"ஶ்ரீ ராமன் கதையைப் படி" (மீ. விசுவநாதன்)

6 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Mar 26, 2026, 5:53:09 PM (2 days ago) Mar 26
to Santhavasantham, M. Viswanathan
"ஶ்ரீ ராமன் கதையைப் படி"
      (மீ. விசுவநாதன்)

ராமன் கதையைப் படிக்கப் படிக்க - மனம்
நாமும் அவன்போல் வாழப் படிக்கும்
பாசம் பக்தி பண்பு வீரம் - அறக்
காதல் கொண்ட பாதை நடக்கும்
                (ராம கதையைப் படிக்க)

அன்னை யிடத்தில் பாசம் பொழியும் - தன்
அத்தன் வாக்கை மதித்து நடக்கும்
முன்னம் குருவின் மொழியைக் கேட்டு -   தன்
முழுமை பக்திப் பணிவைக் காட்டும்
                (ராமன் கதையைப் படிக்க)

மிதிலை சீதை காதல் கொண்டு - கண்
பதிலை உணர்ந்து வில்லை ஒடித்தான் 
விதியின் வலியால் காட்டில் அலைந்தான் - நல்
வேளை பார்த்துப் பட்டம் ஏற்றான்.
          (ராமன் கதையைப் படிக்க)

அறத்தைக் காக்க அறமாய்ப் பிறந்தோன் - பொய்
அரக்க குணத்துக் குலத்தை அழித்தோன்
திறத்தில் வீர ராக வனாகப் - புகழ்
மேரு மலையாய் உயர்ந்து சிறந்தோன்
           (ராமன் கதையைப் படிக்க)
(இன்று  ஶ்ரீ ராம நவமி தினம் - 27.03.2026)

Rajagopalan Soundararajan

unread,
Mar 27, 2026, 7:07:41 AM (yesterday) Mar 27
to சந்தவசந்தம்
அருமை.
சில கருத்து வேறுபாடுகள் உள.
"விதியின் வலியால் காட்டில் அலைந்தான் - நல்
வேளை பார்த்துப் பட்டம் ஏற்றான்"
பகவான் 'கர்மத்தால்' பந்தப்பட்டவன் அல்லன்; தன் 'ஸ்வஸங்கல்பத்தால்' அதாவது தன் சொந்த இச்சையால் அவதரிக்கிறான். 'விதியின் வலியால்' என்பது சரித்திரம் எழுதுவோருக்கு சரி என்று இருந்தாலும், தனித்து நின்று இராமனைப் புகழ்ந்து பாடுமிந்த பாடலில் அவனை ஒரு ஸாதாரண மனிதனாகக் கொள்ளத் தேவையில்லை. (अहं मानुषं मन्ये- என்பது நாடகப் பாணி என்று கொள்வதே உசிதம்).
'நல் வேளை' என்பதெல்லாம் நம்மைப் போன்ற மனிதருக்குத்தான். என்று அவன் பட்டாபிஷிக்தனாக என்று ஆனானோ அன்றே நல்ல நாள். 
ஒன்பது க்ரஹங்களும் ஒன்று கூடி அயோத்திக்கு வந்து பட்டாபிஷேகத்தில் பங்குகொண்டு இராமனைக் கண்ணாரக் கண்டு அநுபவிக்கும்போது, ராசிக் கட்டத்தில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று நல்ல நேரம் பார்ப்பது எவ்வாறு சரி?

கவிஞனுக்குச் சுதந்திரம் உண்டு என்பதும் சரிதான். அப்படி நினைத்து அமைதி கொள்கிறேன். 

ஸௌந்தர் 

M. Viswanathan

unread,
Mar 27, 2026, 9:48:06 AM (yesterday) Mar 27
to santhav...@googlegroups.com, M. Viswanathan

அன்புக் கவிஞர்  ஸௌந்தர் அவர்களின் கருத்துக்கு மகிழ்சசி. நன்றி.

அன்பன்,
மீ. விசுவநாதன் 
27.03.2026 19.17 pm

Reply all
Reply to author
Forward
0 new messages