--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
யாராவது ஒயினை தேங்காய் சிப்பியில் கொடுத்தால் ரசிப்பார்களா?கள்ளும் நல்லா இருக்கணும் கலயமும் பொன்னா இருக்கணும்.
கலயம் பொன்னா இருக்கணும்னா என்ன அர்த்தம்னு புரியல. ஒளி/ஒலிப்பதிவுக் குறைபாடு பற்றியதாக இருந்தால்,
வேந்தன் என்னசொல்லவரார் என்று புரியவில்லை ஆனால் எங்களை இயற்கை ஆசிர்வாதம் செய்கிறது கூடி இருந்து குளிர்ந்தேலோ என்ற ஆண்டாளின் வாக்கு மெய்யாகிறது! ஒவ்வொரு சனிகிழமையும் ராமாயண வகுப்பு முடியும்போது மழை கொட்டித்தள்ளுகிறது..மனமுடன் உடலும் நனைய வீடு திரும்புகிறோம் என்பது தான் உண்மை!
நான் கம்பனைப்பற்றி பேசினால் எப்படி இருக்கும் என்று நினைத்து சொன்னேன்கம்பனை பற்றி பேசும் நீங்கள் பொன் கிண்ணம். நானோ தேங்காய் சிப்பி
வேந்தரே எங்கள் நகருக்கு வாரம் ஒரு மழைபோதும் மும்மாரியெல்லாம் வேண்டாம்:):)
--
ஓரிரு சனிக் கிழமைகளில் அடியேனும் வந்து கேட்பேன் எனக்குப் பழக்கமான ஒயின் கம்பன் கனிச் சாறுதான் - புலவர் இராமமூர்த்தி
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
--
--Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
அவர் அன்று வரவே இல்லையே.. நீங்கள் வேறு ஒருவரைச் சொல்கிறீர்கள் என்றூ நினைக்கிறேன்.
வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தவர் புலவர் ராமமூர்த்தி. கம்பன் குறித்து சில நூல்களும் எழுதியிருக்கிறார். அவரைப் பற்றிய பிற விவரங்களை ஹரிகி தருவார்.
// திரு ஐயப்பனும் பிறரும் உற்சாகமாகப் பங்குகொள்கிறார்கள். //
கம்பராமாயண முற்றோதல் பதினான்காம் அமர்வின் பதிவை அனுப்பி வைக்கிறோம்.
அடுத்த வாரம் சந்தி்ப்போம். இந்த வாரப் பதிவுகள் இங்கே:
பதினேழாம் அமர்வு, வரைக்காட்சிப் படலத்தில் முதல் ஐம்பது பாடல்கள் வரை இங்கே:
முதல் பகுதி பார்த்தேன். ஏழிலைப் பாலை, அங்குசம் நிமிரக் கூடாது என்பவை பற்றி திரு ஹரிகி விளக்கம் மூலம் அறிந்தேன்.
முதல் பகுதி பார்த்தேன். ஏழிலைப் பாலை, அங்குசம் நிமிரக் கூடாது என்பவை பற்றி திரு ஹரிகி விளக்கம் மூலம் அறிந்தேன்.கீழ்க்கண்ட பாடலோடு ஐந்து பாடல்களை வாசித்த இளைஞர் சொற்களை ல,ள,ழ உச்சரிப்புடன் அருமையாக வாசித்தார். கம்பனில் இளைஞர்கள் தோய்ந்து படிப்பதைக் காணும்போது வாழையடி வாழையாகத் திருக்கூட்டம் வளரும் என்ற நம்பிக்கை வருகிறது.
ஹரி,நல்ல தொண்டு. இந்தத் தொண்டு கொடுக்கும் இதத்தால் உடலை வருத்தும் நோயின் கடுமை குறைந்து போகப் போக முற்றிலும் குணமாகிவிடும்
உங்களுக்கு நீண்ட ஆயுளும் தேக வலிமையும் தர இறைவனை இறைஞ்சுகிறேன்வாழ்க!இலந்தை
இந்த அமர்வின் பதிவுகள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இதுவரை பரசுராமப் படலத்தை முறையாகப் படித்ததில்லை என்ற என் குறை நீங்கியது!கதைப்போக்கில் மட்டுமன்றிக் காப்பிய மாந்தரின் மிகையற்ற இயல்பான நடப்புகளிலும் கம்பன் செலுத்தியிருக்கும் கருத்து அருமை; அதை முற்றோதல் குழுவினர் உணர்ந்து பகிர்ந்துகொண்டதும் அருமை.முற்றோதல் குழுவில் ஓர் அன்பர் குறிப்பிட்டது போல ... இந்தத் தசரதனுக்குத் தடால் தடால் என்று காலில் விழுவதும் மயக்கம் போடுவதும் எவ்வளவு இயல்பாக இருந்திருக்கிறது! இவ்வளவு வில்லாற்றல் மிக்க தன் மகன் சிவதனுசையும் சரி, நாராயண தனுசையும் சரி ... அப்படியே அலாக்காக எடுத்து வளைத்து ஒடித்தும் தனக்கெனப் பெற்றும் வெற்றி கொண்ட நிலையைக் கண்ணால் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லையே! முதல் முறை அவர் அந்தப் பக்கமே இல்லை; இரண்டாம் முறை மூர்ச்சை நிலை! பாவம்!இப்படி இன்னும் பல சுவையான, புத்தறிவூட்டும் செய்திகள் மிளிர்கின்றன.சொல்லாய்வாளருக்காக -- "நினைவாளன்," "தனி நாயகம்," "மூட்டி விட்டார்" என்ற சொற்களைக் கேளுங்கள்! தமிழைப்பற்றி எப்போதும் செல்வா சொல்வதுபோல் ... "இதில் என்ன புரியவில்லை?" என்றுதான் கேட்கத் தோன்றும்!'நிமித்திகன்' என்ற சொல்லை மட்டுமே அறிந்திருக்கும் மக்களுக்கு "ஒரு நெறி உணர்வான் நினைவாளன்" என்ற சொல் விருந்து!"தனி நாயகம்" என்ற சொல்லாட்சி கிறித்துவத் தமிழின் நிலையைக் காட்டுகிறதோ என்றே நானும் நினைத்திருந்தேன் (தனிநாயக அடிகளார் என்ற பெயரிலிருந்து). இல்லை, இல்லை அது கம்பன் படைப்பு!"மூட்டி விட்டார்" பற்றிச் சொல்லவே வேண்டாம்!கொஞ்சமாவது நேரம் ஒதுக்கி இந்த ஒலி/ஒளிப் பதிவுகளைப் பார்த்துக் கேட்டுச் சுவையுங்கள். குழுவினர் அருந்தும் தேநீர் நமக்குக் கிடைக்காது, ஆனால் இலக்கியச் சுவை கிடைப்பது உறுதி! ;-)அன்புடன்,ராஜம்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
சேடசோ அவதானி (பதினாறு கவனகர்)
சோடசோ அவதானி. எழுத்துப் பிழைக்கு மன்னிக்க
கைகேயியின் கோபத்தில் ஏதோ ஒரு பொய்ம்மை ஊடுருவுகிறது. அதனால்தான் "நாடக மயில்" என்றும் அவளைக் கம்பன் குறிக்கிறானோ?
இருபத்தெட்டாம் அமர்வில் கைகேயி சூழ்வினைப் படலம் முடிந்தது. இந்த கட்டம் எத்தனை உணர்ச்சிகரமானது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
கம்ப நாடகம் என்பது எவ்வளவு பொருத்தம்.ஷேக்ஸ்பியரைப் போலக் கம்பன் நாடகம் எழுதியிருந்தால் உலக இலக்கியத்தில் மிகச் சிறந்ததாக இருந்திருக்கும்.இலந்தை
Ladies Men
By TERRY TEACHOUT, Wall Street Journal, Nov. 11, 2013 3:51 p.m. ET
New York
Broadway is one of the worst places in America to see Shakespeare done right—not because nobody there knows how to mount his plays (though I sometimes have my doubts), but because virtually all of the theaters on the Great White Way are conventional proscenium-style houses in which the actors and audience are placed on opposite sides of a rectangular arch that frames the stage. Shakespeare's plays, by contrast, were written for a far more intimate kind of space, the closest contemporary counterpart of which is a thrust stage that allows the audience to sit on three sides of the actors. In addition, they always work best when performed without scenery, whose onstage presence slows down the fast-flowing action that is an essential part of true Elizabethan theatrical style.
In 1997 Shakespeare's Globe, a London theater that duplicates as closely as possible the playhouse where the King's Men, the troupe of which Shakespeare was a member, performed between 1599 and 1613, was opened on the site of the original Globe Theatre. Now the Globe has set up shop in Broadway's Belasco Theatre to present "Richard III" and "Twelfth Night" in repertory, staging them in a manner that is as authentic as can be contrived in a proscenium house. The uncluttered playing area is fitted out with frame-breaking stage boxes and (mostly) lit with candles; the costumes are hand-crafted 17th-century replicas designed with awe-inspiring verisimilitude by Jenny Tiramani; and Claire van Kampen's Elizabethan-style incidental music is played on Renaissance instruments. Above all, the women's roles, as was the custom in Shakespeare's time, are performed by men—among them Mark Rylance, who plays Olivia in "Twelfth Night."
Needless to say, Mr. Rylance, one of the top classical actors of our time, is the draw for this ambitious undertaking. That said, it's the productions themselves, both of which were directed by Tim Carroll, that will likely be the real draw, especially for those New York playgoers who aren't lucky enough to have seen any of the numerous American classical companies that regularly perform Shakespeare on thrust stages.
By far the better of the two is "Twelfth Night," which crackles with the kind of headlong, hurtling comic energy that is only possible when the play is done on an open stage without scene breaks. I wouldn't exactly call it revelatory, since "Twelfth Night" gets performed often and well on the Shakespeare summer circuit, but this staging is identical in quality to any of the finest productions that I've seen in this country in recent seasons.
Mr. Carroll's cast includes a second star, Stephen Fry, who is mainly known on both sides of the Atlantic for his television work (he played Jeeves to Hugh Laurie's Bertie Wooster). His exquisitely well-gauged Malvolio is pompous but not preposterous, which makes his abject humiliation at play's end all the more emotionally credible. Colin Hurley and Angus Wright play Sir Toby Belch and Sir Andrew Aguecheek with rip-snorting relish, and Samuel Barnett is lovely and completely unmannered as Viola, who is forced by circumstances to dress up as a man, in which capacity she inadvertently wins Olivia's heart.
This brings us to Mr. Rylance. Having just seen Taylor Mac's astonishingly creative drag performance in Lear deBessonet's Public Theater production of Bertolt Brecht's "Good Person of Szechwan," I expected something more out of Mr. Rylance than standard-issue camp. On occasion he supplies it, in particular when he wistfully confesses that for a woman of a certain age, "youth is bought more oft than begg'd or borrow'd." For the most part, though, I found his acting to be overobvious, at times blatantly so, especially by contrast with Mr. Barnett's sweet simplicity.
Mine, however, is a minority view—rarely have I seen so comprehensively crowd-pleasing a piece of comic acting—and even if you share my reservations about Mr. Rylance's Olivia, the rest of this "Twelfth Night" is so persuasive that you'll want to see it anyway. Not so "Richard III," in which Mr. Rylance is giving a performance of the title role that makes a sort of sense on paper but none at all in person: He has opted to play Shakespeare's hunchbacked monster of malignity as a milksoppy, simperingly adenoidal clown who hides his "subtle, false and treacherous" purpose behind a mask of ceaseless facetiousness. (Try to imagine Matthew Broderick as Richard III and you'll get the idea, sort of.) What's wrong with this approach is that Mr. Rylance never bothers to pull off the mask and reveal the depth of his interior rage until the very end of the play: He is clownish even when no one is looking.
Perhaps because Mr. Rylance's acting is so thickly crusted with silliness, Mr. Carroll's staging feels somnolently slow, so much so that I found it hard to sit through. Pass it by—but don't miss "Twelfth Night."
Mr. Teachout, the Journal's drama critic, is the author of "Duke: A Life of Duke Ellington, " just out from Gotham Books. Write to him at ttea...@wsj.com.
ஆமாம் தலைவரே. இருந்தாலும் ஒரு சில எண்ணங்களை முன்வைக்கிறேன்:
- வசனங்கள் மூலமாகவே கதை சொல்லும் போக்கு என்பதான நாடக வடிவம் மனோன்மணீயத்திலிருந்துதான் தொடங்குகிறது. ஆனால், மனோன்மணீயம் நாடகத்தை அரங்கேற்ற முடியாது. சுரங்கப் பாதைதான் கதையின் முக்கியமான களம். இதன் மூல நூலான The Secret Wayக்கும் கதைக் களம் சுரங்கப்பாதைதான்.
- ஆள் அம்பு சைனியத்துடன் மன்னன் வந்து நிற்கும் அளவுக்கு பெரிய சுரங்கப் பாதையை சுந்தர முனிவரும் அவருடைய இரண்டு துணைவர்களும் சேர்த்து--நாடகத்தின் கால எல்லை என்று பேராசிரியர் நாகநந்தி கணக்கிட்டுள்ள--இரண்டு வார காலத்துக்குள், ‘அருங்கை வருந்த அமைத்த சுருங்கை’ என்ற இம்பாஸிபிலிடியை ஒதுக்கிவிட்டால்கூட, நாடக மேடைக் காட்சியமைப்புக்குள் சிக்காத பல காட்சிக் களங்களைக் கொண்டிருக்கிறது மனோன்மணீயம்.
ஷேக்ஸ்பியருடைய கதைக் களங்கள், மிகப் பெரிய அரங்கங்களுக்கு ஏற்றவை. இப்படிப்பட்ட களங்களுக்காகவே amphitheater, coliseum போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
--
அன்புடன்,
ஹரிகி.
சென்ற வார ராமாயண நாடகம் தொடர்கிறது:
ராமன்: (மர உரி அணியும் லட்சுமணனிடம்) ‘இசையினாய், நீ யான் புகல் ஓர் உறுதி கேள்.’
ராமன்: ‘அன்னையர் அனைவரும், வேந்தனும், துயரில் மூழ்கினார், என்னையும் பிரிந்தினர், இடர் உறாவகை உன்னை நீ என்பொருட்டு உதவுவாய்.’
லட்சுமணன்: ‘உனக்கு அடியனேன் பிழைத்தது யாது? நீர் உள எனின் உள மீனும் நீலமும், பாருள எனின் உள யாவும், நானும் சீதையும் ஆர் உளர் எனின் உளேம்?’
லட்சுமணன்: ‘ஒருத்தி சொல் கேட்டு பார்மகள் நைந்து நடுங்க, கான் நடத்தி எனா உய்ந்தனன் காவலன் மைந்தன் என்று சொல் வழங்கினாயோ?’
லட்சுமணன்: ‘ஐய (ராமா), நீ வனம் கொள்வாய் என ஏறின வெகுளியை ஆறினை தவிர்க என ஆணையின் கூறிய மொழியினும் கொடியதாம் (இது).’
லட்சுமணன்: ‘(ராமா), எனைக் கை துடைத்து ஏகவும் கடவையோ?’
இராமன் ஒன்று உரைக்க உன்னிலன். (லட்சுமணன்) வதனம் நோக்கினான், கண்ணின் மிக்க நீர் விழ நெடிது நிற்கின்றான்.
முனிவன் (வசிட்டன்) எய்தினான். குமரரும் சென்னி தாழ்ந்தனர்.
வசிட்டன்: (தனக்குள்) ‘மங்கலத்து நாள் சீரை சாத்தினான், ஊழ்வினை ஒழிக்கற்பாலதோ?’
வசிட்டன்: (தனக்குள்) வெவ்வினை அவள் தர விளைந்ததேயும் அன்று, எவ்வினை நிகழ்ந்ததோ, ஏவர் எண்ணமோ, செவ்விதின் ஒருமுறை தெரியும் பின்.’
வசிட்டன்: (ராமனிடம்) ‘ஐய, நீ கல் தடம் காணுதி என்னின், தானையான் (தசரதன்) வாழ்விலான்.’
ராமன்: ‘அன்னவன் (தசரதன்) பணி ஆற்றுதல் என் கடன், அவன் இடரை நீக்குதல் நின் கடன். இது நெறி.’
வசிட்டன்: ‘(தசரதன் உன்னைச்) சுரம் விரவு என்றான் அலன். (கைகேயி)தனக்கு ஆய்கிலாது வரம் தருவென் என்று ஏன்றது உண்டு.’
ராமன்: ‘ஏன்றனன் எந்தை, ஏவினாள் ஈன்றவள், யான் அது சென்னி ஏந்தினேன். சான்று என நின்ற நீ தடுத்தியோ?’
முனிவன் ஒன்று இயம்ப எண்ணிலன். கணீர் நிலத்து உக (வசிட்டன்) நின்றனன், (ராமன்) போயினான் கொற்றவன் வாயில்.
அந்தணர், அருந்தவர், அவனி காவலர், நகர் உளார், நாட்டு உளார் சிந்தை என் புகல்வது? (ராமன் காட்டுக்குப் போவதால்) தேவரும் உள்ளம் வெந்தனர்.
விழுந்தனர் சிலர், சிலர் விம்மி எழுந்தனர், சிலர் கண்ணீரிடை அழுந்தினர், சிலர் துயரம் கூர்கின்றார்.
(மக்கள்) இரைத்தனர், எழுந்து, ஏங்கி, எங்கணும் தொடர்ந்து பின் செல, (ராமன்) உரைப்பதை உணர்கிலன், தன் மனையை நோக்கினான்.
மக்கள்: ‘(ராமன்) கானகத்து உறைவென் யான் என எழுவதே? எழுதல் கண்டு இருப்பதே? இருந்து அழுவதே? அழகு இவ் அன்பு!’
மக்கள்: ‘(ராமன் வனம் சென்றால்) உலகம் யாவையும் கானமே புகும், எனில் காதல் மைந்தனும் (பரதனும்) தானும் (கைகேயியும்) ஆளுங்கொல்?’
வரம்புஇலர் தொடர இராமன் சானகி இருந்துழி சார்ந்தான்.
சீரையின் உடையினன் வரும்படி பாரா எழுது பாவை அன்னாள் (சீதை) துணுக்கமொடு எழுந்தாள்.
மாமியர் தழுவினர். கணீர்ப் புனல் ஆட்டினர். புலம்ப… இன்னது என்று அறியாள் (சீதை) வள்ளலை நோக்கி…
சீதை: ‘கழலோய், துயர் என்னை உற்றது? இயம்பு.’
ராமன்: ‘பொரு இல் எம்பி புவி புரப்பான், இருவர் ஆணையும் ஏந்தினென், இன்று போய், கல் தடம் கண்டு நான் ஈண்டு வருவென், வருந்தலை நீ.’
நாயகன் வனம் நண்ணலுற்றான் என்றும், மண் இழந்தான் என்றும் விம்மலள், ‘நீ வருந்தலை, நீங்குவன் யான்’ என்ற சொல் செவி சுட தேம்புவாள் (சீதை)
சீதை: (மனத்துக்குள்) ‘ஐயனும் அன்னையும் சொன்ன செய்யத் துணிந்தது தூயதே, என்னை என்னை இருத்தி என்றாய்?’
ராமன்: ‘நின் சே அடிப் போது காட்டு அதர் கடுமைய அல்ல.’
சீதை: ‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?’
அண்ணல் (சீதையின்) கருத்து உணர்ந்தனன். எண்ணுகின்றனன், ‘என்செயல்பாற்று’ எனா.
(சீதை) சீரம் புனைந்தனள். வள்ளல்பின் வந்து நின்றனள், கரம் பற்றிய கையினாள்.
ராமன்: ‘(சீதையே), விளைவு உன்னுவாய் அல்லை, போத அமைந்தனை, ஆதலின் எல்லை அற்ற இடர் தருவாய்.’
சீதை: ‘துயரம் இது ஒன்றுமே, என் துறந்தபின் இன்பம்கொலாம்?’
பிறிதொர் மாற்றம் பெருந்தகை பேசலன். நெடுந்தெருச் சென்றனன்.
திருமகள் முன் செல, இளையவன் பின் செலக் காரை ஒத்தவன் போம்படி கண்ட அவ்வூர் உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ!
மக்கள்: ‘வீரன் முன் வனம் மேவுதும் யாம்’ எனாப் போயினர்.
ராமன்: (தன் தாய்மார்களிடம்) ’மன்னரை ஆற்றுமின் நீர்’
மாதராரும் விழுந்து மயங்கினார். ஏத்தினார், வழுத்தினார்…
தாய்மார்கள்: (கடவுளிடம்) ‘(ராமன், சீதை, லட்சுமணனைக்) காத்து நல்குமின் தெய்வதங்காள்!’
முனிவனைக் கைதொழாத் தன்னது ஆருயிர்த் தம்பியும் தாமரைப் பொன்ன்னும் தானும் ஒரு தேர்மிசைப் போயினான்.
வால்மீகி ராமாயணத்திலிருந்து கம்பன் செய்துள்ள பெரிய பெரிய மாற்றங்களில் ஒரு சிலவற்றைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். முக்கியமானது, தசரதனிடம் விடைபெறாமல் இராமன் கான் ஏகுவது. இது வால்மீகி ராமயணத்தில், நீண்ட வாக்கு வாதங்களுக்குப் பிறகு நடைபெறும் ஒன்று. தசரதனுக்கும் இராமனுக்கும் இடையே நடைபெறும் அனைத்து வாதங்களையும் தவிர்த்து, எவ்வளவு சாமர்த்தியமாக கவி, தன் நாடகத்தை அழகு கெடாமல் நகர்த்துகிறான் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.
இலக்குவனைத் தன்னுடன் வரவேண்டாம் என்று இராமன் உரைக்க, இலக்குவன் துடிதுடித்துப் போய், ‘நீர் உள எனில் உள மீனும் ஆம்பலும்’ என்ற உவமையை வால்மீகியிலிருந்து அப்படியே எடுத்துத்தான் கம்பன் பயன்படுத்துகிறான். ஆனாலும், வான்மீகத்தில், சீதையைக் காட்டுக்கு வரவேண்டாம் என்று முதலில் தடுத்து, பிறகு சம்மதித்து, இவையெல்லாம் நடந்த பிறகே, இலக்குவன் இந்த வாக்கியத்தைப் பேசுகிறான்.
இதன் பிறகு, சீதையைக் கானகத்துக்கு உடனழைத்துச் செல்ல இராமனுக்கு மனத்தில் எண்ணம் இருந்ததா இல்லையா? இருந்தது. இருந்தும் தன் விழைவுக்கு எதிரான ஒரு கருத்தை சீதையின் முன் வைத்தான். இந்தப் பகுதியில் எல்லோரும் ‘எல்லையற்ற இடர் தருவாய்’ என்ற பாடலை மட்டுமே முன்வைத்து, அத்தனைத் துன்பத்துக்கும் சீதைதான் காரணம் என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கு இரண்டு பாடல்கள் முன்னதாக, இராமன் உள்ளக் குறிப்பாகக் கவி இந்தப் பாடலைச் சொல்கிறான்:அண்ணல், அன்னசொல் கேட்டனன்; அன்றியும்,உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்;கண்ணில் நீர்க்கடல் கைவிட நேர்கிலன்,எண்ணு கின்றனன், 'என்செயல் பாற்று?' எனா.அவள் கண்ணில் பெருகும் நீரைப் பார்த்து, அவளைத் தனியாக விட்டு வனம்புக அவனுக்குச் சம்மதமில்லை. இதில் ‘உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்’ என்று கம்பன் ஒற்றை அடியில் குறிப்பிட்டு அவசரமாக நகரும், அந்த, சீதையின் மனத்தினுள்ளே நிறைந்துள்ள கருத்தை உணர்ந்தானே, அதை என்ன வண்ணமாக உணர்ந்தான்? அப்படி அவன் உணர்ந்த சீதையின் மனக் கருத்துதான் என்ன?யாருமே மேற்கோள் காட்டி விளக்காத இந்தப் பாடலில், சொல்லப் போனால், கவனத்துக்குரியதாகவே கருதாமல் பெரும்பாலோனோர் நகர்ந்துவிடும் இந்தப் பாடலில் உள்ள அந்த ‘உள் நிவந்த கருத்து’ என்னவாக இருக்கும் என்றால், சம இடத்தில் வால்மீகி என்ன சொல்கிறாரோ அதே கருத்தாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் கம்பன் நடந்த பாதையே வால்மீகிதான். இந்தப் பாடலுக்கான வால்மீகி ராமாயண இணை-இடத்தையும் சேர்த்துப் படித்தால்தான் இந்தப் பாடலின் பொருள் சரிவரப் பிடிபடும். அதையும் செய்திருக்கிறோம்.
ஆழ்ந்து முற்றோதலிலன் பயன் கவனத்துக்கு வராத பாடலையும் கவனித்துச் சிறப்பு உணரும் வாய்ப்பு என்பதை உணர்கிறேன்.உள் நிவந்த கருத்தையும் விரித்து ஒரு பதிவாகத் தாருங்கள் திரு ஹரிகி .அன்புடன்
இன்றைய கம்ப ராமாயண வகுப்பு Notes, நாடக வடிவில்
********************************
ஏவிய குரிசில் (சுமந்திரன் தேரில் ஏறிய ராமன்) பின் (அயோத்தி மக்கள் எல்லாரும் சென்றனர்).
அந்தியில் வெயில் ஒளி அழிய, இருண்டது
(ராமன்) ஓசனை இரண்டு சென்று ஒரு சோலை எய்தினான். இரத நின்று இழிந்தபின் ராமன் இன் துணை உரைசெறி முனிவரோடு உறையும்காலை…
வேந்தர், வேறுளோர் வட்டம் ஓர் ஓசனை வளைவிற்றாய் சோலையின் புறத்தைச் சூழ்ந்து… தாம் விட்டிலர் குரிசிலை (ராமனை)
(மக்கள்) பைம்புலில்… அயின்றிலர் (சாப்பிடவில்லை), துயின்றிலர் (தூங்கவில்லை), அழுது விம்மினார்.
(ராமனுடன் தங்கிய பலவகை மக்கள்) நவ்வியர், கன்னியர், மைந்தர் (ஆண்கள்), மகளிர்… துயின்றார்
ஏனையரும் இன்னணம் உறங்க… (அப்போது)
ராமன்: (மந்திரி சுமந்திரனிடம்): ‘உன்னால் மேல் நிகழ்வது உண்டு, கேள்!’
ராமன்: ‘அன்பினாரைப் போக்குவது அரிது, ஈண்டு நின்று ஏகல் பொல்லாது, நீ இரதம் இன்னே தூண்டினை மீள நோக்கி…’
ராமன்: ‘சுவட்டை ஓர்ந்து என்னை அங்கே மீண்டனன் என்ன மீள்வர். இது நின்னை வேண்டிற்று.’
சுமந்திரன்: ‘இவ்வயின் நின்னை நீங்கி ஏகி அவ்வயின் (அயோத்தியில்) அனைய காண்டற்கு அமைந்தனன் அடியன்.’
சுமந்திரன்: ‘தேவியும் இளவலும் தொடர செல்வனைக் கானகம் புக உய்த்தேன் என்கோ? கோவினை உடன்கொடு குறுகினென் என்கோ? யாவது கூறுகேன்?’
சுமந்திரன்: ‘மைந்தரைப் பார் இடைச் செலுத்தினேன், தேரிடை வந்தனன் என்கோ? அரசனை(தசரதனை)ச் சொல்லினால் கொலை செய்வேன்கொலோ?’
சுமந்திரன்: ’வேள்வி செய்து பெற்ற நின் சிங்க ஏறு அகன்றது என்று உணர்த்தச் செல்கெனோ? என்னின் கேகயன் நங்கையே நல்லள் போலும்’
(சுமந்திரன்) இன்னன மொழிந்தபின்னரும் அடியுறத் தழுவினன், படி உறப் புரண்டனன்.(ராமன் அவனைக்) கையால் எடுத்து, தழுவி, கண்ண நீர் துடைத்து
ராமன்: ‘பிறத்தல் என்று உற்றபின் பெறுவ யாவையும் திறத்துளி உணர்வது ஓர் செம்மை உள்ளத்தாய், அவலம் உண்டெனா அறம் மறத்தியோ?’
ராமன்: ‘இன்பம் வந்து உறும் எனின் இனியது, ஆயிடைத் துன்பம் வந்துறும் எனில் துறக்கலாகுமோ?’
ராமன்: ‘சூரர் ஆவது வன்மை அன்று, இறப்பினும் திருவெலாம் இழப்ப, எய்தினும் துறப்பிலர் அறம் எனல்’
ராமன்: ‘மன்னர் தொல்குலம், யான் பிறந்து அறத்தின் நின்று இழுக்கிற்று என்னவோ?’
ராமன்: ‘புதல்வனை வனத்துள் விட்டனன் மன்னவன் தனக்கு அது அரும் தவம், தலைக்கொண்டு ஏகுதல் எனக்கு அரும் தவம், இரங்கல் எந்தை நீ?’
ராமன்: ‘முனிவனை (வசிஷ்டரை) இறைஞ்சி, வந்தனை கூறு, எந்தையை அவனொடும் எய்தி, என் சிந்தனை உணர்த்துதி.’
ராமன்: ‘எம்பியை (பரதனை) முறையில் நின்று இனியன இழைத்தி என்று இயம்பி, என் பிரி (தசரதனின்) தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி’
ராமன்: (பரதனிடம் சொல்லச் சொல்வது) ‘அன்னையால் விளைந்தது கவ்வை என்று நோக்கலன், என்வயின் வைத்த அவ் அருள் அவ்வயின் அருள்.’
ராமன்: ‘வேந்தனை (தசரதனை) அவலம் மாற்றி, பின், வேண்டினன் இவ்வரம் என்று மேலவன் ஈண்டருள் எம்பி (பரதன்) பால் நிறுவி…’
ராமன்: (தசரதனிடம் சொல்லச் சொல்வது) ‘ஏழிரண்டு ஆண்டு நீத்து வந்து உனைத் தாழ்குவன்’ என ‘மாதவன் சொலால் சொல்லி மனம் தெருட்டுவாய்’
ராமன்: ‘முறைமையால் என் பயந்து எடுத்த மூவர்க்கும் நெடு வணக்கம் கூறிப் பின் இறைமகன் (தசரதன்) துயர் துடைத்து இருத்தி’
வணங்கிய தேர்வலான் (சுமந்திரன்) வாள்வழி நோக்கியை (சீதையை) வணங்கி நோக்கினான்.
சீதை: ‘அரசர்க்கு, அத்தையர்க்கு என் வணக்கம் முன் இயம்பி, யான் உடைப் பொன்னிறப் பூவை, கிளி போற்றுகஎன்று என் தங்கயர்க்கு உணர்த்துவாய்’
(இதைக் கேட்ட சுமந்திரன்) பொருமி விம்மினான், சோர்கின்றான். இளைய மைந்தனை(லட்சுமணனை)க் ‘கூறுவது யாது’ என… இனைய கூறினான்.
லட்சுமணன்: ‘என் கோமகற்கு உதவிப் போக்கிய செல்வத்தைக் குழலிமாட்டு அளித்த மெய்யனை அரசன் என்று இன்னம் ஒன்று அறையற்பாலதோ?’
லட்சுமணன்: ‘கானகம் பற்றி புதல்வன் காய் உண, போனகம் பற்றிய பொய் இல் மன்னர்க்கு… (என்) வலிமை கூறு.’
லட்சுமணன்: ‘பரத வேந்தர்க்கு… என் மன்னுடன் பிறந்திலென், தன்னுடன் பிறந்திலென், தம்பி முன் அலன், என்னுடன் பிறந்தயான் வலியேன்’
ராமன்: (லட்சுமணனிடம்) ‘ஐய நீ சீரிய அல்லன செப்பல்!’
(சுமந்திரன் தேரைப்) போநெறிகாட்டினன், ஒருவரும் உணர்வுறாமலே ஓட்டினன்.
· 1
தையல்(சீதை) தன் கற்பும், தன் தகவும், தம்பியும் கருணையும் உணர்வும் வாய்மையும் வில்லுமே சேமமாகக் கொண்டு ஐயனும் (ராமன்) போயினான்.
(ராமன், சீதை, லட்சுமணன்) யோசனை இரண்டு சென்றான். தேரில் போனான் (சுமந்திரன்) செய்தது சொல்லலுற்றாம்.
கடிகை இரண்டு மூன்றில் அயோத்தி கண்டான். முனிவனை (வசிட்டன்) அடியினைத் தொழுதான். படியெலாம் கேட்டு உழந்தான், எலாம் உணர்ந்தான்.
வசிஷ்டன்: ‘அந்தோ! முடிந்தனன் மன்னன்!’
விம்மி, பொன் திணி மன்னன் (தசரதன்) கோயில் (வசிஷ்டன்) சுமந்திரனோடும் புக்கான்
தேர் கொண்டு வள்ளல் (ராமன்) வந்தான் என்று (அமைச்சர்கள்) சுற்றி… (ராமனைக்) கண்டிலர், பாகன் (சுமந்திரன்) நிலை கண்டே தீர்ந்தார்.
வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் (தசரதன்) மயக்கம் தீர்ந்தான். விழித்து நோக்கி, ‘வீரன் வந்தனனோ?’ என்றான்.
‘இல்லை’ என்று உரைக்கல் ஆற்றான், ஏங்கி முனிவன் (வசிஷ்டன்) நின்றான். ‘நம்பி நடந்திலன்’ என்னும் மாற்றம் சொல்லலும், அரசன் சோர்ந்தான்.
தசரதன்: (சுமந்திரனிடம்) ‘நம்பி சேயனோ, அணியனோ?’
சுமந்திரன்: ‘கானில் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினன்.’
(தசரதன்) ஆவி போனான்.
கோசலை மறுகி வீழ்ந்தாள். அரற்றலுற்றாள். சுமித்திரையும் ஏங்கி உயிர் சோர, மற்ற தேவியரும் வந்து இரைத்தார்.
(தசரதனின் மற்ற மனைவியர்) வஞ்சமில்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார் (உடன்கட்டை ஏறுதல்)
சுமந்திரன் சென்று அரசன் தன்மை சொல, முனிவன் (வசிஷ்டன்) விம்முவான்.
செய்யக் கடவ சிறுவர் ஈண்டையார் அல்லர். தையல் கடலில் கிடந்தானை(தசரதனை)த் தயிலக் கடலின் தலை உய்ர்த்தார்!
வசிட்டன்: (தசரதனின் மனைவியரிடம்) ‘இவற்கு உரிமை செய்யு நாளில் தீயில் ஆவி நீத்திர்’
வசிட்டர்: (தூதர்களிடம்) ‘பரதன் கொண்டு அனைக’ என்று ஏவினான்
(தூதர்கள்) கேகயர் கோன் நகரம் புக போனார்… (அப்போது காட்டில் இருந்த அயோத்தி) மாந்தர்க்கு விளைந்த பரிசு விளம்புவாம்
(காட்டில் அயோத்தி மக்கள்) எழுந்தார், கருமுகிலைக் (ராமனைக்) காணார், புரண்டார், ‘தொடர்தும் தேரின் சுவடு’ என்பார்
தேரின் சுவடு நகரின் மிசைத் திரிய திகிரிக் குறி கண்டார், உயிர் வந்தார், ‘ஆரும் அஞ்சலை, ஐயன் அயோத்தி அடைந்தான்’ என்ன ஆர்த்தார்.
(மக்கள்) உவகையராய் எழில் மா நகரம் (அயோத்தி) எய்தினார். அரசன் பொன்னுலகம் போனான் என்னும் பொருள் கேட்டார். உக்கார்.
’தக்கான் (ராமன்) போனான் வனம்’ என்னும் தகையும் உணர்ந்தார்… இன்னல் சிறையின் இடைப்பட்டார்.
(வசிட்டன்) பன்னற்கு அரிய பல நெறியும் பகர்ந்து பதைப்பை நீக்கினான்…. வரிசிலைக் கை நம்பி (ராமன்) செய்கை நடத்துவாம்.


இன்றைய வகுப்பு Notes: கம்பனின் சொற்களிலேயே
28 டிசம்பர் அன்று நடைபெற்ற பெங்களூரு கம்ப ராமாயண வகுப்பின் Notes, கம்பன் சொற்களிலேயே
வற்கலையின் உடையானை, மாசு அடைந்த மெய்யானை, நகை இழந்த முகத்தானை, கல் கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான் (குகன்). வில் கையினின்று இடை வீழ விம்முற்று நின்று…
தூரக்காட்சியில் தொடங்கி கொஞ்சம் கொஞசமாக நெருக்கமாகக் காட்டும் இன்றைய நிழற்படக் கலைஞனைப் போன்ற காட்சி அமைப்பில் கம்பன் சொற்களில் காட்டுகிறானாம். முதலில் மொத்த உருவாக உடை. அணுக்கமாக மாசடைந்த மேனி. மேலும் நெருங்கி முகம், நகையிழ்ந்த இதழ்கள், கண் காட்டும் துயரம் என்று காட்சி நெருங்கி விரிகிறது. நன்றி.
இன்றைய கம்ப ராமாயண வகுப்பு Notes, கம்பனின் சொற்களிலேயே!
(குகன் படகில் அயோத்தி) சேனையும், எல்லை தீர் நகர் மாந்தரும் மகளிர் வெள்ளமும் செறிதிரைக் கங்கை பின் கிடக்கச் சென்றவே.
(பரதன்) தானும் (படகில்) ஏறினான்.
தம்பியும் (சத்ருக்கனன்), தாயர் மூவரும், தேர் வலவனும் (சுமந்திரன்), தூய தோழனும் (குகன்) ஏறலும், (படகு) மேயினான்.
குகன்: (கோசலையைப் பார்த்து, பரதனிடம்) ‘குரிசில், இவர் ஆர்?’
பரதன்: ‘முற்றத்தான் (தசரதன்) பெரும் தேவி, மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றானை பெற்றத்தால் பெறும் செல்வம், யான் பிறத்தலால் துறந்த பெரியாள்.’
(குகன்) அடியின்மிசை நெடிது விழுந்து அழுவான்.
கோசலை: ‘இவன் யார்?’
பரதன்: ‘இன் துணைவன் இராகவனுக்கு.’
பரதன்: ‘இலக்குவர்க்கும் இளையவர்க்கும் எனக்கும் மூத்தான், குகன் என்பான் இந்நின்ற குரிசில்.’
கோசலை: ‘மைந்தீர், காடு நோக்கி மெய்வீரர் பெயர்ந்ததுவும் நலம், காளை (குகன்) இவன் தன்னொடும் கலந்து ஐவீரும் அகல் இடத்தை அளித்திர்.’
குகன்: (சுமித்திரையைப் பார்த்து, பரதனிடம்) ‘ஐய, அன்பின் நிறைந்தாளை உரை!’
பரதன்: ‘(தசரதன்) இளம் தேவி, இராமன் பின்பு பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் (லட்சுமணன்) தனைப் பயந்த பெரியாள்.’
குகன்: (கைகேயியைப் பார்த்து, பரதனிடம்) ‘யார் இவர் என்று உரை.’
பரதன்: ‘படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும் செவிலியை… ஒருத்தி அன்றே இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல், இந்நின்றாள், என்னை ஈன்றாள்.’
இரக்கம் இலாளையும் தன் நல் கையின் (குகன்) வணங்கினான். வந்தது தோணியே.
தாயர் சிவிகையின் ஏற, குகனும் உடன் ஏகினான், (பரதன்) கழிந்தனன் பல காவதம் காலினே.
பரத்துவன் எனும் பேர் மாதவன் வைகிடம் அணுகினன், அவன் வேதியரோடு எதிர் மேவினான்.
மாதவத்தோனை அம்மைந்தனும் (பரதன்) தாழ்ந்து வணங்கினான். (பரத்வாஜ முனிவன்) ஆசிகள் கூறினான்.
பரத்வாஜ முனிவர்: ‘பேரரசு ஆண்டிலை ஐய நீ, முனிவர் தூசு உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது?’
பரதன்: ‘முறை நீங்கி நிலம் கொள்கிலேன். இறைவன் (ராமன்) கொள்கிலன் எனின், உறைவென் கானத்து ஒருங்குடனே.’
உரைத்த வாசகம் கேட்டலும் தவத்தோர்க்கெலாம் உள்ளம் குளிர்ந்தது…
அமர்வு நடந்துகொண்டிருக்கும் போதே, உடனுக்குடன் குறிப்புகளை வலையேற்றிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் நாக. சொக்கன் தொகுத்தளித்த வகுப்புக் குறிப்புகளை இங்கே தருகிறோம்.இந்த வார வகுப்பு, நாடக வடிவில்:கோசலையிடம் தசரதன் பழைய கதை சொல்கிறான்: ‘வெய்ய கானத்திடையே வேட்டை வேட்கை, சென்று திரிவேன், நதியின் கரைவாய்ச் சென்றே நின்றேன்!’
பதிவுகளுக்கு உங்கள் கருத்துகளை எப்போதும் போல் வரவேற்கிறோம். எப்போதும் போல் கண்டு களிக்குமாறு அழைக்கிறோம்.