நங்கள், நங்கை, நங்கன்

173 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 4, 2016, 10:45:11 AM1/4/16
to சந்தவசந்தம்
நங்கள், நங்கை, நங்கன்  - இச்சொற்கள் பற்றிய ஒரு சிந்தனை.

On Saturday, January 2, 2016 at 1:51:16 PM UTC-6, தேமொழி wrote:
தகவல் பகிர்ந்துகொண்ட சேசாத்திரிக்கு நன்றி 
( நங்கநல்லூர்/நங்கைநல்லூர் தெரியும்....நங்கன் = ? )

குழும உறுப்பினர் பொன் வெங்கடேசன் அவர்களுக்குப் பாராட்டுகள்.

....... தேமொழி 



நங்கள், நங்கை சொற்களை இலக்கியங்களில் மிகக் காண்கிறோம்.
நங்கன் சொல் அருகிவழங்கினாலும் கல்வெட்டு, இலக்கியம், ஊர்ப்பெயர்களில்
உண்டு.

கொங்குநாட்டில் அண்ணியை/மதினியை  நங்கை/நங்கையாள் என்போம்.
நம்முடைய அண்ணி எனப் பொருள். சங்ககாலத்தில் சேரர் தலைநகர்
வஞ்சி எனப்படும் இன்றைய கொங்குநாட்டுக் கரூர் தான். முதலில்,
இதனை விளக்கி இரா. இராகவையங்காரவர்கள் ‘சேரர் வஞ்சி’ என்ற
நூலில் எழுதினார்கள். சென்ற 50, 60 ஆண்டுகளாக தொல்லியல்
பொருள்களும், நாணயங்களும், தமிழ் ப்ராமி கல்வெட்டுகளும் அதனை 
நிரூபித்துவிட்டன. ஆக, சிலம்பின் ஆசிரியர் இளங்கோ அடிகள்
கருவூர் வஞ்சியில் வாழ்ந்தவர் எனக் கொள்ள மிகுதியான இடம் உண்டு.
ஸம்மர் பேலஸ் என்பதுபோல, பாலக்காட்டு கணவாய் வழியாக
முசிரிப்பட்டினத்திற்கும் சென்று வந்திருக்கலாம் - சுங்கம் போன்றவை
வசூலிக்க. இளங்கோ அடிகள் கொங்குநாட்டு வழக்காகிய
“நங்கை” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்: 
சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற

நங்கை = நம் அண்ணியார்; நம்பி = நம் அம்பி (இளைஞன், பூசகன் - நம்பியாண்டார் நம்பி).
நங்கள் - நம்முடைய (இங்கே -கள் அசைநிலை). இவை போல, 
நங்கன் - நம்முடையவன், நம் அண்ணன் (போன்றவன்), அண்ணாச்சி

MTL:
நங்கள் naṅkaḷ , n. < நம்¹. The basic form which nāṅkaḷ

திருவாய்மொழி:
எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியைநான் கண்டபின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றி னோடும் செல்கின்றது என்நெஞ்சமே.

        சங்கு சக்கரம், அங்கையில் கொண்டான்
        எங்கும் தானாய, நங்கள் நாதனே.

பெரியபுராணம்:
கொங்கு நாடு கடந்து போய்க் குலவு மலைநாட் டெல்லையுற
“நங்கள் பெருமான் றோழனார் நம்பி தம்பி ரான்றோழர்
அங்க ணுடனே வணையவெழுந் தருளா நின்றா” ரெனும்விருப்பால
எங்கு மந்நாட் டுள்ளவர்க ளெல்லா மெதிர்கொண் டின்புறுவார்;

"நங்கள்....எனும் - இது மலைநாட்டு மக்கள் எண்ணியது; நங்கள் பெருமான் - தோழர் - நமது அரசராகிய சேரமானாரது தோழர்; “சேரமான் றோழர்" என்ற நாமத்தைப் பற்றி உரிமைப்படக் கூறியது; (3813) தம்பிரான்றோழர் என்னும் இறைவரைப் பற்றிய உரிமையினும் இதனை மேம்படக்கொண்டனர் என்பார் இதனை முன்வைத்தார்."

கம்பன்:
‘நங்கள் காரியம் இயற்றுவான் உலகிடை நடந்தீர்;
உங்கள் ஆர் உயிர் எம் உயிர்; உடல் பிறிது உற்றீர்;
செங் கண் நாயகற்காக வெங் களத்து உயிர் தீர்ந்தீர்;
எங்கள் நாயகர் நீங்கள்’ என்று இமையவர் இசைத்தார்.

அதியமான் நடுவில் நங்கன் என்பான் பருத்திப்பள்ளிச் சிவன் கோயிலைப் புதுப்பித்தான். இக்கல்வெட்டு பற்றிப் புலவர் செ. இராசு எழுதியிருக்கிறார்கள். சேசாத்திரி நங்கன்விளை என்ற ஊரைக் குறிப்பிட்டார். அண்மைக் காலம்வரை நங்கன் என்ற சொல் வழக்கில் இருந்திருக்கிறது.

”தண்ணீரில் விளக்கும் எரிந்தது:
கருங்குழியில் வேங்கட ரெட்டியார் வீட்டில் தங்கியிருந்தபோது இராமலிங்கருக்கென்று ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அடிகளார் இரவில் ஒரு மணி நேரமே உறங்குவார். தியானம் செய்வதிலும் அருட்பாக்களைப் பாடுவதிலும் எழுதுவதிலும் மற்றைப் பொழுதைக் கழிப்பார். இரவில் ஒரு மாடத்தில் விளக்கேற்றி வைப்பது வழக்கம். 

ஒருநாள் ரெட்டியாரின் மனைவி வெளியூருக்குப் போக வேண்டியிருந்தது. விளக்கில் எண்ணெய் வேண்டுமளவு ஊற்றி வைத்துவிட்டு, எண்ணெய் வைக்க வேண்டிய கலசம் உடைந்து போனதால், பழகுவதற்குப் புதிதாக ஒரு மண் கலத்தில் தண்ணீரை ஊற்றி மாடத்துக்கு அருகே வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். 

பாடல்கள் எழுதுவதிலேயே கவனமாக இருந்த இராமலிங்கரோ, தண்ணீர்க் கலத்தை எண்ணெய்க் கலம் என்று கருதி நீரையே எடுத்து அவ்வப்போது விளக்கில் இட்டு இரவு முழுவதும் எழுதிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் அவ்வம்மையார் வந்து பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார். அன்று முதல் அடிகளாரின் தெய்வீகத் தன்மை மற்றவர்களுக்கும் பரவலாகத் தெரியவந்தது. இதுவும் இறைச் செயல்தான் என்பதை வள்ளல் பெருமானே பாடியுள்ளார். 

மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கு
    இல்லை என்றார் மேலோர் நானும்
பொய்விளக்கே விளக் கெனவும் பொங்கிவழி
    கின்றேனோர் புதுமை யன்றே
செய்விளக்கும் புகழுடைய சென்னை நகர்
     நண்பர்களே செப்பக் கேளீர்
நெய்விளக்கே போன்றொருதண் ணீர்விளக்கும்
     எரிந்தது சந் நிதியின் முன்னே

இந்நிகழ்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில், மதுரைத் திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனம் சிதம்பர சுவாமிகள் அருளிய வெண்பா வருமாறு
தண்ணீர் விளக்கெரிந்த தன்மைபோல் மாந்தர்தம்
உண்ணீர் சிவம்விளங்க ஓங்குவிக்கும் கண்மணியாம்
நங்கன் இராமலிங்கன் நல்லஅருட் பாமுறையைத் 
துங்கமுற மாணா தொழு  “

நங்கை = நம் அண்ணியார் (சிலப்பதிகாரத்தில்); நம்பி = நம் அம்பி (இளைஞன், பூசகன் - நம்பியாண்டார் நம்பி). நங்கள் - நம்முடைய (இங்கே -கள் அசைநிலை). இவை போல, 
நங்கன் - நம்முடையவன், நம் அண்ணன் (போன்றவன்), அண்ணாச்சி.

நா. கணேசன்

 
On Saturday, January 2, 2016 at 11:39:33 AM UTC-8, நங்கன் wrote:
http://www.dinamani.com/edition_dharmapuri/salem/2016/01/02/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-16-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1/article3207553.ece

சேலம் ஆத்தூர் அருகே 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு


சேலம் மாவட்டம் தலைவாசலுக்கு அருகே உள்ள நத்தக்கரை கிராமத்தில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே உள்ள வரலாற்று புகழ் மிக்க ஊர் ஆறகளூர். இந்த ஊருக்கு வடக்கு பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர் நத்தக்கரை.

இங்கு 16 ஆம் நூற்றாண்டை சார்ந்த கல்வெட்டை, ஆறகளூரை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் பொன்.வெங்கடேசன் என்பவர் கண்டறிந்தார். நத்தக்கரையில் வசிக்கும் தலைமை ஆசிரியர் மனோகரன் என்பவரின் வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் 85 செ.மீ நீளமும், 45 செ.மீ. அகலமும் உள்ள கற்பலகையில் இரு புறங்களிலும் 49 வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், மங்கை வீரராகவன், பொன்.வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழு இந்த கல்வெட்டை ஆய்வு செய்தது.

இக்கல்வெட்டு கி.பி.1585 ஆம் ஆண்டு வெட்டப்பட்டுள்ளது. சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் என நட்சத்திர குறிப்புகளோடு இக்கல்வெட்டு ஆரம்பமாகிறது.

ஆறகளூரில் உள்ள காமநாகேஸ்வரர் கோயிலில் உள்ள பெரியநாயகிக்கு, நத்தக்கரை கிராமம் நாயக்க மன்னர்களால் ஆற்றூர் (தற்போதைய ஆத்தூர்) நட்டவாரிடம் தானமாக தாரை வார்த்து வழங்கப்பட்டது என கல்வெட்டு தெரிவிக்கிறது.

மேலும், இக்கல்வெட்டு குறிப்பிடும் தானத்தை அழிவு செய்வோர் கங்கை கரையிலே சினைப் பசுவை கொன்ற பாவத்திற்கு உள்ளாவார்கள் என கல்வெட்டு தெரிவிக்கிறது.

இக்கல்வெட்டை நாட்டவர்கள் சொல்ல ஆற்றூரை (தற்போதைய ஆத்தூர்) சேர்ந்த நாட்டு கணக்கணான காமீஸ்வரன் பொறித்துள்ளார் என்பதை இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.

தலைவாசலுக்கு கிழக்கு, நாவல்குறிச்சிக்கு தெற்கு, பெரியேரிக்கு மேற்கு, இடைப்பட்ட நத்தகரை கிராமம் என கிராமத்தின் நான்கு எல்லைகளையும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

11 ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரை ஆறகளூர் மகதை நாடு என்ற குறுநில நாட்டின் தலைநகராய் இருந்தது.

மூன்றாம் குலோத்துங்க சோழனின் தளபதியாய் இருந்த பொன் பரப்பின வாணகோவரையன் என்பவர் ஆறகளூரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்துள்ளார். சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசு, நாயக்கர்கள் கீழ் ஆட்சி நடந்துள்ளது.

எனவே, ஆறகளூரை சுற்றி உள்ள பகுதிகளில் இன்னும் புதிய கல்வெட்டுக்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆறகளூர் பொன்.வெங்கடேசன் தெரிவித்தார்.

N. Ganesan

unread,
May 19, 2019, 8:29:44 AM5/19/19
to சந்தவசந்தம்
On Sat, May 18, 2019 at 6:19 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
நாத்தி என்பதன் வேர்??
rnk

நாத்தனார்/நாத்தி என்பது வடசொல்லின் தற்பவம் ஆகும். மலையாளத்தில் இன்றும் நாத்தூண் என்னும் வடிவம் ( < nanāndṛ from Skt.) வழங்குகிறது.
நாத்தி கன்னடத்தில் நாதினி என்றாகிறது. நாத்தூண் > நாத்தன் > நாத்தனார் (ஏனெனில், -ன் என்பது ஆண்பாற்பெயர் விகுதி ஆயிற்றே), எனவே -ஆர் சேர்த்தப்பட்டது.
நாத்தூண் > நாத்தன் > நாத்தி என்று பெண்பால்விகுதி சேர்த்தலும் உண்டு. (உ-ம்: நாத்தி விளக்கு - சில தமிழக ஜாதிகளிடையே). நாந்தி என்பதற்கு ஏற்கெனவே பல பொருள்கள்
கொண்ட சொல் தமிழில் இருப்பதால் நாத்தி/நாத்தனார் என தமிழாக்கம் அமைந்துளது.

கொங்குநாட்டு அரண்மனை வளமனைகளில் இன்றும் பெண்கள் அம்மனார் என்று அழைப்பர். இது பழைய வழக்கு.

"தோளிணைமேலும் நன்மார்பின் மேலும் சுடர்முடி மேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணற்துழாய் நாண்
 அம்மனார் தேவரீர் திருமகள் மண்மகள் நீலா முதலா எல்லாத்தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்க, "
அம்மனார் போல, நாத்தனார். -ஆர் = மரியாதைப்பன்மை விகுதி.

நாத்தனாருக்கு இணையான செந்தமிழ்ச் சொல் கொங்குநாட்டிலே வழங்குகிறது. நாத்தனார் என்பது கொங்கில் நங்கையாள்.
பழமைபேசி பதிவில்: http://maniyinpakkam.blogspot.com/2008/12/blog-post_1717.html

சிலப்பதிகாரத்தில் நாத்தூண் நங்கை: இலக்கணக் குறிப்பு
------------------------------------------------------------------------------------------------------------
போஸ்ட்கம்பம், டிச்சுக்குழி, ... என்பது போல, நாத்தூண்நங்கை  Pleonastic Compunding எந்னும் திராவிட மொழியியல் மரபுக்கு  ஒரு பண்டை உதாரணம். இளங்கோ அடிகள் பயன்படுத்துகிறார்.
நாத்தூண்நங்கை அவர் வாழ்ந்த சேரநாட்டின் தலைநகர் இருந்த கொங்கு வழக்கை வடசொல்லால் பிறநாட்டாருக்கு விளக்குமுகமாக எழுதியுள்ளார் அடிகள்.

6. கொலைக்களக் காதை

20 

சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்

நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசில் ஆக்குதற்கு அமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற 

நற்கலம் - புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி மேன்மக்கள் ஆளும் கலத்தினை...

நங்கை என்பது போலவே நங்கன் என்ற சொல்லும் கொங்குக் கல்வெட்டுகளிலே உள்ளது. தெற்கே, அண்ணாச்சி என்பது போல, கொங்குச்சொல் நங்கன். 

பழைய மடல்:

N. Ganesan

unread,
May 19, 2019, 11:58:45 AM5/19/19
to சந்தவசந்தம்
(1) பூணூல் :: பூணல்
(2) nanāndṛ (Skt.) > நாத்தூண்  :: நாத்தண்/ன் > நாத்தனார் 

மேற்கண்ட இரு காட்டுகள் போல -ஊ- உயிர்மெய் -அ- உயிர்மெய் எனப் பேச்சுமொழியில் திரிபடையும் சொற்கள் மேலும் உண்டா?

N. Ganesan

unread,
May 28, 2019, 4:37:32 PM5/28/19
to சந்தவசந்தம்
On Tue, May 28, 2019 at 9:05 AM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
>
> அடிகள் = சாவகநோன்பியான கோவலன்  (மாதரியின் மகனார்)
> நாத்தூண் = நாத்தனார், கண்ணகி (கோவலன் அண்ணன் போன்றவன், அதனால் கண்ணகி அண்ணி (நாத்தனார்) போன்றவள்)
> நீர் = மாதரியின் மகளான ஐயை.
>
> நன்றி, நன்றி.  
> அன்பன்
> கி.காளைராசன்
>
>  

‘மாதவத்துஆட்டி வழித் துயர் நீக்கி,
ஏதம் இல்லா இடம் தலைப்படுத்தினள்;


கண்ணகியின் வழித்துயர் எல்லாம் நீக்கித்
தங்கவைக்க நல்ல இடம் ஏற்பாடு செய்தாள் மாதரி.
இடைக்குலத்தாள் ஆகிய மாதரிக்கு சமண
சமயத்தவர் உணவு பொழுது வீழ்வதன் முன்னமே உண்பர்
என்பது அறியார். ஆகலின், கண்ணகி கூறுகிறாள்.

நோதகவு உண்டோ, நும் மகனார்க்கு இனி?-
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்,

நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம்
அடிசில் ஆக்குதற்கு அமைந்த நல் கலங்கள்
நெடியாது அளிமின், நீர்’ எனக் கூற-


கண்ணகியின் மாதரியை நோக்கிய கூற்று ஆதலால்,
நும் மகன் = கோவலன். அதாவது தன் கணவன்.
அவன், சிராவக நோன்பி. Householder. இல்வாழ்வான் என்பார் வள்ளுவர்.

கண்ணகி, கோவலனை மாதரி மகன் என்பதனால், 
ஐயை ஆகிய மாதரியின் மகள் நாத்தனார் ஆகிறாள்.
கணவனின் உடன்பிறந்தாள் நாத்தனார், நாத்துணா.
மலைநாட்டில் இன்றும் கணவனுக்கு மூத்தாளை நங்கை என்பர்.
அவள் கோவலனுக்கு வயதில் மூத்தவள் என்பதால் "நாத்தூண்நங்கை"
என்கிறாள் கண்ணகி. வயதில் இளையாளாயின்
"நாத்தூண்கொழுந்தி" என்றிருப்பார். பொறுப்பாக,
சமையலுக்கு வேண்டிய எல்லாக் கலங்களும், அரிசி,
காய்கறி இன்ன பிறவும் விரைந்து அளிக்க வேண்டுகிறாள்.
நாத்து (cf. nAtha) ஊண் (உடைய) நங்கை = நாத்தூண்நங்கை.
இங்கே, கோவலனின் 'உடன்பிறப்பு' ஆகிய ஐயையை
'நாத்தூண்நங்கை' என்கிறாள் கண்ணகி.
நீர் - பன்மை. மாதரியும், ஐயையும் இதைச் செய்க என்கிறாள் கண்ணகி.

நல்கலம் = புதுக்கலம். இறைச்சி போன்றன சமைக்கும்
வீட்டுக் கலம் அன்று என்பது பொருள். இதை நானே
பல வீடுகளில் தேசாந்திரிகள் வந்து தங்கும் போது (பழனி,
ராமேசுவரம் போவார்) அவர்களுக்கான நன்கலம் அளிப்பதனைப்
பார்த்துள்ளேன். 

நா. கணேசன்

நாத்தூண்நங்கை பற்றிய தற்காலச் சிறுகதை ஒன்று. 
நாத்தனார் என்ற கதையில் வரும் கந்தசாமியின் அக்கா கங்கம்மா, தம்பி மனைவி வஞ்சியைக் காரணமின்றித் தொல்லைப்படுத்துவதாக ஆசிரியர் விந்தன் படைத்துள்ளார்.

நாத்தனார் 
 - விந்தன் (சிறுகத)

வஞ்சி எப்பொழுதுமே இப்படித்தான். அவள் வீட்டில் நடக்கும் சண்டை சச்சரவுகளைப் பற்றித் தன் கணவனிடம் ஒன்றுமே சொல்ல மாட்டாள்.

‘அக்கா! நீதான் அந்த மாவைக் கொஞ்சம் அரைச்சுக் கொடுக்கக் கூடாதா?’ என்றான் கந்தசாமி.

‘அரைப்பேண்டா, அரைப்பேன்! ஏன் அவளைக் கூடக் கொஞ்சம் தூக்கி உன் பக்கத்திலே உட்கார வைக்கட்டுமா?’ என்றாள் கங்கம்மா.

கந்தசாமி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டான். அவன் மனத்தை மாற்றுவதற்காக “வெய்யில்லே அலைஞ்சிட்டு வந்தாயே, கொஞ்சம் தயிரைப் போட்டுக் கூழைக் கரைச்சுக்கிட்டு வரட்டுமா?” என்று கேட்டாள் வஞ்சி.

“எடுத்துக்கிட்டு வா!’ என்றான் கந்தசாமி.

உள்ளே போய்ப் பார்த்தால் தயிரைக் காணோம். அதைக் கபாலி காலி செய்துவிட்டிருந்தான். 'கேட்டால் பூனையின் மேல் பழியைப் போடுவார்கள். கேட்காமல் இருப்பதே நல்லது' என்று தீர்மானித்து, வெறும் கூழைக் கரைத்துக் கொண்டு வந்தாள் வஞ்சி.

“என்னா வஞ்சி! தயிரு இல்லையா?”

‘இருந்தது; இப்போது பார்த்தாக் காணோம். பூனை குடிச்சிட்டாப் போல இருக்குது!" என்று தன் நாத்தனார் சொல்லப் போவதைத் தானே சொல்லி வைத்தாள் வஞ்சி.

அப்பொழுது “இல்லை, மாமா! நான்தான் குடிச்சுட்டேன்!’ என்று சமர்த்தாகச் சொல்லிக் கொண்டே வந்தான் கபாலி.

‘அட, என் கண்ணு! குடிச்சிட்டியா? - போ!’ என்று தன் வயிற்றெரிச்சலை வெகு லாவகமாக வெளியிட்டான் கந்தசாமி.
                  * * *

‘சேர்ந்து வாழ்வது தான் சிறந்தது' என்கிறோம். ஆனால், வாழ்க்கையில் பார்க்கப்போனால் அதைப் போன்ற தொல்லை வேறு ஒன்றும் கிடையாது என்று தோன்றுகிறது. நமது சுற்றத்தாருடன் நாம் பிரிந்து வாழும்போதோ, அல்லது பிரிந்து செல்லும்போதோ இருக்கிற ஆசையும் அன்பும் சேர்ந்து வாழும்போதோ, அல்லது சேர வரும் போதோ எங்கே இருக்கிறது?

அன்று வஞ்சியைப் பிரசவத்துக்காக அழைத்துச் செல்ல அவளுடைய அம்மா வந்திருந்தாள். அப்பொழுது “நீங்க என்னாத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போறீங்க? இங்கேயேதான் இருக்கட்டுமே; எல்லாம் நான் பார்த்துக்கிறேன்!” என்றாள் கங்கம்மா. அவள் போய்விட்டால் வீட்டு வேலைக்கும் சண்டைக்கும் ஆள் கிடைக்காதே என்ற கவலை அவளுக்கு!

இது தெரியாத வஞ்சி, “ஆமாம், அம்மா! எனக்குக் கூட அவரை விட்டுவிட்டு வரத்துக்கு என்னமோ மாதிரியாயிருக்குது! இங்கேயேதான் இருக்கிறேனே, எல்லாம் இந்த அம்மா பார்த்துக்கிறாங்க!’ என்றாள்.

‘என்ன இருந்தாலும் நாலுபேர் நாலு சொல்லுவாங்க!’ என்று சொல்லி வஞ்சியைத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டாள் அவளுடைய அம்மா.

அவள் வாழ்க!
                   * * *

வஞ்சி பிரசவித்து மூன்றாவது மாதம் நடந்து கொண்டிருந்தது. கந்தசாமி தன் மனைவியை அழைத்துப்போக வந்தான். அவனுடன் செல்ல வஞ்சிக்கு எவ்வளவோ ஆசை. ஆனால் கங்கம்மாவை நினைத்தபோது, அங்கே சென்று அவளுடைய வம்புக்கு ஆளாவதைக் காட்டிலும் இங்கேயே இன்னும் இரண்டு மாதங்களாவது தொல்லையில்லாமல் இருக்கலாமே என்று அவளுக்குத் தோன்றிற்று. இதைக் குறிப்பாகக் கந்தசாமியின் காதிலும் போட்டு வைத்தாள். அவனுக்கும் அவள் சொல்வது ஒரு விதத்தில் நல்லதென்றே பட்டது.

மறுநாள் கந்தசாமி தான் மட்டும் ஊருக்குச் செல்வதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்த போது அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் எழுதியிருந்தது இதுதான்;

சிரஞ்சீவி கந்தசாமிக்கு, ஆசீர்வாதம்.

சண்டைக்குப் போனவர் திரும்பி வந்துவிட்டார். நேரே பட்டனத்திற்கு வந்த அவர், அங்கே தனக்கு வேலை பார்த்துக் கொண்டு, இங்கே என்னை அழைத்துப்போக வந்திருக்கிறார். இந்தக் கடிதம் கண்டவுடன் நீங்கள் உடனே வந்து எங்களை அனுப்பி வைக்கவும்.

கங்கம்மா.

இதைப் படித்ததும், ‘வஞ்சி! இப்பவே நீயும் என்னுடன் புறப்பட வேண்டியதுதான்!” என்று துள்ளிக் குதித்தான் கந்தசாமி. அவனுடைய தோள்களை ஆசையுடன் பிடித்துத் தொங்கிக் கொண்டு, ‘ஏன், அந்தக் கடிதாசியிலே அப்படி என்ன எழுதியிருக்கு?” என்று கேட்டாள் வஞ்சி.

விஷயத்தைச் சொன்னான் கந்தசாமி. அதைக் கேட்ட வஞ்சியின் வதனம், காலதேவனைக் கண்ட கமலம் போல் பூத்தது!

இந்தக் காட்சி எந்த நாத்தனாருக்கும் பிடிக்காத காட்சிதான்; ஆனால் ஏன் பிடிக்கவில்லை என்றுதான் தெரியவில்லை!





Reply all
Reply to author
Forward
0 new messages