - அவர்
    அன்பினில் முழுகினர் நன்றாய்!

நேத்திரம் திறந்தத னாலே - மனம்
     நிர்மலம் நிறைந்தத னாலே
சாத்திரம் கோத்திரம் இல்லை - ஒரு
     சட்டமும் திட்டமும் இல்லை!

ஆத்திர அவசரம் இல்லை - வெறும் 
    ஆடம்ப ரங்களும் இல்லை!
தோத்திரம் தொழுகைகள் உண்டு - பெரும்
     துணையெனத் தெய்வமும் உண்டு!

அன்பது பூத்தது கண்ணில் - அது
     ஆருயிர் ​காத்தது மண்ணில்!
மன்பதை ஈர்த்தது நேசம் - என
      மணமுடன் ஆர்த்தது தேசம்!

ஆயிரம் ஆயிரம் இடங்கள் - தனில்
     ஆக்கினர் உணவினை மக்கள்!
பாயிரம் பாடிட வேண்டும் - இந்தப் 
     பாரதைப் புகழ்ந்திட வேண்டும்!


போக்கிடம் இலையெனத் தவித்தோர் - இடம்
    போந்தொரு புயலென நுழைந்து
தூக்கிடும் நெஞ்சுடை யாளார் - மிகத்
     துணிவுடன் காத்தனர் மக்கள்!
      

நேயம் நிறைந்தது கண்டு - காளி
      நெஞ்சம் நிறைந்திவண் நின்றாள்!
மாயம் செய்தநல் மழையே - இனி
      மங்கலம் ஆகிடு  மென்றாள்!

சிவ.சூரியநாராயணன், சென்னை.

    

ramaNi

unread,
Dec 15, 2015, 8:22:00 AM12/15/15
to சந்தவசந்தம்
அற்புதமான கவிதை நாடியும் சாடியும் ஓடியும் தேடியும் பாடியும் செல்வது அழகு!

இத்தனை மாந்தரும் சேர்ந்தே - வரும்
. எலெக்ஷனில் ஓட்டெனும் வேட்டால்
எத்தரின் ஆளுமை கொண்டே- போன
. சொத்தையும் மீட்டிட வேண்டும்!

ரமணி

Lalitha & Suryanarayanan

unread,
Dec 15, 2015, 9:49:58 AM12/15/15
to santhav...@googlegroups.com
நன்றி ரமணி.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Dec 18, 2015, 8:59:37 PM12/18/15
to santhav...@googlegroups.com
​தனிக்கவிதை 6

சட்டம் செய்ய வேண்டுமே!

சிறுவனாக வந்துநின்றும் சீரழிக்கும் கொடியனாய்
தீயனாகப் பெண்கள்மானம் சிதைத்துநிற்கும் பேயனை​
உறுமுகின்ற விலங்குபோல உலவுகின்ற உருவினை
உலகிலொன்றும் உணர்ந்திடாத பையனாகக் கொள்வதோ!
கறுமையான நெஞ்சங்கொண்ட காமனான கயவனைக்
களைந்தெறியும் வலிமையில்லாக் கருணையென்ன கருணையோ!
இறுகிநிற்கும் கல்லைப்போன்ற இதயம்கொண்ட இழிஞனை
என்றழிக்கும் சட்டமிந்த இனியநாட்டில் தோன்றுமோ!

வருத்தமுற்ற என்றன்னெஞ்சம் வாடிநிற்கும் போதிலே
வையமெங்கும் என்றன்சீற்றம் எதிரொலிக்க வேண்டுவேன்!
திருத்தமாகச் சட்டமிங்குச் செய்யவேண்டும் போதிது!
திறமைகொண்டு நாட்டையாளும் சீர்த்திமிக்க தலைவர்கள்
பொருத்தமான விதிமுறைகள் புந்திகொள்ள வேண்டுமே!
பொங்கிவேகம் புவியெலாமும் பொருதவேண்டும் போதிது!
நிருத்தமாடும் தேவிவந்து நீசர்தம்மை அழிக்கவே
நிலத்தையாளும் மக்களிங்கு நின்றிருத்தல் ஆகுமோ!

கன்னிதம்மைச் சீரழிக்கும் கயவர்கூட்டம் தம்மிசை
கருணைகாட்டும் சட்டம்கண்டு கண்ணிலாத நீதியும்
பின்னிவேகம் சாட்டைகொண்டு வீசுகின்ற சினமதால்
பிய்த்துவானம் பெய்தபின்னும் புத்தியெட்ட வில்லையோ!
இன்னுமின்னும் தடைகளாக இடையிருக்கும் கயவரை
இரக்கமின்றி எடுத்தெறிந்து களையவேண்டும் நாட்டிலே,
என்றுவேகம் என்றனுள்ளம் எரிநெருப்பாய் மாறியே
என்னைப்போதும் காய்க்கும்வேளை என்னசெய்வேன் சூரிநான்!

குடலையுருவிக் குமரிவாழ்வைக் குப்பையாகச் செய்தவர்
கூட்டத்தோடு கூடிநின்று கொக்கரித்த கொலைஞனை
விடலையாக எண்ணிநின்று வினவுகின்ற முறைகளை
வேகமாக மாற்றவேண்டும் வேளைவந்த பின்னரும் 
சுடலையாக மாறியின்றுத் தூங்கிநிற்றல் ஆகுமோ
சுனாமியாகத் தோன்றியின்று சுட்டெரிக்க வேண்டுமே!
கடமையோடு காலம்வேண்டும் சட்டம்யாவும் செய்யவே
காற்றைப்போல இயங்குகின்ற ஆற்றலின்று தேவையே.

சிவ.சூரியநாராயணன்.
19-12-2015.





Siva Siva

unread,
Dec 18, 2015, 10:03:24 PM12/18/15
to santhavasantham
உணர்ச்சி பொங்கும் பாடல்.



2015-12-18 20:59 GMT-05:00 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
​தனிக்கவிதை 6

சட்டம் செய்ய வேண்டுமே!

சிறுவனாக வந்துநின்றும் சீரழிக்கும் கொடியனாய்
தீயனாகப் பெண்கள்மானம் சிதைத்துநிற்கும் பேயனை​
உறுமுகின்ற விலங்குபோல உலவுகின்ற உருவினை
உலகிலொன்றும் உணர்ந்திடாத பையனாகக் கொள்வதோ!
கறுமையான நெஞ்சங்கொண்ட காமனான கயவனைக்

-->  /காமனான/
தூர்த்தனான?
(காமன் வேறு, காமுகன் வேறு);


களைந்தெறியும் வலிமையில்லாக் கருணையென்ன கருணையோ!
இறுகிநிற்கும் கல்லைப்போன்ற இதயம்கொண்ட இழிஞனை
என்றழிக்கும் சட்டமிந்த இனியநாட்டில் தோன்றுமோ!

வருத்தமுற்ற என்றன்னெஞ்சம் வாடிநிற்கும் போதிலே
வையமெங்கும் என்றன்சீற்றம் எதிரொலிக்க வேண்டுவேன்!
திருத்தமாகச் சட்டமிங்குச் செய்யவேண்டும் போதிது!
திறமைகொண்டு நாட்டையாளும் சீர்த்திமிக்க தலைவர்கள்
பொருத்தமான விதிமுறைகள் புந்திகொள்ள வேண்டுமே!
பொங்கிவேகம் புவியெலாமும் பொருதவேண்டும் போதிது!
நிருத்தமாடும் தேவிவந்து நீசர்தம்மை அழிக்கவே
நிலத்தையாளும் மக்களிங்கு நின்றிருத்தல் ஆகுமோ!

கன்னிதம்மைச் சீரழிக்கும் கயவர்கூட்டம் தம்மிசை

-->  /கன்னிதம்மைச்/
ஒருமை பன்மை?

--> /கூட்டம் தம்/
ஒருமை பன்மை?


கருணைகாட்டும் சட்டம்கண்டு கண்ணிலாத நீதியும்
பின்னிவேகம் சாட்டைகொண்டு வீசுகின்ற சினமதால்
பிய்த்துவானம் பெய்தபின்னும் புத்தியெட்ட வில்லையோ!
இன்னுமின்னும் தடைகளாக இடையிருக்கும் கயவரை
இரக்கமின்றி எடுத்தெறிந்து களையவேண்டும் நாட்டிலே,
என்றுவேகம் என்றனுள்ளம் எரிநெருப்பாய் மாறியே
என்னைப்போதும் காய்க்கும்வேளை என்னசெய்வேன் சூரிநான்!

குடலையுருவிக் குமரிவாழ்வைக் குப்பையாகச் செய்தவர்
கூட்டத்தோடு கூடிநின்று கொக்கரித்த கொலைஞனை
விடலையாக எண்ணிநின்று வினவுகின்ற முறைகளை
வேகமாக மாற்றவேண்டும் வேளைவந்த பின்னரும் 
சுடலையாக மாறியின்றுத் தூங்கிநிற்றல் ஆகுமோ
சுனாமியாகத் தோன்றியின்று சுட்டெரிக்க வேண்டுமே!
--> /சுனாமியாகத் தோன்றியின்று சுட்டெரிக்க வேண்டுமே/ 
எரிக்கின்ற சுனாமி!! Good.

Lalitha & Suryanarayanan

unread,
Dec 18, 2015, 10:36:39 PM12/18/15
to santhav...@googlegroups.com
நன்றி சிவா. உடனுக்குடனே பிழைகளைக் களைய உதவும் உங்கள் அன்புக்கும் அறிவுக்கும் நன்றி.

கறுமையான நெஞ்சங்கொண்ட காமனான கயவனை

-(->  /காமனான/
தூர்த்தனான?
(காமன் வேறு, காமுகன் வேறு);)

இதை 
'கறுமையான நெஞ்சங்கொண்ட காமவெறிக் கயவனை'
என்று மாற்றிக்கொண்டேன்.

கன்னிதம்மைச் சீரழிக்கும் கயவர்கூட்டம் தம்மிசை

-(->  /கன்னிதம்மைச்/
ஒருமை பன்மை?

--> /கூட்டம் தம்/
ஒருமை பன்மை?)

என்பதை

'கன்னியரைச் சீரழிக்கும் கயவர்கூட்டம் மேலிவண்'

என்று மாற்றிக்கொண்டேன்.

மிண்டும் நன்றி.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Dec 20, 2015, 8:26:00 PM12/20/15
to santhav...@googlegroups.com
தனிக்கவிதை 7

தினமணி கவிதைமணி மின்னிதழில் இன்று வெளிவந்துள்ள 

சுடும் நினைவுகள் :

காமவெறி உண்டவராய் தீமைநெறி கொண்டவராய்
காளையென ஆடுகின்ற பேயர் - அவர்
கற்பழித்தே ஓடுகின்ற தீயர் - அவர்
காலிரண்டு கொண்டுவந்து கானகத்தை விட்டுவந்து
காதலெனும் போர்வையிட்ட மிருகம் - அவர்
காற்றுவந்து மேனிபட்டால் நரகம் - அவர் 
கண்ணிரண்டால் தீமைமிகப் பெருகும் -  அவர்
காலைவைத்த பூமியெல்லாம் கருகும்.

நாமமது மக்களென நாமெலாமும் கொண்டிருந்தும் 
நாரியரைக் காக்கவென்ன செய்தோம் - அந்தக்
காரிகைக்காய் சட்டமென்ன நெய்தோம் - அன்று
நாலுசந்தி பூதம்வைத்து  நாட்டுநெறி பேணவைத்து
நல்லவரைக் காத்துவந்த நாடு - இன்று
அல்லவரால் வந்ததிங்கு கேடு  - இன்று
நல்லவழி மார்க்கமெவர் படித்தார் - அதைச்
சொல்லுபடம் யாரிங்குப் பிடித்தார்.



சேமமுற மண்ணிதிலே சேயிழைகள் வாழவென 
சிந்தையிலே எண்ணம்சரி நின்றால்  - நாம்
சீக்கிரத்தில் சட்டம்பல செய்வோம் -   தீயர்
சென்றவழி நின்றவழி வந்தவழி வேறெவரும்
செல்லவழி இல்லையென அடைப்போம் - பெரும்
சீற்றமுள்ள நீதிவழி படைப்போம்  - அவர்
சீழ்சிரத்தை ஆழ்கடலில் விடுப்போம் - நம்
சீர்மிகுந்த மாதர்துயர் துடைப்போம்.


ஓமமதில் ஊற்றுகின்ற எண்ணையென நெஞ்சமதில்
ஓங்கிவளர் தீயதிலே மோதும் - அந்த
உத்தமியர் ஓலம்வந்து போதும் - நாம்
ஊளையிட்டுச் சத்தமிட்டே ஊரனைத்தும் கூட்டாமல்
ஊமையென நின்றிருந்தால் சடமே - மறை
ஓதுவழி நாமறிந்தும் மடமே - நாம்
ஓய்ந்துவிட்டால் ஆகுமென்ன நலமே - என
உள்ளிருந்து வேகுமென்றன் உளமே.

சிவ.சூரியநாராயணன்.

17 - 12- 2015.

Pas Pasupathy

unread,
Dec 20, 2015, 8:32:57 PM12/20/15
to Santhavasantham
சந்தம், அமைப்பு, கருத்து அருமை. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Siva Siva

unread,
Dec 20, 2015, 9:24:05 PM12/20/15
to santhavasantham
Full of emotion.
Good rhythm.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 20, 2015, 10:09:04 PM12/20/15
to சந்தவசந்தம்
>>
சீக்கிரத்தில் சட்டம்பல செய்வோம் -   தீயர்
சென்றவழி நின்றவழி வந்தவழி வேறெவரும்
செல்லவழி இல்லையென அடைப்போம் - பெரும்
சீற்றமுள்ள நீதிவழி படைப்போம்

உணர்ச்சி ததும்பும்,   காவடிச் சிந்து போன்ற அமைப்பைக் கொண்ட அருமையான பாடல்.

அனந்த்

உத்தமியர் ஓலம்வந்து போதும் - உத்தமியர் ஓலம்வந்த போதும்?

Lalitha & Suryanarayanan

unread,
Dec 20, 2015, 10:21:00 PM12/20/15
to santhav...@googlegroups.com
கருத்துரைத்த பேராசிரியர்களுக்கும் சிவசிவாவுக்கும் நன்றி.

உத்தமியர் ஓலம்வந்து போதும் - உத்தமியர் ஓலம்வந்த போதும்?
அனந்த் 

ஐயா :

ஓமமதில் ஊற்றுகின்ற எண்ணையென நெஞ்சமதில்
ஓங்கிவளர் தீயதிலே மோதும் - அந்த
உத்தமியர் ஓலம்வந்து போதும் ( போதெலாமும், பொழுதெலாமும் என்ற பொருளில்)

சிவசூரி.

ramaNi

unread,
Dec 20, 2015, 10:38:32 PM12/20/15
to சந்தவசந்தம்
உணர்ச்சி கொந்தளிக்க நடக்கும் கவிதை அற்புதம்!

பாரதியின் 'சிறந்து நின்ற சிந்தை யோடு தேயம் நூறு வென்றிவள் ' மற்றும்
கவிமணியின் 'கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது'
போன்ற பாடல்களில் உள்ளது போல் செல்லும் நடை அழகு!

ரமணி

Lalitha & Suryanarayanan

unread,
Dec 20, 2015, 11:12:20 PM12/20/15
to santhav...@googlegroups.com
ரமணி உங்களீன் அன்பான பின்னூட்டத்துக்கு நன்றி. 

எனக்கு இந்தச் சந்தத்தைக் கொடுத்தவரும் ஒரு கவிமாமணிதாம்; அவர் ஒரு சந்தக்கடலும்தாம்; அவர் ஒரு கவிவேழமும்தாம்!  அது, என் உள்ளத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும் " மண்டையோட்டு மாலைகளைக் கண்டமெல்லாம் போட்டுக்கொண்டு ஒரு மாகாளி " ஆடிவரப் பிறந்ததுதாம்!

சிவசூரி.

Vis Gop

unread,
Dec 21, 2015, 12:52:24 AM12/21/15
to santhav...@googlegroups.com
பட்டாக் கத்தியினும் கூரியதுங்கள்
   பாட்டெழுதும் பேனா!
சுட்டுக் கருக்கிவிடச் சீரிடுமுங்கள்
   சொற்பொறிகள், அம்மா!
சட்டம் திருந்திடினும் மானிடமாக்கள்
   தாம்திருந்து வாரோ?
துட்டத் தனம்விலக ஆண்டவனிங்கே
   தோன்றுவதென் நாளோ!
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Lalitha & Suryanarayanan

unread,
Dec 21, 2015, 2:57:53 AM12/21/15
to santhav...@googlegroups.com
அன்பர் கோபால் அவர்களின் கவிதைப் பின்னூட்டத்துக்கு நன்றி.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Dec 21, 2015, 3:03:43 AM12/21/15
to santhav...@googlegroups.com
அன்புள்ள ரமணி, இப்பொழுதுதான் பார்த்தேன்  நீங்கள் தனிக்கவிதை எண் 6-க்குக் கொடுத்திருக்கும் பின்னூட்டத்தை நான் கவிதை 7க்குக் கொடுத்திருப்பதாக நினைத்துக் கொண்டுவிட்டேன். எனவேதான் 7-ன் சந்தத்தைப் பற்றி எழுதிவிட்டேன்.
எதுவாயினும் உங்கள் கருத்துக்கு நன்றி.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Dec 21, 2015, 9:43:20 PM12/21/15
to santhav...@googlegroups.com
இன்று பேராசிரியர் அனந்த் அவர்களிடம் இருந்து வந்த மின்னஞ்சலையும் அவருக்கு நானளித்த பதிலையும் இங்கு இடுகிறேன்:

"உத்தமியர் ஓலம்வந்து போதும் ( போதெலாமும், பொழுதெலாமும் என்ற பொருளில்)
Thanks for your explanation. But I am not sure if ஓலம்வந்து போதும் or ஓலம்வந்த போதும்
is correct in the context of your poem.  
உத்தமியர் ஓலம்வந்து போதும்/ஓலம்வந்த போதும்  - நாம்
ஊளையிட்டுச் சத்தமிட்டே ஊரனைத்தும் கூட்டாமல்
ஊமையென நின்றிருந்தால் சடமே 

பெண்கள் ஓலம் (நம் கவனத்திற்கு) வந்த போதும், நாம் ஊமையென நின்றால் சடமே என்று நான் புரிந்து கொண்டேன். அது தவறாக இருந்தால் கூறவும்.  இறுதியில், கவிஞனின் புரிதலும் சொல்லுமே முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், கொள்வேன்.

அன்புடன்
அனந்த்"

அன்புடைய பேராசிரியர் அவர்களே,

வணக்கம். 
உங்களைப் போன்றோரின் அன்பினாலும் வழிகாட்டலாலும் தானனென் கவிதைகள் மேம்படுகின்றன. எனவே உங்கள் கருத்தை ஏற்கிறேன்.

இப்பொழுதெல்லாம் இத்திருநாட்டின் எல்லாப்பகுதியில் இருந்தும் இதுபோன்ற செய்திகள் வந்து செவிகளைத் தாக்கிக்கொண்டே இருக்கின்றன. எனவேதான் என் உணர்வு அப்படி வடித்தது.  எது எப்படி ஆயினும் என் கவிதையில் மாற்றம் செய்து ஏற்றம் பெறுகிறேன்.

நன்றி.
சிவசூரி.
22-12-2015

Lalitha & Suryanarayanan

unread,
Dec 28, 2015, 12:01:04 AM12/28/15
to santhav...@googlegroups.com
தனிக்கவிதை 8

தினமணி கவிதைமணி மின்னிதழில் இன்று (28-12-2015) வெளிவந்துள்ள

புதியதோர் உலகு செய்தோம்

1)
கணினியென்னும் பொருள்படைத்துக் கணப்பொழுதில் காசினி
கண்டுவந்து சேரும்திறன் கரவிரலில்  அளிப்பதும்
பணிவிடைகள் செய்தும்நம்மை அடிமையாக்கி வைப்பதும்
பாடங்களைப் படிப்பதற்குப் பக்கம்பல  தருவதும்
இணையமென்னும் வழியில்நம்மை ஏற்றியெங்கும் செல்வதும்
இணையில்லாத முகவரிகள் மின்வழியில்  தருவதும்
கணையைப்போல் வேகமாகக் கருத்தறிய வைப்பதும்
கண்டளித்த மனிதரைக் கவிஞருள்ளம் வாழ்த்துமே.
​​
2)
எண்ணில்லாத இன்னிசையும் பேருரையும் கேட்டிட
இனிமையாகப் பயனளிக்கும் யூட்யூபைத் தந்ததும்
கண்ணிமைக்கும் போதிலெண்ணம் கடந்துசெல்லும் வழிதரும்
கடமைசெய்யும் வாட்ஸாப்பும் கணினிதந்த கொடைகளே
மண்ணிலெங்கும் சென்றிடாமல் வாணிபத்தைச் செய்திட
வழிகள்செயும் கைப்பேசி கணினிபெற்ற மகவதே!
விண்ணில்வேகம் செல்லும்போதும் மடியிலமர் துணையது
வேண்டுவண்ணம் வேண்டுவதை வேகம்தரும் இறையது!

3)
முகநூலின் பெருமைகளை மொழிவதுந்தான் முடிவதோ!
மூவுலகும் கட்டியத்தை முழங்கிமுன்னர் செல்லுமே!
சகம்யாவும் நமதுநிலை தமுக்கடித்துச் சொல்லுமே!
சளசளக்கும் டுவிட்டருடன் வெள்ளம்வந்த போதது
வெகுவேகம் உதவிசெய்ய விருப்புடனே வந்ததும்
விண்ணுலகும் கண்டதனால் கண்ணிமைக்க மறந்ததே!
அகவாழ்வும் புறவாழ்வும் அனைத்துமிந்த கணினியில்
அடைத்தமக்கள் வாழ்விலின்று ஞானம்விரல் நுனியிலே!

4)
வாசம்மிக்க மதுமலராய் வடித்துவைக்கும் வலையிது!
மனதுதிக்கும் என்ணமெல்லாம் பிடித்துவைக்கும் கலையிது!
பாசம்கொண்டு பாரிலுள்ளோர் படித்துமகிழ் நிலையதைப்
படைத்ததனால் இன்பங்கொண்டு வாழுமக்கள் எழிலது!
நேசம்கொண்ட வாசம்கொஞ்சம் நிலமதனில் வீசிட
நின்றிருந்து தொண்டுசெய்யும் விலைகடந்த துணையது!
மாசில்லாத மதியமென்று வாழ்த்துமன மொழியது!
வலைப்பூவின் பெருமையெல்லாம் வார்த்தைசொல்ல முடியுமோ!

5)
​ஆலையெல்லாம் கணினிபல அணிவகுத்து நிற்குதே
ஆக்கும்தொழில் நுட்பமெல்லாம் அதற்குநன்கு தெரியுதே
வேலைசெய்யும் எந்திரனாம் ரொபாட்டென்னும் கருவியும்
வேணும்போது பயணம்செய்யும் சீட்டளிக்கும் கருவியும்
காலைமுதல் மாலைவரை கூடவரும் கணினிகள்!
கணக்குவழக்கு வைத்துக்கொள்ள வங்கியெங்கும் கணினிகள்!
நூலறிந்து படிப்பதற்கு நூதனமாய்க் கருவிகள்!
நோக்கறிந்து செய்வதற்கு நுணுக்கமுணர் கருவிகள்!

6)
ஆளில்லாத வாகனங்கள் கணினியெங்கும் ஓட்டுதே!
அடக்கியாளும் மனிதர்சொல்லைக் கேட்டுநன்கு நடக்குதே!
கோளில்கூடக் காலைவைக்கும் கூர்மதியும் உடையதே!
கொண்டுபல சேதிதம்மைக் கொடுக்குந்திறன் உடையதே!
தாளில்லாமல் தினசரிகள் வளர்க்குபுகழ் உடையதே!
தடையில்லாமல் தொண்டுகோடி செய்யுமதி உடையதே!
மூளும்போரில் குண்டுபோடும் தொழிலும்செய்யும் விதியதே!
மூளையாக மனிதனோடு கூடநிற்கும் கதியதே!

7)
புதுமைபல படைத்தளித்த புந்தியதைப் பாடவோ!
புவனெமல்லாம் நொடிப்பொழுதில் போய்வரலைப் பாடவோ!
மதிநிறைந்த கணினிகண்ட மனிதர்களைப் பாடவோ!
வாயுவேகம் கடிதங்கள் விரைந்துசெலல் பாடவோ!
நிதிபடைக்கும் நூதனங்கள் நோற்றதனைப் பாடவோ!
நிலவுலகை ஓர்குடியாய் நிறுத்தியதைப் பாடவோ!
அதிசயமாய் அற்புதமாய் அகிலமிதை மாற்றிய
ஆயிரமாம் படைப்புகளைப் பாயிரத்தில் அடைக்கவோ!


சிவ.சூரியநாராயணன்.
23-12-2015.

Kaviyogi Vedham

unread,
Dec 28, 2015, 3:39:03 AM12/28/15
to santhavasantham
அட்டகாசம் என் சூரி!
.. வாழ்க குரு அருளால்,
 யோகியார்


வாழ்க.என் அன்பர்கள் அனைவரும்..!..
.தற்போதைய என் முகவரி--- pl. write in English.
 Kaviyogi vedham,
c/o N. balasubramanyam,CEO,
Flat D 022,Royale Classic Garden,
 Hennur main Road, Bangalore-560043
(Near iCIC BAnk)
 செல் cel no--09686679017
.
 PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/








Pas Pasupathy

unread,
Dec 28, 2015, 7:48:35 AM12/28/15
to Santhavasantham
அருமை!

2015-12-28 0:01 GMT-05:00 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
தனிக்கவிதை 8

தினமணி கவிதைமணி மின்னிதழில் இன்று (28-12-2015) வெளிவந்துள்ள

புதியதோர் உலகு செய்தோம்

1)
கணினியென்னும் பொருள்படைத்துக் கணப்பொழுதில் காசினி
கண்டுவந்து சேரும்திறன் கரவிரலில்  அளிப்பதும்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 28, 2015, 5:27:08 PM12/28/15
to சந்தவசந்தம்
>அதிசயமாய் அற்புதமாய் அகிலமிதை மாற்றிய
> ஆயிரமாம் படைப்புகளைப் பாயிரத்தில் அடைக்கவோ!

அடைத்துவிட்டீர்கள்! அருமை, சூரி!

..அனந்த்


2015-12-28 0:01 GMT-05:00 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
தனிக்கவிதை 8

தினமணி கவிதைமணி மின்னிதழில் இன்று (28-12-2015) வெளிவந்துள்ள

புதியதோர் உலகு செய்தோம்

1)
கணினியென்னும் பொருள்படைத்துக் கணப்பொழுதில் காசினி
கண்டுவந்து சேரும்திறன் கரவிரலில்  அளிப்பதும்
பணிவிடைகள் செய்தும்நம்மை அடிமையாக்கி வைப்பதும்
பாடங்களைப் படிப்பதற்குப் பக்கம்பல  தருவதும்
இணையமென்னும் வழியில்நம்மை ஏற்றியெங்கும் செல்வதும்
இணையில்லாத முகவரிகள் மின்வழியில்  தருவதும்
கணையைப்போல் வேகமாகக் கருத்தறிய வைப்பதும்
கண்டளித்த மனிதரைக் கவிஞருள்ளம் வாழ்த்துமே.
​​
2
சிவ.சூரியநாராயணன்.
23-12-2015.


ramaNi

unread,
Dec 28, 2015, 8:04:59 PM12/28/15
to சந்தவசந்தம்
கணினி உங்கள் புகழுரைக்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். இப்படியே போனால் கணினி பிள்ளைத் தமிழ் என்றும் எழுதிவிடுவீர்கள் போலிருக்கிறதே!
ரமணி

Lalitha & Suryanarayanan

unread,
Dec 28, 2015, 8:33:25 PM12/28/15
to santhav...@googlegroups.com
​கவியோகியாருக்கும்​ பேராசிரியர்களுக்கும் நண்பர் ரமணிக்கும் நன்றி.
டுவிட்டரின் சளசளப்பில் ரமணி தமது பங்கைக் கண்டிருப்பார் என்று நம்புகிறேன்.

சிவசூரி.

Vis Gop

unread,
Dec 29, 2015, 4:30:37 AM12/29/15
to santhav...@googlegroups.com
2015-12-28 10:31 GMT+05:30 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
புதியதோர் உலகு செய்தோம்
1)
 . . . .
பணிவிடைகள் செய்தும்நம்மை அடிமையாக்கி வைப்பதும்
   [அடிமைக்குப் பணிவிடை !! கற்பனை!]
 . . . .
இணையில்லாத முகவரிகள் மின்வழியில்  தருவதும்
  [இணையில்லாத முகவரிகள் ? கணினி முகவரிகள் தரும் செயல்தானே இணையில்லாதது; முகவரிகள் அல்ல. இணையில்லாது என்றிருக்கலாமோ.(?)]
 . . .
​​
2)
 . . . . கைப்பேசி கணினிபெற்ற மகவதே!
  [அருமை!]
 . . .

3)
 . . .
மக்கள் வாழ்விலின்று ஞானம்விரல் நுனியிலே!
[அருமை!]
4)
 . . .

5)
ஆலையெல்லாம் கணினிபல அணிவகுத்து நிற்குதே
  [கணினிபின்னே ?]
ஆக்கும்தொழில் நுட்பமெல்லாம் அதற்குநன்கு தெரியுதே
  [அருமை!]
. . .

6)
 . . .

மூளையாக மனிதனோடு கூடநிற்கும் கதியதே!
[அருமை! உண்மை!]

7)
 . .

Lalitha & Suryanarayanan

unread,
Dec 29, 2015, 4:55:28 AM12/29/15
to santhav...@googlegroups.com
நன்றி கோபால்.
இணையில்லாத முகவரிகள் மின்வழியில்  தருவதும்

நீங்கள் கூறியுள்ளபடி "இணையில்லாது": என்று மாற்றிக்கொண்டுவிட்டேன்.

ஆலையெல்லாம் கணினிபல அணிவகுத்து நிற்குதே
  [கணினிபின்னே ?]

"கணினிபின்னே" என்பது இன்னுமழகாக இருக்கிறது. எனவே அதையும் மாற்றிக் கொண்டுவிட்டேன்.

மீண்டும் நன்றி.

சிவசூரி.

Vis Gop

unread,
Dec 29, 2015, 5:00:24 AM12/29/15
to santhav...@googlegroups.com
Glad and thankful!
gopal.

Hari Krishnan

unread,
Dec 29, 2015, 5:23:30 AM12/29/15
to santhavasantham

2015-12-29 15:25 GMT+05:30 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
நன்றி கோபால்.
இணையில்லாத முகவரிகள் மின்வழியில்  தருவதும்

நீங்கள் கூறியுள்ளபடி "இணையில்லாது": என்று மாற்றிக்கொண்டுவிட்டேன்.

அதுக்குள்ள மாத்திட்டீங்களா.. இருக்கட்டும் பரவால்ல.

மண்ணஞ்சல் முகவரி, தப்பித் தவறியாவது இன்னொன்று இருக்கலாம்.  சேலம் தமிழ்நாட்டிலும் அமெரிக்காவிலும் இருப்பது போல.  ஆனால் மின்னஞ்சல் முகவரி தவறிப்போய்கூட இன்னொன்று இருக்கவே முடியாது.  இதனால் இணையில்லாத முகவரிகள் என்பது பொருந்தலாம்.

(இருந்தாலும் நான் hari.harikrishnan; hariharikrishnan என்று புள்ளியில்லாமல் ஒருவர் ஜிமெயிலில் இருக்கிறார்.  அவருக்குப் போகவேண்டிய ஆன்லைன் பில், ஜோசியக் குறிப்பு, பெண்கள் பரிந்துரை எல்லாம் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன.)


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Lalitha & Suryanarayanan

unread,
Dec 29, 2015, 5:43:18 AM12/29/15
to santhav...@googlegroups.com
இந்த இழையில் உங்களையும் அழைத்துக் கொண்டு வந்ததற்கு கோபாலுக்கு நன்றி. வள்ளுவர் மும்மணிமாலையில் நீங்கள் காமத்துப் பாலுக்கு வடித்துள்ள மின்னும் விருத்தமணிகளைப் படித்தவர் யாரேனும் " பெண்கள் பரிந்துரை" அனுப்புகின்றாரோ என்னவோ, யார் கண்டது!

சிவசூரி.

2015-12-29 15:53 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2015-12-29 15:25 GMT+05:30 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
நன்றி கோபால்.
இணையில்லாத முகவரிகள் மின்வழியில்  தருவதும்

நீங்கள் கூறியுள்ளபடி "இணையில்லாது": என்று மாற்றிக்கொண்டுவிட்டேன்.

அதுக்குள்ள மாத்திட்டீங்களா.. இருக்கட்டும் பரவால்ல.



Siva Siva

unread,
Dec 29, 2015, 7:34:04 AM12/29/15
to santhavasantham
/இணையில்லாத முகவரிகள் என்பது பொருந்தலாம்.

(இருந்தாலும் நான் hari.harikrishnan; hariharikrishnan என்று புள்ளியில்லாமல் ஒருவர் ஜிமெயிலில் இருக்கிறார்.  அவருக்குப் போகவேண்டிய ஆன்லைன் பில், ஜோசியக் குறிப்பு, பெண்கள் பரிந்துரை எல்லாம் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன/

இணை துணை இரண்டும் ஒரே பொருள் என்று கருதித், துணை இல்லை என்பதால் பெண்கள் பரிந்துரை அனுப்புகின்றனரோ? :)




2015-12-29 5:23 GMT-05:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2015-12-29 15:25 GMT+05:30 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
நன்றி கோபால்.
இணையில்லாத முகவரிகள் மின்வழியில்  தருவதும்

நீங்கள் கூறியுள்ளபடி "இணையில்லாது": என்று மாற்றிக்கொண்டுவிட்டேன்.

அதுக்குள்ள மாத்திட்டீங்களா.. இருக்கட்டும் பரவால்ல.

மண்ணஞ்சல் முகவரி, தப்பித் தவறியாவது இன்னொன்று இருக்கலாம்.  சேலம் தமிழ்நாட்டிலும் அமெரிக்காவிலும் இருப்பது போல.  ஆனால் மின்னஞ்சல் முகவரி தவறிப்போய்கூட இன்னொன்று இருக்கவே முடியாது.  இதனால் இணையில்லாத முகவரிகள் என்பது பொருந்தலாம்.

(இருந்தாலும் நான் hari.harikrishnan; hariharikrishnan என்று புள்ளியில்லாமல் ஒருவர் ஜிமெயிலில் இருக்கிறார்.  அவருக்குப் போகவேண்டிய ஆன்லைன் பில், ஜோசியக் குறிப்பு, பெண்கள் பரிந்துரை எல்லாம் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன.)


--
அன்புடன்,
ஹரிகி.


--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

விவேக் பாரதி

unread,
Dec 29, 2015, 8:11:55 AM12/29/15
to santhav...@googlegroups.com
நன்றாக இருக்கின்றது அய்யா ஒரு சிறிய சந்தேகம் கவிதை மணியில் நானும் கவிதை அனுப்ப வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் ?

வித்தக இளங்கவி 
விவேக்பாரதி

9750588007

--

Lalitha & Suryanarayanan

unread,
Dec 29, 2015, 6:47:25 PM12/29/15
to santhav...@googlegroups.com
​தினமணி கவிதைமணிக்கு யார் வேண்டுமானாலும் கவிதை எழுதி அனுப்பலாம். வாரந்தோறும் திங்கட் கிழமையன்று கவிதை யெழுதவேண்டிய தலைப்பைக் கொடுக்கின்றார்கள்  மரபுக் கவிதையோ அல்லது புதுக்கவிதையோ என்ற பாகுபாடின்றி எதுவாயினும் அவர்கள் வரவேற்கின்றார்கள். www.dinamani.com/kavithaimani/(தினமணிகவிதைமணி)​ இணையதளத்தில் இதற்கான விவரங்கள் உள்ளன.

வாழ்த்துகள்.
சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Feb 21, 2016, 8:34:52 AM2/21/16
to santhav...@googlegroups.com
தனிக்கவிதை 9

சூரியனுக்கோர் திசையில்லை

1/3

1)

சூரிய னுக்கோர் திசையில்லை என்றிங்கே
தோத்திரம் பாடியே கும்மியடி!
வாரியில் மூழ்கியே வானத்தில் தோன்றிடும்
வள்ளலைப் போற்றியே கும்மியடி!

2)

நீல நிறமுடன் நிர்மல வானமும்
நேரிலே காட்டிடும் தோற்றமெனக்
காலைத் திசையதும் மேலைத் திசையதும்
கண்ணெதிர் கண்டிடும் மாயமதே!

3)

காரிருள் போக்கிடும் காதல் மிகுந்தவன்
கண்ணெதிர் தோன்றிடும் தெய்வமவன்
பாருளோர் வாழ்ந்திடப் பாதை தவறாமல்
பாதம் இடுவதைப் பாடுங்கடி! 

சிவ.சூரியநாராயணன்.
(தொடரும்)

Mohanarangan V Srirangam

unread,
Feb 21, 2016, 9:07:19 AM2/21/16
to சந்தவசந்தம்
கவிதை அழகு.

சூரியனுக்கோர் திசையில்லை - புரியவில்லை



வாரியில் மூழ்கி வானத்தில் தோன்றிடும் -->

காலைத் திசை மேலைத் திசை ..>


காரிருள் போக்கிடும் காதல் மிகுந்தவன்
கண்ணெதிர் தோன்றிடும் தெய்வமவன்
பாருளோர் வாழ்ந்திடப் பாதை தவறாமல்
பாதம் இடுவதை ---->

ரசித்தேன்.

***



--

Lalitha & Suryanarayanan

unread,
Jul 16, 2016, 12:33:05 AM7/16/16
to santhav...@googlegroups.com
தனிக்கவிதைகள்  10

வணக்கம். இலந்தையாரின் இழையில்  நான் சிறுகச் சிறுகத் தொடுத்த மணிமாலையை முழுமாலையாக  என்னிழையில் இடுகின்றேன். அன்பர்கள் இதையும் படிக்க வேண்டுகிறேன். இம்மாலை சரியாகத் தொடுக்கப் படுவதற்கு உதவிய இலந்தையாருக்கும் பேராசிரியர் அனந்த் அவர்களுக்கும் ஊக்கப்படுத்திய பேராசிரியர் பசுபதி அவர்களுக்கும் நன்றி.

சிவசூரி.

இலந்தை இரட்டை சிந்து மணிமாலை

ஒருசீர் இரட்டை

அணியே - எனப்
புனைவேன்
மணியே - இம் 
மன்றில்

ஆனந்தக் களிப்பு

மன்றத்தின் முன்வந்த நாணல் - எழில்
மங்கையைப்  போலவே வந்திவண் நின்றார்
நன்றிது நன்றிது வென்றே - சொல
நர்த்தனம் செய்தவர் நம்மையே வென்றார்!

இருசீர் இரட்டை

வென்றியைப் பெற்றாரே - ஒரு
மின்னலாய் ஆர்ப்பாரே!
மன்றுள்ள பாவலர்கள் - கவி
கன்னலாய் வார்ப்பாரே!

ஆனந்தக் களிப்பு


வார்தந்த சோதியாள் பிள்ளை - இவர்
வாவெனச் சொன்னால் முனமவள் கிள்ளை!
சீர்தந்த பாடல்கள் கொள்ளை - இவர் 
செய்து மகிழ்ந்திடப் பின்னேது சள்ளை!

முச்சீர் இரட்டை

சள்ளையோ சண்டையோ இல்லாமல் - நம்
சந்த வசந்தத்தில் முந்திடுவார்!
வெள்ளமாய்ப் பாடல்கள் தந்திடுவார்! - நாம்
வேண்டிய வண்ணமே சிந்திடுவார்!

ஆனந்தக் களிப்பு

சிந்திலே புத்தம் புதிதாய் - மணி
சீருடன் செய்கவி மன்றில் அரிதாய்
முந்தித் தவழ்ந்திந்த நாட்டில் - ஒளிர்
முத்தென இட்டனர் மின்னிடும் ஏட்டில்.


நாற்சீர் இரட்டை

ஏட்டெதிர் வந்ததும் எந்நாட் டினிலோ - ஓர்
ஏந்திழை ஆண்டதும் எவ்வூர் தனிலோ - அந்த
நாட்டினர் ஆகிய நாயகத் தென்றல் - ஒரு
நன்மணி கோத்தனர் நன்றென மன்றில்.

ஆனந்தக் களிப்பு

மன்றத் திலேவொரு மாமணி - யார்
கன்னற் சுவையுடன் பாட்டெவர் செய்வார்
தென்றல் தவழ்ந்திடும் ஊரார் - அவர்
என்றாலே சொல்லுவம் தென்னிலந் தையார்!

ஐஞ்சீர் இரட்டை

தென்ற லேறி நேரில் வந்த சிங்கமோ - மணிச்
சிந்து கொண்டு முந்தி நிற்கும் வேழமோ!
கன்னல் வந்து போட்டி யிட்டால் வெல்லுமோ-  எனக்
காத லோடும் கவிதை கோடி சொல்லுவார்!


ஆனந்தக் களிப்பு

சொல்லுக்கும் அப்பாலும் செல்வார் - கவித்
தூதென்னும் தேரேறி எப்பாரும் வெல்வார்!
வில்லுக்கும் மேலான வேகம் - பல
வித்தைகள் செய்திட வீங்கிடும் தாகம்!

அறுசீர் இரட்டை

தாகம் தாகம் என்றால் வேகம் பாயும் ஆறாய்க்  - கவி
மோகம் தீர வென்று முன்னம் வந்தே என்றன்
தேகம் பாயும் வண்ணம் சிந்தும் சிந்தைக் கண்டு - உடன்
சிந்து பாட வந்தால் சிந்தை இன்பம் கொள்ளும்!

ஆனந்தக் களிப்பு

கொள்ளை யெழில்குயில் பாட்டும் - ஒரு
கோபுர உச்சியில் வைத்துளம் காட்டும்
கள்நிகர் கட்டளை போட்டும் - உயர்
காதலின் சீரை உடன்நிலை நாட்டும்.

எழுசீர் இரட்டை

நாடும் சீரை நாணல் வந்து நாடிப் பெற்ற தெங்ஙனம் - அது
நங்கை பானு கொண்டு வந்த நல்ல நாட்டுச் சீதனம்!
கூடும் இன்பம் பாடுங் காலை ஈயும் சிந்து சாதனை! - அது
கொள்க வென்று கூடு மன்றில் கொட்டும் கோடி போதனை!

ஆனந்தக் களிப்பு

போதனை தந்தவர் இல்லம் - ஒரு
புத்திர னானார் குருவுக்குச் செல்லம்
சாதனை செய்கிற சித்தன் - இவர்
தானறி ஞானம் தருகிற புத்தன்

எண்சீர் இரட்டை

புத்தன் ஏசு காந்தி போல 
பூமி வாழ வாழ்ந்து காட்டும் - பெரும்
சித்தர் கூட்டம் போல நின்று 
சீரும் பேரும் எண்ணா தென்றும்
முத்துப் போல பாவ ரங்கம் 
முல்லை வாசம் வீச வென்று- கவி
வித்தெ டுத்துப் பாரி லெங்கும் 
வீசு கின்ற வித்தைக் காரர்!

ஆனந்தக் களிப்பு

வித்தை விளக்கும் முகத்தார் - அவர்
வீணைக் கலைமகள் வாழும் அகத்தார்!
நத்தையின் எச்சில் உவமை - சொலும்
நாயகர் காரிகை நல்கும் புலமை!

ஒன்பதின் சீர் இரட்டை

புலமையும் இனிமையும் குலவிடும் எழிலுடன்
பொன்னொளி வீசிடும் புகழுடன் திகழ்ந்திடும் வண்ணம் - கவி
புதிதிது புதிதிது புவியினில் புதிதென
பொதிந்திடும் எளிமையும் புவனமும் மகிழ்த்திட எண்ணும்
கலவையாய்க் கண்ணெதிர் கவிஞர்கள் நினைந்ததும்
கணமதில் துணையென கடமையும் அதுவென மண்ணில் - இவர்
கவிசெய உதவிடும் கவிமணி புகழ்மணி 
கனிமொழி இணையிலி கடலெனக் கவிசெயும் நாளும்!

ஆனந்தக் களிப்பு

நாள்களை எண்ணித் தொடுத்தே -  உயிர்
மைந்தன் விரும்பிய மாலை கொடுத்தே
தாள்களை நித்தம் பணிவார் - உடன்
தாயவள் முத்தென எண்ணி அணிவாள்.

பதின்சீர் இரட்டை

அணிமணி அன்புப் பதமணி சந்தக் கவிமணி
அவையணி செய்திடும் நவமணி இலந்தைத் தவமணி - நான்
துணைமணி தூமணி துணிவுடன் தொடுத்தேன் பாமணி
தொடையிதை மாமணி மும்மணி நான்மணி செய்மணி
பணிவுடன் இந்தப் பகலவன் நாமக் கவிநான்
பாவலர் மன்றினில் பற்பலர் பார்க்கக் கொடுத்தேன் - நீ
இணையிலி அவையில் இதையினி ஏற்றுக் கொண்டால்
இடையிடை என்னுளத் துடிப்பது கேட்கும் நலமே!

ஆனந்தக் களிப்பு

நலந்தரும் ஞானம் அளிக்கும் - இஞ்
ஞாலம் மணியிதைக் கண்டு களிக்கும்
இலந்தைக் கவிமா மணியே - நான்
இங்கே இயற்றிய பாடல் அணியே.

சிவசூரி.









ramaNi

unread,
Jul 16, 2016, 2:01:30 AM7/16/16
to சந்தவசந்தம்
இலந்தையாரின் கவியியல்பைப் புகழும் உங்கள் பாடல் அவர் எழுதிய பாடல் போலவே மிக அருமை!
ரமணி

Lalitha & Suryanarayanan

unread,
Jul 16, 2016, 2:25:26 AM7/16/16
to santhav...@googlegroups.com
நன்றி நண்பரே! நீங்களும் சிங்கை நண்பர் வரதராஜனும் கூட என்னை ஊக்கப் படுத்தினீர்கள்.  என் கவனக் குறைவால் உங்கள்  இருவருக்கும் நன்றி எழுதுவதற்கு விடப்பட்டுவிட்டது. என் நெஞ்சார்ந்த நன்றி உங்கள் இருவருக்கும் தெரிவிக்கிறேன்.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Jul 16, 2016, 2:29:59 AM7/16/16
to santhav...@googlegroups.com
​அன்பர் மோகன், 
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.​ பதில் எழுத மறந்துவிட்டது. மன்னிக்கவும். சூரியனுக்கு ஏன் திசையில்லை என்பது முழுப் பாடலையும் இட்டால் தன்னால் புரிந்துவிடும் என்று நினைக்கிறேன். இன்றே முழுப்பாடலையும் இடுகிறேன். மீண்டும் நன்றி.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Jul 16, 2016, 2:31:22 AM7/16/16
to santhav...@googlegroups.com
தனிக்கவிதை 9

சூரியனுக்கோர் திசையில்லை

1)

சூரிய னுக்கோர் திசையில்லை என்றிங்கே
தோத்திரம் பாடியே கும்மியடி!
வாரியில் மூழ்கியே வானத்தில் தோன்றிடும்
வள்ளலைப் போற்றியே கும்மியடி!

2)

நீல நிறமுடன் நிர்மல வானமும்
நேரிலே காட்டிடும் தோற்றமெனக்
காலைத் திசையதும் மேலைத் திசையதும்
கண்ணெதிர் கண்டிடும் மாயமதே!

3)

காரிருள் போக்கிடும் காதல் மிகுந்தவன்
கண்ணெதிர் தோன்றிடும் தெய்வமவன்
பாருளோர் வாழ்ந்திடப் பாதை தவறாமல்
பாதம் இடுவதைப் பாடுங்கடி! 

4)

நேரினில் மன்னுயிர் நித்தமே கண்டிட
நீல நிறமுடை வானமதில்
தேரினில் ஏறியே சோதிக் கதிர்கொண்டு
தீண்டிடும் தேவனைப் பாடுங்கடி!

5)

எக்கடல் எம்மலை எப்புவி எம்மொழி
என்றொரு பேதமும் எண்ணாமலே
அக்கறை யோடிந்த ஆர்புவி எல்லாமும்
அன்புடன் காப்பதைப் பாடுங்கடி!

6)

ஏழை பணக்காரன் என்றென்றும் பாராமல்
எல்லோரும் இன்பத்தைக் காணவென்றே
தாழ்விலும் மேட்டிலும் தன்னொளி பாய்ச்சிடும் 
தன்மையைப் போற்றியே பாடுங்கடி!

7)

மாசில் மதியென வானில் இரவிலே
வட்டம் இடும்எழில் தோற்றமதும்
கூசும் கதிரொளி வீசும் பகலவன் 
கொட்டிடும் அன்பதன் ஏற்றமடி!

8)

உழக்கினுள் ஆயிரம் ஒற்றுமை வேற்றுமை
ஓயாது பார்க்கின்ற பேதையரே
கிழக்கென்றும் மேற்கென்றும் இல்லாத வெய்யோனின் 
கீர்த்தியைக் கும்மியில் பாடுங்கடி!

9)
ஞானக் கதிரவன் ஞாலம் புரப்பவன்
நன்றருள் செய்வதை ஏந்துகின்ற
ஏனப் புவியிதின் இன்னுயிர் நாமெல்லாம் 
எட்டிடவேண்டுமே அந்நிலையே.

சிவ.சூரியநாராயணன்.



VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 16, 2016, 11:21:48 AM7/16/16
to சந்தவசந்தம்
சூரிய னின்சீரை வாரி வழங்கின
.. சூரியார் பாடலில் சொக்கிநின்று
நேராய் அவர்திசை நோக்கி அவன்வரும்
.. நேர்த்தியை இப்போது பாடுங்கடி! 

அனந்த்
ஏனப் புவி - பொருள்?
 
 

2016-07-16 2:31 GMT-04:00 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
தனிக்கவிதை 9

சூரியனுக்கோர் திசையில்லை

1)

சூரிய னுக்கோர் திசையில்லை என்றிங்கே
தோத்திரம் பாடியே கும்மியடி!
வாரியில் மூழ்கியே வானத்தில் தோன்றிடும்
வள்ளலைப் போற்றியே கும்மியடி!

8)

உழக்கினுள் ஆயிரம் ஒற்றுமை வேற்றுமை
ஓயாது பார்க்கின்ற பேதையரே
கிழக்கென்றும் மேற்கென்றும் இல்லாத வெய்யோனின் 
கீர்த்தியைக் கும்மியில் பாடுங்கடி!

9)
ஞானக் கதிரவன் ஞாலம் புரப்பவன்
நன்றருள் செய்வதை ஏந்துகின்ற
ஏனப் புவியிதின் இன்னுயிர் நாமெல்லாம் 
எட்டிடவேண்டுமே அந்நிலையே.

சிவ.சூரியநாராயணன்.


Lalitha & Suryanarayanan

unread,
Jul 16, 2016, 11:26:36 AM7/16/16
to santhav...@googlegroups.com
வணக்கம். நன்றி ஐயா. ஏனம்= பாத்திரம்.  ஏந்துகின்ற பாத்திரம். மற்றொன்று : ஏனத்தால்( வாரணத்தால்) மீட்கப்பட்ட புவி.

சிவசூரி.

Narayan Swaminathan

unread,
Jul 16, 2016, 12:40:32 PM7/16/16
to santhav...@googlegroups.com
அருமை ! கவிஞர் சிவசூரி !

சுவாமிநாதன்

Lalitha & Suryanarayanan

unread,
Jul 16, 2016, 10:38:59 PM7/16/16
to santhav...@googlegroups.com
நன்றி எல்லே அவர்களே.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Jul 16, 2016, 10:42:32 PM7/16/16
to santhav...@googlegroups.com
தனிக்கவிதைகள் 11

சருகுகள்

1)

பசுமை நிறமோடு பாவை எழில்தாங்கி
பகலின் ஒளியேந்துவாள் - தினம்
புதுமை உணவாக்கிப்  போதும் அமுதூட்டிப்
புவியில் மரம்வாழவே - நல்
வதுவை புரிந்திட்ட மங்கை தனைப்போல
வாழ வழிகாட்டுவாள் - அவள்
முதுமை தலைதூக்க முந்தி நிறம்மாறி 
முனகும் ஒலிகேட்குதே!

2)

சொந்தம் பலயாவும் சுற்றி உறவாடும் 
தோற்றம் உருவாகுதே - கதிர்
தந்தை எனவந்து தந்த பொருள்வைத்துத்
தரமாய் உணவாக்குவாள் - பசி
வந்த பொழுதெல்லாம் வாரி அணைத்திட்டு
வயிற்றின் துயர்நீக்குவாள் - இன்று
முந்தி அவைவந்து மூன்று தமிழ்கொண்டு
முயன்று மனங்காட்டுவேன்!

3)

மலரும் நினைவெல்லாம் மன்றில் பதிவாக
வந்து கவிபாடுவேன் - புவி
உலவும் விதமாக ஓதும் மொழியன்னை
உள்ள நிலைபேசவே - இனிப்
பலரும் மகிழ்வாகப் பார்த்துப் புகழ்பாட
பன்னும் பொருள்யாவுமே - புவி
நிலவும் இனிதென்று நெஞ்சப் பசியாறி
நினைவை நிலைநாட்டினேன்!

4)

அன்பை விழிதேக்கி அன்னை முகம்நோக்கி 
ஆசைச் செல்வங்களே -  உயர்
கன்னல் மொழிபேசி காலம் இனிதாக்கும்
கடமை மறந்தாரய்யா - ஒரு
நன்றி சிறிதின்றி நாயின் குணங்கூட
நெஞ்சில் இலையாகவே -  மதி
இன்றி முதியோர்கள் இல்லம் தனில்கொண்டு
இட்டு மகிழ்ந்தாரய்யா!

5)

உதிரும் தினம்வந்து சேரும் வரைநன்றே
ஒட்டி உறவாடியே - மனம்
வெதும்பிக் குலையாது வெந்து கரியாது
வேண்டும் பணிசெய்கிற - மரம்
புதிய இலைகாட்டிப் போதும் புகழ்பேச,
புவியில் மனிதர்களே - ஒரு
விதியில் பழியேற்றி வேகம் முதியோர்கள்
விடுதி இடுவாரய்யா!

6)

கண்கள் குளமாகக் காதல் கதையெண்ணிக்
காலம் தனைப்போக்கியே -  அவள்
விண்ணின் துணைவேண்டி வேகம் தனைமீட்கும்
வேளை வரவேண்டியும் - இந்த
மண்ணில் துடித்தாலும் மைந்தன் நலம்வாழ
மனத்தில் துதிசெய்குவாள் - எனப்
புண்கள் பலவேந்தி புவியோர் தவறெண்ணிப்
புலம்பித் துயராறினேன்!

சிவ.சூரியநாராயணன்.
2016-07-16 20:51 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

Lalitha & Suryanarayanan

unread,
Jul 17, 2016, 10:45:57 PM7/17/16
to santhav...@googlegroups.com
தனிக்கவிதைகள் 12

கோணல் தென்னை

1)

கோணலாம் தென்னை கொடுக்கும் இளநீர்
கொஞ்சம் கசந்திடுமா ? - நாம்
காணும் பொருள்கள் கடவுள் எனமறை
காட்டல் நிசமிலையா?

2)

ஓதி மரமது ஓங்கிப் பெருத்தும்
ஓர்தூண் ஆகிடுமோ? - புவி
ஓதும் மறையின் உண்மைப் பொருளை
ஊரார்  அறியாரா?

3)

பச்சை, சிவப்பு, கறுப்பெனும் வண்ணம்
பாரில் பிறிதாமோ? - விழி
இச்சகந் தன்னிலே வெண்மை நிறத்தை
இப்படிக் காணலையா?

4)

வக்கிரம் எட்டுடன்* வந்தவர் நின்றால்
வையமே போற்றாதோ? - நாம்
ஐக்கியம் ஆனபின் அண்டங்கள் எங்கும்
ஆண்டவன் காணோமோ?
(அட்ட வக்கிரர்)

5)

சாதி மதமெனச் சண்டைகள் செய்யெனச்
சாத்திரம் கூறிடுதோ ? - ஒரு
பேதம் இலையெனப் பேசிடும் வேதம்
பேதைமை நீக்காதோ?

6)

குட்டையும் நெட்டையும் கோணல் குறுகலும்
குற்றமாய் ஆவதுண்டோ? - இங்குப்
பட்டையும் நாமமும் இட்டவர் எல்லாம்
பக்தர்கள் ஆகுவரோ?

7)

முப்போதும் நீரிலே மூழ்கிக் குளிப்பவர்
முற்றுந் துறந்தவரோ? - அவர்
செப்பலும் செய்வதும் வெவ்வே றானால்
சீரைத் தருவதுண்டோ?

8)

கோணல் வழியினில் செல்வது தானே
குற்றங் குறையாகும்! - நாம்
பேணுங் குலநெறி பேணா திருப்பதே
பென்னம் பெரும்பிழையாம்!

9)

கோணல் மனத்தில் குடியிருந் தாலே
குறையாய் ஆகிடுமே! - உடல்
பூணும் புரிநூல் புகழைத் தருமோ
பொய்யில் புரண்டிருந்தால்?

10)

கொள்ளெனச் சந்தனம் அள்ளிக் கொடுத்தவள்
கூனும் நிமிர்ந்ததுவே - அவள்
வெள்ளை மனத்தால் வினைப்பயன் நீங்கிட
விந்தை விளைந்ததுவே!

11)

வாணி அருளினால் கண்ணிலாப் பாவலர்
வாக்குப் பெருகலையா? - ஒரு
கோணல் மரமதில் குஞ்சுப் பறவையும்
கொஞ்சி மகிழலையா?

12)

கீழைத் திசையிலே சென்றிருந் தாலே
மேற்கில் நுழையோமோ?
ஏழை எளியவன் என்றா இறைநமை
எண்ணிப் பிரிக்கின்றான்?


சிவ.சூரியநாராயணன்.




ramaNi

unread,
Jul 18, 2016, 12:50:42 AM7/18/16
to சந்தவசந்தம்
அழகிய கும்மிப் பாடல்!

ஈசனே இனன்!
(நேரிசை வெண்பா)

ஒளியொடு வெப்பம் உறுசிவ சக்தி
அளித்தல் அழித்தல் தொழிலாய் - களிப்பும்
கனலும் கதிராய்க் கதித்தருள் தேவன்
இனனவன் ஈசன் இருப்பு.

--ரமணி, 18/07/2016

*****

Lalitha & Suryanarayanan

unread,
Jul 18, 2016, 1:40:55 AM7/18/16
to santhav...@googlegroups.com
நன்றி ரமணி

சிவசூரி.

Kaviyogi Vedham

unread,
Jul 18, 2016, 8:18:59 AM7/18/16
to santhavasantham
எல்லாமே நல்ல கருத்து. ருசியானவை,
 யோகியார்


வாழ்க.என் அன்பர்கள் அனைவரும்..!..
. Buy our (my & Chandar's )Pure Tamil  Good..Mag(monthly)
called இலக்கியவேல்..சந்தா ரூ 120 மட்டுமே  -ஏப்ரல்16- முதல்.
Ilakkiyavel-sandha-Rs 120/- From April 2016
 Kaviyogi vedham,
 President, Sree Lahari Babaji Yogasram,
2/682, 10th Cross st, Renga Reddy Garden,
NEELANKARAI, Chennai-600115
 Cel no-09500088528

.
 PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/








Siva Siva

unread,
Jul 18, 2016, 8:28:18 AM7/18/16
to santhavasantham
2016-07-17 22:45 GMT-04:00 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
தனிக்கவிதைகள் 12

கோணல் தென்னை

1)

கோணலாம் தென்னை கொடுக்கும் இளநீர்
கொஞ்சம் கசந்திடுமா ? - நாம்
காணும் பொருள்கள் கடவுள் எனமறை
காட்டல் நிசமிலையா?

--> இப்பாட்டில் சொல்லும் உவமை எனக்குப் புரியவில்லை.

 

2)

ஓதி மரமது ஓங்கிப் பெருத்தும்
ஓர்தூண் ஆகிடுமோ? - புவி
ஓதும் மறையின் உண்மைப் பொருளை
ஊரார்  அறியாரா?

--> இப்பாட்டில் சொல்லும் உவமை எனக்குப் புரியவில்லை.
--> ஓதி மரம் = ?
 

3)

பச்சை, சிவப்பு, கறுப்பெனும் வண்ணம்
பாரில் பிறிதாமோ? - விழி
இச்சகந் தன்னிலே வெண்மை நிறத்தை
இப்படிக் காணலையா?

4)

வக்கிரம் எட்டுடன்* வந்தவர் நின்றால்
வையமே போற்றாதோ? - நாம்
ஐக்கியம் ஆனபின் அண்டங்கள் எங்கும்
ஆண்டவன் காணோமோ?
(அட்ட வக்கிரர்)

5)

சாதி மதமெனச் சண்டைகள் செய்யெனச்
சாத்திரம் கூறிடுதோ ? - ஒரு
பேதம் இலையெனப் பேசிடும் வேதம்
பேதைமை நீக்காதோ?

6)

குட்டையும் நெட்டையும் கோணல் குறுகலும்
குற்றமாய் ஆவதுண்டோ? - இங்குப்
பட்டையும் நாமமும் இட்டவர் எல்லாம்
பக்தர்கள் ஆகுவரோ?

--> இப்பாட்டில் சொல்லும் உவமை எனக்குப் புரியவில்லை.

Lalitha & Suryanarayanan

unread,
Jul 18, 2016, 11:55:43 AM7/18/16
to santhav...@googlegroups.com
நன்றி சிவசிவா.

பொதுவாக, இந்தப்  பாடலில்  உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்னும் கருத்தும் கோணல் மனத்தில்தான்   இருக்கக் கூடாது என்னும் கருத்தும், பிறருக்குப் பயன்படாமல் வளர்ந்து இருப்பதால் எந்தப் பயனும் இல்லை என்னும் கருத்தும், வெளித்தோற்றத்தினால் ஒருவரை நாம் எடையிடக் கூடாது என்னும் கருத்தும் கூற முயன்றுள்ளேன்..

1)

கோணலாம் தென்னை கொடுக்கும் இளநீர்
கொஞ்சம் கசந்திடுமா ? - நாம்
காணும் பொருள்கள் கடவுள் எனமறை
காட்டல் நிசமிலையா?

--> இப்பாட்டில் சொல்லும் உவமை எனக்குப் புரியவில்லை.

கடவுளால் படைக்கப் பட்ட எல்லாவற்றிலும் கடவுள் இருக்கின்றான் என்பதால் கோணல், குறுகல் போன்ற விகாரங்களைக் கொண்டு எதையும் மதிப்பிடக் கூடாது. கோணலாம் அந்த வடிவத்தைப் போர்த்துக் கொண்டும் அந்த இறைவன் இருக்கின்றான் என்பதை நினைவூட்டுகிறது.


 

2)

ஓதி மரமது ஓங்கிப் பெருத்தும்
ஓர்தூண் ஆகிடுமோ? - புவி
ஓதும் மறையின் உண்மைப் பொருளை
ஊரார்  அறியாரா?

--> இப்பாட்டில் சொல்லும் உவமை எனக்குப் புரியவில்லை.
--> ஓதி மரம் = ?

 ஓதி மரம் என்பது  ஓங்கி  நன்றாய் வளரும் என்றும் ஆனால் அது தூணாகப் பயன்படாது என்றும் ஒரு பழமொழி சொல்லும். பிறருக்குப் பயன்படாமல் இருக்கும் அதன் வளர்ச்சியினால் ஒரு பயனும் இல்லை. அதுபோலப் பிறருக்குப் பயன்படாமல் இருக்கின்றவன் இருந்தென்ன என்று சொல்வதுண்டு.." ஒதி பெருத்தென்ன, உபகாரம் இல்லாதவன்   வாழ்ந்தென்ன" என்றும் பழமொழி உண்டு.

"நடமாடக் கோயில் நம்பர்க்கொன்று ஈயின்
படமாடக் கோயில் பகவற்க தாமே"

மற்றவர்களுக்குச் செய்கின்றவை இறைவனைப் போய்ச் சேருகின்றன என்கின்றது வேதங்கள். ஆகையால்  ஓங்கி  உய்ர்ந்து வளர்ந்து ஓதிமரம் போல் இருப்பவனால் பயனென்ன? அதன் வளர்ச்சியாகிய   தோற்றத்தை வைத்து எடை போடலாகாது.


6)

குட்டையும் நெட்டையும் கோணல் குறுகலும்
குற்றமாய் ஆவதுண்டோ? - இங்குப்
பட்டையும் நாமமும் இட்டவர் எல்லாம்
பக்தர்கள் ஆகுவரோ?

--> இப்பாட்டில் சொல்லும் உவமை எனக்குப் புரியவில்லை.

இயற்கையாய் ஏற்பட்டுள்ள வெளித்தோற்றத்தினால் பெருமையும் இல்லை, சிறுமையும் இல்லை. நாமாகச் செய்து கொள்கின்ற வெளிவேஷங்களினாலும் பெருமையில்லை. 

நன்றி.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Jul 18, 2016, 12:06:01 PM7/18/16
to santhav...@googlegroups.com
நன்றி யோகியாரே.

சிவசூரி.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 18, 2016, 11:13:26 PM7/18/16
to சந்தவசந்தம்
சூரி,

உவமைப் பொருத்தம் பற்றிய உங்கள் விளக்கம் கண்டேன். எனினும் உவமான - உவமேயத் தொடர்பு முழுமையாக அமையவில்லை என்றே எனக்கும் படுகிறது. 

அனந்த்

Lalitha & Suryanarayanan

unread,
Jul 20, 2016, 12:40:21 AM7/20/16
to santhav...@googlegroups.com
பேராசிரியருக்கு நன்றி. அப்பாடலை மீண்டும் பார்க்கின்றேன். அதைச் சரிசெய்ய முயல்வேன்.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Jul 20, 2016, 7:11:59 AM7/20/16
to santhav...@googlegroups.com
பேராசிரியர் அனந்த் அவர்களுக்கும் சிவசிவா அவர்களுக்கும் வணக்கம். என்னால் முடிந்தவரை கோணலை நிமிர்த்த முயன்றுள்ளேன். தயவு செய்து பார்க்க வேண்டுகிறேன்.

நன்றி.
சிவசூரி.
                            

கோணல் தென்னை

1)

கோணலாம் தென்னை கொடுக்கும் இளநீர்
கொஞ்சம் கசந்திடுமா ? - எட்டுக்
கோணல் உடல்முனி சீருடன் ஞானக்
குன்றாய்த் திகழலையா?

2)

குட்டையும் நெட்டையும் கோணல் குறுகலும்
குற்றமாய் ஆவதுண்டோ? -  அவை
நிட்டையும் ஞானமும் கைவரும் பாதையை
நின்று தடுப்பதுண்டோ?


3)

பூணும் புரிநூல் புகழைத் தருமோ
பொய்யில் புரண்டிருந்தால்? - ஒரு
கோணல் மனத்தில் குடியிருந் தால்தான்
குறையாய் ஆகிடுமே!

4)

கோணல் வழியினில் செல்வது தானே
குற்றங் குறையாகும்! - நாம்
பேணுங் குலநெறி பேணா திருப்பதே
பென்னம் பிழையலவா?

5)

கொள்ளெனச் சந்தனம் அள்ளிக் கொடுத்தவள்
கூனும் நிமிர்ந்ததுவே - அவள்
வெள்ளை மனத்தால் வினைப்பயன் நீங்கிட
விந்தை விளையலையா?

6)

வாணி அருளினால் கண்ணிலாப் பாவலர்
வாக்குப் பெருகலையா? - புள்
கோணல் மரத்தினில் கட்டிய கூட்டில்
கொஞ்சி மகிழலையா?

7)

ஓங்கி வளரும் ஒதிய மரத்தால் - இந்த
உலகில் பயனுண்டோ? - பின்
ஈங்கோர் உதவியும் செய்யார் வளத்தால்
இப்புவிக் காவதென்ன?

8)

பச்சை, சிவப்பு, கறுப்பெனும் வண்ணம்
பாரில் பிறிதாமோ? - விழி
இச்சகந் தன்னிலே வெண்மை நிறத்தை
இப்படிக் காணலையா?

9)

சாதி மதமெனச் சண்டைகள் செய்யெனச்
சாத்திரம் கூறிடுதோ ? - ஒரு
பேதம் இலையெனப் பேசிடும் வேதம்
பேதைமை நீக்காதோ?

10)

பட்டையும் நாமமும் இட்டவர் எல்லாம் - பெரும்
பக்தர்கள் ஆகுவரோ? - நாம்
இட்டிடும் வேடம் இறைவனை நம்மிடம்
ஈர்த்து வருவதுண்டோ?

11)

முப்போதும் நீரினில் மூழ்கிக் குளிப்பவர்  
முற்றுந் துறந்தவரோ? - அவர்
செப்பலும் செய்வதும் வெவ்வே றானால்
சீரைத் தருவதுண்டோ?


சிவசூரி.



Vis Gop

unread,
Jul 21, 2016, 1:29:19 AM7/21/16
to santhav...@googlegroups.com
உங்கள் பாடலின் கருத்து மிக உயர்ந்தது. அது இதுதானே!

உள்ளத்தின் கோணலே கோணல்; உருக்கோணல்
எள்ளுவ தென்ப திழுக்கு!

பென்னம் பிழை?    பென்னம் பெரிய என்று படித்திருக்கிறேன். பென்னம் தனியாக வருவதை முதலில் இங்கு பார்க்கிறேன்.

முப்போதும் நீரினில் மூழ்கிக் குளிப்பவர்  
முற்றுந் துறந்தவரோ?
முப்போதும் 3 முறை மூழ்குவது துறவிகளுக்கு மட்டும் விதிக்கப் பட்ட ஆசாரம் இல்லை. இல்லறத் தருமம் ஏற்ற அந்தணர்கள் அனைவருக்குமே அது ஆசார நியதியாகும்.

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Lalitha & Suryanarayanan

unread,
Jul 21, 2016, 2:38:05 AM7/21/16
to santhav...@googlegroups.com
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஒரு பிழையைச் சரிசெய்யப்போக வேறொரு பிழையில் கொண்டுவந்து விட்டது. " பென்னம் பெரும் " என்றுதான் முதலில் எழுதியிருந்தேன். அதைப் " பெரிதாம்" என்று மாற்றிக் கொள்கிறேன்.

நன்றி கோபால்.

சிவசூரி.

Subbaiyar Ramasami

unread,
Jul 21, 2016, 10:32:30 AM7/21/16
to santhav...@googlegroups.com
இவை அறுசீரிரட்டைச் சமநிலைச் சிந்துப்பாடல்கள். கும்மி இல்லை.

கவிதை மிகச் சிறப்பு


கீழைத் திசையிலே சென்றிருந் தாலே
மேற்கில் நுழையோமோ?    ஓசை குறைகிறது    சென்றிடும் போதிலே


Lalitha & Suryanarayanan

unread,
Jul 21, 2016, 11:26:58 AM7/21/16
to santhav...@googlegroups.com
நன்றி தலைவரே. உங்கள் கருத்தை நான் குறித்துக் கொண்டேன்.

நண்பர் ரமணி  தனிக்கவிதை 9 - " சூரியனுக்கோர் திசையில்லை" பாடலுக்குப் பின்னூட்டம் கொடுத்திருந்தார். தாங்கள் அப்பாடலையும், தனிக்கவிதை 11 " சருகுகள் "  பாடலையும் கூட பார்க்க வேண்டுகிறேன்.நன்றி.

சிவசூரி.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 21, 2016, 12:24:09 PM7/21/16
to சந்தவசந்தம்
கோபால் சுட்டியதையும் சேர்த்துத் திருத்தியபின் கவிதை செவ்வனே அமையும். பிறர் கருத்துகளை ஆய்ந்து, மனதார ஏற்றுக்கொள்ளும் உங்கள் தன்மை சிறப்பு. 

அனந்த்

Ramamoorthy Ramachandran

unread,
Jul 21, 2016, 6:52:43 PM7/21/16
to santhav...@googlegroups.com

கண்டிடவோர் காட்சியில்லை  உண்டிடற்கோ சோறுமில்லை 

    மண்டியநல்  லேழைமையை வாழ்த்தி - பெரு 

     மாயமிதன் முன்புதலை தாழ்த்தி - 

தெண்டி  ரையை  வென்றபல
சென்ம வலை சென்றுவரச் சீச்சியென நீக்கவழி பார்க்க - அதைச்
செய்யும்  வழியென்னிடத்திற் சேர்க்க
முன்னம்வரு சற்குருவின் முன்னம்அடி வீழுமுனம்
மூர்த்தியவர் சேர்த்தணைத்துக் கொண்டார் - அவர்
மூடமனந் தேறிவரக்
கண்டார்!
இன்னுமின்னு மின்னும்பல வேழையராஞ் சீடர்களை எப்படியோ தப்பிடவைத்
திட்டார்! - அவர்
இன்றுனையே கண்டிடவந் திட்டார்!
நன்றி, குருவாழ்க! குரு வே துணை! புலவர்  இராமமூர்த்தி.

Lalitha & Suryanarayanan

unread,
Jul 21, 2016, 8:33:21 PM7/21/16
to santhav...@googlegroups.com
பேராசிரியருக்கும் சிவசிவாவுக்கும் கோபாலுக்கும் நன்றி.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Jan 30, 2017, 10:42:37 PM1/30/17
to santhav...@googlegroups.com
தனிக்கவிதைகள் (புதிது) 13

கவியரங்கத்தில் படித்த கவிதையை அந்தக் கவியரங்க இழையிலே இட்டிருந்தேன். அதே தலைப்பில் எழுதி, ஆனால்  அங்கு படிக்காத கவிதைகளை இந்த இழையில் இடுகின்றேன் :

சித்தமிசைக் கொள்ளும் சிரத்தை 

சித்தமிசை முத்தமிடு சிரத்தையதன் பலனாய் - கவி
    சிந்துகிற செந்தமிழின் சந்தமதன் நலனாய்
நித்தமுள அத்தனெனும் பித்தனையே பாடி  - ஒளிர்
    நித்திலனை வித்தகனை நெஞ்சினிலே கூடி
கொத்துகிளி தத்திவர குயிலொலியைச் சேர்த்தான் - மதி
    கொண்டுகளி உண்டுகரம் கொட்டிடவே ஆர்த்தான்
இத்தரையில் சித்தனெனும் பரசிவமாம் புனலே - தான்
    ஏறியிவண் நேரில்வந்த பாரதியாம் கனலே.



தாரகையாம் காரிகைகள் கண்ணழகைப் பொழிய - ஒரு
   தண்ணிலவும் மண்மிசையில் பொன்னெழிலாய் வழிய
தூரிகைகள் வாரியருள் மாரியென எழுத - ஓர்
   சோதியனாம் வேதியனாம் சுந்தரனைத் தொழுத
பேரிகைகள் தேரில்வரும் தேவன்புகழ் ஓதும் - நம்
   பெம்மானின் செம்மேனிப் பேரழகு மோதும்
சூரிமனம் வாரியென தோத்திரங்கள் மெல்லும் - புதுச்
    சூலுடைய காலமென சோபனங்கள் சொல்லும்.

கடலோடு கடலாகும் நதியதுவாய் ஆடும் -  நம்
   கண்ணெதிரில் விண்ணோடு மண்மகளும் கூடும்
படர்ந்தாடும் சடையானாம் பதியுடனே ஒன்றாய் - இவன்
   பதிஞானம் மதியேறச் சேர்ந்ததனால் நன்றாய்
நடமாடும் தடம்பார்த்துப் பதம்பார்த்துச் சென்றான் - நம்
    நயனங்கள் கயமாக நமதுள்ளம் வென்றான்
அடடாவோ அடடாவோ என்றுசொல நெய்தான் - கவி
  அழகான பரசிவமாம் வெள்ளமதைப் பெய்தான்.

வானாகி புனலாகி அனலாகி மற்றும் - எழில்
    மண்ணாகி வளியான மாதேவன் சுற்றும்
தானாகி நிற்கின்ற தண்ணருளைக் கண்டான் - கவி
    தன்னாமம் கெட்டதனைச் சிவமாகக் கொண்டான்
மீனான தேவியவள் தேனான தேவன் - தன்
    மேனியுள்ளே எங்கணுமே நிறைந்ததனைக் கண்டான்
ஆனேறும் ஐயனவன் அணுஅணுவாய் உள்ளே - தன்
   ஆன்மாவை ஊடுருவி நின்றதையே சொன்னான்.

திண்ணமுடன் எண்ணுகிற திறமதுவே வேண்டும் - இதைச்
    செய்திடவே உய்திடவே பிறதவங்கள் வேண்டாம்
மண்மிசையில் கண்மூடி வாய்மூட வேண்டாம் - நாம்
    மந்திரங்கள் எந்திரம்போல் செபித்திருக்க வேண்டாம்
விண்மதியைத் தண்புனலை விரிசடையில் கொண்டான் - நம்
    மேனியுள்ளே தான்புகுந்து பாயுகிறான் என்றே
கண்ணுதலை எண்ணமதில் கருத்துடனே நிறுத்தி - அருள்
    கனல்வெள்ளம் தனைநினைத்தால் போதுமதே என்றான்.
சிவசூரி.
   
    
   

Subbaraman NV

unread,
Jan 30, 2017, 10:54:44 PM1/30/17
to santhav...@googlegroups.com
அழகாகச் சொன்னான், அருமையாகச் சொன்னான்! வாழ்த்துகள் சிவசூரி.
என் வி சுப்பராமன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101


Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

Vis Gop

unread,
Jan 31, 2017, 4:36:34 AM1/31/17
to santhav...@googlegroups.com
திண்ணமுடன் எண்ணுகிற திறமதுவே வேண்டும் - இதைச்
    செய்திடவே உய்திடவே பிறதவங்கள் வேண்டாம்
மண்மிசையில் கண்மூடி வாய்மூட வேண்டாம் - நாம்
    மந்திரங்கள் எந்திரம்போல் செபித்திருக்க வேண்டாம்     அருமை
விண்மதியைத் தண்புனலை விரிசடையில் கொண்டான் - நம்
    மேனியுள்ளே தான்புகுந்து பாயுகிறான் என்றே
கண்ணுதலை எண்ணமதில் கருத்துடனே நிறுத்தி - அருள்
    கனல்வெள்ளம் தனைநினைத்தால் போதுமதே என்றான்.    அருமை


பண்ணழகு சிவசூரி பாட்டழகுநித்தம் - அவர்
  பாரதியை எண்ணுகையில் பரவசமுருக்கம்!  
கண்ணுதலின் அருள்பொங்கும் கனல்வெள்ளம் தன்னில் - மனம்
   கரையுவரை நனைவமெனில் கரைசித்தியாகும்!
எண்ணமுயிர் ஊன்முழுதும் இறைமையொடு கூட - கலி
   இம்மையினில் திண்மையினை எவரெய்தக்கூடும்?
அண்ணலருள் ஆதரவும் ஆன்றபெருமக்கள் - சிலர்
   அன்றுசெய்த மாதவங்கள் அன்றிநனவாமோ?

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

Lalitha & Suryanarayanan

unread,
Jan 31, 2017, 10:32:15 AM1/31/17
to santhav...@googlegroups.com
கருத்துரைத்த அறிவுக் களஞ்சியம் சுப்பராமன் அவர்களுக்கும் நண்பர் கோபால் அவர்களுக்கும் நன்றி.

சிவசூரி.

Siva Siva

unread,
Jan 31, 2017, 6:53:07 PM1/31/17
to santhavasantham
Nice!

/மண்மிசையில் கண்மூடி வாய்மூட வேண்டாம் - நாம்
    மந்திரங்கள் எந்திரம்போல் செபித்திருக்க வேண்டாம்/

மண்மிசையில்?
மண்மிசை என்றுதானே வரும்?

/மந்திரங்கள் எந்திரம்போல் செபித்திருக்க வேண்டா/

In this modern age, I come across machines that keep chanting panchaksharam, ashtaksharam, etc. instead of people chanting them!


--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Subbaraman NV

unread,
Jan 31, 2017, 6:57:53 PM1/31/17
to santhav...@googlegroups.com
Yes; CHANTER BOX is widely used in several homes and shops!
N V Subbaraman

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
It is loading more messages.
0 new messages