Sri Thyagaraja Jayanthi - 2026

10 views
Skip to first unread message

veNbA virumbi

unread,
Apr 24, 2026, 3:11:04 AM (yesterday) Apr 24
to சந்தவசந்தம்
இன்று சித்திரைப் பூசம்.  கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான பண்ணிசை மாமேதை தியாகராஜரின் 259-ஆம் ஜயந்தி கொண்டாடப்படும் நாளிது.

*******************
(அறுசீர் விருத்தம்)

நார்கனிந்த உள்ளத்தி ராமனைவைத் தேத்தியவன்
     நளிசொல் பன்னூ
றேர்செறிந்த பாடறந்தெந் தென்னிசையின் இசையிமயம்
     எட்டச் செய்யச்
சீர்மிகுந்த ஐயாறு வழியந்த மாமேதை
     தியாக ராஜன்
பார்புகுந்த நற்றினத்தவ் வரியகலைப் பொக்கிடத்தைப்
     பாடு வோமே.


நார் = அன்பு; நளி = பெருமை; ஏர் = அழகு; பாடறந்து = பாடல் தந்து; இசை = சங்கீதம், புகழ்
*******************



Siva Siva

unread,
Apr 24, 2026, 12:30:29 PM (20 hours ago) Apr 24
to santhav...@googlegroups.com
Nice.

/  ஐயாறு வழியந்த மாமேதை தியாக ராஜன் பார்புகுந்த /

Are you implying he was born in Thiruvaiyaru?
I thought he was born in Thiruvarur.

V. Subramanian

veNbA virumbi

unread,
Apr 24, 2026, 1:54:30 PM (19 hours ago) Apr 24
to சந்தவசந்தம்
Good catch, sir!  Thank you. Mea Culpa.

*****
அவரெழுந்த தாரூரே ஐயாறன் றைய
தவறெனது செய்தாய் சரி.
*****

Corrected version:
*******************
(அறுசீர் விருத்தம்)

நார்கனிந்த உள்ளத்தி ராமனைவைத் தேத்தியவன்
     நளிசொல் பன்னூ
றேர்செறிந்த பாடறந்தெந் தென்னிசையின் இசையிமயம்
     எட்டச் செய்யச்
சீர்மிகுந்த  திருவாரூர்  வழியந்த மாமேதை

     தியாக ராஜன்
பார்புகுந்த நற்றினத்தவ் வரியகலைப் பொக்கிடத்தைப்
     பாடு வோமே.


நார் = அன்பு; நளி = பெருமை; ஏர் = அழகு; பாடறந்து = பாடல் தந்து; இசை = சங்கீதம், புகழ்
*******************

இமயவரம்பன்

unread,
7:26 AM (1 hour ago) 7:26 AM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிகச் சிறப்பான வாழ்த்துப் பாடல்.
நார்சிறந்த ஏர்செறிந்த போன்ற அழகிய சொற்களால் அமைந்த எதுகை அருமை.

“தென்னிசையின் இசை” - இசை என்பதை இருபொருள் கொள்ள அமைத்த விதம் சிறப்பு.

- இமயவரம்பன் 
Reply all
Reply to author
Forward
0 new messages