வினைத்தொகை வகைகள்

1,619 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 19, 2017, 9:05:21 AM9/19/17
to Santhavasantham
ஆகுபெயரின் வகைகளுக்கு நன்னூல் சூத்திரம் இருக்கிறது.
அதுபோல, வினைத்தொகையின் வகைகளுக்கு கவிஞர் இரமணி
போன்றோர் சூத்திரம் அமைக்க இயலும். அதற்கு அச்சாரமாக
வினைத்தொகை வகைகளும், ஒவ்வொரு பகுப்புக்கும் பல
எடுத்துக்காட்டுகளும் பார்க்கலாம்.

ஆகுபெயர் வகைகளாக 18 வகைகளைப் பகுத்து அவை ஒவ்வொன்றுக்கும்
எடுத்துக்காட்டுகளைக் கூறிப் பல இலக்கண நூல்கள் உள்ளன.

"பொருள் முதல் ஆறோடு அளவைசொல் தானி
கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்
தொன்முறை உரைப்பன ஆகுபெயரே"
                                     - நன்னூல் - 290

இங்குள்ளோரில் பலர் வினைத்தொகை வகைகளின் பெயர்களும்,
உதாரணங்களும் கூறிட இயலும். வினைத்தொகை வகைகளின்
பெயர்களும், உதாரணங்களும் பார்ப்போம்.

செயப்படுபொருள் வினைத்தொகை:

(1)
நிகழ்த்துகலை = நிகழ்த்தப்படுகின்ற கலை என்பது போல முக்காலமும் கரந்து பொருள்தரும்.

(2) 
பெய்வளை = பெய்யப்படுகின்ற வளை என்பது போல முக்காலமும் கரந்து பொருள்தரும்.
பெய்வளை - செயப்படுபொருளில் வந்த வினைத்தொகை.

(3) 
குலுங்குமரம் - செயப்படுபொருள் வினைத்தொகை:
காற்றால் என்பதை வருவித்துக் காற்றால் குலுக்கப்பட்ட மரம் என்று பொருள்தரும்.

(4) 
உண்பொருள் -
(உயிரி ஒன்றால்) உண்ணப்பட்ட பொருள் என்பது போல முக்காலமும் கரந்து பொருள்தரும்.
‘உண்பொருள்’ செயப்படுபொருளில் நின்ற வினைத்தொகை. 

(5) 
அணிகலம் - 
மக்களால் அணியப்படுகிற கலம் எனச் செயப்படுபொருளில் நின்ற வினைத்தொகை. 

(6)
தொழுகழல் :- தொழப்படுங் கழலடி . செயப்படு பொருளில் நின்ற வினைத்தொகை 

இன்னும் பல செயப்படுபொருளில் நின்ற வினைத்தொகை உதாரணங்கள் இருக்கும்.
தெரிந்ததைத் தாருங்கள். 

நன்றி,
நா. கணேசன்

எந்தவகை வினைத்தொகையிலும் வலிமிகுதல் இல்லை.
 
  • தொகைநிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகாமை

i) அல்வழியில் உள்ள தொகைநிலைத் தொடர்களில் ஒன்றான வினைத்தொகை மிகவும் அற்புதமான தொகை. ஊறுகாய் என்று சொன்னதும், நம் நாவில் அந்தக் காயின் சுவை ஊறி நிற்கும். நேற்று ஊறிய காய், இன்று ஊறுகின்ற காய், நாளையும் ஊறும் காய் – ஊறுகாய். மூன்று காலங்களையும் காட்டும் இடைநிலைகள் என்னும் உருபுகள் மறைந்திருப்பதால், வினைத்தொகை எனப்பட்டது. வினைத்தொகையில் வரும் வல்லினம் கட்டாயம் மிகாது. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும் எனப் பார்த்தோம். ஆனால் வினைத்தொகையில் மட்டும் நிலைமொழி வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தாலும் வல்லினம் மிகாது.

சான்று:

நாட்டு + புகழ் = நாட்டுபுகழ் 
ஈட்டு + பொருள் = ஈட்டுபொருள்

இவ் வன்தொடர்க் குற்றியலுகரங்களின் முன்வரும் வல்லினம் வினைத்தொகையில் மிகவில்லை.

சுடு + காடு = சுடுகாடு 
நடு + கல் = நடுகல் 
குடி + தண்ணீர் = குடிதண்ணீர் 
மூடு + பனி = மூடுபனி 
சுடு + சோறு = சுடுசோறு 
விடு + கதை = விடுகதை 
திருவளர் + செல்வன் = திருவளர் செல்வன் 
திருவளர் + செல்வி = திருவளர் செல்வி

ii) இரண்டு சொற்களோ, இரண்டுக்கு மேற்பட்ட சொற்களோ வரும்போது, அச்சொற்களின் இறுதியில் உம்மை மறைந்திருப்பது உம்மைத் தொகை எனப்படும். உம்மைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது.







N. Ganesan

unread,
Sep 23, 2017, 5:41:17 AM9/23/17
to சந்தவசந்தம்

"செயப்படுபொருள், செய்பொருள், கருமம், காரியம் என்பன ஒரே பொருளைத் தருவன.

வினைமுதல் (எழுவாய்) செய்யும் தொழிலின் பயனை ஏற்பது எதுவோ அது செயப்படுபொருள் எனப்படும்."

செய்பொருள் வினைத்தொகை:

” தொழுகழல் :- தொழப்படுங் கழலடி . செயப்படு பொருளில் நின்ற வினைத்தொகை . 
` அறு கயிறு ` செய்பொருள் வினைத்தொகை . மறைகள் நிறைநாவர் ( தி .1 ப .71 பா .5).”


உறுகயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி
மறுகயிறு ஊசல் போல வந்துலவு நெஞ்சம்
பெறுகயிறு ஊசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்து
அறுகயிறு ஊசல் ஆனேன் அதிகை வீரட்டனாரே 
                          - அப்பர்

அறுகயிறு - அறுபடு கயிறு - செய்பொருள் வினைத்தொகை.
இதுபோல,
அலைமனம் - அலைபடு மனம்
திரைகடல் - திரைபடு கடல்
குலுங்குமரம் - குலுங்கல்படு மரம்
செய்பொருள் வினைத்தொகை.

ஆனால், இவற்றையே
அறுக்கப்படு கயிறு, அலைக்கப்படு மனம், திரைக்கப்படு கடல், குலுக்கப்படு மரம்
என்று பார்த்தால் செயப்படுபொருளில் நின்ற வினைத்தொகை ஆகிறது அல்லவா? 

கேள்வி:
செய்பொருள் வினைத்தொகை எல்லாவற்றையும்
செயப்படுபொருள் வினைத்தொகை என்றும் பார்க்கலாமா?

நன்னூல், ஆறுமுக நாவலர் காண்டிகையுரை:
”320 செய்பவன் கருவி நிலஞ்செயல் காலஞ்
செய்பொரு ளாறுந் தருவது வினையே.
 
செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆறும் = கருத்தாவும் காரணமும் இடமும் செயலும் காலமும் செயப்படுபொருளும் ஆகிய அறுவகைப் பொருளையும், தருவது வினை = தருவது தெரிநிலை வினைச்சொல்லாம்.”

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 9, 2017, 11:17:48 PM10/9/17
to சந்தவசந்தம்
கலிபோரினியாவில் தமிழ்த் தம்பதியர் ஒரு குழந்தையை அனாதை ஆசிரமத்தில் தத்து எடுத்துவரும் போது, பெயரை ‘மலர்’ என வைக்க எண்ணினர். அப்போது யாரோ மலர் என்றால் வாடிவிடுமே என்று சொல்ல, ’இருமலர்’ எனப்பெயரிட்டனர். என்றும் இருக்கும் மலர் என்ற பொருளில். அதாவது, இருமலர் வினைத்தொகையாய் இட்ட பெயர். அழகான பெயர்.

இருமலர் என்ற வார்த்தை எங்காவது பாடலில் இதுபோல வினைத்தொகையாய் பயன்பட்டிருக்கிறதா?

N. Ganesan

unread,
Jun 5, 2019, 10:15:31 AM6/5/19
to Santhavasantham
On Tue, Sep 19, 2017 at 7:04 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
ஆகுபெயரின் வகைகளுக்கு நன்னூல் சூத்திரம் இருக்கிறது.
அதுபோல, வினைத்தொகையின் வகைகளுக்கு கவிஞர் இரமணி
போன்றோர் சூத்திரம் அமைக்க இயலும். அதற்கு அச்சாரமாக
வினைத்தொகை வகைகளும், ஒவ்வொரு பகுப்புக்கும் பல
எடுத்துக்காட்டுகளும் பார்க்கலாம்.


பாடல் எண் : 2

உறவிலி ஊனமிலி உண
ரார்புரம் மூன்றெரியச்
செறுவிலி தன்னினைவார் வினை
யாயின தேய்ந்தழிய
அறவில கும்மருளான் மரு
ளார்பொழில் வண்டறையும்
நறவிரி கொன்றையினான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

உறவுத் தொடக்கு இல்லாதவனும் , குறைவில்லாத வனும் , தன்னை மதியாதவரது மூன்று ஊர்களும் எரிந்தொழியும்படி அழித்த வில்லை உடையவனும் , தன்னை நினைபவரது வினை யெல்லாம் வலிமை குன்றி அழியும்படி , மிகவும் விளங்குகின்ற திரு வருளை உடையவனும் , தேனோடு மலர்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர் , மயக்கத்தைத் தருகின்ற சோலைகளில் வண்டுகள் ஒலிக்கின்ற திருநனிபள்ளியே .

குறிப்புரை :

` மூன்றும் ` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று . ` செறு வில் ` இறந்த கால வினைத்தொகை . ` வில்லி ` என்பது , இடைக் குறைந்து நின்றது . ` அற இலகும் ` எனப் பிரிக்க . பொழில் மயக்கத்தை உடையதாதல் , இருளால் என்க . ` மருளார்பொழில் வண்டறையும் ` என்றதனை , ` நண்ணும் ஊர் ` என்றதன்பின் கூட்டி உரைக்க . ` மருளார் மொழி வண்டறையும் ` என்பதும் பாடம் .

--------

புனையேன் வினைதீர் மருந்தானாய்!
            விண்ணோர் தலைவா! கேசவா!
        மனைசேர் ஆயர் குலமுதலே!
            மாமா யவனே! மாதவா!
        சினைஏய் தழைய மராமரங்கள்
            ஏழும் எய்தாய்! சிரீதரா!
        இனையாய்! இனைய பெயரினாய்!
            என்று நைவன் அடியேனே.


    பொ-ரை : 
தீவினைகள் வாய்ந்த என்னுடைய தீய வினைகளைப் போக்கும் மருந்தானவனே, நித்தியசூரிகள் தலைவனே, பிரமனையும் சிவனையும் உனது திருமேனியில் வைத்திருப்பவனே, மனைகளோடு மனைகள் சேர்ந்திருக்கின்ற ஆயர்பாடிக்குத் தலைவனே, மிக்க ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனே, திருமகள் நாதனே, கிளைகளையுடைய தழைகள் பொருந்திய ஆச்சாமரங்கள் ஏழனையும் ஓர் அம்பினால் தொளைத்தவனே, வீரலட்சுமியைத் தரித்திருப்பவனே, இத்தன்மைகளையுடையவனே, இவற்றிற்குத் தக்க பெயர்களையுடையவனே என்று கூறிக்கொண்டே உருகுவன் அடியேன்.

    வி-கு : தீர் மருந்து - இறந்த கால வினைத்தொகை. ஆயர் குலம் - ஆயர் பாடி.
-----------

பாடல் எண் : 4

காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் டோளர் போலும்
தூறிடு சுடலை தன்னிற் சுண்ணவெண் ணீற்றர் போலும்
கூறிடு முருவர் போலுங் குளிர்பொழிற் பழனை மேய
ஆறிடு சடையர் போலு மாலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரைச் சேர்ந்த , கங்கை சூடிய ஆலங்காட்டுப் பெருமான் கொல்லுகின்ற விடத்தை உண்ட கழுத்தினராய் , எட்டுத் தோளினராய்த் தூறுகள் மண்டிக் கிடக்கும் சுடுகாட்டு வெள்ளிய சாம்பலைப் பூசியவராய்ப் பார்வதிக்காக இடப்பாகத்தைப் பிரித்துக் கொடுத்துப் பார்வதிபாகராம் உருவினராய் உள்ளார் .

குறிப்புரை :

காறிடு விடத்தை - கொல்கின்ற நஞ்சினை . உண்டவர் உயிரைப் போக்கும் விடமுமாம் . உண்டகண்டர் - ( நஞ்சு ) அருந்திய திருநீலகண்டர் . தூறு :- ` பற்றை ` என்பர் ; சுடலையில் கரிசாம்பல் முதலியன தூறாகும் . சுண்ணம் - பொடி . திரு வெண்ணீற்றர் . கூறு - பாகம் . உருவர் திருமேனியர் . அர்த்த நாரீசுவரர் , குளிர் பொழில் , நிகழ் கால வினைத்தொகை . ஆறு - கங்கை . கங்கையை அடக்கியிட்ட சடை யுடையவர் .

On Tue, Jun 4, 2019 at 11:26 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
அடிமாடு - எல்லா மாவட்ட விவசாயிகளைக் கேட்டுப்பாருங்க. அடிபடப் போகும் மாடு. விலை மிகச் சரிந்துவிடும். எனவே, அடிமாட்டு விலை. அமெரிக்காவில் "Killer Sale" என்பர்.

University of Madras Lexicon 

அடிமாடு aṭi-māṭu   n. அடி- +. Cattle for slaughter; கொல்லுவதற்குரிய மாடு.  

(இதைத் தான் ஆக்ஸ்போர்டு அகராதியும் தருகிறது).

அடிமாடு = அடிக்கப்போகும் மாடு. எனவே, எதிர்கால வினைத்தொகை.

அடிமாடு - சிறுகதை

இன்னோர் உதாரணம்.
கருதிய தொன்றில்லை ஆயினுங்
    கேண்மின்கள் காரிகையாள்
ஒருதின மும்உள ளாகவொட் 
    டாதொடுங் காரொடுங்கப்
பொருதநன் மால்விடைப் புண்ணியன் 
    பொங்கிளங் கொன்றையின்னே
தருதிர்நன் றாயிடும் தாரா 
    விடிற்கொல்லுந் தாழிருளே 
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11006&padhi=040&startLimit=56&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
தாழிருள் - எதிர்கால வினைத்தொகை.

நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Jun 8, 2019, 10:19:36 AM6/8/19
to Santhavasantham, Jean-Luc Chevillard, Eva Wilden

முக்கால வினைத்தொகைகள் -

{Entry: F06__119}

நெடுநல் அடுகளிறு - இன்று அடு களிறு - நாளை அடுகளிறு - வேல், களம், தொழில், பொழுது கந்து - எனவரும். இவை விரியுமிடத்து, நெடுநல் அட்ட களிறு - இன்று அடாநின்ற களிறு - நாளை அடும் களிறு என விரியும் . இவை முறையே இறந்தகால வினைத்தொகை, நிகழ்கால வினைத் தொகை, எதிர்கால வினைத்தொகை எனப்படும். இஃது ஒவ்வொரு காலத்தையே பற்றாது முக்காலமும் பற்றி நெருநலும் அட்ட களிறு - இன்றும் அடாநின்ற களிறு - நாளையும் அடும் களிறு - என விரியவரின் முக்கால வினைத் தொகையாம். (நன். 364 சங்.)



There is a typo here. The corrected form is given below:

முக்கால வினைத்தொகைகள் -
{Entry: F06__119}

நெருநல் அடுகளிறு - இன்று அடு களிறு - நாளை அடுகளிறு - வேல், களம், தொழில், பொழுது கந்து - எனவரும். இவை விரியுமிடத்து, நெருநல் அட்ட களிறு - இன்று அடாநின்ற களிறு - நாளை அடும் களிறு என விரியும் . இவை முறையே இறந்தகால வினைத்தொகை, நிகழ்கால வினைத் தொகை, எதிர்கால வினைத்தொகை எனப்படும். இஃது ஒவ்வொரு காலத்தையே பற்றாது முக்காலமும் பற்றி நெருநலும் அட்ட களிறு - இன்றும் அடாநின்ற களிறு - நாளையும் அடும் களிறு - என விரியவரின் முக்கால வினைத் தொகையாம். (நன். 364 சங்.)
http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/F06.html

************************************************************************

வினைத்தொகை -

{Entry: F06__376}

வினைச்சொல்லாவது தொழிலும் காலமும் பாலும் உணர்த் தலின் பால் உணர்த்தும் சொல் முற்றுச்சொல்லாகி நின்று தொகைநிலை ஆகாமையானும், பால் காட்டாத வினை யெச்சம் பெயரெச்சம் என்னும் இரண்டனுள்ளும் வினை யெச்சம் முற்றுவினைச்சொல்லோடல்லது முடியாமையானும், வினைத்தொகையில் தொகுவதும் விரிவதும் பெயரெச்சமே. அது தொகுங் காலத்துக் காலப்பொருளை உணர்த்தும் சொல்லே தொகுவதும் விரிவதும் கொள்க. தொழிலும் பொருளும் விட்டிசைத்து நில்லாது ஒற்றுமைப்பட்டதனை வினைத்தொகை என்றார்.

எ-டு : கொல்யானை, அரிவாள். (தொ. சொ. 410 தெய். உரை)

காலம் பற்றிப் புடைபெயர் வினையுருபாகிய தம் இறுதிகள் தொக்குநிற்பச் செய்வது ஆதி அறுபொருட்பெயராகிய தம் எச்சம் கொண்ட பெயரெச்சங்கள் வினைத்தொகையாம். புடைபெயர்ச்சி வினைகளை முதனிலை ஒழிந்த இறுதிகள் காட்டி நிற்றலின் அவ்வினைக்கு அவை உருபாயின.

நெடுநல் அடுகளிறு, இன்று அடுகளிறு, நாளை அடுகளிறு - வேல் - களம் - தொழில் - பொழுது - கந்து - என வரும்.

அடுகளிறு : முக்கால வினைத்தொகை. இங்ஙனம் கால விகற்பம் பற்றிப் புடைபெயர் வினையைக் கருதாது ‘இத் தொழிற்கு உரியது இஃது’ என்னும் பொருள்பட வருவன வினைத்தொகைக் குறிப்பு எனப்படும். எ-டு : அரிவாள், ஆவுரிஞ்சுதறி. (நன். 364 சங்.)


--------

The correct line is:

நெருநல் அடுகளிறு, இன்று அடுகளிறு, நாளை அடுகளிறு - வேல் - களம் - தொழில் - பொழுது - கந்து - என வரும்.

---------------

N. Ganesan

unread,
Jun 19, 2019, 9:50:16 AM6/19/19
to Santhavasantham
’நெடுநல்’ எனுஞ் சொல்லே பழைய இலக்கியங்களில் பார்க்க முடியாது. அதாவது, தனிச்சொல்லாக நெடுநல் என வாராது.
பெயரடையாக வரும் (உ-ம்: நெடுநல்வாடை). கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி அச்சாகி இருக்கிறது. அதிலும் நெடுநல் என்று அச்சிட்டிருக்கிறார்களா?
நூல் பார்த்தோர் தெரிவித்தால் நன்றி.

N. Ganesan

unread,
Jun 26, 2019, 11:47:39 AM6/26/19
to Santhavasantham, Dr.Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam
On Wed, Jun 19, 2019 at 8:49 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
’நெடுநல்’ எனுஞ் சொல்லே பழைய இலக்கியங்களில் பார்க்க முடியாது. அதாவது, தனிச்சொல்லாக நெடுநல் என வாராது.
பெயரடையாக வரும் (உ-ம்: நெடுநல்வாடை). கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி அச்சாகி இருக்கிறது. அதிலும் நெடுநல் என்று அச்சிட்டிருக்கிறார்களா?
நூல் பார்த்தோர் தெரிவித்தால் நன்றி.

Dear JLC,

Let me give the proof that it is only nerunal (NOT neTunal).
TSG's scanned page says this entry comes from CaGkaranamaccivAyar's NannUl urai. 

In 1925, UVS edition of caGkaranamaccivAyar urai, please note that there is no neTunal.
Only nerunal is printed by UVS.

Thanks
NG
உவேசா பதிப்பு, 1925
nerunal_aTukaLiRu_in_caGkaranamaccivAyar.png
Reply all
Reply to author
Forward
0 new messages