ஶ்ரீ அரவிந்தரின் " The Viziers of Bassora " நாடக மொழிபெயர்ப்பு - பஸ்ஸோரா அமைச்சர்கள்

80 views
Skip to first unread message

Lalitha & Suryanarayanan

unread,
Oct 2, 2021, 12:20:06 AM10/2/21
to santhav...@googlegroups.com

வணக்கம்.


இதுவரையிலும் என்னுடைய கவிதைகளையும் மொழிபெயர்ப்புகளையும் படித்துக் கருத்துக்களை அவ்வப்போது எடுத்துரைத்து அவற்றில் இருக்கும் பிழைகளைச் சுட்டிக்காட்டி என்னுடைய படைப்புகளை மேம்படுத்திவரும் அன்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த இழையையும் நீங்கள் ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி.

சிவசூரி.



பஸ்ஸோரா அமைச்சர்கள் - நாடகப் பாத்திரங்கள்


HAROUN AL RASHEED, Caliph.

ஹரெளன் அல் ரஷீது, கலீஃபா  

JAAFAR, his Vizier.

ஜாஃபர், அவனுடைய அமைச்சன்

SHAIKH IBRAHIM, Superintendent of the Caliph's gardens.

ஷேக் இப்ராஹிம், கலீஃபாவின் தோட்ட மேற்பார்வையாளன்  

MESROUR, Haroun's friend and companion'.

மெஸ்ரூர், ஹரெளனின் தோழன் & துணைவன்.

MAHOMED BIN SULEYMAN OF ZAYNI, Haroun's cousin,

King of Bassora.

மொஹமது பின் சுலைமான், ஸைனி, ஹரெளனின் ஒன்றுவிட்ட சோதரன்; பஸ்ஸோரா நாட்டின் மன்னன்  

ALFAZZAL IBN SAWY, his chief Vizier. 

அல்ஃபஸல் இபின் ஸாவி, அவனுடைய முதலமைச்சன்  

NUREDDENE, son of Alfazzal.

நூரெதீன் - அல்ஃபஸலின் மகன்   

 ALMUENE BIN KHAKAN, second Vizier of Bassora. 

அல்மியூன் பின் காக்கன், பஸ்ஸோரா நாட்டின் மற்றோர்  அமைச்சன்  

 FAREED, his son.

ஃபரீது, அவனுடைய மகன்  


SALAR, confident of Alzayni. 

சாலரன், அல்ஸைனியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் 

MURAD, a Turk Captain of Police in Bassora. 

மூரது, துருக்கிய இனத்தைச் சார்ந்த பஸ்ஸோரா நகரக் காவல் படைத் தலைவன்  

AJEBE, nephew of Almuene. 

அஜீபு, அல்மியூனின் மருமான்  

SUNJAR, a Chamberlain of the Palace of Bassora.

சஞ்சரன். பஸ்ஸோரா அரண்மனை மணியம்


அஜீஸ், அப்துல்லா - பஸ்ஸோரா நாட்டு வாணிகர்கள்  

MUAZZIM, a broker.

முவாஸீம், ஒரு தரகன்

AZEEM, steward of Alfazzal.

அஸீம், அல்ஃபஸலின் வீட்டுமணியம்

HARKOOS, an Ethiopian eunuch in Ibn Sawy's household.

ஹர்கூஸ், இபின் ஸாவியின் வீட்டுப்பணிசெய்யும்  ஓர் எத்தியோபிய பேடி.  

KAREEM, a fisherman of Bagdad.

கரீம், பாக்தாத் நகரச் செம்படவன்  

SLAVES, SOLDIERS, GUARDS, EXECUTIONERS,

MERCHANTS, BROKERS.

அடிமைகள், படைவீரர்கள், பாதுகாவலர்கள், கொலைத்தண்டனை நிறைவேற்றுபவர்கள் / தூக்குத் தூக்கிகள் / வெட்டுவான்கள்
வணிகர்கள், தரகர்கள்

AMEENA, wife of Alfazzal Ibn Sawy.

ஆமீனா, அல்ஃபஸல் இபின் ஸாவியின் மனைவி  

DOONYA, his niece.

தூன்யா, அவனுடைய மருமாள்

ANICE-ALJALICE, a Persian slave-girl.

அனீஸி -அல்ஜாலிஸ், ஒரு பாரசீக அடிமைப்பெண்  

KHATOON, wife of Almuene, sister of Ameena.

காத்தூனி, அல்மியூனின் மனைவி, ஆமீனாவின் சோதரி  

பால்கிஸ்,மைமூனா -சோதரிகள்,அஜீபு வின்  அடிமைப்பெண்கள்  

SLAVE-GIRLS.  

அடிமைப்பெண்கள்

Lalitha & Suryanarayanan

unread,
Oct 2, 2021, 10:10:45 PM10/2/21
to santhav...@googlegroups.com
பஸ்ஸோரா அமைச்சர்கள் - காணிக்கை

ஆயிரத்தோர் இரவில்வரும் அரபுநாட்டுக் கதையினில்
   அறிஞர்மிகு பாக்தாத் என்னுமுயர் நாட்டினில்
தோயுமெழில் பஸ்ஸோரா என்னுமொரு நகரதன்
   சுல்தானின் அமைச்சர்கள் இருவர்பற்றிச் சொல்வதைப்
பாய்ந்துவரும் நகைச்சுவையில் கவிதைகொஞ்சும் வண்ணமே
  பகவான்ஶ்ரீ அரவிந்தர் ஆங்கிலத்தில் அருமையாய்
வேய்ந்தளித்த நாடகத்தை சிவசூரி தமிழினில்
   விரைந்தியற்ற  அன்னைமிரா அருளியதால் செய்துளேன்.
   

மொழிபெயர்ப்புச் செய்யவேண்டும் போதிலென்றன் நெஞ்சிலே
   மூலநூலென் மொழியில்வந்து முன்னம்தோன்ற வைப்பவள்
வழிமறந்து என்றனுள்ளம் வாடுகின்ற போதிலே
   மடைதிறந்த வெள்ளமென்று வார்த்தைவீழச் செய்பவள்
விழிதிறந்து வார்த்தைகட்கு வேண்டும்பொருள் தருபவள்
    வினையறுக்கும் மிராம்பிகை குருவடிவில் நிற்பவள்
எழுதவைத்த நூலைகுரு கந்தசாமி பொன்னடி
   இட்டுநெஞ்சம் நிறைகிறேன் ஏற்றருள வேண்டியே.

சிவசூரி.


Subbaier Ramasami

unread,
Oct 3, 2021, 9:45:12 AM10/3/21
to santhavasantham
As I don't have tamil in this new computer I am writing in english.

Starting is good.
The first poem should be good in ali aspects. Please check edugai.  

Ramasami

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNPqtVOhOp4g-vchpxOUPNGgPWYe6GABBdFpRmpdSbu0Qw%40mail.gmail.com.

Lalitha & Suryanarayanan

unread,
Oct 3, 2021, 10:13:45 AM10/3/21
to santhav...@googlegroups.com
நன்றி தலைவரே. ஆவன செய்ய முயல்கின்றேன்.

சிவசூரி.

K.R. Kumar

unread,
Oct 3, 2021, 10:34:30 AM10/3/21
to santhav...@googlegroups.com
Dear Sri.Ilandhai ,

I am sure your new computer is latest with heavy back up ram. There should be no problem to install Tamil in your computer. Any IT expert can help you.

Either you can download NHM writer or Ekalappai within a few minutes and you start typing in Tamil immediately. Both softwares are free.

If you download both, activate one only. I have experienced clashes between those two softwares.


Regards,
K.R.Kumar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Oct 3, 2021, 10:42:36 AM10/3/21
to santhavasantham
Good to state the meter of the verses.

Lalitha & Suryanarayanan

unread,
Oct 3, 2021, 10:22:44 PM10/3/21
to santhav...@googlegroups.com
தலைவர்கள் பொறுக்கவும். முதன்முதலில் இட்டிருந்த வடிவத்தை மாற்றாமல் எதுகையை மட்டும் சரிசெய்ய மீண்டும் முயன்று யாத்துள்ள இந்த காணிக்கையைப் படித்து வழிகாட்ட வேண்டுகிறேன்.

சிவசூரி.

காணிக்கை (புதிது)

ஆய்ந்துபல இரவுகளில் அடுக்கிவந்த கதைகளில்
    அரபியரின் பாக்தாத்தின் ஆளுகையில் வருமெழில்
தோய்ந்துபல தொழில்செய்வோர் வாழுகின்ற பஸ்ஸோரா
    சுல்தானின் அமைச்சர்கள் இருவர்பற்றிச் சொல்வதைப்
பாய்ந்துவரும் நகைச்சுவையில் கவிதைகொஞ்சும் வண்ணமே
  பகவான்ஶ்ரீ அரவிந்தர் ஆங்கிலத்தில் அருமையாய்
வேய்ந்தவொரு நாடகத்தை சிவசூரி தமிழினில்
   விரைந்தியற்ற  அன்னைமிரா அருளியதால் செய்துளேன்.

மொழியறிந்து மொழிபெயர்ப்புச் செய்யவிழை நெஞ்சினில்
   மூலமென்றன் மொழியில்வந்து முன்னம்தோன்ற வைப்பவள்
வழிமறந்து என்றனுள்ளம் வாடுகின்ற போதினில்
   மடைதிறந்த வெள்ளமென்று வார்த்தைவிழச் செய்பவள்
விழிதிறந்து வார்த்தைகட்கு வேண்டும்பொருள் சொல்பவள்
   வினையறுக்கும் மிராம்பிகை குருவடிவில் நிற்பதால்
பழிமறந்து பொறுக்ககுரு கந்தசாமி பதமலர்
    பக்தியுடன் இடுகின்றேன் ஏற்றருள வேண்டியே.

சிவசூரி.


On Sun, Oct 3, 2021 at 7:15 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Ramamoorthy Ramachandran

unread,
Oct 4, 2021, 12:49:45 AM10/4/21
to Santhavasantham
மிராம்பிகை - மிக நல்ல சொல்லாட்சி.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Oct 4, 2021, 1:34:51 AM10/4/21
to santhav...@googlegroups.com
புலவர் பெருமானுக்கு நன்றி.

சிவசூரி.


KKSR

unread,
Oct 4, 2021, 1:38:34 AM10/4/21
to santhav...@googlegroups.com
இங்கு கருத்துச் சொல்லும் அளவு இல்லாவிட்டாலும், கருத்தைக் கேட்க வந்துள்ளேன்.

வாழ்த்துகள் அண்ணா.

அன்புடன்
சுரேஜமீ

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
--
Sent from Mobile

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 4, 2021, 1:54:02 AM10/4/21
to santhav...@googlegroups.com
மகான் அரவிந்தரின் எழுத்துகள் abstract ஆக இருக்கும் . அதைக் கவிதையில் வடிக்கும் தங்கள் திறமைக்கு என்  வாழ்த்தும், பாராட்டும்.

          — தில்லைவேந்தன்

Lalitha & Suryanarayanan

unread,
Oct 4, 2021, 4:04:02 AM10/4/21
to santhav...@googlegroups.com
இந்த இழையில் இடுவதைப் படிக்கும் சுரேஜமீ அவர்களுக்கும் தில்லை வேந்தன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

சிவசூரி.

On Mon, Oct 4, 2021 at 11:24 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:மகான் அரவிந்தரின் எழுத்துகள் abstract ஆக இருக்கும் . அதைக் கவிதையில் வடிக்கும் தங்கள் திறமைக்கு என்  வாழ்த்தும், பாராட்டும்.          — தில்லைவேந்தன்

--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 4, 2021, 9:28:53 PM10/4/21
to சந்தவசந்தம்
அன்புள்ள சூரி,

உங்களுக்கு இந்த மொழியாக்கக் கவிதை படைப்பது கைவந்த கலை. பாராட்டுகளும், வாழ்த்தும்,

அனந்த்

Lalitha & Suryanarayanan

unread,
Oct 4, 2021, 10:51:29 PM10/4/21
to santhav...@googlegroups.com
பேராசான் அனந்த் அவர்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. தங்களின் அன்பான வழிகாட்டலையும் எதிர்பார்க்கிறேன்.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Oct 5, 2021, 9:31:14 PM10/5/21
to santhav...@googlegroups.com
பஸ்ஸோரா அமைச்சர்கள் - (4)

கதைச்சுருக்கம்


ஶ்ரீ அரவிந்தர் இயற்றி நமக்கு முழுமையாகக் கிடைத்துள்ள 5 முழுநீள நாடகங்களில் இதுவும் ஒன்று. இந்த நாடகத்தின் மூலக்கதை அரேபிய நாட்டு ஆயிரத்தோர் இரவுகள் என்னும் கதைகளில் இருக்கின்றது என்பதை முனைவர் திருமதி பிரேமா நந்தகுமார் அவர்கள் கண்டறிந்து குறிப்பிட்டுள்ளார். இந்தக் கதையில் ஶ்ரீ அரவிந்தர் சிற்சில மாற்றங்களே செய்ததோடு ஒரு சிறுகதையை முழுநீள நாடகமாக்கத் தேவையான சுவையான நிகழ்ச்சிகளையும் அமைத்துள்ளார். அத்துடன், நாடகத்தை நகைச்சுவையில் தோய்த்தெடுத்து அருமையாக வழங்கியுள்ளார். 

பாக்தாத்தைத் தலைநகராகக் கொண்டு கலீஃபா ஹரெளன் அல் ரஷீது என்பவன் சிறப்பாக ஆண்டுவந்தான். அவனுடைய ஆட்சியின் கீழ் பஸ்ஸோரா நகரில் இருந்து சுல்தான் முகமது பின் சுலைமான் அல்ஸைனி என்பவன் ஆண்டுவந்தான். அல்லா அவர்களின் பிரதிநிதியாகக் கருதப்படும் கலீஃபா நல்லவர்கள் மகிழ்ச்சியுடன் அமைதியாக வாழ்வதையும் தீயவர்கள் ஒடுக்கப்படுவதையும் தன் ஆட்சியின் குறிக்கோளாகக் கொண்டிருந்தான்.. ஆனால் சுல்தான் அல்ஸைனி அதற்கு நேர்மாறாக ஆட்சி செய்துவந்தான்.

சுல்தான் அல்ஸைனிக்கு ஆட்சியில் உதவி செய்ய அல்ஃபஸல் இபின் ஸாவி என்னும் முதலமைச்சனும் அல்மியூன் பின் கக்கன் என்னும் இரண்டாம் அமைச்சனும்  இருந்தனர். இவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறுபட்ட பண்புகளைக் கொண்டிருந்தனர். முன்னவன் ஆகிய அல்ஃபஸல் அன்பார்ந்த நெஞ்சுடையவனாய் எல்லோருக்கும் நல்லவனாய்த் திகழ்ந்தான். நாட்டு மக்கள் அனைவரும் அவனைக் கண்டு மகிழ்ந்தனர்.  பின்னவன் ஆகிய அல்மியூன் என்பவன் முற்றிலும் தீயவனாய் பழிபாவங்களுக்கு அஞ்சாதவனாய், 
பெரும்பாலான மக்களால் வெறுக்கப் படுபவனாய் இருந்தான்.

அல்ஃபஸலின் குடும்பம் மனைவி ஆமீனா, மருமாள் தூன்யா, மகன் நூரெதீன் ஆகிய மூவரைக் கொண்டது..கண்ணையும் கருத்தையும் கவரும் அழகுடைய இந்த நூரெதீன் தான் இந்த நாடகத்தின் கதாநாயகன். 

அல்மியூனின் குடும்பம் அவனுடைய மனைவி காத்தூனி,  விகாரமான கூன் உடைய மகன் ஃபரீது என்னும் இருவரைக் கொண்டது. நல்லவளாகிய தனது மனைவி காத்தூனி சொல்வதைச் செவிமடுக்காமல் தன் மகன் ஃபரீதின் மேல் அளவுக்கு மீறிய பாசத்தைப் பொழிந்து தன்னுடைய விருப்பம்போல் வளர்ந்து கெடும்படியாக  ஆக்கியுள்ளான் அல்மியூன்.

ஒருமுறை ஃபரீது அடிமைச் சந்தைக்குச் செல்கின்றான். அங்கே  அனீஸி அல்-ஜாலிஸ் என்னும் பாரசீக நாட்டுப் பேரழகியைப் பார்த்து அவள்மேல் ஆசை கொள்கிறான். அவளை எந்த விலைக்காவது வாங்கித் தனக்கு அடிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தன் தந்தையை நச்சரிக்கிறான். அவனுடைய தந்தை சந்தையில் அவளை மிகமிகக் குறைந்த
விலைக்குப் பேசுகிறான். அத்தோடு அல்லாமல் தன்னுடைய அதிகாரத்தைக் கெட்டமுறையில் பயன்படுத்தி அவளை அங்கிருந்து பலவந்தமாகத் தூக்கிச் செல்ல முயல்கின்றான். அதற்குமுன்பே சுல்தானுக்கென்று ஓர் அடிமையைத் தேடிவந்த அல்ஃபஸல்  தான் சுல்தானுக்காகத் தேடிவரும் அடிமையிடம் இருக்கவேண்டிய தகுதிகளைப் பட்டியல் இட்டுச் சென்றிருக்கிறான். அந்தத் தேவைகளுக்கேற்ற சிறந்த தகுதிகளை உடையவளாக அனீஸியைக் காட்ட விரும்பியிருந்தான் அந்தத் தரகன். அங்கே அவளை அழைத்துவர ஓர் ஆளை அனுப்பியிருந்தான்..அனீஸி வரும் சமயத்தில் அல்மியூனும் ஃபரீதும் அவளைப் பார்த்துவிட்டனர். அடிமைத் தரகன் செய்வதறியாமல் திகைத்தபோது அல்ஃபஸல் அங்கே மீண்டும் வருகிறான்.

அல்ஃபஸல் அவளுடைய தகுதிகளுக்கு ஏற்றதொரு விலையை நிர்ணயித்து அவளைச் சுல்தானின் அந்தப்புரத்துக்காக வாங்குகிறான். பேரழகும் நுண்ணறிவும் இசைஞானமும் பற்பல கலைகளில் வல்லமையும் உடைய இந்த அனீஸியே இந்த நாடகத்தின் கதாநாயகி. அவளுக்கு நல்ல உணவும் ஓய்வும் கொடுத்து பத்து நாள்கள் தன் இல்லத்தில் வைத்திருந்துவிட்டு அவளுடைய பயணக் களைப்பு போனபின் சுல்தானிடம் காட்ட விரும்பிய அல்ஃபஸல், அவளைத் தன் வாலிப மகனின் கண்ணில் படாமல் மறைவாக வைத்திருக்க ஏற்பாடுகள் செய்கிறான். எனினும் தூன்யா மூலமாகத் தன் வீட்டில் இருக்கும் அவளைப் பற்றித் தெரிந்துகொண்ட நூரெதீன் அவளைக் கண்டவுடன் அவள்மேல் காதல் கொள்கிறான். அவனுடைய உண்மையான அன்பை அறிந்துகொண்ட அல்ஃபஸல் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைக்கிறான். தூன்யாவைக் காவல் படைத்தலைவனாகிய மூரது என்பவனுக்கு மணம் முடித்து வைக்கிறான்.

கலீஃபா ரோமானிய மன்னருடன் தன்சார்பில் பேச்சுவார்த்தை நடத்த  அல்ஃபஸலை ரோமாபுரி சென்றுவர அனுப்பிவிடுகிறான். அவன் திரும்பி வருவதற்குப் பல மாதங்கள் ஆகிவிடும் என்றறிந்த அல்மியூன் அந்தச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகவும் அல்ஃபஸலின் குடும்பத்துக்கு மிகவும் பாதகமாகவும் பயன்படுத்திக் கொள்கிறான். இந்தச் சமயம் பார்த்து சுல்தானுக்காக வாங்கப்பட்ட பேரழகியை அல்ஃபஸல் தன் மகன் நூரெதீனுக்கு மணம் செய்துவிட்டதைச் சொல்லி சுல்தானின் மனத்தைக் கெடுத்து அவனுடைய குடும்பத்தையே அழித்துவிடத் திட்டமிடுகிறான் அல்மியூன். நூரெதீனையும் அனீஸியையும் சிறைப்பிடிக்க மன்னனின் உத்தரவு பெற்றுவிடுகிறான். இதற்குள் அல்மியூனின் மருமானும் நூரெதீனின் நண்பனும் ஆகிய அஜீபு என்பவனின் உதவியால்
நூரெதீனும் அனீஸியும் பாக்தாத் நகருக்குத் தப்பிச் சென்றுவிடுகின்றனர்.

பின்னர் அவர்கள் பாக்தாத் நகரில் போகும் வழியில் திறந்திருந்த கலீஃபா வின் அரண்மனைத் தோட்டத்தில் நுழைகின்றனர். அந்தத் தோட்டக்காரனாகிய ஷேக் இப்ராஹிம் பேரழகு வாய்ந்த அவர்களைக் கண்டு மகிழ்ந்து அவர்கள் அங்கேயே இருந்து களிக்க அனுமதி அளிக்கிறான். நூரெதீன் அந்த மாளிகையில் இருக்கும் சாளரங்களில் எல்லாம் விளக்குகளை ஏற்றி வைக்கிறான். மாளிகை ஒளிவெள்ளத்தில் திகழ்கிறது. மிகமிக இனிமையான குரலில் அனீஸி பாடுவதும் அவள் இசைக்கும் யாழிசையும் காற்றில் மிதந்து வருகிறது. தனது மாளிகையில் தனக்கே தெரியாமல் நடக்கும் கேளிக்கைகளைக் கேட்டு அது என்னவென்று அறிந்துகொள்ள கலீஃபா மாறுவேடம் பூண்டு அங்கே வருகிறான். அங்கே  நூரெதீனையும் அனீஸியையும் கண்டு அவர்கள்மேல் கலீஃபா அன்புகொள்கிறான் அனீஸியின் தெய்விக இசை அவனைக் கவர்கிறது. அவர்களைப் பற்றிய சேதிகளைத் தெரிந்துகொண்டு அவர்கள்மேல் இரக்கம் கொள்கிறான். 

கலீஃபாவை அவர்கள் யார் என்று அறிந்துகொள்ளா விட்டாலும் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று அவன் கொடுக்கின்ற  கடிதத்தை எடுத்துக் கொண்டு நூரெதீன் பஸ்ஸோரா திரும்பி வருவதும் வந்த இடத்தில் எதிர்பார்த்ததற்கு விரோதமாகப் போலி ஓலை தயாரித்து மோசடி செய்துள்ளதாகக் கைதுசெய்யப் படுவதும் கொலைத் தண்டனை விதிக்கப் படுவதும் பின்னர் தக்க சமயத்தில் கலீஃபா வே தம் படையுடன் வந்து நூரெதீனைக் காப்பாற்றுவதும் சுல்தானாக ஆக்குவதும் மிகவும் சுவாரசியமான திருப்பங்களுடன் 
நிகழ்கின்றன.

இந்த நாடகத்தில் வரும் முக்கியமான பாத்திரங்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.ஹரெளன் அல்ரஷீது, அல்ஃபஸல், நூரெதீன், அனீஸி அல்-ஜாலிஸ்,அமீனா, காத்தூனி மற்றும் தூன்யா நற்குணங்கள் நிறைந்தவர்கள் அல்ஸைனி, அல்மியூன் மற்றும் ஃபரீது ஆகிய மூவரும் தீயகுணங்களின் வடிவானவர்கள் 

இயற்கை வருணனைகளும் காதலும் எள்ளலும் நகைச்சுவையும் கற்பனை வளங்களும் கொண்டு விளங்கும்  அருமையான கவிதைகள் இந்த நாடகத்தை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. 

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Oct 6, 2021, 7:58:16 AM10/6/21
to santhav...@googlegroups.com

பஸ்ஸோரா அமைச்சர்கள் (5)

( ஶ்ரீ அரவிந்தரின் ஆங்கில மூலம் 170க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்டது.. எனவே முழு நூலையும் அதன் மொழியாக்கத்தையும் இங்கே இடுவது உசிதமாக ஆகாது. எனவே தேவைக்கேற்ப அங்கங்கே சில பகுதிகளை விடுத்து இங்கே இட விழைகிறேன். 
முதல் அங்கத்தின் முதற் காட்சி அந்த இரு மந்திரிகளைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் கருத்துகளை நமக்குத் தெளிவாக்கும்.  மேலும், அந்த அமைச்சர்களின் பிள்ளைகளைப் பற்றியும் ஓரளவுக்கு அடையாளம் காட்டிவிடுவதாக அமைந்துள்ளது. அமைச்சர்களின் மனநிலையையும் நமக்குப் புரியவைக்கும்படியும் அமைந்துள்ளது. கதாநாயகனாகிய நூரெதீனைப் பற்றியும் கதாநாயகியாகிய அடிமைப்பெண் அனீஸியைப் பற்றியும் கூட கொஞ்சம்
உணர்த்துவதாக அமைந்துள்ளது.- சூரி)


Act I

Bassora.

Scene 1

An antechamber in the Palace. 
Murad, Sunjar.

MURAD 
Chamberlain, I tell thee I will not bear it an hour longer than 
it takes my feet to carry me to the King’s audience-room and 
my voice to number my wrongs. Let him choose between me, a 
man and one made in God’s image, and this brutish amalgam of 
gorilla and Barbary ape whom he calls his Vizier.

SUNJAR 
You are not alone in your wrongs; all Bassora and half the Court 
complain of his tyrannies.

MURAD 
And as if all were too little for his heavy-handed malice, he must 
saddle us with his son’s misdoings too, who is as like him as the 
young baboon is to the adult ape.

SUNJAR 
It is a cub, a monkey of mischief, a rod on the soles would go 
far to tame. But who shall dare apply that? Murad, be wary. 
The King, — who is the King and therefore blameless, — will 
not have his black angel dispraised. Complain rather to Alfazzal 
Ibn Sawy, the good Vizier.

MURAD 
The kind Alfazzal! Bassora is bright only because of his presence.

SUNJAR 
I believe you. He has the serenity and brightness of a nature that 
never willingly did hurt to man or living thing. I think sometimes 
every good kindly man is like the moon and carries a halo, while 
a chill cloud moves with dark and malignant natures. When we 
are near them, we feel it.

Enter Ibn Sawy.

அங்கம் 1

பஸ்ஸோரா

களம் 1

அரண்மனையில் ஓர் இடைகழி

மூரது, சஞ்சரன்.

மூரது:

மணியக்காரரே, பார்த்துக் கொண்டே இரும், அரசனின் தர்பாருக்குச் செல்லும் வரைதான் நான் அதைப் பொறுத்திருப்பேன், அதன்பின் எனக்குச் செய்யப்பட்டுள்ள தீங்குகளை எல்லாம் ஒவ்வொன்றாகப் பட்டியல் இடுவேன்.  ஒரு மணி நேரம் கூடத் தாமதிக்க மாட்டேன். அரசனே தீர்மானித்துக் கொள்ளட்டும் - அவருக்கு, ஆண்டவனின் நோக்கில் உயர்ந்து நிற்கும்  மனிதனாகிய நான் வேண்டுமா, இல்லை, கொரில்லாவும் காட்டுமிராண்டி வாலில்லாக் குரங்கும் ஒன்று சேர்ந்தது போல் தோன்றும்  எவரை அவர் தமது மந்திரி என்று கொண்டுள்ளாரோ அவர் வேண்டுமா  என்று.

சஞ்சரன் :

தீங்குகள் உமக்கு மட்டுந்தான் என்று இழைக்கப் படவில்லை; பஸ்ஸோரா நாட்டில் உள்ள அனைவருக்கும் அத்துடன் தர்பாரில் இருப்பவர்களில் பாதிப்பேருக்காவது அவர் கெடுதல் செய்துள்ளார்..

மூரது:

ஏதோ இவரது இரக்கமில்லாக் கொடுங் கரத்தால் இழைக்கப்படும் பெருந்துயரம் போதாதுபோல, அந்த மூத்த கொரில்லா பெற்றுப் போட்ட குரங்குக் குட்டியையே உரித்திருக்கும் அவருடைய மகன் தன் பங்குக்குத் தானும் நமக்கு இன்னல் தருகின்றான்.

சஞ்சரன்:

அதுவொரு குட்டி, சேட்டைகள் செய்யும் குரங்கு, அதன் உள்ளங்காலில்  கம்பியைச் சொருகினாலும் அது அடங்காது. ஆனால் அந்தத் துணிவு யாருக்கு இருக்கிறது? மூரது, சற்று எச்சரிக்கையாய் இரும். இந்த மன்னன்  -- அவர் மன்னனாய் இருப்பதால் அவர் எது செய்தாலும் அது ஒரு குற்றமாகவே கருதப்படாது--  தமது இந்தப் பொல்லாத துர்தேவதைமேல் அவர் பழி சொன்னால் ஏற்க மாட்டார். அதற்குப் பதிலாய், நீர் அந்த நல்ல மந்திரியான  அல்ஃபாஸல் இபின் ஸாவியிடம் முறையிடும்.

மூரது:

ஆ, அன்பு நிறைந்த அல்ஃபாஸல்! அவர் இங்கே இருப்பதால்தான் பஸ்ஸோராவில் வெளிச்சமே இருக்கிறது.

சஞ்சரன்:

நீர் சொல்வதை நானும் அப்படியே ஏற்கிறேன். எந்த மனிதனுக்கோ அல்லது ஜீவராசிகளுக்கோ மனமறிந்து ஒரு துன்பமும் தராத இயல்புடைய அவருடைய முகத்தில் அமைதியும் ஒளியும் இருக்கிறன. அன்பு நிறைந்த நல்ல மனிதன் ஒவ்வொருவனும் நிலவைப் போன்றவன், அப்படிப் பட்டவர்களைச் சுற்றி ஓர் ஒளிவட்டமும் தெரியும். ஆனால், இருண்டதாய்த் தீய எண்ணங்கள் கொண்ட நெஞ்சரிடமிருந்து , சில்லென்று நடுங்க வைக்கும் கரிய மேகம் வருவது தெரியும்.. நாம் அவர்கள் அருகில் இருக்கையில் அதை உணர்கிறோம்.

இபின் ஸாவி நுழைகிறான்.

சிவசூரி.

(தொடரும்)

Lalitha & Suryanarayanan

unread,
Oct 6, 2021, 9:34:48 PM10/6/21
to santhav...@googlegroups.com

பஸ்ஸோரா அமைச்சர்கள் (6)

Act 1, Sc 1 continues ....
Enter Ibn Sawy.

IBN SAWY (to himself ) 
The fairest of all slavegirls! here’s a task! 
Why, my wild handsome roisterer, Nureddene, 
My hunter of girls, my snare for hearts of virgins, 
Could do this better. And he would strangely like 
The mission; but I think his pretty purchase 
Would hardly come undamaged through to the owner. 
A perilous transit that would be! the rogue! 
Ten thousand golden pieces hardly buy 
Such wonders, — so much wealth to go so idly! 
But princes must have sweet and pleasant things 
To ease their labours more than common men. 
Their labour is not common who are here 
The Almighty’s burdened high vicegerents charged 
With difficult justice and calm-visaged rule.

இபின் ஸாவி நுழைகிறான்.

இபின் ஸாவி (தனக்குள்)

மட்டில்லா அழகுப்பெண் அடிமையரின் மத்தியிலே
மற்றவரைப் புறந்தள்ளும் வடிவழகுப் பெண்ணொருத்தி
கிட்டிடவே வேண்டுவதே இட்டவொரு பணியாகும்!
கேட்டவுடன் கிறுகிறுப்பாய்ச் செய்வானிதை நூரெதீனே.

கட்டற்றுக் கடக்குமென் கட்டழகுப் பாத்திரமாம்,
கால்வைக்கும் இடமெல்லாம் காதலெனும் சாத்திரமாம்,
தட்டின்றிக் கன்னியரைத் தானிழுக்கும் சூத்திரமாம்,
தகுதிமிகும் என்மகனே தரமுடனே அதைச்செய்தும்,

இட்டமுடன் சேர்க்கானே இழிவின்றி ! மாசவள்மேல்
பட்டிடுமே இவ்வழியில் ! பையனிவன்  போக்கிரியே!

பற்றாமல் போகும்பத் தாயிரமாம் பொற்காசும்
பாருலகில் அப்படியோர் அதிசயத்தை வாங்கிடவே---
வற்றாத பெருஞ்செல்வம் வழிந்தோடிப் போகுந்தான்!
மன்னரெலாம் இருந்தாலும் மனம்விரும்பும் இன்பங்கள்

சற்றேனும் கொள்ளத்தான் வேண்டுவதே தாரணியில்
தார்வேந்தர் செங்கோலைச் சீர்தூக்கிச் செய்வதனால்
மற்றாரும் செய்யாத வகைகாத்து நிற்பதனால்.
மாக்கள்தம் வேலைபோல் மன்னர்பணி ஆவதில்லை,

வல்லானின் பணிசெய்ய வந்தபிரதி நிதிகள்பால்
மன்னுலகில் கோடாமல் நீதிமுறை வழுவாமல்
நல்லானாய் ஞானமுடன் அமைதியுடன் நல்லாட்சி
நடத்துகின்ற பொறுப்பினையும் நல்கியுளார் என்பதனால்.

SUNJAR 
The peace of the Prophet with thee, thou best of Viziers.

MURAD 
The peace, Alfazzal Ibn Sawy.

IBN SAWY 
And to you also peace. You here, my Captain? 
The city’s business?

MURAD

Vizier, and my own! 
I would impeach the Vizier Almuene 
Before our royal master.

IBN SAWY

You’ll do unwisely. 
A dark and dangerous mind is Almuene’s, 
Yet are there parts in him that well deserve 
The favour he enjoys, although too proudly 
He uses it and with much personal malice. 
Complain not to the King against him, Murad. 
He’ll weigh his merits with your grievances, 
Find these small jealous trifles, those superlative, 
And in the end conceive a mute displeasure 
Against you.

MURAD
I will be guided by you, sir.

IBN SAWY 
My honest Turk, you will do well.

SUNJAR
He’s here.

Enter Almuene.


சஞ்சரன்:

நபிகள் நாயகத்தின் அமைதி உங்களிடமும் நிலவட்டும், மந்திரிகளில் தலைசிறந்தவரே.

மூரது:

அமைதி உண்டாகுக, அல்ஃபாஸல் இபின் ஸாவி.

இபின் ஸாவி:

ஓங்குக அமைதி ஈங்கும் நெஞ்சிலும்!
என்றன் அன்பார் 
காவல் தலைவா, மேவினை இங்கேன்
நகர்ப்புற வேலையோ?

மூரது:

என்றன் பணியிலும் அமைச்சரின் பணியிலும்!
மன்னனின் முன்னால் மந்திரி அல்மியூனைக்
கண்டனம் செய்திடக் காத்துளேன் நானே.

இபின் ஸாவி:

அறிவுடைச் செயலல அதுவென் றறிவாய்.
இன்னல் தருகிற இருளார் மனத்தன்
அல்மியூன் என்பதை அறிவாய் நீயும்.
இருந்தும் அவனுள் இருக்கும் சிற்சில
திறமையால் அவனும் சீரும் சிறப்பும்
பெற்றிடும் தகுதி உற்றவன் தானே,
ஆணவங் கொண்டவன் அதிகா ரத்தைச்
சுயநலம் கருதிப் பயன்பெற் றாலுந்தான்.
வைத்திட வேண்டாம் வழக்குகள் ஒன்றும்  
அவனுக் கெதிராய் அரசனின் முன்னே.
மூரது,
தகுதியை ஓர்புறம், புகாரை ஓர்புறம்
வைத்தெடை போடுவான் வேந்தன் அவனே.
சொல்லும் புகாரோ சொற்பமாய்த் தோன்றத்
தகுதியோ மிகுதியாய்த் தானே தோன்றும்.
அற்பப் புகாரை அசூயையின் விளைவாய்க்
கொள்வான் எனவே, கொற்றவன் உளத்தில்
உன்மேல் வெறுப்பும் உருவா கிடுமே.

மூரது:

ஐயா,
நெஞ்சில் கொள்வேன் உங்கள் அறிவுரை

இபின் ஸாவி:

நேர்மை யானவென் சீர்மிகு துருக்கா,
நன்றே செய்வாய், நலமே இருப்பாய்.

சஞ்சரன்:

வருகிறார் அவரே.

அல்மியூன் நுழைகிறான்.




Subbaier Ramasami

unread,
Oct 7, 2021, 9:08:23 AM10/7/21
to santhav...@googlegroups.com
மொழியாக்கம் சிறப்பாகச் செல்கிறது

இலந்தை

On Wed, Oct 6, 2021 at 8:34 PM Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:


Lalitha & Suryanarayanan

unread,
Oct 7, 2021, 9:14:11 AM10/7/21
to santhav...@googlegroups.com
தலைவருக்கு நன்றி.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Oct 7, 2021, 9:18:01 PM10/7/21
to santhav...@googlegroups.com

பஸ்ஸோரா  அமைச்சர்கள் (7)

Act 1, Sc 1 continues...

Enter Almuene.

MURAD 
The peace upon you, son of Khakan.

ALMUENE

Captain, 
You govern harshly. Change your methods, captain, 
Your manners too. You are a Turk; I know you.

MURAD 
I govern Bassora more honestly 
Than you the kingdom.

ALMUENE 
Soldier! rude Turcoman!

IBN SAWY 
Nay, brother Almuene! Why are you angry?

ALMUENE 
That he misgoverns.

IBN SAWY 
In what peculiar instance?

ALMUENE 
I’ll tell you. A city gang the other day 
Battered my little mild Fareed most beastly 
With staves and cudgels. This fellow’s bribed police, 
By him instructed, held a ruffian candle 
To the outrage. When the rogues were caught, they lied 
And got them off before a fool, a Kazi.

அல்மியூன் நுழைகிறான்.


மூரது:

இறங்குக நின்மேல் இறைவனின் அமைதி,
காக்கன் மைந்தனே.

அல்மியூன்:

காக்கக் கடவிய காவல் தலைவா,
பார்க்கும் பணியைப் பரிவுடன் செய்க,
மாற்றிக் கொள்கநின் வழிமுறை யெல்லாம்.
நடத்தை தனையும் நன்கினி மாற்று.
நீயொரு துருக்கன்; நினைநான் அறிவேன்.

மூரது:

நாட்டினைச் செலுத்துமும் பாட்டையை விடநான்
நேர்மையாய் பஸ்ஸோரா சீர்நகர் ஆள்கிறேன்.

அல்மியூன்:

சிப்பாய், நீயொரு செருக்குத் துருக்கன்!

இபின் ஸாவி:

சோதர அல்மியூன், சொல்லேல் அதுபோல்!
சினமும் சீற்றமும் கொண்டனை ஏனோ?

அல்மியூன்:

நிர்வா கத்தின் நெறிமுறை பிழைத்ததால்.

இபின் ஸாவி:

கூறுக அதனைக் குறிப்பிட்(டு) ஏதென.

அல்மியூன்:

எல்லாம் விவரமாய்ச் சொல்லுவேன் உமக்காய்.
அன்றொரு நாளோர் அயோக்கியர் கூட்டம்
ஒன்றும் தெரியாச் சின்னஞ் சிறுவனாம்
என்றன்  ஃபரீதை நையப் புடைத்தனர்,
கம்பும் தடியும் கழியும் கொண்டே.
துட்டர் தமக்குத் துணைபோ யினரே;
இலஞ்சம் பெறுமிவன் ஈனப் படையினர்,
தீவட்டி பிடித்தனர் தீயவர் தமக்கிவன்
சொல்லிய வண்ணம் செய்தனர் அவர்கள்.
பின்னொரு வழியாய்ப் பிடியினில் நன்றே
சிக்கிக் கொண்ட அத் தீயவர் ஆங்கோர்
முட்டாள் காஸியின் முன்பொய் உரைத்துத்
தப்பிச் சென்றனர் தண்டனை இன்றி.

MURAD 
The Vizier’s son, as all our city knows, 
A misformed urchin full of budding evil, 
Ranges the city like a ruffian, shielded 
Under his father’s formidable name; 
And those who lay their hands on him, commit 
Not outrage, but a rescue.

ALMUENE 
Turk, I know you.


மூரது:

மந்திரி மகன்சீர் வளநகர் அறியும்,
அவனோர்
வக்கிர வடிவுடைத் துக்கிரிச் சிறுவன்
கொடுமை கட்க்கொரு கொள்கலன் ஆனவன்,
இட்டம் போலே திரியும் துட்டன்,
பெரியவன் வீட்டுப் பிள்ளை என்னும்
கவசம் அணிந்து துணிகிறான் எதுவும்;
அவனைப் பற்றிய(து) அக்கிர மமில்லை,
அட்டூ ழியமொன்றும் அவர்செய வில்லை,
வேற்றாய் அவனை மீட்டதே உண்மை.

ALMUENE 
Turk, I know you.

IBN SAWY 
In all fraternal kindness hear me speak. 
What Murad says, is truth. For your Fareed, 
However before you he blinks angelically, 
Abroad he roars half-devil. Never, Vizier, 
Was such a scandal until now allowed 
In any Moslem town. Why, it is just 
Such barbarous outrage as in Christian cities 
May walk unquestioned, not in Bassora 
Or any seat of culture. It should be mended.

ALMUENE 
Brother, your Nureddene is not all blameless. 
He has a name!

IBN SAWY

His are the first wild startings 
Of a bold generous nature. Mettled steeds, 
When they’ve been managed, are the best to mount. 
So will my son. If your Fareed’s brute courses 
As easily turn to gold, I shall be glad.

ALMUENE 
Let him be anything, he is a Vizier’s son. 
The Turk forgot that.

IBN SAWY

These are maxims, brother, 
Unsuited to our Moslem polity. 
They savour of barbarous Europe. But in Islam 
All men are equal underneath the King.

ALMUENE 
Well, brother. Turk, you are excused.

MURAD 
Excused! 
Viziers, the peace.

IBN SAWY
I’ll follow you.

ALMUENE 
Turk, the peace!

IBN SAWY 
Peace, brother. See to it, brother.

Exit with Murad.



அல்மியூன்:

துருக்கா உன்னைத் தெரியும் எனக்கு.

இபின் ஸாவி:

சோதர னாய்நான் சொல்மொழி கேட்பாய்.
மூரது மொழிந்தது முற்றிலும் மெய்யே.
ஈங்குன் ஃபரீது நின்றன் வீட்டில்
தீங்கெதும் செய்யாத் தேவதை போலே
தெரிந்தா லுந்தான் புரிந்துகொள் அவனே
தெருவினில் பேயாய்த் திரிகின் றானென.
இப்படிப் பட்டோர் இழிசெயல் எவரும்
அரபுநன் னாட்டின் ஆர்நகர் எதிலும்
இந்நாள் வரையே இயற்றிய(து) இலையே.
மட்டெதும் இல்லா அட்டூ ழியங்கள்
கேட்பா ரின்றிக் கிரித்துவ நகர்களில்
செய்யலாம் சீரைச் சிதைக்கலாம் ஆனால்,
பண்படு பஸ்ஸோரா கண்டிதைப் பொறுக்கா.
திருத்தித் தானது தீர்ந்திட வேண்டும்.

அல்மியூன்:

அண்ணனின் மைந்தன் நூரெ தீனின்
வண்ணம்நான் அறிவேன் வளர்பேர் அறிவேன்,
மாசெதும் இலானெனப் பேசுவர் எவரே!

இபின் ஸாவி: 

கட்டற்(று) அலைவது காளைப் பருவம்
தட்டின்றித் தருமவன் பண்பதில் திகழும்.
செருகளத் திடையும் சீருடன் விரைந்து
பாயும் பரிகளைப் பழக்கினால் அவையே
பயணம் செய்திடப் பயன்படு வதுபோல்,
என்றன் மகனும் நன்னலம் தருவான்.
மூர்க்கத் தனத்துடன் மோதுமுன் ஃபரீதின்
பாதையும் பொலியும் பைம்பொன் போலே
எளிதினில் என்றால் எனக்கும் மகிழ்வே.

அல்மியூன்:

எப்படி யோ அவன் இருந்தா லுந்தான்
அவனோர் அமைச்சனின் அருமை மைந்தன்,
எண்ணான் அதனை இந்தத் துருக்கன்.

இபின் ஸாவி:

அவையெலாம் பழமொழி, அன்புச் சோதரா,
பண்படா மேலை நாட்டதில் வழங்கும்.
ஏற்ற(து) ஆகா இஸ்லாத் துக்கவை.
கொற்றவன் கீழே குடியெலாம் சமமே.

அல்மியூன்:

இருக்கட் டுமண்ணே, எப்படி யோஅது.
துருக்கா, இனிநீ போகலாம் அகன்றே,

மூரது:

போகலா மென்றா புகல்கின் றீர்நீர்!
வளர்க அமைதி, மந்திரிகள் இடையும்!

இபின் ஸாவி:

அண்ணே, அமைதி நிலவுக எங்கும்.
அண்ணனுன் கரத்தில் அடங்கும் அமைதியும்.

மூரது உடன் இபின் ஸாவியும் வெளியேறுகிறான்.

ALMUENE

Brother, peace. 
Would I not gladly tweak your ears and nose 
And catch your brotherly beard to pluck it out 
With sweet fraternal pulls? Faugh, you babbler 
Of virtuous nothings! some day I’ll have you preach 
Under the bastinado; you’ll howl, you’ll howl 
Rare sermons there.

அல்மியூன்:

அமைதி நிலவுக அண்ணனே எங்கும்.

மூக்கிலாத காதிலாத முகமிதென்று நின்னையே
நோக்குவார் நோக்கிடவே செய்யேனோ மகிழ்வுடன்?
நீக்கிடவே சோதரனாய் நீண்டநின்றன் தாடியைப்
போக்கிடவே மாட்டேனோ பொங்கிவரும் காதலால்?

சீச்சீ,

தீதிலாத பேருரைகள் செய்குவாய் செய்குவாய்,
சூதிலாமல் பயனிலாமல் சொல்லுவாய் சொல்லுவாய்!
ஓதுவாயுன் உள்ளங்காலை ஓடிவந்(து) ஒடித்தபின்
போதெலாமும் ஊளையிட்(டு) உளறுவாய் உளறுவாய்! 

   புதுப்புதிதாய் போதனைநீ பிதற்றுவாய் பிதற்றுவாய்.

(seeing Sunjar)

You! you! you spy? you eavesdrop? 
And I must be rebuked with this to hear it! 
Well, I’ll remember you.

(சஞ்சரனைக் கண்டு )

அண்மையில் நின்றே, அடநீ நீயென், வேவு பார்க்கிறாயா?
ஒண்டியே நின்றென் பேச்சை யெல்லாம் ஒட்டுக் கேட்கிறாயா?
கண்டனம் செய்வேன் காதைத் திறந்து கேட்டு நின்றனையா?
கண்டிவண் இருக்கும் உன்னை நானும் கண்டு கொள்வேன்பார்!

SUNJAR 
Sir, I beseech you, 
I had no smallest purpose to offend.

ALMUENE 
I know you, dog! When my back’s turned, you bark, 
But whine before me. You shall be remembered.

Exit.

SUNJAR 
There goest thou, Almuene, the son of Khakan, 
Dog’s son, dog’s father, and thyself a dog. 
Thy birth was where thy end shall be, a dunghill.

Exit. 


சஞ்சரன்:

நம்புக, ஐயா, எனநான் உம்மை இறைஞ்சிக் கேட்கின்றேன்,
இம்மியும் உமக்கோர் வெறுப்பை ஊட்டும் எண்ணம் எனக்கில்லை!


அல்மியூன்:

நன்றாய் அறிவேன், நாயே, உன்னை என்றன் பின்னாலே
நின்று குரைக்கும் நின்றன் பண்பை நெஞ்சம் நன்கறியும்,
என்றன் முன்னம் குழைந்துன் குறைகள் ஏதோ சொல்லிடுவாய்.
என்றும் இதையே என்றன் நெஞ்சில் எண்ணி இருப்பேன்பார்!

வெளியேறுகிறான்.

சஞ்சரன்:

கண்ணெதிர் போகிறாய், காக்கன் மைந்தா,
அல்மியூன், அடநீ நீயொரு
நாயின் மகனே,நாயின் அப்பா,
நீயும் இங்கோர் நாயே ஆவாய்.
சாணக் குவியலில் சாகப் போகும்நீ
சாணக் குவியலில் தான்பிறந் தனையே.

வெளியேறுகிறான்.

(இத்துடன் அங்கம் 1, களம் 1 நிறைவடைகிறது.)

தொடரும்.























Lalitha & Suryanarayanan

unread,
Oct 8, 2021, 9:05:37 PM10/8/21
to santhav...@googlegroups.com
பஸ்ஸோரா அமைச்சர்கள் (8) 

(இந்தக் களத்தில் தீயவனான அந்த மந்திரி அல்மியூன் உடைய இல்லத்தில் நுழைகிறோம். அங்கே நல்லவளான அவனுடைய மனைவி காத்தூனியையும் அவர்களின் மகனான ஃபரீதையும் பார்க்கப் போகிறோம். மந்திரியின் இலட்சணமும் அவன் பெற்ற அந்த மந்தியின் இலட்சணமும் வெட்ட வெளிச்சமாக நமக்கு வெளிப்படுத்தும் காட்சி இது. - சூரி)

Act 1

Scene 2

A room in Almuene’s house. 
Almuene, Khatoon.

KHATOON 
You have indulged the boy till he has lost 
The likeness even of manhood. God’s great stamp 
And heavenly image on his mint’s defaced, 
Rubbed out, and only the brute metal left 
Which never shall find currency again 
Among his angels.

ALMUENE

Oh always clamour, clamour! 
I had been happier bedded with a slave
Whom I could beat to sense when she was froward.


அல்மியூன் இல்லத்தில் ஒர் அறை
அல்மியூன், காத்தூனி

காத்தூனி:

செல்லம் கொடுத்துச் சீரினை அழித்தே
இல்லை இனியொரு மானிட இலட்சணம்
எதுவும் என்றே இயம்பும் வண்ணம்
இடத்தைக் கொடுத்துநீ கெடுத்தாய் மகனை.
கடவுள் வார்ப்பொளிர் கவின்முத் திரையும்
இறைவன் திருவுரு இருந்தருள் அழகையும்
சிதைத்தாய், அழித்தாய் இனியிடம் இலையென
எல்லாம் கெடுத்துத் தகரத் தகடாய்
தேவதை இடத்துச் செல்லா(து) ஆக்கினை,
இனியொரு மதிப்பும் இல்லா(து) ஆக்கினை.

அல்மியூன்:

போதும் ஓயா(து) உன்றன் ஒப்பாரி!
அடிமையாய் இருந்தே அடங்கா(து) இருந்தால்
அடித்துப் பணிந்திட வைத்திருப் பேனே.
திருமணம் அடிமையைச் செய்திருந் தாலே
இல்லறம் மகிழ்வாய் இருந்திருக் குந்தான்.

KHATOON 
Oh, you’ld have done no less by me, I know, 
Although my rank’s as far above your birth 
As some white star in heaven o’erpeers the muck 
Of foulest stables, had I not great kin 
And swords in the background to avenge me.

காத்தூனி:

என்குலமும் என்படையும் நின்னைவிடச் சிறந்தததாய்ப்
பின்புலத்தில் உடையேனைத் தீங்கெதுவும் தொட்டுவிட்டால்
உன்னையவர் பழிதீர்ப்பர் என்றுணர்ந்து கொண்டவன்நீ
என்பதனால் அப்படியே ஏதொன்றும் செய்யவிலை.

வீற்றிருந்த விண்ணகத்தை விட்டோர்வெண் விண்மீனே
சேற்றிருந்த முடைநாற்றம் தெரிந்தெடுத்துப் பூசியதாய்த்
தூற்றுமொரு தொழுவமெனத் தோன்றுமுனைக் கண்டும்நான்
ஏற்றதொரு துணையெனவே ஏற்றுவந்தேன், என்சொல்வேன்!

ALMUENE

Termagant, 
Some day I’ll have you stripped and soundly caned 
By your own women, if you grow not gentler.

KHATOON 
I shall be glad some day to find your courage.

Enter Fareed, jumping and gyrating.


அல்மியூன்:

அடங்காப் பிடாரி,
ஒருநாள் இல்லை ஒருநாள் உன்றன்
ஆடைகள் எல்லாம் அகற்றச் செய்தே,
உன்னுடன் இருக்கும் பெண்களைக் கொண்டே
வீசி அடிப்பேன் விளங்கும் பிரம்பால்,
பேசினை என்றால் இப்படி யேதான்.

காத்தூனி:

ஒருநாள் இல்லை ஒருநாள் உன்னிடம்
வீரம் வருமெனில் வேடிக்கை பார்ப்பேன்.

குதித்துக் கொண்டும் சுற்றிக் கொண்டும் ஃபரீது நுழைகிறான்.

சிவசூரி

(தொடரும்)

Lalitha & Suryanarayanan

unread,
Oct 9, 2021, 8:08:30 PM10/9/21
to santhav...@googlegroups.com
பஸ்ஸோரா அமைச்சர்கள் (9)

Act 1, Sc 2 continues...

Enter Fareed, jumping and gyrating.

FAREED 
Oh father, father, father, father, father!

KHATOON 
What means this idiot clamour? Senseless child, 
Can you not walk like some more human thing 
Or talk like one at least?

ALMUENE

Dame, check once more 
My gallant boy, try once again to break 
His fine and natural spirit with your chidings, 
I’ll drive your teeth in, lady or no lady.

குதித்துக் கொண்டும் சுற்றிக் கொண்டும் ஃபரீது நுழைகிறான்.

ஃபரீது:

அப்பப்பா, அப்பப்பா, அப்பப்பா, அப்பா!

காத்தூனி:

முட்டாள் கூக்குரல் இட்டிவண் வருகிறான்,
இப்படிக் கூக்குரல் இடுவதன் பொருளென்?
முட்டாள் மகனே,
ஒருசிறி தேனும் ஒருமனி தனைப்போல்
நடந்திட மாட்டாய்? நடக்கா(து) அதுவெனில்
குறைந்த பட்சம், சிறிதள வேனும்
ஒருமனி தனைப்போல் உரைத்திட மாட்டாய்?

அல்மியூன்:

இன்னும் ஒருமுறை பெண்ணே இதுபோல்
பேசினை  எனிலென் வீரப் பையனை,
ஏசினை எனிலோ, இன்னும் அவனுள்
இயல்பாய் இருக்கும் உற்சா கத்தை
உத்வே கத்தைக் குலைத்தனை எனிலோ,
நித்தம் கடிந்தே அழித்தனை எனிலோ,
பெண்ணோ இலைவே றென்னே ஆயினும்

எண்ணா தெதுமுன் பல்லை உடைப்பேன்.

FAREED 
Do, father, break her teeth! She’s always scolding. 
Sometimes she beats me when you’re out. Do break them, 
I shall so laugh!

ALMUENE
My gamesome goblin!

ஃபரீது:

அப்பா அப்படிச் சொல்லப்பா - நீ
அப்படி யேஇனி செய்யப்பா!

சும்மா என்னைத் திட்டுகிறாள் - இந்த
அம்மா பல்லை உடைத்திடப்பா!

எங்கோ நீயும் சென்றிருந்தால் - இவள்
இங்கே கோபம் கொண்டவளாய்ச்

சிற்சில சமயம் அடிக்கின்றாள் - இவள்
பற்களை எல்லாம் உடைத்திடப்பா!

பார்த்துப் பல்லை உடைத்திட்டால் - நான்
ஆர்த்துச் சிரிப்பேன் அப்படியே!

அல்மியூன்:

வேடிக் கையாய்ப் பேசுமென் பிசாசே!

KHATOON

You prompt him 

To hate his mother; but do not lightly think 
The devil you strive to raise up from that hell 
Which lurks within us all, sealed commonly 
By human shame and Allah’s supreme grace, — 
But you! you scrape away the seal, would take 
The full flame of the inferno, not the gusts 
Of smoke jet out in ordinary men; — 
Think not this imp will limit with his mother 
Unnatural revolt! You will repent this.

Exit.

காத்தூனி:

தாயை வெறுக்கச் சேயைத் தூண்டும் தகப்பன்நீ;
பேயைப் பாழும் நரகில் இருந்தே ஈர்க்கின்றாய்,
நீயோ ஆனால், விளையாட் டாக நினைக்கின்றாய்,
தோயும் வெட்கம் தோன்றச் செய்யும் துகிலாலும்
நேயம் கொண்ட நிகரில் அல்லா அருளாலும்  
ஓய்ந்து நம்முள் உறங்கிக் கிடக்கும் குகையுடைய
வாயை உடைத்து வாவென் றழைத்தே எரிநரகாய்த்
தீயை அன்றோ திறந்து வெளியே விடுகின்றாய்
மாயும் மனிதர் வாயில் வீசும் புகையன்று; --
சேயின் இந்த இயற்கைக் கெதிராம் செயலிதுவே
மேயும் சொந்தத் தாய்மே லன்றி நில்லாது
பாயும் எங்கும்! பழியை நீயே ஏற்பாயே.

வெளியேறுகிறாள்.

சிவசூரி.
(தொடரும்)

Lalitha & Suryanarayanan

unread,
Oct 10, 2021, 7:46:23 PM10/10/21
to santhav...@googlegroups.com
பஸ்ஸோரா அமைச்சர்கள் 10

Act 1, Sc 2 continues....

FAREED 
Girl, father! such a girl! a girl of girls! 
Buy me my girl!

ALMUENE 
What girl, you leaping madcap?

ஃபரீது:

இப்பொழுதே பெண்ணொருத்தி இங்கெனக்கு வேண்டுமப்பா!
அப்படியோர் பெண்ணொருத்தி அப்பப்பா வேண்டுமப்பா!
எப்படியோ வாங்குமப்பா என்னழகுப் பெண்ணொருத்தி!

அல்மியூன்:

கொஞ்சியெழும்பும் பைத்தியமே, கொஞ்சம்சொல்லேன் யாரென்று?

FAREED 
In the slave-market for ten thousand pieces. 
Such hands! such eyes! such hips! such legs! I am 
Impatient till my elbows meet around her.

ஃபரீது:

அடிமைச் சந்தையில் கிடைக்கின்றாள்,
    அப்பா விலைபத் தாயிரந்தான்!
பிடித்துக் கையால் அணைத்திடவே
    பித்தம் தலைமேல் ஏறுதப்பா!

அப்படிப் பட்ட கைகளப்பா,
அப்படி யேதான் கால்களப்பா!
எப்படி யோஇடை இருக்குதப்பா!
செப்பிட முடியாக் கால்களப்பா!

ALMUENE 
My amorous wagtail! What, my pretty hunchback, 
You have your trophies too among the girls 
No less than the straight dainty Nureddene, 
Our Vizier’s pride? Ay, you have broken seals? 
You have picked locks, my burglar?

அல்மியூன்:

பெட்டைத் துணையைத் தேடும் பிறவி! - நீ
பெரிதாய் வாலை ஆட்டும் குருவி!
குட்டிக் கூனல் முதுகை ஏந்தி - என்றன்
கொஞ்சும் குமரா அடடா உனக்கே
எட்டித் தாவி நின்றுள வண்ணன் - அந்த
எழிலார் மந்திரி செருக்கின் சின்னம்
கட்டழ கான நூரெதீன் என்னும் - பெருங்
காளை உடனா காதற் போட்டி?

முட்டி மோதியே பெண்களின் இடையே - ஒரு
வெற்றித் தம்பம் நிறுவினை யோநீ?
பெட்டி உடைத்துக் கொணர்ந்தனை யோநீ? -  மிகப்
பெரிதாய்க் கன்னம் வைத்தனை யோநீ? 
வெட்டிப் பூட்டை உடைத்தனை யோநீ? - நீ
மேலாம் செல்வம் கொணர்ந்தனை யோநீ?
கொட்டிக் கிடக்கோ பெரும்பணம் இங்கே ? - என்
கொள்ளைக் காரன்நீ குவித்த(து) எங்கே?

FAREED

You have given me, 
You and my mother, such a wicked hump 
To walk about with, the girls jeer at me. 
I have only a chance with blind ones. ’Tis a shame.


ஃபரீது:

கொடுத்த(து) எனக்குநீ என்ன கொடுத்தாய் - ஒரு
கூனல் முதுகினைக் கூட்டிக் கொடுத்தாய்!
கெடுத்தனை நீயுமென் அம்மையு மாக - மிகக்
கெட்டதொர் கூனலைக் கொண்டு கொடுத்தாய்

கொண்டையும் கொண்ட முதுகைத் தூக்கி - நான்
கூனிக் குறுகி நடந்திடும் காட்சி
கண்டதைப் பெண்கள் நகைத்திடக் கண்டேன்! - எனைக்
காணா ததுபோல் ஒதுங்கலைக் கண்டேன்!

குருட்டுப் பெண்களை விட்டால் இங்கே - எனைக்
கூடிக் களிக்கக் கிடைப்பவர் யாரே!
விரட்டி அடித்திடும் பேரவ மானம் - பெரும்
வேதனை அன்றோ தருகிற(து) எனக்கே

சிவசூரி.

(தொடரும்)

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 10, 2021, 9:20:47 PM10/10/21
to santhav...@googlegroups.com
//அடிமைச் சந்தையில் கிடைக்கின்றாள்,
    அப்பா விலைபத் தாயிரந்தான்!
பிடித்துக் கையால் அணைத்திடவே
    பித்தம் தலைமேல் ஏறுதப்பா!

அப்படிப் பட்ட கைகளப்பா,
அப்படி யேதான் கால்களப்பா!
எப்படி யோஇடை இருக்குதப்பா!
செப்பிட முடியாக் கால்களப்பா!//

மொழிபெயர்ப்பு அருமையாகவும் சுவை குன்றாமலும் அழகாகச் செல்கிறது

                 -- தில்லைவேந்தன்





--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Oct 10, 2021, 9:43:42 PM10/10/21
to santhav...@googlegroups.com
தில்லை வேந்தரே, மிக்க நன்றி. பொழிபெயர்ப்பை மூலத்துடன் ஒப்பிட்டுப் படிப்பவர்கள் குறைவு. படித்துப் பின்னூட்டம் கொடுப்பவர்கள் மிகமிகக் குறைவே. எது எப்படி இருந்தாலும் நமது தலைவர் தகுந்த பின்னூட்டம் கொடுத்து அவ்வப்போது ஊக்குவிக்கும் சிறந்த பண்பை உடையவர்..  எனவே உங்களைப் போன்ற கவிஞர்களும் படித்துத் தமது கருத்தை உரைத்தால் எனக்கு உற்சாகம் பிறக்கிறது. திடீரென்று ஆயிரம் யானை பலம் வந்துவிடுகிறது. நன்றி வேந்தரே.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Oct 11, 2021, 9:26:03 PM10/11/21
to santhav...@googlegroups.com

பஸ்ஸோரா அமைச்சர்கள் 11

Act 1, Sc 2 continues...

ALMUENE 
How will you make your slavegirl love you, hunch?

FAREED 
She’ll be my slavegirl and she’ll have to love me.

ALMUENE 
Whom would you marry, hunchback, for a wager? 
Will the King’s daughter tempt you?

அல்மியூன்:

கொண்டை கொண்ட கூனா, உன்னைக்
   குவல யத்தொர் அடிமையே
கொஞ்சி காதல் செய்ய வைக்கக்
   கொஞ்சம் வழியும் அறிவையோ?
    
ஃபரீது:

அடிமை யென்று வந்த பின்னர்
    அன்பு காட்டல் வேலையே,
முடிவ தில்லை என்ப தொன்றும்
     முன்னம் நிற்ப தில்லையே.

அல்மியூன்:

கூலி வேலை செய்யும் பெண்ணைக்
    கூனன் உள்ளம் நாடுதோ?
ஆளும் வேந்தன் பெண்ணின் மீதும்

    ஆசை நெஞ்சில் வந்ததோ?

FAREED

Pooh! I’ve got 
My eye upon my uncle’s pretty niece. 
I like her.

ஃபரீது:

சீச்சீ!

அரசன் பெற்ற பெண்ணின் மீதில்
   ஆசை ஒன்றும் இல்லையே!
பெரிய மாமன் பெண்ணின் வண்ணம்
   பிள்ளை நெஞ்சில் மோதுதே!

ALMUENE 
The Vizier, my peculiar hatred! 
Wagtail, you must not marry there.

அல்மியூன்:

வாலை யாட்டும் கிள்ளையாகக் 
காலைச் சுற்றும் பிள்ளையே - நான்

கொள்ளை கொள்ளை யாய்வெறுப்பு 
   கொண்டேன்அந்த அமைச்சன்மேல்! - என்
பிள்ளை யந்த வீட்டில்நீ
   பெண்ணெடுப் பதில்லையே!

FAREED

I hate him too 
And partly for that cause will marry her, 
To beat her twice a day and let him know it. 
He will be grieved to the heart.

ALMUENE 
You’re my own lad.

ஃபரீது

கொள்ளை வெறுப்புக் கொண்டேன் அந்த
மந்திரி மேலென் மனத்தில் என்பதும்
காரணம் ஆமவள் கரத்தைப் பற்ற,.
நாளொரு தடவை ஓரிரு முறையே
நன்றாய் அடித்துப் போடுவேன் அவளை
நன்கவன் அதனை அறிந்திடச் செய்வேன்.
அங்கவன் இதயம் அருந்துயர் ஆழும் ! 

அல்மியூன்:

நான்பெற்ற செல்வம் நீதான் குமரா!

FAREED 
And then she’s such a nice tame pretty thing, 
Will sob and tremble, kiss me when she’s told, 
Not like my mother, frown, scold, nag all day. 
But, dad, my girl! buy me my girl!


ஃபரீது:

அவளோர் அழகுப் பதுமை அன்றியும்
அடங்கி ஒடுங்கிக் கிடப்பாள் இங்கே,
தேகம் நடுங்கத் தேம்புவாள் இங்கே,
முத்தம் கேட்டால் முத்தம் தருவாள்,
என்றன் அன்னையைப் போலவள் அல்லள்,
கடுகடு முகத்தைக் காட்டாள் அவளே,
கடுஞ்சொல் எதுவும் உதிர்க்காள் அவளே,
தொணதொண வென்றெனைப் பிடுங்காள் அவளே,
ஆனால் அப்பா, இப்போ தென்பெண்!
ஈங்கென் பெண்ணை வாங்குவீர் எனக்காய்!

ALMUENE

Come, wagtail. 
Ten thousand pieces! ’tis exorbitant. 
Two thousand, not a dirham more. The seller 
Does wisely if he takes it, glad to get 
A piastre for her. Call the slaves, Fareed.

அல்மியூன்:

இங்கே பாரென், எழில்வா லாட்டி!
ஒருபத் தாயிரம் காசுகள் என்றாய்!
அதுமிக அதிகம் என்றறிந் திடுவாய்!
அதிகம் போனால், ஆயிரம் இரண்டே,
அதற்கும் அதிகமொர் காசும் இல்லை!
அதுவே பெருந்தொகை அவளுக் கெனவே,
அறிவுடை யானவ் வாணிகன் என்றால்
ஏற்றுக் கொள்வான் அதனை மகிழ்ந்தே.
அடிமையை வரச்சொல் உடனே, ஃபரீது

FAREED 
Hooray! hoop! what a time I’ll have! Cafoor!

ஃபரீது:

ஆகா இன்பம், அடடா இன்பம்!
எப்படி இன்பில் திளைப்பேன் இனியே!
கஃபூர்! கஃபூர்!

கூப்பிட்டுக் கொண்டே வெளியேறுகிறான்.

சிவசூரி

(தொடரும்)

Lalitha & Suryanarayanan

unread,
Oct 12, 2021, 7:48:51 AM10/12/21
to santhav...@googlegroups.com
பஸ்ஸோரா அமைச்சர்கள் 12

Act 1, Sc 2 continues...

அமைச்சன் அல்மியூனின் தனிமொழி :

ALMUENE 
’Tis thus a boy should be trained up, not checked, 
Rebuked and punished till the natural man 
Is killed in him and a tame virtuous block 
Replace the lusty pattern Nature made. 

அல்மியூன்:

இவ்வா றன்றோ சிறுவன் ஒருவனைப்
பயிற்சிகள் தந்து பழக்கிட வேண்டும்.
தளதள வென்றுத் தத்தம் போக்கில்
வளரச் செய்திடும் இயற்கைக் கொடையினை
ஒருவனுள் இயல்பாய் உருவா குபவனை  
ஒவ்வா(து) இதுவென ஒடுக்குதல் செய்தும்
அவ்வா(று) அலவென அதட்டுதல் செய்தும்
தண்டனை தந்தே தடைபலச் செய்தும்
துணிவினைத் துறந்து பணிவுடை அணிந்து
ஒழுக்கம் இதுவென ஒடுங்கிடு வானாய்
உருவாக் கிடுதல் உலகுக்(கு) உதவா.

I do not value at a brazen coin 
The man who has no vices in his blood, 
Never took toll of women’s lips in youth
Nor warmed his nights with wine. Your moralists
Teach one thing, Nature quite another; which of these
Is likely to be right?

அல்லன அறியா ஆண்மகன் ஒருவனை,
வாலிப வயதில் மாதரின் இதழ்ச்சுவை
போதொரு போதும் சுவையா தானை,
இரவில் மதுவைப் பருகா தானை,
இத்தரை பித்தளைக் காசொன் றுக்கும்
நிகரெனக் கொள்ளேன் நெஞ்சினில் நானே.
சொல்வார் ஒருவழி நல்வழிப் போதகர்,
முற்றிலும் மற்றதை மொழியும் இயற்கை;
இவற்றுள் எதுவே இருக்கக் கூடும்
சரியாய் எனவே உரைப்பவர் எவரே?

 Yes, cultivate,
But on the plan that she has mapped. Give way,
Give way to the inspired blood of youth
And you shall have a man, no scrupulous fool,
No ethical malingerer in the fray;
A man to lord it over other men,
Soldier or Vizier or adventurous merchant,
The breed of Samson. 

எனவே,
பழக்கப் படுத்திக் கொண்டிட வேண்டும்
இயற்கை வரைபடம் இயம்பிடும் வழியே.
வழிவிடு, வழிவிடு, வாலிபக் குருதி
காட்டும் பாதையில் காலிட விடிலவண்
முழுதும் வளர்ந்த மனிதனே எழுவான்,
அஞ்சும் முட்டாள் அங்குரு வாகான்;
ஆசா ரம்மேற் கூசாப் பழிசொலிக்
கடமையைத் துறக்கும் மடத்தடம் தோன்றா;
தலைவன் ஒருவன் தலையெடுத் திடுவான்,
வீரம் விளைக்கும் சூர தீரனோ,
அறிவுரை பகரும் அமைச்சன் ஒருவனோ
துணிகர மான வணிகன் ஒருவனோ
மாவலி படைத்த சாம்சனின் வமிசத்
தோன்றலாய் ஒருவன் தோன்றிடக் கூடும்.


Man with such youth your armies.
Of such is an imperial people made
Who send their colonists and conquerors
Across the world, till the wide earth contains
One language only and a single rule.
Yes, Nature is your grand imperialist,
No moral sermonizer. 

அதுபோல் இளைஞரை அல்லவோ நமது
சேனை தன்னில் சேர்த்திட வேண்டும்.
மேன்மை மிக்க மானிட ராக
அரசனின் குலமே அமைந்திடும் ஆங்கே,
நாடுகள் விட்டவர் நாடுகள் நாடி
குடிபுகுந் தங்கே கோலோச் சிடுவார்,
திக்கெலாம் செல்வார், தேசங்கள் வெல்வார்,
உலகெலாம் கொணர்வார் ஓர்குடைக் கீழே,
ஒருமொழி உலவும் உலகதன் மொழியாய்.
தேசங் கட்கோர் சீரார் அதிபதி
ஆகவே அமையும் இயற்கை ஒன்றே,
நன்னெறி சொல்பவர் அந்நிலை அடையார்.

Rude, hardy stocks
Transplant themselves, expand, outlast the storms
And heat and cold, not slips too gently nurtured
Or lapped in hothouse warmth. 

மோதிடும் முரட்டுத் தனமுடை யாரும்
இரும்பினை ஒத்தரும் இடத்திற் கேற்ப,
மாற்றிக் கொள்வர் ஏற்றவ ராக,
பரப்புவர் இனத்தைப் பாரகம் எங்கும்,
கோடையும் குளிரும் வாடையும் புயலும்
சாய்த்திட இயலா வலிவாய்த் திருப்பார்,
அவர்களே அன்றி, அன்புடன் வீட்டில்
மென்மையாய்க் கனிவாய் செந்தளிர் போலே
பேணப் பட்ட பிள்ளைகள் அல்லர்,
இல்லச் சூட்டின் இதந்தரு மடியில்
சுகமாய் இருந்தே மகிழ்ந்தவர் அல்லர்.

Who conquered earth

For Islam? Arabs trained in robbery,
Heroes, robust in body and desire.
I’ll get this slavegirl for Fareed to help
His education on. Be lusty, son,
And breed me grandsons like you for my stock.

Exit. 

இஸ்லாத் துக்காய் இப்புவி யெல்லாம்
வென்று கொணர்ந்த வீரர்கள் யாரே?
கொள்ளைத் தொழிலைக் குறைவிலா(து) உணர்ந்து
கற்றத் துறைவழி பற்றிப் படர்ந்த
அரபியர் அன்றோ ஆக்கினர் அதனை?
குன்றனை மேனியும் குன்றா வெறியும்
கொண்டநல் வீரர் கொடையது வாமே.
மண்ணிதில் இந்த அடிமைப் பெண்ணைப்
பறித்துக் கொணர்வேன் ஃபரீதுக் கென்றே,
பாடம் தொடர்ந்திவன் படித்திட வெனவே.
வைரம் பாய்ந்த மேனிய னாகத்
திகழ்வாய் என்றன் சீரார் மகனே,
பெருக்கென் இனத்தை, பேரப் பிள்ளைகள்
நன்கெனக்(கு) அளிப்பாய் நின்னைப் போலே.

வெளியேறுகிறான்.

திரை.

சிவசூரி.

இத்துடன் அங்கம் 1, களம் 2 நிறைகிறது.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 12, 2021, 10:13:18 AM10/12/21
to santhav...@googlegroups.com

ஶ்ரீஅரவிந்தரின் படைப்பைக் கவிதை  நயத்துடன் மொழிபெயர்ப்பது என்பது மாபெரும் சாதனை.
தாங்கள் மிக அருமையாகச் செய்து வருகிறீர்கள்.

எனக்கு மொழிபெயர்ப்பில் ஆர்வம்  கொஞ்சம் அதிகமாக இருப்பதால் அழகான மொழிபெயர்ப்பை மீண்டும், மீண்டும் பாராட்டத் தோன்றுகிறது
                 — தில்லைவேந்தன்




Lalitha & Suryanarayanan

unread,
Oct 12, 2021, 11:00:58 AM10/12/21
to santhav...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி, வேந்தரே. நன்றி.

சிவசூரி.

Ramamoorthy Ramachandran

unread,
Oct 12, 2021, 7:37:58 PM10/12/21
to Santhavasantham
என்னை பிரமிப்பில் தள்ளி எங்கேயோ இழுத்தடிக்கின்றது, சூரியின் சுவைக் காவியம்! படிக்கிறேன்,  படிப்பேன்!
- புலவர் இராமமூர்த்தி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Oct 12, 2021, 8:02:00 PM10/12/21
to santhav...@googlegroups.com
அன்புள்ள புலவர் பெருமானே, எனக்கு வேறென்ன வேண்டும். மிக்க நன்றி. வணக்கம்.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Oct 12, 2021, 8:06:30 PM10/12/21
to santhav...@googlegroups.com
இனிமேல் இட இருக்கும் காட்சிகளை முடிந்த அளவு சுருக்கி உங்களுடன் பகிர விழைகிறேன். ( எதை விடுவது எதை இடுவது என்று நிர்ணயிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.) இப்போது அடிமைச் சந்தையில் நுழைந்துவிட்டோம். அங்கே வியாபாரம் மும்முரமாக நடைபெறுகிறது. அஜிபு பால்கிஸ், மைமூனா என்னும் இரு சகோதரிகளை அடிமைகளாக வாங்கிச் செல்கிறான். அமைச்சர் இபின் ஸாவி சந்தைக்குள் நுழைகிறார்...
- சூரி.

பஸ்ஸோரா அமைச்சர்கள் 13

Act 1, Sc 3

AZIZ
The Vizier!

Enter Ibn Sawy.

ABDULLAH

Noble Alfazzal! There will be
Good sales today in the market, since his feet
Have trod here.

MERCHANTS
Welcome, welcome, noble Vizier.

IBN SAWY
The peace be on you all. I thank you, sirs.
What, good Abdullah, all goes well at home?

ABDULLAH
My brother’s failed, sir.

IBN SAWY

Make me your treasurer.
I am ashamed to think good men should want
While I indulge in superfluities.
Well, broker, how’s the market? Have you slaves
That I can profit by?

MUAZZIM

Admired Vizier,
There’s nothing worth the kindness of your gaze.
Yet do but tell me what you need, I’ll fit you
With stuff quite sound and at an honest price.
The other brokers are mere pillagers,
But me you know.


அஜீஸ் :

மந்திரி வருகிறார் !

இபின் ஸாவி நுழைகிறார்.

அப்துல்லா :

வந்தனர் மேதகு அல்ஃபஸல் அன்றோ!
சந்தையில் அவரது பாதம் பட்டதால்
நல்லதோர் விற்பனை இன்றெதிர் பார்க்கலாம்.

வாணிகர்கள் :

வருக வருகவே, மேதகு மந்திரி !

இபின் ஸாவி :

அனைவர் நெஞ்சிலும் அமைதி நிலவுக !
ஐயன் மீரே, உமக்கென் நன்றி.
அன்புடை யீரே,  அப்துல்லா உங்கள்
மனையில் அனைவரும் நலமாய் உளரா?

அப்துல்லா :
  
தோற்றனன் நிதியைச் சோதரன், ஐயா.

இபின் ஸாவி :

இனிநிதித் தேவையை எம்மிடம் விடுக.
பற்றாக் குறையால் உற்றனர் துன்பம்
நல்லவர் நாட்டில் எனநான் நெஞ்சில்
வெட்கப் பட்டேன் வீணே அடநான்
ஆடம் பரத்தில் ஆழ்ந்திருக் கையிலே.
தரகரே, சந்தையின் நிலவரம் எப்படி ?
எமக்குப் பயன் தரும் படியாய்  அடிமையர் 
உம்மிடம் உளரா?

முவாஸீம்:

போற்றப் படுகிற புகழுடை அமைச்சரே,
ஏற்றதாய் ஒன்றும் எம்மிடம் இல்லை
கனிந்தவும் பார்வையில் காட்டிடும் படியாய்  
இருந்தும் உரைப்பீர் வேண்டுவ தெதுவோ,
தேவைக் கேற்பத் தேடிப் பிடித்து
நேர்மையாய் உமக்குப் பார்த்துநான் தருவேன்.

IBN SAWY

If there’s an honest broker,
You are that marvel, I can swear so much.
Now pick me out your sweetest thing in girls,
Perfect in beauty, wise as Sheban Balkis,
Yet more in charm than Helen of the Greeks,
Then name your price.

இபின் ஸாவி :

இச்சகத்தில் நாணயமாய் ஒருதரகர் உண்டென்றால்
நிச்சயமவ் வதிசயமே நீரேதான் என்றுரைப்பேன்.
கன்னலென உம்மிடையே காண்கின்ற பெண்களிலே
இன்னமுதாய் மாசின்றி மின்னுகின்ற எழிலுடனே
ஞானத்தில் ஷேபானு பால்கிஸியைத் தானொத்தே
ஈர்ப்பதிலே கிரேக்கநாட்டு ஹெலனைவிடச் சிறந்தாளாய்ப்
பார்த்தெடுத்து முதலில்நீர் காட்டிடுக கண்ணெதிரில்,
செப்பிடுவீர் அதன்பின்னே செவிமடுக்க உம்விலையை.

MUAZZIM

I have the very marvel.
You shall not see her equal in a century.
She has the Koran and the law by heart;
Song, motion, music and calligraphy
Are natural to her, and she contains
All science in one corner of her mind;
Yet learning less than wit; and either lost
In the mere sweetness of her speech and beauty.
You’ll hardly have her within fifteen thousand;
She is a nonpareil.

முவாஸீம்:

அப்படியோர் அற்புதமும் அடியேன்பால் உளதய்யா.

கண்டேகிய நூற்றாண்டும் கண்டறியா நிகரொன்றும்.
கொண்டேத்தும் குரான்நீதி குடிகொண்ட இதயத்தாள்;
பண்தேய்த்த பாவறிவாள், பதமறிவாள் இசையறிவாள்
வண்ணமிகு எழுத்துகளின் வடிவறிந்த விரலுடையாள்
மண்ணேத்தும் இவையறிவாள் மங்கையிவள் இயல்பாக;
விதவிதமாய் விஞ்ஞானம் விளங்குமனம் ஒருபக்கம்
மதுரமொழி இதழ்முன்னே மங்கையவள் எழில்முன்னே
எதுவுந்தான் நில்லாதாள், எங்குமிணை இல்லாதாள்;
பதினைந்தே ஆயிரங்கள் பாவையவள் உமதாவாள்.

IBN SAWY
It is a sum.

MUAZZIM
Nay, see her only. Khalid, bring the girl.

Exit Khalid.

இபின் ஸாவி :

தொகைபெருந் தொகையாகும்.

முவாஸீம்:

பார்த்தால் தானே பகர்ந்திட முடியும்.
கொண்டுவா, காலிது, பெண்ணவள் தன்னை.

காலிது வெளியேறுகிறான்.








Subbaier Ramasami

unread,
Oct 13, 2021, 8:42:52 PM10/13/21
to santhavasantham
Oh always clamour, clamour! 
I had been happier bedded with a slave
Whom I could beat to sense when she was froward.

போதும் ஓயா(து) உன்றன் ஒப்பாரி!
அடிமையாய் இருந்தே அடங்கா(து) இருந்தால்
அடித்துப் பணிந்திட வைத்திருப் பேனே.
திருமணம் அடிமையைச் செய்திருந் தாலே
இல்லறம் மகிழ்வாய் இருந்திருக் குந்தான்.

போதும் ஓயாது உன்றன் ஒப்பாரி-    மிக அருமை.
உன்னை மணந்தேனே ஓரடிமையை மணந்திருந்தால்   என்று பொருள்வர அமைத்திருக்கலாம். கடைசி அடி தேவை இல்லை.




ஏற்றதொரு துணையெனவே ஏற்றுவந்தேன், என்சொல்வேன்!   என்செய்வேன் என்றால் இன்னும் சிறக்கும்

குதித்துக் கொண்டும் சுற்றிக் கொண்டும் ஃபரீது நுழைகிறான்---  சுற்றிக்கொண்டும் சரியில்லை-  குதித்துக்கொண்டும் சுழன்றாடிக்கொண்டும் என்றிருக்கலாம்



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Oct 13, 2021, 8:54:01 PM10/13/21
to santhavasantham
பேசினை  எனிலென்- எனிலோ

பெண்ணோ இலைவே றென்னே ஆயினும்- இங்கே லேடி என்பது அவளது உயர்பிறப்பைச் சுட்டும். நீ உயர் குடியில் பிறந்தவளோ அல்லது இல்லையோ அதாவது சீமாட்டியோ சீமாட்டி இலையோ  எனுமாறு வரும்  

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Oct 13, 2021, 10:20:02 PM10/13/21
to santhav...@googlegroups.com
தலைவருக்கு என் உளமார்ந்த நன்றி.  அப்படியே மாற்றங்கள் செய்து விட்டேன்:

1)
போதும் ஓயா(து) உன்றன் ஒப்பாரி!
அடிமையாய் இருந்தே அடங்கா(து) இருந்தால்
அடித்துப் பணிந்திட வைத்திருப் பேனே.
திருமணம் அடிமையைச் செய்திருந் தாலே
இல்லறம் மகிழ்வாய் இருந்திருக் குந்தான்.

உன்னை மணந்தேனே ஓரடிமையை மணந்திருந்தால்   என்று பொருள்வர அமைத்திருக்கலாம். கடைசி அடி தேவை இல்லை.
போதும் ஓயா(து) உன்றன் ஒப்பாரி!
அடிமையாய் இருந்தே அடங்கா(து) இருந்தால்
அடித்துப் பணிந்திட வைத்திருப் பேனே.
உன்னை விடுத்தோர் அடிமை தன்னை
மணம்செய் திருந்தால் மகிழ்ந்திருப் பேனே.

2)
ஏற்றதொரு துணையெனவே ஏற்றுவந்தேன், என்சொல்வேன்!
என்பதை
ஏற்றதொரு துணையெனவே ஏற்றுவந்தேன், என்செய்வேன்!

3)

குதித்துக் கொண்டும் சுற்றிக் கொண்டும் ஃபரீது நுழைகிறான்---  சுற்றிக்கொண்டும் சரியில்லை-  குதித்துக்கொண்டும் சுழன்றாடிக்கொண்டும் என்றிருக்கலாம்

அப்படியே ' சுழன்றாடிக் கொண்டும் 'என்று மாற்றிக் கொண்டுவிட்டேன்.

4)

பேசினை  எனிலென்- எனிலோ

பெண்ணோ இலைவே றென்னே ஆயினும்- இங்கே லேடி என்பது அவளது உயர்பிறப்பைச் சுட்டும். நீ உயர் குடியில் பிறந்தவளோ அல்லது இல்லையோ அதாவது சீமாட்டியோ சீமாட்டி இலையோ  எனுமாறு வரும்  


இன்னும் ஒருமுறை பெண்ணே இதுபோல்
பேசினை  எனிலென் வீரப் பையனை,
ஏசினை எனிலோ, இன்னும் அவனுள்
இயல்பாய் இருக்கும் உற்சா கத்தை
உத்வே கத்தைக் குலைத்தனை எனிலோ,
நித்தம் கடிந்தே அழித்தனை எனிலோ,
பெண்ணோ இலைவே றென்னே ஆயினும்

எண்ணா தெதுமுன் பல்லை உடைப்பேன்.

இன்னும் ஒருமுறை பெண்ணே இதுபோல்
பேசினை  எனிலோ வீரப் பையனை,
ஏசினை எனிலோ, இன்னும் அவனுள்
இயல்பாய் இருக்கும் உற்சா கத்தை
உத்வே கத்தைக் குலைத்தனை எனிலோ,
நித்தம் கடிந்தே அழித்தனை எனிலோ,
உயர்குடி தனில்நீ பிறந்தவள் தானோ
அல்லதோர் உயர்குடி இல்லை தானோ
உன்றன் பல்லை எல்லாம் உடைப்பேன்.

மீண்டும் நன்றி.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Oct 13, 2021, 10:26:28 PM10/13/21
to santhav...@googlegroups.com

பஸ்ஸோரா அமைச்சர்கள் 14

Act 1, Sc 3 continues...

MUAZZIM
Nay, see her only. Khalid, bring the girl.

Exit Khalid.

I should not ask you, sir, but has your son
Authority from you to buy? He has
The promise of a necklet from me.

IBN SAWY
A necklet!

முவாஸீம்:

பார்த்தால் தானே பகர்ந்திட முடியும்.
கொண்டுவா, காலிது, பெண்ணவள் தன்னை.

காலிது வெளியேறுகிறான்.

உங்களைப்போய் இப்படியோர் கேள்வியெதும் கேட்பதுவோ,
இங்குவந்து வாங்குதற்கே உங்களரும் மைந்தர்க்கே
உரிமையெதும் அளித்ததுவும் உண்டோதான் என்றிங்கே?
மங்கையரின் கழுத்தினிலே மணியாரம் இடுவதற்கும்
இங்குவந்து வாக்கொன்று என்னிடமே பெற்றுளனே.

இபின்ஸாவி :

மணியாரம் !

MUAZZIM
A costly trifle. “Send it to such an house,”
He tells me like a prince, “and dun my father
For the amount. I know you’ll clap it on
As high as Elburz, you old swindler. Fleece him!”
He is a merry lad.

முவாஸீம் :

அற்பசொற்ப பொருள்தான், ஆயின்பெரும் செலவேதான்.
அப்படியோர் மனைபார்த்தே அனுப்பிடுக அதையென்றே
இப்படியோர் கோமகன்போல் எனக்காணை இடுகின்றான்.
மலைபோலே விலைசொல்லும் கலையறிந்தே என்தந்தை
தலைமேலே ஏற்றுகின்ற தனித்திறமை கொண்டோய்நீ
வட்டிக்கு விட்டதுபோல் வசூல்செய்வாய் என்கின்றான்!
இட்டம்போற் கொள்ளையடி, ஏகிழவா, என்கின்றான்!
கட்டழகுக் காளையவன் களிப்பினிலே மிதக்கின்றான்.

IBN SAWY

Fleece me! The rogue!
The handsome naughty rogue! I’ll pull his curls for this.
The house? To whom is it given?

MUAZZIM

Well, sir, it is
A girl, a dainty Christian. I fear she has given
Something more precious far than what he pays her with.

IBN SAWY
No doubt, no doubt. The rogue! quite conscienceless.
I’m glad you told me of this. Dun me! Well,
The rascal’s frank enough, that is one comfort;
He adds no meaner vices, fear or lying,
To his impetuous faults. The blood is good
And in the end will bear him through. There’s hope.
I’ll come, Muazzim.

Exit.

இபின் ஸாவி: 

எனைக்கொள்ளை யடிப்பதுவா! போக்கிரிப் பையனிவன் !
கட்டழகுக் குறும்பனுடை கயவாளித் தனமேதான்!
இற்றைக்கே இழுத்திடுவேன் பற்றியிவன்  சுருள்முடியை.
மனைக்கனுப்பச் சொன்னானா ?அனுப்பிய(து) எவருக்கோ?

முவாஸீம்:

போகட்டும் அதுவய்யா.
சின்னஞ்சிறு பெண்ணொருத்தி,சிங்காரக் கிறித்துவச்சி.
பையன்தரும் பரிசைவிட மேலான ஏதோதான்
தையவலள் தந்துள்ளாள், சந்தேகம் இல்லையிதில்

இபின் ஸாவி:

சந்தேகம் இல்லைதான், சந்தேகம் இல்லைதான்.
பொல்லானோர் போக்கிரிதான்! இல்லானோர் மனச்சாட்சி!
எல்லாம்நீர் சொன்னதுவே நல்லதெனக் கொள்கின்றேன்.
என்னிடமே வசூலிக்கச் சொன்னானா! அதுகிடக்கட்டும்,
போக்கிரியே வெளிப்படையாய் உளதாலோர் ஆறுதலே;
வாக்கினிலே இழிந்தபெரும் பொய்யச்ச வழுக்களில்லை,
ஆக்குகின்ற பிழையெல்லாம் ஆராயாச் செயலாகும்.
தேக்குகின்ற செங்குருதி தெளிந்துபின் முடிவினிலே
சேர்க்கும்நல் இடமென்றோர் திடமான உறுதியுண்டே.
பார்க்கலாம் பின்னோர்நாள், வருகிறேன், முவாஸீம்.

வெளியேறுகிறான்.

MUAZZIM

The son repeats the father,
But with a dash of quicker, wilder blood.
Here’s Khalid with the Persian.

Enter Khalid with Anice-aljalice.

Khalid, run
And call the Vizier; he was here just now.

Exit Khalid. Enter Almuene, Fareed and Slaves.

முவாஸீம்:

முன்னம் செய்தான் தந்தை என்றால்
பின்னம் செய்வான் மைந்தன், அதனைச்
சட்டென வேகம் தான்மகன் செய்வான்,
கட்டுக்(கு) அடங்காக் காளையர் இரத்தம்..
இதோபார் காலி(து) இங்கே வருகிறான்
அதோவப் பெர்ஷிய அழகியின் உடனே.


அனீஸி - அல்ஜாலிஸுடன் காலிது நுழைகிறான்.

வேகம், காலிது,,வேகம் ஓடேன்,
இதுவரை இங்குதான் இருந்தார் அமைச்சர்.
அழைத்து வாநீ அவரை உடனே!

காலிது வெளியேறுகிறான். அல்மியூன், ஃபரீது, அடிமைகள் நுழைகிறார்கள்.

சிவசூரி.

(தொடரும்)

Lalitha & Suryanarayanan

unread,
Oct 14, 2021, 11:39:24 PM10/14/21
to santhav...@googlegroups.com

பஸ்ஸோரா அமைச்சர்கள் 15

Act 1, Sc 3 continues...

Exit Khalid. Enter Almuene, Fareed and Slaves.

காலிது வெளியேறுகிறான். அல்மியூன், ஃபரீது, அடிமைகள் நுழைகிறார்கள்.

FAREED
There she is, father; there, there, there!

ALMUENE
You deal, sir? I know you well. Today be more honest than is
your wont. Is she bid for?

MUAZZIM (aside)
Iblis straight out of Hell with his hobgoblin! (aloud)Sir, we are
waiting for the good Vizier, who is to bid for her.

ALMUENE
Here is the Vizier and he bids for her.
Two thousand for the lass. Who bids against me?

ஃப்ரீது :

அங்கே இருக்கிறாள் அவளப்பா , அங்கே அங்கே அங்கப்பா !

அல்மியூன்:

அவள் உங்கள் பொருள் தானே?  நன்றாய் உம்மை நானறிவேன். இன்றாவது உமது பேராசையை விடுத்துவிட்டு நியாயமாய் இருப்பீர். ஏலத்தில் உள்ளவள் தானே அவள் ?

முவாஸீம் ( தனக்குள்)

நரகத்திருந்து சைத்தான் நேரே இங்கே வந்துவிட்டது, 
தனது குட்டிப் பிசாசோடு ! ( சத்தமாக ) ஐயா, அந்த நல்ல அமைச்சர்  இவளை வாங்குவதற்கு இங்கே வருகிறார், நாங்கள் அவருக்காகக் காத்திருக்கிறோம்.

அல்மியூன்:

அமைச்சனே இங்கே வந்துளான் நேரில்.
ஏலத் திவளை எடுக்கிறான் பாரும்.
எண்ணி ஈர் ஆயிரம் சின்னப் பெண்விலை.

கூவுவார் உண்டோ எனக்கும் எதிரே ?

MUAZZIM
Vizier Almuene, you are too great to find any opposers, and you
know it; but as you are great, I pray you bid greatly. Her least
price is ten thousand.

முவாஸீம்:

அமைச்சர் அல்மியூன் அவர்களே, உம்மை எதிர்க்க ஒருவரும் இல்லாத அளவுக்கு நீர் அவ்வளவு பெரியவர், அதை நீரும் அறிவீர், பெரிய மனிதராக நீர் இருப்பதால் நீர் கூவும் விலையும் அதற்கேற்பப் பெரிதாக இருக்க வேண்டுகிறேன். அவளது குறைந்தபக்ஷ விலை பத்தாயிரம்.

ALMUENE
Ten thousand, swindler! Do you dare to cheat
In open market? two thousand’s her outside.
This spindly common wench! Accept it, broker,
Or call for bids; refuse at your worst risk.

அல்மியூன் :

பத்தா யிரமா பகர்கின் றாய்நீ,
பட்டப் பகலில் கொள்ளை யடிக்கிறாய் !
எல்லோர் முன்னும் ஏமாற்று வேலையா?
இரண்டா யிரமே இவளுக்(கு) அதிகம்.
மெலிந்து கிடக்கும் வேலைக் காரி!
ஏற்றுக் கொள்ளிதைத் தரகா, ஏற்றிடு,
இலையேல் இவளை ஏலத்தில் விடுக;
மறுத்தால் விளைவுகள் மோசமாய் இருக்கும்.

MUAZZIM
It is not the rule of these sales. I appeal to you, gentlemen.
What, do you all steal off from my neighbourhood? Vizier, she
is already bespoken by your elder, Ibn Sawy.

முவாஸீம்:

இந்த வியாபாரத்தின் விதிமுறை அப்படி யில்லை. கனவான்களே, உங்களை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.எங்கள் பேட்டைக்கு வந்து என்னிடம் இருந்து நீங்கள் கவர்ந்து சென்றுவிடுவீர்களா? அமைச்சரே, உங்களின் மூத்தவர் இபின் ஸாவி அவர்கள் தமக்கு அவள் வேண்டுமென்று கேட்டிருக்கின்றார்.

ALMUENE
I know your broking tricks, you shallow rascal.
Call for more bids, you cheater, call for bids.

அல்மியூன்:

தரகுத் தொழிலைத் திறம்படச் செயுமுன்
சூது வாதும் முற்றும்நான் அறிவேன்.
போதும் போதும் பொல்லா மூடனே,
ஏலத்தில் விட்டிடு, மேலும் விலைகள்
கூவிடு கூவிடு மோசக் காரா.

MUAZZIM
Abuse me not, Almuene bin Khakan! There is justice in Bassora
and the good Ibn Sawy will decide between us.

ALMUENE
Us! between us! Thou dirty broking cheat,
Am I thy equal? Throw him the money, Nubian.
But if he boggle, seize him, have him flat
And powerfully persuade him with your sticks.
You, beauty, come. What, hussy, you draw back?

முவாஸீம் :

திட்டித் தீர்க்காதீர், அல்மியூன் பின் காக்கா! பஸ்ஸோராவில் நீதியென்று ஒன்று இருக்கிறது. நல்லவர் இபின் ஸாவி நம்மிடையே உள்ள சச்சரவைத் தீர்த்துவைப்பார்.

அல்மியூன் :

நமதென் றுரைத்தாய் நம்மிடை என்றாய்!
ஒன்றாய் வைத்தாய் உன்னையும் என்னையும் ?
ஏய்க்கும் தரகன் எனக்குநீ நிகரோ ?
காசை எறிடா நுபியா, அந்தக்
கயவனின் மூஞ்சியில் காசை எறிடா!
பேராசை கொண்ட பித்தனாய் மறுத்தால்
காலையும் கையையும் கட்டிப் போடு!
தோலையுன் கழியால் தொட்டுத் தழுவு!
கோலால் கம்பால் குத்திக் கிழியுடல்!
பலபேர் எதிரில் பாடம் புகட்டிடு.
அடிக்கும் அடிக்கவன் அடங்கிட வேண்டும்!
கொடுக்கும் காசைக் கொண்டுபோ கட்டும்!

மயக்கும் மங்கையே வாடீ பின்னே,
தயக்கம் என்னடி தாசி யுனக்கே!

FAREED
Father, let me get behind her with my horse-tickler. I will trot
her home in a twinkling.

ஃபரீது :

அப்பன் எங்கள் அப்பன் அவளை நானே அழைத்து வருவேன்.
குத்திக் குத்தி அவளை இன்பம் கொள்ளும் வண்ணம் கொஞ்சி

வீடு நோக்கி ஓட்டிக் கொண்டு வேகம் வந்து சேர்வேன்.

MUAZZIM
This is flat tyranny. I will appeal
To the good Vizier and our gracious King.

முவாஸீம்:

கொடுமை கூடிய கொடுமையில் கொடுமை.
அந்தநல் மந்திரிமுன் ஆளும்நம் அரசர்முன்
முறையிடு வேன்நான்.

ALMUENE
Impudent thief! have first thy punishment
And howl appeal between the blows. Seize him.

Enter Khalid with Ibn Sawy.

அல்மியூன்:

அடிபணிந் தறியாத் திருடா ! உனக்குத்
தண்டனை முதலில் தந்திட வேண்டும்
அடியுதை இடைநீ அலறிடும் ஊளை
விண்ணப் பமாக விளங்கிடும் அதுவே.
கயமகன் இவனைக் கட்டிப் போடடா!

இபின் ஸாவியுடன் காலிது நுழைகிறான்.

MUAZZIM
Protect me, Vizier, from this unjust man,
This tyrant.

IBN SAWY
What is this?

முவாஸீம்:

காக்க காக்க, அமைச்சரே காக்க,
நோக்குவீர் இவர்செயும் அநியா யத்தை,
இவர்மிகக் கொடியர்.

இபின் ஸாவி :

ஈதென் ஆயிற்று ?

MUAZZIM

He takes by force
The perfect slavegirl I had kept for you,
And at a beggarly, low, niggard’s price
I’ld not accept for a black kitchen-girl;
Then, when I named you, fell to tyrant rage,
Ordering his slaves to beat me.

IBN SAWY
Is this true,
Vizier?

முவாஸீம்:

ஆள்படை காட்டி அபகரிக் கின்றார்.
மாசிலா அந்த அடிமை மங்கையை,
உங்களுக் கென்றே வைத்திருந் தவளை,
கஞ்சமா கஞ்சத் தனத்தைக் காட்டிப்
பிச்சை போலெறிந்து பிடித்துப் போகிறார்..
அடுக்களை கிடக்கும் கருப்புப் பெண்ணையும்
அப்படி யோர்மிக  அற்ப விலைக்குநான்
விற்றிட மாட்டேன். மற்றொன்(று) உரைப்பேன்.
உங்கள் பெயரை உரைத்ததும் சினத்தின்
உச்சியில் ஏறி, குச்சியால்  என்னை
அடித்திட அடிமையர்க்(கு) ஆணை இடுகிறார்..

இபின் ஸாவி :

மெய்யோ இதுவே மந்திரி ?

ALMUENE

Someone beat out my foggy brains!
I took it for a trick, a broker’s trick.
What, you bespoke the girl? You know I’ld lose
My hand and tongue rather than they should hurt you.
Well, well, begin the bidding.

அல்மியூன்:

என்றன் புந்திக் கெட்டா வண்ணம்
எவரோ ஏதோ செய்வதாய் நினைத்தேன்!
என்னை ஏய்த்திட வேண்டியே இங்கே
தரகர் ஒருவர்செய் தந்திர மாகக்
கொண்டேன் அதைநான். உண்மையில் நீங்கள்
பெண்ணவள் பற்றிப் பேசியுள் ளீரா ?
உமக்கோர் துன்பம் உண்டாக் கிடுமே
என்றன் கரமும் என்றன் நாவும்
என்றால் அவற்றை இழக்கவும் நானே
தயங்கேன் என்பதைத் தாமறி வீரே.
நல்லது, நல்லது,,தொடங்குக ஏலம்!

சிவசூரி

(தொடரும்)

Lalitha & Suryanarayanan

unread,
Oct 16, 2021, 1:22:43 AM10/16/21
to santhav...@googlegroups.com
பஸ்ஸோரா அமைச்சர்கள் 16

Act 1, Sc 3

BN SAWY

First, a word.
Vizier, this purchase is not for myself;
’Tis for the King. I deem you far too loyal
To bid against your master, needlessly
Taxing his treasuries. But if you will,
You have the right. By justice and the law
The meanest may compete here. Do you bid?

இபின் ஸாவி :

முதலிலோர் வார்த்தை.
iஈங்குநான், அமைச்சரே,வாங்கிட வந்ததோ
எனக்கென இலையது, வேந்தர்க் காக.
அரசரின் சேவையில் ஆழ்ந்துள உம்மை
உங்களின் நேர்மை ஒருபொழு தேனும்
தலைவர்க் கெதிராய் ஏலம் கூவி 
வேந்தரின் நிதியை வீணாக் காதென
நம்புகி றேனேஉறுதியாய் நானே.
ஆனால் நீங்கள் அதைவிழைந் தெடுத்தால்
உங்கள் விருப்பமே உங்கள் உரிமை.
மிகமிக இழிந்தவர் எவரே அவரே
நியாயப் படியும் சட்டப் படியும்
கூறலாம் விலையை. கூறுகின் றீரா?

ALMUENE (to himself )
He baulks me everywhere. (aloud) The perfect slavegirl?
No, I’ll not bid. Yet it is most unlucky,
My son has set his heart upon this very girl.
Will you not let him have her, Ibn Sawy?

அல்மியூன் (தனக்குள்)

எங்குநான் செலினும் அங்கிவன் தடையே.
(சற்று இரைந்து)
மாசிலா அடிமை மகளாம் அவளையா?
இலையிலை அதில்நான் நுழையேன். எனினும்
அடிமையாம் இந்தநல் லழகியின் மேல்தான்
இதயமே வைத்துளான் என்மகன் என்பதே
மிகஅவப் பேறாய் ஆகுமே எனக்கு.
அவனே அவளை அடைவதை என்ன
அனுமதி யீரா, இபின்ஸாவி நீரே ?

IBN SAWY
I grieve that he must be so disappointed,
But there’s no help. Were it my own dear son
And he should pine to death for her, I would not
Indulge him here. The King comes first.

இபின் ஸாவி:

ஏமா றுவானே இவனென வருத்தம்.
எனினும் அதனைத் தவிர்த்திட வழியிலை.
ஒருகால் என்றன் உயிரினைப் போலுமென்
மைந்தனே அவள்மேல் மையல் கொண்டே
இலையவள் என்றால் இறப்பேன் எனினும்
என்மகன் தனக்கிடம் கொடுத்திட இயலேன்.
மன்னரின்  தேவையே முன்னம் நிற்குமே.

ALMUENE
Quite first.
Well, shall I see you at your house today?

IBN SAWY
State business, brother?

ALMUENE
Our states and how to join
Their link`

ed loves yet closer. I have a thought
Touching Fareed here and your orphaned niece.

IBN SAWY
I understand you. We will talk of it.
Brother, you know my mind about your boy.
He is too wild and rude; I would not trust
My dear soft girl into such dangerous hands,
Unless he showed a quick and strange amendment.

அல்மியூன்:

முற்றிலும் அவர்க்கே முதன்மை ஆகுமே.
.நல்லது,
இன்றுங்கள் இல்லம் நான்வர லாமா?

இபின் ஸாவி:

நாட்டின் வேலையைப் பேசவா, சோதர ?

அல்மியூன்:

நம்வீட்டு  வேலையைப் பேசவே தானது.
இனிதவள் நெஞ்சம், இனிதிவன் நெஞ்சம்
இனிதினி இவற்றை எப்படி இணைப்பது.
எங்கள் மைந்தன் ஃபரீதைப் பற்றியும்
உங்கள் அநாதை மருமாள் பற்றியும்
இனிதென் நெஞ்சில் உளதொரு எண்ணம்.

இபின் ஸாவி :

உங்களை நன்குநான் புரிந்து கொண்டேன்.
பேசுவோம் பின்னால் அதனைப் பற்றி.
உங்கள் மகனைப் பற்றியென் மனமே
நினைப்பதை, சோதர, நீரறி வீர்.அவன்
கட்டற் றெங்கும் காலிடு முரடன்;
பண்பும் மென்மையும் நன்கு நிறைந்துள
பெண்ணாம் எங்கள் அன்புச் செல்வியை
அப்படிப் பட்டவோர் ஆபத் தில்போய்
எப்படி இட்டிடத் துணிவோம் நாங்கள்,
வேகம் நடத்தையில் வியத்தகு மாற்றம்
காட்டினான் அவனெனில் கருதிடக் கூடும்.

ALMUENE
It is the wildness of his youth. Provide him
A wife and he will soon domesticate.
Pen these wild torrents into quiet dams
And they will fertilize the kingdom, brother.

IBN SAWY
I hope so. Well, we’ll talk.

அல்மியூன்:

கட்டற் றுளதவன் காளைப் பருவம்.
மாற்றம் கொள்வான் மனைவி அமைந்தால்.
குடும்பப் பாங்கும் கூடிடும் அவனிடம்.
அணைகள் கட்டினால் அடங்கிடும் வெள்ளம்.
சோதர,
நாடா வளமும் நாடது பெறுமே.

இபின் ஸாவி:

ஆகட்டும். நன்று, அதன்பின் பார்க்கலாம்.

ALMUENE
Fareed, come with me.

FAREED
I’ll have my girl! I’ll beat them all and have her!

ALMUENE
Wagtail, your uncle takes her.

FAREED

Break his head then,
Whip the proud broker up and down the square
And take her without payment. Why are you
The Vizier, if you cannot do your will?

ALMUENE
Madcap, she’s for the King, be quiet.

FAREED
Oh!

ALMUENE
Come, I will buy you prettier girls than this
By hundredweights and tons.

FAREED

She has such hair! such legs!
God damn the Vizier and the King and you!
I’ll take her yet.

Exit in a rage, followed by Almuene and Slaves.

அல்மியூன்:

ஃபரீது , வா நாம் போகலாம்.

ஃப்ரீது:

என்னவள் எனக்கு வேண்டும்! அனைவரையும் அடித்துப் போட்டாவது அவளை அடைவேன்!

அல்மியூன்:

ஓன் என் வாலாட்டி, உன்றன் மாமன் அவளை எடுத்துக் கொண்டுவிட்டார்.

.ஃபரீது :

பின்னவர் மண்டையைப் பிளந்து போட்டிடு,
திமிரு பிடித்த தரகனை இந்தச்
சதுக்கம் எங்கும் சவுக்கால் அடித்து
மேலும் கீழும் விரட்டி அடித்திடு.
காசு பணமின்றிக் கவர்ந்தி(டு) அவளை.
விருப்பம் போலெதும் செயமுடி யாதெனில்
இருக்கிறாய் ஏன்நீ மந்திரியாய் இங்கே ?

அல்மியூன்:

பைத்தியம் நீயெதும் பேசா திருக்க,
அவளைக் கொள்கிறார் அரசர்க் காக.

ஃபரீது :

ஓஹோ!

அல்மியூன்:

இவளை விடவே எல்லா விதத்திலும்
மேம்பட் டவராய் வாங்கித் தருகிறேன் 
வஞ்சியர் பலரை, போகலாம் வாடா.

ஃபரீது :

அப்படிப் பட்ட(து) அவளெழில் முடியே!
அப்படிப் பட்டன அவளது, கால்கள்!
மந்திரி அவனையும் மன்னன் அவனையும்
உன்னையும் கூட  உடனே, கடவுளே,
தூக்கிப் போடுக துலங்கா நரகில்!
இருந்தும் அவளை எடுத்துக் கொள்வேன்.

கடுங்கோபத்தில் வெளியேறுகிறான். மந்திரியும் அடிமைகளும் பின்தொடர்கிறார்கள்.

MUAZZIM
This is a budding Vizier!
Sir, look at her; were mine mere broker’s praises?

IBN SAWY
You, mistress? Does the earth contain such beauty?

முவாஸீம்:

இவன்தான் வருங்கால மந்திரி இவனேதான்!
ஐயா, அவளை நோக்குவீர் சற்றே.
முன்னம்நான் மொழிந்தவை தரகன் ஒருவனின்
வெற்றுப் புகழ்ச்சியோ, வீணுரை யாமோ?

இபின் ஸாவி :

அணங்குகொல் ! அம்புவியில் ஈதென்ன எழில்கொல்!

MUAZZIM
Did I not tell you so?

IBN SAWY

’Tis marvellous,
And if her mind be equal to her body,
She is an emperor’s portion. What’s your name,
Sweet wonder?

ANICE
Anice-aljalice they call me.

IBN SAWY
What is your history?

ANICE
My parents sold me
In the great famine.

IBN SAWY
What, is your mould indeed a thing of earth?
Peri, have you not come disguised from heaven
To snare us with your lovely smiles, you marvel?

ANICE
I am a slave and mortal.

IBN SAWY
Prove me that.

ANICE
A Peri, sir, has wings, but I have none.

IBN SAWY
I see that difference only. Well now, her price?

MUAZZIM
She is a gift to thee, O Vizier.

முவாஸீம்:

அதையேதான் நானுரைத்தேன்.

இபின் ஸாவி:

அற்புதம் இவளென்பேன் !

சீரினிலே மேனிநிகர் செம்மையிவள் சிந்தையெனில்
பாரினிலே மாமன்னன் பங்கிந்தப் பெண்ணாவாள்
பேரினிமைப் பெருவிந்தை, நின்றன்பெயர் எனவாமோ?

அனீஸி அல்  ஜாலிஸ் :

அனீஸி அல் ஜாலிஸ் என்பரெனை.

இபின் ஸாவி:

ஏதுன்றன் சரித்திரமோ?

அனீஸி அல் ஜாலிஸ் :

உற்றபெரும் பஞ்சத்தால் விற்றனரென் பெற்றோர்கள்.

இபின் ஸாவி:

ஈதென்ன, மேனியிதை எப்பொருளால் வார்த்தனரோ?
காதலினால் பெரியைநீ*, காலெடுத்து வந்தனையோ,
மேதினியில் நின்முறுவல் வலையிலெமை வீழ்த்திடவே,
   விண்ணிருந்து வேடமிட்டு பெண்ணெனவே அற்புதமாய் ?

(* விண்மீன் ஒன்றின் பெயர்)

அனிஸ் :

அழிகின்ற அடிமைநான்.

இபின் ஸாவி:

மெய்ப்பிப்பாய் எங்ஙனமே ?

அனீஸி அல் ஜாலிஸ் :

சிறகாரும் பெரியைக்கே, சிறகொன்றும் எனக்கிலையே.

இபின் ஸாவி:

வேறுபாடு வேறில்லை, விலையென்ன இவளுக்கே?

முவாஸீம் :

மந்திரிக்கெம் பரிசாகும்.

IBN SAWY
Ceremony?
I rate her value at ten thousand clear.

MUAZZIM
It is the price expected at your hands,
Though from a private purse we’ld have full value.
Keep her ten days with you; her beauty’s worn
With journeying and its harsh fatigues. Give rest,
Give baths, give food, then shade your eyes to gaze at her.

இபின் ஸாவி:

மரியாதை வழக்கம்போல்!
ஆயிரங்கள் ஈரைந்தே ஆகிமிவள் மதிப்பாகும்.

முவாஸீம்:

தங்கள்திருக் கரத்தாலே தரவேண்டும் விலையதுவே.
அதிகாரி அல்லாதோர் எவருக்கோ அளிப்பதெனில்
முழுவிலையும் பெற்றிருப்போம் விழுக்காடு பழுதின்றி.
ஒருபத்து நாளிவளை உம்மிடமே வைத்திடுக;
எழில்மேனி களைத்துள்ளாள், இளைத்துள்ளாள் பயணத்தால்.
ஓங்குபுனல் ஆடட்டும், ஓய்வுமிவள் கொள்ளட்டும்  
நல்லுணவு கொள்ளட்டும், நங்கைபசி ஆறட்டும்.
பின்னருங்கள் அன்புவிழி நன்கவள்மேல் படரட்டும்.

IBN SAWY
You counsel wisely. There’s my poaching rascal, —
But I will seal her fast even from his questings.
The peace, Muazzim.


MUAZZIM
Peace, thou good Vizier, loaded with our blessings.

Exeunt.

இபின் ஸாவி:

ஆய்ந்துணர்ந்(து) அறிவுரைகள் அழகாகச் சொன்னீர்நீர்.
மேயுமென்றன் போக்கிரியும் மேலுமவண் இருப்பானே, --
வேட்கைமிகு விழியெதிரில் காட்டாது மறைத்திடுவேன்.
நாட்டிலெங்கும்  நல்லமைதி நிலவட்டும், முவாஸீம்.

முவாஸீம்:

அமைதி நிலவுக, ஆசியும் சேர்க, 
நல்லவர் நீங்கள் நலமெலாம் பெறுக!

வெளியேறுகிறார்கள்.

Lalitha & Suryanarayanan

unread,
Oct 16, 2021, 9:04:01 PM10/16/21
to santhav...@googlegroups.com

பஸ்ஸோரா வாஜிர்கள் 17

அங்கம் 1, களம் 4


A room in the women’s apartments of Ibn Sawy’s house.
Ameena, Doonya.

இபின் ஸாவி யின் வீட்டு அந்தப்புரத்தில் ஓர் அறை.

ஆமீனா, தூன்யா.

AMEENA
Call, Doonya, to the eunuch once again,
And ask if Nureddene has come.

DOONYA

Mother,
What is the use? you know he has not come.
Why do you fret your heart, sweet mother, for him?
Bad coins are never lost.

ஆமீனா :

தூன்யா,
அந்தப் பேடியை மீண்டும் கூப்பிடேன்
வந்துவிட் டானா நூரெதீன் பாரேன்.

தூன்யா:

அதனால் என்பயன் விளையும் தாயே?
அவன்வர விலையென அறிவா யேநீ.
இதயம் இப்படித் துடிதுடிப் பானேன்,
இன்னரும் தாயே, அவனுக் கென்றே?
கெட்ட காசுகள் ஒட்டா தெங்கும்,
சட்டென வந்திடும் தங்கா தெங்கும்.

AMEENA

Fie, Doonya! bad?
He is not bad, but wild, a trifle wild;
And the one little fault’s like a stray curl
Among his clustering golden qualities,
That graces more than it disfigures him.
Bad coin! Oh, Doonya, even the purest gold
Has some alloy, so do not call him bad.

DOONYA
Sweet, silly mother! why, I called him that
Just to hear you defend him.

ஆமீனா:

சீ, தூன்யா! கெட்டவனா?
கெட்ட குணமெதும் ஒட்டா துள்ளான்
கட்டற் றெங்கும் காலிட்ட லைந்தும்.  
கூட்டமாய் நற்குணம் குடிபுகுந் தவனாய்
ஆட்டம் போட்டிடும் அழகிய உருவில்
இனிதோர் சுருள்முடி தனியே நிற்பதாய்
சின்னப் பிழையாய் ஒன்றே ஒன்றுதான்
இருப்பதால் அழகே இம்மியும் குலையுமா
இலையதே இன்னும் எழிலாய் அமையுமா.
கெட்டவோர் காசா!
சுத்தப் பொன்னெனச் சொல்வதில் கூட
உலோகக் கலப்பும் உலகினில் உளதே.
எனவே, தூன்யா, அவனைக் கெட்டவன்
என்றினி இயம்பக் கூடா தென்றும்.

தூன்யா:

அருமைத் தாயே, அறியா தவளே!
அப்படி அவனை அழைத்த தேனெனில்
இப்படி வேகமாய் அப்படிப் பாய்ந்து
பரிந்துநீ பேசலைப் பார்த்து மகிழவே.

AMEENA

You laugh at me, —
Oh, you all laugh. And yet I will maintain
My Nureddene’s the dearest lad in Bassora, —
Let him disprove’t who can, — in all this realm
The beautifullest and kindest.

DOONYA

So the girls think
Through all our city. Oh, I laugh at you
And at myself. I’m sure I am as bad
A sister to him as you are a mother.

ஆமீனா:

ஏளனம் செய்கிறாய், -
கேலிகள் செய்வதைக் கேட்டும் பலமுறை.
பொறுப்ப தில்லையே புகலும் மொழிகளை.
ஊரினில் உலகிலிப் பஸ்ஸோரா நகரிலே
யாருமே இல்லையே இப்படி இனியனாய்
நூரெதீன் போலவே இளைஞர் எவருமே, --
பாரினில் இதையே எவர்மறுத் தாலென், --
இத்தனை எழிலுடன் இத்தனை அன்புடன்
யாரே உள்ளார் இந்தநல் உலகிலே.

தூன்யா:

நகரினில் இருக்கிற நங்கையர் அனைவரின்
நெஞ்சமும் அதுபோல் நினைத்து மகிழுமே.
உன்னோ டென்னையும் ஒன்றாய் இணைத்துநான்
ஏளனம் செய்தே எள்ளி நகைக்கிறேன்.
நிச்சயம் இதையென் நெஞ்சறி யுந்தான்,
தனயனைக் கெடுக்கும் தாயுனைப் போலே
அண்ணனைக் கெடுக்கும் அருமைத் தங்கைநான்

AMEENA
I a bad mother, Doonya?

DOONYA

The worst possible.
You spoil him;so do I;so does his father;
So does all Bassora, — especially the girls!

ஆமீனா:

கெட்டவோர் தாயா, தூன்யா நானே ?

தூன்யா:

எவ்வள(வு) இயலுமோ அவ்வள(வு) அளவே
கெடுக்கிறாய் நீயும்; கெடுக்கிறேன் நானும்;
அதுபோல் கெடுக்கிறார் அவனது தந்தையும்;
அப்படி யேதான் அழகார் பஸ்ஸோரா, --
குறிப்பாய் நகரின் குமரியர் எல்லாம்!

AMEENA
Why, who could be unkind to him or see
His merry eyes grow clouded with remorse?

DOONYA
Is it he who comes?

She goes out and returns.

ஆமீனா:

ஏன்செய மாட்டார்கள்? எவரால் அவனிடம்
கடுகடு வெனமுகம் காட்டிட முடியும் ?
சிரிக்கும் அவன்விழி செய்பிழை எண்ணித்
துன்பெனும் துகிலைத் துணைகொண் டொளிவதைப்
பார்த்துச் சகிப்பதும் யாரால் முடியும்?

தூன்யா:

வருவ தெவரே, அவனே தானோ ?

அவள் வெளியில் போய்விட்டுத் திரும்புகிறாள்.

சிவசூரி.
(தொடரும்)

Lalitha & Suryanarayanan

unread,
Oct 17, 2021, 9:03:44 PM10/17/21
to santhav...@googlegroups.com

பஸ்ஸோரா வாஜிர்கள் 18


"கண்டேகிய நூற்றாண்டும் கண்டறியா நிகரொன்றும்.
கொண்டேத்தும் குரான்நீதி குடிகொண்ட இதயத்தாள்;
பண்தேய்த்த பாவறிவாள், பதமறிவாள் இசையறிவாள்
வண்ணமிகு எழுத்துகளின் வடிவறிந்த விரலுடையாள்
மண்ணேத்தும் இவையறிவாள் மங்கையிவள் இயல்பாக;
விதவிதமாய் விஞ்ஞானம் விளங்குமனம் ஒருபக்கம்
மதுரமொழி இதழ்முன்னே மங்கையவள் எழில்முன்னே
எதுவுந்தான் நில்லாதாள், எங்குமிணை இல்லாதாள்;" ( அங்கம்1, களம்3)

என்று முவாஸீம் மூலம் இந்த நாடகத்தின் நாயகியாம் அனீஸி என்பவள் பேரெழிலும் ஞானமும் பல கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தமையும் நமக்கு ஶ்ரீ அரவிந்தர் தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளார். அப்படிப்பட்ட அனீஸியை அமைச்சர் சுல்தானுக்காக விலைகொடுத்து வாங்கி அழைத்து வருகிறார்.
இந்த நாடகத்தில் சிரிப்பலைகளின் ஊற்றுக்கண்ணாகத் திகழும்
தூன்யா ( Doonya)  என்னும் அழகியை, கதாநாயகன் நூரெதீனுக்குத் தங்கை உறவும் ஆகும் நங்கையை நேற்றே பார்த்துவிட்டோம். அவள் இருக்கும் இடத்தில் எல்லாம் சிரிப்பலைகள் தாமே தோன்றும். இந்த நாடகத்தின் நகைச்சுவைக்குக் காரணம் ஆக இருக்கும் மூவரில் அவளும் ஒருத்தி -  முதன்மையானவளும் கூட.

இனி தொடர்ந்து நாடகத்தைப் பார்ப்போம் - சூரி.

 அங்கம் 1, களம் 4 தொடர்கிறது....

DOONYA
Is it he who comes?

She goes out and returns.

It is my uncle, mother,
And there’s a girl with him, — I think she is
A copy of Nureddene in white and red.
Why, as I looked downstairs, she smiled up at me
And took the heart out of my body with the smile.
Are you going to have a rival at your years,
Poor mother? ’Tis late for uncle to go wooing.

தூன்யா:

வருவ தெவரே, அவனே தானோ ?

அவள் வெளியில் போய்விட்டுத் திரும்புகிறாள்.

மாமன் தானே வருகிறார், அம்மா.
வருமவர் உடனொரு வஞ்சியும் வருகிறாள் - 
வெள்ளையும் சிவப்பும் வீசித் தெளித்து
நூரெ தீனையே நேரினில் வார்த்த
பிரதியைப் போலவள் தெரிகிறாள் எனக்கு.
நானே கீழே எட்டிப் பார்க்கையில்
ஏனோ சிரித்தே அவளெனைப் பார்த்துக்
கொள்ளை யடித்துக் கொண்டுபோ யினளே
குறுநகை யுடனிக் குமரியின் இதயம்.
அம்மையே உனக்கே ஐயோ பாவம்
செம்மையாய் இத்தனை ஆண்டுகள் சென்றபின்
இப்படிப் போட்டியோ, எப்படி உரைப்பேன்!
காலம் கடந்தபின் வீழ்ந்தனர் மாமனோர்
கன்னியைப் பார்த்துக் காதற் கடலில்.

AMEENA
A rival, you mad girl!

Enter Ibn Sawy and Anice-aljalice.

ஆமீனா:

போட்டியா, போடீ பித்துப் பிடித்தவளே!

அனீஸி- அல் ஜாலிஸுடன் இபின் ஸாவி நுழைகிறார்.

IBN SAWY
Come forward, child.
Here is a slavegirl, Ameena, I’ve bought
For our great Sultan. Keep her from your son,
Your scapegrace son. My life upon it, dame!
If he touches her, I’m gone.

AMEENA
I’ll see to it.

இபின் ஸாவி :

முன்னால் இங்குநீ வருவாய், மகளே..
இவளோர் அடிமை, இவளை ஆமீனா,
சீரார் சுல்தான் தேவைக் காகநான்
வாங்கிக் கொணர்ந்துளேன். ஈங்கிவள் தனையுன்
ஊர்சுற் றிமகனின் பார்வையில் படாமல்
பாதுகாத் திடுவாய் பத்திர மாக.
என்னுயிர் இதிலே உள்ளது, பெண்ணே!
வைத்தான் அவன்கை இவள்மேல் என்றால்
செத்தேன் நானே.

ஆமீனா:

பார்த்துக் கொள்வேன்.

IBN SAWY
Let a strong eunuch with a naked sword
Stand at her door. Bathe her and feed her daintily.
Your son! see that he does not wheedle you.
You’ve spoilt him so, there is no trusting you,
You tender, foolish heart.

இபின் ஸாவி:

நீட்டிய வாளினைக் காட்டிய தோளுடன்
வல்லமை வாய்ந்த பேடியன் ஒருவன்
நின்றிவள் வாயிலில் நன்கதைக் காக்க.
இவள் நீ ராடவும் இனிதூண் உண்ணவும்
ஈண்டிவள் இருக்கவும் வேண்டிய வெலாம்செய்..
உன்மகன்!
மயங்கேல் உன்மகன் சிரிப்பில், பேச்சில்!
அவ்வளவு கெடுத்துளாய் ஆருயிர் மகனை,
உன்னை எப்படி நம்பிட முடியும்.
இளகிய முட்டாள் இதயம் உடையாய்.

AMEENA
I spoil him, husband!

IBN SAWY
Most damnably. Whenever I would turn
Wholesomely harsh to him, you come between
And coax my anger. Therefore he is spoilt.

ஆமீனா:

கணவரே, அவனைக் கெடுப்பவள் நானா!

இபின் ஸாவி:

மிகமிக ,மோசமாய்.வெகுசின மோடவன்
மீதுநான் மோதிடும் போதினில் எம்மிடை
மாதுநீ வருவாய் மாற்றுவாய் சீற்றம்..

அதனால் கெட்டிவன் அலைகிறான் எங்கும்.

DOONYA
Oh, uncle mine, when you are harsh, the world
Grows darker with your frown. See, how I tremble!

தூன்யா:

அடடா, என்னுடை அருமை மாமனே,
கடுமையை உம்முகம் காட்டிடும் போது
கடுஞ்சினத் தீயில் கருகிடும் உலகே.
நடுங்குதென் மேனி, நன்கிதைப் பாரும்!

IBN SAWY
Oh, are you there, my little satirist?
When were you whipped last?

DOONYA
When you last were harsh.

IBN SAWY
You shall be married off. I will not have you
Mocking an old and reverend man like me.
Whom will you marry, chit?

DOONYA

An old, old man,
Just such a smiling harsh old man as you,
None else.

IBN SAWY
And not a boy like young Fareed?
His father wishes it; he too, I think.

இபின் ஸாவி :

நையாண்டி செய்யுமென் சின்னஞ் சிறுமியே,
நீயுமே இங்கே நிற்கின் றாயா?
சவுக்குனைக் கடைசியாய்த் தடவிய தெப்போ?


தூன்யா:

கடைசியாய் கடுமைநீர் காட்டிய போது.

இபின் ஸாவி:

சீக்கிரம் திருமணம் செய்துனை அனுப்புவேன்.
வயது மிகுந்தோனும் வணங்கத் தகுந்தோனும்
ஆகிய என்றன் அருகிலே உன்னை
வைத்துக் கொள்ளேன் வஞ்சியே இனியே.
கைத்தலம் எவனைப் பற்றுவாய், சிறுக்கி ?

தூன்யா:

வயதான நல்லவோர் வயோதிக னாக.
சிரித்துக் கொண்டே சீறிடும் உமைப்போல்
கிழவனாய் உமைப்போல் கிட்டினால் தானே.

இபின் ஸாவி:

வாலிபன் ஃபரீது போலவோர் பையனிலை?
அவனது தந்தை அதைவிழை கின்றார்;

அவனும் என்றுதான் நினைக்கிறேன் நானும்.

DOONYA
Throw me from this high window to the court,
Or tell me ere the day and I will leap.

IBN SAWY
Is he so bad? I thought it. No, my niece,
You marry not with Khakan’s evil stock,
Although there were no other bridegroom living.
I’ll leave you, Ameena. Anice, I have a son,
Handsome and wanton. Let him not behold you!
You are wise and spirited beyond your years,
Above your sex; I trust in your discretion.

தூன்யா:

போவென என்னைப் போக்குவீர் கீழே
வீழென அப்பெரும் சாளரம் வழியே.
அல்லது, அப்படி யோர்நாள் வருமுனம்
கூறினால் நானே குதித்திடு வேனே.

இபின் ஸாவி:

அவனென அவ்வளவு கெட்டவ னோதான்?
நானும் அப்படி யேதான் நினைத்தேன்,
இல்லை இல்லை, இலையென் மருமாள்,
போயும் போயும் கேடுகெட் டந்த
தீயவன் காக்கனின் தீங்கிழை வமிசத்தில்
செய்விப் பேனோ திருமணம் உன்னை,
பொருத்தமாய் வேறொரு மணமகன் இங்கே
திருத்தமாய் இருப்பது தெரியா திருந்தும்.
விட்டுநான் செல்கிறேன் ஆமீனா. 
அனீஸி, எனக்கோர் மகனுளான். அவனோ
சுந்தர வடிவினன்; சுற்றித் திரிபவன்..
காளை அவனுனைக் கண்டிடக் கூடா!
அறிவுடை யாள்நீ ஆனவோர் வயதுக்(கு )
அதிக ஞானம் அடைந்தவ ளானாய்.
பேதைமை உடைய பெண்மைக்கு மேலுன்
விவேகம் ஒன்றே வேண்டும் பொழுதிது.


ANICE
I will be careful, sir. Yet trust in bars
And portals, not in me. If he should find me,
I am his slave and born to do his will.

அனீஸி:

கவனமாய் இருப்பேன், ஐயா. இருந்தும்
கம்பியை, வாயிலைக் கதவை நம்புக,
நம்பிட வேண்டாம் நங்கையாம் என்னை.
அவனெனைக் கண்டால் அடிமையென் செய்வேன்
ஆசைப் படிசெயும் அடிமைப் பிறவிநான்.

IBN SAWY
Be careful, dame.

Exit.

இபின் ஸாவி:

கவனமாய் இருப்பாய், பெண்ணே.

வெளியேறுகிறார்.

சிவசூரி.

(தொடரும்)


Lalitha & Suryanarayanan

unread,
Oct 18, 2021, 9:37:14 PM10/18/21
to santhav...@googlegroups.com

பஸ்ஸோரா அமைச்சர்கள் 19

Act 1, Sc 4 continues...

AMEENA

How fair you are, small lady!
’Tis better truly he should see you not.
Doonya, be careful of her. I’ll go before
And make your casket ready for you, gem.
Bring her behind me, Doonya.

Exit.

ஆமீனா:

எவ்வள(வு) அழகுநீ சின்னப் பெண்ணே!
அவனுனைப் பாரா திருத்தலே நலமாம்.
கண்ணும் கருத்துமாய் இருப்பாய்,தூன்யா.
முன்னம் நான்போய் உனக்கோர் இருப்பிடம்
ஆயத் தமாக்குவேன், அணிமணி போன்றாய்.
பின்னால், தூன்யா, அவளுடன் வருக.

வெளியேறுகிறாள்.

DOONYA (leaping on Anice)

What’s your name,
You smiling wonder, what’s your name? your name?

ANICE
If you will let me a little breathe, I’ll tell you.

DOONYA
Tell it me without breathing.

ANICE
It’s too long.

DOONYA
Let’s hear it.

ANICE
Anice-aljalice.

தூன்யா: (அனீஸியை நோக்கித் துள்ளியவளாய்)

என்னபெயர் நின்னதுவோ,,புன்னகைக்கும் அதிசயமே,
என்னபெயர் வைத்தாரோ? எப்படியே அழைத்தாரோ?

அனீஸி:

முன்னமதைச் சொல்லிடுவேன், மூச்சுவிட இடமளித்தால்.

தூன்யா:

முந்தியதைச் சொல்லிவிடு, மூச்சுவிட நேரமில்லை.

அனீஸி:அல் ஜாலிஸ்

கொஞ்சமது நீண்டிருக்கும்.

தூன்யா:

நெஞ்சமதைக் கேட்டிருக்கும்.

அனீஸி அல் ஜாலிஸ் :

அனீஸி அல் ஜாலிஸ். :  

DOONYA

Anice,
There is a sea of laughter in your body;
I find it billowing there beneath the calm
And rippling sweetly out in smiles. You beauty!
And I love laughers. Wherefore for the King?
Why not for me? Does the King ever laugh,
I wonder?

She runs out.

தூன்யா:

அனீஸி,
வஞ்சியுடல் குடியிருக்கும் கொஞ்சுகடல் ஒலியிருக்கும்;
தஞ்சமது கொண்டிருக்கும் தண்ணமைதி கீழிருக்கும்
புன்னகையாய் விரிந்திருக்கும் இன்னமுதாய்ப் பரந்திருக்கும்.
சித்திரமே! சிரிப்பிலெனை வைத்திழுத்துச் சிறையடைத்தாய்.
மன்னவர்க்கே விருந்ததுவோ? புன்னகையும் எனக்கிலையோ?
மன்னவரின் திருமுகமோ என்றைக்கோ சிரித்திடலாம்,
இன்றதனை நினைத்தவுடன் என்னெஞ்சில் சிரிப்புவரும்.

அவள் வேகமாக ஓடுகிறாள்.

ANICE

My King is here. But they would give me
To some thick-bearded swart and grizzled Sultan
Who’ld see me once a week and keep me penned
For service, not for mirth and love. My prince
Is like our Persian boys, fair-faced and merry,
Fronting the world with glad and open looks
That make the heart rejoice. Ten days! ’tis much.
Kingdoms have toppled in ten days.

Doonya returns.

அனீஸி  :

என்னரசர் இங்கிருக்க இன்னொருவர்க்(கு) அளிக்கின்றார்
கொண்டுசெல்ல வருவதுவோ தொண்டுகிழ சுல்தானாம்.
முளைத்தபெருந் தாடியினான் கறுத்திருக்கும் மேனியினான்
வெளுப்பிருக்கும் கருப்பிருக்கும் விதவிதமாய்க் கலந்திருக்கும்
வாரத்தில் ஒருதினத்தில் நேரில்வந்து பார்த்திருப்பான்
அன்புமிலை,இன்புமிலை தன்பணியில் பிணைத்திருப்பான்.

என்றனுயிர் இளவரசோ இன்பமுடன் கலந்திருக்கும்
பாரசீகக் காளையர்போல் பேரழகுப் பெட்டகமாய்
எங்குந்தான் படர்ந்திருப்பான், பொங்குகளி பகிர்ந்திருப்பான்,
கள்ளமற்ற பார்வையினால் துள்ளுமனம் கொலுவிருப்பான்.
ஒருபத்து நாளிருக்கே! உலகிலிதே அதிகந்தான்.
மன்னர்பலர் கவிழ்ந்திருப்பார் பின்னர்பலர் வளர்ந்திருப்பார்
ஐந்திரண்டு நாளினிலே அம்புவியே மாறிடுமே.

தூன்யா திரும்புகிறாள்.

DOONYA

Come, Anice.
I wish my cousin Nureddene had come
And caught you here. What fun it would have been!

Exeunt.

தூன்யா:

வாம்மா, அனீஸி,வா நாம் போகலாம்
என்றன் அண்ணன் நூரெதீன் இங்கே
வந்திருந் தாலுனைக் கண்டி ருந்தால்
எத்தனை எத்தனை இன்பது தந்திருக்கும்!

அவர்கள் வெளியேறுகிறார்கள்.

சிவசூரி.

(இத்துடன் அங்கம் 1 நிறைவடைகிறது)

தொடரும்.....

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 18, 2021, 9:56:57 PM10/18/21
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பான படைப்பு - மிகவும் பொருத்தமான மொழிபெயர்ப்பு.
திறமையும், உழைப்பும் தெரிகின்றன.

                  — தில்லைவேந்தன்



Lalitha & Suryanarayanan

unread,
Oct 18, 2021, 11:46:01 PM10/18/21
to santhav...@googlegroups.com
நன்றி வேந்தரே. பற்பல இடங்களில் மூலத்தைப் படிக்கும்போதே சந்தமும் வார்த்தைகளும் செவியில் வந்து மோத ஓர் இன்பத்தைத் துய்த்துக் கொண்டே எழுதிய மொழிபெயர்ப்பு அவை. அவையெலாம் ஶ்ரீ அன்னை என் மூலம் எழுதிக் கொண்டாள் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Oct 19, 2021, 8:25:38 PM10/19/21
to santhav...@googlegroups.com

பஸ்ஸோரா அமைச்சர்கள் 20

அங்கம் 1 முடிவடைந்து விட்டது. அதில் முரண்பட்ட இரு அமைச்சர்களை நேரில் கண்டுவிட்டோம்.. அதேபோல் முற்றிலும் மாறுபட்ட குணநலன்கள் உடைய அவர்தம் பிள்ளைகள் பற்றியும் தெரிந்துகொண்டோம். தீய அமைச்சனின் தீமையே உருவாகிய பிள்ளை ஃபரீதைப் பார்த்துவிட்டோம். வெறுப்பை ஊட்டும் குணங்களுடன் பார்ப்பதற்கு விகாரமாகத் தெரியும் கூனுடைய தோற்றமுடன் அவனைக் கண்டுவிட்டோம். அவனுக்கு முற்றிலும் மாறுபட்டவனாக, பேரெழிலான கட்டிளங் காளையாக அனைவரையும் வசீகரிக்கும் உருவத்துடன் எல்லோரையும் நேசிப்பவனாகவும் ஆனால் ஊர் சுற்றித் திரிபவன் ஆகவும் நமது நாடகத்தின் நாயகனைப் பற்றிச் சிலர் சொல்லக் கேட்டுவிட்டோம்.

இப்போது அவனையும் நேரில் பார்க்கப் போகிறோம். நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் சந்திக்கப் போகின்றனர்.
மூன்று நாள்கள் வீட்டுக்கே வராமல் ஊர்சுற்றித் திரிந்துவிட்டு வரும் மகனைக் கடிந்துகொள்ளவேண்டும் என்று பல ஒத்திகைகள் செய்து பார்த்துக் கொள்ளும் அவனுடைய தாயார் ஆமீனா அவனைக் கண்டவுடன் தன்னை மறந்து மகிழ்ந்து சிரிப்பதையும் காணப் போகிறோம். அன்னையை மகிழ்விக்கக் கற்பனைக் குதிரையில் ஏறி அரபு நாட்டு இரவுக் கதைகளில் வருவதுபோல் வீர தீர சாகசங்களை எல்லாம் தான் செய்யப் போவதாக அவன் அடுக்கிக் கொண்டே போவது படிப்பவருக்கு இன்பம் ஊட்டும். இடையிடையே சிரிப்பூட்டும் தூன்யா. காட்சிகள் இரண்டும் மூன்றும் ஒரே சிரிப்புமயந்தான்.

மூன்றாம் களத்தில்தான் காதல் வசப்பட்ட நாயகன் உணர்ச்சியில் சிக்கிப் பேசும்  அன்பு  மொழிகள் வரப்போகின்றன. மிகவும் சுவை மிக்க அந்தக் காதல் வார்த்தைகளைக் கேட்க சற்றுப் பொறுத்துத்தான் ஆகவேண்டும்.
இனியும் தாமதிக்காமல் அங்கம் 2-ல் நுழைவோம், வாரும்.

அங்கம் 2, களம் 1

Act II

Bassora.

Scene 1

Ibn Sawy’s house. An upper chamber in the women’s
apartments.
Doonya, Anice-aljalice.

பஸ்ஸோரா.

இபின் ஸாவியின்  மனை. அந்தப்புரத்தில்; மேன்மாடத்தில் ஓர் அறை
தூன்யா, அனீஸி அல் ஜாலிஸ்.

DOONYA
You living sweet romance, you come from Persia.
’Tis there, I think, they fall in love at sight?

ANICE
But will you help me, Doonya, will you help me?
To him, to him, not to that grizzled King!
I am near Heaven with Hell that’s waiting for me.

DOONYA
I know, I know! you feel as I would, child,
If told that in ten days I had to marry
My cruel boisterous cousin. I will help you.
But strange! to see him merely pass and love him!
Did he look back at you?

ANICE
While he could see me.

DOONYA
Yes, that was Nureddene.

தூன்யா:

இன்னருங் காதல் பின்னிய வடிவே,
பார சீகப் பேரழ கோயே,
கண்டதும் காதல் கொண்டிடு வாரென
எண்ணுகின் றேன்நான் அங்குன் நாட்டில் ?

அனீஸி:

எப்படி யோஅது இருக்கட்டும்,
எனக்கோர் உதவி செய்வா யாநீ?
தூன்யா,எனக்குத் துணைசெய் வாயா?
அவனுக் கேநான், அவனுக் கேநான்,
வெள்ளித் தலைமுடி வேந்தர்க் கில்லை !
தொடுகிற தொலைவில் சொர்க்கம் இருக்கையில்
பார்த்திங் கெனக்காய் காத்திருக் கிறதே
பாழும் நரகம் பாவையென் பக்கம்.

தூன்யா:

அறிவேன் நானதை, அறிவே னேநான்!
பெண்ணெனைப் பார்த்துப் பத்தே நாளில்
அத்தை மகனாம் அக்கொடும் மூர்க்கனை
மணம்செயச் சொன்னால் மங்கை எப்படி
தவித்திடு வேனோ அதுபோற் தவிப்புடன்
இருக்கிறாய் நீயென உணர்கிறேன், பெண்ணே,
நினக்குநான் உதவுவேன் நிச்சயம் இனியே.
என்னவோர் அதிசயம் இவ்வுல கினிலே!
கண்ணெதிர் அவனே கடப்பதே கண்டனை,
கண்டதும் அவன்மேல் கொண்டனை காதல்!
உன்னை மீண்டும் கண்டன னாவென்?

அனீஸி :

பார்வையில் படுகிற படிதான் இருந்தேன்.

தூன்யா:

ஆம், அது நூரெதீன் தானே.

ANICE
You’ll help me?

DOONYA

Yes,
With all my heart and soul and brains and body.
But how? My uncle’s orders are so strict!

ANICE
And do you always heed your uncle’s orders,
You dutiful niece?

DOONYA

Rigidly, when they suit me.
It shall be done although my punishment
Were even to wed Fareed. But who can say
When he’ll come home?

ANICE
Comes he not daily then?

DOONYA
When he’s not hawking. Questing, child, for doves,
White doves.

ANICE
I’ll stop all that when he is mine.

DOONYA
Will you? and yet I think you will, nor find it
A task at all. You can do it?

ANICE
I will.

அனீஸி:

எனக்குநீ உதவி செய்திடு வாயா?

தூன்யா;

நிச்சயம்.
என்றன் உயிரும் என்றன் உடலும்
என்றன் புந்தியும் என்றன் இதயமும் 
எல்லாம் முழுவதும் இடுவேன் நின்பணி.
ஆயின் எப்படி ? என்றன் மாமன்
காவலை மிகமிகக் கடுமை யாக்கினரே!

அனீஸி :

எப்பொழு தும்நீ அப்படி மாமனின்
கட்டளைப் படிதான் நடக்கின் றாயா,,
கடமை மறவா மருமக ளேநீ?

தூன்யா:

நிச்சயம், நெஞ்சுக்(கு) உகந்ததாய் இருந்தால்.
உனக்குநான் உதவுவேன் உறுதியாய்ச் சொன்னேன்,
இதற்காய் எனக்கவர் இடுகிற தண்டனை
ஃபரீதின் கரம்நான் பற்றுதல் ஆயினும்.
இல்லம் வருவான் எப்போ தவனென
எவரே, ஆயின், இயம்பிட முடியும்?

தூன்யா:

அப்படி யெனிலவன் வாரா னாதினம்?

தூன்யா:

இல்லா திருந்தால் வேட்டையில் நாட்டம்,
செல்லா திருந்தால் தேடலில் மனமும்
போகா திருந்தால்  புறவுகள் பின்மனம்,
கொஞ்சும் வெள்ளைப் புறவுகள், குழந்தாய்.

அனீஸி:

அவையெலாம் நிறுத்துவேன்  அவனென(து) ஆகையில்.

தூன்யா:

செய்வா யாநீ? இருந்தும் நினைக்கிறேன்
செய்வாய் நீயென,செய்வது கடினமாய்த்
தோன்றா(து) உனக்கெனத் தோன்றுது) எனக்கு.
செய்து முடித்திட முடியுமா உன்னால்?

அனீஸி:

செய்து முடிப்பேன்.

DOONYA
You have relieved my conscience of a load.
Who blames me? I do this to reform my cousin,
Gravely, deliberately, with serious thought,
And am quite virtuously disobedient.
I almost feel a long white beard upon my chin,
The thing’s so wise and sober. Gravely, gravely!

She marches out, solemnly stroking
an imaginary beard.

தூன்யா:

நெஞ்சப் பாரம் நீக்கினை நீயே.
யாரினி என்மேல் ஏற்றுவர் குற்றம்?
செய்கிறேன் அண்ணனைச் செம்மை யாக்கிட,
இடர்தரும் எனினும் அதனைச் செய்வேன்,
வேண்டு மென்றதை ஈண்டுநான் செய்வேன்,
தீவிர யோசனை செய்ததன் பின்நான்
கீழ்ப்படி யாததும் மேம்படுத் திடவே.
நீண்டு முளைத்தவோர் வெள்ளைத் தாடி
ஈண்டென் முகத்தில் இருப்பது போலும்
தோன்று(து) எனக்குத் தொட்டுப் பார்க்க,
தெளிவும் அறிவும் தெரிகிற தோவதில்.
வேதனை, கொடிய வேதனை தானிது!

இல்லாத தாடியை இருப்பதுபோல் பாவித்து நிதானமாய் நீவிவிட்டுக் கொண்டே வேகமாயவள் வெளியேறுகிறாள்.

ANICE

My heart beats reassuringly within.
The destined Prince will come and all bad spells
Be broken; then — You angels up in Heaven
Who guard sweet shame and woman’s modesty,
Hide deep your searching eyes with those bright wings.
It is not wantonness, though in a slave
Permitted, spurs me forward. O tonight
Let sleep your pens, in your rebuking volumes
Record not this. I am on such a brink,
A hound of horror baying at my heels,
I cannot pause to think what fire of blushes
I choose to flee through, nor how safe cold eyes
May censure me. I pass though I should burn.
You cannot bid me pick my careful steps!
Oh, no, the danger is too near. I run
By the one road that’s left me, to escape,
To escape, into the very arms I love.
Curtain

அனீஸி :

என்றன் இதயம் இன்று துடிக்கையில் 
ஊட்டு கின்றதே உறுதியை என்னுள்.
முன்னமே எனக்கென விதிக்கப் பட்ட
மன்னன் மைந்தன் வந்திட அதன்பின்
விட்டு விலகுமென் கெட்ட காலமே -
மண்ணில் மங்கை நாணம், வெட்கம்
மானம் என்னும் அனைத்தையும் காக்கும்
விண்ணில் உலவிடும் தேவதை கள்இனி
மின்னும் உம்முடைச் சிறகுக ளாலே
தேடித் திரியுமும் திருவிழி கள்தமை
முற்றும் மூடி மறைத்து வைப்பீர்.
நெறியின் வழியே நில்லா தாயினும்
முறையே இதுவும் புவியில் அடிமைக்(கு)
எனினும் என்னை இயக்கிடு வதிலே
இன்பப் பற்றுக்(கு) இம்மியும் இடமிலை.
தூங்கச் செயுங்கள் நீங்கள் உங்கள்
எழுது கோல்களை இன்றைய இரவில்.
குற்றங் குறைகளைக் குறிக்கும் ஏட்டில்
குறிக்கப் படாது போகுக இவையெலாம்.
வேட்டை நாயின் வெறியின் ஓசை
விரட்டி விரட்டி அடிக்கிற(து) என்னை.
விளிம்பின் ஓரம் அருகில் வந்தபின்
வேகம் புகுந்திட விரும்பித் துணிந்த.
வெட்கத் தீயின் விளைவு பற்றியோ
நட்பெதும் இல்லா நயனங்கள் எல்லாம்
தண்டனை யேதான் தந்திடு மோவென
நின்று நினைக்கவே நேரமும் இல்லை,  
புகுவேன் அதுவெனைப் பொசுக்கும் எனினும்.
பத்திர மான பாதையில் செலநீ
உத்திரவு போட்டிட முடியா தின்றே !
ஐயோ இத்தனை அருகில் நின்றன்றோ
ஆபத் தென்னைப் பார்க்கிற தின்று.
தப்பிப் போய்விட இப்போ திருக்கும்
ஒற்றை வழியில் ஓடிடு வேனே,
காதலன் உடைய கரத்தின் அணைப்பில்
வீழ்ந்திதில் இருப்பேன், பிழைத்தோ டிடவே.

திரை.

சிவசூரி.

(தொடரும்)

Lalitha & Suryanarayanan

unread,
Oct 20, 2021, 9:50:28 PM10/20/21
to santhav...@googlegroups.com

பஸ்ஸோரா அமைச்சர்கள் 21

அங்கம் 2, களம் 2 


Act 2, Sc 2


Ibn Sawy’s house. A room in the women’s apartments.
Ameena, Doonya.

இபின் ஸாவியின் மனை. அந்தப்புரத்தில் ஓர் அறை.
ஆமீனா, தூன்யா.

AMEENA
Has he come in?

DOONYA
He has.

AMEENA

For three long days!
I will reprove him. Call him to me, Doonya.
I will be stern.

DOONYA

That’s right. Lips closer there!
And just try hard to frown. That’s mildly grim
And ought to shake him. Now you spoil all by laughing.

AMEENA
Away, you madcap! Call him here.

DOONYA
The culprit
Presents himself unsummoned.

Enter Nureddene.

NUREDDENE (at the door)
Ayoob, Ayoob!
A bowl of sherbet in my chamber.
(entering)

Well, mother,
Here I am back, your errant gadabout,
Your vagabond scapegrace, tired of truancy
And very hungry for my mother’s arms.
It’s good to see you smile!

AMEENA
My dearest son!

NUREDDENE
Why, Doonya, cousin, what wild face is this?

DOONYA
This is a frown, a frown, upon my forehead.
Do you not tremble when you see it? No?
To tell you the plain truth, my wandering brother,
We both were practising a careful grimness
And meant to wither you with darting flames
From basilisk eyes and words more sharp than swords,
Burn you and frizzle into simmering cinders.
Oh, you’ld have been a dolorous spectacle
Before we had finished with you! Ask her else.

ஆமீனா:

வந்துவிட் டானா அவன் ?

தூன்யா:

வந்துவிட்டான்.

ஆமீனா:

முற்றும் முழுதாய் மூன்று நாள்கள்!
வசைச்சொல் சொல்வேன்,.வரச்சொல், என்முன்னே
கடுமையைக் காட்டப் போகிறேன், தூன்யா.

தூன்யா:

அதுதான்சரி.. 
உதடுகளை ஒன்றாய் ஒட்டிக் கொள்க !
முடிந்த அளவு சுளிக்கட்டும் முகமும்.
கோபத்தை அதுவும் கொஞ்சம் காட்டும்!
அப்படியே அதுவும் உலுக்கும் அவனை!
அடடா,
சிரித்துக் கெடுக்கிறாய். செய்தவை யெல்லாம்.

ஆமீனா :

அப்பால்போ, பைத்தியம்நீ! அழைத்திடு அவனை.

தூன்யா:

கூப்பிடாமல் கொள்ளாமல் குற்றவாளி வருகிறான்,

நூரெதீன் நுழைகிறான்.

நூரெதீன்  ( கதவருகில்)

அயூபு,, அயூபு,
ஒரு கோப்பை பழச்சாறு என்னறைக்கு.
(நுழைந்துகொண்டே)

பாரம்மா,நான்திரும்பி வந்துவிட்டேன் உன்னுடைய
ஊர்சுற்றிப் பையன்நான்! உதவாக் கரையும்நான்!
நீபெற்ற நாடோடி, திரிந்தலைந்(து) அலுத்துவிட்டேன்!
பேர்பெற்ற சோம்பேறிப் பிள்ளைநான் வந்துவிட்டேன்!
சீர்பெற்ற நின்கையில் கிடந்திருக்கும் தாகமுடன்!
நேரிலின்று காண்கின்றேன் நின்முறுவல் மிகநன்று!

ஆமீனா:

மிகமிக அதிக அன்பான மகனே!

நூரெதீன்:

இதுவென் தூன்யா, என்னுயிர்த் தங்காய்,
ஈதென் முகமிதே! ஈதென்ன கோலம் ?

தூன்யா:

இதுதான் கடுமை,,இதுமிகக் கடுமை,
காட்டுதென் முகமும் கடுமையை உனக்கே.
கண்ணெதிர் கண்டும் கலங்கா யோநீ? 
இல்லையா என்ன ?
அலைந்து திரியும் அண்ணா நீயே
அப்பட் டமாக அறிந்திடு மெய்யை.
கடுப்பைக் காட்ட கவனமாய் நாங்கள்
ஒன்றாய் ஒத்திகை செய்துகொண் டிருந்தோம்
நச்சுப் பாம்பென நயனம் கணையை
விட்டுனைக் குலையச் செய்திட வேண்டியும்
கூர்முனைக் கத்தியை வெல்லும் சொல்லால்
கனற்பொறி பறக்கச் சுட்டுப் பொசுக்கவும்.
முடிந்தது முயன்றோம் முடியுமுன் அதுவே
வேதனை உனக்கு விளைத்திருந் திருக்குமோர்
சோகக் காட்சியும் தோன்றியி ருக்குமே.
அன்னையைக் கேட்பாய் மீதம் அனைத்தும்

AMEENA
Heed her not, Nureddene. But tell me, child,
Is this well done to wander vagrant-like
Leaving your mother to anxieties
And such alarms? Oh, we will have to take
Some measure with you!

DOONYA
Oh, now, now, we are stern!

ஆமீனா:

ஓதிடும் இவள்மொழி காதினில் கொள்ளேல்,
நூரெதீன்,
எனினும், குழந்தாய்,எனக்கொன்(று) உரைத்திடு.
தன்னந் தனியே அன்னையை விடுத்துநீ  
பதற்றமும் கவலையும் பயமும் தரும்படி
நாடோடி போலே ஓடித் திரிவது
நன்றோ செய்தாய், நலமே தருமோ?
இதற்கோர் முடிவு கட்டிட நின்மேல்
நடவடிக் கைநான் எடுத்திட வேண்டும்.

தூன்யா:

இப்போ(து) ஆகா, இப்போது நாங்கள்
கண்டிப் பன்றோ காட்டு கின்றோம்!

NUREDDENE
Mother, I only range abroad and learn
Of manners and of men to fit myself
For the after-time.

நூரெதீன்:

அந்நிய நாடுகள் அலைந்தேன் அம்மா,
ஆடவர் பழக்கமும் அவர்தம் நடையுடை
அனைத்தையும் அறிந்திவண் வந்தேன் அம்மா
இனிவரும் நாள்களில் இனிதுநான் நடக்க.

DOONYA

True, true, and of the taste
Of different wines and qualities of girls;
What eyes Damascus sends, the Cairene sort,
Bagdad’s red lips and Yemen’s willowy figures,
Who has the smallest waist in Bassora,
Or who the shapeliest little foot moonbright
Beneath her anklets. These are sciences
And should be learned by sober masculine graduates.
Should they not, cousin?

தூன்யா:

மெய்யே, மெய்யே, மேலும் அறிந்தது
விதவித மதுவில் விளங்கும் சுவையும்
மங்கையர் தரமும் அங்கவர் மணமும்;
தமாஸ்கஸ் நகரினர் தண்ணார் கண்ணும்
கெய்ரோ நகரின் தையலர் வகையும்
சீர்மிகு பாக்தாத் செவ்விதழ்ச் சிறப்பும்
ஓங்கி வளர்ந்திடும் மூங்கிலைப் போலும்
ஏமன் மகளிரின் எழிலார் மேனியும்
பஸ்ஸோரா நகரின் பாவையர் இடையே
இடைமிகு மெலிந்தவர் யாரென்(று) அறிதலும்
புலம்பும் சிலம்படி பொலிவுடன் திகழும்
வடிவினிற் சிறந்த வடிவுடன் வாய்ந்த
வெண்ணில வெனவொளிர் வண்ணச் சீறடி 
எவர்பதம் என்றே தவறா(து) அறிதலும்.
அறிவியல் சாத்திரம் ஆகிய இவையெலாம்
கட்டுடல் காளையர் கற்றுத் தெளிந்திட
வேண்டிய விதவிதத் தேவை. அவரிவை
அறிந்திடக் கூடா தாவென் அண்ணா ?

Lalitha & Suryanarayanan

unread,
Oct 21, 2021, 8:00:01 PM10/21/21
to santhav...@googlegroups.com
அங்கம் 2 களம்  2 தொடர்கிறது ..

பஸ்ஸோரா அமைச்சர்கள் 22

NUREDDENE

These too are not amiss,
Doonya, for world-wise men. And do you think,
Dear mother, I could learn the busy world
Here, in your lap, within the shadowy calm
Of women’s chambers?


நூரெதீன்:

இவற்றிலும்  கூடத்  தவறிலை , தூன்யா,
அகிலம் அறியத் துடிப்பவர் தமக்கே.
அமைதியின் நிழலில் அந்தப் புரத்தில்
அன்னையுன் மடிநான் நன்கமர்ந் திருந்தால்
வேகம் இயங்கும் விரிபுவ னத்தை,
அன்புடை அன்னையே அறிவ(து) இயலுமா?

AMEENA

No, child, no. You see,
Doonya, it is not all so bad, this wandering.
And I am sure they much o’erstate his faults
Who tell of them.

DOONYA

Oh, this is very grim!

ஆமீனா:

இல்லை குழந்தாய், இல்லை இல்லை.
பாரிதை தூன்யா, 
அலைந்து திரிந்து நாலிடம் பார்த்தல்
அப்படிக் கெடுதலாய் அவனியில் எனக்குத்
தோன்றிட விலையே, சொல்லுவேன் எனவே
அவனது பிழையென அடுக்கிடு வோர்கள்
ஒன்றைப் பத்தாய் உரைக்கிறார் என்பேன்.

தூன்யா:

ஆகா, இதுமிக பயங்கரக் கடுமை!

AMEENA
But, Nureddene, you must not be so wild;
Or when we are gone, what will you do, if now
You learn no prudence? All your patrimony
You’ll waste, — and then?

ஆமீனா:

எனினும், நூரெதீன், இப்படிப் புவியில்
கட்டற்  றெங்கும் காலிடல் நலதிலை;
ஒருநாள் இல்லை யொருநாள் நாங்கள்
விட்டகல் வோம்புவி, விட்டதன் பின்னே
என்செய் வாயோ, இப்பொழு தேநீ
எச்சரிக் கையைக் கற்றிலை என்றால்?
தந்தை வழியில் சொந்தமாய்ச் சேர்ந்திடும்
அத்தனை சொத்தும் வீணே கரையும், -
அதன்பின் நீயே என்செய் வாயோ?

NUREDDENE

Then, mother, life begins.
I shall go forth, a daring errant-knight,
To my true country out in faeryland;
Wander among the Moors, see Granada,
The delicate city made of faery stone,
Cairo, Tangier, Aleppo, Trebizond;
Or in the East, where old enchantment dwells,
Find Pekin of the wooden piles, Delhi
Of the idolaters, its brazen pillar
And huge seven-storied temples sculpture-fretted,
And o’er romantic regions quite unknown
Preach Islam, 
sword in hand; sell bales of spice
From Bassora to Java and Japan;
Then on through undiscovered islands, seas
And Oceans yet unnamed; yes, everywhere
Catch Danger by the throat where I can find him,


நூரெதீன்:

அம்மா,வாழ்க்கை அதன்பினர் தொடங்கும்.
வீர தீர சாகசம் செய்திட
அஞ்சா நெஞ்சனாய் அலைந்து திரிவேன்,
என்றன் சொந்த தேசம் கண்டிட
தேவதை உலகம் சென்றிடு வேனே;
ஊர்பல சுற்றுவேன் மூரியர் உடனே.
வியனுல கதிலே விளங்கும் கற்களால்
நேர்த்தியாய்ச் செய்துள கிராணடா காண்பேன்,
செய்தவப் பயனாய் கெய்ரோ காண்பேன்,
ஆங்குநான் கண்பேன் டாங்கியே நகரும்
கோலம் மிகுந்த ஏலப் போவும்
திரிபிஸோன் நகரின் செல்வச் செழிப்பும்
கண்டு வியந்ததன் பின்னர் ஆகா
கீழைத் திசையில் கால்நான் இடுவேன்.
மந்திர மாயம், தந்திரம் பார்ப்பேன்
பழம்பெரும் பெருமையைப் பார்த்துளம் மகிழ்வேன்
பெகிங்கு நகரின் பெருமையைப் பார்ப்பேன்.
மரத்தால் ஆன மாடங்கள் காண்பேன்
தில்லித் திருநகர் கோயில்கள் காண்பேன் ,
சிலைவழி பாட்டைச் செய்பவர் காண்பேன்
ஓங்கி உயர்ந்த உலோகத் தூண்கள்,
அற்புதச் சிற்ப வேலைப் பாட்டின்
விற்பனம் காட்டும் விண்ணைத் தீண்டும்
ஏழேழ் அடுக்குடை எழிலார் கோபுரம்
எல்லாம் காண்பேன் இன்புற் றிருப்பேன்.
வீரமும் காதலும் விளங்கிடும் பற்பல
முன்பின் காணா மண்டலம் எல்லாம்
இஸ்லாம் மதத்தை இனிது பரப்புவேன்,
வாளை யென்றன் தோளது ஏந்தும்,
மூட்டை மூட்டையாய் மிளகு முதலிய
அற்புதப் பொருட்கள் விற்பனை செய்வேன்
பஸ்ஸோரா இருந்து சாவகம், ஜப்பான்
எல்லாம் செல்வேன்;,எங்கும் அலைந்தே
கண்டறி யாத தீவுகள் காண்பேன்,
கடந்தறி யாத கடல்களும் காண்பேன்,
பேரெதும் இடாத பெருங்கடல் காண்பேன்;
ஆமாம், ஆமாம், ஆபத் தெதிரில்
நிற்கும் இடமெலாம் நேரினில் சென்றே
பிடரியைப் பிடித்ததை உலுக்குவேன் நன்றே,--

DOONYA
Butcher blood-belching dragons with my blade,
Cut ogres, chop giants, tickle cormorants, —

தூன்யா:

கனலும் குருதியும் கக்கிடும் டிராகன்
என்னும் பெரும்கொடும் விலங்கெதிர் கண்டால்
கொன்று போடுவேன் கூர்வாள் அதனால்,
பூதப் பேய்கள் பிசாசுகள் கண்டால்
கண்ட துண்டமாய் வெட்டிப் போடுவேன்,  
கடல்வாழ் பறவைகள் உடல்நான் தொட்டே
சிலிர்த்திடச் செய்வேன், சிரித்திடச் செய்வேன், --

NUREDDENE
Then in some land, I have not settled which, —


நூரெதீன்:

பின்னும் விதவித பெருநிலப் பரப்புகள்,
இன்னும் எவையென அறியா நாடுகள். --

DOONYA
Call it Cumcatchia or Nonsensicum


தூன்யா:

எட்டா நிலமோ முட்டாள் நிலமோ
எப்படி யோவதை பேரிட் டழைப்பாய்.

சிவசூரி 

(தொடரும்)































































Lalitha & Suryanarayanan

unread,
Oct 23, 2021, 2:39:22 AM10/23/21
to santhav...@googlegroups.com
பஸ்ஸோரா அமைச்சர்கள் 23

அங்கம் 2, களம் 2 தொடர்கிறது ..

NUREDDENE
Marry a Soldan’s daughter, sweet of eye
And crowned with gracious hair, deserving her
By deeds impossible; conduct her armies
Against her foemen, enter iron-walled
Cities besieged with the loud clang of war,
Rescue imperilled kingdoms, mid the smoke
Of desperate cities slay victorious kings,
And so extend my lady’s empire wide —

DOONYA
From Bassora to the quite distant moon.

நூரெதீன்:

அங்கோர் சுல்தான் மங்கையை மணப்பேன்,
அணிமணி முடிபோல் அலக பாரமும்
இன்னரும் விழிகளும் ஏந்திய வளவள், 
செயற்கரும் தீரச் செயல்கள் செய்தத்
தையலைப் பெறுகிற தகுதியைப் பெறுவேன்;
யானவள் சேனையின் தலைவனாய் நின்றவள்
எதிரியை அழிக்கப் படையெடுத் திடுவேன்,
இரும்புக் கோட்டை நகரங்கள் கூட
முற்றும் தகர்த்திட முற்றுகை இடுவேன் 
ஓங்கிய ஒலியுடன் ஆங்குநான் புகுவேன்;
ஆபத்தில் உள்ள அரசுகள் மீட்பேன்
எண்ணில் நகரம் எரிதழல் உண்ணவும்
வெற்றிச் செருக்கில் மிதந்திருந் தவராம்
மன்னவர் பலரை மாய்த்திடு வேன்நான்,  
என்றன் தேவியின் எழிலார் நாட்டை
இப்படி எங்கும் விரிவாக் கிடுவேன் --

தூன்யா:

மிகமிகத் தொலைவில் மின்னிடத் தெரியும்
வெண்ணிலா வரையே விரியும் பஸ்ஸோரா.


NUREDDENE
There I shall reign with beauty and splendour round
In a great palace built of porphyry,
Marble and jasper, with strange columns made
Of coral and fair walls bright-arabesqued
On which the Koran shall be written out
In sapphires and in rubies. I will sit
Drinking from cups of gold delightful wine,
Watching slow dances, while the immortal strain
Of music wanders to its silent home.
And I shall have bright concubines and slaves
Around me crowding all my glorious house
With beautiful faces, thick as stars in heaven.
My wealth shall be so great that I can spend
Millions each day nor feel the want. I’ll give
Till there shall be no poor in all my realms,
Nor any grieved; for I shall every night,
Like Haroun Alrasheed, the mighty Caliph,
Wander disguised with Jaafar and Mesrour
Redressing wrongs, repressing Almuenes,
And set up noble men like my dear father
In lofty places, giving priceless boons,
An unseen Providence to all mankind.

நூரெதீன் :

ஆங்குநான் ஆள்வேன் சீரும் சிறப்புடன்
மரகத, மாணிக்க இரத்தினப் பாறையும்
பளிங்குக் கல்லும் பாங்குற வைத்தே
அழகுறப் பண்ணிய அரண்மனை இருந்தே,
செக்கச் சிவந்த  பவழத் தூண்கள்
பக்கம் எங்கும் பரவசம் ஊட்டும்
அரபு நாட்டின் அழகிய சித்திர
வேலைப் பாடுகள் விளங்கும் சுவரில்
நீலம் சிவப்பு முதலிய கல்லால்
திருக்குரான் வாசகம் தீட்டி யிருக்கும்.
அரண்மனை தன்னில் அமர்ந்திருந் தவனாய்
பொன்னார் கோப்பையில் பொங்கும் மதுவைச்
சுவைத்துச் சுவைத்துப் பருகிடு வேனே,
மெல்லிய லார்கள் மெள்ள அசைந்தே
ஆடக் கண்டே ஆனந் தித்தே,
திசையெங்கும் பரவும் தெய்வீக இசையொலி
மனையின் அமைதியில் மகிழ்த்திடு கையிலே.

பொன்னென மின்னும் பூவையர் தாசிகள்
என்றுமே என்னைச் சூழ்ந்திருப் பாரே.
இன்னரும் இன்பம் தந்திடும் அவர்களும்
ஆயிரம் அழகிய அடிமை மகளிரும்
வாரித் தெளித்த தாரகை போலென்
மாமனை தன்னில் வடிவுடை முகத்துடன்
வளைய வளைய வந்திடு வார்கள்.

எண்ணிலா நிதியம் என்னிடம் இருக்கும்,
தினம்தினம் மனம்போல் செலவழித் தாலும்
கூவிக் கூவிக் குடிபடை அழைத்துக்
கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தும்  
குறையா தென்னிடம் நிறைந்து திகழும்.
ஏழை யெனவே எவரும் இலையென்
நாட்டினில் என்றே நவிலும் படியே
கொள்ளெனக் கொடுத்துக் கொண்டே இருப்பேன்.
மனத்தில் குறையின்றி மகிழ்வர் மக்கள்.
மாவலி படைத்த மாண்புடைக் கலீஃபா 
ஹரெளன் அல் ரஷீது போலவே நானும்
ஜாஃபர், மெஸ்ரூர் சேர்ந்துடன் வந்திட
ஒவ்வோர் இரவும் வெவ்வேறு வேடம்
பூண்டு திரிந்து யாண்டும் மக்களின்
மனக்குறை எனவென மன்னன்நான் அறிவேன்,
தவறுகள் போக்கிச் சரிசெய் திடுவேன்,
அடக்கி வைப்பேன் அல்மியூன் கள்தமை,
என்றன் அன்புத் தந்தையைப் போலும்
உன்னத மக்களை உயர்ந்த பதவியில்
வைத்திடச் செய்வேன், அத்துடன் அன்றி
விலைமதிப்(பு) இல்லாப் பரிசுகள் தருவேன்,
கண்டறி யாத கருணைகள் செய்வேன்,
குடிபடைக் கெல்லாம் கொடைநிழல் கொடுப்பேன்.

DOONYA
And you will marry me, dear Nureddene,
To Jaafar, your great Vizier, so that we
Shall never part, but every blessed night
Drink and be merry in your halls, and live
Felicitously for ever and for aye,
So long as full moons shine and brains go wrong
And wine is drunk. I make my suit to you from now,
Caliph of Faeryland.

தூன்யா:

அன்பு நூரெதீன் அண்ணா என்னையுன்
சீர்மிகு மந்திரி ஜாஃபருக்குத் திருமணம்
செய்தளிப் பாயா,செய்தளித் தால்நாம்
இருவரும் பிரிந்திடும் நிலைவா ராதே.
இனியநல் இரவுகள் இன்பினைச் சிந்த,
மதுநிறைக் கிண்ணம் மலரிதழ் முந்த,
கொற்றவன் கூடங்கள் கூடிக் களிப்போம்.
வாழ்வாங்கு வாழ்வோம் வையத்தில் என்றும்
ஆமாம் ஆமாம் எனச்சொலும் அகிலம்,
பூரண நிலவுகள் பொலிந்திடும் வரையே,
புந்திகள் மயங்கிக் கிடக்கும் வரையே,
மதுவே மனத்தில் மணக்கும் வரையே.
பொன்னுல காளும் என்னுயிர் கலீஃபா
வேண்டுகி றேனுமை இப்போ திருந்தே.



NUREDDENE
Your suit is granted.
And meanwhile, Doonya, I amuse myself
With nearer kingdoms, Miriam’s wavy locks
And Shazarath-al-Durr’s sweet voice of song.

நூரெதீன்:

வேண்டுகோள் மனுவை ஏற்றுக் கொண்டேன்.
இதற்கிடை யேநான் இனியே, தூன்யா,
அக்கம் பக்கம் இருக்கும் நாடுகளில்
உல்லா சமாக உலவுதல் செய்தே
சுந்தரி மிரியாம்  சுருள்முடி காண்பேன்
அசையும் குழலில் அலைகளைக் காண்பேன்
இன்னரும் குரலாள் ஷாஸரத் அல் துர்
இசையில் என்னை இழந்திருப் பேனே.

சிவசூரி 

(தொடரும்)



Lalitha & Suryanarayanan

unread,
Oct 23, 2021, 8:06:48 PM10/23/21
to santhav...@googlegroups.com

பஸ்ஸோரா அமைச்சர்கள் 24

அங்கம் 2, களம் 2 தொடர்கிறது....

DOONYA
And meanwhile, brother, till you get your kingdom,
We shall be grim, quite grim.

தூன்யா:

இதற்கிடை என்றன், அண்ணா, நீயே
நீஉன் இராச்சியம் பெற்றிடும் வரையே
கண்டிப் பதனைக் காட்டுவோம் நாங்கள்
கண்டிப் பெனில்மிகக் கண்டிப் பாகும்.

AMEENA

Your father’s angry.
I have not known him yet so moved. My child,
Do not force us to punish you.

ஆமீனா:

சீறிடு கின்றார் நின்றன் தந்தை
இத்தனை சினத்தை இந்நாள் வரையே
கண்டதி லையே, என்னரும் குழந்தாய்,
தண்டனை தந்திடச் செய்யேல் மகனே.

NUREDDENE

With kisses?
Look, Doonya, at these two dear hypocrites,
She with her gentle honey-worded threats,
He with his stormings. Pooh! I care not for you.

நூரெதீன்:

முத்தத் தாலே மோதுதல் செய்தா?
இங்குபார், தூன்யா, இந்த இருவரும்
காதலைப் பொழியும் கபட தாரிகள்  
மதுவாய் இனித்து மனமிகக் கனிந்து
இனிக்கும் மொழியால் இவளெனை மிரட்ட,
புயலெனப் பாய்ந்து பொழிவார் அவரோ.
பூ இவர் சொல்லைப் புறக்கணிப் பேனே.

AMEENA
Not care!

NUREDDENE

No, not a jot for him or you,
My little mother, or only just so much
As a small kiss is worth.

ஆமீனா:

புறக்கணிப் பாயா?

நூரெதீன்:

இல்லை, இல்லை, இம்மியும் இல்லை,
உனக்கும் இல்லை அவர்க்கும் இல்லை,
கொஞ்சும் குஞ்சுத் தாயல் லவாநீ,
சின்னஞ் சிறிய செந்தேன் முத்துக்(கு)
என்னவோர் விலைதனை ஈவோ மோவதே.

AMEENA

I told you, Doonya,
He was the dearest boy in all the world,
The best, the kindest.

ஆமீனா:

சொன்னேன் அல்லவா முன்னமே, தூன்யா,
இனிதிப் பையன்,இனிதிவன் பேச்சு,
இனிதிவன் காதல், இதற்கெது நிகரே,
சாலச் சிறந்தவன் கோலப் புவியிவன்.

DOONYA

Oh yes, you told me that.
And was the dearest boy in all the world
Rummaging the regions for the dearest girl,
While the admiring sun danced round the welkin
A triple circuit?

தூன்யா:

சொன்னாய், ஆமது, சொல்லி யிருக்கிறாய்.
இனிதாம் புவியில் இனிதிவன் தானே
குடைந்து குடைந்து குவலய மெங்கும்
அலைந்து தேடி ஆய்ந்தன னோவிவன்,
அன்பிற் சிறந்தவள் எங்குளாள் என்றே ?
காலையில் தோன்றி மாலையில் மறையும்
கதிரவன் பார்த்திதைக் களிநடம் புரிந்து
வான்மிசை இதற்குள் வட்டம் அடித்தான்
ஒருமூன்று முறையே ஓய்வெதும் இன்றி.

NUREDDENE
I have found her, Doonya.

DOONYA
The backward glance?

AMEENA
Your father!

Enter Ibn Sawy.


நூரெதீன்:

கண்டு கொண்டேன் அவளை,, தூன்யா.

தூன்யா:

பின்னோக்குப் பார்வையதோ ?

ஆமீனா:

உன்றன் தந்தை!

IBN SAWY

Ameena,
I’m called to the palace; something is afoot.
Ah, rascal! ah, you villain! you have come?

NUREDDENE
Sir, a long hour.

இபின் ஸாவி :

ஆமீனா,

அரண்மனைக் கென்னை அழைத்திருக் கின்றார்;
எங்கோ எதுவோ நடக்கின் றதுபோல்.
ஏ ஏ போக்கிரி! ஏ பொல்லா தவனே!
வந்து விட்டா யாயிங்கு?

நூரெதீன்:

மேன்மை மிக்க ஐயா, நான்வந்(து)
ஒருமணி நேரம் ஓடி விட்டதே!

IBN SAWY

Rogue! scamp! what do you mean?
Knave, is my house a caravanserai
For you to lodge in when it is your pleasure?

இபின் ஸாவி:

போக்கிரிப் பயலே! வேலை யற்றவா!
சொல்லிய சொல்லுக்குப் பொருளென்ன பொருளோ?
வீணா னவனே!  வெட்டிப் பயலே!
என்றன் வீடென்ன சத்திரமா, சாவடியா,
இட்டம் போலே இவ்விடம் நீவர?

NUREDDENE
It is the happiest home in Bassora,
Where the two kindest parents in the world
Excuse their vagabond son.

நூரெதீன்:

பார்த்தால் தெரியும் பஸ்ஸோரா எங்கும்
இன்பிற் சிறந்த இல்லம் இதுதான்!
ஓடோடிச் செல்லும் நாடோடி மகனை
மன்னித் தருளும் மாண்புடை யாராய்
அன்பிற் சிறந்த அன்னையர் தந்தையர்
இப்புவி யெங்குமே இப்படி யிலையே.

IBN SAWY

Hum! well! What, fellow,
You will buy trinkets? you will have me dunned?
And fleeced?

NUREDDENE
Did he dun you? I hope he asked
A fitting price; I told him to.

IBN SAWY

Sir, sir,
What game is this to buy your hussies trinkets
And send your father in the bill? Who taught you
This rule of conduct?

NUREDDENE
You, sir.

IBN SAWY
I, rascal?

NUREDDENE

You told me
That debt must be avoided like a sin.
What other way could I avoid it, sir,
Yet give the trinket?

IBN SAWY

Logic of impudence!
Tell me, you curled wine-bibbing Aristotle,
Did I tell you also to have mistresses
And buy them trinkets?

இபின் ஸாவி:

உம்ம்ம்,என்னடா, செயலிது என்னடா,
நாளும் வாங்குவாய் நகைநட் டெல்லாம் ?
விலையை என்றன் தலையில் கட்டுவாய்?
வட்டிப் பணம்போல் வசூல்செயச் சொல்வாய்?

நூரெதீன்:

உம்மிடம் பணத்தைக் கேட்கின் றானா?
மிகுதியாய் ஒன்றும் கேட்டிட விலையே
தகுந்த விலையே கேளெனச் சொன்னேன்.

இபின் ஸாவி:

என்னய்யா, சின்னய்யா, ஈதென் ஆட்டம்?
ஆசைப் பெண்டிர்க்கு அணிமணி வாங்குவாய்,
காசை அப்பனிடம் கறந்துகொள் என்பாய்?
யார்சொலிக் கொடுத்தார் இந்த நடத்தையை?

நூரெதீன்:

நீர்தாம் ஐயாவே.

இபின் ஸாவி:

நானா, போக்கிரிப் பயலே?

நூரெதீன்:

கடனையோர் பாவமாய்க் கற்பித் ததுநீர்
உடனதைக் கழித்திட உணர்த்திய தும்நீர்
வழிவே(று) உள்ளதோ கழித்திட எனக்குப்
பழியின்றி நகையைப் பாவையர்க் களிக்க?

இபின் ஸாவி:

குசும்புத் தர்க்கம்!
இனிதோர் கரத்து மதுவை மாந்தி,
இனிதே நாவில் தர்க்கம் ஏந்தும்
சுருள்முடி சூடிய அரிஸ்டாட் டிலுனை
பங்கில் பற்பல மங்கையர் கொண்டே
இங்கே இருவென இயம்பின னாநான்,
தங்கம் வாங்கித் தாவென் றேனா?


NUREDDENE
Not in so many words.

IBN SAWY
So many devils!

NUREDDENE

But since you did not marry me
Nor buy a beautiful slave for home delight,
I thought you’ld have me range outside for pleasures
To get experience of the busy world.
If ’twas an oversight, it may be mended.

IBN SAWY
I’m dumb!

NUREDDENE
There is a Persian Muazzim sells,
Whom buy for me, — her rate’s ten thousand pieces —

IBN SAWY
A Persian! Muazzim sells! ten thousand pieces!
(to himself )
Where grows this tangle? I become afraid.

நூரெதீன்:

இத்தனை வார்த்தையில் இயம்பிட வில்லை.

இபின் ஸாவி:

எத்தனைப் பிசாசுகள்!

நூரெதீன்:

இருந்தும் எனக்குச் செயவிலை திருமணம்,
அழகிய அடிமை ஒருத்தியைக் கூட
ஈங்குநீர் வாங்கித் தரவிலை யெனவே
வீட்டினில் இன்புடன் விளங்கிட வேண்டின்.
இயங்கிக் கொண்டே இருக்கும் நாட்டில்
நடப்பதை யெல்லாம் நன்கறிந் திடவே
அனுபவம் வேண்டி அலைந்திட வேண்டும்
என்பதே உம்முயர் எண்ணமாய்ப் பட்டது.
சரியிலை யெனிலது.சரிசெயப் படுமே.

இபின் ஸாவி:

பேச்சு மூச்சின்றிப் போனே னேநான்!

நூரெதீன்:

பார சீகப் பாவை ஒருத்தி
விற்பனைக்(கு) இருக்கிறாள் முவாஸீம் கடையில்,
ஆங்கவள் தன்னை வாங்கித் தருவீர், --
ஐந்திரண் டாயிரம் அவளது விலையாம்.

இபின் ஸாவி:

பார சீகப் பாவை! முவாஸீம் கடையில்!
ஐந்திரண் டாயிரம் !
(தனக்குள்)
ஈதென் சிக்கல் ? யான்பயம் அடைந்தேன்.

NUREDDENE
Whom buy for me, I swear I’ll be at home
Quite four days out of seven.

IBN SAWY

Hear me, young villain!
I’m called to the palace, but when I return,
Look to be bastinadoed, look to be curried
In boiling water. (aside) I must blind him well.
Ten days I shall be busy with affairs;
Then for your slavegirl. Bid the broker keep her.
Oh, I forgot! I swore to pull your curls
For your offences.

NUREDDENE

I must not let you, sir;
They are no longer my own property.
There’s not a lock that has not been bespoken
For a memento.

IBN SAWY
What! what! Impudent rascal!

(aside)
You handsome laughing rogue! Hear, Ameena,
Let Doonya sleep with Anice every night.
No, come; hear farther.

Exit with Ameena.

நூரெதீன்:

அவளையே எனக்கு வாங்கி அளிப்பீர்.
சத்தியம், வீட்டிலே தங்குவேன் அதன்பின்,
ஏழில் முழுதாய் இருப்பேன்  நான்குநாள்.

இபின் ஸாவி:

சின்னக் கயவா, சேதியைக் கேட்பாய்!
அரண்மனைக்(கு) என்னை அழைத்துள் ளார்கள்,
வேளை வரும்நான் மீண்டதன் பின்னே.  
காத்துக் கிடவுன் உள்ளங் காலுடன்
வீசும் சவுக்கு வேகம் பேசவும்,
கொதிநீர் தனிலுனை போட்டுப் புரட்டவும்.  
(தனக்குள்)
இவன்விழி படாமல் இருத்திட வேண்டும்.
அரண்மனை வேலையில் ஆகுமே பத்துநாள்;
அதன்பின் உன்றன் அடிமையைப் பார்ப்போம்.
விற்கா திருக்க வேண்டுக தரகனை.
மறந்தே போனேன்! நின்றன் சுருள்முடிக்
கற்றையைப் பற்றிப் பிடுங்குவேன் நின்றன்
குற்றங் கட்குக் கொடுக்கும் தண்டனை
என்றுநான் அங்கே இட்டுளேன் சபதம்.

நூரெதீன்:

அதற்கென் அனுமதி உமக்கிலை, ஐயா;
அவையெலாம் இப்போ(து) எமதிலை கண்டீர்.
மிச்சம் மீதி சொச்சம் விடாமல்
தருவதாய் அவற்றைத் தந்துளேன் வாக்கு
நீங்கா(து) இருக்கும் நினைவுப் பரிசாய்.

இபின் ஸாவி:

ஈதென்! ஈதென்! வெட்கமில் போக்கிரி!

(தனியே)
பொக்கென்று நகைக்கும் பொல்லா அழகன்!
சொல்கேள், ஆமீனா, ஒவ்வோர் இரவும்
தூன்யா அனீஸியுடன் தூங்குக இங்கே.
இல்லை, இல்லை; இங்குவா அப்பால்.


அமீனாவுடன் வெளியேறுகிறான்.

சிவசூரி

(தொடரும்)

Lalitha & Suryanarayanan

unread,
Oct 24, 2021, 10:28:36 PM10/24/21
to santhav...@googlegroups.com
பஸ்ஸோரா வாஜிர்கள் 25

அங்கம் 2, களம் 2

NUREDDENE
O Doonya, Doonya, tall, sweet, laughing Doonya!
I am in love, — drowned, strangled, dead with longing.


நூரெதீன்:

தூன்யா தூன்யா என்றுன் பேரைச் சொல்லச் சொல்ல
தோன்றும் இன்பம் துணையாய் ஆகும் தங்காய், தங்காய்!
முன்னம் ஓங்கி நிற்கும் உன்னைக் கண்டேன் கண்டேன்,
இன்பப் பாகாய் சிரிக்கின் றாயே இங்கே இங்கே!

காதல் காதல் காதல் மோதக் கண்டேன் கண்டேன்
காதற் கயிற்றைக் கழுத்தில் கட்டிக் கொண்டே கொண்டே
மூழ்கிப் போனேன் மோகக் கடலில் முற்றும் முற்றும்
ஆசைக் கடலில் அலைகின் றேனே அங்கும் இங்கும்

DOONYA
For the world’s Persian? But she’s sold by now.

தூன்யா:

பார சீகப் பாவை தானோ
நேரில் இந்தப் பாரில் எங்கும்?
ஆயின், அடடா, அந்தப் பேதை
விலைபோ யினளே முன்னம் முன்னம்!

NUREDDENE
I asked Muazzim.

DOONYA
A quite absolute liar.

NUREDDENE


நூரெதீன்:

முவாஸீ மைநான் கேட்டேன், கேட்டேன்.

தூன்யா:

மெய்யே கலவாப் பொய்யன், பொய்யன்.

NUREDDENE
O if she is, I’ll leave all other cares
And only seek her through an empty world.

நூரெதீன்:

இன்னும் அவளே இருப்பின் அவளே வேண்டும் வேண்டும்,
வெற்றுப் புவியில் மற்றெல் லாமும் வேண்டேன் வேண்டேன்.

DOONYA
What, could one backward glance sweep you so forward?

தூன்யா:

ஈதென் ஆனது,
பின்னே திரும்பிப் பார்த்த பார்வை ஒன்றே உலகில்தான்
என்னே  இத்தனை முன்னே உன்னை ஈர்த்துச் செலுத்தியதோ?

NUREDDENE
Why, Doonya!

DOONYA

Brother, I know a thing I know
You do not know. A sweet bird sang it to me
In an upper chamber.


நூரெதீன்:

ஈதென், தூன்யா!

தூன்யா:

அண்ணா, ஒன்றை அறிவேன் நானே, அதைநீ அறியாயே,
பண்ணார் பறவை மாடம் இருந்தே பாடிய தென்னிடமே.

NUREDDENE
Doonya, you’re full of something,
And I must hear it.

DOONYA
What will you give me for it?
None of your nighthawk kisses, cousin mine!
But a mild loving kind fraternal pledge
I’ll not refuse.


நூரெதீன்:

கொள்ளை கொள்ளையாய் ஏதோ சேதி கொண்டு நிற்கின்றாய்,
அள்ளி யெடுத்தே அதனைச் சொல்வாய், அண்ணன் கேட்கின்றேன். 

தூன்யா:

கொடுத்தால் என்ன கொடுத்திடு வாய்நீ?
இரவெலாம் எங்கும் சுற்றித் திரியுமுன்
முத்தம் ஒன்றும் வேண்டேன் அண்ணா!
ஆயினுன் ஆசைத் தங்கை நீதரும்
சின்னஞ் சிறிதாய் அன்பில் தோய்ந்தவோர்
உறுதி மொழியை வேண்டா(து) ஒதுக்கேன்.

NUREDDENE

You are the wickedest, dearest girl
In all the world, the maddest sweetest sister
A sighing lover ever had. Now tell me.


நூரெதீன்:

பொல்லார் எவரும் நில்லார் நிகரெனப்
பொல்லா தவளாம் பூவைநீ,
அன்பா னவரில் அதிகம் அன்பாய்
என்பால் நிற்கும் எழிலும்நீ,
பித்தா னவரில் அதிகம் பித்தாய்
சொத்தாய்த் தோன்றும் சோதரிநீ,
இனிதா னவரில் அதிகம் இனிதாய்
இன்பம் தருகிற தங்கைநீ,
காதலில் ஏங்கும் காளையர் எவரே
சோதரி நின்போற் பெற்றுள்ளார்?
சொல்லுக சொல்லுக சொல்லுக சோதரி
நில்லா துடனே சொல்லுகவே!

DOONYA
More, more! I must be flattered.

தூன்யா:

இன்னும் அதிகம், இன்னும் அதிகம்,
இன்னும் என்புகழ் பாடுகவே!

NUREDDENE
No more. Come, mischief,
You’ll keep me in suspense?
(pulls her ears)

நூரெதீன்:

இல்லை, இல்லை மேலும் இல்லை.
சேதி ஏதும் சொல்லா தென்னைச்
சீண்டுகி றாயா வேண்டும் எனநீ?
என்ன செய்கிறேன் நின்னைப் பாரினி.

( அவள் காதுகளைப் பற்றி இழுக்கின்றான்))

DOONYA

Enough, enough!
The Persian — listen and perpend, O lover!
Lend ear while I unfold my wondrous tale,
A tale long, curled and with a tip, — Oh Lord!
I’ll clip my tale. The Persian’s bought for you
And in the upper chambers.


தூன்யா:

போதும், போதும்! இனிமேல் அந்தப்
பார சீகப் பாவையைப் பற்றிய
விந்தைக் கதையை விரிவாய்க் கூறுவேன்.
காதலன் நின்றன் காதுகள் கேட்க!
கண்ணும் கருத்துமாய் காதையைக் கேட்க!
நீளும் கதையில் திருப்பங்கள் நிகழும்!
இரகசியம் ஒன்றும் இதில்நான் சொல்வேன் , -
ஓ, ஆண்டவனே! என்னை விடுநீ,
சரிசரி கதையைச் சுருக்கமாய்ச் சொல்கிறேன் 
வாங்கிக் கொணர்ந்தனர் ஈங்குனக் காக,
ஆங்கவள் உள்ளாள் மேன்மா டத்தில்.

NUREDDENE
Doonya, Doonya!
But those two loving hypocrites, —

DOONYA
All’s meant
To be surprise.

NUREDDENE

Surprise me no surprises.
I am on fire,Doonya, I am on fire.
The upper chambers?


நூரெதீன்:

தூன்யா, தூன்யா!  ஆயின் அந்த
நெஞ்சினில் அன்பினை ஏந்தியே நின்றும்
போலியாய் வேடம் போடுமவ் விருவர், --

தூன்யா:

எல்லாம் திகைப்பை இனிதளிக் கத்தான்.

நூரெதீன்:

திகைப்பின் மேலொரு திகைப்பினி வேண்டாம்.
என்செய் வேனோ, ஏதுசெய் வேனோ!
ஐயோ, தூன்யா, அறியே னேநான். 
மாடியில் தானே?

DOONYA
Stop, stop! You do not know;
There is an ogre at her door, a black
White-tusked huge-muscled hideous grinning giant,
Of mood uproarious, horrible of limb,
An Ethiopian fell ycleped Harkoos.
NUREDDENE
The eunuch!
DOONYA
Stop, stop, stop. He has a sword,
A fearful, forceful, formidable blade.
NUREDDENE
Your eunuch and his sword! I mount to heaven
And who shall stop me?

Exit.

DOONYA
Stop, stop! yet stop! He’s off
Like bolt from bowstring. Now the game’s afoot
And Bassora’s Soldan, Mohamad Alzayni,
May whistle for his slavegirl. I am Fate,
For I upset the plans of Viziers and of Kings.
Exit.

தூன்யா:

போகா தங்கே, போகா தேநீ!
ஆபத் திருப்பதை அறியா யேநீ!
உறையும் அதுவவள் அறைவா யிலிலே!
வல்லவோர் பேயே வந்துள் ளதுவே!
பொல்லா ததுமிகப் பொல்லா ததுவே!
காவல் பேயது ஏவல் செய்யும்!
கன்னங் கருப்பாய் முன்னம் தெரியும்!
கோரைப் பற்கள் கோரமாய் வாயில்
வெளுத்த நிறத்தில் வெளியில் பெரிதாய்
முந்தித் தந்தமாய் முன்னே நிற்கும்!
பருவதம் போலே பருத்த தோள்கள்!
நறநற வெனப்பல் நெறிக்கும்,சிரிக்கும்
நாரா சத்தால் நம்முளம் துடிக்கும்!
இரக்கமே இல்லா அரக்கப் பேயின்
கூக்குரல் கேட்டே குலையெலாம் நடுங்கும்!
பார்க்கவே யார்க்கும் பயந்தரும் யாக்கை!
கொடுமையிற் கொடுமை கூடிய உருவாய்
எத்தி யோப்பியா எனும்நாட் டிருந்தே
எத்தி உள்ளதாம் இத்திரு நாட்டை..
ஹார்கூஸ் என்றதை ஊர்சொல் லிடுமே.

நூரெதீன்:

அந்தப் பேடியா!

தூன்யா:

நிற்பாய், நிற்பாய், நின்றிடு வாயது
தாக்கிட வாளைத் தூக்கி இருக்கும்,
பார்க்கவே நடுக்கும்,பாய்ந்தது மாய்க்கும்,
எதிரிகள் யாரும் எதிரினில் வாரார்.

நூரெதீன்:

நின்றன் பேடியும் அவன்கை வாளும்!
செல்கிறேன் சொர்க்கம், சொல்வர்யார் தடையே?

வெளியேறுகிறான்

தூன்யா:

நில்லேன்,, நில்லேன்,! இருந்தும் நில்லேன் !
வில்லில் இருந்து வெளிவரும் கணைபோல்
வேகம்  விண்ணில் பறந்து விட்டான்.
இப்போ(து) ஆட்டம் இனிதே தொடங்கும்.
பஸ்ஸோரா சுல்தான்,முகமது அல்ஸைனி
கிட்டா தவளாய் எட்டா(து) அகன்ற
அடிமைப் பெண்ணுக்(கு) ஆசைப் படுவான்.
அமைச்சர் அரசர் தீட்டிய திட்டம்
மேலது கீழாய் கீழது மேலாய்ச்
செய்தேன் எனவே இனிவிதி நானே.

வெளியேறுகிறாள்.

சிவசூரி.

இத்துடன் அங்கம் 2, களம் 2 நிறைகிறது.



NATARAJAN RAMASESHAN

unread,
Oct 24, 2021, 10:45:46 PM10/24/21
to santhav...@googlegroups.com
வியக்க வைக்கும் மொழிபெயர்ப்பு.

மூலத்தோடு ஒப்பு நோக்கிப் படிக்கும்  போது மொழிபெயர்ப்பின் அழகு நன்றாகத் தெரிகிறது.

சரளமாகச் செல்கின்றது

அன்பான வாழ்த்துகள்
     


Lalitha & Suryanarayanan

unread,
Oct 24, 2021, 11:48:37 PM10/24/21
to santhav...@googlegroups.com
வேந்தரின் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Oct 25, 2021, 8:00:35 PM10/25/21
to santhav...@googlegroups.com
பஸ்ஸோரா அமைச்சர்கள் 26

நான் இத்தனை நாள்களாய்க் காத்திருந்த வேளை இன்று வந்துவிட்டது. நேற்று இட்டதில் அனீஸியைப் பற்றிக் கேட்கப் போகிறோம் என்ற உணர்விலேயே காதலில் துள்ளிக் குதித்த நாயகன் நூரெதீனைக் கண்டோம். சென்ற தினம் இட்டதில் காதல் சிறகைக் கட்டி மேன்மாடத்தில் இருக்கும் அனீஸியைப் பார்க்கப் பறந்தோடிய நாயகனைக் கண்டோம். இரவு முழுதும் ஒன்றாய்க் கழித்துவிட்டு விடியலில் கீழே இறங்கும் காதலர்கள் பேசும் மொழியில் இன்றைய களம் தொடங்குகிறது.
இந்தக் காதல் கதாநாயகனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி விடுகிறது. இனிவரும் காட்சிகளில் அவற்றையும் காண்போம். இந்தப் பாடல்களின் யாப்பும் சந்தமும் வந்து விழுந்துள்ள சொற்களும் பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் பார்த்தனையும் பாஞ்சாலியையும் நினைவூட்டி இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த மொழிபெயர்ப்பைப் படித்துவரும் நண்பர்களுக்கெல்லாம் என் நன்றி. - சூரி.

அங்கம் 2, களம் 3

Ibn Sawy’s house. The upper chambers of the women’s
apartments.
Doonya, sleeping on a couch. Enter Nureddene and Anice.  

இபின் ஸாவியின் மனை. அந்தப்புரத்தின் மேல் மாடம்.
தூன்யா மஞ்சத்தில் உறங்குகிறாள். நூரெதீனும் அனீஸியும் நுழைகிறார்கள்.

NUREDDENE 
I told you ’twas the morning.

ANICE

Morning so early? 
This moment ’twas the evening star; is that 
The matin lustre?

NUREDDENE 
There is a star at watch beside the moon 
Waiting to see you ere it leave the skies. 
Is it your sister Peri?

ANICE 
It is our star 
And guards us both.


நூரெதீன்:

போதிது பகலென்று புகன்றேன் அன்றோ.

அனீஸி:

இத்தனை விரைவாய் எத்திய தோபகல்?
கணமிது தானே கண்டோம் மாலை
வேளையில் தோன்றும் விண்மீன் தன்னை;
விடியும் போதின் வெளிச்சந் தானோ ?

நூரெதீன்:

பாரடியே வானத்திற் புதுமை காண்பாய்
பால்நிலவின் பக்கத்தில் விண்மீன் ஒன்று
காரடியில் கடந்திருக்கும் வேளை தன்னில்
கடந்தெங்கோ தான்செல்லப் போகும் முன்னே
சீரடியாள் தேவியுனைக் காண்பான் வேண்டி
செம்புவியை நோக்குமந்தப் பெரியை என்பாள்
யாரடியோ சோதரியோ நினக்கே ஆவாள்?

அனீஸி:

அவ்விண்மீன் நமதாவாள்,நம்மைக் காப்பாள்.

NUREDDENE

It is the star of Anice, 
The star of Anice-aljalice who came 
From Persia guided by its silver beams 
Into these arms of vagrant Nureddene 
Which keep her till the end.

நூரெதீன்:

தாரகையாம் அவளேதான் அனீஸி யாவாள்,
தண்ணடியை இங்கேதான் பதிக்க வந்த
காரிகையாய் பாரசீகத் தேசம் விட்டே
கண்ணெதிரில் வெள்ளியெனக் கதிரை வீசிப்
பாரில்வந்த  அனீஸிஅல் ஜாலிஸ் என்பாள்
பாரிலின்று ஊர்சுற்றி நூரெ தீனின்
சீரழிந்த கரத்திடையே திகழ்வாள் தன்னைத்
திறமையுடன் அவன்காப்பான் கால மெல்லாம்.

Sweet, I possess you! 
Till now I could not patently believe it. 
Strange, strange that I who nothing have deserved, 
Should win what all would covet! We are fools 
Who reach at baubles taking them for stars. 


கனியனையாய், எனதானாய்! ஐயம் இன்றிக்
கணமிதனை நிச்சயமாய் நம்பா தேற்றேன். 
இனிதிதனைப் புவியேதான் பெறவே ஏங்கும்.
என்றாலும் என்கரத்தில் இதுவே தூங்கும்.
எனதெனவே இதைப்பெறவே தகுதி யேதும்
இல்லாதான் நான்பெற்றேன் விந்தை விந்தை!
மனம்மயங்கி மின்மினியை விண்மீன் என்றே
வந்தணையும் மூடமதிக் கூட்டம் நாங்கள்.

  O wiser woman who come straight to Heaven!
But I have wandered by the way and staled
The freshness of delight with gadding pleasures,
Anticipated Love’s perfect fruit with sour
And random berries void of real savour.  

பொன்னுலகைப் புவிமிசையில் காண வென்றே
புந்தியொளிர் மாதரசே, போந்தாய் நேரே!
அன்பதுவாம் குறைவற்ற கனியைத் தேடி
அங்கொன்றும் இங்கொன்றும் ஆனால் நானே
இன்பெனவே சுவைத்ததெலாம் புளிக்கக் கண்டேன்,
இதயத்தில் கனிபெர்ரீ கசக்கக் கண்டேன்,
மன்னுலகில் எங்கெங்கும் மயங்கி நின்றேன்
வழிநெடுகில் கண்டவற்றை முயங்கி வந்தேன்.

Oh fool! had I but known! What can I say
But once more that I have deserved you not,
Who yet must take you, knowing my undesert,
Whatever come hereafter?

முன்னமிதை அறியாமல் இருந்தேன் அந்தோ!
மூடமதி! வேறொன்றும் மொழிய வல்லேன்
இன்னுமொரு முறைசொல்வேன் உனக்குச் சற்றும்
ஏற்றவன்நான் இல்லையென, வேறென் சொல்வேன்!
என்னுயிரே உனைநானே கொள்ள வேண்டும்
இனியெதுமே நடந்தாலும் கவலை இல்லை
நன்றதுவும் அலததுவும் பொருட்டாய் ஆமோ
நானுன்னை விட்டகலல் நடக்கப் போமோ?

சிவசூரி.

(தொடரும்)

Lalitha & Suryanarayanan

unread,
Oct 26, 2021, 10:31:08 PM10/26/21
to santhav...@googlegroups.com
பஸ்ஸோரா அமைச்சர்கள் 27

அங்கம் 2, களம் 3 தொடர்கிறது..

ANICE
The house is stirring.

NUREDDENE 
Who is this sleeping here? My cousin Doonya!

DOONYA (waking) 
Is morning come? My blessing on you, children. 
Be good and kind, dears; love each other, darlings.

NUREDDENE 
Dame Mischief, thanks; thanks, Mother Madcap.

DOONYA 
Now, whither?

NUREDDENE 
To earth from Paradise.

DOONYA

Wait, wait! You must not 
Walk off the stage before your part is done. 
The situation now with open eyes 
And lifted hands and chidings. You’ll be whipped, 
Anice, and Nureddene packed off to Mecca 
On penitential legs; I shall be married.

(opening the door)


அனீஸி:

காலையில் வீடும் கண்விழித் ததுவே.

நூரெதீன்:

தூங்குவ(து) யாரிங்கே? சோதரி தூன்யா!

தூன்யா (தூக்கம் கலைந்தவளாய்)

காலை வேளை ஆனதோ அதற்குள்?
பிள்ளைகாள் உமக்குக் கொள்ளை ஆசி.
நன்றே செய்வீர், அன்பைப் பகிர்வீர்;
அன்பா னவரே, கண்ணா னவரே, 
காதல், காதல், காதல் செய்வீர்!

நூரெதீன்:

குறும்புத் தாயே கோடி நன்றிகள்,
பித்துப் பிடித்த பேரிளம் பெண்ணே.

தூன்யா:

இப்போ தெங்கே?

நூரெதீன்:

மண்ணகம் வருகிறோம்.விண்ணகம் இருந்தே.

தூன்யா:

நில்லுக, நில்லுக! நீங்கள் போட்டுள வேடம் முடியவிலை
பொல்லா மேடையை விட்டுநீர் இருவரும் போகும் வேளையிலை

நோக்கிடும் உம்விழி நோக்கியே நிற்கும் நேரம் வந்ததுவே
தூக்கிய உம்கரம் தூக்கியே நின்றுத் துவளும் போதிதுவே
தாக்கிடும் வார்த்தையின் இனிமை காதுகள் தாமே தாங்கிடுமே
தூக்கிய சவுக்கதன் ஏக்கம் தீரத் தொட்டுத் தழுவிடுமே
பார்க்கும் அனீஸி நூரெ தீனுடல் பதத்தைப் பார்த்திடுமே  
நீக்குவர் உம்மை நிலமிதில் இருந்தே நேரே செல்லென்றே
ஆக்கிய பாவம் போக்கிட வேண்டி மெக்கா அனுப்புவரே
காக்கும் தேவன் கருணையை வேண்டி கழுவாய் செய்திடவே.
யார்க்கென் செய்தேன் ஐயோ என்றன் மணத்தை முடிப்பாரே.

(opening the door)

Oh, our fell Ethiopian snoozing here?
Snore, noble ogre, snore louder than nature
To excuse your gloomy skin from worse than thwacks.
Wait for me, Nureddene.

Exit.


(கதவைத் திறந்தவளாய்)

உறங்குமெதி யோப்பியா, ஓஹோஹோ உறங்குவாய்?
குறட்டைவிட்(டு) உறங்குவாய் குணத்தில்நல்ல பேயனே
திறத்தையெட்டு திக்குமே காட்டுவிலங் கொலியதோ
இறக்கைகட்டிப் பறக்குதே குறட்டையின்ப ஒலியென
   இருட்டுத்தோ லிமேனியை எதனைக்கொண்(டு) அடிப்பரோ.

மீண்டுநானே வரும்வரை ஈண்டுகாத்துக் கிடந்திடு,
நூரெதீன்.

வெளியேறுகிறாள்.

ANICE
They will be angry.

NUREDDENE 
Oh, with two smiles I’ll buy an easy pardon.

ANICE 
Whatever comes, we are each other’s now.

NUREDDENE 
Nothing will come to us but happy days, 
You, my surpassing jewel, on my neck 
Closer to me than my own heartbeats.

ANICE

Yes, 
Closer than kisses, closer than delight, 
Close only as love whom sorrow and delight 
Cannot diminish, nor long absence change 
Nor daily prodigality of joy 
Expend immortal love.

NUREDDENE
You have the lore.

Doonya returns.


அனீஸி:

ஆத்திரம் கொள்வரே அவர்கள் நம்மேல்.

நூரெதீன்:

அப்படி யாயின், அவர்முனம் ஓரிரு
புன்னகை சிந்தி மன்னிப் பதனை
எளிதில் வாங்குவன் என்பதைப் பார்நீ.

அனீஸி:

எதுதான் வரினும், இனிநாம் இருவரும்
ஒருவர் ஒருவரின் உடைமையாய் ஆனோம்.

நூரெதீன்:

இன்பம் சிந்திடும் நன்னாள் அன்றி
வேறென் நாடும் கூறுக இனியே. 
அங்கம் தழுவிடும் தங்கம் போலே
மங்கையே நீயென் மார்பின் அணிநீ,
துடிக்கும் இதயம் விடவும் நெருங்கிக்
கிடக்கையில் இனியோர் கெடுதல் வருமோ?

அனீஸி:

ஆமாம்,
முந்தித் தருகிற முத்தம் விடவும்,
செந்தேன் நிகர்சுவை ஆனந்தம் விடவும்
இன்னும் நெருங்கியே நின்னுடன் உள்ளேன்,
துன்பம், இன்பம் தொடர்ந்திடும் போதும்
குன்றா அன்பெனக் கூடவே நின்றன்
அருகினில் மிகவும் அருகினில் உள்ளேன்.
பன்னெடுங் காலம் நின்றன் முன்னம்
வாரா திருந்தும் பாரா திருந்தும்
கொள்ளையோ கொள்ளை நித்தம் கொடுத்தும்
என்றும் நிலைக்கும் என்றன் அன்பு
குறையா தென்றும் நிறைந்திருக் குந்தான்.

நூரெதீன்:

அந்த வித்தை அறிந்தவள் நீயே.

தூன்யா திரும்புகிறாள்.

சிவசூரி.

(தொடரும்)



Lalitha & Suryanarayanan

unread,
Oct 27, 2021, 9:56:30 PM10/27/21
to santhav...@googlegroups.com

Lalitha & Suryanarayanan

unread,
Oct 28, 2021, 12:36:07 AM10/28/21
to santhav...@googlegroups.com

பஸ்ஸோரா அமைச்சர்கள் 28

Act 2, Sc 3

DOONYA 
I have told Nuzhath to call mother here. 
There will be such a gentle storm.

Enter Ameena at the door.

AMEENA 
Harkoos! 
Sleeping?

HARKOOS
Gmn — mmn —

DOONYA 
Grunted almost like nature, 
Thou excellent giant.

AMEENA
Harkoos, dost thou sleep?

HARKOOS 
Sleep! I! I was only pondering a text of Koran with closed eyes, 
lady. You give us slaves pitiful small time for our devotions; but 
’twill all be accounted for hereafter.

AMEENA 
And canst thou meditate beneath the lash? 
For there thou’lt shortly be.

HARKOOS 
Stick or leather, ’tis all one to Harkoos. I will not be cudgelled 
out of my straight road to Paradise.

AMEENA 
My mind misgives me. 
(enters the room) 
Was this well done, my child?

NUREDDENE 
Dear, think the chiding given; do not pain 
Your forehead with a frown.

AMEENA 
You, Doonya, too 
Were part of this?

DOONYA

Part! you shall not abate 
My glory; I am its artificer, 
The auxiliary and supplement of Fate.

AMEENA 
Quite shameless in your disobedience, Doonya? 
Your father’s anger will embrace us all.

NUREDDENE 
And nothing worse than the embrace which ends 
A chiding and a smile, our fault deserves. 
You had a gift for me in your sweet hands 
Concealed behind you; I have but reached round 
And taken it ere you knew.


அன்னை தன்னை அழைத்திட நுசாத்தை
நேரினில் அனுப்பினேன், பாரினி இங்கே
தென்றலைப் போலும் மென்புய லொன்று
நன்றினிச் சீறும் நம்கண் முன்னே.

நுழையும் ஆமீனா கதவருகில் நிற்கிறாள்.

ஆமீனா:

ஹார்கூஸ்!
தூங்குகி றானா?

ஹார்கூஸ்:

கொர்...கொர்ர்...

தூன்யா:


விலங்கின் உறுமலாய் விடுகிறாய் குறட்டை,
எழிலார் இராக்கதா,
சாலச் சிறந்ததுன் கோலத் திருப்பணி


ஆமீனா:

ஹார்கூஸ், தூங்கி வழிகிறா யாநீ என்ன?

ஹார்கூஸ்:

தூங்கறதாவது!!  கண்ணை மூடிக்கிட்டு குரான கொஞ்சம்  தியானம்னா  பண்ணிக்கிட்டிருந்தேன், எஜமானி. நீங்கள் அடிமைக்குத் தொழறதுக்குக் கொடுக்கற நேரம் இருக்கே, அது கேவலம் கொஞ்சம்போறத்தான்.; இப்போதிருந்தே இனிமேலுக்கு  நான் தொழறதெல்லாம்  தனியா கணக்கு வைச்சுக்கப் போறேன்.

ஆமீனா:

அடிக்கப் போகும் அடியினால் நன்கு 
துடிக்கப் போகும் போதும் இனிநீ
முடிந்தால் தியானம் செய்ய முனைந்திடு.

ஹார்கூஸ்:

கட்டையா, சவுக்கா, ஹார்கூஸுக்கு யெல்லாமே ஒண்ணுதான்.
இங்கிட்டிருந்து நான் சொர்க்கத்துக்கு நேர போறத, தண்டத்தால அடிச்சுகிடிச்சு தடுக்க முடியாது.

ஆமீனா:

வருவதை எண்ணிக் கலங்குமென் மனது.
( அறைக்குள் நுழைகிறாள்)
நன்றோ செய்தனை, என்றன் மகனே?

நூரெதீன்:

முன்பே என்னை வைததை எல்லாம் 
      முறையாய் நினைத்தால் போதாதோ;
அன்புத் தாய்நீ ஆத்திரம் கொண்டால் 
    ஐயோ உனக்கு வலித்திடுமே.

ஆமீனா:

நீயுமா, தூன்யா,
நினக்கும் இதிலே பங்குண்டா?

தூன்யா:

பங்கென இதனைச் சொல்வதுவோ
பாவையென் சீரைக் குறைப்பதுவோ,
இங்கிதை நடத்தி வைப்பவள்நான்
இன்துணை யாக நிற்பவள்நான்,
பொங்கும் விதியின் வழியேதான்
போக்கிடும் பணியைச் செய்கின்றேன்,
எங்கணும் இதிலே நானேதான்,
இப்படி மதிப்பைக் குறைப்பதுவோ?

ஆமீனா:

உந்தையின் சொற்படி ஒழுகாய், தூன்யா,
நிந்தனை நினக்கிலை,, இழுக்கிலை நினக்கிது?
தந்தையின் சீற்றம் தருகிற தண்டனை
வந்தினி நமையெலாம் வாரி யணைக்கும்

நூரெதீன்:

வந்திவண் நம்மை வாரி யணைக்கக்
கொடியதோர் தண்டனை கொடுத்திட வேண்டும்,  
கொஞ்சமும் அதிலே குறைவெதும் இன்றி,
முகந்தனில் கடுஞ்சொலும் அகந்தனில் முறுவலும்
நிறைவாய்த் தோன்றி நிறைந்திடும் வண்ணம்
ஆக்கிய நம்பிழைக் கேற்றது வாக.
அன்னைநீ நின்றன் அன்புக் கரத்தில்
எனக்கோர் பரிசை ஏந்தி வந்ததைக்
கண்முன் மறைத்ததைக் கண்டு கொண்டுனைச்
சுற்றி வந்ததைப் பற்றிக் கொண்டேன்
முற்றும் அதைநீ முகர்ந்திடும் முன்னர்.

சிவசூரி

(தொடரும்)

On Thu, Oct 28, 2021 at 7:26 AM Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:
பஸ்ஸோரா அமைச்சர்கள் 27

அங்கம் 2, களம் 3 தொடர்கிறது..

ANICE
The house is stirring.

NUREDDENE 

Lalitha & Suryanarayanan

unread,
Oct 28, 2021, 9:38:05 PM10/28/21
to santhav...@googlegroups.com

பஸ்ஸோரா அமைச்சர்கள் 29 

Act 3, Sc 3

AMEENA

For you, my son? 
She was not for you, she was for the King. 
This was your worst fault, child; all others venial 
Beside it.

ஆமீனா:

நினக்கென யார்சொனார், எனதுயிர் மகனே?
அவள்நினக் கெனஇலை, அரசர்க் கெனவே.
பழியிதை விடவும் பழியிலைப் பெரிதாய்,
பெற்றாய், மகனே, பெரிதாய்ப் பகையும்;
மற்றவை இதன்முன் மறக்கப் படலாம்.

NUREDDENE

For the King! You told me, Doonya, 
That she was bought for me, a kind surprise 
Intended?

நூரெதீன்:

கொற்றவர்க் கென்றா! கூறலை, தூன்யா,
அன்புடன் என்னை வியப்பினில் ஆழ்த்திடக்
கொணர்ந்தனர் அவளைக் கொடுத்திட எனக்கென?

DOONYA
I did;exact!

AMEENA 
Such falsehood, Doonya!

DOONYA 
No falsehood, none. Purchased she was for him, 
For he has got her. And surprise! Well, mother, 
Are you not quite surprised? And uncle will be 
Most woefully. My cousin and Anice too 
Are both caught napping, — all except great Doonya. 
No falsehood, mere excess of truth, a bold 
Anticipation of the future, mother.

தூன்யா:

ஆமாம் ஆமாம்,அப்படி யேசரி!

ஆமீனா:

இப்படி யோர்பொய் இயம்பினை, தூன்யா!

தூன்யா:

பொய்ம்மை இல்லை, கொஞ்சம் கூடப் பொய்யின் கலப்பில்லை.
தையல் அவளை அவனுக் கென்றே தானவர் வாங்கினரே.  
பையன் அவளை அதனால் தானே பையக் கொண்டனனே.
செய்வேன் இனியென் என்றே அம்மை திகைக்க வில்லையாநீ?
தொய்ந்து போனேன் என்றே மாமா சோகத் தாழ்வாரே
மையல் கொண்ட அண்ணன் உடனே மங்கை அனீஸியுமே
கையும் களவாய்ச் சிக்கிக் கொண்டனர் கண்கள் முன்னாலே --
அய்யே இதிலே மாட்டாத் தூன்யா என்றன் சீரைப்பார்.
பொய்ம்மை இல்லை,மெய்யைக் கொஞ்சம் கூடப் போட்டேன்நான்.
பெய்யும் பேச்சில் பின்வரும் காலம் பின்னிக் கொண்டதம்மே.

NUREDDENE 
I did not know of this. Yet blame not Doonya; 
For had I known, I would have run with haste 
More breathless to demand my own from Fate.

AMEENA 
What will your father think? I am afraid. 
He was most urgent, grave beyond his wont. 
Absent yourself awhile and let me bear 
The first keen breathings of his anger.

NUREDDENE

The King! 
And if he were the Caliph of the world, 
He should not have my love. Come, fellow-culprit.

Exit with Doonya.

நூரெதீன்:

இதைநான் அறியேன் என்றா லுந்தான்
தூற்றிட வேண்டாம் தூன்யா வையினி;
எனக்கது தெரிந்தே இருந்தா லுந்தான்
வேகமாய் ஓடி விதியை வேண்ட   
மூச்சுத் திணற முன்னால் நின்றே
என்றன் உரிமையை எனக்களி என்றே 
கேட்டிருப் பேனே வேட்கையி னாலே.

ஆமீனா:

என்நினைப் பாரோ நின்றன் தந்தை?
என்றென் நெஞ்சம் நடுங்கு கின்றதே.
தினந்தினம் செல்வது போலன்றி இன்றவர்
மிகமிக அவசர வேலையில் சென்றுளார்.  
இங்கிருந்(து) அகன்றிடு சிறிது நேரம்.
ஈங்கவர் வந்ததும் வீசக் கூடும்
சீற்றக் காற்றின் வெப்பம் முதலில்
தாங்கிக் கொள்வேன் யானென் மேலே.


நூரெதீன்:

மன்னனின் சீற்றமெண்ணி மயக்கமோ கொள்ளவேண்டும்!
மன்னனின் மன்னனாகும் காலிஃபா ஆயினுமே
என்னுயிர்க் காதலியை இங்கவன் கொள்வதுண்டோ
என்பிழை பங்குகொண்டாய், வந்திடுக என்னுடன்நீ.

தூன்யாவுடன் வெளியேறுகிறான்.

AMEENA 
Harkoos, go fetch your master here; and stiffen 
The muscles of your back. Negligent servant!

HARKOOS 
’Tis all one to Harkoos. Stick or leather! leather or stick! ’Tis 
the way of this wicked and weary world.

Exit.

AMEENA 
Yet, Anice, tell me, is’t too late? Alas! 
Your cheeks and lowered eyes confess the fault.
I fear your nature and your nurture, child,
Are not so beautiful as is your face.
Could you not have forbidden this?

ANICE

Lady, 
Remember my condition. Can a slave 
Forbid or order? We are only trained 
To meek and quick obedience; and what’s virtue 
In freemen is in us a deep offence. 
Do you command your passions, not on us 
Impose that service; ’tis not in our part.

ஆமீனா:

ஹார்கூஸ், உடனே உன் எச மானரை
இங்கே அழைத்துவா; வேகம் வேகம்;
வந்ததும் தருவார் வரிசை வரிசையாய்,
முதுகை விறைப்பாய் வைத்துக் கொள்நீ.
கவனம் இல்லாக் காவற் காரா!

ஹார்கூஸ்:.

எல்லாம் ஹார்கூஸுக்கு ஒண்ணே ஒண்ணுதான். கோலா இல்ல சவுக்கா! சவுக்கா இல்ல கோலா! இந்தப் பொல்லாத ஒலகின் வழியே இப்படித்தான், பார்த்துப் பார்த்து நானும் சலிச்சுட்டேன்.

வெளியேறுகிறான்.

ஆமீனா:

இருந்தும், அனீஸி, இதைநீ சொல்வாய்,
கடந்து போனதோ காலம் விடைசொல?
அடடா நின்றன்
கனிந்த கன்னமும் குனிந்த விழிகளும்
ஏற்றுக் கொளுமே இயற்றிய பிழையை.
குழந்தாய்,
நின்றன் இயல்பும் நின்றன் வளர்ப்பும்
நின்றன் முகம்போல் நன்றாய் இலை.நினக்(கு)
இதைத்தடுத் திருக்க  இயலா தோவென்?

அனீஸி:

எஜமானி யம்மா!
என்நிலை பற்றியும் எண்ணிடு வீரே.
அடங்கா திருப்பதும் ஆணை செய்வதும்
அடிமை ஒருத்தியால் ஆகுவ தோயெமைப்
பணிந்து கிடக்கவே பழக்கப் படுத்தினர்;
சொற்படி உடன்செயக் கற்றுக் கொடுத்தனர்;
கேடில் ஒழுக்கம், வீடு, விடுதலை
ஈடில் வாழ்வெனும் இன்னரும் உரிமை
ஆள்பவர் தமக்கே,அடிமைக்(கு) அவையெலாம்
பிழையிலும் மிகப்பெரும் பிழையாய் ஆகும்.
ஆசைப் படிநீர் ஆணை செயலாம்,
எதிர்பார்ப் பதுவோ எம்மிடம் அதையே;
பணிந்து கிடக்கும் எம்பணி இலையது.

AMEENA 
You have a clever brain and a quick tongue. 
And yet this speech was hardly like a slave’s! 
I will not blame you.

ஆமீனா:

புந்தியின் கூர்மையும் சிந்தையின் வலிமையும்
வேக வேகமாய் வெளிப்படக் கண்டேன்.
இருந்தும் பதிலிதோ இங்கோர் அடிமையின்
பேச்சாய்க் கொஞ்சமும் தெரிந்திட விலையே.
நின்மேல் பழியை ஏற்றிட மாட்டேன்

ANICE 
I deny not, lady, 
My heart consented to this fault.

அனீஸி:

மறுத்திட வில்லை, எஜமானி அம்மா.
இந்தப் பிழைக்கென் இதயமும் உடந்தை.

AMEENA

I know 
Who ’twas besieged you, girl, and do not blame 
Your heart for yielding where it had no choice. 
Go in.

Exit Anice. Enter Harkoos and Ibn Sawy.

ஆமீனா:

முற்றுகை யிட்டவன் பற்றினன் என்பதால்
வேண்டும், வேண்டா விழைவிலாப் பெண்ணுன்
இதயம் மேற்பிழை ஏற்றிடல் வேண்டா.
சரிநீ செல்க.

அனீஸி வெளியேறுகிறாள். ஹார்கூஸும் இபின் ஸாவியும் 
நுழைகிறார்கள்.

IBN SAWY

I hope, I hope that has not chanced 
Which I have striven to prevent. This slave 
Grins only and mutters gibberish to my questions.

AMEENA 
The worst.

IBN SAWY

Why, so! the folly was my own 
And I must bear its heavy consequence. 
Sir, you shall have your wage for what has happened.

இபின் ஸாவி:

நம்பு கின்றேன் இன்னும் நம்பு கின்றேன்
நடக்கக் கூடா(து) என்றெதைத் தடுத்திட
இயன்ற(து) எல்லாம் முயன்றுளே னோஅது
நடந்திருக் காதென நம்புகி றேனே.
பாழும் அடிமை பல்லைக் காட்டி
என்றன் கேள்விக்(கு) ஒன்றும் தெளிவாய்
உரைக்கா மலேதோ உளறுகின் றானே.
ஒன்றும் நடந்திட வில்லை தானே?

ஆமீனா:

நடந்து விட்டதே.

இபின் ஸாவி:

ஏனோஅப்படி ! எதுவே ஆயினும்
யான்செய் பிழைக்(கு) யானே பொறுப்பு!
யானே ஏற்றிட வேண்டும் விளைவெலாம்!
அடிமைநின் பணியின் அழகினைக் கண்டேன்,
இங்கு நிகழ்ந்தவை எல்லாம் கருதிநின்
வேலைக் கேற்ற கூலியாய் நிச்சயம்
உரிய(து)  உனக்கே உறுதியாய்க் கிடைக்கும்.

HARKOOS 
The way of the world. Whose peg’s loose? Beat Harkoos. Because my young master would climb through the wrong window 
and mistake a rope-ladder for the staircase, my back must ache. 
Was the windowsill my post? Have I wings to stand upon air or 
a Djinn’s eye to see through wood? How bitter is injustice!

IBN SAWY 
You shall be thrashed for your poor gift of lying.

AMEENA 
Blame none; it was unalterable fate.

IBN SAWY 
That name by which we put our sins on God, 
Yet shall not so escape. ’Twas our indulgence 
Moulded the boy and made him fit for sin; 
Which now, by our past mildness hampered quite, 
We cannot punish without tyranny. 
Offences we have winked at, when they knocked 
At foreign doors, how shall we look at close 
When they come striking home?

AMEENA 
What will you do?

IBN SAWY 
The offence here merits death, but not the offender. 
Easy solution if the sin could die 
And leave the sinner living!

AMEENA 
Vizier, you are perplexed, to talk like this. 
Because a little’s broken, break not more. 
Let Nureddene have Anice-aljalice, 
As Fate intended. Buy another slave 
Fairer than she is for great Alzayni’s bed, 
Return his money to the treasury 
And cover up this fault.

IBN SAWY
With lies?

AMEENA 
With silence.

ஹார்கூஸ்:

இந்த ஒலகத்தின் போக்கே இதுதான். யாரோட மறையிப்ப கெழண்டிருக்கு?, எதுக்கும்  ஹார்கூஸை அடிச்சுடலாம்.. யேனென்னு கேட்டா யென் சின்ன எஜமானரு தப்பான ஜன்னல் வழியே யேறி எங்கெங்கோ போவாரு,,நூலேணிய மாடிப்படியாய்  தப்பா நெனப்பாரு, எதுக்கும் என்னோட முதுகே வலிக்கணும். ஆமாம், இந்த
ஜன்னலும் என்னோட பொறுப்புல இருக்கா? எனக்கென்ன றெக்கையா இருக்கு,  காத்துலே நான் கொஞ்சம் மொதக்க,?இல்ல,எனக்கென்ன  பூதத்தின் கண்ணா இருக்கு, இந்த கதவுக்கும் அப்பால நடப்பத கண்டுபிடிக்க? இந்த அநியாயம் எவ்வளவு கசப்பா கசக்குது!

இபின் ஸாவி:

பொய்யும் பித்தலாட் டமுமா செய்கிறாய்,
அடித்து நொறுக்கப் போகிறேன் உன்னை.

ஆமீனா:

குற்றம் யாரையும் கூறிட வேண்டாம்;
மற்றிது மாற்றிட முடியா விதியே.

இபின் ஸாவி:

பெயரதைச் செப்பியே இயற்றும் பாவங்கள்
எல்லாம் இறைமேல் ஏற்றுகி றோம்நாம்,
இருந்தும் அப்படி தப்பிட வழியில்லை.
செல்லம் கொடுத்தோம் சீரழித் தோம்நாம்.
மனத்தின் போக்கில் மகனை விட்டோம்
பாவம் புரிந்திடப் பாதை அமைத்தோம்;
அன்று கொடுத்ததே இன்று கெடுத்தது.
கடுமை காட்டியே அடக்கிட முடியும்,
தண்டனை எதுவும் தந்திட முடியும்.
மற்றவர் மனையில் குற்றம் நிகழ்ந்தால்
கண்டும் காணா(து) இருந்துவந் தோம்நாம்,
குற்றமே இன்றுநம் முற்றம் நின்றால்
என்செய் வோமினி ஏதுசெய் வோமோ!

ஆமீனா:

என்செய்யப் போகின்றாய்?

இபின் சாவி:

கொல்லெனச் சொலும்படி குற்றம் பெரிதே
இல்லை யெனும்படி இழைத்தவன் உள்ளான்.
பாவம் போனால் பழியும் போகும்
பழியும் போனால் பாவியும் வாழ்ந்திட
நல்வழி தோன்றும் நமக்கது தீர்வாம்.

ஆமீனா:

மந்திரி,
குழம்பிய வுன்மனம் முழங்கும் பேச்சிது.
சின்னஞ் சிறியதாம் விரிசல் கண்டே
இன்னும் பெரிதாய் இதையாக் காதே.
கொள்ளுக குமரன் நூரெதீன் தானே
அனீஸிஅல் ஜாலிஸி யாமப் பெண்ணை,
விதியின் விருப்பமும் விளங்கிடும் அதுவென.
வாங்குக,இன்னுமோர் அடிமை மகளை,
மன்னன் அல்ஸைனி இன்புற் றிருக்க
இவளைக் காட்டிலும் எழில்மிக் கவளாய்.
அரண்மனைக் கணக்கில் அரசனின் பணத்தைச்
செலுத்துக திருப்பி, செய்துள பிழையை
மூடி மறைத்திடு.

இபின் ஸாவி:

முழுப்பொய் யாலே?

ஆமீனா:

அமைதியாய் இருந்தே.

IBN SAWY 
Will God be silent? will my enemies? 
The son of Khakan silent? Ameena, 
My children have conspired my shame and death.

AMEENA 
Face not the thing so mournfully. Vizier, you want 
A woman’s wit beside you in the Court. 
Muene may speak; will you be dumb? Whom then 
Will the King trust? Collect your wits, be bold, 
Be subtle; guard yourself, protect your child.

IBN SAWY 
You urge me on a road my weaker heart 
Chooses, not reason. But consider, dame, 
If we excuse such gross and violent fault 
Done in our house, what hope to save our boy, — 
Oh, not his body, but the soul within? 
’Twill petrify in vice and grow encrusted 
With evil as with a leprosy.

AMEENA

Do this. 
Show a fierce anger, have a gleaming knife 
Close at his throat, let him be terrified. 
Then I’ll come in with tears and seem to save him 
On pledge of fairer conduct.

IBN SAWY

This has a promise. 
Give me a knife and let me try to frame 
My looks to anger.

AMEENA
Harkoos, a dagger here!

Harkoos gives his dagger.

IBN SAWY 
But see you come not in too early anxious 
And mar the game.

AMEENA
Trust me.

IBN SAWY 
Go, call my son, 
Harkoos; let him not know that I am here.

Exit Harkoos.

Go, Ameena.

Exit Ameena.

இபின் ஸாவி:

ஆண்டவன் அமைதியாய் இருப்பா ராவென்?
ஈண்டென் எதிரிகள்?
காக்கனின் மகனவன் காப்பனா அமைதி?
ஆமீனா, ஐயோ என்றன் பிள்ளைகள்
வீழ்த்தினர் தமது சூழ்ச்சியால் என்னை,
போனதென் மானம்,போனதென் உயிரும்.

ஆமினா:

துக்கம் பொங்கிடத் துவண்ட வனாக
பக்கம் போகேல் பிரச்சினை தீர.
மந்திரி, உனக்கென் மன்னனின் அவையிலோர்
பெண்ணின் துணையுன் பின்வேண் டுவையோ?
பேசுவான் மியூனெனில் பேசட் டுமேதான்;
ஊமையோ நீயே? உரையா யோவெதும்?
எவர்சொல் ஏற்பான் அதன்பின் வேந்தன்?
துவளா திருப்பாய், துணிவுடன் நிற்பாய்,
கூர்த்த மதியுடன் கூறுக எதையும்;
காத்துக் கொள்ளுனை; காத்திடுன் மகனை.

இபின் ஸாவி:

என்றன் கோழை இதயம் சொல்லும்
வழியில் செல்லென வற்புறுத் துகின்றாய்
நேர்மை வழியைப் பாரா தென்றே.
நம்மனை தன்னில் நம்மகன் செய்தவிப்
பொல்லாக் கொடும்பிழை பொறுத்தோம் என்றால்
சொல்லுக, மாதே,சொல்நம் மகனைக்
காப்ப(து) எப்படி, -- ஓஓ, நானிவன்
உடலைப் பற்றியே உரைத்திட வில்லை,
உள்ளே உறையும் ஆன்மா வைத்தான் ?
குற்றங் குறையால் முற்றும் இறுகி
மாசெனும் களிம்படி மறைந்தது கிடக்கும்
குட்ட நோய்வாய்ப் பட்டது போலே.

ஆமீனா:

இப்படிச் செய்திடு.
காட்டுக கடுஞ்சினம், நீட்டுக நன்றே
மின்னும் கத்தியவன் மென்னியின் அருகே,
பெரும்பயம் அவனைப் பிடித்திடும் படியாய்.
இடையில் வருவேன் இருவிழி நீருடன்,
நல்வழி நடப்பான் நம்மகன் இனியென
மன்றா டிடுவேன் வாக்குகள் தந்து
கருணை வேண்டுவேன் காப்பது போல்நான். 

இபின் சாவி:

கருத்தில் இதனை இருத்துவேன் நன்றே.
கொடுவோர் குறுவாள் எனக்குச் சீக்கிரம்.
முகத்தில் சினத்தை முந்திக் கொணர்ந்திட 
முடிந்தது முயல்வேன்.

ஆமீனா:

ஹார்கூஸ், கொண்டுவா குறுவாள்!

ஹார்கூஸ்  தன்னுடைய  குறுவாளைக் கொடுக்கிறான்.

இபின் ஸாவி:

ஆனால் ஒன்றுநீ, ஆட்டத் திடையில்
ஆவல் மிகவே அவசரப் பட்டே
அறையில் நுழைந்தும் இடையில் புகுந்தும்
பாழாக் காதே பாதி வேலையில்.  

ஆமீனா:

நம்புக என்னை.

இபின் ஸாவி:

ஹார்கூஸ்,

செல்லுக உடனே, சென்றென் மகனை
அழைத்துவா இங்கே; நானிங் கிருப்பதே
அவனுக் கொன்றும் கூறிட வேண்டாம்.

ஹார்கூஸ் வெளியேறுகிறான்.

செல்நீ, ஆமீனா.

ஆமீனா வெளியேறுகிறாள்.

Plays oft have serious fruit, 
’Tis seen; then why not this? ’tis worth the trial. 
Prosper or fail, I must do something quickly 
Before I go upon the Caliph’s work 
To Roum the mighty. But I hear him come.

Enter Nureddene and Harkoos. 

NUREDDENE 
You’re sure of it? You shall have gold for this 
Kind treason.

HARKOOS 
Trust Harkoos; and if he beats me, 
Why, sticks are sticks and leather is but leather.

NUREDDENE 
Father!

IBN SAWY
O rascal, traitor, villain, imp!

He throws him down on a couch and 
holds him under his dagger.

I’ll father you. Prepare, prepare your soul, 
Your black and crime-encrusted soul for hell. 
I’m death and not your father.

நாடகம் பொதுவாய் நற்பயன் விளைக்கும்,
நாளும் கண்டுளோம் நாமதை அல்லவா;
எனவே, இதையே இயற்றத் தடையென்?
முயன்றால் முடியலாம், முயலுதல் தகுமே,
விளையுமோ இல்லை வீணாய்ப் போமோ?
சீக்கிரம் ஏதோ செய்திட வேண்டும்,
கலீஃபா வேலையில் காலடி இடுமுன்,
வல்லமை மிக்க உரோமியம் செல்முன்.
ஓசைகேட் கிறதே, வருகிறான் போலும்..

நூரெதீனும் ஹார்கூஸும் நுழைகிறார்கள்.

நூரெதீன்:

நிச்சயந் தானா? நிச்சயம் என்றால்,
அன்புடன் துரோகம் ஆக்கினை என்றே
தங்கம் நிச்சயம் தந்திடப் பெறுவாய்.

ஹார்கூஸ்:

ஹார்கூஸை நம்பு; அவரென்னை அடிச்சா அடிக்கட்டுமே,
குச்சிகள் என்னிக்கும் குச்சிகள் தான், சவுக்கது ஆனா சவுக்கேதான்.

நூரெதீன்:

தந்தையே!

இபின் ஸாவி:

துட்டா, கயவா, துரோகி, பேயே!
அவனை ஒரு கட்டிலில் மேல் தள்ளி கழுத்தில் குறுவாளை வைத்து
மிரட்டுகிறான்.

பெற்ற தந்தையாய் உற்றதைச் செய்வேன்.
ஆயத்தம் ஆயத்தம் ஆகவுன் ஆன்மா,
குற்றக் கூட்டில் குடிபுகுந் திருக்கும்
கன்னங் கரியதாம் நின்னுடை ஆன்மா
பாழும் நரகில் வீழ்ந்திட வென்றே.
நேரில் நிற்கும் நானே மரணம்,
நின்றன் தந்தை நின்முன் இல்லை.

NUREDDENE 
Mother, quick! 
Help, mother!

Ameena comes hurrying in.

நூரெதீன்:

அம்மா, அம்மா!
காப்பாற் றம்மா!

ஆமீனா விரைவாக உள்ளே வருகிறாள்.

The poor dear old man is mad.

IBN SAWY 
Ahh, woman! wherefore do you come so soon?

NUREDDENE 
How his eyes roll! Satan, abandon him. 
Take him off quickly.

IBN SAWY
Take me off, you villain?

NUREDDENE 
Tickle him in the ribs, that’s the best way.

IBN SAWY 
Tickle me in the ribs! Impudent villain! 
I’ll cut your throat.

பாவம் இந்த பாசக் கிழவர்
முற்றிய பைத்தியம் ஆனதைப் பாரேன்.

இபின் ஸாவி:

அசட்டுத் தாயே!
இத்தனை விரைவாய் ஏனிவண் வந்தாய்?

நூரெதீன்:

உருட்டி உருட்டிப் பார்க்கிறார்! சாத்தான்,
விலக்கி(டு) இவரை விலக்கிடு வேகம்.

இபின் ஸாவி:

என்னையா விலக்கிட வேண்டும் என்கிறாய்
ஏ கயவனே?

நூரெதீன்:

கிழவரின் விலாவில் கிசுகிசு மூட்டு,
சிரிப்பூட் டுவதே சிறந்த வழியாம்.

இபின் ஸாவி:

என்றன் விலாவில் கிசுகிசு செய்வதா!
வெட்கங் கெட்ட பொல்லாப் பயலே!
கண்ட துண்டமாய் ஆகுமுன் கண்டம்.

AMEENA (frightened) 
Husband, what do you? think, 
He is your only son.

IBN SAWY 
And preferable 
I had not him. Better no son than bad ones.

NUREDDENE 
Is there no help then?

IBN SAWY
None; prepare!

NUREDDENE 
All right. 
But let me lie a little easier first.

IBN SAWY 
Lie easier! Rogue, your impudence amazes. 
You shall lie easier soon on coals of hell.

AMEENA 
This goes no farther.

ANICE (looking in) 
They are in angry talk. 
Oh, kill me rather!

NUREDDENE

Waste not your terrors, sweetheart. 
We are rehearsing an old comedy, 
“The tyrant father and his graceless son”. 
Foolish old man!

ஆமீனா:(நடுங்கியவளாய்)

ஓ, என் கணவரே,
என்செய் கின்றீர்கள், எண்ணிப் பாருங்கள்,
உங்களின் ஒரேவோர் மகனன் றோஇவன்.

இபின் ஸாவி:

இன்னும் நன்றாய் இருந்திருக் குமன்றோ
இவனும் இல்லா திருந்தால் எனக்கு.
பிள்ளையே இல்லா நிலையே மேலாம்
துள்ளித் திரியும் துட்டரை விடவே.

நூரெதீன்:

பின்னெனக் கொன்றும் உதவி இல்லையா?

இபின் ஸாவி:

இல்லை, செல்லத் தயாரா குகநீ!

நூரெதீன்:

எல்லாம் சரியே. 
ஆயினும் என்னை முதலில் இங்கே
இன்னும் வசதியாய்க் கிடக்க விடுக.

இபின் ஸாவி:

வசதியாய்க் கிடப்பதா! வஞ்சகா, உன்றன்
திமிரினைக் கண்டு திகைப்படை கின்றேன்.
கணகண நெருக்குக் கனல்மேல் சீக்கிரம்
நரகினில் வசதியாய் நன்கினி கிடப்பாய்.

ஆமினா:

இன்னும் போகக் கூடா திதுவே.

அனீஸி( உள்ளே பார்த்தவளாய்)

சீற்றம் கொண்டவர் சீறுகின் றார்கள்.
ஓ,
மாற்றாய் என்னைக் கொன்று விடுங்களேன்!

நூரெதீன்:

வேண்டாம் அச்சம், வேண்டாம் நடுக்கம்,
இன்பா னவளே, இவைவீ ண் செய்யேல்.
நகைச்சுவைக் காட்சியின் ஒத்திகை தானிது,
"ஆத்திரத் தந்தையும் அருளிலா மகனும்".
முட்டாள் கிழவர்!

IBN SAWY
What! what!

NUREDDENE

See now the end 
Of all your headstrong moods and wicked rages 
You would indulge yourself in, though I warned you, 
Against your gallant handsome virtuous son. 
And now they have turned your brain! Vicious indulgence, 
How bitter-dusty is thy fruit! Be warned 
And put a rein on anger, curb in wrath, 
That enemy of man. Oh, thou art grown 
A sad example to all angry fathers!

இபின் ஸாவி:

என்ன! என்ன!

நூரெதீன்:

வீர தீர சூரனாய் விளங்கும்
அழகும் பண்பும் அமைந்தவும் மகனுக்(கு)
எதிரே முரண்டு பிடியீர் என்றும்
கொடுஞ்சினம் ஒன்றும் கொள்ளீர் என்றும்
முன்னே சொன்னவை ஒன்றும்நீர் கேட்டிலீர்,,
தன்னே முடிவு வந்திடும் இனியே.
மூளை பிசகிப் போன(து) இவற்றால்! 
கெட்ட பாதையில் இட்டீர் காலை,
வேதனை உமது சாதனை ஆகும்,
புழுதியை வாரிப் பூசிக் கொண்டீர்!
எச்சரிக் கின்றேன் இதைநீர் கேளும்,
கடிவா ளமிடுவீர், அடக்குவீர் சினத்தை,
சேர்ந்தா ரைக்கொல் சீற்றம் தடுப்பீர்,
கோபம் மனிதனின் கொடியதோர் எதிரி.
ஆத்திரக் கார அப்பனுக் கெல்லாம்
மோச மானமுன் உதாரணம் ஆனீர்!

IBN SAWY 
Someone had told you of this. (to Harkoos) Grinning villain!

HARKOOS 
Oh yes, it is I, of course. Your peg’s loose; beat Harkoos.

IBN SAWY 
My peg, you rogue! I’ll loose your peg for you.

NUREDDENE 
No, father, let him be, and hear me out. 
I swear it was not out of light contempt 
For your high dignity and valued life 
More precious to me than my blood, if I 
Transgressed your will in this. I knew not of it, 
Nor that you meant my Anice for the King. 
For me I thought her purchased, so was told, 
And still believe religiously that Fate 
Brought her to Bassora only for me.

IBN SAWY 
It was a fault, my child.

NUREDDENE
Which I cannot repent.

IBN SAWY 
You are my son, generous and true and bold, 
Though faulty. Take the slavegirl then, but swear 
Never hereafter mistress, slave or wife 
Lies in your arms but only she; neither, 
Until herself desire it, mayst thou sell her. 
Swear this and keep thy love.

NUREDDENE
Iswear it.

IBN SAWY 
Leave us.

Exit Nureddene.

Anice, in care for thee I have required
This oath from him, which he, perhaps, will keep.
Do thou requite it; be to him no less
Than a dear wife.

ANICE

How noble is the nature 
That prompts you to enforce on great offenders 
Their dearest wishes!

IBN SAWY 
Go in, my child; go, Anice.

Exit Anice.

Last night of my departure hence to Roum 
To parley with the Greek for great Haroun 
I spoke with you, and my long year of absence, —

AMEENA 
It is a weary time.

IBN SAWY

Wherein much evil 
May chance; and therefore will I leave my children 
As safe as God permits. Doonya to nuptials. 
The son of Khakan wants her for his cub, 
But shall not have her. One shall marry her 
Who has the heart and hand to guard her well.

AMEENA 
Who, husband?

IBN SAWY 
Murad, Captain of the City. 
He rises daily in Alzayni’s favour.

AMEENA 
He is a Turk. Our noble Arab branch 
Were ill engrafted on that savage stock.

IBN SAWY 
A prejudice. There is no stock in Islam 
Except the Prophet. For our Nureddene, 
I will divide my riches in two halves, 
Leave one to him and one for you with Murad, 
While you are with your kin or seem to be.

AMEENA 
Oh wherefore this?

IBN SAWY

’Tis likely that the boy, 
Left here in sole command, will waste his wealth 
And come to evil. If he’s sober, well; 
If not, when he is bare as any rock, 
Abandoned by his friends, spewed out by all,
It may be that in this sharp school and beaten
With savage scourges the wild blood in him
May learn sobriety and noble use:
Then rescue him, assist his better nature.
And we shall see too how the loves endure
Betwixt him and the Persian; whether she
Deserves her monarchy in his wild will,
Or, even deserving, keeps it.

AMEENA 
But, dear husband, 
Shall I not see my boy for a whole year?

IBN SAWY 
No tears! Consider it the punishment 
Of our too fond indulgent love, — happy 
If that be worst. All will end well, I hope, 
And I returning, glad, to Bassora 
Embrace a son reformed, a happy niece 
Nursing her babe, and you, the gentle mother 
Like the sweet kindly earth whose patient love 
Embraces even our faults and sins. Grant it, 
O Allah, if it be at all Thy will.

Exeunt. 



இபின் ஸாவி:

உனக்கிதை முன்னமே உரைத்து விட்டார்போல்!
( ஹார்கூஸிடம்)
இளிக்கும் நீசன்!
ஹார்கூஸ்:

ஆமாம் நெசத்துல நாந்தான் சொன்னேன். ஒங்க மறை கொஞ்சம்
கெழண்டிருக்கு; ஹார்கூஸைக் கொஞ்சம் அடிச்சிடு.

இபின் ஸாவி:

என்னுடை மறையா, துட்டப் போக்கிரி!
கழட்டுவேன் உன்றன் மறையதைக் காண்பாய்.

நூரெதீன்:

இல்லை, தந்தையே, இவனை விடுங்கள்,
உங்கள் மேன்மை, உயர்ந்த கொள்கை
கண்ணியம், கெளரவம் என்னுமி வையெலாம்
என்றன் குருதியை விடவும் அதிகம்
மதிப்புடைத் தாயென் மனங்கரு திடுதே.
எனவிதில் உம்ஆணை மீறி இருப்பின்
இம்மியும் உங்கட்(கு) இழிவைத் தருவதென் 
நோக்கம் இலையெனச் சூளுரைக் கின்றேன்
சொல்வது கேட்பீர்.
அதுபோல் ஆணை இருப்பதே அறியேன்.
என்றன் அனீஸியை வேந்தர்க் கெனநீர்
விழைந்திருந் தீரெனில் அறியேன் அதைநான்.
ஈங்கவள் தன்னை வாங்கினீர் எனக்கென
எண்ணினேன், அவ்வா(று) இயம்பப் பட்டேன்.
பஸ்ஸோரா நகர்க்குப் பாவையை விதியே
கொணர்ந்த(து) எனக்குக் கொடுத்திடத் தானென 
உண்மையில் இன்னும் எண்ணுகி றேனே.

இபின் ஸாவி:

அதுவொரு பிழையே ஆகுமென் குழந்தாய்.

நூரெதீன்:

அதற்குநான் வருந்தேன்.

இபின் ஸாவி:

வள்ளலென் மகன்நீ, வாரி வழங்குவாய்,
கள்ள மற்றவன், உள்ள(து) உரைப்பாய்,
அஞ்சான் ஆயினும் ஆக்கினாய் பிழையே.
இனியிவ் வடிமையை நீயே கொள்க,
ஆயினோர் வாக்கை அளித்தி(டு) எனக்கே,
ஆசை மகளாய், அடிமையாய், மனைவியாய்
இன்னொரு பெண்ணினி உன்னிரு கரத்தில்
இராளொரு போதும் என்றோர் சூளுரை.
மற்றவள் தானே விரும்பினால் அன்றி
பற்றிய அவளை விற்றிட மாட்டாய்
என்றோர் உறுதியும் எனக்குநீ அளித்துன்
காதற் பெண்ணைக் கரத்திடைக் கொள்வாய்.

நூரெதீன்:

அப்படி யோர்சூள் அளிக்கிறேன் உமக்கு.

இபின் ஸாவி:

இனிநீ செல்லலாம்.

நூரெதீன் வெளியேறுகிறான்.

அனீஸி.
நின்றன் நலனைக் கருத்தில் கொண்டே
இன்றிவ் வாக்கைப் பெற்றேன் அவனிடம்,
இதையவன் காப்பான் எனநான் நம்புகிறேன்.
வேண்டி இருக்கும் ஈண்ட(து) உனக்கே;
கொஞ்சம் கூடக் குறைவின்றி நீயவன்
அன்பு மனைவியாய் ஆற்றுக நின்பணி.

அனீஸி:

இதுவோ மேன்மை! இதுவதன் பண்போ!
இதுவோ பெரும்பிழை இழைத்தார் உளமும்
விழைந்தது கருதி வேண்டுவ(து) இயற்றல்!
நெறியைக் காட்டும் முறையும் இதுவோ!

இபின் ஸாவி:

செல்லுக உள்ளே, செல்லென் குழந்தாய்,
செல்லுக அனீஸி.

அனீஸி வெளியேறுகிறாள்.

முன்னமே உன்னிடம் உரைத்தது போல
மேன்மை தாங்கிய காலீஃபா சார்பில்
உரோமியம் சென்று கிரேக்கர் தம்முடன்
பேச்சு நடத்தப் புறப்படும் முன்னர்
கடைசி இரவு காணிது தானே
நீண்டு கழியுமோர் ஆண்டுநான் இன்றி, ---

அமீனா:

சோதனைக் காலம்.

இபின் ஸாவி:

மேலும் கெடுதல் நிகழ்ந்திடக் கூடும்;
இனியென் மக்களை எதுவும் இறையுளப்
படியே நடந்திட விடுத்தகல் கின்றேன்.
திருமண மேடை செல்வாள் தூன்யா.
காக்கனின் மகன்தன் குட்டிக் கெனவே
பார்க்கிறான் அவளை. எனினும் நிச்சயம்
அவனுக்(கு) அளிப்ப(து) என்ப(து) இலையே.
பேதைப் பெண்ணைக் காதல் உளத்தால்,
கனிந்த கரத்தால் இனிது காப்பவன்
ஒருவன் தனக்கே உவந்தளிப் போமே.

ஆமீனா:

யாரவன், துணைவா?

இபின் ஸாவி:

நன்றவன் மூரது, நகரத் தலைவன்.
மன்னன் அல்ஸைனி நலத்தைக் காக்க
அல்லும் பகலும் எழுபவன் அவனே.

ஆமீனா:

அவனொரு துருக்கன். ஆயின் நமது
சீரார் அரேபியர் தேசக் கிளையது
பண்பிலே குறைந்த பரம்பரை யுடனே
ஒட்டிப் படர்ந்தே உறவா டிடுமா?

இபின் ஸாவி:

பிழையான எண்ணம்.
இஸ்லாம் மதத்தில் இலையொரு வமிசம்.
இறையிடம் இருந்தே எல்லாம் தோன்றும்.
நூரெதீன் நலத்தை நினைவில் கொண்டே
எனதுசெல் வங்களை இரண்டாய்ப் பிரிப்பேன்.
கொடுப்பேன் ஒன்றை அவனுக் கென்றே
விடுப்பேன் ஒன்றை மூரதுடன் நீயே
துய்த்திட வெனவே சுற்றம் உடனோ
இல்லைநீ தனியே இருந்தா லுந்தான்.

ஆமீனா:

ஆ,எதற் கிந்த ஏற்பா டெல்லாம்?

இபின் ஸாவி:

சொத்துக் களெல்லாம் சுதந்திர மாகத்
துய்த்திட விட்டால் ஒருகால் பையன்
அனைத்தையும் வீணே அழித்துத் தொலைத்துப்
பாழும் துயரில் ஆழ்ந்திடக் கூடும்.
குடியில் மூழ்கா திருந்தால் நன்று.
இல்லை யென்றால்,
தோழர் துறக்க, ஊரார் உமிழ.
உற்றார் இகழ ஒதுக்குப் புறமாய்
தனித்த பாறையாய் கிடக்கும் நிலையில்
கற்றிடும் பாடம் கசையடி கொடுக்க
ஓடிடும் குருதியின் வேகம் ஒடுங்கச்
சிந்தை தெளியத் தெரிந்திட உலகம்
வீணாக் காது மேலாம் வழியில்
சென்றிட முயலும் வேளை தோன்றின்,
மீட்டிடு அவனை, காட்டிடு வழியை.

அதன்பினர் தான்நாம் அனைவரும் அந்தப் 
பாரசீ கத்தின் பேரெழி லாளாம்
பெண்ணும் இவனும் கொண்டதோர் காதலின்
உண்மை நிலையின் உறுதியை அறிவோம்;
காதலன் இவனது கற்பனை கட்டிய
சீரார் நாட்டின் தேவியாய் நிற்கும்
தகுதியும் அவளிடம் திகழ்கின் றதுவா
என்பதும், அப்படி இருப்பின் அந்நிலை
நிலையாய் நிற்குமா என்பதும் அறிவோம்.

ஆமீனா:

ஆயின், என்றன் அருமைக் கணவா,
ஆண்டொன்று மெள்ளச் சென்றிடும் வரைநான்
ஈண்டென் மகனை என்னிரு கண்ணால்
காணா மல்தான் கழிக்க வேண்டுமா?

இபின் ஸாவி:

கண்ணீர் வேண்டாம்! தண்டனை தந்தனர்
என்றதைக் கொள்க, அன்பும் செல்லமும்
அதிகம் கொடுத்ததால் அடைந்தோம் என்றுணர்.
கொடுப்பது மிகமிகக் கொடுமையாய் இருப்பினும்
இன்புடன் ஏற்றுக் கொள்ளுக அதனை.
நலமே எல்லாம் முடியும் என்று
நம்புகின் றேன்நான். நாளொரு நாளில்
திருநகர் பஸ்ஸோரா திரும்பிநான் வந்ததும்
திருந்திய மகனைத் தழுவுவேன் விரும்பி.
இன்புடன் இருக்கும் மருமாள் தனது
சேய்க்குத் தாய்ப்பால் தந்திடக் காண்பேன்.
செய்யும் பிழையும் புரியும் பாவமும்
எல்லாம் பொறுத்துக் கொண்டவ ளாக
நம்மைத் தாங்கி நமக்கருள் புரியும்
பூமியைப் போலே பொறுமை பூண்டுள
அன்புடை அன்னையாய் உன்னைக் காண்பேன்.
அல்லா, அல்லா, அருள்வீர் உமது
திருவுளப் படியிவை திகழ்ந்தால் எமக்கே.

வெளியேறுகிறார்.

சிவசூரி.
(தொடரும்)



Lalitha & Suryanarayanan

unread,
Oct 30, 2021, 2:03:37 AM10/30/21
to santhav...@googlegroups.com
பஸ்ஸோரா அமைச்சர்கள் 30

(இப்பொழுதில் இருந்து ஒவ்வொரு அங்கத்திலும் இருக்கும் சில மிக முக்கிய உரையாடல்களை மட்டும் இடலாம் என்று இருக்கிறேன்.
இபின் ஸாவி நாட்டில் இல்லாத சமயம் பார்த்து நூரெதீனைத் தவறான வழிகளில் இட்டுச் சென்று கெடுப்பதற்குத் திட்டம் தீட்டுகிறான் அல்மியூன். அவன் அஜீபு வின் விட்டிற்கு வருகிறான்.)

மைமூனா:

இந்தநம் மாமன் ஒருவனைப் பார்ப்பதும்
இழிந்த சொறிநாய் ஒன்றைப் பார்ப்பதும்
இரண்டும் சரிநிகர் சமானம் ஆகும்.
என்றோ ஒருநாள் இங்கது தோன்றும்.

அவள் தன்னை ஒரு திரையின் பின்னால் மறைத்துக் கொள்கிறாள்.
அஜீபு அல்மியூனுடன் திரும்பி நுழைகிறான்.

அல்மியூன்:

செல்கிறான் நாளை அல்லவா ? நல்லது.
ஊரைச் சுற்றும் உதவாக் கரையெனும்
சீருடை நூரெதீன் திருக்கரம் தானே
சொத்து சுதந்திர சுகங்கள் எல்லாம் ?
நல்லது மிகமிக நல்லது தானே.
மூடன் அவனென மொழிந்துளேன் என்றும்.
(தனக்குள்)

அந்த அடிமைப் பெண்ணைப் பற்றிய
செய்கை ஒன்றது போதுமே எனக்கு,
கையும் மெய்யுமாய் எளிதில் பற்றியோர்
கலக்குக் கலக்கி உலுக்கிட அவனை
குற்றம் அதுபெருங் குற்றம் ஆமே.
பொறுபொறு ஆனால் பொறுத்திரு சற்றே!


போய்விட் டானவன், தேய்ந்து போயின
அவனைப் பற்றிய நினைவுகள் அனைத்தும்,
அவனது செல்வம் அழிந்த(து) அனேகமாய்,
அழிப்பேன் நானவன் அருமை மகனை,
என்மகன் ஃபரீதை வேண்டா(து) ஒதுக்கி
வேண்டும் என்றவன் விரும்பிய அந்த
செருக்குத் துருக்கனின் சீரழிப் பேனே.
அவனது தூன்யா, அவனுடை அனீஸி
ஆகிய இருவரும் அடிமை மகளிரென்
கொழுகொழு வென்றுள குமரன் தனக்கே.
அவனது மனைவி, --  ஆஅவள் பிழைத்தாள்.

போதும் வேறென் மீதம் வேண்டும்.  
சிதைந்த மனையவர் மீண்டும் செல்வர்.
தனிமையும் துயரமும் துணைசெய ஆங்கு,
சுருக்கம் மேனியில் நெருக்கமாய் நிற்கும்,.
கூட்டில் வெறுமை குடிகொண் டிருக்கும்,
வாட்டும் குளிரில் இலையிலா மரம்போல்
ஆதர வின்றியே அவர்வாழ்ந் திருப்பர்!
அதற்குள் அரசனின் உள்ளத்(து) அறையெலாம்
என்றன் முத்திரை  வைத்தடைத் திருப்பேன்;
திரும்பிய பின்னர் சீரார் கதவெலாம்
திறவா(து) இருக்கும் நிலையவன் காண்பான்.

அஜீபு:

மாமா, நீங்கள் தீவிர சிந்தனை 
செய்கின் றீரா?

அல்மியூன்:

இல்லை, அஜீபு;
அற்ப மானதே, சொற்ப மானதே.
நீஇபின் ஸாவியின் மகனின் நெருங்கிய
நண்பன் என்றுநான் எண்ணுதல் சரியா?

அஜீபு:

குடிப்போம் ஒன்றாய்.

அல்மியூன்:

நல்லது, நல்லது! சொல்லுக இனியே
அதிகா ரம்செய ஆள்படை வரிசையும்  
மாடும் மனையும் மரியா தைகளும்
நாடுவை யாவிலை முடங்கிக் கிடப்பதில்
நிறைந்திடு மாவுன் குறுகிய ஆன்மா?

அஜீபு:

ஏன்கேட் கின்றீர், மாமா என்னை?

அல்மியூன்:

மரணம் வருமென பயமுனக் குண்டோ?
அவமா னம்வரின் ஆத்திரம் வருமோ ?  
இவற்றினும் தாழ்ந்த இழிநிலை யான
பிச்சை புகுவதில் இச்சையும் உண்டோ? 
என்னிலை வேண்டும் என்றுரைப் பாயே.

அஜீபு:

அச்சுகம் விழைவோர் இச்சகத் தோர்கள்,
அஞ்சுவர் நெஞ்சிலிக் கேடுகள் எண்ணி.

அல்மியூன்:

அவையெலாம் நினதாம் அளவு கடந்தே,
நன்றென் பணிசெயின் நல்லவை கிட்டும்,
என்பணி மறுப்பின் அல்லவை கிட்டும்.

அஜீபு:

பணியது யாதோ?

அல்மியூன்:

கேடு கெட்ட நூரெ தீனை மேலும் கெடுக்க வேண்டும்
ஆடி யாடி உல்லா சத்தில் மூழ்க டிக்க வேண்டும்
வேட மிட்டுத் தோழன் போலச் சூறை யாட வேண்டும்
தேடி வந்த சொத்து யாவும் செலவ ழிக்கச் செய்வாய்
வீடு வாசல் விட்டு வந்து பிச்சை கேட்கும் வரையே.  

புலன்கள் ஐந்தும் போதை யேறிட
நலமெலாம் அழிந்தவன் நிலையை மறந்து  
வீழ்ந்து கிடக்கும் போதினில் நெஞ்சில்
வெட்கமே வந்து மோதுதல் செய்யும்
வேளை வந்துமே இன்னும் இன்னும்
வேண்டும் என்று மீண்டும் கேட்கும்
ஆசை நெஞ்சினில் ஓசை செய்கையில்
சாக்கடை யேயவன் போக்கிட மாகும்
பங்குடை உனக்கும் அங்கிடம் இருக்கும்.
ஈதெலாம் செய்யின் சாதனை உனக்கு;
செய்கிலை யெனிலோ வேதனை உனக்கு.
எண்ணிஎண் திங்கள் இங்குனக்(கு) ஈந்தேன்.
இல்லை யெனிலோ இடமிலை என்னிடம்.

வெளியேறுகிறான்.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Oct 30, 2021, 9:03:45 PM10/30/21
to santhav...@googlegroups.com
பஸ்ஸோரா அமைச்சர்கள் 31

( இடுகை முப்பதில் பார்த்தது அங்கம் 2, களம் 4 -ன் சாராம்சம். அமைச்சன் அல்மியூன் நூரெதீனைக் கெடுப்பதற்கு அடிகோலிவிட்டான். வேறு வழியொன்றும் காணாத அஜீபு தனது நண்பர்களின் மூலம் அல்மியூன் சொன்னவண்ணம் செய்துவிட்டான்.

அங்கம் 3 ஏழு காட்சிகளைக் கொண்டது. கடன்கொடுத்துள்ள பல்வேறு கடைக்காரர்களும் நூரெதீனின் வீட்டைச் சூழ்ந்து கொள்கின்றனர். அனீஸி நூரெதீனைக் கடனில் இருந்து விடுபடும்படியாக வற்புறுத்துகிறாள். தந்தை விட்டுவிட்டுச் சென்ற சொத்துக்களில் வீட்டைத் தவிர எல்லாவற்றையும் விற்றும் கடனில் பெரும்பங்கு அடையவில்லை. சுல்தானிடம் அனீஸியை சுல்தானுக்காக வாங்கிவிட்டு இபின்ஸாவி சுல்தானை ஏமாற்றிவிட்டுத் தன மகனுக்குக் கொடுத்துவிட்டான்  என்று அல்மியூன் கூறி நூரெதீனையும் அனீஸியையும் சிறைப்பிடித்து இழுத்துவருமாறு கட்டளை பெறுகிறான்.

நிலைமை இவ்வளவு மோசமான பிறகு அஜீபு தன் பிழைகளை எண்ணி வருந்துகிறான். நூரெதீன் தப்பிப் பிழைத்து பாக்தாத் செல்ல ஒரு கப்பலை ஏற்பாடு செய்கிறான். மிச்சம் மீதி இருக்கும் கடனைத் தான் பார்த்துக் கொள்வதாக உறுதி கூறுகிறான். பாக்தாத் சென்று கலீஃபாவிடம் முறையிட வேண்டும் என்று நூரெதீன் அந்தக் கப்பலில் புறப்படுகிறான்.

இப்படியாக அங்கம் மூன்றில் இருக்கும் ஏழு காட்சிகளையும் நாம் தாண்டிவிடுகிறோம். இதோ நூரெதீன் அனீஸியுடன் நாம் பாக்தாத் நகரில் நுழைகிறோம். அங்கம் 4 களம் 1 தொடங்குகிறது. )

அங்கம் 4 களம் 1

கலிஃபாவின் அரண்மனைக்கு வெளியே இருக்கும் உல்லாசக் கூடங்களை ஒட்டி இருக்கும் பூங்காக்கள்.

அனீஸி, நூரெதீன்.

அனீஸி:

இதுதான் பாக்தாத் இதுவே தானே!

நூரெதீன்:

எழிலார் பாக்தாத் இதுதான், இதுதான்!
உளத்தை மகிழ்த்தும் வளநகர் இதுதான் !
இச்சை ஊட்டும் பச்சைப் பூங்கா !
பன்னிறப் பறவைகள் இன்னிசை ஒலிகள்
மரங்களில் இருந்துநம் மனத்தைக் கவரும்!
  

அனீஸி:

பூக்கள், பூக்கள், எங்கும் பூக்கள்!
ஊதா நிறத்தில் ஒளிரும் பூக்கள்
தோதாய்த் தேனைத் தூக்கிக் கொடுக்கும்!
எரியும் கந்தகம் எனத்திகழ் நீலம்
கண்ணைச் சிமிட்டும் கருநெய்தல் பார்!
ஆயிரம் ஆயிரம் ரோஜாப் பூக்கள்!
மருவும் தவளமும் மணப்பதைப் பாரேன்!
மகிழ்வை ஊட்டும் வகுளம் பாரேன்,
அகத்தில் நிறையும் சுகந்தப் பூக்கள்!
செந்நீர் போலும் செவ்வந்திப் பூக்கள்!
எழில்நடை பயிலும் இளவே னிலிங்கே
வாரி இரைத்த வண்ணக் கோலம்!

நூரெதீன்:

ஓங்கும் மரத்தில் தூங்கும் பழங்கள்
ஏங்கச் செய்யும் எழிலென் னேடீ,
அனீஸி?
அற்புத மணந்தரு கற்பூர மரம்பார்!
வாதா மரம்பார்! பாதாமி பாரேன்!
அத்திப் பழத்தில் எத்தனை நிறம்பார்!
கொள்ளை கொள்ளும் வெள்ளை வண்ணம்
மின்னும் ஊதா, கொஞ்சும் பசுமை
என்னும் பல்வகை எங்கும் பாரடீ!
பருத்துக் கிடந்து வருத்தம் போக்கும்
கொத்துக் கொத்தாய்த் தொங்கும் திராட்சையின்
இந்திர நீலம் சிந்தையைக் கவரும்,  
இரத்தின மணிநிறம் எதிரினில் தெரியும்,
செம்மையும் கருப்பும் சேர்ந்திடும் அழகாய்;
சுற்றுச் சுவரில் பற்றிப் படரும்,
கொடிகள் ஓடும் மாடம் பாரடீ!
உருண்டு திரண்ட இலந்தைப் பழங்கள்
மின்னுமுன் கன்னம் நிகர்த்தன காண்டி!
இங்கே இருக்கும் எலுமிச் சைகள்
தங்கப் பந்தாய்த் தெரிவதென் னேடீ!
காரிகை அனீஸி, என்றன் கண்ணே,
நின்றன் நெஞ்சம் நினைப்பதென் னேடீ?
சேல்விழி கொண்டிச் செர்ரீக்கள் பாரடீ!
பொன்னிறம் சேர்ந்த செந்நிறக் கிச்சிலி
மின்னிடும் எழிலை உரைப்ப தென்னெடீ!


அனீஸி:

செவ்விதழ் சேர்த்துச் சீழ்க்கை ஒலிசெயும்
கருநிறக் குருவி காதுக்(கு) அமுது!
முணகும் புறவம் முன்னால் பாரேன்!
கொஞ்சும் ஆமைக் கூட்டம் பாரேன்!
அடடா பாரேன்,
எழிலார் மரநிறம் இருக்கும் குருவி
சிறகை அடிக்கும் சீரினைப் பாரேன்,
மெள்ள மெள்ள அழைப்பதைப் பாரேன்!
வாகாய் அசைக்கும் தோகையைப் பாரேன்!
செம்மையும் நீலமும் சேர்ந்ததோர் வண்ணம்!
கதிரும் விழுந்தால் மதியும் எழுந்தால்
ஆயிரம் ஆயிரம் வானம் பாடிகள்
சேர்ந்திசை பாடும் செவ்வையாய் அன்றோ!
நல்லது நாமே பஸ்ஸோரா விட்டுச்
செல்லென விரட்டப் பட்டது நன்றே!

நூரெதீன்:

இங்கோர் மாளிகை எழிலின் ஆளுகை!
மாளிகை எங்கும் சாளரக் கூட்டம்!   
எத்தனை நூறென யாரே அறிவார்!

அனீஸி:

கண்டா யாநீ கவினார் மாளிகை
கோல விதானக் கொத்து விளக்குகள்?
தகதக வென்றே ஒளிரும் தங்கம்!

நூரெதீன்:

சாளரம் தோறும் விளக்குகள் பாரேன்!
இரவைப் பகலாய் எரிக்கும் போலும்
எழிலார் தீபமிப் பொழில்களை எல்லாம்!
சீரார் தோட்டம் யாருடை யதுவோ!
இயற்கை மடியில் இங்கே எங்கோ
சற்றே தலையைச் சாய்த்திட லாம்பின்
மாண்பார் கலீஃபா காண்பான் செலலாம்.

பின்புறம் இருந்து ஷேக் இப்ராஹிம் நுழைகிறான்.

சிவசூரி.

(தொடரும்)

Lalitha & Suryanarayanan

unread,
Oct 31, 2021, 9:35:32 PM10/31/21
to santhav...@googlegroups.com
பஸ்ஸோரா அமைச்சர்கள் 32

அங்கம் 4, களம் 1 தொடர்கிறது...

பின்புறம் இருந்து ஷேக் இப்ராஹிம் நுழைகிறான்.
(இப்ராஹிம் கலீஃபாவின் தோட்டக்காரன்)

இப்ராஹிம் :

ஓஹோஹோ ! காதல் புரிந்திடும் கட்டிளங் காளை உன் காதற் சிட்டுடனே ! கலீஃபாவின் தோட்டத்தில் காலடி இடுவதற்கு எவர்க்கும் அனுமதி இல்லை என்பது தெரியாதா உமக்கு ? இல்லையா ? அப்படி யென்றால், முன்னம் உங்கள் அழகிய பின்னம் பகுதியை ஓர் ஈச்சங்குச்சியால் தொட்டுத் தழுவி ஓங்கி உரைத்திடுவேன். அப்படிச் செய்யமாட்டேனா நான் ? ஹோ !

குச்சியை ஓங்கிப் பிடித்தபடி திருட்டுத்தனமாய் அவர்களை நோக்கி வருகிறான். நூரெதீனும் அனீஸியும் அவனைத் திரும்பிப் பார்க்கிறார்கள்; அவன் குச்சியை நழுவ விடுகிறான், கரமோ தூக்கிய வண்ணமே நின்றுவிடுகிறது. 

நூரெதீன்:

தோட்டத்தின் சொந்தக்காரப் பிரபு இவர்தான். இந்தத் தோட்டம் யாருடையது, தோழரே ?

அனீஸி :

பாவம் இந்த ஆளுக்கு நாக்கே எழவில்லையோ வாக்கெதும் வரவே ? வாயைப் பிளந்து நம்மையே உற்றுப் பார்க்கிறார் அதிர்ச்சி அடைந்து.

இப்ராஹிம் :

அற்புதமாய் உமைச் செய்தது அல்லாவின் இன்னருளோ ! விற்பனமோ! உங்களை இங்கே விஞ்சையரே கொணர்ந்தாரோ ! நான் கண்படைத்த பெரும் பயனோ  நீங்கள் மண்மிசையில் வந்ததுவே  ! வந்தெதிரில் நிற்கும் உங்கள் வடிவழகின் நேர்த்தி கண்டு வாயாரப் பாடுகிறேன் அல்லாவின் கீர்த்தி ! சொல்லுங்கள் நீங்கள் சொர்க்க வாசிகளோ ?  

நூரெதீன் ( சிரித்துக்கொண்டே)

அதற்குப் பதிலாய் அழகான முதுமைப் பருவத்தை உமக்குக் கொடுத்திருப்பதற்கும் உம் முகத்தில் வெள்ளை வெளேரென்று வெண்ணிறத் தாடி நீண்டு வளர்ந்திருப்பதற்கும் அல்லாவின் புகழைப் பாடுவீராக . இந்தத் தோட்டத்தில் நுழைய எங்களுக்கு அனுமதி உண்டா ? வெளிக்கதவு தாளிடப் படாதிருந்தது.

இப்ராஹிம் :

இந்தப் பூங்கா ? என் பூங்காவா ? ஆம்,ஏன் மகனே; ஆம் என் மகளே.
எழிலார்ந்த உங்கள் பாதங்கள் இட்டிடவே ஏற்ற இடம் இதுவே தான் ! இதுவரையில் இத்தகைய எழில் மலரொன்றும் இத்தரையில் பூத்ததில்லை.

நூரெதீன்:

ஆ, ஈதென் உமதாமோ ? இந்த மாளிகையும் ?

இப்ராஹிம் :

எல்லாம் எனதே, என் மகனே. அல்லாவின் கருணை ஒருபால் ! ஏழைக் கிழவனை எட்டியது ஒருபால். 
இறையே என்னைத் தேர்ந்தனர் ஒருபால் - எனவே இவையெல்லாம் நேர்ந்தது ஒருபால் ! சொத்தும் என்னைச் சேர்ந்தது ஒருபால் ! கண்ணீர் கழுவிடும் புண்ணியர் ஒருபால் ! புனிதன் ஆகிய இம்மனிதன் ஒருபால் ! அத்தன் ஒருபால் - அவன் சித்தம் ஒருபால் !
அடாது வரினும் விடாது செய்யும் பக்தியால் கிடைத்த சக்தியும் ஒருபால் ! விழுகையால் ஒருபால், எழுகையால் ஒருபால், தொழுகையால் ஒருபால் ! காலைத் தொழுகை, மாலைத் தொழுகை, மதியத் தொழுகை, விதித்துள வேளை எல்லாம் தொழுகை செய்ததால் ஒருபால் !

நூரெதீன்:

எப்பொழுது இதை வாங்கினீர் , எப்படி இதை வடிவமைத்தீர், என்றன் கிழட்டுத் தந்தையே ?

இப்ராஹிம்:

ஒரு வயதான அத்தைப் பாட்டி எனக்கென இதை விட்டுச் சென்றுவிட்டாள். இதில் வியப்பொன்றும் அடைந்துவிட வேண்டாம். மேதகு கலீஃபாவின் மைத்துனியின் சோதர முறையாகும் ஒருவனின் சொந்த அத்தையின் பாட்டிமுறை ஆக ஆவாள் அவள்.

நூரெதீன்:

ஓ, உண்மையில் அப்படியா ! நெருங்கிய உறவு தான் ! அவளுக்குத் திரண்ட சொத்துக்குச் சொந்தக்காரியாக இருப்பதற்கு தேவனின் திருவருள் இருந்திருக்கிறது ! ஆனால், நீங்கள் அந்தச் சொத்துக்களின் முறையான வாரிசாக ஆவதற்குச் சட்டப்படி உரிமையானவர் தான் என்று நம்புகிறேன்.

இப்ராஹிம் :

கலீஃபாவின் திரண்ட சொத்துக்களை யெல்லாம் நான் வேறெவரிடம் இருந்தும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்றன் மகனே, என்றோ ஒருநாள் நில்லாதொழியப் போகின்ற இந்தப் பொருட்களை எண்ணி ஏங்காதே ! கடைவழிக்கு இவையொன்றும் வாராவே !

சட்டப்படி உனக்குச் சொந்தம் ஆகாதவற்றை எல்லாம் நெஞ்சிலும் நினையாதே. உண்மையில் இவையெல்லாம் நாம் சிக்கிக் கொள்வதற்காக வீசப்பட்ட வலைகளே ! இச்சகத்தில் நிச்சயமாய் இவை நமது ஆன்மாவின் கால்களைக் கட்டிப் போட்டுவிடும் ! சொர்க்கத்துக்கு  இட்டுச் செல்லும் கரடு முரடான பாதையிலே நாம் தட்டுத் தடுமாறிச் செல்லும்போது அவை நமக்குத் தடையாக அமைந்துவிடும்.

அனீஸி :

ஆனால், முதிய தந்தையே, அளவுகடந்த சொத்துக்கு அதிபதியாய் இருக்கும் நீங்கள் இத்தனை மட்டமான உடைகளைப் போய் அணிந்துள்ளீர்களே ! நான்மட்டும் இந்தப் பூங்காவிற்கு உரிமையாளியாய் இருந்தால், குறைந்த பட்சம் வண்ண வண்ணப் பட்டிலும் வழவழவென்றிருக்கும் வெல்வெட்டுகளிலும் சாட்டின்களிலும் ரோஜா வண்ணத்திலும் செவ்வந்தி நிறத்திலும் உள்ள ஆடைகளில் வளையவருவேன்.

இப்ராஹிம்  (தனக்குள்)

கருங்குயில் கூவியதா இல்லை, இந்தக் கன்னிதான் பேசினாளா ? 
கேப்ரியல் தேவதையே, இந்த மாதிரி இன்பத்தை நீ எனக்கு மீண்டும் மீண்டும் தாயேன் ! நான் உன்னுடன் சண்டையிட மாட்டேன் நீ சொர்க்கத்தின் அழகெல்லாம் என் தோட்டத்தில் பெருக்கெடுத்து ஓடவிட்டு விட்டாலும்;. ஏனெனில் நீ சொர்க்கத்தின் கதவங்களைச் சற்றே திறந்து வைத்துவிட்டாய்.

(இறைந்து) சீச்சீ, என் அருமை  மகளே, நான் அல்லாவைச் சரணடைந்தவன். நானோர் ஏழை, பாவம் செய்த வயதான கிழவன், வீட்டில் ஒரு கால், காட்டில் ஒரு கால் என்று வைத்துக் கொண்டுள்ளேன். வண்ண வண்ண ஆடைகளையும் அணிகலன்களையும் போட்டுக் கொண்டு நான் என்ன செய்வது ?
ஆனால், அவை நின்றன் மேனியில் எடுப்பாய் இருக்கும். இப்படி எழில் நிலவைப்போல் உனக்கு ஓர் இடுப்பு கொடுத்திருப்பதற்கும் இல்லாததுபோல் சிறுத்து இருக்கும் ஒரு சிறிய இடையைக் கொடுத்திருப்பதற்கும் வல்லான் ஆகிய அந்த அல்லாவை நான் வாழ்த்துகிறேன் ! திருவினும் திருவாய் இருப்பவரே, அல்லாவே, என்னை மன்னியுங்கள் !

அனீஸி :

முதிய தந்தையே, நாங்கள் மிகவும் களைத்துப் போயிருக்கிறோம். பசி, தாகம் எங்களைக் கொல்கிறது.

இப்ராஹிம் :

ஆ, என் மகனே ! ஆ, என் மகளே ! அதைப் பற்றியே நான் நினைக்காமல் இருந்ததற்கு என்னுடைய நெஞ்சம் நாணுகிறது. 
வாருங்கள், வாருங்கள், உள்ளே வாருங்கள்; இந்த ஒய்யார அரங்கம் உங்களுடையதுதான். இங்கே பசியாற உண்பதற்கு  உணவா இல்லை !  விரும்பிப் பருகுவதற்கு வகைவகையான மதுவா இல்லை !.----- போட்டவரை மயக்காமல் போதும் போதும் என்று மனம் நிறைக்கும் பழச்சாறுகளும் உள்ளன, எடுத்தெடுத்துத் தாகம் தணித்துக்கொள்ள சுத்தமான குடிநீரும் உள்ளது. 

ஆ, அந்த திராட்சை ரசமென்னும் மதுபானம், நமது நபிகள் நாயகத்தால் அது தடைசெய்யப்பட்டுள்ளதே.ஆ அது ஓதுகின்ற நாயகனின் திருநாமம் ! அது உலக நாயகன் திரு நாமம் ! அது பொழுதெலாம் துணைசெய்யும் ஒரு நாமம் ! தூயவர் உடைய திருநாமம் அது ! தொழுவோரின் நாவிலும் நெஞ்சிலும் உள்ள உயர் நாமம் ! துதிப்போரின் துன்பம் போக்கும் துணைநாமம் ! துன்பக் கடலில் தோணியாகும் தூய நாமம் !

உள்ளே வாருங்கள், உள்ளே வாருங்கள், மோப்பக் குழையும் அனிச்சம்போல் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்தன்றோ ! விருந்து கண்டபோது என்னவெல்லாம் தரவேண்டும் என்று எண்ணி எண்ணி வீட்டிற்கு வந்தவரின் முகம் பார்த்து உணவிடாதவர்களும் முன்பின் அறியாதவரின்  பசி பார்த்துப் புசிக்கக் கொடுக்காதவர்களும் அல்லாவின் கடுங்கோபத்துக்கும் சாபத்துக்கும் உள்ளாக நேரிடுமே.

நூரெதீன்:

இது உண்மையிலேயே உங்களுடையது தானா ? நாங்கள் உள்ளே நுழையலாமா ?

இப்ராஹிம் :

அல்லா ! அல்லா ! உன்னுடைய பேரிழில் வடிவத்தைக் காண்பதற்கு இந்தக் கட்டிடத்தின் வண்ணத் தரை துடித்துக் கொண்டிருக்கிறதே. உன்னுடைய சகோதரியின் பொன்னெழிற் பாதங்கள் தன் மேல் படாதா என்று அது ஏங்குகின்றதே. இந்த வணங்குதற்குரிய கிழட்டுப் பயல் நான் இல்லாமல் அதற்குப் பதிலாய்,  இங்கே இளமை ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கும் கட்டிளங் காளை ஒருவன் மட்டும் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் ! அவளுடைய வண்ணச் சீறடி பளிங்குத் தரையில் பட்ட இடங்களை யெல்லாம் பார்த்துப் பார்த்துப் பரவசமாய் அந்த வாலிபன் விழுந்து விழுந்து முத்தம் கொடுத்துக் கொண்டே செல்ல மாட்டானா ?  ஆனால் நானொரு வயதான முதியவன், என்னுடைய மனமோ அப்படிப்பட்ட முறையற்ற எண்ணங்களில் இருந்து விடுபட்டு விட்டதோடு புனிதமான நினைவுகளால் நிறைந்திருக்கிறதே.

சிவசூரி.
(தொடரும்)

Subbaier Ramasami

unread,
Nov 1, 2021, 9:19:41 PM11/1/21
to santhavasantham
பாக்தாத் வர்ணனையில் கவிதை கொஞ்சுகிறது

On Sat, Oct 30, 2021 at 8:03 PM Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:
பஸ்ஸோரா அமைச்சர்கள் 31

தாத் சென்று கலீஃபாவிடம் முறையிட வேண்டும் என்று நூரெதீன் அந்தக் கப்பலில் புறப்படுகிறான்.

இப்படியாக அங்கம் மூன்றில் இருக்கும் ஏழு காட்சிகளையும் நாம் தாண்டி40mail.gmail.com.

Lalitha & Suryanarayanan

unread,
Nov 1, 2021, 10:45:20 PM11/1/21
to santhav...@googlegroups.com
தலைவருக்கு நன்றி.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Nov 1, 2021, 11:03:08 PM11/1/21
to santhav...@googlegroups.com
பஸ்ஸோரா அமைச்சர்கள் 33
அங்கம் 4, களம் 1 தொடர்கிறது...

( ஷேக் இப்ராஹிமைப் பற்றித் தனியாக ஒன்றுமே குறிப்பிடாமல் அவன் காவல் காக்கும் தோட்டத்தில் நுழைந்துவிட்டோம். இந்த நாடகத்தில் நகைச்சுவையை வள்ளலென நமக்கு வழங்குகின்ற குடிகாரக் கிழவன் அவன். காமத்திலும் போதையிலும் தள்ளாடினாலும் நமக்கெல்லாம் குறைவின்றிச் சிரிப்பைக் கொட்டுகின்ற உரையாடலின் சொந்தக்காரன். பெரிய பெரிய வார்த்தைகளையும் வாக்கியங்களையும் போட்டு ஏதோ பெரிய துறவியைப்போல் பேசுகின்ற குணத்தன். பேச்சின் இடையிடையே பெரிய பெரிய இருக்கின்ற மற்றும் இல்லாத துறவிகளின் நாமங்களையெல்லாம சொல்லிக் கேட்பவரை மிரளச் செய்யும் நோக்குடையவன். சொல்லுகின்ற நல் வார்த்தைகளின் பொருளொன்றும் சிறிதும் எண்ணாதவன்.
இனி நம் நாடகத்தைத் தொடரலாம். - சூரி. )

நூரெதீன்:

வா, அனீஸி.

இப்ராஹிம் : ( பின்னால் நடந்து வந்தவனாக)

அல்லா ! அல்லா ! இவள் வசந்த காலத்தில் வாசமுடன் பக்கத்தில் வந்து நிற்கும் மானோ ! அல்லா ! அல்லா! என்னுடைய ஏரியில் இருக்கும் அன்னங்களுக்கு எல்லாம் இவ்வளவு அழகாக நடக்கத் தெரியவில்லையே. இவள் நடந்து செல்லும் அழகினைக் கண்டால் என்னுடைய தோட்டத்தில் இருக்கும் ஓதுமங்கள் எல்லாம் வெட்கப்பட்டு ஒதுங்கிப் போய்விடுமே ! தென்றல் காற்றிலே தலை சாய்க்கும் நாணலோ இவள் ! அல்லா ! அல்லா !

அரங்கத்தில் நுழைகிறார்கள்.


அங்கம் 4
களம் 2

உல்லாசக் கூடம்

உணவு வகைகள் வைக்கப் பட்டிருக்கும் மேசையைச் சுற்றி  அனீஸி, நூரெதீன், திவான் ஒன்றில் அமர்ந்திருக்கும் ஷேக் இப்ராஹிம்.


நூரெதீன் :

இந்த வாடூன்கள் (கபாபுகள்) மிக நன்றாக உள்ளன.பதப்படுத்தப் பட்ட பண்டங்கள் எல்லாம் பார்க்கவே இனிமையாக உள்ளன.
பழங்கள் மின்னுகின்றன. ஆனால், தாங்கள் ஒன்றுமே உண்ணாமல் அமர்ந்துகொண்டே இருப்பீர்களா ?

இப்ராஹிம் :

ஆம், என் மகனே. மதியத்தில் நான் உணவருந்தி விட்டேன். பெருந்தீனி தின்னக் கூடாது என்று என்னை அல்லா தடுத்தருளி இருக்கிறார் !

அனீஸி :

முதியவரே, எங்கள் அன்புத் தந்தையே, அப்படி யென்றால், எங்களை எங்கள் வயிற்றுக்கு வஞ்சகம் செய்ய வைக்கிறீர் நீங்கள். நான் எடுத்து ஊட்ட, என் கரத்தில் இருந்து  நீங்கள் ஒரு சிறு கவளமாவது சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும், இல்லையென்றால் உங்களுக்கு என்னால் ஒரு பயனும் இல்லை என்று நான் குறைப்பட்டுக் கொள்வேன்.

இப்ராஹிம் :

இல்லை, இல்லை, இல்லை, இல்லை. அப்படியா அது, உன்றன் விரல்களில் இருந்தா,  சிறியதும் மெலிந்ததும் ஆன சிவந்த உன் விரல்களே  ஊட்டுமென்றால் அது நன்றுதான். அல்லா ! ஈதென் பாக்கியம் ! மிகக் கொஞ்சம்தான், மிகமிகச் சிறிய கவளந்தான்; நிச்சயம், நிச்சயமே ! பண்ணார் அமுதே அல்லா ஆகா, தேனைவிடத் தித்தித்திருக்குமே உன் செவ்விரல்கள் ! ஆசையுடன் அன்பு முத்தம் கொடுத்து அவற்றை உண்டு களிப்பேன் - அதில் மூழ்கித் திளைப்பேன்.

அனீஸி :

வயோதிகப் பருவம் அடைந்துவிட்ட தந்தையே உங்களுக்கு வாலிபம் திரும்பிக் கொண்டிருக்கிறதா என்ன ?

இப்ராஹிம் :

ஓ, இப்பொழுது நான் சொல்லியதை வைத்துச் சொல்கிறாயா ! அது ஒரு முட்டாள்தனமான வேடிக்கைப் பேச்சு - அது என்னுடைய நரைத்த முடிக்கு ஏற்றதும் இல்லை, நான் அதைப் போற்றவும் இல்லை. . நான் அல்லாவிடம் சரண் புகுந்தவன் - அதில் வேறென்ன முரண் ! அல்லா ! அது முட்டாள் குறும்பு !

நூரெதீன் :

ஆனால், முதிய பருவத்தை அடைந்தவரே, முறையாக விருந்து உபசரிப்பவரே, மதுவருந்தாமல் இப்படி இறைச்சியை மட்டும் நீங்கள்  உண்பதுவா ?  இவ்வளவு பெரிய அரண்மனையில் பெரிய மதுஜாடிகள் இல்லையா ? இவ்வளவு அழகு நிறைந்திருக்கும் இவ்விடத்திற்கு இது ஒரு பெருங்குறைதான்.


இப்ராஹிம் :

நானென்ன புகல்வது ! நானோ அல்லாவைப் புகலாக அடைந்தவன் ! அங்கே வேறு எண்ணங்கள் வந்தெங்கே புகுமென்றேன் ! மதியைக் கெடுக்கும் மது ! ஒரு நீண்ட பதினாறு வருடங்களாக நான் அதை வேண்டவே இல்லை, என் கைகள் அதைத் தீண்டவே இல்லை. ஆ, நான் கட்டழகான காளையாய் இருந்த வேளை - அந்த நாளைப் பற்றியே நானென்ன கூற ! அப்போது நான்  ஏந்தியுள்ளேன் பல கிண்ணங்கள் ! - நீந்தியுள்ளேன்  பல வண்ணங்கள் !. ஆனால் அதுவோ தடுக்கப் பட்டதாய் பல உபதேசம் கொடுக்கப் பட்டதே ! அடடா, இபின் படாடா அவர்களின் அறவுரை என்னவென்று தெரியுமா ? ஓ,அந்த மது அது என்ன வெல்லாம் செய்துவிடுகிறது ! உனக்குக் கொடுக்கிறது உருமாற்றம் - அதைக் கொண்டு அடையாதே தடுமாற்றம் !

இப்ராஹிம் அல்லாஷா பின் ஃபஸ்ஃபஸ் பின் பயர்பிலோன் அல் சந்திலானி, பஸ்ஸோரா இந்த மதுவைப் பற்றி என்ன சொல்லியுள்ளார் தெரியுமா ? மதியைக் கெடுக்கும் மதுவின் தெளிவைக் கெடுக்கும் திறனைப் பற்றி மிகவும் தெளிவாய், ஆழமாய் உறுதியாய் உரைத்திருக்கிறார் - எங்கெங்கும் வாரி இரைத்திருக்கிறார்.

செக்கச் சிவந்து மின்னிக் கண்ணைக் கவர்ந்து நம் உயிரை ஒக்கக் கவரும் இந்த மதுவின் சிவப்பு வண்ணத்தைப் பாழ்நரகில் பட்டொளி வீசிப் பறக்கும்  பெரும் நெருப்பென்றார் - அதில் நாம் வைத்திட வேண்டும் வெறுப்பென்றார்.. அதன் குளுமையோ  மீளாத நரகத்தில் கொண்டு நம்மைச் சாய்க்கும் -- நம்மை அதுவே மாய்க்கும் என்றார். 
நம் தொண்டையையே அது இரண்டாய்ப் பிளக்கும் - எனவே மக்கள் அதை இனி விலக்கும் என்றார். ஆ, அல்லாஷா உண்மையிலேயே அரியவர் - மிகவும் பெரியவர்.

அனீஸி :

அந்த கற்றறிந்த வைத்தியரெல்லாம் யார் யார், முதிய தந்தையே ?
நான் எல்லா நூல்களையும் படித்திருக்கிறேன், ஆனால் இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லையே.

இப்ராஹிம் :

ஓ, நீ நூல் பலவும் படித்துள்ளாயா ? இவரெல்லாம் சூஃபிக்கள் - உண்மைத்  துறவிகள் . எங்கெங்கோ கண்காணாத இடங்களில் அவர்கள் இருக்கின்றனர். காணக் கிடைக்காத மருத்துவர்கள் அவர்களே.  அவர்கள் மெய்தேடி அலைகின்ற நூலோர் - அவர் மேதினியில் உள்ளவரில் மேலோர். அவர் புண்ணியமே உருவெடுத்து வந்தவர் -  நூல்கள் ஆன்மத் தேடல் உள்ளவர்க்கே தந்தவர்.

அனீஸி :

எவ்வளவு கற்றறிந்தவராக இருக்கின்றீர்கள் நீங்கள், ஷேக் இப்ராஹிம் !  அன்புடைய அல்லா, இப்போது சீரும் சிறப்பும் உடைய
அல்லாஷாவின் ஆன்மாவைக் காப்பாற்றுங்கள் !

இப்ராஹிம்:

ம்ம்.. அது அப்படித்தான். திராட்சை மது ! அதைப் பயிர் செய்பவன் பாவி ! சாறு எடுப்பவன் பாவி !. விற்பவன் பாவி !, வாங்குபவனும் பாவி ! அதைச் சுமந்து செல்பவன் பாவி !, இறுதியாகக் குடிப்பவனும் பாவி ! என எல்லோரையும் நபிகள் நாயகம் சபித்திருக்கிறார்.  ஐயோ, நபிகளின் சாபமென்னும் படைக்கலம் நமையென்றும் தாக்கும் -- ஆனால், அல்லாவிடம் நான் அடைந்த அடைக்கலம் அது என்னை என்றும் காக்கும்.

நூரெதீன்:

இத்தனை திரண்ட சொத்துக்களின் இடையே உங்களிடம் ஒரு கிழட்டுக் கழுதை கூடவா இல்லை ? ஒரு கிழட்டுக் கழுதை சபிக்கப் பட்டால், அது நீங்கள் சபிக்கப் பட்டதாய் ஆகுமோ ?

இப்ராஹிம் :

அது என்ன மகனே, அது என்ன கதை சொல்கிறாய் ?

நூரெதீன் :

அந்தப் பேயை  ஏமாற்ற உங்களுக்கு ஒரு தந்திரம் நான் சொல்லித் தருகிறேன். என்னிடம் இருந்து ஒரு மூன்று தினார்களை உங்களுடைய பக்கத்து வீட்டுக் காரருடைய வேலைக் காரனுக்குக் கொடுங்கள்; அவன் தனக்குக் கூலியாக ஒன்றோ, இரண்டோ எடுத்துக்கொண்டு, மீதியில் மதுவை வாங்கி அதை ஒரு கிழட்டுக் கழுதையின் முதுகில் ஏற்றி வைக்கட்டும்; அந்தக் கழுதை அதை இங்குக் கொணரட்டும். எனவே, நீங்கள் பயிரிடுபவரும் இல்லை, சாறு பிழிபவரும் இல்லை, விற்பவரும் இல்லை, வாங்குபவரும் இல்லை, தூக்கிச் சுமப்பவரும் இல்லை, இல்லை குடிப்பவரும் இல்லை. எனவே, யாராவது சபிக்கப் படவேண்டும் என்றால், அந்த கிழட்டுக் கழுதையைத்தான் சபிக்க வேண்டும். பெரியவரே, அல்லாஷா என்ன சொல்கின்றார் ?


இப்ராஹிம் :

ம்ம்ம். நன்று நான் அப்படியே செய்கின்றேன். (தனக்குள் ) என்னுடைய அலமாரிகளில் ஏகப்பட்ட மதுவகைகள் இருக்கின்றன
இவர்களுக்குத் தெரிவிக்க வேண்டாம். அன்பார்ந்த அல்லா, என்னை மன்னியுங்கள் !

வெளியேறுகிறான்.

சிவசூரி.

(அங்கம் 4, களம் 2 தொடரும்)

On Tue, Nov 2, 2021 at 6:49 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Lalitha & Suryanarayanan

unread,
Nov 2, 2021, 12:23:14 AM11/2/21
to santhav...@googlegroups.com
நாம் வேகமாகத் தாண்டிவந்த அங்கம் மூன்றில் ஒரு காட்சியில் தன் நாயகியிடம் நாயகன் நூரெதீன் சொல்லும் ஓர் உரையாடலிலும் பாக்தாத்தின் பெருமையை இவ்வாறு பேசுகிறான் :

NUREDDENE
Let me absolve these debts, 
Then straight with Anice to Bagdad the splendid. 
There is the home for hearts and brains and hands, 
Not in this petty centre. Core of Islam, 
Bagdad, the flood to which all brooks converge.

நூரெதீன்:

தூக்கும் கடன்சுமை போக்குவேன் முதலில்,
பின்னர் நேரே பெருநகர் பாக்தாத்
அன்புடை அனீஸி யுடன்நான் செல்வேன்.
அன்பது பூத்திடும் நன்னகர் அதுவே !
நேர்த்தியாய்ச் செய்த கீர்த்திமா நகரது!
மண்ணிதில் சான்றோர் மலிந்துள நகரது !
புண்ணியர் நிலைநகர்! கண்கவர் கலைநகர்!
பழிதரும் இந்த இழிநகர் வேண்டாம்.
வாக்கால் செயலால் நபிகள் வழிசெலும்
நோக்கால் நோன்புகள் நோற்றிடும் மக்கள்
ஆர்க்கும் ஓடையாய்ப் பார்த்திடப் பெருகி
ஒன்றாய்க் கூடுவர் நன்றே பாக்தாத்.

சிவசூரி.


On Tue, Nov 2, 2021 at 6:49 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Lalitha & Suryanarayanan

unread,
Nov 2, 2021, 8:17:53 PM11/2/21
to santhav...@googlegroups.com
பஸ்ஸோரா அமைச்சர்கள் 34

அங்கம் 4, களம் 2 தொடர்கிறது..

நூரெதீன்:

போலிகள் இடையொளிர் பொன்மணி என்கோ !

அனீஸி :

எள்ளி நகைத்திட ஏற்றவர் என்கோ !
அன்பு நாயக, ஆருயிர் நாயக,
இன்புடன் இருங்கள் இன்றைய இரவெலாம்.
ஒற்றை நாளே மற்றது வாயினும்.
வருநாள் கவனமாய் இருந்திடல் வேண்டும்.

நூரெதீன் :

அனீஸி,
மகிழ்ச்சியாய்த் தானே மங்கைநீ உள்ளாய் ?

அனீஸி :

இலைவழி வேறெதும் என்றன் முன்னே.
மீதம் இருக்கும் போதெலாம் சிரிப்போம்.
நலமாய் உள்ளாய், நலமே, அந்தப் 
பொல்லான் ஒன்றும் புரியா திருப்பான்.
நலமாய் உள்ளனை, நலமாய் உள்ளனையே !

நூரெதீன்:

உயிரைப் பிடித்தே ஓடும் நதிமேல்
பயணம் செய்தோம் வழியெலாம் பயந்தே.
என்றன் தலைமேல் இருக்குமோர் விலையே.
ஒருகால் நமக்கே உதவிசெய் தார்க்குத்
தொல்லை மேலவர் தொல்லைகள் தருவர்.

அனீஸி :

இங்கிது போதும் அன்பே, நலம்நீ
இதுவே இதுவே இதுவே இன்பம்.

(அவள் அவனருகில் செல்கிறாள், முத்தங்கள் கொடுத்துக் கட்டித் தழுவுகிறாள்)

நூரெதீன் :

கண்ணே அனீஸியுன் 
கண்கள் இரண்டிலும் கண்ணீர்க் கடல்கள்!
பற்றிய பீதியால் முற்றும் களைத்தாய்.

அனீஸி :

உன்றன் நலமே போதும் - இந்த
உலகே அழியினும் என்ன - என்
அன்பே என்றன் தலைவா !

அவள் அவனை மறுபடியும் கட்டி அணைக்கின்றாள், மீண்டும் மீண்டும் முத்தம் இடுகின்றாள். ஷேக் இப்ராஹிம் மதுவும் மதுக் கிண்ணங்களும் ஏந்திய தட்டுடன் திரும்புகிறான்.

இப்ராஹிம் :

அல்லா ! அல்லா ! அல்லா !

அனீஸி :

ஆர வாரமாய் வெற்று வார்த்தைகள் 
தொடுக்கும் கிழவன் தொலைந்தனன் எங்கு ?
ஆட வேண்டும்நான், பாட வேண்டும்நான்
சிரிக்க வேண்டும்நான், களிக்க வேண்டும்நான்,
அணையிடல் இன்றி ஆட்டம் போடுவேன்,
ஓஅவன் வந்துவிட் டானே.

நூரெதீன்:

வேகம் போகும் விந்தைக் கழுதை,
ஷேக் இப்ராஹிம் சொந்தக் கழுதை !

இப்ராஹிம் :

இல்லை, இல்லை, அந்த மதுக்கடை அருகில் உள்ளது, மிக அருகில் உள்ளது. அல்லா, எங்களை மன்னித்து விடுங்கள். நமது பாக்தாத் ஒரு தீய நகரம்; குடிகாரர் நிறைந்த கடிநகரம். உண்டுண்டுறங்கும் குண்டரின் நகரம்; பொய்யர்கள் பூமி.

நூரெதீன்:

நீங்கள் எப்பொழுதாவது பொய் சொல்லி இருக்கிறீர்களா, ஷேக் இப்ராஹிம் ?

இப்ராஹிம் :

அல்லாவின் அருளால் அது நடவாதிருக்க ! பொய்ம்மை நான் பேசாதிருக்க ! அந்தப் பாவம் நான் செய்யாதிருக்க ! பற்பலவாம் பாவங்களிலே நான் பொய்யையும் பொய்யரையும் மிக வெறுக்கின்றேன். மகனே, உன் இளம் உதடுகள் வீண் பேச்சில் நேரம் கழிக்காதிருக்க ! தேவையற்ற பொய்களைச் சுமக்காதிருக்க ! மன்னிக்க முடியாத பாவம் அது ! " ஜஹன்னம் " என்னும் எரி நரகில் கொண்டு சேர்த்துவிடும் அது !  மகனே, நின்னுடன் வந்திருக்கும் இந்த இளம்பெண் யார் என்பதைச் சொல்வாயா ?

நூரெதீன்:

அவன் என்றன் அடிமைப் பெண்.

இப்ராஹிம் :

ஆ, ஆ, அவளோர் அடிமைப் பெண்ணா ? ஆஹா, ஆஹா, அவளோர் அடிமைப் பெண்ணா !

அனீஸி :

சற்று குடியுங்கள் என்றன் தலைவரே.

நூரெதீன்: ( குடித்துக்கொண்டே)

ஆண்டவன் பேரில் ஆணையாய்ச் சொல்கிறேன், தூக்கம் என் கண்ணைத் தழுவிடுதே. இன்பம் பொங்கிடும் உன்றன் மடியில் எனக்கோர் இடமும் கொடுப்பாயா, தலையை வைத்துச் சற்றே உறங்கிட விடுவாயா ?

(படுத்துக் கொள்கிறான்.)

இப்ராஹிம் :

அல்லா ! அல்லா ! அட அவன் தூங்கி விட்டானா ?

அனீஸி :

வெகு சீக்கிரம். இப்படித்தான் அவன் எப்பொழுதும் நடந்து கொள்கிறான். ஒரு கிண்ணம் உள்ளே சென்றவுடன் தூங்கிவிடுகிறான், என்னைத் தன்னந்தனியாய் சோகத்தில் தள்ளிவிடுகிறான்.

இப்ராஹிம்:

சின்னஞ் சிறிய பெண்ணே, நீ யேன் விசனப் படுகின்றாய் ! இன்று நீயோ தனிமையில் இல்லை, இனியேன் வருத்தப் படுகின்றாய் ?
ஷேக் இப்ராஹிம் என்னும் கிழவன் பக்கத்தில் இருக்கின்றேன்;ஆம் உன் பக்கம் இருக்கின்றேன்.

அனீஸி :

என்னுடன் நீரும் குடித்தீர் என்றால், எனக்கொரு துக்கம் இல்லை.

இப்ராஹிம்:

சீ, சீ, சீ !

அனீஸி :

என்றன் தலைமேல் ஆணை, விழிமேல் ஆணை !

இப்ராஹிம் :

நன்று, நன்று, நன்று ! அந்தோ, மது வென்பதோர் பாவம்,  மது வென்பதோர் பாவம்,  மது வென்பதோர் பாவம், ( குடிக்கிறான்)
மெய்யாய், மெய்யாய் பாவம் !

அனீஸி :

இன்னும் ஒன்று.

இப்ராஹிம் :

வேண்டாம், வேண்டாம், வேண்டாம்.

அனீஸி :

என்றன் தலைமேல் விழிமேல் ஆணையாய்ச் சொன்னேன்.

இப்ராஹிம் :

நன்று, நன்று, நன்று மிக நன்று ! பாவத்தில் மிக பயங்கரப் பாவம், என்னை அல்லா மன்னிக்க வேண்டும் ! ( குடிக்கிறான்)

அனீஸி :

இன்னும் ஒன்றே ஒன்று.


இப்ராஹிம் :

அவன் தூக்கத்தில் தானே இருக்கிறான் ?  தருவது நின்றன் செவ்விதழின் தேனென்றால் சரி, சின்னஞ்சிறு மகளே !

அனீஸி :

வயாதிகத் தந்தையே, வயாதிகத் தந்தையே ! நீர் போர்த்திய புனிதம் இது தானா ? நீர் ஆர்த்திடும் தூய்மையும் இது தானா ? கொண்ட கொள்கை என்பது இது தானா ? அற்ப புத்தியா, கற்ற வித்தையா ? 
சின்னப் பெண்ணிவள் பேச்சைக் கேட்டதும் பித்தம் வந்ததா ? பித்தம் வந்ததால் பிதற்றல் ஆனதா ? புண்ணியச் செயலும் இதுதானா ? கண்ணியம் என்பதும் இதுதானா ? நீதி சொன்னது இதுதானா ? நியாயம் என்பதும் இதுதானா? நில்லும் நெறியும் இதுதானா  ? செல்லும் முறையும் சரிதானா ?  துறவியின் உறவும் இதுதானா ? சொல்லும் செயலும் இரண்டாமோ ? உள்ளும் புறமும் வேறாமோ ? வேதனை எனக்குத் தருவதுமேன் ? இதுதான் பெரியவர் அல்லாஷாவின் சாதனையோ !

இப்ராஹிம் :

இல்லை, இல்லை, இல்லை.

அனீஸி :

போடும் வேடமே அது வெறும் பொய்ம்மை ஆனதா ? ஷேக் இப்ராஹிம் ! ஷேக் இப்ராஹிம் !


இப்ராஹிம் :

இல்லை, இல்லை , இல்லை !  ஒரு தந்தையார் பேசும் குட்டிக் குறும்பைப் போன்றாகும் !  சின்னச் சின்ன குறும்பாகும் ! (குடிக்கிறான் )

நூரெதீன்: ( விழித்துக் கொண்டவனாய்)

ஷேக் இப்ராஹிம், நீங்கள் குடிக்கின்றீரா ?

இப்ராஹிம் :

ஓ ! ஆ! என்னை வற்புறுத்தியது நின்றன் அடிமை அல்லவா ?
மெய்யாய், மெய்யாய் அவளே தான் !

நூரெதீன்:

அனிஸி ! அனீஸி ! குடிக்க வைத்ததும் நீ தானா ? சொர்க்கத்தில் சுகமாய் இருந்த அவரின் வயதான ஆன்மாவைப் பற்றிப் பிடித்திழுத்து இந்தப் பாழும் உலகில் கொண்டுவந்தாயா ? சீச்சீ! அந்த மது ஜாடியை மேசையில் என் பக்கமாக நகர்த்து, உன்னுடன் நான் குடிக்கின்றேன், இது என் உறுதி மொழி உனக்கு, என் அன்பே.

அனீஸி :

இதோ, எடுத்துக் கொள் என் அன்பே.

நூரெதீன் :

அரைக்கோப்பை தான் நீ குடித்திருக்கிறாய்; இப்பொழுது மறுபடியும்  ஷேக் இப்ராஹிம் என்னும் கற்றுப் படித்த நல் அறிஞரின் முறை.

அனீஸி :

சிறப்பு மிகுந்த அல்லாஷா வின் நிழல் போன்றவர்க்கு !

இப்ராஹிம் :

சீ என்ன நீங்கள் இருவரும் ! சக குடியர்களுடன் நடந்துகொள்ளும் முறை இவ்வளவு மோசமாக இருக்கிறதே, மாறி மாறி நீங்கள் இருவருமே குடித்துக் கொண்டே இருக்கிறீர்கள், கோப்பையை என் பக்கம் ஒருபோதும் நகர்த்தாமலேயே.

அனீஸியும் நூரெதீனும் (சேர்ந்து)

ஷேக் இப்ராஹிம் !  ஷேக் இப்ராஹிம் !  ஷேக் இப்ராஹிம் !

இப்ராஹிம் :

ஒருபோதும் ஓங்கிய குரலில் என்னை அழைக்காதீர்கள் - ஈங்கெனை இப்படி அழைக்காதீர்.  விண்ணிருந்து மண்ணிறங்கிய  மன மோகன வடிவம் நீ !  அவளோ மன  மோகினி வடிவம்  !  உலகத்தில் வந்தீர் நீங்கள் ! என்றன் உயிரைப் பிடித்திட வந்தீர்  !
வீசிடும் வலையில் மாசில் உயிரும் வீழ்ந்திடும் என்றேதான் !
சிக்கென வேகம் சிறை செய்வீரே -  நான்  சிறையில் வீழ்வேனே ! உங்கள் இமையடி ஒளிரும் கதிரின் கிரணம் ஒன்றே ஒன்றிற்கு ஈடாமோ அது - ஒன்றிற்கு ஈடாமோ ! கட்டி அணைப்பேன் மோகனனே உன்னை நான் - கைகளுக்கு அருகில் வா ! மோகினி என்றன் அருகினில் வா, முத்தம் கொடுப்பேனே - ஒரு முத்தம் கொடுப்பேனே !

நூரெதீன்:

கட்டி அணைக்காதீர், ஷேக் இப்ராஹிம்,ஒருபோதும்  முத்தம் கொடுக்காதீர் ! சபிக்கப்பட்ட மதுவின் நெடி உம் வாயில் இருந்து முடையெடுத்த நாற்றம் போல் படையெடுத்து வருகிறது.. உம்மைப் பார்த்தால் பாவம் பரிதாபமாய் இருக்கிறது - ஞானி அல்லாஷா !

அனீஸி :

உருமாற்றமா அல்லது தடுமாற்றமா இது ?  சூஃபி ஞானியே, மெய்ஞ்ஞான வித்தகரே, இபின் படாடா வின் இன்னரும் சீடரே ?

இப்ராஹிம் :

சிரி மகளே சிரி !  எங்கும் ஒளித்திரள் ! வன்னக் கதிரொளி பட்டுப் பொன்னென மின்னும்
மஜீந்திரன் நகரத்து மசூதிகளில் ஓங்கி நிற்கும் எழில் மினார்கள் போலும் உன்றன் சிரிப்பின் ஒளியில் தங்கமென உன் எழில் அங்கம் இன்னும் தகதகக்கிறது. எனக்கொரு கோப்பை கொடு. ( குடிக்கிறான்) நீங்கள் பாவிகள். நானும் உங்களுடன் பாவம் செய்கிறேன்.  நான் மேலும் பாவம் செய்வேன், என்றன் சுந்தர வடிவங்களே. ( குடிக்கிறான்)

அனீஸி :

அது போகட்டும், நீங்கள் எனக்கொரு யாழினைக் கொடுத்தால் அதை மீட்டி உங்களுக்கு இன்பம் சேர்ப்பேன் நான். நானோர் அபூர்வமான பாடகி, ஷேக் இப்ராஹிம்.

இப்ராஹிம்  ( குடித்துக் கொண்டே)

அதோ அந்த முலையில் ஒரு யாழ் இருக்கிறது. பாடு, பாடு,
 பதிலுக்கு நானும் பாடுவேனே/ ( குடிக்கிறான்)

அனீஸி :

ஆனால் கொஞ்சம் பொறுப்பீர். இவ்வளவு மங்கலான ஒளியில் யாரேனும் பாடுவார்களா ! மெழுகுவர்த்திகள், மெழுகுவர்த்திகள் !

அங்கிருக்கும் கொத்து விளக்குத் தூணொன்றில் எண்பது வத்திகளை ஏத்துகிறாள் அவள்.

இப்ராஹிம் :

அல்லா ! அந்த வெளிச்சம் நின்னைக் கனகத் திரளாகக் காட்டுகிறது., என்றன் அடிமைப் பெண்ணே, அணியே, என்றன் அழகு மணியே. (குடிக்கிறான்)

நூரெதீன்:

இத்தனை வேகம் குடிக்காதீர், ஷேக் இப்ராஹிம். சற்று எழுந்திருங்கள், அந்தச் சாளரங்களில் எல்லாம் தீபம் ஏற்றுங்கள்.

இப்ராஹிம்: (குடிக்கிறான்)

சில்லென்று மது என் தொண்டையை நனைத்திருக்கிறது. அந்தச் சுகத்தில் நான் ஆழ்ந்திருக்கிறேன். அதைக் கெடுத்துவிடும் பாவம் செய்துவிடாதே. தீபம் ஏற்றவேண்டும் என்றால், நீ தீபம் ஏற்று, ஆனால் ஒன்றிரண்டுக்கு மேல் அல்ல.

நூரெதீன் ஒவ்வொன்றாக வரிசையாக எல்லா விளக்குகளையும்
ஏற்றிவிட்டுச் சென்ற வழியிலேயே திரும்புகிறான். இதற்குள் ஷேக் இப்ராஹிம் குடித்துக் கொண்டிருக்கிறான்.

இப்ராஹிம் :

அல்லா ! அடடா, எல்லாவற்றையும் ஏற்றி விட்டாயா நீ ?

அனீஸி :

ஷேக் இப்ராஹிம், உங்கள் குடிபோதை எல்லாவற்றையும் இரண்டிரண்டாய் காட்டுகிறது. உங்கள் கண்களுக்கு 84 விளக்குகளாகத்  தெரிகின்றனவா ?
எவ்வளவோ கோப்பைகள் உள்ளே போய்விட்டன, ஓ சாத்திர வித்தகரே, ஓ இபின் படாடா இட்டுள்ள வழியில் செல்பவரே.

இப்ராஹிம் :

நான் இன்னும் அவ்வளவு குடியில் ஆழ்ந்துவிட வில்லை. நீங்கள் தாம் இளமையின் வேகத்தில் உங்கள் விருப்பம்போல் எல்லாவற்றையும் ஏற்றி விட்டீர்கள்.

நூரெதீன்:

யாரை எண்ணி பயப்படுகின்றீர்கள் நீங்கள் ? இந்த அழகு மண்டபம் உங்களுடையது தானே ?

இப்ராஹிம்:

நிச்சயம் எனதே தான்; ஆனால் அந்த கலீஃபா வெகு அருகில்தான் வசிக்கிறான். கண்ணைக் கூசும் இந்த வெளிச்சம் அவனுக்கு எரிச்சலூட்டும்.

நூரெதீன்:

உண்மையிலே, அவன் மாண்புமிகு கலீஃபா தான்.

இப்ராஹிம்:

சிறந்தவன் தான்,  சிறந்தவன் தான். இன்னும் சிறந்தவனாகக் கூட அமைந்திருக்கக் கூடும் - விதி மட்டும் அதை விரும்பி யிருந்தால்.  ஆனால் அது அல்லாவின் ஆணை. அவர் சிலரை கலீஃபா வாக ஆக்கிவிடுகிறார், மற்றும் சிலரை வெறும் தோட்டக்காரர்களாக. (குடிக்கிறான்)

அனீஸி :

ஓ, அங்கே ஒரு யாழ் இருக்கிறது.

நூரெதீன்:

கொடு அதை என்னிடம். கேளிதைத் தெளிந்த கிழவா, நான் இட்டுக் கட்டிப் பாடுகிறேன். (பாடுகிறான்)

யாரேனும் பார்த்ததுண்டா அந்த ஷேக் இப்ராஹிம்?  - இந்த
ஊரினிலே அவனேதான் தொண்டு கிழவன் ! - அவன்  
மொண்டுகள்ளைக் குடிக்கின்ற தொண்டு கிழவன் !  - அல்லா அல்லா!

தள்ளாடும் போதையிலும் தடுமாறும் பாதையிலும் - அவன்
கள்ளாடும் கோப்பையுடன் காணும் கிழவன்! - அல்லா அல்லா!

ஆட்டமன்று தொடங்கும்போதில் என்ன செய்தான்?
நோட்டமிடும் கண்களாலே என்ன செய்தான் ? - அல்லா அல்லா!

கண்ணடித்தான், கண்ணடித்தான் - அல்லா அல்லா!
உண்மையிலே கண்ணடித்தான் - அல்லா அல்லா!

இப்ராஹிம் :

சீச்சீ ! இதுவென்ன கவிதை ? வெறும் அபத்தம் ! ஆனால் கவிதையின் சாயல் ஏதோ கொஞ்சம் இருக்கிறது. நீ பாட வேண்டாம். இப்பொழுது நான் அனீஸியைக் கேட்க விரும்புகிறேன்.

அனீஸி:

உனக்காகவே என்னிடம் ஒரு பாடல் இருக்கிறது. ( பாடுகிறாள் )

வெள்ளையான பனியையொத்து விளங்கு நீள தாடியும்
கொள்ளையாக நரைகளோடு திரைக ளோடி மூடவும்
பள்ளமான முகத்தின்மீது பாழ டித்துத் தோன்றினும்
வெள்ளமாகக் கள்ளையள்ளி வேக வேகம் குடிப்பவன்.

வினைப்பயனைப் பற்றியிங்கு விளையுங் கவலை இல்லையே
கனைக்கடலை ஒத்ததாகக் கனலில் தள்ளும் நரகமும்
பனைத்துணையாய் என்னைவந்து பார்க்கப் போகும் தீர்ப்பையும்
மனத்திலெண்ணி இப்ராஹிம்நான் அச்சம் கொள்வ தில்லையே.

நெஞ்சிலெண்ணம் தோன்றும் போது நேரில் நிற்கும் மங்கையை
கொஞ்சிகொஞ்சி கோடி முத்தம் கொடுக்க மறந்த தில்லையே.

இப்ராஹிம் :

அல்லா ! அல்லா ! கானம் பாடும் வானம் பாடி, வானம் பாடி !

திரை

(அங்கம்4, களம் 2 நிறைகிறது.
களம் 3 தொடரும் )

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 2, 2021, 9:19:56 PM11/2/21
to santhav...@googlegroups.com
இப்போதுதான் படித்தேன் . பாக்தாத் வருணனையில் தமிழ் விளையாடுகிறது
மிகச் சிறப்பு

        — தில்லைவேந்தன்



Lalitha & Suryanarayanan

unread,
Nov 2, 2021, 9:51:59 PM11/2/21
to santhav...@googlegroups.com
தில்லை வேந்தரின் பாராட்டு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி.

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
Nov 3, 2021, 8:49:34 PM11/3/21
to santhav...@googlegroups.com
பஸ்ஸோரா அமைச்சர்கள் 35

அங்கம் 4, களம் 3


உல்லாச மாளிகையின் வெளியில் இருக்கும் பூங்காக்கள்
ஹரெளன், மெஸ்ரூர்.

ஹரெளன் :

பாரிதை, மெஸ்ரூர், பாரிம் மாளிகை,
மாளிகை எங்கும் ஒளியின் வெள்ளம்,
முன்னம் நானே சொன்னது போலே.
மந்திரி தந்திரி எங்கே போனார் ?

மெஸ்ரூர் :

மந்திரி வருகிறார், மன்னாதி மன்னரே.

(ஜாஃபர் நுழைகிறான்.)

ஜாஃபர் :

அமைதி தங்குக, அல்லாவின் அருளால் ,
நம்புவோர்க் கெல்லாம் நாயக நின் நாட்டில்.

ஹரெளன் :

அமைதி யென்பதா, அதுவெங் குளதோ,
உண்மையே இல்லா ஊழிய, மந்திரி,
நினதாய் ஆனதோ எனததி காரம் ?
பாக்தாத் நகரம் பறிபோ னதுவோ,
யார்க்களித் தாயோ யானறி யாமல்,
புரட்சிக் காரா, புகன்றிலை யேதும் ?

ஜாஃபர் :

ஈதென் சொன்னீர், ஓவெம் கலீஃபா ?

ஹரெளன்:

ஒளிவிளக் கெல்லாம் உணர்த்துவ தென்பின் ?
களிப்பவர் யாரிக் காவலன் கூடம் ?
இன்னுமோர் கலீஃபா இங்குற் றாரோ,
உயிருடன் ஹரெளனே இங்குள போதவன்
தோளினில் வாளும் தூங்கிடும் போது ?

ஜாஃபர் ( தனக்குள்)

பூதக் கூத்தோ ? ஈதென் சேட்டையோ ?

ஹரெளன்:

இதற்குநின் பதிலென், இயம்புக மந்திரி.

ஜாஃபர் :

என்றன் தலைவா, யானிதை மறந்தேன்.
யார்க்கும் எளியராம் ஆண்டவன் அருளால்
ஷேக் இப் ராஹிம்  சிறுமகன் தனக்குச்
சுன்னத் துச்செய்திட எண்ணி யுள்ளதால்
வேந்தனின் அரங்கம் வேண்டும் எனவே
வேட்டனன் நம்மை வேண்டிக் கேட்டனன்.
இன்றே நினைவு வந்தது நன்றே.

ஹரெளன்:

பிழைகள் இரண்டுநீ இழைத்தனை, ஜாஃபர்;
கேட்டதன் பொருள்பணம் வேட்டலே ஆகும்.
கொடுத்திலை நீயும் கொடுத்திட வாய்ப்பு
விடுத்திலை எனக்கும் எடுத்துடன் உதவ
வேண்டிய பணியாள் வேண்டிய(து) ஈய.

சென்றுநாம் உள்ளே செவிமடுப் போமே.
ஆசையாய் அமர்ந்தே அமைச்சன் நீயும்
பற்றற நிற்கும் ஃபக்கீர்கள் ஆற்றும்
சமயப் பேருரை அமைதியாய்க் கேட்பாய்.
வணங்கற் குரியன விளங்கும் ஆங்கே.
ஷேக்கின் பக்தியும் பணிவும் காண்போம்
யார்க்கும் எளியவன் பேர்புகழ் கேட்போம்
நற்பலன் அடைவோம் கற்பவை யாலே
தூயவர் உரையால் போய பிழைபோம்
விண்ணகக் கதவம் மண்மிசை திறக்கும்.

ஜாஃபர் : (தனக்குள்)

கொள்ளை நோயில் கொண்டுபோய் விடுமோ ! (இரைந்து)
நம்பினோர்க் கெல்லாம் நாயகம் ஆனவ !
மாவலி படைத்த மன்னவன் திருமுன்
வானவன் புகழில் தாமெதும் மறந்த
ஆன்மாக்கள் யாவும் அச்சமும் பக்தியும்
அடைவது அவற்றை அடக்கி யொடுக்கும்.
யாவரின் அமைதிக்(கு) இடையூ றாகும்.  

ஹரெளன்:

குறைந்தது கண்டுளம் நிறைந்திட வேண்டும்.

மெஸ்ரூர்:

இந்தக் கோபுரம் இருந்தென் தலைவா
அந்த நிகழ்ச்சி அருமையாய்க் காணலாம்.
அரங்கில் நடப்பது அனைத்தும் தெரியும்.

ஹரெளன் :

மெஸ்ரூர், நன்று புகன்றனை !

ஜாஃபர் ( மெஸ்ரூரிடம் தனியாய்)

புண்பட்டுப் போகட்டும் நின்றன்நா.

மெஸ்ரூர்:

மண்பட்டுப் போம்ஜாஃபர் நின்றன்தலை.

ஹரெளன் : ( கேட்டுக்கொண்டே)

காதில் விழுவது யாழிசை இல்லை ?
பூசை செய்து போற்றி வணங்கிடும்
புண்ணிய நேரம் பண்ணொடு யாழொலி !

(ஷேக் இப்ராஹிம் பாடுவது கேட்கிறது.)

ஜிங்கு - ஜங்கு - ஜிங்கு!
சிந்து  முத்தம் சிந்து - நீ
மொண்டு மொண்டு முங்கு,

சொகம் சொகம் சொகம் - இந்தச்
சொகத்தில் மூழ்கச் சொகம்.

மின்னும் வத்தி புதிரோ! - உன்
கண்கள் என்ன கதிரோ.

கொவ்வைக் கனியின் செவப்போ - அது
கொஞ்சும் இதழின் இனிப்போ!

ஹரெளன்:

சீரார் தீர்க்க தரிசியின் முன்னே !
சிந்தையில் வாழும் முந்தையர் முன்னே !

(மெஸ்ரூர் பின் தொடர அவன் கோபுரம் நோக்கிச் செல்கின்றான்.)

ஜாஃபர் :

தூக்கியே ஷேக்இப்ராஹிம் தன்னையோர் பூதமொன்று
நோக்குவார் நோக்காமை போக்குக எரிகுன்றின்மேல் !

( மாடத்தின்  உச்சியில் மெஸ்ரூருடன் கலீஃபா நின்று பார்க்கிறான்..ஜாஃபர் அவ்விடம் போகின்றான்.)

ஹரெளன்:

கடவுளை வேண்டும் சடங்கிதைப் பார்ஜாஃபர் !
நடத்திட அனுமதி நல்கினை நன்கு !
எழிலார் ஃபக்கீர்கள் இருப்பதைப் பார்நீ !

ஜாஃபர் :

ஏய்த்தான் எனைஷேக் முற்றிலு மாக.

ஹரெளன்:
 
வேடம் போடும் தாடிக் கிழவன் !
தேவதை போலும் திருமுகம் உடையார்
யாவரோ இந்த எழிலார் இணையர் ?
இப்படி எழிலென் பாக்தாத் இருந்தும்
எப்படி ஹரெளன்விழி ஏய்க்கப் பட்டது !

ஜாஃபர் :

யாழை ஏந்தினள் அவ்வெழில் மங்கை.

ஹரெளன் :

மேவும் விரலும் கூவும் குரலும்
தேவ கானமாய்ப் பாவை பொழிந்தால்,
இழைத்த பிழைக்குத் தண்டனை ஜாஃபர் நீ
தன்னந் தனியே தொங்குவை  தூக்கில் .
நன்றாய் இலையது எனில்நீர் நால்வரும்
ஒன்றாய் ஊசலில் தொங்கிடு வீரே.

ஜாஃபர்:

மோசமாய் அமையநான் ஆசைப் பட்டேன்.

ஹரெளன்:

எதற்காய், ஜாஃபர் ?

ஜாஃபர்:

நல்லோர் சங்கமே என்னுளம் விழையும்,
என்றன் தலைவரே, நன்றுநீர் வாழ்வீர் !
என்றன் இறுதி யாத்திரை தன்னில்
தன்னந் தனிநான் கடந்திட மாட்டேன்.

ஹரெளன்:

எண்ணிப்  பணிசெய் உண்மை ஊழியா,
இல்லை, தனியதில் செல்லுவ தில்லை.
உடனாய், ஒன்றாய்க் கடப்போம் அதிலே.

அனீஸி : ( உள்ளே ) 

என்றன் இதய வானிலே உதய வேந்தனே

என்னைநீ நன்று போற்றி நிற்பையோ
என்னையுன் தேவி என்று  தொழுவையோ
உன்னவள் என்றும் நன்று சொல்வையோ

என்றன் தேவன்நீ என்று போற்றியே
உன்றன் சன்னிதி நானும் தொழுவனே.

புவிவெலும் புனித வேட்கை உடையராய்
ஒருவரை ஒருவர் போற்றி நிற்பம்நாம்
உண்மையாய் இறையாய் உயரும் நாள்வரை.


ஹரெளன்:

ஆய கலைகள் அனைத்தும் வல்லான்
காயம் இதைமிகக் கவனமாய்த் திறம்பட
நிறைவாய்ப் படைத்துளான் நிகரில் எழிலாய்.
அரிதாய்த் திகழுமிவ் விருவர் உடனே
பேசிட நெஞ்சம் ஆசை யுற்றதே.

ஜாஃபர்:

அரசராய் உம்மை அருகில் கண்டால்
தாமுடன் நடுங்கி ஊமையாய் ஆவரே
என்பதால் இப்படிச் சென்றிட வேண்டாம்.

ஹரெளன்:

மாறு வேடம் பூணுவேன், ஜாஃபர்,
கூறென் அரவம் ஆற்றில் இருந்தே ?
பந்தயம், வந்தது பரதரின் ஓசையே.
ஆர்க்குமென் ஆணைகள் பாக்தாத் நகரில்
பணிவர், தணிவர், பாரென் வாஜிர் !
பேரெழில் இப்படி நேரினில் கண்டேன்,
சினந்திட இனிநான் நினைந்திட இயலேன்.
வாவா, கீழே இறங்கலாம் வாநீ.

(அவர்கள் இறங்கி வருகையில் கரீம் நுழைகிறான்.)

சிவசூரி.

(தொடரும்)
On Wed, Nov 3, 2021 at 5:47 AM Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:
பஸ்ஸோரா அமைச்சர்கள் 34

அங்கம் 4, களம் 2 தொடர்கிறது..

நூரெதீன்:

போலிகள் இடையொளிர் பொன்மணி என்கோ !

அனீஸி :

எள்ளி நகைத்திட ஏற்றவர் என்கோ !
அன்பு நாயக, ஆருயிர் நாயக,
போதையிலும் தள்ளாடினாலும் 

Lalitha & Suryanarayanan

unread,
Nov 8, 2021, 9:46:34 PM11/8/21
to santhav...@googlegroups.com
பஸ்ஸோரா அமைச்சர்கள் 36

அங்கம் 4, களம் 3 தொடர்கிறது..

(அவர்கள் இறங்கி வருகையில் கரீம் நுழைகிறான்.)

கரீம்:

ஆகா, எத்தனை எத்தனை மீன்கள் வந்தென் வலையில் சிக்கின பார் இன்று ! துள்ளிக் குதிக்கும் கொள்ளை அழகுடன் என்றன் வாளை பார் ! மின்னும் என்றன் சின்னக் கயல்கள் பார் ! வெள்ளை வயிறுடன் மின்னும் என்றன் கெண்டை பார் ! கலீஃபாவின் நதியில் குதித்து விளையாடும் மீன்களைப் பிடித்து அவற்றை அவற்றின் மும்மடங்கு விலைக்கு கலீஃபாவுக்கே விற்பதை எண்ணிப் பார்த்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே !

ஹரெளன் :

யாரப்பா நீ ?

கரீம்:

ஓ வென் தலைவர், மன்னாதி மன்னர் கலீஃபா அவர்களே தாம் !
ஐயோ, செத்தேன் இந்தச் செம்படவன் நான் ! ( கீழே நெடுஞ்சாண் கிடையாய் விழுந்துவிடுகிறான் நம்பினோர்க் கெல்லாம் நாயகரே ! ஐயோ நானொரு நேர்மையான செம்படவன்.

ஹரெளன் :
உன்றன் புலம்பல் உன் நேர்மையை நினைத்தா ?
உன்னிடம் என்னென்ன மீன்கள் உள்ளன ?

கரீம் :

ஏதோ கொஞ்சம் நெத்திலி வைத்துள்ளேன்.  கொஞ்சம் சிறு கயல்களும் உண்டு. அவற்றில் ஓரிரு வகைகள் உண்டு. மெலிந்து கிடக்கும் போக்கிரிகள் இவை !
உண்டு கொழுத்த வகையல்ல இவை ! உயர்ந்த உணவு உண்டு பழகிய  மேன்மை தாங்கிய கலீஃபாவின் உத்தம வயிற்றுக்கு ஏர்றவை அல்ல இவை.

ஹரெளன்:

அப்பனே, காட்டுன் கூடையை அப்படியே.
வைத்துள நின்றன் நெத்திலி இவைதானா ?
மின்னும் இவைதான் மெலிந்த கயல்களா?

கரீம்:

ஐயய்யோ, ஐயா, அவையப் படித்தான்,
நேர்மை யாய்நான் நிற்பத னாலே.

ஹரெளன்:

கொடுத்திடு வாயுன் மீன்கள் எல்லாம்.

கரீம்:

கொள்ளுங்கள் தலைவரே, கொள்ளுங்கள் எல்லாம் அப்படியே!

ஹரெளன்:

கூடையோடு முழுவதுமே கொட்டிவிடு, அப்பனே.
வாடையோடு பச்சையாக வந்தவற்றை உண்ணவா,
ஓடுகின்ற மீனையின்றென் முன்னரின்று போட்டனை ?
ஆடையென்றன் கொண்டுவுன்றன் மேலாடை கொடுத்திடு.

கரீம்:

என்றன் உடையா ? அப்படியே ஆகட்டும் ஐயா, நீங்கள் அணிந்து கொள்ளலாம்; நான் நேர்மையானவன் மட்டுமல்ல, தாராள குணம் உடையவன் கூட. ஆனால், அது நல்ல தரம்வாய்ந்த வழவழ வென்றிருக்கும் துணி; பார்த்து நீங்கள் கவனமாக அணிந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஹரெளன்:

ஆடையென்று சொல்வதாவுன் வாடையென்று சொல்வதா ?
போடாநீ போட்டிருந்த ஆடைபுகழ் போதுமே !

கரீம்:

ஓ ஐயா, ஒரு பத்து நாள் இதைப் போட்டுக் கொண்டால் எல்லாம் பழகிப் போய்விடும், நாற்றம் கூட நறுமணமாய் நாசி பழகிடும்.
இது நல்ல நேர்மையின் வாசம் ஐயா; வாடையிலே உங்களுக்குக் கதகதப்பாய் இருக்கும். 

ஹரெளன்:

கோடைக்கும் வாடைக்கும் கூடவா அடயிதைப்
போட்டிடச் சொல்கின்றாய், போடா போடா.

கரீம் :

நம்பினோர்க் கெல்லாம் நாயகரே ! நீங்கள் அரசியலை விட்டுவிட்டு
உங்கள் ஆன்மாவுக்கு நல்லது செய்யும் நேர்மையான ஒரு தொழிலில் இறங்கப் போகிறீர்கள் என்பதால், ஒரு நாணயமான செம்படவனுடைய வழவழ ஆடையை விட்டுவிட்டு இதைவிட மோசமான ஆடையேதேனும் கிடைத்தால் அதைக் கூட அணிந்துகொள்ளலாம். இது ஒரு நல்லதும் மதிக்கத் தக்கதும் ஆன தொழில். 

ஹரெளன்:

அங்கம் தழுவிடும் ஆடையின் உள்ளே
தங்கக் காசுகள் அடைத்து வைத்துள
மணிப்பை காண்பாய் இனியது உனதாம்.

கரீம் :

எளியவர்க்கு அருள்கிற அல்லாவின் கீர்த்தி வாழ்க ! ஆகா, நேர்மைக்குக் கிடைத்த பரிசு இது.

(வெளியேறுகிறான்.)

ஜாஃபர் ( வந்துகொண்டே)

யாரிது ? ஓ, கரீம் ! இங்கேன் இரவில் ?
மன்னாதி மன்னர் வந்துளார் பூங்கா.
சிக்கினால், செம்படவா, விழுமுதை செம்மையாய்,

ஹரெளன்:

ஜாஃபர், இது நான்தான்!

ஜாஃபர்:

கலீஃபாவா !

ஹரெளன் :

மீன்களை வறுத்து மீண்டுநான் வருவேன்.

ஜாஃபர்:

என்னிடம் கொடுங்கள், நன்குநான் சமைப்பேன்.

ஹரெளன்:

வேண்டாம், மேதகு நாயகம் ஆணை !
கலீ ஃபா உடைய கைகளால் செய்த
பண்டத் தையன்றோ உண்டிட வேண்டும்
என்னிரு அருமை நண்பரும் இன்று.

(வெளியேறுகிறார்கள்.)


சிவசூரி

(தொடரும்)
Reply all
Reply to author
Forward
0 new messages