#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
ஐங்குறுநூறு 241-250, கபிலர்
(திணை: நெய்தல்: செவிலித் தாய் கேட்குமாறு தோழி தலைவியிடம் சொன்னது)
இல்லத்தில் அடைபட்ட தலைவியின் உடல் மெலிவு நோயின் காரணத்தை அறிய அவள் தாயும் செவிலித் தாயும் வெறியாடலுக்கு ஏற்பாடு செய்தனர். வெறியாடல் அல்லது வெறியயர்தல் பற்றி வித்துவான் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் நூலில் அளித்த விளக்கம் கீழே வெண்பாக்கள் யாப்பில்.
ஐ025. வெண்பாவில் வெறியாடல்!
(வித்துவான் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் அளித்த உரைநடை விளக்கத்தினின்று
வெறியாம் நறுமணம், வேலன், முருகன்;
வெறுமையாய் மாறா விளமை — நறுமை
அழகொளித் தேற்றில் அவனி நடத்தும்
முழுமுதல் வத்தாம் முருகு. ... 1
[நறுமை: நறுமணம்; தேற்று: தெளிவு; முழுமுதல் வத்து: முழுமுதற் பொருள்]
செங்கதிரோன் போல்நிறச் சேயோன் முதற்கண்டு
அங்கம் அகமகிழப் போற்றினர் — துங்கக்
குறிஞ்சிநில மக்கள் குரவைக்கூத் தாடி
மறியறிந்து பூத்தளிரு வந்து. ... 2
முதன்மகன் உள்ளம் முருகன்கண் தோய
புதுத்தளிரும் தேன்மலரும் பூப்பலியாய்த் தந்த
முதல்வழி பாடு; உயிர்ப்பலியும் பின்னே
பொதுவான ஏத்துவழிப் போக்கு. ... 3
பூவும் தளிரும் புகையும் நறுமணமாய்
வெறிக்களம், ஆடல் வெறியயர்தல் என்பர்
வெறியென்றே வேலனுக்கும் பேர். ... 4
வெறிமனை மக்கள் நெறியோ டொழுக
வெறியறி சீர்கொளும் வெவ்வாயன் வேலனென்று
வேற்படைக் கையேந்தி மூத்தோனாய் ஓர்மனிதன்
காற்பதம் காட்டநிற் பான். ... 5
வெறிக்கள வட்டநடு வேற்படை நட்டு
வெறிமனை சந்துகள் மேவும் இடத்தைச்செல்
லாற்றுக் கவலை எனவே முருகனைப்
போற்றுமிடம் கொள்ளும் புகழ். ... 6
[செல்லாற்றுக் கவலை: பல தெருக்கள் கூடுமிடம்]
வெறியயர வேண்டுவோர் வேலற் குணர்த்த
வெறிமனை மேற்சொற் கவலை இடத்தில்
புதுமணல் நன்கு பரப்பியே, போற்றும்
பொதுவேல் நடுவிருத்து வான். ... 7
செந்நெல்லின் வெண்பொரியும் வாசமிகு பூக்களும்
அந்நிலம் எங்க்கும் சொரிந்தே அழகுறுத்தி
மேற்பந்தர் வேய்ந்து மிகவினிய காட்சியாய்
வேற்கொண்டு காணும் வெறி. ... 8
மறியறுத்துச் செந்தினையில் செங்குருதி பெய்து
வெறிமனையில் தூவிப்பல் வேறியங்கள் ஓசையில்
கைமணி ஆர்க்கக் கரப்புகை, பூப்பலி
மைமகள்கு றிஞ்சிப்பண் பாட்டு. ... 9
[இயங்கள்: வாத்தியங்கள்; மைமகள்: மையுண் விழி மகளிர்]
வனப்பிளமை கொண்ட மகள்நலம் குன்றின்
கனத்த முதுமகளிர் மூலம் கழங்குகட்டு
கொண்டே நலிவுக் குறைதீர அன்னையவள்
கண்டாராய் தல்முதற் கண். ... 10
வேலனைக் கொண்டு மெலிவுக்குக் காரணம்
கோலின், வெறியயர்தல் கூத்தினால் நோய்தீரும்
என்பான் மகளின்தாய் ஏற்றால் வெறியாடல்
என்னும் சடங்கின் நிகழ்வு. ... 11
இளமகளை நீராட்டி ஒப்பனை செய்து
களத்தில் நிறுத்தியபின் கூத்து தொடங்கும்;
முருகவேள் தன்மேல்வந் துற்றதாக வேலன்
பரவசத் தோடாடு வான். ... 12
வெறியாட்டம் ஓய்ந்ததும் வேலன் முருகன்
குறிசொல்வான் கொட்டிக் கழங்குகள் அள்ளியெடுத்(து)
எண்ணி முருகால் மெலிவுநோய் வந்ததென்பான்
திண்ணம் அவனது தீர்ப்பு. ... 13
மகளிர் சிலரும் மருண்டாடல் செய்வர்
உகந்தே முருகனைப் பாடி இசைப்பர்
முருகனால் உண்டான நோய்க்கு வேலன்
மருந்தாய் அளிப்பான் மலர். ... 14