🙏
(3)
கண்ணீரே தண்ணீராய்க் கண்மலரே துதிப்பூவாய்
கலந்தமனப் பாலன் பினால்
கனிமொழியும் முனிமொழியும் கண்டதுதி வெள்ளம்
கட்டியங் கூறும தனால்
பண்ணூறும் நல்லிதயப் பாத்திரமே பொற்கலசம்
பரவசம் கவரிவி சையாய்ப்
பரிவுநறும் பன்னீரும் பக்தியெனும் இளநீரும்
பணிவுநெய் உருகும தனால்
செண்டூறும் மந்திரமும் சிந்தனையாம் சந்தனமும்
சேருமபி டேகமெ னவாய்
சேயனுனை யேதினமும் நேயமுடன் தொழுகின்ற
செயலுறுதி வரம ளித்தாய்!
வண்டூறூங் கண்முனைகள் கண்டூடிக் காக்கவே
வந்தெதிர் நின்ற மயிலே!
வனராணி! ஆனைக்கா வாய்த்தபரி பூரணி!
அகிலாண் டேஶ்வரி உமையே!
மீ. ரா
(3)
With my tears as the sacred water,
my lotus-eyes as the flowers of worship,
my heart, dissolved in devotion, as the milk of offering;
with the flood of praise woven from the sweetness of Tamil
and the wisdom-laden utterances of the sages in Sanskrit—
Making my heart, enriched with countless hymns, the golden vessel;
my ecstasy the ceremonial yak-tail fan;
my compassion the fragrant rosewater,
my devotion the tender coconut water,
and my melting humility the clarified butter—
Let sacred mantras become the vermilion offering,
and contemplative thoughts the cooling sandal paste;
thus gathering all these as the offerings
for Your holy Abhishekam,
You have granted me the blessed resolve
to worship You each day with a loving heart,
as Your devoted child.
O Peacock-like Mother,
who came and stood before me
to protect me with the gracious glance
of Your flower-like eyes, alive with bees!
O Sovereign Queen of the Forest!
O Paripūrani, adored by the elephant at Tiruvanaikaval!
O Mother Akhilāṇḍeśvarī,
I bow to You.
Mee. Ra
Sent from my iPhone
> On 23 Jul 2026, at 14:16, Rajja Gopalan <
raj...@gmail.com> wrote:
>
> தாயும்நீ தந்தைநீ தயையருட் சுடரும்நீ