விருத்தத்தில் வெண்டளை பயின்று வருகிற விருத்தங்கள் உண்டு..தேவார திருவாசக காலத்தில் விருத்தங்கள் இப்பொழுதுள்ள விருத்தங்களுக்கு முன்னோடிகள். அவற்றைப் பிற்காலப் புலவர்கள் இன்னும் கட்டுக்கொப்புக்குள் கொண்டு வந்து இலக்கணம் இயற்றினார்கள்.தேவாரத்தை விடத் திருவாசகத்தில் விருத்தங்கள் செப்பமாக இருக்கும்.சரி. உங்கள் உதாரண விருத்தங்களைப் பார்க்கலாம்.நேரசையில் தொடங்கினால் 8 எழுத்துகளும் நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்துகளும் வரும். அப்படித்தான் வருகிறது.. அடுத்து வெண்டளை பிறழ்வதாகச் சொல்லும் பாடலில் அது வெண்டளை பிறழ்தல் இல்லை. அதற்கு விட்டிசைத்தல் என்று பெயர். து என்ற எழுத்தை நேரசையாகக் கொள்ளவேண்டும்.. 8 எழுத்துகள் சரியாக இருக்கும் பாருங்கள்.இலந்தை
On 5/8/09, Siva Siva <naya...@gmail.com> wrote:இன்று திருவாசகத்தில் குயிற்பத்து என்ற பகுதியில் சில பாடல்களைப் பார்த்தேன். இப்பகுதி 'அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' என்று குறிப்பிடப்பெற்றுள்ளது. ஆனால், இதன் அமைப்பு எனக்குப் புரியவில்லை. இதன் வாய்பாடு / விதிகள் என்ன?
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=8118&padhi=25&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95
நல்ல விளக்கம். நன்றி.
இத்தகைய விருத்தங்கள் இப்பொழுதும் எழுதப்பெறுகின்றனவா?
Summary: வெண்டளை
அறுசீர் விருத்தம்:
1.
அரையடியில்
வெண்டளை பயிலும்.
( 3-ஆம்
சீருக்கும் 4-ஆம்
சீருக்கும் இடையே வெண்டளை
இருக்கவேண்டியது இல்லை.)
2.
அரையடி
நேரசையில்
தொடங்கினால் 8
எழுத்துகளும்,
நிரையசையில்
தொடங்கினால் 9
எழுத்துகளும்
வரும்.
3.
அரையடியின்
ஈற்றுச் சீர் 'மா'ச்சீராக
இருக்கும்.
4. மற்ற இரு சீர்கள் மா / விளம். விளத்திற்குப்
பதிலாய் மாங்காய்ச்சீரும்
வரலாம்.
---
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2009/5/10 Siva Siva <naya...@gmail.com>
நல்ல விளக்கம். நன்றி.
இத்தகைய விருத்தங்கள் இப்பொழுதும் எழுதப்பெறுகின்றனவா?ஓர் காட்டு:எப்போதோ அனந்த் வெண்டளை பயிலும் அறுசீர் பற்றிக் கேட்ட கேள்விக்குப் பதிலாக நான் ஒரு மடல் எழுதினேன்.அதைத் தொடர்ந்து யாகூ மடற்குழுவில் பல மடல்களும் எழுதப் பட்டன என்றும் நினைவு.(அண்மையில், இலந்தை தலைமை வகித்த புதுவைக் கவியரங்கில் 'வெண்டளை' அறுசீர் பார்த்த நினைவு. )பசுபதி10-5-09
வெண்டளை காணும் விருத்தமெலாம்
வேண்டும் எனிலோ இலக்கியத்தில்
கண்டு மொழியப் பலவுளவே
காட்ட இயலா தொளிந்துளவால்
விண்டு கொடுக்க வகைபலவாய்
மேவிடு காய்ச்சீர் உளவதனால்
கொண்டு நிறைத்திடு காய்வகையால்
கூடும் குறையும் எழுத்துகளே!
வெண்டளை பயின்று வரும் அறுசீர் விருத்தங்கள் பலவுண்டு. காய்ச்சீர்கள் விளங்காய்க்கு விளங்காயாகவும் மாங்காய் வந்தால் எல்லாம் மாங்காயாகவும் வந்தால்க அமையும் போது எழுத்தெண்னிக்கை ஒத்துவரும் . இல்லையென்றால் மாறுபடும். எனவே எழுத்தெண்ணிக்கை அவ்வளவு முக்கியமில்லை. வெண்டளையில் நல்ல ஓசையுடன் அமைவதுதான் முக்கியம்
எ.கா மேலே கண்ட விருத்தத்தை முழுக்க முழுக்க வெண்டளை பயின்று வருகிறது. காய்ச்சீர்கள் விளங்காய்ச் சீர்கள்.. எந்தவகை விளங்காய் என்பதை அதர்கு முந்திய சீர் தீர்மானித்துக்கொள்ளும்.
ஒவ்வோரடிக்கும் 10 எழுத்துகள்.
இதையே சற்று மாற்றி
வெண்டளை காணும் விருத்தங்கள்
வேண்டும் எனிலோ இலக்கியத்தில்
கண்டு மொழியப் பலவுண்டு
காட்ட இயலா தொளிந்துளவால்
கொண்டு நிறைக்கும் வகைக்காயால்
கூடும் குறையும் எழுத்துகளே!
இதிலே காய்ச்சீரின் மாறுபாட்டால் எழுத்தெண்ணிக்கை ஒத்துவரவில்லை. வெண்டளை பிறழவில்லை என்பதறிக!
இலந்தை