Fwd: Mr V Ikshuvanam (Life Member & Former Vice President ) of Sri Ruthra Kaliamman Temple Passes away

144 views
Skip to first unread message

K.R.Kumar

unread,
Sep 5, 2013, 1:26:53 AM9/5/13
to santhav...@googlegroups.com
For information to those who know Ikkuvanam Ayya

K.R.Kumar

Sent from my iPhone

Begin forwarded message:

From: "SRKT" <sr...@pacific.net.sg>
Date: 5 September 2013 13:21:42 GMT+08:00
To: "SRKAT_Rama" <rama...@yahoo.com>, <krk...@singnet.com.sg>, <nsa...@yahoo.com>, <ap...@jaygee.com.sg>, <ther...@hotmail.com>, <bal...@live.com>, <retn...@gmail.com>, <bhuva...@hotmail.com>, <raje...@keppelshipyard.com>, <mpe...@nus.edu.sg>, <che...@montreal.com.sg>, <shanth...@lta.gov.sg>, "'Kalaichelvan S/O PONNUSAMY \(JTC\)'" <Kalaich...@jtc.gov.sg>, <kan...@gmail.com>, "G.E.N.G.A ." <godes...@hotmail.com>
Cc: <vr.ala...@gmail.com>, <krish...@gmail.com>, <che...@starhub.net.sg>, <srkt...@gmail.com>, <rajen...@yahoo.com.sg>, <cutedu...@yahoo.com>, <vtham...@gmail.com>
Subject: Mr V Ikshuvanam (Life Member  & Former Vice President ) of Sri Ruthra Kaliamman Temple Passes away

Dear Sirs
 
Regret to inform you that  Mr V Ikshuvanam (Life Member  & Former Vice President ) of Sri Ruthra Kaliamman Temple passed away peacefully today morning.
 
Wake will be held at

Blk 201  #02-37 Clementi Avenue 6 Singapore – 120201

 

Funeral will be held today (Thursday, 5 September 2013) evening at 5.00 pm.

 

Contact No. of his Sons are as follows :

  •                                 Mr I Balasubramaniam Hp : 9697 8150
  •                                 Dr I Swaminathan,         Hp : 9770 9300

We've arranged for a wreath to be sent on behalf of our Temple.

 

Regards

C Vijayakumar

 
THINK GREEN -  Please consider the environment before printing this email
 
 

Kaviyogi Vedham

unread,
Sep 5, 2013, 3:23:17 AM9/5/13
to santhavasantham
Dear Kumar,
Aseers. I am very sorry to hear the News, as i know him thro' my dear friend Ananth, when i went there in 2006, and he gave his book on Venbas.
 May his Soul rest in peace.இக்கு என்றால் கரும்பு அலவோ?
 இனிய கவிகள் தந்தக் கரும்பு வனம் சாய்ந்துவிட்டது நெஞ்சில் வருத்தம் அளிக்கின்றது,
 யோகியார்


வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115
 Present camp..Bangalore till oct13.. so present ..
cel. no.09686679017

Pas Pasupathy

unread,
Sep 5, 2013, 3:31:59 AM9/5/13
to santhav...@googlegroups.com
வெண்பாச் சிற்பி இக்குவ‌னம் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


2013/9/5 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

Lalitha & Suryanarayanan

unread,
Sep 5, 2013, 3:51:11 AM9/5/13
to santhav...@googlegroups.com
நான் சிங்கையில் இந்தியன் வங்கியில் பணிபுரிந்த காலத்தில் வெண்பாச் சிற்பி இக்குவனம் அவர்களுடன்
நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவருடைய சித்திரக் கவிதைகளையும் விதவிதமான வெண்பாக்களையும் கண்டு வியந்திருக்கிறேன்.

இறைவன், இறைவியரின் சஹஸ்ர நாமங்களைத் தமிழாக்கி மக்கள் பொருளைப் புரிந்துகொண்டு வழிபடுவதற்கு உதவிய நல்ல மனிதர் அவர்.

அவருடைய மறைவில் தமிழினம் ஓர் அரும்பெரும் கவிஞரை  இழந்துவிட்டது. சிங்கை வாழ் மக்கள் ஓர் உயர்ந்த மனிதரை இழந்துவிட்டனர்.

அவர்களின் மறைவுக்கு என் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு இக்குவனம் அவர்களுடைய ஆன்மா எல்லாம் வல்ல இறைவனடி சேர்ந்திருக்கும் எனபதில் ஐயமில்லை.


சிவ சூரியநாராயணன்.


2013/9/5 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Krishnamoorthy Premkumar

unread,
Sep 5, 2013, 4:01:52 AM9/5/13
to santhav...@googlegroups.com
அன்புள்ள திரு.சிவசூரி அவர்களே, 
நான் இதுவரை திரு.இக்குவனம் அவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை. தயவு செய்து அன்னார் இயற்றிய சில கவிதைகளைத் தங்களிடமிருந்தால், வெளியிடவும். என் போன்றோர் அவருடைய பெருமைகளைப் புரிந்துகொள்ள உதவும்.
நன்றி 
பிரேமு 


2013/9/5 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
"நற்றுணை யாவது நமச்சி வாயவே"

Lalitha & Suryanarayanan

unread,
Sep 5, 2013, 4:14:47 AM9/5/13
to santhav...@googlegroups.com

கவிஞர் வைரமுத்து அவர்களைப் பற்றி வெண்பாக்களால் ஆன ஒரு காப்பியமே செய்திருந்தார் வெண்பாச் சிற்பி . அவர்கள் எனக்குக் கொடுத்திருந்த அந்த நூல் இப்போது என் கைவசம் இல்லை.வேறு ஏதேனும் கவிதைகள் கிடைத்தால் இடுகிறேன். இந்த மன்றில் இருக்கும் வேறு எவரேனும் உதவக் கூடும்.

சிவசூரி.



2013/9/5 Krishnamoorthy Premkumar <krsna...@gmail.com>

N. Ganesan

unread,
Sep 5, 2013, 7:39:09 AM9/5/13
to santhav...@googlegroups.com, tamil-...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil


On Wednesday, September 4, 2013 10:26:53 PM UTC-7, குமார்(சிங்கை) wrote:
For information to those who know Ikkuvanam Ayya


கவிஞர் இக்குவனம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
இக்குவனம் ஐயாவின் கவிதை வாழ்க்கை:


இக்குவனம் பற்றி இலந்தை (2008)

பின்முடுகு வெண்பா:

> இக்குவனம் என்னும் இனியதமிழ்ப் பாவாணர் 
> எக்கணமும் பாடல் இயற்றுகிறார்- இக்கால 
> கட்டத்தமிழ் கட்டத்தமிழ் கட்டத்தமிழ் என்றத்தமிழ் 
> இட்டத்தமிழ் என்றிட்டனர் இன்று. 

-----------

நா. கணேசன்

Subbaier Ramasami

unread,
Sep 5, 2013, 8:05:20 AM9/5/13
to சந்தவசந்தம்
மிறைப்பா வேந்தர் இக்குவனம்
    வித்த கத்தைக் கண்டவன்நான்
சிறப்பாய் அவர்போல் புதுப்புதிதாய்
     சித்திரப்பா வரைந்தவர்யார்?
தெறிப்பாய் அவர்செய் பாக்கண்டே
      சித்திர ரப்பா  என்கின்ற
துறைப்பா  தன்னில்பாப்புனையும்
      துணிவைப் பெற்றேன், புகழ்வாழ்க!

இலந்தை நாற்ப தெனும் பெயரில்
       இவர் செய் தளித்த பாமாலை
நலமாய் எழுதித் தருவனனென
        நவின்றார் என்பால் வரவில்லை
சிலவே என்ப தில்லாமல்
        செலவைக் கூடக் கருதாமல்
பலவாய் அச்சிட் டளித்துள்ளார்    
        பரந்த மனத்தர் புகழ் வாழ்க!


சிங்கப்பூரில் நான் தங்கியிருந்ததென்னவோ சில நாட்கள்தான்.  அதற்குள் என்னைப்பாராட்டிப் பாமாலை வடித்தவர் அவர்.    அமரர் கோபாலையர் எழுதியுள்ள இலக்கணத்தொகுதி முழுதையும்
“தகுதியான ஒருவரிடம் இதனைச் சேர்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். பெற்றுக்கொள்ளுங்கள்   ”என்று சொல்லி என்னிடம் தந்தார்.  .செம்மொழிக்காவலர் என்னும் தலைப்பில் அவர் கலைஞர் கருணாநிதியைப் பற்றி  எழுதியுள்ள புத்தக வெளியீட்டிற்கு என்னையும் பேச அழைத்திருந்தார்.  அப்பொழுது அவரைப்பற்றி அன்னபந்தம்,   உடுக்கை பந்தம்  ஆகியவை எழுதி” இவர் எல்லோருக்கும் அன்னபந்தம் எழுதிக்கொடுக்கிறார், இவருக்கு யார் கொடுப்பார், எனவே நான் எழுதிக்கொடுக்கிறேன்” என்று சொல்லி அந்த அவையில் வாசித்தளித்தேன். அவர் மிக மகிழ்ந்தார். அங்கே அவருக்குத் தமிழழகனை அறிமுகம் செய்தேன். தமிழழகன் எழுதியுள்ள காமாட்சி அலங்காரத்தைத் தன் சொந்தச் செலவில் புத்தகமாக வெளியிடுவதாக இக்குவனம் சொன்னார். தமிழழகன் மேற்கொண்டு முயற்சி எடுக்காததால் அது நிறைவேறவில்லை.

இக்குவனம்  தமிழுக்குப் புதுவழியில் தொண்டு செய்தவர். அன்னார் புகழ் வாழ்க!

அவருக்கு நான் எழுதியளித்த பாடலை அடுத்த இடுகையில் இடுகிறேன்

இலந்தை






2013/9/5 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Sep 5, 2013, 8:23:34 AM9/5/13
to சந்தவசந்தம்
அமரர் , மிறைப்பா வித்தகர் இக்குவனம் அவர்களைப் பாராட்டி நான் எழுதியளித்த அன்னபந்தம்


2013/9/5 Subbaier Ramasami <elan...@gmail.com>
annapantham.jpg

Subbaier Ramasami

unread,
Sep 5, 2013, 8:26:31 AM9/5/13
to சந்தவசந்தம்
அமரர் இக்குவனம் அவர்களுக்கு நான் அளித்த உடுக்கை பந்தம்.

உடுக்கை பந்தம்(டமருக பந்தம்) என்று ஒன்று இருப்பது எனக்குத் தெரியாது.  உங்கள் கவிதைப் படிஹ்ட்த பின்பு நானும் எழுதுகிறேன் ‘ என்றார்.)



2013/9/5 Subbaier Ramasami <elan...@gmail.com>
udukkaipanham.jpg
Iirattainagam.jpg

Subbaier Ramasami

unread,
Sep 5, 2013, 8:27:43 AM9/5/13
to சந்தவசந்தம்
அமரர் இக்குவனம் அவர்கள் அழைப்பிதழையே  இரதபந்த மாக்கியிருக்கிறார். இதோ  அது:


thEr_chitthiraikkavi.bmp

Subbaier Ramasami

unread,
Sep 5, 2013, 8:29:52 AM9/5/13
to சந்தவசந்தம்
அவர் சந்தவசந்தஹ்த்டிற்கு நன்கு அறிமுக மானவர். சமீபத்தில் அவரது பிந்துமதி வெண்பாவை அனந்த் அனுப்பியிருந்தார். அவருடைய திருவெழுகூற்றிருக்கை, பின்முடுகு வெண்பா ஆகியவற்றைப் பற்றிப் பேசியிருக்கிறோம்.
இலந்தை

PRASATH

unread,
Sep 5, 2013, 8:31:49 AM9/5/13
to santhav...@googlegroups.com
ஐயா,
 
அறிய தகவல்களைத் தெரிய தந்தமைக்கு நன்றி ஐயா...
 
( எனக்கு இந்த பந்தங்கள் எழுதும் முறை பற்றி ஒரு தனி திரியில் விளக்கம் தர முடியுமா ஐயா... பார்ப்பதற்கும், படிப்பதற்கும் அருமையாக உள்ளது. எழுத எத்தனை முயற்சி செய்தாலும் வர மாட்டேன்கிறது...)

Iyappan Krishnan

unread,
Sep 5, 2013, 8:34:36 AM9/5/13
to சந்தவசந்தம்

2013/9/5 PRASATH <pras...@gmail.com>

அறிய தகவல்களைத் தெரிய தந்தமைக்கு நன்றி ஐயா...

அரியத் தகவல்களை அறியத் தந்தமைக்குன்னு சொல்ல வரியா பிரசாத்து ?



Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

PRASATH

unread,
Sep 5, 2013, 8:49:56 AM9/5/13
to santhav...@googlegroups.com
அரிய கூகுள் டிரான்சிலேட்டரால அறிய ஆயிடுச்சு அண்ணா...
 
பிழையைப் பொறுத்தருளவும்... 


2013/9/5 Iyappan Krishnan <jee...@gmail.com>
 

Subbaier Ramasami

unread,
Sep 5, 2013, 8:56:21 AM9/5/13
to சந்தவசந்தம்
கவிஞர் இக்குவனம், தமிழழகன், இலந்தை

Subbaier Ramasami

unread,
Sep 5, 2013, 8:57:06 AM9/5/13
to சந்தவசந்தம்



2013/9/5 Subbaier Ramasami <elan...@gmail.com>
இக்குவனம்.bmp

Subbaier Ramasami

unread,
Sep 5, 2013, 9:05:06 AM9/5/13
to சந்தவசந்தம்
அவரது செம்மொழிக்காவலர் நூல் வெளியீடு திரு. கே .வீரமணி தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது எடுத்த புகைப்படம்
ikkuvanam3jpg.jpg

Subbaier Ramasami

unread,
Sep 5, 2013, 9:06:31 AM9/5/13
to சந்தவசந்தம்

--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 5, 2013, 1:02:32 PM9/5/13
to சந்தவசந்தம்
2003-2008 ஆண்டுகளில் நான் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்துடன் தொடர்புகொண்டு அங்குச் சென்றிருந்த வேளைகளில் கவிஞர் வெண்பாச்சிற்பி திரு. இக்குவனம் அவர்களைச் சந்தித்து, நட்புப் பூணும் பேறு பெற்றேன். வயது வேறுபாடின்றி அவர் என்னுடன் பழகி எனக்கு மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவரானார். அவரது மறைவு என்னைக் கண்கலங்க வைக்கிறது. இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் ஆழங்கண்ட அப்பெருமகன் தம்முடைய மகன், மகள் குடும்பங்களோடு ஒரே கட்டிடத்தில் வசித்து வந்தார். அவருடைய குடும்பத்தினருடன் தொலைபேசித் தொடர்பு கொண்டபோது, இன்று காலை (5-ஆம் தேதி) அவர் தமது பூஜையை முடித்துவிட்டு மூச்சுத் திணறுவதாக உணர்ந்ததாகவும் சிலநேரத்தில் அமைதியாக உயிர்துறந்ததாகவும் அறிந்தேன்.

திரு. இக்குவனம் அவர்களைப் பற்றி நான் இக்குழுவில் முன்பிட்ட இடுகைகளை இச்சமயத்தில் அவருக்குச் செய்யும் அஞ்சலியாக இங்கே மீள்பதிவு செய்கிறேன்.

அனந்த் 5-9-2013

----------------------

பிப்ருவரி 6, 2003  

நண்பர்களே:

      சிங்கப்பூரில் வாழுகின்ற, வயதிலும் அறிவிலும் முதிர்ந்த பெருங்கவிஞர் திரு. இக்குவனம் அவர்கள் "வெண்பாச்சிற்பி" என்ற பட்டம் பெற்றவர். ஆயிரக்கணக்கில் வெண்பாக்கள் படைத்துள்ள இவர் அவற்றில் சிலவற்றை நூல்களாக வெளியிட்டுள்ளார். இன்னும் ஏராளமானவை பதிக்கப்பெறாமல் அவர் இல்லத்தில் உள்ளன. அறிஞர் அண்ணா அவர்களுக்கு வரவேற்புக் கவிதை வாசித்தளித்து அவரிடம் பாராட்டைப் பெற்றவர்.  'வாழும் கவியரசு வைரமுத்து' என்ற தம் நூலில் அக்கவிஞரின் பேரில் 500 வெண்பாக்களை அந்தாதி வடிவில் புனைந்துள்ளார். கவியரசர் அந்நூலின் தமது முன்னுரையில் இக்குவனத்தின் அருஞ்செயல்களை வானளாவப் புகழ்ந்துள்ளார். சிங்கைக் குடியரசின் முன்னாள் பிரதமாரான திரு. லீ குவான்யூ அவர்களைப் பற்றியும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜப்பார் அவர்களைப் பற்றியும் அந்தாதிப் பாடல்கள் வெளியுட்டுள்ளார், வெண்பா வேந்தர் என்று கவியரசு புகழும் இக்குவனம். மேலும், அமரர் ராஜீவ் காந்தி பேரிலும் திருமுருக கிருபானந்த வாரியார் பேரிலும் இரங்கல் அந்தாதிகளும் யாத்துள்ளார். எண்பதுக்கும் மேலான வயதுடைய இப்பெரியார் இன்னும் ஒவ்வொரு நாளிலும் நாற்பதும் ஐம்பதுமாக வெண்பாக்களை இயற்றியவண்ணம் உள்ளார்! எல்லாமே சொல்வளமும் கருத்தாழமும் கொண்டவை.  

      வெண்பா மட்டுமல்லாது பிற பாவினங்களிலும் இவருக்குள்ள தேர்ச்சியைக் கவிதைக் கனி, கவிதைக் கதம்பம் என்பன போன்ற இவரது நூல்களின் வாயிலாக அறியலாம். (அந்நூல்களிருந்து சில பாடல்களை எடுத்துக்காட்டுகளாகப் பின்னர் இங்கு இடப் பார்க்கிறேன்). இந்தச் சாதனைகளெல்லாம் போதாதென்று, திரு. இக்குவனம் சித்திரக் கவிகள் இயற்றுவதிலும் வல்லவர். இயற்றுவதற்குக் கடினமான இப்பாக்களை, இதுவரை யாருமே செய்திராத அளவிற்கு, நூல்களில் சொல்லப்படும் அத்தனை வடிவங்களிலும் அதற்கும் மேற்பட்ட புது வடிவங்களிலும் நூற்றுக்கணக்கில் சித்திரப் பாடல்களை எழுதியுள்ளார் இவர். அவற்றில் பெரும்பாலானவைகளைச் சிங்கப்பூரில் 2000-ஆம் ஆண்டில் தாமே அழகிய ஓவிய வடிவங்கள் கொடுத்துச் 'சித்திரக் கவிகள்' என்னும் தலைப்பில் பதிப்பித்தும் உள்ளார். சிங்கைப் பல்கலைக் கழகப் பேராசிரியரான திரு. சுப. திண்ணப்பன் தமது  'சிங்கப்பூர்ச் சித்திரக்கவிகள்' என்னும் கட்டுரையில் கவிஞர் இக்குவனத்தின் அருஞ்செயலை விவரித்துள்ளார். அவர் திறனை வியந்து புகழ்ந்துள்ள சாலமன் பாப்பையா, சுகிசிவம், ஆலந்தூர் மோகனரங்கன், நாரா நாச்சியப்பன், சிங்கைக் கவிஞர் முருகதாசன் ஆகிய பல கவிஞர்/அறிஞர்களின் பாராட்டுகளையும் அவர் சுட்டியுள்ளார். வெண்பாவில் தமக்குள்ள தேர்ச்சியின் விளைவாக, கவிஞர் இக்குவனத்தின் சித்திரக் கவிகளில் பெரும்பாலானவை வெண்பா வடிவத்திலேயே அமைந்திருப்பது நம் வியப்பை இன்னும் கூட்டுகிறது. பொதுவாக, மிறைக்கவிகளில் வெண்பாக்களை ஆளல் மிகக் குறைவு. இக்குவனத்தின் நூலில் 38 பட வடிவங்களில் 175 பாடல்கள் வெண்பா யாப்பில் உள்ளன! சித்திரம் அல்லாத மாலை மாற்று வெண்பா, "பிந்துமதி" வெண்பா (உயிரும் ஒற்றும் மாறிமாறி வருமாறு அமைந்த இப் புதுவகையில் இவர் அந்தாதியே படைத்துள்ளார்), வரி மடக்கு வெண்பா, ஒன்றிலிருந்து இரண்டு, மூன்று வெண்பாக்கள் வரும் வெண்பா, திரிபங்கி...என்று பற்பல படைப்புகளும் இக்கவிஞரின் நூலில் காணப்படும்.

(தொடரும்)



2013/9/5 Subbaier Ramasami <elan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 5, 2013, 2:00:15 PM9/5/13
to சந்தவசந்தம்
கவிதைக்கதம்பம், கவிதைக்கனி, பல வெண்பா அந்தாதிகள், சித்திரக்கவிகள் எனப் பற்பல அரிய நூல்களை ஆக்கியுள்ள புலவர் வெண்பாச் சிற்பி பட்டமங்கலம் வி.இக்குவனம் அவர்களுக்கு 2003-ஆம் ஆண்டு மேத்திங்களில் வே.ச.அனந்தநாராயணன் எழுதிச் சமர்ப்பித்த பாமாலை

                                       ~~~~~~~0O0~~~~~~~

இக்குவனம் என்னுமொரு பெருமேதை

வெண்பா:

மேம்பட்ட மங்கலத்து வித்தகராம் இக்குவனம்
தொட்ட தெல்லாம் தமிழணங்கின் - பூம்பட்டு
மேனிதனில் வெண்பா மிறைக்கவியாய் மாறுவதை

நானிலத்தில் கண்டோம் நயந்து. 

                                       <><><>O<><><>  

கட்டளைக் கலித்துறை:

பனியார் சடைஇறை பாலனின் பால்மிகப் பத்திகொண்டோய்!
கனியாய்க் கதம்பமாய்க் கன்னித் தமிழுன்றன் கைகளிலே  
தனியோர் அழகுள சிற்பமாய் மாறிடும் சாதனையை

இனியாங் கெவர்தம் மிடத்திலும் காண்டிலம் இஃதுமெய்யே!

                                       <><><>O<><><>                    

14-சீர் வண்ண விருத்தம்: தத்தனன தத்தனன தத்தனன தத்தனன தத்தனன தத்தனன தனதான


இப்புவியி லெத்தனைம கத்துவம்பு தைத்ததனை அற்புதக வித்திறமொ
…………டிசையோடே
…. இச்சையொடு முத்தமிழில் வித்தகர்கள் பற்பலரும் முற்கொணர வைத்தபெரு …………..மிறையோனின்

செப்பரிய நற்கருணை மிக்கபொழி யப்பெறுமிச் சொக்குமெழில் மிக்கவுடை
…………பெரியோன்ஓர்
…. தெற்றெதுவு மற்றதமிழ் முற்றிலுமு ணர்த்துவகைச் சொற்றிறமுங் கற்பனையும் …………திரளாக

முற்பிறவி யிற்புரியு நற்செயலொர் தக்கவகை முற்றியதெ னெனத்திகழு
…………மறிவோடு
…. மொட்டுவிரி சொற்சுவைக ளத்தனையு மிக்கவொளி முத்தெனக்க விச்சொரியு …………முதல்வோனிங்(கு)

எப்பொழுதும் சித்ரகவி இட்டிடுவி சித்ரகவி இக்குவன(ம்) மிக்கதொரு
…………பெருமேதை
….. எக்குறையு மற்றுலகில் வெற்றிபெறச் சுப்ரமணி பொற்பதம தைத்தொழுவ …………மிதுநாளே.

     

அனந்த்



2013/9/5 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Chandar Subramanian

unread,
Sep 5, 2013, 9:42:00 PM9/5/13
to santhav...@googlegroups.com
திரு இலக்குவனம் அவர்களின் சித்ரகவி மற்றும் இதர படைப்புகள் உள்ளனவா? சித்ரகவி குறிப்பிட்ட புத்தகங்கள் தமிழகத்தில் எங்கேனும் கிடைக்குமா?
 


--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 5, 2013, 9:43:04 PM9/5/13
to சந்தவசந்தம்

12-4-2006

நான் சிங்கப்பூரில் இருந்தபோது, வெண்பாச் சிற்பி கவிஞர் இக்குவனம் அவர்கள் தமது 'சிலேடை வெண்பாக்கள்-108' என்னும் நூலுக்கு என்னையும் கவியோகியாரையும் அணிந்துரை தரச் சொன்னார். என் உரையின் இறுதியில் நான் அவரையும் சிவபெருமானையும் ஒப்பிட்டு எழுதிய இரு சிலேடை வெண்பாக்கள்:

 

                    வெள்ளை விருப்பால் விடையில் உவப்பதால்

                    வெள்ளம் தலைகொண்ட மேனியினால் - எள்ளளவும்

                    ஓய்விலா துள்ள நடையால் உமைவிரும்பும்

                    நாயகனாம் நம்புலவர் காண்

 

                    சிவன்: வெண்ணீறு, வெண்மதி, வெள்ளெருக்கு ஆகிய வெண்நிறப் பொருள்களில் விருப்பமுடையவர்; காளை ஊர்தியில் உலவுவதில் மகிழ்ச்சியடைபவர்; கங்கையைத் தலையில் தாங்கும் உருவம் உடையவர்; எப்போதும் அம்பலத்தில் ஆடிக்கொண்டே இருப்பவர்; உமையை விரும்புபவர்.

                    புலவர் இக்குவனம்: வெண்பாவில் நாட்டமுடையவர் (வெண்பாவை 'வெள்ளை' என்று அழைப்பது வழக்கு); இலக்கியத் தொடர்பாகப் பிறர்க்குத் தாம் தரும் விளக்கத்தில் (அல்லது பிறரிடமிருந்து தாம் எதிர்பார்த்த விடை கிட்டுவதில்) மகிழ்ச்சி கொள்வார்; வெண்மையான அழகிய தலைமுடி கொண்டவர்; துளியும் ஓய்விலாத மன இயக்கம் கொண்டவர் (அல்லது தடங்கலில்லாத நடையில் செய்யுள் புனைபவர்); நட்புடன் உங்களை (நம்மை) விரும்புபவர்.

 

                    மதியுடையார் மங்கலம்சேர் மாடுடையார் ஆக்கும்

                    விதிபிறழல் தான்சகியார் வேண்டின் - எதிர்வருவார்

                    சித்திரப் பாவைவிழை சீருடையார் இக்குவனம்  

                    அத்திமுகன் தாதைக்கொப்(பு) ஆம்

 

                    சிவன்: திங்களைத் தலையில் அணிந்தவர்; நன்மைதரும் நந்தியை ஊர்தியாக உடையவர்; படைப்புத் தொழில் புரியும் பிரமன் (விதி) தமது முடியைக் கண்டதாகக் கூறி உண்மை தவறியதைப் பொறுக்காதவர்; அன்பர் துதித்து வேண்டுங்கால் நேரில் காட்சி அளிப்பவர்; அழகிய பார்வதியை விரும்பும் நலமுடையவர்.

                    கவிஞர் இக்குவனம்: நல்ல அறிவுடையவர்; பட்டமங்கலம் என்னும் நல்லூரைச் சேர்ந்த திருவுடையவர்; கல்வி, பொருள் செல்வம் (மாடு) உடையவர்; செய்யுள் விதிகளிலிருந்து பிறர் தவறுவதைப் பொறுக்க மாட்டாதவர்; நாம் அழைத்தால் உடனே வருகை தரும் நற்குணமுடையவர்; சித்திரக் கவிதைகள் எழுதுவதில் மிகுந்த விருப்பமுடையவர் என்ற புகழைப் பெற்றவர்.

 

... அனந்த்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 5, 2013, 10:17:36 PM9/5/13
to சந்தவசந்தம்
அவரது நூல்கள் பட்டியல்:

Inline image 1

என்னிடம் உள்ள அவர் தந்தவை:

சித்திரச் செய்யுள் Stamford Press, Singapore (2000)
The following are printed locally in several places in Singapore
கவிதைக் கனிகள்
வெண்பாவில் சிலேடைகள்

கவிதைக் கதம்பம்
இன்பநலக் காடு
ராஜீவ் இரங்கல் அந்தாதி

ananth







2013/9/5 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
திரு.இக்குவனம் கவிதைகள் பட்டியல்.jpg

Lalitha & Suryanarayanan

unread,
Sep 5, 2013, 11:15:34 PM9/5/13
to santhav...@googlegroups.com
வெள்ளை வெளேரென  வேட்டியும் மேலெழில் வெண்சட்டையும்
வெள்ளைத் திருநீறு மின்னிடும் நெற்றியும் மேதினியில்
கொள்ளை அழகினைக் கொட்டும் முகத்தின் குமிழ்சிரிப்பும்
கள்ள மிலாமல் இணைந்த கரும்பினைக் காண்பதெங்கே.

விரும்பிடும் வண்ணமே வெண்பாக்கள் போதும் விளைந்துவந்த
கரும்பு வனத்தாரின் கன்னித் தமிழாம் கவிமனத்தில்
அரும்பும் அழகினை அற்புத மாகிய ஆற்றலினை
இரும்பும் கவர்ந்திடும் காந்தத்தை ஈர்த்த திறையடியே.


சிவசூரி.





2013/9/6 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Sep 6, 2013, 2:31:38 AM9/6/13
to santhavasantham
அநந்த் அவர்களின் பாராட்டுரையும், நூல் பட்டியலும், இலந்தையாரின் பந்தம் மற்றும் புகழுரையும் படித்து என் கண்கள் இக்குவனம் ஐயாவை நினைத்துக்  கலங்கின.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 7, 2013, 6:31:40 PM9/7/13
to சந்தவசந்தம்
2003-ல் சிங்கப்பூர் ’இலக்கிய வட்டம்’ குழுவில் நான் பேசி முடித்தபோது, திரு. இக்குவனம் அவர்கள் பல வர்ணங்களில் வரைந்த மூன்று சித்திர கவிகள் கொண்ட வாழ்த்து மடல் ஒன்றை எனக்கு அளித்தது என் நெஞ்சை நெகிழ வைத்தது. அப்போதுதான் முதன்முறையாக அறிமுகப்படுத்தபட்ட எனக்கு அவர் மிகுந்த அன்போடும் பெருந்தன்மையோடும் அளித்த அந்த சித்திர கவி மடல் என்னுடைய அரிய பொக்கிஷங்களுள் ஒன்று. அதை இணைப்பில் காணலாம்.
திரு.இக்குவனம்-சித்திர கவிதைகள் on Ananth-2.jpg
திரு.இக்குவனம்-சித்திர கவிதைகள் on Ananth-1.jpg

Girija Varadharajan

unread,
Sep 7, 2013, 8:59:01 PM9/7/13
to santhavasantham

   இக்குவனம்இரங்கற்பா 

இஇ

திக்கு முழுவதும் தேடினும் யாம்காணோம்

இக்கு வனம்போல இன்னொருவர்- மிக்குபுகழ்

பெற்றவரென் றாலும் பெருமையுரை யாதவரை

எற்றைக்குக் காண்போம் இனி?  (1)                  

                                                

நிலைபெற்ற நற்புகழில் நின்றார் நிலைத்து

மலையென் றுறைந்திருந்தார் மாண்பில் - கலைமகளின் 

உற்றநல் மகனாக ஓங்கி வளர்ந்தாரை 

எற்றைக்குக் காண்போம் இனி? (2) 

 

விளங்கினார் வெண்பாவின் வேந்தராய்ச் சிங்கைக் 

களந்தன்னில் தம்திறமை காட்டி- வளம்மிகவாய்

உற்ற தமிழ்மொழியை ஓங்கிடச் செய்தாரை 

எற்றைக்குக் காண்போம் இனி?  (3) 


சித்திரப் பாப்பலவும் செம்மையுற யாப்பதில் 

முத்திரை வைத்தவராய் முன்னின்றார்-அத்துறையில் 

சற்றும் சளைக்காமல் சாதனைகள் செய்தாரை 

எற்றைக்குக் காண்போம் இனி?  (4) 


தேடல் மிகக்கொண்டு தேர்ந்தநல் ஞானமொடு 

பாடல் அவர்தந்தார் பல்வகையில் - நாடுபுகழ் 

கற்றவரா யிருந்தும் கர்வம் கொளாதாவரை 

எற்றைக்குக் காண்போம் இனி?  (5) 

                                                                                                            

வில்லினை நீங்குகிற வேகமுறு வாளியெனச் 

சொல்லினிக்கப் பாச்சொன்னார் சொக்கிடவே. - நல்லவிதம் 

கற்றோரைக் கண்டவுடன் காமுற் றணைவாரை 

எற்றைக்குக் காண்போம் இனி?  (6) 


முப்பால் நெறிதன்னை முற்றுமாய்ப் போற்றிநிதம் 

தப்பாமல் செய்தார் தமிழ்பணியை. - ஒப்பிலாப் 

பற்றால் தமிழ்ப்பா பரப்பியே வாழ்ந்தாரை 

எற்றைக்குக் காண்போம் இனி?  (7) 


துன்னரும் வேகம் துடிப்புடன் யாத்தவை

கன்னலாய்த் தித்திக்கக் கண்டுவந்தோம்.- அன்னதிறன், 

இற்றுப்போ காமல் இறுதிவரை யாத்தாரை

எற்றைக்குக் காண்போம் இனி?  (8)


வீழ்வதே இல்லாமல் வெற்றி இவர்கண்டார்

ஆழ்கடல் என்றான அன்புளத்தால்- வாழ்வினில் 

குற்றமே சேராக் குணக்குன்றாய் நின்றாரை 

எற்றைக்குக் காண்போம் இனி?  (9)


தன்னிரங்கற் பாவைத் தமதுயிர் போவதற்கு 

முன்னமிவர் யாத்தார் முழுவதுமாய்- அன்னதோர் 

பெற்றியில் வாழ்ந்த பெருமகனார் தம்மை 

எற்றைக்குக் காண்போம் இனி?  (10)         

                                        

          (சிங்கப்பூர் இலக்கிய வட்டம் – 8-9-2013)








                  

 


 

     

                   

 

         




VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 7, 2013, 9:41:53 PM9/7/13
to சந்தவசந்தம்
சிறப்பான நினைவாஞ்சலி.

அனந்த்


2013/9/7 Girija Varadharajan <girijavar...@gmail.com>

   இக்குவனம்இரங்கற்பா 


Girija Varadharajan

unread,
Sep 7, 2013, 9:48:50 PM9/7/13
to santhavasantham
அனந்த்,

ஒரு சிறிய ஐயம்.
 
நினைவஞ்சலி - நினைவாஞ்சலி - 

இரண்டில் எது சரி? அல்லது  இரண்டும் சரி தானோ? 

வரதராசன். 


2013/9/8 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Siva Siva

unread,
Sep 7, 2013, 9:56:10 PM9/7/13
to santhavasantham
சரமகவி என்ற சொல் பொருந்துமோ?


2013/9/7 Girija Varadharajan <girijavar...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 7, 2013, 10:10:05 PM9/7/13
to சந்தவசந்தம்
நினைவு தமிழ்ச்சொல் அஞ்சலி-சமஸ்கிருதம்; தமிழ்ப் புணர்ச்சிப்படி, நினவஞ்சலி; நாமாகவே உரிமையெடுத்துக்கொண்டு படைத்த சமஸ்கிருத ஸந்திப் படி, நினைவாஞ்சலி! :-))

அனந்த்


2013/9/7 Girija Varadharajan <girijavar...@gmail.com>
அனந்த்,

K.R. Kumar

unread,
Sep 8, 2013, 1:24:13 AM9/8/13
to santhav...@googlegroups.com
7ஆம் தேதி சிங்கை தமிழ் முரசில் வெளியிடப்பட்ட இக்குவனம் ஐயாவே எழுதிய இறுதி நிலைப் பாடல்(அந்தாதி வெண்பா வடிவில்) பீடீ எஃப் கோப்பாக அனுப்பியுள்ளேன். (முதல் இரண்டு பக்கங்கள்.).

மூன்றாவது பக்கம் ஒரு சிங்கை கவிஞர் (ந.வீ. சத்திய மூர்த்தி)  8-9-13 ஞாயிறன்று தமிழ் முரசில் வெளியிட்ட கவிதை.

அன்புடன்
குமார்(சிங்கை)


2013/9/8 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
Ikkuvanam.pdf

Kaviyogi Vedham

unread,
Sep 8, 2013, 2:22:00 AM9/8/13
to santhavasantham
ரொம்ப ரொம்ப ஜோரான வெண்பாக்கள்.. உருக்கமும், அவரது குண விசேடங்களும் உங்கள் வெண்பாக்களில் நகையில் பதித்த முத்துக்கள் போல் மின்னித் தெறிக்கின்றன ஒளியாய்.
 வாழ்க,
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115
 Present camp..Bangalore till oct13.. so present ..
cel. no.09686679017


2013/9/7 Girija Varadharajan <girijavar...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Sep 8, 2013, 9:30:23 AM9/8/13
to சந்தவசந்தம்
மனத்தை உருக்கும் கவிதை.

உயர்ந்த ஆன்மா!

இலந்தை


2013/9/8 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Sep 8, 2013, 11:12:30 AM9/8/13
to சந்தவசந்தம்
https://mail.google.com/mail/u/0/?tab=wm#search/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%


இங்கே அன்ன பந்தம் எப்படி எழுதுவது என்பதை விளக்கியிருக்கிறேன். காணவும்.

இலந்தை


2013/9/5 PRASATH <pras...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 8, 2013, 11:46:21 AM9/8/13
to சந்தவசந்தம்
மிகவும் உருக்கமான கவிதைகள். திரு.இக்குவனம் தமது இறுதிநிலைப் பாடலைப் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்து என்னிடமும் பிறரிடமும் காட்டியுள்ளார். அவரைப்போல நேர்மையான, இறையுணர்வும் தமிழ்க்காதலும் கொண்ட பெரும் மனிதரைக் காணல் அரிது.

அனந்த்


2013/9/8 K.R. Kumar <krish...@gmail.com>
7ஆம் தேதி சிங்கை தமிழ் முரசில் வெளியிடப்பட்ட இக்குவனம் ஐயாவே எழுதிய இறுதி நிலைப் பாடல்(அந்தாதி வெண்பா வடிவில்) பீடீ எஃப் கோப்பாக அனுப்பியுள்ளேன். (முதல் இரண்டு பக்கங்கள்.).

மூன்றாவது பக்கம் ஒரு சிங்கை கவிஞர் (ந.வீ. சத்திய மூர்த்தி)  8-9-13 ஞாயிறன்று தமிழ் முரசில் வெளியிட்ட கவிதை.

அன்புடன்
குமார்(சிங்கை)

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 6, 2013, 1:34:30 PM9/6/13
to சந்தவசந்தம்
திரு. இக்குவனம் நூல்களின் பட்டியலும் கிடைக்குமிடமும் காண: http://tinyurl.com/lufkayn

அனந்த்
முன் இட்டவை போக அவரது வேதமும் வேள்வியும், அழகுசௌந்தரி அந்தாதி, தெய்வத் தமிழ் மாலை, காரம் இனித்திடுமே காண் ஆகியவையும் என்னிடமுள. யாவும் அவர் தந்தவை.
Reply all
Reply to author
Forward
0 new messages