பழமொழிகளில் அறிவியல்

3,120 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
Jun 4, 2012, 2:36:47 PM6/4/12
to santhav...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
எல்லார்க்கும் வணக்கம், 

நம் முன்னோர்கள் நமக்கு பல பழமொழிகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள். 
ஆனால், அவை உண்மையான பொருளில் இன்று வழங்கப்படுவதில்லை.

காட்டுக்கு,

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று ஒரு பழமொழி உண்டு.

இதன் உண்மையான அர்த்தம் சூரியனுக்கு அருகில் புதன் இருப்பதால் (Mercury) இருப்பதால் அதைப் பார்க்க முடியாது என்பதாகும். 

ஆனால், இதற்கு இன்று வழங்கி வரும் அர்த்தமே வேறு. 

அதே போல அறிவியல் பார்வையில் நம் முன்னோர்கள் பல பழமொழிகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

அத்தகைய  பழமொழிகளையும் , அதன் விளக்கங்களையும் யாரேனும் தர இயலுமா ? (Idioms and Phrases கூட இருக்கலாம் )

அன்புடன்,
நிரஞ்சன் 




Balasubramanian N.

unread,
Jun 7, 2012, 9:05:47 AM6/7/12
to santhav...@googlegroups.com
ஆமாமா!
 
௧. "துள்ளிக்குதிச்ச மூஞ்சூரு...", 
௨. "குருவிக்குத்தக்க ராமேஸ்வரம்",
௩. "களவுங்கத்து மற!"
௪. " ஊரைச் சொன்னாலும் பேரைச்சொல்லாதே!"

௫ ."ஏற்கெனவே மாமியார் பேய்க்கோலம், அதிலயும்     அக்லிபுக்லி"

 

முதலியவற்றையும் எடுத்து அலசலாமே ப்ளீஸ்!
 

ஆடல்மன்.இளமுருகு



2012/6/5 Niranjan Bharathi <niranjan...@gmail.com>




--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Hari Krishnan

unread,
Jun 7, 2012, 11:48:58 AM6/7/12
to santhav...@googlegroups.com


2012/6/7 Balasubramanian N. <n.balasu...@gmail.com>

௨. "குருவிக்குத்தக்க ராமேஸ்வரம்",

குருவிக்குத் தக்கின ராமேஸ்வரம் என்று வழக்கு மொழியாக உலவி வந்துகொண்டிருந்தது.  (இப்போதுதான் பழமொழிகளைக் கேட்பதே இயலாத ஒன்றாக இருக்கிறதே!)  இந்தப் பழமொழியில், ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டை என்பது போன்ற பொருள் தொனிக்கிறதா?  அதாவது பணக்காரங்களுக்கு ஆப்பிள் அப்படின்னா, ஏழைகளுக்கு நெல்லிக்காய் என்பது போலத் தோன்றுகிறதா?

ராமகிருஷ்ணா பள்ளி தமிழாசிரியர் திரு வரதராஜன் அவர்கள் சொன்ன விளக்கம்.  அதாவது நான் படித்த காலத்தில்.  இந்தப் பழமொழியின் ஒரிஜினல் வடிவம் ‘குறிவைக்கத் தைக்கும் ராம சரம்‘.  அதாவது hitting the nail on its head. 
--
அன்புடன்,
ஹரிகி.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 7, 2012, 12:09:09 PM6/7/12
to santhav...@googlegroups.com
‘குறிவைக்கத் தைக்கும் ராம சரம்‘-  பொருள் பொருந்தி இருக்கிறது.

என் கற்பனை: ஏழைக்கேத்த எள்ளுருண்டை போல,  குருவிக்குத் தக்கின/தக்ஷிண ராமேஸ்வரம் (and, by implication, பருந்துக்கு உத்தர காசி!) என்னலாமோ?

:-))))

அனந்த்

2012/6/7 Hari Krishnan <hari.har...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Jun 7, 2012, 7:37:27 PM6/7/12
to santhav...@googlegroups.com
சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா என்பது மருவி சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்று ஆகிவிட்டது.  புலவர் வெற்றியழகன் இப்படி மருவி வரும் முதுமொழிகளை விளக்கி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர் நினைவில் இல்லை. நான் படித்திருக்கிறேன்.

இலந்தை



2012/6/7 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Pas Pasupathy

unread,
Jun 7, 2012, 8:15:05 PM6/7/12
to santhav...@googlegroups.com
புலவர் வெற்றியழகன் " உரைக்கும் பொருளும் உண்மைப் பொருளும்” என்ற ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதுவாக இருக்கலாமோ?


2012/6/7 Subbaier Ramasami <elan...@gmail.com>

Pas Pasupathy

unread,
Jun 7, 2012, 8:21:02 PM6/7/12
to santhav...@googlegroups.com
” தமிழ்ப் பழமொழிகளில் அறிவியல்” 

Subbaier Ramasami

unread,
Jun 7, 2012, 9:11:00 PM6/7/12
to santhav...@googlegroups.com
அதுவேதான் !

இலந்தை

2012/6/8 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Niranjan Bharathi

unread,
Jun 7, 2012, 10:11:18 PM6/7/12
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா !!!

2012/6/7 Subbaier Ramasami <elan...@gmail.com>



--
http://www.facebook.com/TamilMattumPesuvom

Balasubramanian N.

unread,
Jun 8, 2012, 5:37:24 AM6/8/12
to santhav...@googlegroups.com
சும்மாயிருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!
ட! இது மருவல் கிருவல் அல்ல, என்னைப் பற்றி நானே சொல்லிக்கொள்வது!

அநந்துக்கு 100 மார்க்!

 அப்பரம்... ஏற்கெனவே நம்ம ராஜரங்கன் காலத்திலயே போட்ட "மண் குதிரைய நம்பி ஆத்துல எறங்கின" கதையத் திரும்ப அலசலாமா?



2012/6/8 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

Niranjan Bharathi

unread,
Jun 8, 2012, 10:39:10 AM6/8/12
to santhav...@googlegroups.com
இந்த நூல் அந்த புத்தக நிலையத்தில் இல்லையாம் ?

2012/6/8 Balasubramanian N. <n.balasu...@gmail.com>



--
http://www.facebook.com/TamilMattumPesuvom
330.gif

Balasubramanian N.

unread,
Jun 8, 2012, 1:18:16 PM6/8/12
to santhav...@googlegroups.com

அது சரி, மத்த பழமொழிங்கள்லாம் என்னாச்சு? டைம் அப்! அடுத்த பிரதோஷத்துக்குள் விடைகளை ’இறுத்து’ உடனே சமர்ப்பிக்காவிட்டால், நானே எனக்குத் தெரிந்த மஹாபண்டிதமணி ஒருவரிடம் சொல்லி எழுதிப்போடச்சொல்லிவிடுவேன்!



2012/6/8 Niranjan Bharathi <niranjan...@gmail.com>
330.gif

Narayan Swaminathan

unread,
Jun 8, 2012, 3:13:07 PM6/8/12
to santhav...@googlegroups.com
காலத்துக்கு ஏத்தமாதிரி புதுமொழியும் போடலாமே....



இரும்பு புடிச்சவன் கையும் இணையத்துல எழுதறவன் கையும் சும்மா இருக்காது

ப்ரிண்டர் ப்ரீயா வந்துதாம்; காட்ரிட்ஜ் செலவு கையைக் கடிச்சதாம்

எழுதத் தெரியாதவன் ஃபாண்ட் சைஸ் சரியில்லன்னு சாக்கு சொன்னானாம்

ஹார்ட் டிஸ்கையே அமுக்கிட்டான், பாஸ்வேர்ட் எங்கிட்டதான் இருக்குனு புலம்புவானேன்

கம்ப்யூட்டர் ஸ்லோவா இருக்குனு கால்நடையாப் போனானாம் சேதி சொல்ல

தான் பார்த்தது திருட்டு விடியோ; தயாரிப்பாளருக்கு தாராளமா அறிவுரையாம்

என்னதான் சூப்பர்னே படத்தலைப்பு வெச்சாலும் பார்க்கிற சனம் படம் சூப்பர்னு சொல்லுமா?

எழுதறதை இங்கிலீஷ்ல எழுதினாம்; தமிழ் வளர்கன்னு கோஷம் போட்டானாம் 

கொட்டிக் கொட்டி அளந்தாலும் குவாட்டர் ஃபுல்லாகாது.

பாட்டிலே காலியாயிடுத்தாம், ஐஸ் இல்லியேனு அழுதானாம்

ஃபுல் பாட்டில் தளும்புவது இல்.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

 

2012/6/8 Balasubramanian N. <n.balasu...@gmail.com>
330.gif

Niranjan Bharathi

unread,
Jun 8, 2012, 10:57:27 PM6/8/12
to santhav...@googlegroups.com
வணக்கம்,

நெட்டில் கொஞ்சம் துழாவியதில் சில பழமொழிகள் கிடைத்தன. 
முதலில் நாட்டுப்புற பழமொழிகளில் தொடங்கலாம்.


  1. சித்திரை மழை சின்னப்படுத்தும்
  2. சித்திரை பேய்ஞ்சு கெடுக்கும் பேயாமலும் கெடுக்கும்.
  3. ஆடி அரை மழை ஆடிப்பட்டம் தேடிவிதை


இவற்றுக்கான விளக்கங்களை தர முடியுமா ?

Krishnamoorthy Premkumar

unread,
Jun 9, 2012, 2:21:43 AM6/9/12
to santhav...@googlegroups.com
அருமையான "புதிய' பழமொழிகள்.
{- ப்ரிண்டர் ப்ரீயா வந்துதாம்; காட்ரிட்ஜ் செலவு கையைக் கடிச்சதாம்}
பிரிண்டர் கால்பணம், காட்ரிஜ் செலவு முக்கால் பணம். - இது எப்படி?

பிரேமு 



2012/6/9 Narayan Swaminathan <swaminath...@gmail.com>



--
"நற்றுணை யாவது நமச்சி வாயவே"


330.gif

Kaviyogi Vedham

unread,
Jun 9, 2012, 3:04:47 AM6/9/12
to santhav...@googlegroups.com
அடேங்கப்பா! நம்ம லாஸேஞ்சல் ஸ்வாமினாதன் கிட்ட எவ்வளோ சரக்கு’ இருக்கு! வாழ்க..
யோகியார்

Subbaier Ramasami

unread,
Jun 9, 2012, 7:51:25 AM6/9/12
to santhav...@googlegroups.com
கி.வா ஜ பழமொழிகளைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிட்டிருப்பதாக நினைவு.

இலந்தை

2012/6/8 Subbaier Ramasami <elan...@gmail.com>

Pas Pasupathy

unread,
Jun 9, 2012, 8:44:06 AM6/9/12
to santhav...@googlegroups.com
கி.வா.ஜ வின் தொகுப்பு மிகப் பெரியது; வலையில் கிட்டும்.ஆனால், 
பொருள்/விளக்கம் இருக்காது.

‘களவும் கற்று மற’.....> ‘களவும் அகற்று; மற’.
‘மண் குதிரையை நம்பி ...’ --> ‘மண் குதிரை நம்பி’.....
இப்படிப்பட்ட வேறு விளக்கங்கள் இருக்கலாம் என்பது 
மற்ற நூல்களில்தான் இருக்கும்.

2012/6/9 Subbaier Ramasami <elan...@gmail.com>

Balasubramanian N.

unread,
Jun 12, 2012, 4:40:44 PM6/12/12
to santhav...@googlegroups.com

  Baaa ஷ்! தூக்க்க்கிண்டு போய்ட்டீர் ! எங்கியோ போய்ட்டீர் எல்லேசாமி! எழுக நீ புலவன்! பொறாஆஆமையா இருக்கு!

 

நகுபோலியன்



2012/6/9 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

N. Ganesan

unread,
Jun 15, 2012, 10:30:26 AM6/15/12
to சந்தவசந்தம்
On Jun 9, 5:44 am, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> கி.வா.ஜ வின் தொகுப்பு மிகப் பெரியது; வலையில் கிட்டும்.ஆனால்,
> பொருள்/விளக்கம் இருக்காது.
>

வலையில் கிட்டுகிறதா? வலைக்கண் அளித்தால் நன்றி.

கிவாஜ தொகுத்த தமிழ்ப் பழமொழிகள் நான்கு தொகுதிகளாய்
அல்லயன்ஸ் முன்பு அச்சிட்டது.

நா. கணேசன்

> ‘களவும் கற்று மற’.....> ‘களவும் அகற்று; மற’.
> ‘மண் குதிரையை நம்பி ...’ --> ‘மண் குதிரை நம்பி’.....
> இப்படிப்பட்ட வேறு விளக்கங்கள் இருக்கலாம் என்பது
> மற்ற நூல்களில்தான் இருக்கும்.
>

> 2012/6/9 Subbaier Ramasami <eland...@gmail.com>


>
>
>
>
>
>
>
>
>
> > கி.வா ஜ பழமொழிகளைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிட்டிருப்பதாக நினைவு.
>
> > இலந்தை
>

> > 2012/6/8 Subbaier Ramasami <eland...@gmail.com>


>
> >> அதுவேதான் !
>
> >> இலந்தை
>

> >> 2012/6/8 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>


>
> >>> புலவர் வெற்றியழகன் " உரைக்கும் பொருளும் உண்மைப் பொருளும்” என்ற ஒரு நூல்
> >>> எழுதியிருக்கிறார். அதுவாக இருக்கலாமோ?
>

> >>> 2012/6/7 Subbaier Ramasami <eland...@gmail.com>


>
> >>>> சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா என்பது மருவி சோழியன் குடுமி சும்மா ஆடுமா
> >>>> என்று ஆகிவிட்டது.  புலவர் வெற்றியழகன் இப்படி மருவி வரும் முதுமொழிகளை
> >>>> விளக்கி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர் நினைவில் இல்லை.
> >>>> நான் படித்திருக்கிறேன்.
>
> >>>> இலந்தை
>
> >>>> 2012/6/7 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
> >>>>> ‘குறிவைக்கத் தைக்கும் ராம சரம்‘-  பொருள் பொருந்தி இருக்கிறது.
>
> >>>>> என் கற்பனை: ஏழைக்கேத்த எள்ளுருண்டை போல,  குருவிக்குத் தக்கின/தக்ஷிண
> >>>>> ராமேஸ்வரம் (and, by implication, பருந்துக்கு உத்தர காசி!) என்னலாமோ?
>
> >>>>> :-))))
>
> >>>>> அனந்த்
>

> >>>>> 2012/6/7 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
> >>>>>> 2012/6/7 Balasubramanian N. <n.balasubraman...@gmail.com>

Pas Pasupathy

unread,
Jun 15, 2012, 10:39:52 AM6/15/12
to santhav...@googlegroups.com


2012/6/15 N. Ganesan <naa.g...@gmail.com>

On Jun 9, 5:44 am, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> கி.வா.ஜ வின் தொகுப்பு மிகப் பெரியது; வலையில் கிட்டும்.ஆனால்,
> பொருள்/விளக்கம் இருக்காது.
>

வலையில் கிட்டுகிறதா? வலைக்கண் அளித்தால் நன்றி.
 
 
நான் சொன்னது ஒன்றும் புதிய விஷயம் இல்லையே?
 
கி.வா.ஜ -வின் 147 நூல்கள் ‘தமிழ் இணையக் கல்விக் கழக’த் தளத்தில் கிடைப்பது பற்றி இங்கே நிறைய எழுதித் தள்ளியிருக்கிறோமே? 
 
அங்கே கிடைக்கும்.

Niranjan Bharathi

unread,
Jun 15, 2012, 12:17:24 PM6/15/12
to santhav...@googlegroups.com
கிடைத்து விட்டது ஐயா.
மிக்க நன்றி.

2012/6/15 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

N. Ganesan

unread,
Jun 16, 2012, 10:20:39 AM6/16/12
to சந்தவசந்தம்

On Jun 15, 7:39 am, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> 2012/6/15 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > On Jun 9, 5:44 am, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> > > கி.வா.ஜ வின் தொகுப்பு மிகப் பெரியது; வலையில் கிட்டும்.ஆனால்,
> > > பொருள்/விளக்கம் இருக்காது.
>
> > வலையில் கிட்டுகிறதா? வலைக்கண் அளித்தால் நன்றி.
>
> நான் சொன்னது ஒன்றும் புதிய விஷயம் இல்லையே?
>
> கி.வா.ஜ -வின் 147 நூல்கள் ‘தமிழ் இணையக் கல்விக் கழக’த் தளத்தில் கிடைப்பது
> பற்றி இங்கே நிறைய எழுதித் தள்ளியிருக்கிறோமே?
>
> அங்கே கிடைக்கும்.
>
>

நன்றி கவிஞரே. நீங்கள் குறிப்பிடும் வலைவரி இது:
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-44.htm

தமிழ் இணையப் பல்கலைக்கு 75 லட்சமும், தமிழ் நூல்கள் மின்னாக்கத்திற்கு
1 கோடியும் தமிழக முதல்வர் அளித்துள்ளார்.

இது போதாது. இன்னும் சில கோடிகள் ஆண்டுதொறும் மின்னாக்கங்களுக்கு
தமிழ்நாடு அரசு அளிக்கவேண்டும். தமிழ் வளர்ச்சித்துறை அரசாங்கக்
கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார். அவருக்கு நானிட்ட பதில்:

”முக்கியமாக, தமிழ்நாட்டு அரசாங்கத்தின் நூலகங்கள் (கன்னிமாரா, ஆவணக்
காப்பகம்,
கீழ்த்திசை ஆய்வு நூலகம், சென்னைப் பல்கலை, ...), உவேசா நூலகம்,
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நூலகம், ... போன்றவற்றில் உள்ள
19, 20-ஆம் நூற்றாண்டு நூல்கள் (உ-ம்: சுதந்தரத்துக்கு முன் அச்சானவை)
அனைத்தும் கணிவருடி (அ) ஒளிப்படம் எடுத்து பின்னர் பிடிஎப்
ஆக வெளியிட வேண்டும். மேலும், அரிய இதழ்கள் (கலைமகள், மஞ்சரி,
கலைக்கதிர்,
ஏர் உழவன், ... _ போன்றனவும் இணையமேற வேண்டும்.

இதற்கெல்லாம், தமிழ் வளர்ச்சித்துறையும், இயக்குநரும் முதல்வருக்கு
விரிவான கடிதம் எழுதியும், நேரில் பேசியும் உதவ வேண்டுகிறோம். ”

Narayan Swaminathan

unread,
Jun 16, 2012, 8:34:04 PM6/16/12
to santhav...@googlegroups.com
அன்பின் கணேசன்:

தமிழ் வளர்ச்சித் துறையின் பணிகள் என்ன ?

அதன் விலாசமென்ன ?

யார் இயக்குனர் ?

தமிழ் ஆய்வுக்கு நிதி (ரிசர்ச் கிராண்ட்) கொடுப்பார்களா ?

நூல்கள் மின்னாக்கத்தை செயல் படுத்துவது யார் ?



சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

பி.கு. என் மின்வருடி (ஸ்கானர்) சும்மாதான் இருக்கிறது. நூல்கள் வருடிக் கொடுத்தால்
ஏதாவது வருமானம் கிடைக்குமா ? (:-)



2012/6/16 N. Ganesan <naa.g...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages