ஈற்றடி: அடிமூன் றளந்தா னடிஅடியளந் தான்படி வாழும் நமக்கு
அடிகொளும் இல்லம் அவனே - அடியார்
அடியே அழகாய் அமர்த்தும் அமுதாம்
அடிமூன் றளந்தா னடி 1
அடியார் மனமதை ஆளும் அடியே
அடியார் நலமெலாம் நல்கும் - அடியே
அடியார்க் கரணே அமுதே அதுவே
அடிமூன் றளந்தான் அடி 2
ஓங்கி வளருமே உன்னத மானதே
வாங்கி மனதில் இருத்தவே - வீங்கும்
செடிவினை தீர்க்கும் உயர்பதம் ஈயும்
அடிமூன் றளந்தான் அடி 3
புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்