2026-03-05
பூசணிக்காய்
----------------
(வெண்பா)
கடையிலெம் கண்ணைக் கவர்பூ சணியே
இடையிலார் கண்பட்ட(து) இல்லின் - கடைமுன்
உடைத்ததே கண்ணூ(று) ஒழியுமென்(று) உன்னைப்
படைத்த கருத்தறியாப் பார்.
பதம் பிரித்து:
கடையில் எம் கண்ணைக் கவர்-பூசணியே!
இடையில் ஆர் கண் பட்ட(து)? இல்லின் - கடைமுன்
உடைத்ததே கண்ணூ(று) ஒழியும் என்(று), உன்னைப்
படைத்த கருத்து அறியாப் பார்.
V. Subramanian
2026-03-05
பூசணிக்காய்
----------------
(வெண்பா)
கடையிலெம் கண்ணைக் கவர்பூ சணியே
இடையிலார் கண்பட்ட(து) இல்லின் - கடைமுன்
உடைத்ததே கண்ணூ(று) ஒழியுமென்(று) உன்னைப்
படைத்த கருத்தறியாப் பார்.
V. Subramanian