ஈசன் கைகாட்டி வந்தபின் நத்தை வாராதிருத்தல் ஆமோ?!
சிவன்
- நத்தை
-
சிலேடை
2012-03-20
-----------------------------------
நீரோடு
தாங்குவதால் நித்தங்கா
னாடுவதால்
பாரோரும்
காணவரும் பண்பினால் -
ஊரோர்
ஒழுகுவழி
செய்தாண்பெண் ஆவதால்
உம்பர்
தொழுமிறையே
நத்தையென்றே சொல்!
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
Snail
Facts:
Types of snails by habitat - Land snail, Freshwater snail,
and Sea snail.
They have the reproductive organs of both males and
females which categorizes them as hermaphrodites.
Snails
don’t see very well. They aren’t able to hear at all. They use
their sense of smell to help them find food.
To help them
move, snails secrete a stream of slime (mucus) from a gland located
at the front of their foot. This slime enables them to glide smoothly
over many different types of surface and helps to form a suction that
helps them cling to vegetation and even hang upside down.
ஈசன் கைகாட்டி வந்தபின் நத்தை வாராதிருத்தல் ஆமோ?!
சிவன் - நத்தை - சிலேடை
2012-03-20
-----------------------------------
நீரோடு தாங்குவதால் நித்தங்கா னாடுவதால்
பாரோரும் காணவரும் பண்பினால் - ஊரோர்
ஒழுகுவழி செய்தாண்பெண் ஆவதால் உம்பர்
தொழுமிறையே நத்தையென்றே சொல்!அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
Snail Facts:
Types of snails by habitat - Land snail, Freshwater snail, and Sea snail.
They have the reproductive organs of both males and females which categorizes them as hermaphrodites.
Snails don’t see very well. They aren’t able to hear at all. They use their sense of smell to help them find food.
To help them move, snails secrete a stream of slime (mucus) from a gland located at the front of their foot. This slime enables them to glide smoothly over many different types of surface and helps to form a suction that helps them cling to vegetation and even hang upside down.
நத்தை:
நீர்
ஓடு தாங்குவதால் -
நீர்
தாங்குவதால்,
ஓடு
தாங்குவதால் -
நீரிலும்
வாழும்;
ஓடு
தாங்கும்;
(அது
சுரக்கும் ஒரு திரவம் அதைத்
தாங்குவதையும் சுட்டுவதாகக்
கொள்ளலாம்);
நித்தம்
கான் நாடுவதால் -
எப்பொழுதும்
வாசனையை நாடி இயங்கும்;
பாரோரும்
காண வரும் பண்பினால் -
உலகத்தவரும்
காணும்படி வரும்;
ஊர்
ஓர் ஒழுகுவழி செய்து,
ஆண் பெண்
ஆவதால் -
ஊர்ந்து
செல்லத் தன்னிடமிருந்து
ஒழுகும் ஒரு திரவத்தால் வழி
செய்யும்;
ஓருடம்பில்
ஆணும் பெண்ணுமாகத்
திகழும்.
சிவன்:
நீர்
ஓடு தாங்குவதால் -
தலைமேல்
கங்கையையும் கையில் மண்டையோட்டையும்
தாங்குபவன்;
நித்தம்
கான் ஆடுவதால் -
சுடுகாட்டில்
திருநடம் செய்பவன்;
பாரோரும்
காணவரும் பண்பினால் -
உலகத்தவர்கள்
தரிசிக்க வருவர்;
ஊர்
ஓர் ஒழுகுவழி செய்து -
ஊர்மக்கள்
எண்ணும் பின்பற்றத்தக்க நெறி
செய்து;
(ஊரோர்
- ஊர்மக்கள்
என்றும் கொள்ளலாம்.
'மக்கள்
முறைப்படிவாழும் நன்னெறி
செய்து');
ஆண்
பெண் ஆவதால் -
அர்த்தநாரீஸ்வரன்
ஆவதால்;
உம்பர்
தொழும் இறையே -
வானவரும்
வணங்கும் கடவுளே;
நத்து
ஐ -
விரும்பும்
தலைவன்;
என்றே
சொல் -
என்று
சொல்;
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
சிவனும் –பாம்பும் சிலேடை
அரவத்தோ(டு) ஆடும் அணியு(ம்)உடற் பட்டை
இரவில் நடமாடும் என்றும் - இரைக்கு
விரையும் விடந்தாங்கும் வேண்டுவோர்க்(கு) ஈயும்
உரைக்கின்பாம்(பு) ஈசற்(கு)ஆம் ஒப்பு.
..அனந்த் 24-3-2012
சிவன்:
அரவத்தோடு ஆடும் – (அ) பாம்பைஅணிந்து நடனம் ஆடும்; அல்லது (ஆ) உடுக்கை ஒலி, பக்தர் துதிக்கும் ஒலிக்கிடையே ஆடுவான்; அல்லது (இ) இடுகாட்டில் பேய்க்கணங்கள்ஒலி ஆகிய அரவம் சேர நடனமாடுவான்.
உடல் பட்டை அணியும் – அ) உடலில்,பட்டையாகத் திருநீற்றை அணிவான் அல்லது (ஆ) உற்சவ மூர்த்தி அல்லது சுந்தர பாண்டியன் போன்றவடிவங்களில் பட்டாடையை அணிவான்; அல்லது (இ) மரப்பட்டையை (மரவுரியை) அணிவான்- இறுதியில்உள்ள பதிகம் காண்க: அல்லது, சிவசிவா கருதியவாறு, (ஈ) ஆடும்போது பாம்பை இடுப்பில் பட்டையாக அணிந்து கொள்வான்
இரவில் நடமாடும் : நள்ளிரவில் சுடுகாட்டில் நடனம் செய்வான்
இரைக்கு விரையும் = (கையில் மண்டையோட்டுடன்) தனது உணவைப் பிச்சை எடுத்துப் பெறவிடைமீதேறி விரைந்து செல்வான்.
விடம் தாங்கும்= கழுத்தில் ஆலகால விஷம்தாங்கியவன்
வேண்டுவோர்க்கு ஈயும் = பிரார்த்தனைசெய்யும் பக்தர்களுக்கு வேண்டியவற்றைத் தருவான்
பாம்பு: (முன்னுள்ள வரிசையில்)- பாம்பாட்டின்மகுடி ஓசையோடு படமெடுத்தாடும்; கட்டுவிரியன் போன்ற பாம்பு வகைகளில் உடலில் கோடுகள்காணும்; நல்ல பாம்பு படமெடுக்கையில் காணும் கோடுகளைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்; இரவில் புற்றைவிட்டு வெளியில் வந்து திரியும்; இரைக்குநடமாடும் என்றும் கொள்ளலாம்; உணவைத் தேடி விரைந்து செல்லும்; (பல்லில்) விஷம் கொண்டது;தன்னைத் தெய்வமாகக்கருதி வழிபடுவோர்க்கு அருளும்; அல்லது அவர்க்கு நாக ரத்தினம் போன்றஅரிய பொருள்களைக் கொடுக்கும்.
--
>அணியும் உடற்பட்டை: ஈசன்: திரிபுண்டரமாக நீறு அணிவதைச் சுட்டுகிறதா? கச்சாக நாகத்தை> அணிவதைச் சுட்டுகிறதா? பட்டுத்துகிலை அணிவதா?அனைத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.சிலேடை விளக்கம்:சிவன்:
அரவத்தோடு ஆடும் – (அ) பாம்பைஅணிந்து நடனம் ஆடும்; அல்லது (ஆ) உடுக்கை ஒலி, பக்தர் துதிக்கும் ஒலிக்கிடையே ஆடுவான்; அல்லது (இ) இடுகாட்டில் பேய்க்கணங்கள்ஒலி ஆகிய அரவம் சேர நடனமாடுவான்.
--
அனைவருக்கும் என் வணக்கம்
என் மனதில் தோன்றியதை இங்கே இட்டுள்ளேன்.
தவறு இருந்தால் சுட்டிக் காட்டவும்.
"மதி சூடி துதி பாடி" மூலம் என்னை வழி நடத்திய சிவா சிவா அவர்களுக்கும் அவரின் ஈசனுக்கும் என் நன்றி.
காலம் கடந்த விண்ணேறும் ஒலியாலும்
ஞாலம் மாற்றும் செஞ்சொல்ஞா னத்தாலும்
மாலம் எரிக்கும் தனிநிலைமுக் கண்ணாலும்
சால அன்பர் சொல்தமிழும் சங்கரனே
காலம் கடந்த விண்ணேறிய ஒலி என்பதை ஓம்
என்பது சிவனுக்கும் ஒலியால் சிறந்து இன்று கணினி வழி வானில் பறக்கும் தமிழுக்கும் என்று எண்ணினேன்.
ஞாலம் மாற்றும் செஞ்சொல் நம சிவாய என்ற வார்த்தை ஒருவரின் உலகத்தை மாற்றும் சக்தி கொண்ட து. தமிழ் நூல்களான திருக்குறள் ஆத்திச்சூடியை பின்பற்றினால் உலகை மாற்றி அமைக்கும் அறிவு ஒருவருக்குக் கிடைக்கும் என்ற பொருளில் எழுதினேன்
மாலம் எரிக்கும் தனிநிலை முக்கண்ணாலும் சிவ பெருமானின் நெற்றிக்கண் தீயவைகளை அழிப்பதாகவும், மற்ற மொழிகளின் பாசாங்குத் தன்மையை அழித்து தமிழின் தனிநிலை காக்கும் ஆய்த எழுத்தை முக்கண்ணாக எழுதினேன்.
தமிழ் அறிஞர்களின் தமிழும் சிவனும் ஒன்றே என்பதை சால அன்பர் சொல்தமிழும் சங்கரனே என்ற வரி சொல்கிறது.
ஞாலம் மாற்றும் செஞ்சொல்ஞா னத்தாலும்
மாலம் எரிக்கும் தனிநிலைமுக் கண்ணாலும்
சால அன்பர் சொல்தமிழும் சங்கரனே /
மா மா காய் காய் என்ற அமைப்பில் உள்ளது. இதைக் கலிவிருத்தம் என்று கருதலாமா என்று அறிந்தோர் சொல்லக்கூடும்.
'மாலம்' - மால் என்ற சொல் 'அம்' என்ற சாரியை பெற்று வந்ததா? (மதி/மதியம், வான்/வானம்,,,)
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
2012-07-05
திருமால்
- கண்ணப்பன்
-
சிலேடை
-----------------------------------------------
கரிய
திருமேனி கையில்வில் ஏந்தி
திரிதரு
பன்றியு மானான் -
அரிநாடி
வான்மதி
சூடிமகிழ் வண்ணம்தன்
கண்ணிடந்தான்
கான்வதிகண்
ணப்பன்மால் காண்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2012-07-05
திருமால் - கண்ணப்பன் - சிலேடை
-----------------------------------------------
கரிய திருமேனி கையில்வில் ஏந்தி
திரிதரு பன்றியு மானான் - அரிநாடி
வான்மதி சூடிமகிழ் வண்ணம்தன் கண்ணிடந்தான்
கான்வதிகண் ணப்பன்மால் காண்.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2012-07-05
திருமால் - கண்ணப்பன் - சிலேடை
-----------------------------------------------
கரிய திருமேனி கையில்வில் ஏந்தி
திரிதரு பன்றியு மானான் - அரிநாடி
வான்மதி சூடிமகிழ் வண்ணம்தன் கண்ணிடந்தான்
கான்வதிகண் ணப்பன்மால் காண்.
அரி
- 1) சிங்கம்;
/ 2) சக்கரம்
(Wheel,
discus); ஆயுதம்
(Weapon);
ஏந்தி
-
ஏந்துபவன்;
திரிதரு
- 'தரு'
என்றது
துணைவினை;
(An auxiliary added to verbs);
பன்றியுமானான்
- 1) பன்றியும்
மான் ஆன்;
/ 2) பன்றியும்
ஆனான்;
நாடி
- 1) நாடுபவன்;
/ 2) 'விரும்பி'
என்ற
வினையெச்சம்;
வான்மதி
சூடி -
அழகிய
பிறையைச் சூடியவன் -
சிவபெருமான்;
இடத்தல்
-
தோண்டுதல்;
திருமால்:
கரியவன்.
இராமனும்
பன்றியுமாக
அவதாரம் செய்தவன்;
சக்கரத்தை
விரும்பி,
அழகிய
திங்களைச் சூடிய ஈசன் மகிழுமாறு
தன் கண்ணை இடந்து இட்டுப்
பூசித்தவன்;
கண்ணப்பன்:
கரிய
மேனியன்;
கையில்
வில் ஏந்தியவன் (வேடன்);
திரிகிற
பன்றியையும்,
மானையும்,
ஆனினத்தையும்,
சிங்கத்தையும்
(வேட்டைக்கு)
நாடியவன்;
வான்பிறை
சூடிய ஈசன் மகிழுமாறு தன்
கண்ணை இடந்து அப்பியவன்;
கானில்
உறையும் கண்ணப்பன்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
kirAtar : the hunter
This is the only form of Lord Shiva in which He appeared black in color. arjuna wanted to get the peerless weapon pAsupatAstram from Lord Shiva for the battle of mahAbharata. He left the other four pANdavAs, went to the forest and did austere tapas for getting the boon of Lord Shiva. Lord Shiva was satisfied with his prayer, wanted to give the pAsupatAstram to him, but wanted to play a bit too. He took the form of a Hunter with Shakthi as Huntress. ........பொன்னார் மேனியன் பாசுபதம் தர கரிய வடிவம் கொண்டாரா? கொடுப்பதென்றால் முகில் வண்ணம் தான் பொருத்தம் போலும் ;-)
2012-07-13
சிவன்
- திருமால்
- பிரமன்
- சிலேடை
----------------------------------------------------
பூமிசை
அண்ணலும் தாமரைக்கண்
ணுள்ளவனும்
பூமியும்
வானும்போய்ப் போற்றிநிற்கும்
-
சாமியெனும்
பொற்பினனு
முந்திமலர் நீர்மையனும்
புள்ளேறி
பொற்சடையன்
நான்முகன் போல்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2012-07-13
சிவன் - திருமால் - பிரமன் - சிலேடை----------------------------------------------------
பூமிசை அண்ணலும் தாமரைக்கண் ணுள்ளவனும்
பூமியும் வானும்போய்ப் போற்றிநிற்கும் - சாமியெனும்
பொற்பினனு முந்திமலர் நீர்மையனும் புள்ளேறி
பொற்சடையன் நான்முகன் போல்.
பிரமன்:
பூமிசை
அண்ணலும் -
பூவின்மேல்
இருப்பவனும்;
தாமரைக்கண்
உள்ளவனும் -
தாமரையில்
இருப்பவனும்;
பூமியும்
வானும் போய்ப் போற்றிநிற்கும்
சாமி எனும் பொற்பினனும் -
மண்ணுலகோரும்
வானுலகோரும் வணங்கும்
தேவனும்;
உந்திமலர்
நீர்மையனும் -
(திருமாலின்)
நாபியில்
உதித்த தன்மையை உடைவனும்;
நான்முகன்
- நான்கு
முகங்களையுடைய பிரமன்.
திருமால்:
பூ
மிசை அண்ணலும் -
மண்ணை
உண்டவனும்;
தாமரைக்கண்
உள்ளவனும் -
தாமரை
போன்ற கண்கள் உடையவனும்;
பூமியும்
வானும்போய்ப் போற்றிநிற்கும்
சாமியெனும் பொற்பினனும் -
மண்ணுலகோரும்
வானுலகோரும் வணங்கும்
தேவனும்;
உந்தி
மலர் நீர்மையனும் -
நாபியில்
மலரை உடையவனும்;
புள்
ஏறி -
(கருடன்
என்ற)
பறவையை
ஊர்தியாக உடைய திருமால்;
சிவன்:
பூமிசை
அண்ணலும் தாமரைக்கண் உள்ளவனும்
பூமியும் வானும் போய்ப் போற்றி
நிற்கும் சாமி எனும் பொற்பினனும்
- பூமேல்
இருக்கும் பிரமனும் தாமரைக்கண்ணனாகிய
திருமாலும் நிலத்தை அகழ்ந்தும்
வானிற் பறந்தும் சென்று தேடிக்
காணாமல் அவர்களால் வணங்கப்பட்ட
தலைவனும்;
முந்தி
மலர் நீர்மையனும் -
எல்லாவற்றிற்கும்
முன்னமே இருந்தவனும்;
பொற்சடையன்
- பொற்சடையை
உடைய சிவபெருமான்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
(New
Jersey awaits landfall of major hurricane named 'Sandy' on
29-Oct-2012)
2012-10-29
சிவன்
-
புயல்
-
சிலேடை
---------------------------------
நீர்வெளி
வல்வளியாய் நிற்கும்
நிலமஞ்சும்
பேர்தரும்
உச்சமழை
பெய்யுமா -
லாரும்
துணையாம்
புணையென்று சொல்வர்
புயலுக்
கிணையாம்
உமையாட் கிறை.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
--
(New Jersey awaits landfall of major hurricane named 'Sandy' on 29-Oct-2012)
2012-10-29
சிவன் - புயல் - சிலேடை
---------------------------------
நீர்வெளி வல்வளியாய் நிற்கும் நிலமஞ்சும்
பேர்தரும் உச்சமழை பெய்யுமா - லாரும்
துணையாம் புணையென்று சொல்வர் புயலுக்
கிணையாம் உமையாட் கிறை.
புயல்:
நீர்வெளி
வல்வளியாய் நிற்கும் -
கடற்பரப்பில்
மிக வலிமை உடைய காற்றாகத்
தோன்றும்;
நிலம்
அஞ்சும்
-
உலகம்
அதைக் கண்டு அச்சம்கொள்ளும்;
பேர்
தரும் -
அந்த
அச்சத்தால் வேறு இடங்களுக்கு
நீங்கிச்செல்வார்கள்
(evacuation
to safer places ahead of storm's landfall);
(தருதல்
-
துணைவினைச்சொல்).
(இக்காலத்துப்
பழக்கத்தை ஒட்டி,
'அதற்கு
ஒரு பெயரைக் கொடுக்கும்'
என்றும்
பொருள்கொள்ளலாம்);
உச்ச
மழை பெய்யுமால்
-
மிக
அதிக மழை பெய்யும்;
(ஆல்
-
அசைச்சொல்);
ஆரும்
"துணை
ஆம் புணை"
என்று
சொல்வர் -
(புயலால்
வெள்ளமும் ஏற்படுவதால்)
எவரும்
"ஒரு
படகு இருந்தால் உதவும்"
என்று
சொல்வார்கள்;
சிவன்:
நீர்
வெளி வல்வளியாய்
நிற்கும் -
நீர்,
ஆகாயம்,
வலிய
காற்று,
என
ஐம்பூதங்களாய் நிற்பவன்;
நிலம்
அஞ்சும்
-
உலகோர்
(இறைவனுக்குப்)
பயப்படுவர்;
பேர்
தரும் -
(ஒரு
பெயரும் இல்லாத அவனுக்குப்)
பல
பெயர்கள் தருவர்;
('நிலம்
அஞ்சும்
பேர்
தரும்'
- தமிழ்
இலக்கணம் சொல்வதுபோல்,
'குறிஞ்சி
முல்லை மருதம் நெய்தல் பாலை
என்ற இயற்கையான
ஐந்துநிலப்பிரிவுகளில்
உள்ளோர் கடவுளுக்கு
முருகன்,
திருமால்,
முதலிய
வெவ்வேறு பேர்கள் தருவர்'
என்றும்
பொருள்கொள்ளலாம்;)
உச்சம்
மழை பெய்யும்
-
அவன்
உச்சந்தலையில் கங்கை பொழியும்;
ஆல்
ஆரும்
-
ஆலகால
விடத்தை உண்பான்;
துணை
ஆம் புணை
என்று சொல்வர்
-
சம்சார
சாகரத்தைக் கடக்க உதவும்
தெப்பம் என்று புகழ்வார்கள்;
உமையாட்கு
இறை
-
உமைமங்கைக்குத்
தலைவன் ஆன சிவபெருமான்;
(அப்பர்
தேவாரம் -
5.23.9 -
"அஞ்சி
யாகிலும்
அன்புபட்
டாகிலும்
நெஞ்சம்
வாழி நினைநின்றி யூரைநீ ....."
- அஞ்சியாகிலும்
-
அச்சம்
கொண்டாவது.
அன்பு
பட்டாகிலும் -
அன்பு
கொண்டாவது.
பயபக்தி
இரண்டில் ஒன்றையேனும்
கடைப்பிடித்து என்றபடி.);
2010-11-02
(updated 2012-11-10)
சிவன்
-
சுந்தரர்
-
சிலேடை
-------------------------------------
பகிரங்க
மாகவோர் பாவையிடஞ் சேர
மகிழ
மரமடை
வாக்குப் -
புகலுங்கால்
என்றவர்
பார்பரவை யின்றுணைவர்
ஒற்றியமர்
குன்றவில்லி
நாவலர்
கோன்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2010-11-02 (updated 2012-11-10)
சிவன் - சுந்தரர் - சிலேடை
-------------------------------------
பகிரங்க மாகவோர் பாவையிடஞ் சேர
மகிழ மரமடை வாக்குப் - புகலுங்கால்
என்றவர் பார்பரவை யின்றுணைவர் ஒற்றியமர்
குன்றவில்லி நாவலர் கோன்.
சுந்தரர்:
பகிரங்கமாக
ஓர் பாவையிடம்
சேர "மகிழமரம்
அடை வாக்குப்
புகலுங்கால்"
என்றவர்
பார் -
சங்கிலியாரை
ஊரறியத் திருமணம் செய்துகொள்ளவேண்டி,
'நான்
சத்தியம் செய்யும்பொழுது
(சிவபெருமானே
நீ)
மகிழ
மரத்தில் போய் இரு'
என்று
சொன்னவர்
காண்.
பரவையின்
துணைவர் -
பரவையாரின்
கணவர்;
நாவலர்
கோன் -
திருநாவலூராளியான
சுந்தரர்.
சிவன்:
பகிர்
அங்கமாக
ஓர் பாவை
இடம்
சேர -
பகிர்ந்துகொண்ட
திருமேனியாகப் பார்வதி
இடப்பக்கம் பொருந்த;
"மகிழமரம்
அடை வாக்குப்
புகலுங்கால்"
என்றவர்
-
(சங்கிலியாரிடம்
போய்ச்),
'(சுந்தரர்)
சத்தியம்
செய்யும்பொழுது மகிழ மரத்தை
அடை'
என்று
சொன்னவர்;
பார்
பரவு ஐ -
உலகோர்
எல்லாம் போற்றும் தலைவர்;
இன்
துணைவர் -
(அவ்வாறு
போற்றும் பக்தர்களுக்கு)
இனிய
துணையாக இருப்பவர்;
ஒற்றி
அமர்
குன்றவில்லி -
திருவொற்றியூரில்
எழுந்தருளியிருப்பவர்;
மேருமலையை
வில்லாக ஏந்திய சிவபெருமானார்.
(சுந்தரர்
தேவாரம் -
7.89.9
பொன்னவிலுங்
கொன்றையினாய் போய்மகிழ்க்
கீழிருவென்று
சொன்னஎனைக்
காணாமே சூளுறவு மகிழ்க்கீழே
என்னவல்ல
பெருமானே இங்கிருந்தா
யோஎன்ன
ஒன்னலரைக்
கண்டாற்போல் உளோம்போகீர்
என்றானே.)
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
2013-02-24
சிவன்
-
சாளரம்
-
சிலேடை
-------------------------------------
வளியொளி
செல்லும் வழியாகும்
உள்ளும்
வெளியும்
உளபொருள் தோற்றும் -
எளிதில்
அடைநீர்மை
உண்டுகார் கண்டவிடத்
தந்தாழ்
சடையீசன்
சாளரம் தான்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2010-11-02 (updated 2012-11-10)
சிவன் - சுந்தரர் - சிலேடை
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
2013-02-24
சிவன் - சாளரம் - சிலேடை
-------------------------------------
வளியொளி செல்லும் வழியாகும் உள்ளும்
வெளியும் உளபொருள் தோற்றும் - எளிதில்
அடைநீர்மை உண்டுகார் கண்டவிடத் தந்தாழ்
சடையீசன் சாளரம் தான்.
வளி
ஒளி செல்லும் வழி
ஆகும் -
காற்றும்
வெளிச்சமும் செல்லும் வழி
ஆகும்;
உள்ளும்
வெளியும் உள
பொருள் தோற்றும்
-
(வெளியில்
இருப்போர்க்கு)
உள்ளே
இருப்பதையும்,
(உள்ளிருப்போர்க்கு)
வெளியே
இருப்பதையும் காட்டும்;
எளிதில்
அடை நீர்மை
உண்டு கார்
கண்ட இடத்து
-
மழை
வரும்போது சுலபமாகச் சாத்தும்
தன்மை இருக்கும்.
சிவன்:
வளி,
ஒளி,
செல்லும்
வழி ஆகும்
-
காற்று
ஒளி என
ஐம்பூதங்களாகவும்,
நாம்
செல்லும் நன்னெறியாகவும்
இருப்பவன்;
(நீர்,
நிலம்,
நெருப்பு
ஆகியன குறிப்பால்
பெறப்பட்டன);
உள்ளும்
வெளியும் உள
பொருள் -
பிரபஞ்சத்தின்
உள்ளேயும் புறத்தேயும்
இருக்கும்
மெய்ப்பொருள்;
நமக்கு
உள்ளும் இருப்பவன்;
வெளியிலும்
இருப்பவன்;
தோற்றும்
-
படைப்பவன்;
எளிதில்
அடை நீர்மை
உண்டு -
பக்தர்களால்
எளிதில் அடையப்படும் இயல்பு
உடையவன்;
உண்டு
கார் கண்ட
இடத்து
-
கழுத்துப்
பகுதியில் கருமை உண்டு;
அம்
தாழ் சடை
ஈசன் -
அழகிய
தாழும் சடையை உடைய
சிவபெருமான்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
--
அருமையான சிலேடை.
வளி ஒளி செல்லும் வழி என்பது, குண்டலினி யோகம் பயில்வோர் மூலக்கனலைச் சுவாசக் காற்றால் எழுப்பி ஸஹஸ்ராரச் சக்கரத்தில் கடவுளை (இங்கு, சிவனை) ஒளிவடிவமாகக் காண்பதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
அனந்த்
(தற்போது கோவையில்).
--
2013-03-03
சிவன்
-
பனிமலை
-
சிலேடை
-
#2
(The other song was on
2012-02-06 - that starts as
"நீருறையும்")
-----------------------------------------
தண்புனல்
தாங்கிடும் வெண்பொடி
மேலிலங்கும்
விண்ணுயரும்
உச்சி விரைபுள்ளும் -
நண்ணுதற்
கொண்ணா
தடிவார
முள்ளோர்கண்
டுள்மகிழ்வர்
திண்ணாரெண்
டோளன் சிலை.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2013-03-03
சிவன் - பனிமலை - சிலேடை - #2
(The other song was on 2012-02-06 - that starts as "நீருறையும்")
-----------------------------------------
தண்புனல் தாங்கிடும் வெண்பொடி மேலிலங்கும்
விண்ணுயரும் உச்சி விரைபுள்ளும் - நண்ணுதற்
கொண்ணா தடிவார முள்ளோர்கண் டுள்மகிழ்வர்
திண்ணாரெண் டோளன் சிலை.
பதம்
பிரித்து:
தண்
புனல் தாங்கிடும்
வெண் பொடி
மேல் இலங்கும்
விண்
உயரும் உச்சி விரை
புள்ளும் -
நண்ணுதற்(கு)
ஒண்ணா(து)
அடிவாரம்
உள்ளோர்
கண்(டு)
உள்
மகிழ்வர்
திண்
ஆர் எண் தோளன்
சிலை.
வெண்பொடி
-
பனித்துளி
(snow);
/ திருநீறு;
அடிவாரம்
-
மலையினடி
(Foot
of a hill);
அடி
-
திருவடி;
வாரம்
-
அன்பு;
சிலை
-
மலை;
பனிமலை:
தண்
புனல் தாங்கிடும்
வெண் பொடி
மேல் இலங்கும்
-
குளிர்ந்த
நீரை உள்ளே தாங்கிய பனித்துளி
(snow)
மேலே
திகழும்;
விண்
உயரும் உச்சி விரை
புள்ளும் நண்ணுதற்(கு)
ஒண்ணா(து)
- விரைந்து
பறக்கும் பறவைகளும் வானளாவும்
மலைமுகட்டினைச் சென்றடையமாட்டா;
(This is generally speaking.)
அடிவாரம்
உள்ளோர்
கண்(டு)
உள்
மகிழ்வர்
-
மலையின்
அடிவாரத்தில் இருப்பவர்கள்
(பனி
திகழும் மலையுச்சியைக்)
கண்டு
மனம் மகிழ்வார்கள்;
சிலை
-
மலை;
சிவன்:
தண்
புனல் தாங்கிடும்
-
கங்கையைத்
தாங்குபவன்;
வெண்
பொடி மேல்
இலங்கும்
-
திருமேனிமேல்
திருநீறு திகழும்;
விண்
உயரும் -
சோதியாக
உயர்ந்தவன்;
உச்சி
விரை புள்ளும்
நண்ணுதற்கு
ஒண்ணாது
-
(அப்படி
உயர்ந்தபோது)
அன்னமாகி
விரைந்து பறந்த பிரமனாலும்
உச்சியைக் காண இயலாது;
அடி
வாரம்
உள்ளோர்
கண்டு
உள்
மகிழ்வர்
-
திருவடியை
அன்புடைய பக்தர்கள்
கண்டு உள்ளம் மகிழ்வார்கள்;
திண்
ஆர் எண் தோளன்
-
உறுதியான
எட்டுத் தோள்களை உடைய சிவபெருமான்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
சிவன் - பனிமலை - சிலேடை - #2
(The other song was on 2012-02-06 - that starts as "நீருறையும்")
-----------------------------------------
தண்புனல் தாங்கிடும் வெண்பொடி மேலிலங்கும்
விண்ணுயரும் உச்சி விரைபுள்ளும் - நண்ணுதற்
கொண்ணா தடிவார முள்ளோர்கண் டுள்மகிழ்வர்
திண்ணாரெண் டோளன் சிலை.
பதம் பிரித்து:
தண் புனல் தாங்கிடும் வெண் பொடி மேல் இலங்கும்
விண் உயரும் உச்சி விரை புள்ளும் - நண்ணுதற்(கு)
ஒண்ணா(து) அடிவாரம் உள்ளோர் கண்(டு) உள் மகிழ்வர்
திண் ஆர் எண் தோளன் சிலை.
வெண்பொடி - பனித்துளி (snow); / திருநீறு;
அடிவாரம் - மலையினடி (Foot of a hill);
அடி - திருவடி;
வாரம் - அன்பு;
சிலை - மலை;
பனிமலை:
தண் புனல் தாங்கிடும் வெண் பொடி மேல் இலங்கும் - குளிர்ந்த நீரை உள்ளே தாங்கிய பனித்துளி (snow) மேலே திகழும்;
விண் உயரும் உச்சி விரை புள்ளும் நண்ணுதற்(கு) ஒண்ணா(து) - விரைந்து பறக்கும் பறவைகளும் வானளாவும் மலைமுகட்டினைச் சென்றடையமாட்டா; (This is generally speaking.)
அடிவாரம் உள்ளோர் கண்(டு) உள் மகிழ்வர் - மலையின் அடிவாரத்தில் இருப்பவர்கள் (பனி திகழும் மலையுச்சியைக்) கண்டு மனம் மகிழ்வார்கள்;
சிலை - மலை;
சிவன்:
தண் புனல் தாங்கிடும் - கங்கையைத் தாங்குபவன்;
வெண் பொடி மேல் இலங்கும் - திருமேனிமேல் திருநீறு திகழும்;
விண் உயரும் - சோதியாக உயர்ந்தவன்;
உச்சி விரை புள்ளும் நண்ணுதற்கு ஒண்ணாது - (அப்படி உயர்ந்தபோது) அன்னமாகி விரைந்து பறந்த பிரமனாலும் உச்சியைக் காண இயலாது;
அடி வாரம் உள்ளோர் கண்டு உள் மகிழ்வர் - திருவடியை அன்புடைய பக்தர்கள் கண்டு உள்ளம் மகிழ்வார்கள்;
திண் ஆர் எண் தோளன் - உறுதியான எட்டுத் தோள்களை உடைய சிவபெருமான்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/
--
2013-03-26
(பங்குனி
உத்தரம்)
சிவன்
-
முருகன்
-
சிலேடை
--------------------------------------
நெற்றிக்கண்
தோன்றிட நீர்தாங்கும்
இவ்வுலகு
சுற்றிவரு
மான்மலரான்
தோத்திரிக்கும்
-
பெற்றியினன்
காவடி
வேலன்பன் மாமலையாள்
மைந்தனவன்
சேவமர்ந்தான்
ஆறுமுகன் செப்பு.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
--
2013-03-26 (பங்குனி உத்தரம்)
சிவன் - முருகன் - சிலேடை
--------------------------------------
நெற்றிக்கண் தோன்றிட நீர்தாங்கும் இவ்வுலகு
சுற்றிவரு மான்மலரான் தோத்திரிக்கும் - பெற்றியினன்
காவடி வேலன்பன் மாமலையாள் மைந்தனவன்
சேவமர்ந்தான் ஆறுமுகன் செப்பு.
முருகன்:
நெற்றிக்கண்
தோன்றிட,
நீர்
தாங்கும்;
இவ்வுலகு
சுற்றிவரு[ம்]
மான்;
மலரான்
தோத்திரிக்கும்
பெற்றியினன்;
கா
வடிவேலன்;
பன்
மா மலை
ஆள்
மைந்தன்;
அவன்
சே
அமர்ந்தான் ஆறுமுகன்
செப்பு.
(ஈசனின்)
நெற்றிக்கண்ணில்
பொறியாகத் தோன்றிக்,
கங்கையால்
தாங்கப்பெற்றவன்;
(கனி
வேண்டி மயில்மேல் ஏறி)
உலகைச்
சுற்றிவந்த பெருமான்;
(பிரணவப்
பொருளை அறியாத பிரமனைச்
சிறையில் அடைத்துப்பின்)
பிரமனால்
துதிக்கப்படும் பெருமையை
உடையவன்;
காக்கும்
கூரிய வேலை உடையவன்;
பல
மலைகளில் வீற்றிருக்கும்
குமரன் (குன்றுதோறாடும்
குமரன்);
ஆறுமுகங்களையை
உடைய முருகன்.
(இவ்வுலகு
சுற்றிவருமான்மலரான்
=
"இவ்வுலகு
சுற்றிவருமால்;
மலரான்"
என்றும்
கொள்ளலாம்.
'சுற்றிவருமால்'
என்பதில்
'ஆல்'
என்பதை
அசையாகக் கொள்ளலாம்);
சிவன்:
நெற்றிக்கண்
தோன்றிட நீர்
தாங்கும்;
இவ்வுலகு
சுற்றிவரு[ம்];
மால்,
மலரான்
தோத்திரிக்கும்
பெற்றியினன்;
கா
வடிவு
ஏல் அன்பன்;
மாமலையாள்
மைந்தன்;
அவன்
சே
அமர்ந்தான் ஆறுமுகன்
செப்பு.
நெற்றியிற்
கண் தோன்ற,
முடிமேல்
கங்கையைத் தாங்குவான்;
உலக
மக்கள் வலம்செய்து வணங்குவர்;
(அடிமுடி
தேடிய)
திருமாலாலும்
பிரமனாலும் துதிக்கப்படும்
பெருமையினான்;
(அன்பர்
விரும்பிய வண்ணம் அவர்களைக்)
காக்கும்
உருவம் ஏற்கும் அன்புடையவன்;
அழகிய
மலைமகள் கணவன்;
இடப வாகனன்;
சிவபெருமான்;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
சிவனுக்கும்முருகனுக்கும் சிலேடைகட்டளைக் கலித்துறைஆறார் தலையாய் மலையவ ளன்பா அறுமுகவாநீறார் நுதலெழிற் கண்ணா ரனலாய் நெடுமலையாய்ஏறமர் சேவற் கொடியா ரவர்முன் மலைவிலியாய்சீறிய ழித்தனை யானை யணைத்தாய் சிவன்குகனேவிளக்கம்: (சிவனுக்கு)-ஆறார் தலையாய் =ஆற்றைத் தலையில் கொண்டவனே ; மலையவ ளன்பா= மலைமகளின் கணவனே; அறுமுகவா =ஈசானம் தத்புருஷம் வாமதேவம் சத்யோஜாதம் அகோரம் அதோமுகம் ஆகிய ஆறுமுகம் உடையவனே;நீறார் =திருநீறுஅணிந்த, நுதல் எழில் கண்ணா =நெற்றியில் கண்ணை உடையவனே; ஆரனலாய் =நெருப்பு நிறத்தவனே; நெடுமலையாய்=உயர்ந்த மலையில் இருப்பவனே; ஏறமர் =இடபவாகனத்தில் அமர்ந்த; சே வல் கொடியா =காளையைக் கொடியில் உடையவனே ; ஆர் அவர் முன் =ஆர்க்கும் அரக்கர் முன்னே; மலை வில்லி ஆய்= இமய மலையாகிய வில்லேந்திய வராய்;சீறி அழித்தனை=சினந்து எரித்தாய்; யானை அணைத்தாய்= யானைத்தோல் போர்த்தாய்; சிவன்= சிவனே!(முருகனுக்கு) ஆறார் தலையாய்=அலைநீர் ஒலிக்கும் திருச்சீரலைவாய் உறைபவனே ; மலையவளன்பா= மலைமகளின் மகனே; அறுமுகவா=ஆறு திருமுகங்களை உடையவனே; நீறார்=திருநீறு அணிந்தவனே; நுதல் எழில் கண்ஆர் அனலாய்=நெற்றிக்கண்ணில் நெருப்புப் பொறியாகத் தோன்றியவனே;நெடுமலையாய் =மலைதொறும் உறைபவனே; ஏறமர் சேவல் கொடியாய்=அழகிய கோழிக் கொடி உடையாய் ;ஆர் அவர் முன் மலைவு இலி ஆய்=ஆர்த்த சூரன் முன் தயக்கம் இல்லாதவராய்;சீறி அழித்தனை =கோபித்து அழித்தாய்;யானை அனத்தனை =அதற்குப் பரிசாக தெய்வானையை அணைத்துக் கொண்டாய்; குகனே=மனக்கிகையில் உறையும் முருகனேஎளியேனின் சிறு முயற்சி ஏற்றருள்க -புலவர் இராம மூர்த்தி
சிவசிவாவின் சிலேடை நன்று. சிவனுக்கும் ஆறுமுகம் உண்டே !ஆறுமுகங்களின் கண்களில் தோன்றிய ஆறு பொறிகளில் உருவானவன் =ஆறுமுகன் ஆற்றிடையில் முகத்தைக் காட்டியவன் ; ஆறு திருமுகங்களைக் கொண்டவன்;சிவன் சிரசில் ஆறு பாய்வதால் ஆறு, முகத்தின் மேல் கொண்டவன் =ஆறுமுகன்ஆஹா பலவகையில் சிவ, முருக தரிசனம் நன்றி-புலவர் இராம மூர்த்தி
சிவனுக்கும்முருகனுக்கும் சிலேடைகட்டளைக் கலித்துறைஆறார் தலையாய் மலையவ ளன்பா அறுமுகவாநீறார் நுதலெழிற் கண்ணா ரனலாய் நெடுமலையாய்ஏறமர் சேவற் கொடியா ரவர்முன் மலைவிலியாய்சீறிய ழித்தனை யானை யணைத்தாய் சிவன்குகனேவிளக்கம்: (சிவனுக்கு)-ஆறார் தலையாய் =ஆற்றைத் தலையில் கொண்டவனே ; மலையவ ளன்பா= மலைமகளின் கணவனே; அறுமுகவா =ஈசானம் தத்புருஷம் வாமதேவம் சத்யோஜாதம் அகோரம் அதோமுகம் ஆகிய ஆறுமுகம் உடையவனே;நீறார் =திருநீறுஅணிந்த, நுதல் எழில் கண்ணா =நெற்றியில் கண்ணை உடையவனே; ஆரனலாய் =நெருப்பு நிறத்தவனே; நெடுமலையாய்=உயர்ந்த மலையில் இருப்பவனே; ஏறமர் =இடபவாகனத்தில் அமர்ந்த; சே வல் கொடியா =காளையைக் கொடியில் உடையவனே ; ஆர் அவர் முன் =ஆர்க்கும் அரக்கர் முன்னே; மலை வில்லி ஆய்= இமய மலையாகிய வில்லேந்திய வராய்;சீறி அழித்தனை=சினந்து எரித்தாய்; யானை அணைத்தாய்= யானைத்தோல் போர்த்தாய்; சிவன்= சிவனே!(முருகனுக்கு) ஆறார் தலையாய்=அலைநீர் ஒலிக்கும் திருச்சீரலைவாய் உறைபவனே ; மலையவளன்பா= மலைமகளின் மகனே; அறுமுகவா=ஆறு திருமுகங்களை உடையவனே; நீறார்=திருநீறு அணிந்தவனே; நுதல் எழில் கண்ஆர் அனலாய்=நெற்றிக்கண்ணில் நெருப்புப் பொறியாகத் தோன்றியவனே;நெடுமலையாய் =மலைதொறும் உறைபவனே; ஏறமர் சேவல் கொடியாய்=அழகிய கோழிக் கொடி உடையாய் ;ஆர் அவர் முன் மலைவு இலி ஆய்=ஆர்த்த சூரன் முன் தயக்கம் இல்லாதவராய்;சீறி அழித்தனை =கோபித்து அழித்தாய்;யானை அனத்தனை =அதற்குப் பரிசாக தெய்வானையை அணைத்துக் கொண்டாய்; குகனே=மனக்கிகையில் உறையும் முருகனேஎளியேனின் சிறு முயற்சி ஏற்றருள்க -புலவர் இராம மூர்த்தி
--
--
அனந்தனாரின்
வெங்காய சாம்பாரின் வாசனை
!!
2013-04-09
சிவன்
-
விருந்து
-
சிலேடை
----------------------
(இன்னிசை
வெண்பா)
குழம்பாய்
மனமேதான் தோன்றியார்
கூட்டால்
எழும்பழ
வாசனையால் இங்காவி
சென்று
விழும்போ
துதவி இலையேஎன் னாதே
செழும்புனல்
வேணியனைச் செப்பு.
பதம்
பிரித்து:
குழம்பாய்
மனமே தான்தோன்றியார்
கூட்டால்,
எழும்
பழ வாசனையால்,
இங்கு
ஆவி சென்று
விழும்போது
உதவி இலையே
என்னாதே,
செழும்
புனல் வேணியனைச்
செப்பு.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அனந்தனாரின் வெங்காய சாம்பாரின் வாசனை !!
2013-04-09
சிவன் - விருந்து - சிலேடை
----------------------
(இன்னிசை வெண்பா)
குழம்பாய் மனமேதான் தோன்றியார் கூட்டால்
எழும்பழ வாசனையால் இங்காவி சென்று
விழும்போ துதவி இலையேஎன் னாதே
செழும்புனல் வேணியனைச் செப்பு.குழம்பாய் மனமே தான்தோன்றியார் கூட்டால்,
பதம் பிரித்து:
எழும் பழ வாசனையால், இங்கு ஆவி சென்று
விழும்போது உதவி இலையே என்னாதே,
செழும் புனல் வேணியனைச் செப்பு.
மனமே!
குழம்பு
ஆகி,
அதில்
தான்களும்
தோன்றிப்,
பொருந்துகிற
கூட்டு,
பழங்கள்
இவற்றின் வாசனைகளால்,
அவற்றிலேயே
நாட்டம் கொண்டு,
உண்ண
அவற்றை இடும்போது இலைதான்
உதவும் என்று எண்ணி உழலாதே!
மனமே!
நீ
குழம்பமாட்டாய்!
ஆணவம்
மிக்கவர்கள் சகவாசத்தாலும்,
இப்பிறவியில்
எழுகின்ற பழைய பிறவிகளின்
வாசனையாலும்,
உழன்று,
உயிர்
போய் உடல் விழும்போது ஒரு
துணை இல்லையே என்று வருந்தாமல்,
(இப்பொழுதே)
கங்கையைச்
சடையில் வைத்த சிவபெருமான்
நாமத்தைச் சொல்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
கோகுலாஷ்டமியை
ஒட்டி
2013-08-28
கண்ணன்
-
சிவன்
-
சிலேடை
--------------------------------------
திருவாய்
விரியத் தெரியும்பல்
அண்டத்
துருவாய்
ஒளித்திருப்பான் ஓடி -
வருவான்
களிக்கக்
கரியவன்னஞ் சார்பவன்
கங்கை
தெளிக்குமுடி
யான்கண்ணன் செப்பு.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
அனந்தனாரின் வெங்காய சாம்பாரின் வாசனை !!
2013-04-09
சிவன் - விருந்து - சிலேடை
----------------------
கோகுலாஷ்டமியை ஒட்டி
2013-08-28
கண்ணன் - சிவன் - சிலேடை
--------------------------------------
திருவாய் விரியத் தெரியும்பல் அண்டத்
துருவாய் ஒளித்திருப்பான் ஓடி - வருவான்
களிக்கக் கரியவன்னஞ் சார்பவன் கங்கை
தெளிக்குமுடி யான்கண்ணன் செப்பு.
கண்ணன்:
திரு வாய் விரியத் தெரியும் பல் அண்டத்து
உரு வாய் ஒளித்திருப்பான் ஓடி வருவான்
களிக்கக்; கரியவன்; நம் சார்பு அவன்; கங்கை
தெளிக்கும் முடியான், கண்ணன் செப்பு.
('மண்ணை உண்டாயா?' என்று அசோதை கேட்டபோது) அவனுடைய திருவாய் விரியவும் பல அண்டங்களும் தெரியும்; (அவற்றைத் தன்) வாயுள் ஒளித்திருப்பான்; பெற்றோரும் மற்றோரும் களிப்பு அடையும்படி அவர்களிடம் ஓடி வருவான்; ('ஒளித்திருப்பான்' என்பதை 'ஓடி வருவான்
களிக்க' என்பதோடும் மீண்டும் இயைத்துக், 'கண்ணாமூச்சி' விளையாடுவான் என்றும் பொருள்கொள்ளலாம்); கரிய நிறம் உடையவன்; நம் புகலிடம் அவன்; ('கரியவன்னஞ் சார்பவன்' என்பதைக் 'கரிய வன்னம் சார்பவன்' என்றும் கொள்ளலாம் - கரிய வண்ணம் பொருந்துபவன்); கண்ணன்.
சிவன்:
திருவாய், விரியத் தெரியும் பல் அண்டத்து
உருவாய், ஒளித்து இருப்பான்; ஓடி வரு வான்
களிக்கக், கரிய வன் நஞ்சு ஆர் பவன்; கங்கை
தெளிக்கும் முடியான், கண்ணன் செப்பு.
திரு ஆகி, விரிந்து தெரிகின்ற எல்லா அண்டங்களின் உரு ஆகி, (அப்படி இருந்தாலும்) அறிய இயலாதபடி தன்னை ஒளித்து இருப்பவன்; (அஞ்சி) ஓடிவந்த தேவர்கள் மகிழும்படி, கரிய கொடிய விடத்தை உண்ட, பவன் என்ற திருநாமம் உடையவன்; கங்கைநீர் தெளிக்கின்ற உச்சியை உடையவன்; சிவபெருமான்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
2013-08-28
கண்ணன் - சிவன் - சிலேடை
--------------------------------------
திருவாய் விரியத் தெரியும்பல் அண்டத்
துருவாய் ஒளித்திருப்பான் ஓடி - வருவான்
களிக்கக் கரியவன்னஞ் சார்பவன் கங்கை
தெளிக்குமுடி யான்கண்ணன் செப்பு.
கண்ணன்:
திரு
வாய் விரியத் தெரியும்
பல் அண்டத்து
உரு
வாய் ஒளித்திருப்பான்
ஓடி வருவான்
களிக்கக்;
கரியவன்;
நம்
சார்பு அவன்;
கங்கை
தெளிக்கும்
முடியான்,
கண்ணன்
செப்பு.
('மண்ணை
உண்டாயா?'
என்று
அசோதை கேட்டபோது)
அவனுடைய
திருவாய் விரியவும்
பல அண்டங்களும் தெரியும்;
(அவற்றைத்
தன்)
வாயுள்
ஒளித்திருப்பான்;
பெற்றோரும்
மற்றோரும் களிப்பு அடையும்படி
அவர்களிடம் ஓடி வருவான்;
('ஒளித்திருப்பான்'
என்பதை
'ஓடி
வருவான்
களிக்க'
என்பதோடும்
மீண்டும் இயைத்துக்,
'கண்ணாமூச்சி'
விளையாடுவான்
என்றும் பொருள்கொள்ளலாம்);
கரிய
நிறம் உடையவன்;
நம்
புகலிடம் அவன்;
('கரியவன்னஞ்
சார்பவன்'
என்பதைக்
'கரிய
வன்னம்
சார்பவன்'
என்றும்
கொள்ளலாம் -
கரிய
வண்ணம் பொருந்துபவன்);
கண்ணன்.
சிவன்:
திருவாய்,
விரியத்
தெரியும் பல்
அண்டத்து
உருவாய்,
ஒளித்து
இருப்பான்;
ஓடி
வரு
வான்
களிக்கக்,
கரிய
வன் நஞ்சு
ஆர் பவன்;
கங்கை
தெளிக்கும்
முடியான்,
கண்ணன்
செப்பு.
திரு
ஆகி,
விரிந்து
தெரிகின்ற எல்லா அண்டங்களின்
உரு ஆகி,
(அப்படி
இருந்தாலும்)
அறிய
இயலாதபடி தன்னை ஒளித்து
இருப்பவன்;
(அஞ்சி)
ஓடிவந்த
தேவர்கள் மகிழும்படி,
கரிய
கொடிய விடத்தை உண்ட,
பவன்
என்ற திருநாமம் உடையவன்;
கங்கைநீர்
தெளிக்கின்ற உச்சியை உடையவன்;
சிவபெருமான்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
சிவன் தேங்காய் சிலேடை
| 1 | pacu | 1. cow; 2. bull; 3. taurus in the zodiac; 4. beast, brute; 5. individual soul, spirit, as bound by pa1cam ; 6. a gentle, harmless person; 7. sacrificial animal; 8. collection of six seeds at a time in a hole in the game of palla1n3kul6i |
பசும்புல் தலை காண்பு அரிது (காண்பது அரிது) , போர்த்து மேய்ந்தற்று (மேய்ந்ததற்று) என்பதில் "அது" என்பது இல்லாமலேயே வருவது போல் "உடைத்தால்" என்பதும் வரும் என்பது என் யூகம்.
--
சிவனும் கள்வனும் சிலேடை
கரந்திருந்து காத்து சமயத்தில் வேறு
இரண்டாவது சிலேடை இதைப் போலச் சிறப்பாக அமையவில்லை.
2 இடங்களில் கு.உ. புணர்ச்சியால் தளைதட்டும். 2,4 அடிகளில் மோனை தேவை.இரண்டாவதில், கு.உ.பு. + விளாங்காய்.அனந்த்
பாம்பு மற்றும் சுவர்க்கம் இவைகளை சிலேடை செய்துள்ளேன்.
போகம் பரப்பும் புலனதைத்து ரப்பும் ஆம்
நாகுநிற்கும் நல்லபேர் நச்சுயிர் போக உட்-
போகும் உறைவிடம் பொங்குமும்பர் கோன் பேணும்
நாகம் தனையறிக நன்கு
பாம்பிற்கு
போகம்- படம்; புலன்- கழனி; அதைத்து- அலைந்து; உரப்பும்- சத்தமிட்டு மிரட்டும்;
நாகு- புற்று; நல்லபேர் நச்சு- நல்ல பெயர் கொண்ட விஷம்/ தொந்தரவு
உயிர் போக உள் போகும் உறை விடம் பொங்கும்- உயிர் நீங்க உட்புகுந்து ஊரும் விஷத்தை விஷப்பையிலிருந்து கக்கும்
உம்பர்கோன் பேணும்- ஈசன் அணியும்;
சுவர்க்கத்திற்கு
போகம் பரப்பும்- பலவித இன்பங்களைப் படைக்கும்; புலன் அதைத் துரப்பும்- ஐம்புலன்கள் அவ்வின்பத்தை நாடும்;
நாகு நிற்கும்- அங்கு இளமை நிலையாக நிற்கும்; நல்ல பேர் நச்சு- நல்லவர்கள் விரும்புவது;
உயிர் போக உள் போகும் உறைவிடம்- நீங்கிய பின் புகும் வீடு;
பொங்குமும்பர் கோன் பேணும்- இந்திரன் காக்கும்;
நாகம்- சுவர்க்கம்
சந்தவசந்தத்தின் சான்றோர் நண்பர்களுக்கு வணக்கம். இங்கு முதன்முதலாக நான் கவியெழுதிப் பகிர்ந்துகொள்கிறேன். பிழைகள் இருக்குமென்பதில் ஐயமில்லை. அன்புகூர்ந்து திருத்தவும்.
தஸ்கராணாம் பதயே நமஹ்
ருத்திரத்தில் "தஸ்கராணாம் பதயே நமஹ்" என்றுள்ளது. "திருடர்களுக்கெல்லாம் தலைவனே போற்றி". இதற்குப் பலவிதமாக வியாக்கிய்யானம் செய்வர்.
முயற்சிக்கிற, முயற்சித்த;
தப்பிக்கிற, தப்பித்த;
அனுப்பிக்கிற, அனுப்பித்த, அனுப்பித்தல் :-
எனத் தற்காலமாக வேரூன்றிக்கொண்டிருக்கும் பிழைகள்.
முயல்கிற, முயன்ற, தப்புகிற, தப்பின/ய; அனுப்புகிற, அனுப்பின/ய; அனுப்புதல்
என இலக்கணம்.
சிவசிவ, அனந்த்
தங்கள் கருத்தைத் தெரிவித்ததற்கு மிக்க நன்றி. இதை கவனத்தில் வைத்து இனிமேல் கவி வடிக்க முயற்சிக்கிறேன். தாங்கள் ஏதும் சொல்லாததால் நான் வடித்த்துள்ள வெண்பா பிழையில்லாமல் இருக்கிறதென்று கொள்கிறேன். அதுமட்டும் சந்தோஷம்.
ஸ்ரீகாந்த்
கார்மல்கும் கீழ்சொரியும் கானிரையப் பூமேவும்
வார்மல்கும் நேயமுறும் வாராக்கால் பேனிரையும்
சீர்மல்கும் சீத்தரிக்கும் தீஞ்சுழியால் பீடிக்கும்
நீர்மையினால் முடிக்காறு நேர்
------
ஆறு
கார் மல்கும்- மழை நிரப்பும்; கீழ் சொரியும்- கீழ் நோக்கிச் செல்லும்; கான் நிரைய பூ மேவும்- வனங்கள் செறிய புவி மீதிருக்கும்.
வார் மல்கும்- நீர் மிகுந்திருக்கும்; நேயமுறும்- நன்மை பயக்கும்; வார் ஆக் கால்- மழை ஆகும் காலத்தே; பே நிரையும்- நுரை உண்டாகும்;
சீர் மல்கும்- சிறப்பைத் தரும்/ சிறந்து இருக்கும்; சீத்து அரிக்கும்- புனிதமாக்கி கழுவிச் செல்லும்; தீஞ்சுழியால் பீடிக்கும்- கொடிய சுழிகளால் பாதிக்கும்;
முடி
கார் மல்கும்- கருமை நிரைந்து இருக்கும்; கீழ் சொரியும்- மிகுந்து கீழே தொங்கும்; கால் நிரைந்து பூ மேவும்- கால்களைப் பின்னி பூவினைப் பெற்றிருக்கும்;
வார் மல்கும்- வாருவதானால்/ நீராடுவதால் நன்கு வளரும்; நேயமுறும்- எண்ணெயை உட்கொண்டிருக்கும்; வாராக்கால்- வாராதிருந்தால்;
பேன் நிரையும்;
சீர் மல்கும்- ஈர் மிகுந்திருக்கும்; சீத்து அரிக்கும்- சொறிவதனால் நமைக்கும்; தீஞ்சுழியால் பீடிக்கும்- தீய சுழிகளிருத்தால் பாதிக்கும்.
சிலேடை நன்கு அமைந்துள்ளது. பாராட்டுகள்.
நதிக்கு வாராக்கால் பேனிரையும் என்பதும், முடிக்கு, தீஞ்சுழியால் பீடிக்கும் என்பதும் மற்ற ஒப்புமைகள் போல இடண்டிற்குமாகப் பொருந்தி அமையவில்லை என எனக்குப் பட்டது.
தொடர்ந்து எழுதுங்கள்.
"நேர்மையால் கூந் தல்நதிக்கு நேர்" என மாற்றுகிறேன்.