நரமுக கணபதி

251 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 29, 2017, 9:51:23 AM8/29/17
to Santhavasantham
தமிழ்நாட்டிலே மூன்று கோவில்களிலே நரமுக கணபதி வீற்றிருக்கிறார்.  யானைத்தலை அடைவதன் முன்னர் இருந்த வடிவம். சோழர் காலச் சிற்பங்கள். தில்லை, திருச்சி, திலதைப்பதி. காஞ்சிப் பெரியவர்கள் உரையிலே அடிக்கடி குறிப்பிடுவார். அவற்றில் சிலவற்றை இணைத்துள்ளேன். 

இலந்தையின் கடவுள் வணக்கப் பாடல் புகழ்பெற்றது. அதுபோல, ஒரு உத்தியை சம்பந்தரே ஆள்வதை காஞ்சிப் பெரியவர் சொல்கிறார் பாருங்கள். ”திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோவிலிலும் நரமுக கணபதி உண்டு. இதிலே ஒரு வேடிக்கை, யானை முகமில்லாத ஒரு பிள்ளையார் உள்ள கோவிலானாலும் அந்தக் கோவில் சுவாமியைப்(சிவபெருமானை) பற்றி சம்பந்தர் பதிகம் பாடும்போது, சுவாமியின் பல லக்ஷணங்களில் ஒவ்வொன்றையும் சொல்லி, ‘அந்த லக்ஷணத்தை உடையவனை' என்பதற்கு ‘யானை', ‘யானை' என்றே சொல்லி முடித்திருப்பதுதான்! ‘நன்றுடையானை, உமையொரு பாகம் உடையானை, திருவுடையானை, சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே!' “

மூன்று ஊர்ப் பெயர்களும் கொண்டு மாந்தமுக கணபதி அருள்வேண்டிச் சில பாடல்கள் தாருங்கள். வெண்பா, கலித்துறை, விருந்தம், ஆசிரிய விருத்தம் என ...

நன்றி,
நா. கணேசன்

-------------------

மூன்றாவதாக, நரமுக கணபதி - சிதம்பரத்தில். ஒளிப்படம் எங்காவது கிடைத்தாலோ, எடுத்தோ பகிருங்கள்.
காஞ்சிப் பெரியவர் உரையை முன்னர் சில ஆண்டுகள் முன்பு கொடுத்துள்ளேன்.

காஞ்சிப் பெரியவர் ‘தெய்வத்தின் குரல்’ (தமிழ் ஹிண்டு பத்ரிகை) நரமுக கணபதிகளைப் பற்றிப் பேசியுள்ளார்.



திருச்சி மலைக்கோட்டையில் நரமுக கணபதி

அவர் எந்த ரூபத்தில் இருந்தாலும்' என்று சொல்கிறபோது ஆனை ரூபத்திலில்லாமல் ரொம்பவும் அபூர்வமாக மநுஷ்ய ரூபத்தில் 'நரமுக கணபதி' என்றே அவர் இருப்பது நினைவு வருகிறது. சிதம்பரம் தெற்கு வீதியில், தம்முடைய பிரசித்தமான ஆனை முகத்தோடு இல்லாமல், மற்றவர்கள் சொல்லியோ எழுதி வைத்தோதான் ‘இவர் பிள்ளையார்' என்று தெரிந்து கொள்ளும்படி மநுஷ்ய மூஞ்சியோடு ‘நரமுக கணபதி'யாக இருக்கிறார்.

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோவிலிலும் நரமுக கணபதி உண்டு. இதிலே ஒரு வேடிக்கை, யானை முகமில்லாத ஒரு பிள்ளையார் உள்ள கோவிலானாலும் அந்தக் கோவில் சுவாமியைப்(சிவபெருமானை) பற்றி சம்பந்தர் பதிகம் பாடும்போது, சுவாமியின் பல லக்ஷணங்களில் ஒவ்வொன்றையும் சொல்லி, ‘அந்த லக்ஷணத்தை உடையவனை' என்பதற்கு ‘யானை', ‘யானை' என்றே சொல்லி முடித்திருப்பதுதான்! ‘நன்றுடையானை, உமையொரு பாகம் உடையானை, திருவுடையானை, சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே!'

விக்நேச்வரரின் அநேக ஆவிர்பாகங்களைக் குறித்த கதைகளில் ஒன்றின்படி அவருடைய ஒரிஜினல் ரூபம் நரரூபம்தான். அம்பாள் தன்னுடைய அந்தப்புரத்திற்கு ஒரு காவலாள் சிருஷ்டிக்க வேண்டுமென்று நினைத்தாள்.

தன்னுடைய திவ்ய சரீரத்தையே வழித்து அதிலிருக்கிற மஞ்சள் பொடி, குங்குமம், வாசனைப் பொடி முதலானவைகளைத் திரட்டிப் பிசைந்து ஒரு பாலகனாக ரூபம் பண்ணி அதற்கு உயிரும் கொடுத்துக் காவலாக வைத்து விட்டாள். மநுஷ்யர் மாதிரி (தேவர் மாதிரியுந்தான்) கண், காது, மூக்கு, நாக்கு முதலானவை உள்ள ரூபமே அது. அதாவது நரமுக ரூபந்தான்.

பிள்ளையார் என்றே பெயர் பெறப்போகிற அந்தப் பிள்ளையை, தன் உடம்பிலிருந்து தானே வழித்துப் பெற்ற அருமைப் பிள்ளையை அம்பாள் காவல் வைத்து விட்டு ஸ்நானத்துக்குப் போனாள்.

அம்பாள் சர்வ மங்களா, அவள் தன்னுடைய மங்கள சரீரத்திலிருந்து மங்கள வஸ்துவான மஞ்சள் பொடியை வழித்து மூலப் பிள்ளையாரை சிருஷ்டித்ததால்தான் இன்றைக்கும் எந்த சுபகாரியத்தின் ஆரம்பித்திலும் மஞ்சள் பொடியைப் பிள்ளையாராகப் பிடித்து வைத்துப் பூஜை செய்கிறோம். ‘மஞ்சள்' என்பதே ‘மங்கள' என்பதிலிருந்து வந்திருப்பதுதான்.

‘இங்கே, அங்கே' என்பதைச் சில பேர் ‘இஞ்சே, அஞ்சே' என்று சொல்கிறார்களல்லவா? இலக்கணத் தமிழிலேயே ‘தூங்கல்' என்பது 'துஞ்சல்' என்றும் வருகிறது. அப்படி, மங்கள என்பதே மஞ்சள் ஆகியிருக்கிறது. சம்ஸ்க்ருதத்தில் மங்களம் என்பதற்கு மஞ்சள் என்று ஒரு அர்த்தம்.

பரமேச்வரன் அந்தப்புரத்திற்கு வந்தார். ‘இதுயார்டா பத்னியின் அந்தப்புரத்தில் புருஷப் பிரஜை?' என்று அவருக்கு ஒரே கோபம் வந்து, ஒன்றும் தெரியாதவர் மாதிரி, அந்தப் பிள்ளையை சிரச்சேதம் பண்ணிவிட்டார். வாஸ்தவத்தில் எல்லாம் தெரிந்துதான் லோகாபகாரம் பண்ண வேண்டும், அதையும் விருவிருப்புள்ள நாடகமாகப் பண்ண வேண்டும் என்றே இப்படிச் செய்தார்.

என்ன லோகோபகார மென்றால் கஜமுகாசுரன் என்ற யானைத்தலை அசுரன் தன்னை மாதிரி யானைத் தலை படைத்தவர்தான் வதம் செய்ய முடியுமென்றும், அதோடு அப்படி வதைக்கக்கூடிய சத்ரு ஸ்திரீ-புருஷ சம்பந்தத்தில் பிறக்காதவனாயிருக்க வேண்டுமென்றும் வரம் வாங்கி வைத்துக் கொண்டிருந்தான். அது ஒரு பக்கத்தில்.

இன்னொரு பக்கம், நாம் பார்த்த சம்பவம் நடந்த சமயம், கைலாசத்திற்குப் பக்கத்தில் லோகத்திற்கு அமங்களம் உண்டாகும்படியாக ஒரு யானை வடக்கே தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்தது. இந்த இரண்டையும் ‘கம்பைன்' பண்ணித்தான் சுவாமி நாடகமாடினார்.

அம்பாள் சிருஷ்டித்த அருமைக் குழந்தையைத் தாம் சம்ஹாரம் பண்ணியதற்காக அவளிடம் நன்றாக ‘டோஸ்' வாங்கிக் கொண்டு சந்தோஷப்பட்டார். அப்புறம் வடக்கே தலை வைத்திருந்த யானையை சிரச்சேதம் பண்ணி, அந்த சிரசைக் கொண்டு வந்த இந்தப் பிள்ளையின் முண்டத்தில் பொருத்தி, பிள்ளையாராக உயிர் கொள்ளும்படிச் செய்து அம்பாளை திருப்திப்படுத்தினார். பிள்ளையார் மூலம் கஜமுகாசுரன் வதமாகி லோக க்ஷேமம் உண்டாகும்படியும் செய்தார்.

-----------------------

தெரிவு:
நா. கணேசன்

On Tue, Aug 29, 2017 at 6:11 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
தமிழ்நாட்டில் இரண்டு கோவில்களில் நரமுக கணபதி இருப்பதாகச் சொல்வர்.

பார்க்க:





Vinayaka in unique form


 
The idol of Adi Vinayaka. — Pic. by Rajarathinam.

THE NANDRUDAYAN Vinayaga temple in Devadhanam in East Boulevard road, Tiruchi, boasts of the unique Adi Vinayagar granite idol depicting Lord Ganesha with his original divine face without the usual elephantine head and the trunk.

The five-foot tall majestic presiding deity of the temple - Nandrudayan Vinayagar adorning a Naghabharanam around his waist, has a Naganandhi facing him at the Eastern entrance of the temple. It may be mentioned that Nandi Deva is generally associated with Siva Temples only. The Seventh Century Tamil savant Sambandar had in one of his pathikams praised the presiding deity of the temple thereby indicating that this is one of the oldest temples in Sirapalli (Tiruchi).

The four-foot tall Adi Vinayagar is installed in a separate shrine close to the sanctum sanctorum and the divine grace of the brilliantly sculptured granite idol is indeed captivating. In the one hand Lord Ganesha holds the axe, symbolising the destruction of all desires, a rope to indicate his willingness to rescue anyone from the mire of vasanas, the modaka representing the joyous reward of spiritual life, and lotus symbolising that all can achieve the supreme state of self-realisation. The large belly of Ganesha is to convey the idea that a Man of Perfection can consume and digest whatever experience he undergoes. The tiny rat which is seated in front of the Lord amidst a rich collection of food is to indicate that a perfect man - like the rat, will have total control over his desires.

Inside the small shrine one could also see the idols of Adi Sankara, Sage Veda Vyasa, Goddess Gayatri, Sadasiva Brahmendra and Saint Pattinathar. According to Sage Ramarathinam, Trustee of the temple, the Kanchi Paramacharya, used to offer worship at the Thayumanavar and Uchipillayar temples atop the Rockfort. When he visited the temple about 60 years ago he suggested the rendering of the Vedas in the temple everyday it is being followed, the reciting done by scholars. Just behind the sanctum sanctorum an Anjaneya shrine has been established and the temple has separate shrines for Lord Muruga, the Navagrahas, Goddess Durga and Lord Ayyappa in the other Mandapam. Special poojas are performed for Adi Vinayagar on Thursdays. In the annual music festival conducted for the past 83 years almost all leading musicians have participated. It may be recalled that Devadhanam of today is highly congested where daily wage earners, rag pickers, dealers in old second hand household articles, etc. live. A couple of centuries ago, prior to the establishment of the Town railway station Devadhanam was the entry point to the city from the East. Situated very close to the Cauvery, Devadhanam sported some very important and ancient temples, the Bhoologanathaswami temple, Veerasoora Mahakaliamman temple, Nandrudayan temple, etc. There were four huge tanks close to these temples all of which have now been converted into lorry stand, weekly market and parks. In recent years the residents of the area have taken a keen interest in preserving old and ancient temples.

V. GANAPATHY


Kaviyogi Vedham

unread,
Aug 29, 2017, 10:33:01 AM8/29/17
to santhavasantham
romba azagaa solliyuLLiir. vaazga um pugazh,
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

 

Ramamoorthy Ramachandran

unread,
Aug 30, 2017, 2:47:35 AM8/30/17
to santhav...@googlegroups.com
 வெண்பா 
----------------

நன்றுடை  யானின்  மகனாய்  நரமுகமே  
ஒன்றுடை  ஈசா  உனதுபுகழ்  - என்றென்றும் 
வாழ்த்தி  வணங்கும்  அடியார்யாம்  எம்முடலைத் 
தாழ்த்திப்  பணிந்தோம்   சரண்!

கட்டளைக் கலித்துறை 
------------------------------------

சரணென்று  கூவித்  தலைமேற்  கரஞ்சேர்த்துத்  தாளடியில்
சரங்கொள்  மலர்கள் , அறுகுடன்  இட்டோம்  தகும்வகையில் 
வரம்வேண்டி  மோதகம்  அப்பம்  அளித்தோம்  மகிழ்வுடனே 
சிரத்தில்  நரமுகம்  திகழ்ந்தே  வருவாய்   தில்லையிலே!

அறுசீர் விருத்தம்
---------------------------- 

தில்லை    திருச்சி   திலதையிலே
   சேரும்    அடியார்  செழிப்புறவே  
அல்லும்  பகலும்  அருள்புரியும் 
    அண்ணல்  கணபதி  நின்னருளை 
மெல்ல  விரும்பித் தொழுகின்றோம் 
     மீண்டும்  நின்னடி பணிகின்றோம்! 
மல்லார்  தோள்மேல்  மனிதமுகம் 
     வாய்த்த  வடிவே  வரமருள்வாய்!

(வேறு )

நரமுக கணபதி  சரணஞ்  சரணம் 
நலிபவர்  துணையவ! சரணஞ் சரணம்! 
வரமருள் திருக்கரம்  சரணஞ்  சரணம் !
மலரடி வணங்கினஞ்  சரணஞ்  சரணம்!
புரமெரி  சிவன்மக ! சரணஞ் சரணம்!
பொலிவுடை  மலைமகள்  மகனே! சரணம்!
அரனருள்  தில்லை,  திருச்சி, திலதை
அடைந்தருள் இறைவனே! சரணஞ்  சரணம்!

நன்றி அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

Saranya Gurumurthy

unread,
Aug 30, 2017, 5:32:30 AM8/30/17
to santhav...@googlegroups.com
அருமை ஐயா. 

திருச்சியில் இருந்த போது அடிக்கடி இந்த விநாயகரைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. இப்போதும் அங்கே செல்லும் போது நன்றுடையான் விநாயகரைத் தரிசித்து வருகிறேன்.

சரண்யா. 

Lalitha & Suryanarayanan

unread,
Aug 30, 2017, 6:58:45 AM8/30/17
to santhav...@googlegroups.com
திலதையில் இருக்கும் மாந்தர்முக கணபதி

மஞ்சள்இஞ்சி வாழைசாலி  மலிந்திருக்கும் - எங்கும்
கொஞ்சுமொழி வஞ்சியரின் குரலொலிக்கும்
மஞ்சுவந்து மண்ணிறங்கித் தமிழ்பயிலும் - எங்கள் 
மயிலாடு துறையருகில் மணங்கமழும் - நல்ல
செஞ்சொலொலி கேட்டிருக்கும் திலதபதி - ஒளிச்
சித்திரத்தில் இட்டதுபோல் திகழ்ந்திருந்தும்
பஞ்சமின்றிப் பாய்ந்திருக்கும் அரசலாற்றின் - எழில்
பார்த்திருக்கும் நமையென்றும் ஈர்த்திருக்கும்.

வாசமலர் வரவேற்கும் பூந்தோட்டம் - கண்டு
வண்டமிழில் பாவடிக்கும் கூத்தனூரில்
பேசுமொழி ஈவதற்கே கோவில்கொண்ட -  அந்தப்
பிரமனவன் தேவியவள் கொலுவழகை
ஆசையுடன் கண்டுவந்த கணபதியே -  ஒரு
ஆனைமுகம் ஏற்குமுனம் வந்தமர்ந்தே
ஈசனருள் சிந்துகின்ற திலதபதி  -  இன்றும்
இன்னருளைப் பொழிந்துநமைக் காத்திருக்கும்.

பண்முறையை அறிந்தவர்கள் நிறைந்திருக்கும் -  நம்
பைந்தமிழின் இசையெல்லாம் பொழிந்திருக்கும்
நுண்ணறிவு பிறப்பினிலே சேர்ந்திருக்கும் - பெரும்
நூலறிவும் கல்லாமல் ஓர்ந்திருக்கும்
உண்மையுணர்ந் தோர்கள்பலர் வாழ்ந்திருக்கும் - ஓர்
ஒப்பில்லாச் சிற்றூராம் திலதபதி
மண்ணுலகில் ஏற்றமுடன் திகழ்வதுவும் - அந்த
மாந்தர்முகப் பிள்ளையாரின் வரமென்பரே.

சிவசூரி.



2017-08-29 19:21 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தமிழ்நாட்டிலே மூன்று கோவில்களிலே நரமுக கணபதி வீற்றிருக்கிறார்.  யானைத்தலை அடைவதன் முன்னர் இருந்த வடிவம். சோழர் காலச் சிற்பங்கள். தில்லை, திருச்சி, திலதைப்பதி. காஞ்சிப் பெரியவர்கள் உரையிலே அடிக்கடி குறிப்பிடுவார். அவற்றில் சிலவற்றை இணைத்துள்ளேன். 

 

Pas Pasupathy

unread,
Aug 30, 2017, 7:24:11 AM8/30/17
to Santhavasantham
புலவர், சிவசூரி பாடல்கள் அருமை!

2017-08-30 6:58 GMT-04:00 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
திலதையில் இருக்கும் மாந்தர்முக கணபதி


Subbaiyar Ramasami

unread,
Aug 30, 2017, 8:38:52 AM8/30/17
to santhav...@googlegroups.com
திருச்சிப் புலவர் கவிதை சிறப்பு.   அறுசீர் விருத்தத்தில் ஒரு சிறு குறிப்பு.

அவ்விருத்தத்தை இரண்டுவகையாகப் பார்க்கலாம்.
1 மா மா விளம். அப்படிப்பார்த்தால் இடையில் விளச்சீர்கள் வருகின்றன.
2 வெண்டளை பிறழாத  விருத்தம்
அப்படிப்பார்த்தால் நின்னடி பணிகின்றோம்      , மல்லார் தோள்மேல்    இவை இரண்டையும் வெண்டளை தவறாமல் மாற்றினால்  சரியாக இருக்கும்

இலந்தை


--

Subbaiyar Ramasami

unread,
Aug 30, 2017, 8:40:52 AM8/30/17
to santhav...@googlegroups.com
சிவசூரி பாடல் சந்தம் சிறப்பு.

N. Ganesan

unread,
Aug 30, 2017, 9:31:04 AM8/30/17
to Santhavasantham
புலவர் ஐயா, கவிஞர் சிவசூரி - இருவருக்கும் நனிநன்றியன்.

சோழர் காலத்தில் இந்த நரமுக கணபதி வழிபாடு பிரசித்தமாக இருந்ததை
இந்த விக்கிரகங்கள் காட்டுகின்றன. படங்களுடன் எழுதுகிறேன் - அடுத்த வாரம்.

திருச்சி மலைக்கோட்டை, சிதம்பரம் தெற்குவீதி - இரு கரங்கள்.
ஒன்றில் அங்குசம், இன்னொன்றில் மோதகம்.

மலைக்கோட்டை நரமுக கணபதி கோரைப்பற்களுடன் இருக்கிறார்.
’பூத கணாதி சேவிதம்’ - தீட்சிதர் (வாதாபி கணபதிம் பஜேகம்).
காஞ்சி கைலாசநாதர் கோவிலில் பூத கணங்களுடன் கும்மாளம்
இட்டுக்கொண்டிருக்கும் பேனல் அருமையானது.

திலதைப் பதி நரமுகர் நான்கு கரங்கள். வலக்கை அபயஹஸ்தம்,
இடக்கை தொடையில் ஊன்றி உள்ளது. பின்னிரு கரங்கள் பாச அங்குசங்கள்.

நா. கணேசன்




--

Lalitha & Suryanarayanan

unread,
Aug 30, 2017, 10:00:39 AM8/30/17
to santhav...@googlegroups.com
மலைக்கோட்டை மாந்தர்முக கணபதி

கலைக்கோட்டை என்றுசொல்லும் காவிரியாள் - எழில்
கரையெல்லாம் கற்கோட்டை என்றிலங்கும்
சிலைக்கோட்டை செப்பமுடன் அரசர்பலர் - அன்றுச்
செய்தளித்த கோயிலெல்லாம் புகழ்க்கோட்டை!
வலைக்கோட்டை என்றிலங்கி மக்கள்தமை - தினம்
வாவென்றே அழைப்பதுமோர் மலைக்கோட்டை!
இலைக்கோட்டை இதுபோலே என்றுணர்ந்தார் - மனம்
இமயமென நிமிர்ந்திருக்கும் திருக்கோட்டை!

வேந்தனவன் கட்டிவைத்த மலைக்கோட்டை - அது
விண்ணுலகை முட்டிநின்று மலைப்பூட்டும்!
மாந்தர்முக கணபதியைக் காணுவார்கள் -  அந்த
மைந்தனருள் தன்னையுடன் பூணுவார்கள்!
ஏந்தலிவன் எழிலதனைப் போற்றுவார்கள் - தினம்
இன்னொளியை இதயத்தில் ஏற்றுவார்கள்!
காந்தளிளம் கன்னியர்கள் நாணுவார்கள் - கொளும்
காதலினால் கண்டவுடன் கோணுவார்கள்!

தாயுமென ஆனவனும் திகழும்கோயில் - அந்தத்
தனயனுருக் கண்டவர்கள் மகிழும்கோயில்!
சேயவனின் முகங்கண்டு நெகிழும்கோயில் -  புவி
செப்புதமிழ் துணைகொண்டு புகழும்கோயில்!
பாயுமொளி முகத்தாலே காக்கும்கோயில்! -  தினம்
பரவுங்கால் பரவசமும் பூக்கும்கோயில்!
மாயுமனத் துயர்நீக்கித் தாங்கும்கோயில் - அந்த
மாந்தர்முகப் பிள்ளையருள் கோயில்தானே!

சிவசூரி.


N. Ganesan

unread,
Aug 30, 2017, 10:05:26 AM8/30/17
to சந்தவசந்தம்
அருமை, ஐயா.

அன்புடன்
நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 30, 2017, 10:06:17 AM8/30/17
to சந்தவசந்தம்


On Wednesday, August 30, 2017 at 2:32:30 AM UTC-7, saranya.gurumurthy wrote:
அருமை ஐயா. 

திருச்சியில் இருந்த போது அடிக்கடி இந்த விநாயகரைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. இப்போதும் அங்கே செல்லும் போது நன்றுடையான் விநாயகரைத் தரிசித்து வருகிறேன்.

சரண்யா. 

மலைக்கோட்டை நரமுக கணபதிக்கு திருப்புகழ் ஒன்று பாடுங்கள்.
 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Saranya Gurumurthy

unread,
Aug 30, 2017, 11:13:13 AM8/30/17
to santhav...@googlegroups.com
கணேசரின் வாக்கு கணேசனின் வாக்கு. தங்களது வாக்கு, ஆசிர்வாதம். கூடிய விரைவில் நடக்கட்டும். 

சரண்யா. 

Lalitha & Suryanarayanan

unread,
Aug 30, 2017, 9:43:20 PM8/30/17
to santhav...@googlegroups.com
தில்லைவளர் நரமுக கணபதி

துள்ளலான தாளமோடு வள்ளலாடும் ஊரிலே
பிள்ளையான நீயும்வந்து பேதைமுன்னம் நேரிலே
கள்ளமான நெஞ்சகத்தில் கால்பதிக்க வந்தனை!
கிள்ளைபோலக் கொஞ்சியுன்றன் கீர்த்திசொல்லித்  தந்தனை!

ஆசையோடுன் அம்மைதந்த அழகுவாய்ந்த முகத்தினை
ஓசையோடும் உவகையோடும் ஓடியென்றன் அகத்தினில்
ஈசனாடும் தில்லையில் நேரில்வந்து காட்டினை
பாசமோடு சொல்லித்தந்து பாடவழி காட்டினை!

சேர்த்தெடுத்த சந்தனம் பார்த்தெடுத்த மஞ்சளும்
வார்த்தெடுத்த மேனியாய் வடித்தளித்த அன்னைமுன்
ஆர்த்தெழுந்த சோதியாய் அன்னைதந்த ஆதியாய்
பார்த்தெடுத்த பிள்ளையே பாரில்வந்த கிள்ளையே!

கற்பகத்தின் செல்வம்நீ! கற்கநல்ல பொருளும்நீ!
சொற்பதத்தைத் தந்தனை! சொல்லும்தாண்டி நின்றனை!
அற்புதத்தின் எல்லைநீ! அனைத்துமீய வல்லைநீ!
தெற்குவீதி நிற்கும்நீ தில்லைவந்த பிள்ளைநீ!

எண்ணுகின்ற போதிலே எதிரில்வந்த தோற்றமே
கண்ணிமைக்கும் காலமே கருணையோடு நோக்கியே
பண்ணெடுத்துப் பாடவே பைந்தமிழை ஊட்டினை!
விண்ணளந்து நின்றனை! வேகமென்னை வென்றனை!

சிவசூரி.

N. Ganesan

unread,
Aug 30, 2017, 9:52:45 PM8/30/17
to Santhavasantham
மிக நன்று! நன்றி.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 30, 2017, 10:23:20 PM8/30/17
to சந்தவசந்தம்
மிக அருமை!

அனந்த் 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 30, 2017, 10:25:35 PM8/30/17
to சந்தவசந்தம்
நேரில் கணபதியைக் காணவைப்பன சூரியின் கவிதைகள். 

அனந்த்

Lalitha & Suryanarayanan

unread,
Aug 30, 2017, 10:49:07 PM8/30/17
to santhav...@googlegroups.com
பேராசிரியர் பசுபதிக்கும் தலைவருக்கும் பேராசிரியர் அனந்த் அவர்களுக்கும் நன்றி.

சிவசூரி.

Rajja Rajagopalan

unread,
Aug 31, 2017, 12:26:42 AM8/31/17
to santhav...@googlegroups.com
அழகிய பாடல். நன்றி

மீ. ரா

Sent from my iPhone
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Aug 31, 2017, 3:53:23 AM8/31/17
to santhav...@googlegroups.com
மீரா அவர்களுக்கு நன்றி.

சிவசூரி.

Saranya Gurumurthy

unread,
Aug 31, 2017, 9:34:38 AM8/31/17
to santhav...@googlegroups.com
சந்தவசந்த ஆசிரியர்களுக்கு அன்பு வணக்கங்கள். 

திருச்சி நரமுக கணபதி அருளால் அவர்மேல் ஒரு பாடல். 

நன்றுடையான் கோயில் நரமுக கணபதி


சந்தம்:
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதான

அருமலர் கொடுநிதம் அடிபணி பவரவர்
..அருதுயர் களையழி அதிதீரா!!
.அறுகுடன் அரிசியும் அவல்பொரி அளியிட
...அறிவெனும் ஒளிதரும் அருளாழி

நரைவிடை யினிலமர் நிருமல! எழிலொலி
..நதிபுனை சிவனுமை புதல்வோனே!
.நறைமலர் மழுதளை இவையணி கரமுடை
...நரமுக கணபதி அருள்வாயே!!

பரிபுரம் அணிபதம் அதைஎளி யனெனது
..பவவினை குவையற இடுவாயோ
.பணைமர நிழலினை மிகவிழை இதமுக!
...பணிதனை அரையினில் அணிவோனே

திரிசிர கிரியதன் அடியமர் குணபர
..திடமிக வுடைவடி வழகோனே
.செறிவுடை வயல்நிறை வளவனின் நகருறை
...திருமிக அருளிடும் இறையோனே

அறுகு - அறுகம் புல்
அளி - தேன்
இடு - இடுதல் / அர்ப்பணித்தல்

நரைவிடை... - இந்த நன்றுடையான் கோயில் விநாயகருக்கு நந்தி வாகனம்.

தளை - கயிறு.

இந்த ஆதி விநாயகர், கைகளில் தாமரை, கோடரி, பாசக்கயிறு ஆகியவற்றை வைத்துள்ளார்.

குவை - குவியல்

அற - முற்று பெறுதல் / முழுவதும் ஒழிதல்

பணைமரம் - அரசமரம். பொதுவாக பிள்ளையார், அரசமரத்தடியில் விரும்பி அமர்வார். இந்தக் கோயிலிலும் அரசமரம் இருக்கிறது.

பணி - பாம்பு. நாகாபரணத்தை இடையில் அணிந்துள்ளார்.

சிராப்பள்ளி மலைக்குக் கீழே இந்த  ஆலயம் அமைந்துள்ளது.

வளவன் - சோழன்

பணிவுடன், 
சரண்யா. 

பி.கு.

எனது சிற்றறிவிற்கு எட்டிய வரை சரிபார்த்து இட்டுள்ளேன். இங்கு இடுவதால் அறிஞர் பெருமக்களின் கருத்துகளை அறியலாம் என்ற ஆவலுடன்... 


Lalitha & Suryanarayanan

unread,
Aug 31, 2017, 9:43:52 AM8/31/17
to santhav...@googlegroups.com
அருமை!

சிவசூரி.

N. Ganesan

unread,
Aug 31, 2017, 10:41:14 AM8/31/17
to சந்தவசந்தம்


On Thursday, August 31, 2017 at 6:34:38 AM UTC-7, saranya.gurumurthy wrote:
சந்தவசந்த ஆசிரியர்களுக்கு அன்பு வணக்கங்கள். 

திருச்சி நரமுக கணபதி அருளால் அவர்மேல் ஒரு பாடல். 

நன்றுடையான் கோயில் நரமுக கணபதி


சந்தம்:
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதான

அருமலர் கொடுநிதம் அடிபணி பவரவர்
..அருதுயர் களையழி அதிதீரா!!
.அறுகுடன் அரிசியும் அவல்பொரி அளியிட
...அறிவெனும் ஒளிதரும் அருளாழி

அருளாழீ! என்று விளியாக அமைத்தால்
மற்ற அடிகளின் ஈற்றுச்சொற்களுடன் ஓசை பொருந்தும் அல்லவா?
அதிதீரா, அருளாழீ, புதல்வோனே, அருள்வாயே, ...

பெண்கவிகளாக முன்பு தங்கமணி அம்மாள் இருந்தார்கள்.

நூறாண்டு வாழ்ந்து சந்தவசந்தத்தின் பெருங்கவிஞராக வருவீர்கள்.

அன்புடன்
நா. கணேசன்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 31, 2017, 10:41:44 AM8/31/17
to சந்தவசந்தம்
அபாரம்! பாடலில் கணேசன் அருள் மிளிர்கிறது.
அனந்த்
> அருமலர் கொடுநிதம் அடிபணி பவரவர்
.> .அருதுயர் களையழி அதிதீரா!!
இருமுறை 'அரு' வருவதைத் தவிர்க்க, ..அவர் அடைதுயர்களை எனலாம்
>அறுகுடன் அரிசியும் அவல்பொரி அளியிட
.> ..அறிவெனும் ஒளிதரும் அருளாழி
அருமையான கொடுக்கல்-வாங்கல்!
> எழிலொலி ..நதிபுனை சிவனுமை புதல்வோனே!
 ஓடும்  நதியின் ஒலியை எழிலொலி என்றது அழகு.

>..பவவினை*க்* குவையற இடுவாயோ



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 31, 2017, 10:45:30 AM8/31/17
to சந்தவசந்தம்
இதமுக! - இபமுக (இபம்=யானை) 

Saranya Gurumurthy

unread,
Aug 31, 2017, 10:50:40 AM8/31/17
to santhav...@googlegroups.com
ஐயா திரு. சிவசூரி, திரு. கணேசன், திரு. அனந்த் மூவருக்கும் எனது பணிவான நன்றிகள். 

அருளாழீ என்று மாற்றுகிறேன். 

அருமலர் கொடுநிதம் அடிபணி பவரவர் 
..அடைதுயர் களையழி அதிதீரா 
.
.
மாற்றுகிறேன். 

பவவினைக் குவை என்று  வருவதால் சந்தம் அடிபடுகிறது என நினைக்கிறேன். அதனால் பவவினை மலை என்று மாற்றிக்கொள்கிறேன்.

மலை - குவை = குவியல்; பொருள் மாறாது என்று நினைக்கிறேன். 

சரண்யா. 

Saranya Gurumurthy

unread,
Aug 31, 2017, 10:53:08 AM8/31/17
to santhav...@googlegroups.com
நரமுக கணபதியைத் துதிப்பதால் யானை முகத்தைக் குறிக்காமல், பொதுவில் இதமுகம் - இதம் தரும் இனிய முகம் என்று வைத்தேன். 

N. Ganesan

unread,
Aug 31, 2017, 10:59:49 AM8/31/17
to சந்தவசந்தம்


On Thursday, August 31, 2017 at 7:50:40 AM UTC-7, saranya.gurumurthy wrote:


பவவினைக் குவை என்று  வருவதால் சந்தம் அடிபடுகிறது என நினைக்கிறேன். அதனால் பவவினை மலை என்று மாற்றிக்கொள்கிறேன்.

மலை - குவை = குவியல்; பொருள் மாறாது என்று நினைக்கிறேன். 

மலை என்பதைவிட நிரை பொருந்துமா எனப் பாருங்கள்.

ஆ நிரை = பசுக்களின் தொகுதி (ஆநிரை மேய்க்க நீ போதி - ஆழ்வார்)
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ் - ஆண்டாள்.

பவவினை நிரையற இடுவாயோ!

Saranya Gurumurthy

unread,
Aug 31, 2017, 11:19:23 AM8/31/17
to santhav...@googlegroups.com
நிரை என்றும் முதலில் யோசித்தேன். கூட்டம் என்பது பொருந்துகிறது. ஆனால் அதில் ஒரு வரிசை என்னும் orderly behaviour வருகிறது. அதனால் ஒரு தயக்கம். 

மலை என்றால் அளவில் பெரிய என்னும் கோணத்தில் பொருந்துகிறது. 

பவவினை நிரையற 

பவவினை மலையற

இதில் இரண்டுமே பொருந்தி வருகிறது. எனினும் மலை நிச்சயமாக பொருந்துகிறது என்று எனக்குப் படுகிறது. 

நிரையை உபயோகப் படுத்தலாம் என்று பெரியோர்கள் சொன்னால் நிச்சயம் உபயோகிக்கிறேன். 

சரண்யா. 

N. Ganesan

unread,
Aug 31, 2017, 12:23:20 PM8/31/17
to Santhavasantham
malai is fine.

NG

--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 31, 2017, 5:23:37 PM8/31/17
to சந்தவசந்தம்
நல்ல விளக்கம். எனினும், இதம் என்பதை ஒட்டி  இத என்று பெயரெச்சமாகப் பயன்படுத்திப் பார்த்ததாக நினைவில்லை.

அனந்த்

அனந்த்  

-

Saranya Gurumurthy

unread,
Aug 31, 2017, 10:21:30 PM8/31/17
to santhav...@googlegroups.com
Ok sir. Thank you. 

Saranya Gurumurthy

unread,
Sep 1, 2017, 12:13:43 AM9/1/17
to santhav...@googlegroups.com
அவ்வாறெனில், இதமுக என்பதற்குப் பதில், 

மதுமுக (மது - தேன்)  - தேடியதில் ஒரு ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் அவர்களின் பாடல் ஒன்று கிடைத்தது. கேட்டது இல்லை.

வளரிள மதியே - மதுமுக நிதியே - எனதுடல் உயிரே - யதுகுலநிதியே


அல்லது 

மதிமுக என்று வைத்துக்கொள்ளலாமா? (பாபநாசம் சிவனின் மயில்வாகனா வள்ளி மனமோஹனா என்ற பாடலில் பூர்ணசந்திரன் போலும் மறுமுக... என்று பாடியுள்ளார்.

ஆனால் மதிமுக என்றால், தற்காலத்தில் வேறு விதமாகவும் பார்ப்பார்கள் (தமிழ்நாட்டில்). :)

மதுமுக என்பது ஏற்புடையதா?

இல்லையெனில், இபமுக என்றே வைத்துக்கொள்கிறேன். அக்கோயிலில், நரமுக விநாயகரைத் தவிர ஆனைமுக விநயாகரும் உள்ளார்.

சரண்யா.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Regards,
Saranya

N. Ganesan

unread,
Sep 1, 2017, 8:19:47 AM9/1/17
to சந்தவசந்தம்


On Thursday, August 31, 2017 at 9:13:43 PM UTC-7, saranya.gurumurthy wrote:
அவ்வாறெனில், இதமுக என்பதற்குப் பதில், 

மதுமுக (மது - தேன்)  - தேடியதில் ஒரு ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் அவர்களின் பாடல் ஒன்று கிடைத்தது. கேட்டது இல்லை.

வளரிள மதியே - மதுமுக நிதியே - எனதுடல் உயிரே - யதுகுலநிதியே


அல்லது 

மதிமுக என்று வைத்துக்கொள்ளலாமா? (பாபநாசம் சிவனின் மயில்வாகனா வள்ளி மனமோஹனா என்ற பாடலில் பூர்ணசந்திரன் போலும் மறுமுக... என்று பாடியுள்ளார்.

ஆனால் மதிமுக என்றால், தற்காலத்தில் வேறு விதமாகவும் பார்ப்பார்கள் (தமிழ்நாட்டில்). :)

மதுமுக என்பது ஏற்புடையதா?

இல்லையெனில், இபமுக என்றே வைத்துக்கொள்கிறேன். அக்கோயிலில், நரமுக விநாயகரைத் தவிர ஆனைமுக விநயாகரும் உள்ளார்.

இபமுக - எல்லோருக்கும் புரியுமே.
 

சரண்யா.


2017-09-01 2:53 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
நல்ல விளக்கம். எனினும், இதம் என்பதை ஒட்டி  இத என்று பெயரெச்சமாகப் பயன்படுத்திப் பார்த்ததாக நினைவில்லை.

அனந்த்

அனந்த்  

2017-08-31 10:53 GMT-04:00 Saranya Gurumurthy <saranya.g...@gmail.com>:
நரமுக கணபதியைத் துதிப்பதால் யானை முகத்தைக் குறிக்காமல், பொதுவில் இதமுகம் - இதம் தரும் இனிய முகம் என்று வைத்தேன். 

On 31 Aug 2017 20:15, "VETTAI ANANTHANARAYANAN" <gan...@gmail.com> wrote:
இதமுக! - இபமுக (இபம்=யானை) 


-

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Regards,
Saranya

Siva Siva

unread,
Sep 1, 2017, 8:48:21 AM9/1/17
to santhavasantham
Nice effort.


2017-08-31 9:34 GMT-04:00 Saranya Gurumurthy <saranya.g...@gmail.com>:
சந்தவசந்த ஆசிரியர்களுக்கு அன்பு வணக்கங்கள். 

திருச்சி நரமுக கணபதி அருளால் அவர்மேல் ஒரு பாடல். 

நன்றுடையான் கோயில் நரமுக கணபதி


சந்தம்:
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதான

அருமலர் கொடுநிதம் அடிபணி பவரவர்
..அருதுயர் களையழி அதிதீரா!!
.அறுகுடன் அரிசியும் அவல்பொரி அளியிட
...அறிவெனும் ஒளிதரும் அருளாழி

நரைவிடை யினிலமர் நிருமல! எழிலொலி
..நதிபுனை சிவனுமை புதல்வோனே!
.நறைமலர் மழுதளை இவையணி கரமுடை
...நரமுக கணபதி அருள்வாயே!!

பரிபுரம் அணிபதம் அதைஎளி யனெனது
..பவவினை குவையற இடுவாயோ
.பணைமர நிழலினை மிகவிழை இதமுக!
...பணிதனை அரையினில் அணிவோனே

--> /பரிபுரம் அணிபதம் அதைஎளி யனெனது
..பவவினை குவையற இடுவாயோ/ 

பதத்தை எங்கே இடவேண்டும்?

--> /பணைமர நிழலினை மிகவிழை இதமுக! /
"பணைமர நிழலினை இடமென மகிழ்xx / விழைxx"
பொருந்தக்கூடும்.

xx = பவ, சுத, ...


திரிசிர கிரியதன் அடியமர் குணபர
..திடமிக வுடைவடி வழகோனே
.செறிவுடை வயல்நிறை வளவனின் நகருறை
...திருமிக அருளிடும் இறையோனே

அறுகு - அறுகம் புல்
அளி - தேன்
இடு - இடுதல் / அர்ப்பணித்தல்

நரைவிடை... - இந்த நன்றுடையான் கோயில் விநாயகருக்கு நந்தி வாகனம்.

தளை - கயிறு.

இந்த ஆதி விநாயகர், கைகளில் தாமரை, கோடரி, பாசக்கயிறு ஆகியவற்றை வைத்துள்ளார்.

குவை - குவியல்

அற - முற்று பெறுதல் / முழுவதும் ஒழிதல்

பணைமரம் - அரசமரம். பொதுவாக பிள்ளையார், அரசமரத்தடியில் விரும்பி அமர்வார். இந்தக் கோயிலிலும் அரசமரம் இருக்கிறது.

பணி - பாம்பு. நாகாபரணத்தை இடையில் அணிந்துள்ளார்.

சிராப்பள்ளி மலைக்குக் கீழே இந்த  ஆலயம் அமைந்துள்ளது.

வளவன் - சோழன்

பணிவுடன், 
சரண்யா. 

பி.கு.

எனது சிற்றறிவிற்கு எட்டிய வரை சரிபார்த்து இட்டுள்ளேன். இங்கு இடுவதால் அறிஞர் பெருமக்களின் கருத்துகளை அறியலாம் என்ற ஆவலுடன்... 



--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Saranya Gurumurthy

unread,
Sep 1, 2017, 11:24:05 AM9/1/17
to santhav...@googlegroups.com
Thank you Shri. Ganesan sir and Shri. Sivasiva sir.

For that இபமுக / இதமுக, I will go with Sivasiva sir's suggestion. 

பணைமர நிழலினை மிகவிழை இதமுக! 
...பணிதனை அரையினில் அணிவோனே 

பணையதன் நிழலினை இடமென  விழைபவ! 
...பணிதனை அரையினில் அணிவோனே..

பணை itself is அரசமரம். So instead of பணைமரம் which duplicates the word மரம், I will change like பணையதன்..

/பரிபுரம் அணிபதம் அதைஎளி யனெனது
..பவவினை குவையற இடுவாயோ/ 

/
பதத்தை எங்கே இடவேண்டும்?/

I thought in general பதத்தை இடுதல் implies it is on our head. 

Will see a way with His grace.

Saranya. 


On 1 Sep 2017 18:18, "Siva Siva" <naya...@gmail.com> wrote:
Nice effort.


Saranya Gurumurthy

unread,
Sep 1, 2017, 12:04:43 PM9/1/17
to santhav...@googlegroups.com
Sir..

I got like this... 

பரிபுரம் அணிபதம் அதைஎளி யனெனது 
.பவமற முடிமிசை இடுவாயோ

பவவினை மலையற - implies மலையைப் போன்ற பிறவி வினை முற்றுப்பெற.

Now பவமற implies பிறவி முற்றுப்பெற.

முடிமிசை - தலை மேல்.

Is this OK now? 

Saranya. 

N. Ganesan

unread,
Sep 1, 2017, 1:07:39 PM9/1/17
to Santhavasantham
பலரும் சொல்லிவிட்டார்கள். உங்களுக்கு இதமானவை தேர்ந்து பாடலின் இறுதிவடிவம் என ஒன்று தாருங்கள்.

வல்லமை இதழில் நரமுக கணபதி என எழுதும் கட்டுரையில் புலவர் ஐயா, கவிஞர் சிவசூரி, நீங்கள் இயற்றிய பாடல்களைத் தொத்து வெளியிட ஆவல். நன்றி.

நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 1, 2017, 1:57:31 PM9/1/17
to சந்தவசந்தம்
பவமற முடிமிசை இடுவாயோ - பதத்தைச் சிரத்தில் இடுவது  அழகான அமைப்பு. 

இதமுக என்பதற்குப் பதிலாக, (பணைமர நிழலினை மிகவிழை) இளமுக என்றும் அமைக்கலாம். சிவசிவா சொன்னபடியும் மாற்றலாம்.


எவ்வாறாயினும்:


பொருத்தம் கருதிப் புதியதொர் சொல்லைப் பொறுக்குதற்கு

வருத்தம் வராமலொர் வாய்ப்புக் கிடைத்தது மன்றினிலே

நிருத்தம் புரிவோன் மகவை மறுபடி நெஞ்சினிலே

பொருத்த எனமனம் பூரித் தவனருள் போற்றுவமே!


பொதுவாக, இட்ட பாடலைத் திருத்தியமைக்க நாம் செய்யும் முயற்சி நம்மை யாப்பிலக்கணம், சொல்/பொருளாட்சி ஆகியவற்றில் மேலும் மூழ்கவைப்பதை ஒரு இனிய அனுபவமாகக் கருதி மகிழலாம். 


அனந்த் 1-9-2017    

Saranya Gurumurthy

unread,
Sep 1, 2017, 11:07:34 PM9/1/17
to santhav...@googlegroups.com
கருத்துகளைத் தெரிவித்து உரிய திருத்தங்களைச் செய்ய உதவிய அனைத்து ஆசிரிய பெருமகனார்களுக்கும் எனது பணிவான நன்றிகள். 

இந்தக் குழுவில் எனக்கும் ஒரு இடம் கிடைத்தது நான் செய்த  பெரும் பாக்கியம். 

பாடலில் திருத்தங்கள் செய்து இதோ இடுகிறேன். 

நன்றுடையான் கோயில் நரமுக கணபதி 

சந்தம்:
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதான

அருமலர் கொடுநிதம் அடிபணி பவரவர்
..அடைதுயர் களையழி அதிதீரா!!

.அறுகுடன் அரிசியும் அவல்பொரி அளியிட
...அறிவெனும் ஒளிதரும் அருளாழீ

நரைவிடை யினிலமர் நிருமல! எழிலொலி
..நதிபுனை சிவனுமை புதல்வோனே!
.நறைமலர் மழுதளை இவையணி கரமுடை
...நரமுக கணபதி அருள்வாயே!!

பரிபுரம் அணிபதம் அதைஎளி யனெனது
..பவமற முடிமிசை இடுவாயோ
.பணையதன் நிழலினை இடமென விழைபவ!
...பணிதனை அரையினில் அணிவோனே

திரிசிர கிரியதன் அடியமர் குணபர
..திடமிக வுடைவடி வழகோனே
.செறிவுடை வயல்நிறை வளவனின் நகருறை
...திருமிக அருளிடும் இறையோனே

அன்புடன், 
சரண்யா. 

N. Ganesan

unread,
Sep 1, 2017, 11:27:37 PM9/1/17
to Santhavasantham
வாழ்க!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Sep 2, 2017, 3:36:21 AM9/2/17
to santhav...@googlegroups.com
மலைக்கோட்டை மாந்தர்முக கணபதி மேல் இன்னுமொன்று:

தந்த மின்றி இந்து மின்றி
முந்தி நீளும் கையும் இன்றி
வந்த மர்ந்த பிள்ளை யாரின் சிந்தைமீதே

அந்த மின்றி ஆதி யின்றி 
பந்த மின்றி ஆடு கின்ற
தந்தை முன்னம் தாயு மான தன்மையாலே 

விந்தை யான தந்தை யோடு
சொந்த மென்ன சொல்வ னென்று
மந்த காசம் சிந்து வண்ண மின்னலாரே

முந்தி வந்த மோக மென்னும்
சிந்து நீந்த வேண்டு மென்று
வந்து நின்ற அன்பர் நெஞ்சின் தோணியாமே!


2)

மின்னும் வெய்யில் மேனி தீண்ட 
இன்னும் வேகம் பாய்ந்து செல்லும்
பொன்னி வந்து பூசை செய்யும் புனிதபூமி

அன்ற மர்ந்த ஐயன் உன்னை 
நன்று நேரில் கொஞ்ச வேண்டி
அன்பர் கோடி வந்து காணும் மனிதசாமி

அன்னை மேனி மஞ்ச ளோடு
மின்னும் வாச கந்த மோடு
நன்கு செய்த பிள்ளை யுன்றன் அருளாலே

என்றும் இன்பம் பொங்க வேண்டி
மன்றில் நாங்கள் வேண்டு வண்ணம்
இன்றும் சந்தம் நல்கு கின்ற பிள்ளையாரே!


சிவசூரி.

Saranya Gurumurthy

unread,
Sep 2, 2017, 6:03:32 AM9/2/17
to santhav...@googlegroups.com
அருமை. அபாரம். அற்புதம். 

படிக்கும் போதே சிந்துபைரவி ராகத்தில் மெட்டு அமைந்துவிட்டது. 

சரண்யா. 

Lalitha & Suryanarayanan

unread,
Sep 2, 2017, 7:33:48 PM9/2/17
to santhav...@googlegroups.com
​உங்கள் பாராட்டுக்கும் உற்சாகத்துக்கும் மிக்க நன்றி. முடிந்தால் நீங்கள் அமைத்துள்ள மெட்டில் பாடி அனுப்புங்களேன். நன்றி.

சிவசூரி.​

Venkatachalam Subramanian

unread,
Sep 3, 2017, 3:33:26 AM9/3/17
to santhav...@googlegroups.com
Inline image 1
                        This is Aadhi vinayagar in Poonthotam near Kumbakonam..This temple is also one where Lord Ganpathy does not have an elephant head..V.Subramanian Aum

Saranya Gurumurthy

unread,
Sep 3, 2017, 7:19:44 AM9/3/17
to santhav...@googlegroups.com
Dear sir,

Here is the recording of தந்தமின்றி... in சிந்துபைரவி ராகம்.
Thanthamindri_sindhubhairavi.mp3

Saranya Gurumurthy

unread,
Sep 3, 2017, 7:22:44 AM9/3/17
to santhav...@googlegroups.com
வணக்கம். 

சிவசூரி ஐயா அவர்களின் பாடலைப் பதிவு செய்து முந்தைய மடலில் அனுப்பினேன். 

இந்த மடலில் அடியேனின் அருமலர் கொடுநிதம் என்ற நரமுக கணபதியின் பாடலை, கானடா ராகத்தில் பாடி இணைத்துள்ளேன். 

நன்றி. 

சரண்யா. 
Arumalar_kaanadaa.mp3

Siva Siva

unread,
Sep 3, 2017, 8:22:41 AM9/3/17
to santhavasantham
Nice.

In future, you can consider uploading any such audio clips or other large files - on google drive and share it via a link. That way, the mail will not have any large attachment. Also, it will be easy for you to make any subsequent tweaks (by just uploading a new version of the file to google drive).

Pas Pasupathy

unread,
Sep 3, 2017, 8:32:42 AM9/3/17
to Santhavasantham
'சிந்துபைரவி’ ‘கானடா’ ..இரண்டும் அருமையாய் இருக்கின்றன! 

2017-09-03 7:19 GMT-04:00 Saranya Gurumurthy <saranya.g...@gmail.com>:
Dear sir,

Here is the recording of தந்தமின்றி... in சிந்துபைரவி ராகம்.

Saranya Gurumurthy

unread,
Sep 3, 2017, 8:44:27 AM9/3/17
to santhav...@googlegroups.com
On 3 Sep 2017 17:52, "Siva Siva" <naya...@gmail.com> wrote:
Nice.

In future, you can consider uploading any such audio clips or other large files - on google drive and share it via a link. That way, the mail will not have any large attachment. Also, it will be easy for you to make any subsequent tweaks (by just uploading a new version of the file to google drive).

Thank you sir. 
Sure. I will.

On 3 Sep 2017 18:02, "Pas Pasupathy" <pas.pa...@gmail.com> wrote:
'சிந்துபைரவி’ ‘கானடா’ ..இரண்டும் அருமையாய் இருக்கின்றன! 

Thank you Pasupathy sir.

Saranya. 

Lalitha & Suryanarayanan

unread,
Sep 3, 2017, 8:57:05 AM9/3/17
to santhav...@googlegroups.com
மிக அருமையாகப் பாடியுள்ளீர்கள். இரண்டு பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தேன். பிரதோஷ நாளில் கேட்டு ஆனந்தப் பட்டேன்.. மிக்க நன்றி.

சிவசூரி.

N. Ganesan

unread,
Sep 3, 2017, 10:18:33 AM9/3/17
to Santhavasantham
Very nice.

Anbudan
N. Ganesan

--

Saranya Gurumurthy

unread,
Sep 3, 2017, 10:47:19 AM9/3/17
to santhav...@googlegroups.com
On 3 Sep 2017 18:27, "Lalitha & Suryanarayanan" <lall...@gmail.com> wrote:
மிக அருமையாகப் பாடியுள்ளீர்கள். இரண்டு பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தேன். பிரதோஷ நாளில் கேட்டு ஆனந்தப் பட்டேன்.. மிக்க நன்றி.

சிவசூரி.


நன்றி ஐயா. 

On 3 Sep 2017 19:48, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
Very nice.

Anbudan
N. Ganesan


Thank you sir.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 3, 2017, 5:19:09 PM9/3/17
to சந்தவசந்தம்
Just heard the two recordings. Very nicely sung. 

ananth 

Saranya Gurumurthy

unread,
Sep 3, 2017, 10:12:51 PM9/3/17
to santhav...@googlegroups.com
Thank you sir! 

Swaminathan Sankaran

unread,
Sep 3, 2017, 10:29:54 PM9/3/17
to santhav...@googlegroups.com
உங்கள் இரண்டு கவிதைகள்,இரு இசைப் பாடல்கள் (கானடா, சிந்துபைரவி) எல்லாம் மிக அருமை.
பாடல்களசி மிகவும் ரசித்த்தேன்.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 Swaminathan Sankaran

Saranya Gurumurthy

unread,
Sep 3, 2017, 10:48:10 PM9/3/17
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா. 

உங்கள் அனைவரின் பாராட்டுகள், அடியேனுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. 

சிந்து பைரவி பாடல் சிவசூரி ஐயா அவர்களின் படைப்பு. 

அன்புடன், 
சரண்யா. 

N. Ganesan

unread,
Sep 5, 2017, 11:04:28 AM9/5/17
to சந்தவசந்தம்


On Wednesday, August 30, 2017 at 3:58:45 AM UTC-7, Lalitha and Suryanarayanan wrote:
திலதையில் இருக்கும் மாந்தர்முக கணபதி

மஞ்சள்இஞ்சி வாழைசாலி  மலிந்திருக்கும் - எங்கும்
கொஞ்சுமொழி வஞ்சியரின் குரலொலிக்கும்
மஞ்சுவந்து மண்ணிறங்கித் தமிழ்பயிலும் - எங்கள் 
மயிலாடு துறையருகில் மணங்கமழும் - நல்ல
செஞ்சொலொலி கேட்டிருக்கும் திலதபதி - ஒளிச்
சித்திரத்தில் இட்டதுபோல் திகழ்ந்திருந்தும்
பஞ்சமின்றிப் பாய்ந்திருக்கும் அரசலாற்றின் - எழில்
பார்த்திருக்கும் நமையென்றும் ஈர்த்திருக்கும்.

வாசமலர் வரவேற்கும் பூந்தோட்டம் - கண்டு
வண்டமிழில் பாவடிக்கும் கூத்தனூரில்
பேசுமொழி ஈவதற்கே கோவில்கொண்ட -  அந்தப்
பிரமனவன் தேவியவள் கொலுவழகை
ஆசையுடன் கண்டுவந்த கணபதியே -  ஒரு
ஆனைமுகம் ஏற்குமுனம் வந்தமர்ந்தே
ஈசனருள் சிந்துகின்ற திலதபதி  -  இன்றும்
இன்னருளைப் பொழிந்துநமைக் காத்திருக்கும்.

பண்முறையை அறிந்தவர்கள் நிறைந்திருக்கும் -  நம்
பைந்தமிழின் இசையெல்லாம் பொழிந்திருக்கும்
நுண்ணறிவு பிறப்பினிலே சேர்ந்திருக்கும் - பெரும்
நூலறிவும் கல்லாமல் ஓர்ந்திருக்கும்
உண்மையுணர்ந் தோர்கள்பலர் வாழ்ந்திருக்கும் - ஓர்
ஒப்பில்லாச் சிற்றூராம் திலதபதி
மண்ணுலகில் ஏற்றமுடன் திகழ்வதுவும் - அந்த
மாந்தர்முகப் பிள்ளையாரின் வரமென்பரே.

சிவசூரி.


புலவர் இராம. இராமமூர்த்தி, கவிஞர் சிவசூரி, சரண்யா குருமூர்த்தி அழகான பாடல்களை நரமுக கணபதி தோத்திரங்களாகத் தந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி. அரிய கணபதி வடிவம் பழமையான சோழர்கால சிற்பங்களாக நம் தலைமுறைக்கு வழிபாட்டுக்கு வழிவழி வந்துள்ளது. முக்கியமாக, தில்லை, திருச்சி, திலதை மாந்தர்முக கணபதி வடிவங்கள் அருமையானவை.

சடாமுடி தட்சிணாமூர்த்தி போல அமைந்து, நான்கு திருக்கரங்களுடன், (பின்னிரு கரங்கள் பாச அங்குசம்) விளங்கும் திலதைப்பதி மாந்தர்முக கணபதிக்கு ஆதி விநாயகர் என்ற பெயரும் உண்டு. அதாவது, கஜ ஆநனம் அடைவதன் முன்னம் இருந்த வடிவம் என்று அத்தலத்தில் விளக்குகின்றனர். ஆதி = முதல்வடிவம் இது. பின்னர் யானைத்தலை என்பது வரலாறு. திலதைப் பதி ஆதிவிநாயகரின் அபயஹஸ்தம் கங்கைகொண்ட சோழபுரத்து நடராஜாவின் அபயஹஸ்த திருக்கரத்தை நினைவூட்டுகிறது:

திலதைப்பதி தலபுராணம் யாழ்ப்பாணம் சி. நாகலிங்கம்பிள்ளை பாடியுள்ளார்கள். 1941-ஆம் ஆண்டு அச்சாகியது. அது மீள்பதிப்பு ஆதிவிநாயகர் அருளால்
ஆகவேண்டும். சீர்பிரித்தும், மர்ரே எஸ். ராஜம் பதிப்பு போல சொற்பிரித்து, தரிப்புக்குறியிட்டும் ,குறிப்புரையுடனாவது அச்சாகவேண்டும். 2000 தலபுராணங்கள் தமிழில் இருக்கலாம். அவை மீள் அச்சும் கணினியாக்கமும் செய்தால் பல சமயச்செய்திகள், தமிழ்ச் சான்றுகள், சொல்வளம், தொன்மை தெரியவரும். என்று நடக்குமோ?

திலதைப்பதி தலபுராணத்தில் உள்ள
ஆதி விநாயகர் துதி

அங்குமாய் இங்கும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஆனைத்
துங்க முகமுந் தூய துதிக்கரம் தானு மின்றிப்
பங்கயப் பழன வேலித் திலதையாம் பதியின் மேவும்
புங்கவன் ஆதிநாதன் புதுமலர்த் தாள்கள் போற்றி!

அன்புடன்,
நா. கணேசன்

 
 

2017-08-29 19:21 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தமிழ்நாட்டிலே மூன்று கோவில்களிலே நரமுக கணபதி வீற்றிருக்கிறார்.  யானைத்தலை அடைவதன் முன்னர் இருந்த வடிவம். சோழர் காலச் சிற்பங்கள். தில்லை, திருச்சி, திலதைப்பதி. காஞ்சிப் பெரியவர்கள் உரையிலே அடிக்கடி குறிப்பிடுவார். அவற்றில் சிலவற்றை இணைத்துள்ளேன். 

 

N. Ganesan

unread,
Sep 6, 2017, 10:20:42 AM9/6/17
to சந்தவசந்தம்
நன்றி, தோத்தாத்திரி ஐயா. ஆதிவிநாயகரின் திருவுருவப் படத்திற்கு.

சங்க இலக்கியம் தந்த உவேசா திருத்தலங்களைக் குறித்து எழுதினவற்றை எல்லாம் தொகுத்து
நூலாக உவேசா நூலகம், கலாக்ஷேத்திரம், அடையாறு அச்சுப்போட்டுள்ளார்கள்.
உவேசா திலதைப்பதியின் ஆதிவிநாயகர் பற்றியும், துதிக்கை இல்லாமை
பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நா. கணேசன்

On Sunday, September 3, 2017 at 12:33:26 AM UTC-7, v.dotthusg wrote:
Inline image 1
                        This is Aadhi vinayagar in Poonthotam near Kumbakonam..This temple is also one where Lord Ganpathy does not have an elephant head..V.Subramanian Aum
2017-09-03 5:03 GMT+05:30 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
​உங்கள் பாராட்டுக்கும் உற்சாகத்துக்கும் மிக்க நன்றி. முடிந்தால் நீங்கள் அமைத்துள்ள மெட்டில் பாடி அனுப்புங்களேன். நன்றி.

சிவசூரி.​

2017-09-02 15:33 GMT+05:30 Saranya Gurumurthy <saranya.g...@gmail.com>:
அருமை. அபாரம். அற்புதம். 

படிக்கும் போதே சிந்துபைரவி ராகத்தில் மெட்டு அமைந்துவிட்டது. 

சரண்யா. 

On 2 Sep 2017 13:06, "Lalitha & Suryanarayanan" <lall...@gmail.com> wrote:
மலைக்கோட்டை மாந்தர்முக கணபதி மேல் இன்னுமொன்று:

தந்த மின்றி இந்து மின்றி
முந்தி நீளும் கையும் இன்றி
வந்த மர்ந்த பிள்ளை யாரின் சிந்தைமீதே


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 8, 2017, 10:32:54 AM9/8/17
to Santhavasantham
விகடனில் வெளியாகியுள்ள திலதைப்பதி நரமுக கணபதி வடிவத்தில் நான்கு கரங்கள் தெளிவு. நான்குகர நரமுக கணபதியின் அபிடேக காலங்களில் பாச, அங்குசங்களுடன் பின்னிருகரங்கள் விநாயகர் எனக் காட்டுவன. முன்னிரு கரங்கள்: வலக்கை அபயஹஸ்தம், இடக்கை தொடையின் மீது. இதனை ஆனந்த முத்திரை என்பர். நன்கு காணொளிகளில் தரிசிக்கலாம். நரமுக கணபதி தில்லை, திருச்சி, திலதை இவ்வூர்களில் புகழ்பெற்ற மூர்த்தங்கள்.

சங்க இலக்கியம் தந்த உவேசா திருத்தலங்களைக் குறித்து எழுதினவற்றை எல்லாம் தொகுத்து
நூலாக உவேசா நூலகம், கலாக்ஷேத்திரம், அடையாறு அச்சுப்போட்டுள்ளார்கள்.
உவேசா திலதைப்பதியின் ஆதிவிநாயகர் பற்றியும், துதிக்கை இல்லாமை
பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள்.
திலதைப்பதி தலபுராணம் யாழ்ப்பாணம் சி. நாகலிங்கம்பிள்ளை பாடியுள்ளார்கள். 1941-ஆம் ஆண்டு அச்சாகியது. அது மீள்பதிப்பு ஆதிவிநாயகர் அருளால்
ஆகவேண்டும். சீர்பிரித்தும், மர்ரே எஸ். ராஜம் பதிப்பு போல சொற்பிரித்து, தரிப்புக்குறியிட்டும் ,குறிப்புரையுடனாவது அச்சாகவேண்டும். 2000 தலபுராணங்கள் தமிழில் இருக்கலாம். அவை மீள் அச்சும் கணினியாக்கமும் செய்தால் பல சமயச்செய்திகள், தமிழ்ச் சான்றுகள், சொல்வளம், தொன்மை தெரியவரும். என்று நடக்குமோ?

திலதைப்பதி தலபுராணத்தில் உள்ள
ஆதி விநாயகர் துதி

அங்குமாய் இங்கும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஆனைத்
துங்க முகமுந் தூய துதிக்கரம் தானு மின்றிப்
பங்கயப் பழன வேலித் திலதையாம் பதியின் மேவும்
புங்கவன் ஆதிநாதன் புதுமலர்த் தாள்கள் போற்றி!

திலதர்ப்பணபுரியில் நரமுக விநாயகர் - ஓர் ஓவியம்:
2010 வலைப்பதிவு: http://maragadham.blogspot.com/2010/10/blog-post_07.html







2017-09-06 21:28 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
விகடன்: நாலு கரங்களுடன் நரமுக கணபதி (திலதைப்பதி)

On Wednesday, September 6, 2017 at 12:43:28 AM UTC-7, V.dotthathri wrote:
Inline image 1

​ 
​ This is Aadhi vinayagar in Poonthotam near Kumbakonam..The  temple  where Lord Ganpathy does not have an elephant head..
வாசமலர் வரவேற்கும் பூந்தோட்டம் - கண்டு
வண்டமிழில் பாவடிக்கும் கூத்தனூரில்
பேசுமொழி ஈவதற்கே கோவில்கொண்ட -  அந்தப்
பிரமனவன் தேவியவள் கொலுவழகை
ஆசையுடன் கண்டுவந்த கணபதியே -  ஒரு
ஆனைமுகம் ஏற்குமுனம் வந்தமர்ந்தே
ஈசனருள் சிந்துகின்ற திலதபதி  -  இன்றும்
இன்னருளைப் பொழிந்துநமைக் காத்திருக்கும்.

பண்முறையை அறிந்தவர்கள் நிறைந்திருக்கும் -  நம்
பைந்தமிழின் இசையெல்லாம் பொழிந்திருக்கும்
நுண்ணறிவு பிறப்பினிலே சேர்ந்திருக்கும் - பெரும்
நூலறிவும் கல்லாமல் ஓர்ந்திருக்கும்
உண்மையுணர்ந் தோர்கள்பலர் வாழ்ந்திருக்கும் - ஓர்
ஒப்பில்லாச் சிற்றூராம் திலதபதி
மண்ணுலகில் ஏற்றமுடன் திகழ்வதுவும் - அந்த
மாந்தர்முகப் பிள்ளையாரின் வரமென்பரே.

சிவசூரி.


N. Ganesan

unread,
Sep 9, 2017, 12:42:30 PM9/9/17
to Santhavasantham
திருச்சியில் அரிய நரமுக விநாயகர் வணங்கப்பெறுகிறார்
இரண்டு கரங்கள்: இடக்கை மோதகம், வலைக்கையில் அங்குசம்.
கணங்களின் பதி எனக் காட்டும் கோரைப்பற்கள்.


விபூதி அலங்காரத்துடன் நரமுக கணபதி (திருச்சி):



நன்றுடையான் கோயில் நரமுக கணபதி திருப்புகழ்

சந்தம்:
தனதன தனதன தனதன தனதன 
தனதன தனதன தனதான 

அருமலர் கொடுநிதம் அடிபணி பவரவர்
..அடைதுயர் களையழி அதிதீரா!!
.அறுகுடன் அரிசியும் அவல்பொரி அளியிட
...அறிவெனும் ஒளிதரும் அருளாழீ

நரைவிடை யினிலமர் நிருமல! எழிலொலி
..நதிபுனை சிவனுமை புதல்வோனே!
.நறைமலர் மழுதளை இவையணி கரமுடை
...நரமுக கணபதி அருள்வாயே!!

பரிபுரம் அணிபதம் அதைஎளி யனெனது
..பவமற முடிமிசை இடுவாயோ
.பணையதன் நிழலினை இடமென விழைபவ! 
...பணிதனை அரையினில் அணிவோனே 

திரிசிர கிரியதன் அடியமர் குணபர
..திடமிக வுடைவடி வழகோனே 
.செறிவுடை வயல்நிறை வளவனின் நகருறை
...திருமிக அருளிடும் இறையோனே 

   அன்புடன், 
    சரண்யா குருமூர்த்தி

தில்லை, திலதை, திருச்சி, செங்காட்டங்குடி என
நான்கு தேவார தலங்களில் பழமையான நரமுக கணபதி வழிபடப்பெறுகிறார்.

சரண்யா குருமூர்த்திக்கு என் வாழ்த்தும் வணக்கமும்.

நா. கணேசன்


Saranya Gurumurthy

unread,
Sep 9, 2017, 11:36:52 PM9/9/17
to santhav...@googlegroups.com
நன்றி ஐயா. உங்கள் ஆசிர்வாதம் அடியேனுக்குக் கிடைத்த பெரும் வரம்.

சரண்யா. 
Reply all
Reply to author
Forward
0 new messages