கவியரங்கம் - 62- வெண்பா வித்தகம்

22 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Jun 30, 2026, 12:12:22 AM (5 days ago) Jun 30
to santhavasantham

                                                                                                                                                    
.வெண்பாக் கவியரங்கம்

கண்ணெல்லாம் ஆகுமோ கண்?

கொட்டிக் கிடக்கின்ற கொள்ளை அழகையெலாம்
கிட்ட இருப்பினும் கிஞ்சித்தும் – ஒட்டிமனம்
கண்டு களிக்காமல் ண்திறந்தும் காணாத
கண்ணெல்லாம் ஆகுமோ கண்?                         1

பொந்துக்குள் இன்னொரு பொந்து

வித்தேந்தி அவ்வித்தை மின்னுகரு முட்டைக்குள்
பத்திரமாய் உள்வாங்கும் பாத்திரமே – உத்தமமாய்
வந்த உயிரை வளர்க்கின்ற கர்ப்பப்பை
பொந்துக்குள் இன்னொரு பொந்து                        2

வாயென்னும் பொந்தின் வழியே உணவுண்ணப்
போயதுவும் சேர ஒரு பொந்துண்டு – தீயெடுத்தே
வந்த உணவை வளம்செய் வயிறதுவே
பொந்துக்குள் இன்னொரு பொந்து                        2அ

நேசமாய் வந்த நெருப்பு

தீயிறங்கி வாவெண்றே சீதையினைச் சீராமன்
வாயுரைக்கச் சீதை வளர்தீயில் – போயிறங்கப்
பூசைக் குரியவளை பூப்போல் கொணர்ந்ததுவே
நேசமாய் வந்த நெருப்பு.                                3

காதுக்கு வேண்டாம் கதவு

காததனை ஈசன் கதவின்றி வைத்துள்ளான்
ஏதெதுவும் கேட்கவைக்கும் எண்ணத்தால் -  நீதமுடன்
கீதப் பறவையிசை கேட்கா திருப்பதுவோ
காதுக்கு வேண்டாம் கதவு                               4

போதிலே பூத்ததிப் போது
முல்லைச் செடியும் முதல் மொட்டுக் கட்டியது
சொல்ல முடியாத சோமழை – முல்லையைப்
பாதகம் செய்யுமோ? பாழாமோ என்றுகவல்
போதிலே பூத்ததிப் போது.                               5


பள்ளியாம் பாதையும் பார்
கற்றுக் கொடுக்கக் கணக்கில்லா மார்க்கமுண்டு
ஒற்றைப் பறவை உதவிடலாம்- சற்றேற்றுக்
கொள்ள மனமிருந்தால் கொஞ்சமா கற்றிடலாம்
பள்ளியாம் பாதையும் பார்.                              6

பார்ப்பாரே பார்ப்பாரே பார்

கண்திறந்து கொண்டு கடவுளைப் பார்ப்பதினும்
கண்மூடிப் பார்த்துக் கசிந்திடலாம் – எண்ணத்தில்
பார்ப்பதுவே என்றும் பரவசமாம் கண்மூடிப்
பார்ப்பாரே பார்ப்பாரே பார்.                                    7

குறுக்குத் தெருவில் குடி

மண்ணுக்கு வந்தபின்னே மாளிகையில் வாழ்ந்திடலாம்
மண்ணில் பிறந்து வருமுன்னே – விண்ணின்
சிறப்புமிகத் தருமேபார் செய்ய கருப்பைக்
குறுக்குத் தெருவில் குடி                                      8

வானம் இறங்கி வரும்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படுவரென- மெய்வகையாய்
ஞான முரை வள்ளுவரை நன்குபற்றி வாழ்பவர்க்கு
வானம் இறங்கி வரும்                                        9

கண்ணைமூ டிக்கொண்டு காண்

கண்திறந்து பார்த்தபின்னே கண்மூடிப் பார்த்தாலே
வண்ணம் சுழலும் வரிவரியாய் – கண்ணுக்குள்
எண்ணம் இனிக்க இழைந்துவரும் ஆகையினால்
கண்ணைமூ டிக்கொண்டு காண்.                               10

 

மறதியும் கூட வரம்

மற்றோர்செய் தீமை மறவா திருந்துவிடின்
எற்றைக்கும் தீமைசெய எண்ணிடலாம்- பற்றும்
உறவைக் கெடுக்கும் உறழ்நினைவு, தம்பி
மறதியும் கூட வரம்                                          11

நெருப்பை அணைக்காத நீர்

கையில் நெருப்பிருக்கும் கங்கை சிரசிருக்கும்
பையரவு மார்பில் படர்ந்திருக்கும்- ஐயன்
விருப்பத்திற் கேற்பவே மேற்கங்கை கையின்
நெருப்பை அணைக்காத நீர்                                   12

 

கொஞ்சமே னும்மிதைக் கொள்

அட்டூழி யம்செய் அரசியல் வாதிகளை
மட்டுப் படுத்த வகையென்ன?- விட்டுவிட்ட
வெஞ்சினத் திற்கும்நீ வேலைகொடு இற்றைநாள்
கொஞ்சமே னும்மதைக் கொள்                                13

நட்டத்தில் உச்ச நடம்

அன்னைமகா காளி அரனொடு காட்டிலே
என்னமாய் ஆட்டம் எடுத்தாலும் – தன் காலை
எட்டி உயர்த்தி எடுத்தான் சிவபெருமான்
அட்டத்தில் உச்ச நடம்                                        14

நீயென்றேன் நீயென்றாய் நீ

சொல்லத் துடித்தாலும் சொல்ல முயல்கையிலே

மெல்ல நழுவி விடுகிறதே!- நல்லாய், உன்

நேயத்தை வென்றவர்யார் நெஞ்சாரச் சொல்லுக

நீயென்றேன்,நீயென்றாய் நீ!                                                                 15

 

புன்னகை யார்க்கும் பொது

சொல்லாம லேயன்பைச் சொல்லும் மொழியுண்டோ
எல்லோருக் கும்பொதுவாய் ஏதுண்டு? – நல்லாயே
இன்ன மொழிதான் இங்கிதற் கில்லையடி

புன்னகை யார்க்கும் பொது.                                         16

 

இலந்தை

30-6-2026
00:09am

 

Govindaraju Arunachalam

unread,
Jun 30, 2026, 12:42:00 AM (5 days ago) Jun 30
to santhav...@googlegroups.com

இலந்தையார் இடுகைக்கு என் பின்னூட்டம்.

 

எண்ணிரண்டு வெண்பாக்கள் ஏற்றமுற

   எணுந்தோறும் சுவைநல்க இங்கிட்டார்

கண்ணிரண்டும் இல்லாமல் கடவுளைநாம்

   கண்டிடலாம் எனச்சொன்னார் கவினுறவே

மண்ணுக்கு வருமுன்னே மாதாவின்

   மகத்தான கருவறையில் வாழ்ந்ததனை

எண்ணத்தில் சிறப்பாகப் பதியவைத்த

   எழிலார்ந்த இலந்தையண்ணல் வாழியவே!

 

-கருவூர் இனியன்,

Arasi Palaniappan

unread,
Jun 30, 2026, 2:11:22 AM (5 days ago) Jun 30
to சந்தவசந்தம்
பத்தாறு வெண்பாக்கள் ; 
பார்போற்றும் சிந்தனைகள் 
வித்தையினக் கண்டு வியந்தேன்நான் - சொத்தாய் 
நமக்குக் கிடைத்திருக்கும் நல்இலந்தைப் பெம்மான் 
தமக்காரும் ஈடில்லை தான்!

வணங்கிப் போற்றும் 
அரசி. பழனியப்பன் 



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCu1%3DWAn8LKCWPxow4HwQM8VAV-t0BLtxW0dcv3FU39tA%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
Jun 30, 2026, 2:17:34 AM (5 days ago) Jun 30
to சந்தவசந்தம்
கட்டுக்குள் மாட்டாத கட்டு என்னும் 17 ஆம் ஈற்றடி விடுபட்டிருக்கிறது. 

On Tue, 30 Jun 2026, 9:42 am Subbaier Ramasami, <kavim...@gmail.com> wrote:
--

KKSR

unread,
Jun 30, 2026, 4:31:08 AM (5 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
கவியரங்கம் - 62- வெண்பா வித்தகம்

புன்னகை யார்க்கும் பொது!

புன்னகை ஒன்றே பொருள்தேடா வைப்பாகும்
மின்னலை வெட்டினாற் போலதாம் - இன்னலில்
தன்னை உயர்த்தும் தகையன்றோ! செய்திடுக
புன்னகை யார்க்கும் பொது! (1 )


நீயென்றேன் நீயென்றாய் நீ!


தாயன்ன வந்தாய்! தரணியில் நானுயர

சேயன்னக் காத்தெனைச் சீராக்கி - நேயமுடன்

வாயென்ற போது வரும்தமிழாய்த் தானணைப்பாய்

நீயென்றேன் நீயென்றாய் நீ !  (2)


நட்டத்தில் உச்ச நடம்!


அட்டமா சித்தியெலாம் அண்டத்தில் யாம்வேண்ட

இட்டமாய் தந்திடுவான் ஈசனவன் - நிட்டையுடன்

தொட்டவன் பாதம் தொழுதிடு! கண்டிடலாம்

நட்டத்தில் உச்ச நடம்!  (3)


கொஞ்சமே னும்மிதைக் கொள்!


சுயநலக் கேடில் சுகிப்பது நன்றோ?

கயமையும் காழ்ப்பும் இன்றி த்- தயையுடன்

எஞ்சியதை ஈந்துப் பிறர்வாழச் செய்!நெஞ்சே

கொஞ்சமே னும்மிதைக் கொள்! (4)


நெருப்பை அணைக்காத நீர்!


நேரெதிர்ப் பண்பானால் நேசக் கரம்போமோ?

வீறுகொண்டு மோதிட்டு விஞ்சிநிற்கும்! - சேரா

வெறுப்புமிழும்! பற்றியெரி யிப்பகைக்(கு) ஈடாம்

நெருப்பை அணைக்காத நீர்!  (5)


மறதியும் கூட வரம்!


உள்ளத்தின் ஓரத்தில் வெஞ்சினமாய் நில்லாது

கள்ளமிலா அன்பு கரைத்திடும் - எள்ள!

உறுதியாய் உன்வழியில் செல்!உன்னா(து) ஈங்கு

மறதியும் கூட வரம்!  (6)


கண்ணைமூ டிக்கொண்டு காண்!


காற்றதன் ஓசையை, கார்மழைச் சத்தத்தை,

ஈற்றடி வெண்பாவை, இன்னிசையை - ஆற்றோரம்

எண்ணித் தவங்கொண்டு ஏற்றார்ப்போல் உன்னெஞ்ச்சில்

கண்ணைமூ டிக்கொண்டு காண்! (7)


வானம் இறங்கி வரும்!


எண்ணங்கள் ஒங்கட்டும்! ஏற்றமதை நாடட்டும் 

திண்ணமுடன் திக்கெட்டும் தேசத்தில்! - வெண்ணிலவாய்!

தேனமுதச் சொல்பேசு! தீர்ந்திடும் தீவினைகள்!

வானம் இறங்கி வரும்! (8)


குறுக்குத் தெருவில் குடி


அன்றொருநாள் அக்கமும் பக்கமும் அன்றாடம்

ஒன்றாகச் சேர்ந்திருந்தோம் ஓருறவாய் - இன்று

மறுப்பேதும் இல்லாது வாட்டும் மனத்துள்

குறுக்குத் தெருவில் குடி!  (9)


பார்ப்பாரே பார்ப்பாரே பார்


பார்ப்பனன் என்றால் பரிகசிப்பார் நாட்டினிலே

தேரார், தெளிவிலார் செய்கையினால் - ஊராரில்

யார்மாட்டும் செந்தண்மை கொண்டொழுகும் யாவருமே

பார்ப்பாரே பார்ப்பாரே பார்! (10)


பள்ளியாம் பாதையும் பார்


எள்ளுதல் செய்வாரின் என்ன? அவரிடத்தும்

உள்ளுதற்(கு) உண்டாம்!  உவகைகொள்! - நள்ளிடேல்!

தள்ளிட்டுத் தக்கதை ஏற்று தகைகொளப்

பள்ளியாம் பாதையும் பார்!  (11)


போதிலே பூத்ததிப் போது


வாழ்வென்னும் கற்பனையில் வாழ்கின்ற வேளையில்
வாழ்வில் வரும்மேடு, பள்ளமெலாம்! - வாழ்வினிக்க
மேதினியில் வேண்டுங்கால் மேவுதல்தான் காலமெனும்

போதிலே பூத்ததிப் போது! (12)


காதுக்கு வேண்டாம் கதவு


நல்லதும் கெட்டதும் நானிலம் கண்டதும்

இல்லதும் உள்ளதும் எல்லையிற் - சொல்லதாய்ப் 

போதினில் வந்திடப் புன்மைகள் நீங்கிடக்

காதுக்கு வேண்டாம் கதவு! (13)


நேசமாய் வந்த நெருப்பு


தாயெதிர்ப் பிள்ளை, தகவிலாத் தாரமென

காயெதிர் நோயாய்க் கலங்குவதேன்? - ஓயாத

பாசத்தால் பற்றுவைக்கப் பந்தமெனும் சுற்றமிது

நேசத்தால் வந்த நெருப்பு! (14)


பொந்துக்குள் இன்னொரு பொந்து


எந்தைவர முந்தைவர எந்தைமுந்தை தந்தைவர

உந்துதலால் வந்ததுகாண் ஊனுயிரும் - விந்தையிலை

சந்ததமும் சிந்தித்தால் சக்கரம்போல் இப்புவிப்

பொந்துக்குள் இன்னொரு பொந்து! (15)


கண்ணெல்லாம் ஆகுமோ கண்?


எண்ணமெலாம் நீக்கமற ஏற்றமுடன் வீற்றிருக்கும்

பண்ணிலமர் சொற்போல பாரதமே! - விண்ணவரும்

எண்ணியெண்ணித் தானேங்கும் எந்தேசம் காணாத

கண்ணெல்லாம் ஆகுமோ கண்? (16)


~ சுரேஜமீ

30.06.2026 பிற்பகல் 12:30















---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.


On Tue, Jun 30, 2026 at 8:12 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

                                                                                                                                                    
.வெண்பாக் கவியரங்கம்

புன்னகை யார்க்கும் பொது

சொல்லாம லேயன்பைச் சொல்லும் மொழியுண்டோ
எல்லோருக் கும்பொதுவாய் ஏதுண்டு? – நல்லாயே
இன்ன மொழிதான் இங்கிதற் கில்லையடி

புன்னகை யார்க்கும் பொது.                                         16

 

இலந்தை

30-6-2026
00:09am

 

--

Govindaraju Arunachalam

unread,
Jun 30, 2026, 7:14:03 AM (4 days ago) Jun 30
to santhav...@googlegroups.com

தம்பி சுரேஜமி இடுகைக்கு என் பின்னூட்டம்.

கூடிக் குலவி மகிழ்ந்திருந்துபின்னர்

   குறுக்குத் தெருவில் குடியேறி

வாடி மனமும் உழன்றதனை – அடடா!

  வடித்தார் நல்வெண் பாவினிலே!

 

-கருவூர் இனியன்,

On Tue, Jun 30, 2026 at 2:01 PM KKSR <aur...@gmail.com> wrote:
கவியரங்கம் - 62- வெண்பா வித்தகம்

புன்னகை யார்க்கும் பொது!

புன்னகை ஒன்றே பொருள்தேடா வைப்பாகும்
மின்னலை வெட்டினாற் போலதாம் - இன்னலில்
தன்னை உயர்த்தும் தகையன்றோ! செய்திடுக
புன்னகை யார்க்கும் பொது! (1 )


~ சுரேஜமீ

30.06.2026 பிற்பகல் 12:30












---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.


On Tue, Jun 30, 2026 at 8:12 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

                                                                                                                                                    
.வெண்பாக் கவியரங்கம்

புன்னகை யார்க்கும் பொது

சொல்லாம லேயன்பைச் சொல்லும் மொழியுண்டோ
எல்லோருக் கும்பொதுவாய் ஏதுண்டு? – நல்லாயே
இன்ன மொழிதான் இங்கிதற் கில்லையடி

புன்னகை யார்க்கும் பொது.                                         16

 

இலந்தை

30-6-2026
00:09am

 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCu1%3DWAn8LKCWPxow4HwQM8VAV-t0BLtxW0dcv3FU39tA%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Arasi Palaniappan

unread,
Jun 30, 2026, 7:58:38 AM (4 days ago) Jun 30
to சந்தவசந்தம்
தடாலடியாய் முந்திநீ தந்தவெண் பாக்கள் 
அடடா அடடா அடா!

Siva Siva

unread,
Jun 30, 2026, 8:40:27 AM (4 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
இலந்தையார் பாடல்கள் பற்றிய பிற்கருத்து.

பாடல்களின் கீழ்க்காண்க.

வி. சுப்பிரமணியன்


On Tue, Jun 30, 2026 at 12:12 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

                                                                                                                                                    
.வெண்பாக் கவியரங்கம்

கண்ணெல்லாம் ஆகுமோ கண்?

கொட்டிக் கிடக்கின்ற கொள்ளை அழகையெலாம்
கிட்ட இருப்பினும் கிஞ்சித்தும் – ஒட்டிமனம்

கண்டு களிக்காமல் கண்திறந்தும் காணாத


கண்ணெல்லாம் ஆகுமோ கண்?                         1


==>  உலகில் பலர் நிலை இதுவே!
 

பொந்துக்குள் இன்னொரு பொந்து

வித்தேந்தி அவ்வித்தை மின்னுகரு முட்டைக்குள்
பத்திரமாய் உள்வாங்கும் பாத்திரமே – உத்தமமாய்
வந்த உயிரை வளர்க்கின்ற கர்ப்பப்பை
பொந்துக்குள் இன்னொரு பொந்து                        2

வாயென்னும் பொந்தின் வழியே உணவுண்ணப்
போயதுவும் சேர ஒரு பொந்துண்டு – தீயெடுத்தே
வந்த உணவை வளம்செய் வயிறதுவே
பொந்துக்குள் இன்னொரு பொந்து                        2அ


==>  இருபாடல்களும் நன்று.


நேசமாய் வந்த நெருப்பு

தீயிறங்கி வாவெண்றே சீதையினைச் சீராமன்
வாயுரைக்கச் சீதை வளர்தீயில் – போயிறங்கப்
பூசைக் குரியவளை பூப்போல் கொணர்ந்ததுவே
நேசமாய் வந்த நெருப்பு.                                3


==>  இராமாயணச் செய்தி அமைந்த பாடல் இனிமை.
 

காதுக்கு வேண்டாம் கதவு

காததனை ஈசன் கதவின்றி வைத்துள்ளான்
ஏதெதுவும் கேட்கவைக்கும் எண்ணத்தால் -  நீதமுடன்
கீதப் பறவையிசை கேட்கா திருப்பதுவோ
காதுக்கு வேண்டாம் கதவு                               4

போதிலே பூத்ததிப் போது
முல்லைச் செடியும் முதல் மொட்டுக் கட்டியது
சொல்ல முடியாத சோமழை – முல்லையைப்
பாதகம் செய்யுமோ? பாழாமோ என்றுகவல்
போதிலே பூத்ததிப் போது.                               5


==> / சொல்ல முடியாத சோமழை  / 
சோமழை என்றும் சொல்வது உண்டா?

சொல்ல முடியாத் தொடர்மழை ?


பள்ளியாம் பாதையும் பார்
கற்றுக் கொடுக்கக் கணக்கில்லா மார்க்கமுண்டு
ஒற்றைப் பறவை உதவிடலாம்- சற்றேற்றுக்
கொள்ள மனமிருந்தால் கொஞ்சமா கற்றிடலாம்
பள்ளியாம் பாதையும் பார்.                              6


==> ஓர் உபநிடதத்தில் வரும் நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியது.


பார்ப்பாரே பார்ப்பாரே பார்

கண்திறந்து கொண்டு கடவுளைப் பார்ப்பதினும்
கண்மூடிப் பார்த்துக் கசிந்திடலாம் – எண்ணத்தில்
பார்ப்பதுவே என்றும் பரவசமாம் கண்மூடிப்
பார்ப்பாரே பார்ப்பாரே பார்.                                    7

குறுக்குத் தெருவில் குடி

மண்ணுக்கு வந்தபின்னே மாளிகையில் வாழ்ந்திடலாம்
மண்ணில் பிறந்து வருமுன்னே – விண்ணின்
சிறப்புமிகத் தருமேபார் செய்ய கருப்பைக்
குறுக்குத் தெருவில் குடி                                      8


==> நல்ல கருத்து.

வானம் இறங்கி வரும்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படுவரென- மெய்வகையாய்
ஞான முரை வள்ளுவரை நன்குபற்றி வாழ்பவர்க்கு
வானம் இறங்கி வரும்                                        9

கண்ணைமூ டிக்கொண்டு காண்

கண்திறந்து பார்த்தபின்னே கண்மூடிப் பார்த்தாலே
வண்ணம் சுழலும் வரிவரியாய் – கண்ணுக்குள்
எண்ணம் இனிக்க இழைந்துவரும் ஆகையினால்
கண்ணைமூ டிக்கொண்டு காண்.                               10

 

மறதியும் கூட வரம்

மற்றோர்செய் தீமை மறவா திருந்துவிடின்
எற்றைக்கும் தீமைசெய எண்ணிடலாம்- பற்றும்
உறவைக் கெடுக்கும் உறழ்நினைவு, தம்பி
மறதியும் கூட வரம்                                          11

நெருப்பை அணைக்காத நீர்

கையில் நெருப்பிருக்கும் கங்கை சிரசிருக்கும்
பையரவு மார்பில் படர்ந்திருக்கும்- ஐயன்
விருப்பத்திற் கேற்பவே மேற்கங்கை கையின்
நெருப்பை அணைக்காத நீர்                                   12


==> நன்று.

Siva Siva

unread,
Jun 30, 2026, 8:48:00 AM (4 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
சுந்தரின் பாடல்களுக்கு என் பிற்கருத்து:

பல பாடல்களில் கருத்துச் சிறப்பு.
சில இடங்களில் புணர்ச்சியைக் கவனிக்க.

வி. சுப்பிரமணியன்

Subbaier Ramasami

unread,
Jun 30, 2026, 10:49:31 AM (4 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
 காழ்ப்பும் இன்றி த்--  தளை

கண்பார்க்கத் தந்த கவின்மிகு பாடல்கள் 
வெண்பாக்கள் நல்ல விருந்து

இலந்தை

On Tue, Jun 30, 2026 at 4:31 AM KKSR <aur...@gmail.com> wrote:
கவியரங்கம் - 62- வெண்பா வித்தகம்

புன்னகை யார்க்கும் பொது!

புன்னகை ஒன்றே பொருள்தேடா வைப்பாகும்
மின்னலை வெட்டினாற் போலதாம் - இன்னலில்
தன்னை உயர்த்தும் தகையன்றோ! செய்திடுக
புன்னகை யார்க்கும் பொது! (1 )


KKSR

unread,
Jun 30, 2026, 11:38:43 AM (4 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
சரி பார்க்கிறேன், மாமா!

அன்புடன்
சுரேஜமீ


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

KKSR

unread,
Jun 30, 2026, 11:40:11 AM (4 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
பார்க்கிறேன் அண்ணா!

மிக்க நன்றி!

அன்புடன்,
சுரேஜமீ


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

KKSR

unread,
Jun 30, 2026, 11:41:08 AM (4 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
அண்ணாச்சி, வணக்கம்! 

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

அன்புடன்
சுரேஜமீ


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

KKSR

unread,
Jun 30, 2026, 11:41:49 AM (4 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி அண்ணா.

அன்புடன்
சுரேஜமீ


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

KKSR

unread,
Jun 30, 2026, 2:44:13 PM (4 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
தளை திருத்தப்பட்டது

கொஞ்சமே னும்மிதைக் கொள்!


சுயநலக் கேடில் சுகிப்பது நன்றோ?

கயமையும் காழ்ப்பதுவும் இன்றித்- தயையுடன்

எஞ்சியதை ஈந்துப் பிறர்வாழச் செய்!நெஞ்சே

கொஞ்சமே னும்மிதைக் கொள்! (4)

~ சுரேஜமீ


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

Ram Ramakrishnan

unread,
Jun 30, 2026, 3:05:46 PM (4 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
அற்புதமான கவிதைத் தொகுப்பு, தலைவரே.

மிகவும் பிடித்த கவிதை:

// நெருப்பை அணைக்காத நீர்

கையில் நெருப்பிருக்கும் கங்கை சிரசிருக்கும்
பையரவு மார்பில் படர்ந்திருக்கும்- ஐயன்
விருப்பத்திற் கேற்பவே மேற்கங்கை கையின்

நெருப்பை அணைக்காத நீர் //  


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



--

Ram Ramakrishnan

unread,
Jun 30, 2026, 3:45:34 PM (4 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
மிக அருமையான கவிதைகள், தம்பியரே. வாழ்க!

பிடித்த பாடல்:

// எண்ணங்கள் ஒங்கட்டும்! ஏற்றமதை நாடட்டும் 

திண்ணமுடன் திக்கெட்டும் தேசத்தில்! - வெண்ணிலவாய்!

தேனமுதச் சொல்பேசு! தீர்ந்திடும் தீவினைகள்!

வானம் இறங்கி வரும்! (8) //


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


On Tue, Jun 30, 2026 at 4:31 AM KKSR <aur...@gmail.com> wrote:

Sai Ganesan H

unread,
Jun 30, 2026, 5:27:45 PM (4 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
தங்களின் எல்லா வெண்பாக்களும் நன்று. அருமையான அறிவுரைகளைக் கூறும் இந்த வெண்பா எனக்கு மிகவும் பிடித்தது. 

- சத்யவேழன் H சாயி கணேசன் 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 1, 2026, 1:54:08 AM (4 days ago) Jul 1
to சந்தவசந்தம்
கவிவேழம் ஐயா அளித்த வெண்பா
எல்லாமே சிறப்பாக உள்ளது 

ஞான முரை வள்ளுவரை நன்குபற்றி வாழ்பவர்க்கு
வானம் இறங்கி வரும்                                        9



On Tuesday, June 30, 2026 at 9:42:22 AM UTC+5:30 Subbaier Ramasami wrote:

                                                                                                                                                    
.வெண்பாக் கவியரங்கம்


வானம் இறங்கி வரும்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படுவரென- மெய்வகையாய்
ஞான முரை வள்ளுவரை நன்குபற்றி வாழ்பவர்க்கு
வானம் இறங்கி வரும்                                        9


KKSR

unread,
Jul 1, 2026, 5:42:35 AM (4 days ago) Jul 1
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி அண்ணா.

அன்புடன்
சுரேஜமீ


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

sudha's creations

unread,
Jul 1, 2026, 11:34:42 PM (3 days ago) Jul 1
to santhavasantham
இந்த வெண்பா வித்தகம் எழுதுவதற்கு ..  சந்தவசந்தத்தில் கொஞ்சம் டைம் கிடைக்குமா...

இலந்தை மாமா தயவு செய்து டைம் கொடுங்கள்... அடுத்த வாரம் முடிவுக்குள் நானும் எழுதி விடுகிறேன்..
அன்புடன் சுதா வேதம்

Reply all
Reply to author
Forward
0 new messages