நண்பர்களே,
மார்ச்சு 21ந்தேதி கவிமாமணி மீவி தலைமையில் நாட்டுப்புறப் பாடல்கள் கவியரங்கம்.
அதற்குமுன் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிச் சில சிந்தனைகள் கவியரங்கத்துக்கு முன்னாள் வரை இந்தத் திரியில் வெளியாகும். யாப்பமைந்த பாடல்களுக்கு வெகு காலத்த்ற்கு ம்ன்பே நாட்டுப்புறப் பாடல்கள் உருவாகி விட்டன. எகனை மொகனை எல்லாம் இயல்பாகவே அமைந்து உணர்ச்சிகளின் வேகத்து ஈடு கொடுத்து எழுந்த பாடல்கள் அவை.
அவற்றில்
ஆழமான கவிச்சுவையும் உண்டு.
காதல் உண்டு. கவலையும் உண்டு
ஏக்கம்
உண்டு, இனிமையும் உண்டு
சண்டை உண்டு சமரசம் உண்டு
அழகு உண்டு அழுகையும் உண்டு
சமுதாயத்தைப் பாதித்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் நாட்டுப்புற மக்களைப் பாதித்திருக்கிறது.
இரயில் வண்டியை முதன்முதல் பார்த்தவர்கள் அதைப்பற்றி வியந்து பாடியிருக்கிறார்கள். முதன் முதல் திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்தவன் வழியிலுள்ள ஊர்களையெல்லாம் இணத்துப் பாடியிருக்கிறான். முதலிரவுக்கு பெண்ணையும் மாப்பிள்ளையும் அறைக்குள் அனுப்பிவிட்டு அவற்களுக்குக் குறிப்புக்கொடுத்தும் கிண்டலடித்தும் வெளியில் நின்றுகொண்டு பெண்கள் பாடும் பாடல்கள் உண்டு.
தாது வருஷப் பஞ்சத்தைப் பற்றிப் பாடியிருக்கிற நாட்டுப்புறப்பாடலைப் படித்தால் இப்பொழுதும் அக்காட்சிகளைக் கண்ணில் கண்டு க/ண்ணீர் வரும்.
நாட்டுப்புறப் பாடல்களில் முதல் இடம் பிடிப்பது சிருங்காரம். அதில்தான் எத்தனை உத்திகள்.
தாலாட்டு
, தொழிற்பாட்டு, கடலில் போகும் மீனவர்கள் பாட்டு, ஏலேலோப் பாட்டு, தேசபக்திப் பாட்டு(வெள்ளைக்காரனைத் திட்டும் பாடல்களும்
உண்டு)
இன்னும் சிலர் அவர்களைப் புகழ்ந்தும் பாடியிருக்கிறார்கள்.
இன்னும்
எத்தனை எத்தனையோ? நாட்டுப்புறப் பாடல்கள் பல
நாட்டுப்புறக் கலைகளுக்கு வித்திட்டிருக்கின்றன.
திரைப்படப் பாடல்கள் பல அங்கிருந்து வந்தவை தான். நாட்டுப்புறப் பாடல்களில்
இலக்கியம் கொஞ்சம் மட்டுத்தான் என்று சொன்னவர்களை நானறிவேன். எனக்கென்னவோ நாட்டுப்புறப்
பாடல்களில் இலக்கியம் மட்டும்தான் என்று சொல்லத் தோன்றுகிறது
கவியரங்கம் தொடங்க இன்னும் இருக்கும் ஒரு வாரத்தில் சில வகைகளப் பற்றிப் பார்ப்போம்.
அது கவியரங்க மாளிகைக்கு ஒரு தோரணமாக அமையும்.
தொடக்கமாகச் சிருங்காரக் கவிதைகள் சிலவற்றை பார்க்கலாம்
காதலியின் நினைவு கதலனை வதைக்கிறது. அவன் பாடுகிறான்
'குஞ்சி முகத்தழகி
கூர் விழுந்த மூக்கழகி
சாம்பல் குருத்தழகி - இப்ப
சாகிறண்டி ஒன்னால'
அவளுக்கும் அதே நிலை
எண்ணெய்த் தலையழகா
எழுத்தாணி மூக்கழகா
கோயில் சிலையழகா
கொல்லுதடா உன்னழகு”
அவனுடைய தலை மயிரில் தலைவச்சுப் படுத்தால்தான் தூக்கம் வருமாம்
படுத்தா உறக்க மில்ல
பாய்விரிச்சா தூக்கம் வல்ல
சண்டாளன் தலைமயித்த
தலைக்கு வச்சா தூக்க
முண்டு.
அவளுடைய மயக்கத்திலே போட்ட வெற்றிலை கூட சிவக்கவில்லை
ஆத்தோரம் கொடிக்காலாம்,
அரும்பரும்பா வெத்திலையாம்,
போட்டா சிவக்குதில்லே,
பொன் மயிலே உன் மயக்கம்,
வெட்டி வேரு வாசம்
வெடலப்புள்ள நேசம்'
சிருங்காரம் நாளையும் தொடரும்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDhbtFwNcDAjcaH20aTNzantc1woquxxqgjR9gtRYd0mg%40mail.gmail.com.
நண்பர்களே,
மார்ச்சு 21ந்தேதி கவிமாமணி மீவி தலைமையில் நாட்டுப்புறப் பாடல்கள் கவியரங்கம்.
அதற்குமுன் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிச் சில சிந்தனைகள் கவியரங்கத்துக்கு முன்னாள் வரை இந்தத் திரியில் வெளியாகும். யாப்பமைந்த பாடல்களுக்கு வெகு காலத்திற்கு முன்பே நாட்டுப்புறப் பாடல்கள்
உருவாகி விட்டன. எகனை மொகனை எல்லாம் இயல்பாகவே அமைந்து உணர்ச்சிகளின் வேகத்து ஈடு கொடுத்து எழுந்த பாடல்கள் அவை.
அவற்றில் ஆழமான கவிச்சுவையும் உண்டு.
காதல் உண்டு. கவலையும் உண்டு
ஏக்கம் உண்டு, இனிமையும் உண்டு
சண்டை உண்டு சமரசம் உண்டு
அழகு உண்டு அழுகையும் உண்டு
சமுதாயத்தைப் பாதித்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் நாட்டுப்புற மக்களைப் பாதித்திருக்கிறது.
இரயில் வண்டியை முதன்முதல் பார்த்தவர்கள் அதைப்பற்றி வியந்து பாடியிருக்கிறார்கள். முதன் முதல் திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்தவன் வழியிலுள்ள ஊர்களையெல்லாம் இணைத்துப்
பாடியிருக்கிறான். முதலிரவுக்குப் பெண்ணையும் மாப்பிள்ளையும் அறைக்குள் அனுப்பிவிட்டு அவற்களுக்குக் குறிப்புக்கொடுத்தும் கிண்டலடித்தும் வெளியில் நின்றுகொண்டு பெண்கள் பாடும் பாடல்கள் உண்டு.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKMOGcBppaBRVpWp%2B508xmV_bt%3D4vgBVp0qjKsMKNTgd4WWg6A%40mail.gmail.com.
அட்டஹாசம்! இலந்தையாரே1!குமார்(சிங்கை)
--
சிருங்காரம் நாளையும்
காதலன் ஆற்றில் ஏங்கோ ஓர் இடத்தில் குளிக்கிறான். அது அவளுக்குத் தெரியும். இவள் குளிப்பதோ பெண்கள் படித்துறையில். அவனைத் தொடவேண்டும் என ஆசை. அதற்காக என்ன செய்கிறாள் தெரியுமா, சந்தனத்தை அரைச்சு அதைத் தண்னியிலே விடுகிறாள். அதுபோய் அவள் காதலன் நெத்தியில் ஒட்டிக்கொள்ளவேண்டும் என்ற ஆசை
ஓடுகிற தண்ணியிலே
ஒரசிவிட்டேன் சந்தனத்த
சேர்ந்துச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே
ஆற்றுக்கு அக்கரையிலே அவளுடை அத்தை மகன் இருக்கிறான். அவ பாடுகிற சத்தம் கேட்கிறது. அவனுடைய வாசனையை அவள் உணர்கிறாள். அவன் பாடலும் அவனுடைய வாசனையும் அவளைக் கற்பனை உலகுக்கு அழைத்துச் சென்று விடுகிறது. அவனோடு மானசீகமாக் கூடுகிறாள்.அவள் கர்ப்பமானதைப் போலக் கனவு
. “ஆத்துக்கு அக்கரையில் - எனக்கு
அத்தை மகன் ஒருவனுண்டு - அவன்
வாய்திறந்து பாடிவிட்டான் - அந்த
வாடை
பட்டுச் சூலானேன்”
ஒரு பெண் ஒரே சமயத்தில் இரண்டு செயல்களைச்
செய்கிறாள். அவன் மேலே ஆசை வைத்து முதல் செய்கை. அது திருமணத்தில் முடிய வேண்டும் என்பது ஆசை. அப்படி
முடியாவிட்டால் என்ன செய்வது?
பாரதி சொன்னது போல
காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்
அவளுடைய இரண்டாவது செயல் என்ன தெரியுமா. ஆசை வைத்த அதே சமயத்தில் அரளியையும் நட்டுவைக்கிறாள். காதல் நிறைவேறா விட்டால் அரளியை அரைத்துச் சாப்பிட்டு இறந்துவிடுவாள் என்பது குறிப்பு.
“ஆசை வச்சேன் உம்மேல
அரளிவச்சேன் கொல்லையில”
என்று பாடுகிறாள்.
அவள் அவன் கூப்பிட்டால் வருவாளா என்று தெரியாது. ஆனால் சாடை மாடையாக க் குறிப்புக் கொடுக்கிறாள். இழுத்தடிக்கிறஆள். எனவே அவன் கேட்டே விடுகிறான்
கானக் கரிசலிலே
... களையெடுக்கும் பெண்மயிலே!
நீலக் கருங்குயிலே!
... நிற்கட்டுமா போகட்டுமா?
ஒரு பெண் காரைவீட்டுத் திண்ணையிலே கரிக்கு மஞ்சள் அரைத்துக் கொண்டிருக்கிறாள். அப்பொழுது அவள் காதலன் அவ்வழியாக அவளைப் பார்த்துக்கொண்டே செல்லுகிறான். அவளால் இழுத்து அரைக்க முடியவில்லை
காரைவீட்டுத் திண்ணையிலே
கறிக்குமஞ்சள் அரைக்கையிலே
என்ன பொடி போட்டானோ
இழுத்தரைக்க முடியலையே!
முறையற்ற உறவு கொண்டிருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் பற்றிய பாடல். அவன் அவளோடு கூடிக்கலப்பதற்காக அவளைப் பார்க்க வருகிறான். அவள் வீட்டுக்கு விலக்கு என்று தெரிகிறது. அவன் முகம் தொய்ந்து போகிறது. அதற்கு அந்தப் பெண் கூறும் துணிச்சலான கூற்று
பெண்:
மச்சானே மன்னவரே
மனசிலயும் எண்ணாதிங்க
சூதமாகிப் போறாமிண்ணு
சூசகமாச் சொல்லாதிங்க
ஆண்:
ஆத்தோரம் நாணலடி
அதன் நடுவே செய்வரப்பு
செய்வரப்புப் பாதையிலே
தேனமிர்தம் உண்கலாமோ?
பெண்:
முத்துப்பல்லு ஆணழகா!
மெத்த மையல் கொண்டவரே!
ஆத்தில் தலைமுழுகி-உங்க
ஆத்திரத்தை நான் தீர்ப்பேன்.
அடுத்து வருவது கொஞ்சம் விரசமாகத் தோன்றினாலும் அந்தப்பெண்கொடுக்கும் சாட்டையடியை இரசிக்கலாம்
அவன்:
மார்பளவு தண்ணியிலே
மன்னி மன்னிப் போற பெண்ணே-உன்
மார்புக்கு மேலாடும்
மாதுளங்காய் என்ன விலை?
அவன்
மாதுளங் காயுமில்லே
மருக்காலங் காயுமில்லே
பாலகன்தான் குடிக்கும்
பால்குடண்டா சண்டாளா?
காதல் வாழ்க்கையிலே அலர் தூற்றுதல் என்று உண்டு. ஊரார் இல்லாததும் பொல்லாததும் சொல்லி அலர் தூற்றுவார்கள். இது சங்க இலக்கியத்திலும் இருக்கிறது
இதோ ஒரு பாட்டு
ஆலமரம் உறங்க -
அடிமறத்துக் கிளியுறங்க
உன்மடிமேல் நான் உறங்க
உலகம் பொறுக்கலயே
தொடரும்
http://www.tamilvu.org/ta/courses-degree-a061-a0612-html-a0612102-10425
புலவர்களால் உருவாக்கப்பட்டுக் கற்றவர்களால் காப்பாற்றப்படுபவை இலக்கியங்களாகும். பாமர மக்களால் உருவாக்கப்பட்டு அவர்களாலேயே காப்பாற்றப்படுபவை நாட்டுப்புற இலக்கியங்களாகும். நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள், கதைப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், புராணங்கள் முதலானவை இவ் வகைமைக்குள் இடம் பெறும் கூறுகளாகும்.
.....
.....
நாட்டுப்புறப் பாடல்களை, ஏட்டில் எழுதாக் கவிதைகள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், காட்டு மல்லிகை, மலையருவி, காற்றில் மிதந்த கவிதைகள் என்று தமிழ் நாட்டுப்புறவியலறிஞர்கள் பலவாறு அழைக்கின்றனர். இப்பாடல்கள் யாரால் பாடப்பட்டவை என்று கூற இயலாது.
=======
மேற்காணும் விஷயங்களைப் பார்க்கும்பொழுது எழும் சில ஐயங்கள்!
புலவர்கள் மாறுவேஷம் போட்டுக்கொண்டு நாட்டுப்புறப் பாடல்கள் எழுத இயலுமா?
அப்படியே இயன்றாலும் அது பொருந்துமா?
அப்படி ஒருவர் பாடல் எழுதினாலும், அப்படி எழுதும் பாடல்களை இன்னார் எழுதியது என்று போட்டுக்கொள்வது வழக்கமா?
வி. சுப்பிரமணியன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCO%3DzBWWbC-VjuU_q3Tjs5hQfXiFoUiqmzgQ_C%2BSqninQQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACu9XFX-LUm3b8BQkrWBunBZ98YRCcdaG9Gh45kKfa1t6F%3DMSA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCO%3DzBWWbC-VjuU_q3Tjs5hQfXiFoUiqmzgQ_C%2BSqninQQ%40mail.gmail.com.
இணையத்தில் எழுதும்போது என் வரிகள் என் குரலில் உள்ள பணிவைக் காட்டுவதில்லை. அதனால் என் எழுத்துக்கள் வேறு தொனியில் தெரியலாம். இங்குள்ள நண்பர்கள் என் எழுத்துக்களில் ஆணவம், 'நாட்டாமை தொனி' தெரிந்தால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது என், சரியாக எழுதத் தெரியாத, கையாலாகாத்தனம்.அடுத்து சிவசிவாவிடம் நான் கேட்ட கேள்விக்கான என் எண்ணத்தை எழுதுகிறேன்.புலவர்கள் நாட்டுப்புறப் பாடல்களுக்காக தனியாகப் புனைப் பெயரில் எழுத வேண்டிய அவசியமில்லை. அப்படி எழுதினாலும் அதில் பெரிய அர்த்தம் ஏதுமில்லை. இதைத்தான் ‘மாறுவேடம்’ என்ற பொருளில் புரிந்து கொண்டேன். நான் புரிந்து கொண்டது தவறென்றால், சிவசிவாதான் இதை விளக்க வேண்டும். (ஆனால் ஐயா பாதி நேரம் என் மடலைக் கண்டு கொள்ள மாட்டார்)😀😀😀
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBC7Tx0N7Jt0wGKO7AqkEc-qG6dJqea0ObkswVShBZLVcA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPW2KZX8RtS8_E1CqmUTZn%3DVVB4qDjDF_OCOegJy-VXwg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACu9XFWyvj5m6dyBHwL8PXHhdR7euiTPrwNXPXub727V7UK%2BuA%40mail.gmail.com.
ஆஹா... நாட்டுப்புற பாடல்கள் பற்றி இலந்தை ஐயா விளக்கிவரும் விதம் பரவசமாக இருக்கிறது. தினமலர் பொங்கல் மலருக்காக நான் கூட மக்களிசைப் பாடல்கள் பற்றி சிலரிடம் பேட்டி கண்டு குறிப்பெடுத்தேன். குரு உத்தரவு கிடைத்தால் அவற்றை இனி கட்டுரையாகவும் இங்கே இட ஆவலாக உள்ளேன்.தொடர்ந்து கற்கலாம்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABgdW7aQ8B_G94nZDVk0eojUCR4ZGBZkSs%3DYz4AtU-USc3y0sg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBA7k91w5xbcFfvtN5HnX%3DgyKvKPJcf6z9AaJMjv1jVk9w%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-%2Bq3N2cVMHyGcYxxT9mRbG5T0d_TmtgSfQirK3H%3DKNZpQ%40mail.gmail.com.
அன்புக் கவிவேழம் அவர்கள் பகிர்ந்து கொண்ட நாட்டுப்புறப்பாடல்கள் அற்புதமாக இருக்கின்றன.
"கோலேனாக் கோலே
பாலா லீலானாக் கோலே
பாலவிலோச்சன லீலா விலோசன
பால பிரபஞ்ச கோலே ....
பசுவா பசுவையா
உனக்குப் பணம்தர யாருமில்லை
இன்றைக்கு வாவென்று நாளைக்கு வாவென்று
ஏய்கிறாளே பசுவா..
மழை ரொம்பப் பெய்யவேண்டும் – சுவாமி
குளங்கள் பெருக வேண்டும்
பூமியில் போட்டதெல்லாம்
பொன்னாய் விளைய வேண்டும்
பொதி ரொம்பக் காணவேண்டும்...
எட்டடிக் குச்சுக் குள்ளே – சுவாமி
எத்தனை நாளிருப்பீர்
மச்சு வீடு கட்டித் தாரேன்
குச்சு வீடு கட்டித் தாரேன் –சுவாமி
"ஸ்ரீ ஜயந்தி அம்பாலம்,
சிவராத்ரி அம்பாலம்
ஸ்ரீ கிருஷ்ண ராயருக்குத்
திருவிளக்கு எண்ணை..
அவலிடிக்கற பொரிபரக்கற
அத்தைய கண்டா புஸ்....
அம்மையக்கண்டா டஸ்..
ஆனைக்காரன் பொண்டாட்டி
ஆட்டுக்குட்டி பெத்தாளாம்" .....இப்படிப் போகும் அந்தப் பாட்டு.
"ஆடிச் செவ்வாய்" அன்று பெண் குழந்தைகள் ஆற்றங்கரைக்குச் சென்று குளித்துவிட்டு மிக அழகாக அலங்காரம் செய்து கொண்டு வரும் பொழுது பாடும் பாடல்:
"ஆடிச் செவ்வாய்த் தேடிக் குளி,
அரைச்ச மஞ்சளப் பூசிக் குளி,
அரையாத மஞ்சள எனக்குத் தா...
தொடுத்த பூவ நீ வச்சுக்கோ
தொடுக்காத பூவ எனக்குத் தா..
மாடப் புறா மஞ்சள் அரை
கோவில் குளத்தில் குளித்து வா
கோவிந்த ராயனை ஜபித்து வா "
இப்படிப் பாடிக் கொண்டே கன்னடியன் கால்வாய் ஆண் பிள்ளைகள் குளித்துக் கொண்டிருக்கும் படித்துறை பக்கம் வரும் பொழுது,
"ஆத்தங்கரைல குளிச்சவாளுக்கு
ஆயிரம் தோசை
வாய்க்கால்ல குளிச்சவாளுக்கு
வாரிக்கட்டைப் பூசை "
என்று உரத்த குரலில் பாடிச்செல்லும் அழகைக் காணக் கண்கள் கோடி இருந்தாலும் போதாது.
அன்பன்,
மீ.விசுவநாதன்
15.03.2021 07.34 am
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-tTRAnOaL%2BBQaVSgmmZ%3DAh4p6rqVgv4wGKrOk1cHA0gZg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB%3D0VtXFYr-BnEgYb%3D6B_M2PQENGShEuFp_sdQn-tngkk-ngdQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-tTRAnOaL%2BBQaVSgmmZ%3DAh4p6rqVgv4wGKrOk1cHA0gZg%40mail.gmail.com.
தீபாவளி நாட்களில் தொடர்ந்து ஒரு வாரம் அக்ரஹாரத்தில் பெண்கள் கோலாட்டம் நடைபெறும். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது ஒர் அரிய கலை நிகழ்ச்சியாகப் பட்டது.
பள்ளிக்
கூடப் பெண்கள் முதல் மடிசார்
புடவை கட்டிய மாமிகள் வரை
எல்லோரும் ஒன்றாகவும்,
தனித்தனிக்
குழுக்களாகவும்,
அக்ரஹாரத்
தெருக்களில் ஊர்வலம் வந்து,
வயது
வித்தியாசமின்றிக் கோலடிக்கும்
ஓசை தெரு முழுவதும் கேட்கும்.
அந்த
நாட்களில் அவனும் சந்துருவும்
முரளியும் 'சயன்ஸ்'
வாத்தியார்
வீட்டுத் திண்ணையில்
உட்கார்ந்துகொண்டு சலிக்காமல்
கோலாட்டம் பார்ப்பதுண்டு.
பட்டும்
சின்னாள பட்டும்
தினுசு தினுசான உடைகளில்
ஜரிகை வரிகளில் இழைகளில்
கண்ணைப் பறிக்கும் நிறங்களில்
தெருவிளக்கில் மின்னிப் பளிச்சிட
கால்கள்
அப்பழுக்கு இல்லாத
வட்டமான பாதையில் நடமிட
வண்ண
வண்ண கோல்களைத்
தாங்கிய கைகள் யாவும்
ஆரங் களாகக் குவிந்தும்
தலைகளுக்கு மேலே உயர்ந்தும்
ஒன்றை ஒன்று எதிர்கொண்டும்
ஓயாத ரிதங்களில் சப்திக்க
அந்தத்
தாளத்தை உள்ளடக்கி
இனிய குரலொன்று உரக்கக்
கண்ணனின் லீலைகளைப் பாட
எல்லோரும் திரும்பச் சொல்ல—
கோலேன
கோலே ஏ
பாலா நீலா லா கோலே
பால பாவன லீல விலோசன
பால ப்ரபஞ்ச கோலே ஏ
சந்தன வனந்தனிலே ஏ — நாங்கள் பெண்கள்
ஷெண்பக ஒடையிலே
அந்தத் துகிலெடுத்துக் கரம்மேல்கரம் வைத்து
விளையாடும் வேளையிலே ஏ
பசுவா பசுவையா ஆ -— உமக்கு
பணம் கொடுப்பா ருமில்லை
இன்றைக்கு வாவென்று நாளைக்கு வாவென்று
ஏய்க்கிறாரே பசுவே ஏ!
பால் செம்பு கொண்டு ஊ -— நாங்கள் பெண்கள்
பாலென்று கூவையிலே
பாலைத் தாடி என்று க்ருஷ்ணன்
பற்களை உடைத் தாண்டி ஈ!
தயிர்ச் செம்பு கொண்டு ஊ -— நாங்கள் பெண்கள்
தயிரென்று கூவையிலே
தயிரைத் தாடி என்று க்ருஷ்ணன்
தாடையில் அடித் தாண்டி ஈ!
எட்டடிக் குச்சிக் குள்ளே ஏ — ஸ்வாமி
எத்தனை நாளிருப்பேன்?
மச்சுவீடு கட்டித் தாரும் -— ஸ்வாமி
மலையாளம் போய்வா ரேன்.
இவர்களுக்குச்
சரியாக கோலாட்டத்தில்
கலந்துகொண்டு ஆர்வத்துடன்
பாடி வலம் வரும் அனுவையும்
வசந்தியையும் அவர்கள் திண்ணையில்
உட்கார்ந்து கதை பேசியபடியே
பார்த்து மகிழ்வார்கள்.
சமயத்தில்
முரளியும் சந்துருவும் 'போர்'
என்று
நழுவிவிட,
அவன்
மட்டும் தனியாக உட்கார்ந்துகொண்டு
வசந்தியை ஊக்குவிக்கும்
பாவனையில் அனுவின் நடவடிக்கைகளைக்
கண்கொட்டாமல் பார்த்து
மகிழ்வான்.
ரமணி
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/57bb1f55-3902-4d99-83fb-ffd338564d0cn%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBChwPfeUEd%3Dfg20hkPV%3D7F3Em_GT16B9AakFxgcyf2J6Q%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB%3D0VtVpCSDWgmkgVt3yMAceEafjJ7MB0UyE%3DfOcxmp%2BYhCgSg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB%3D0VtVpCSDWgmkgVt3yMAceEafjJ7MB0UyE%3DfOcxmp%2BYhCgSg%40mail.gmail.com.
கடலையையை வண்டியில் ஏற்றிக் கொண்டு சந்தைக்கு விற்கச் செல்லும் கணவன் சொல்லுகிறான்:
கடலை
பிடிச்சவண்டி
கடகடன்ணு போகும் வண்டி
கடலை விலையானால்
கடயம் தட்டிப் போடுறனே
நீண்ட
நேரமாகியும் கணவன் திரும்பி வரவில்லை
திரும்பிவரும் வஒரு வண்டிக்காரிடம் மனைவி கேட்கிறாள்
தெற்கத்தி
வண்டிக் காரா
திருநெல்வேலி
வியாபாரி
என்சாமி வண்டிஎதும்
ஏதிரே வரப் பாத்தியளா?
வண்டிக்காரன்
அச்சு ஒடிஞ்ச வண்டி
ஆரக்கால் போன வண்டி
அட்டை கழன்ற வண்டி
பட்டுக்கிட்டான் உன் புருஷன்
கணவன்
பாட்டுப்பாடிச் சம்பாதிப்பவன். அவனைப்பத்தி மனைவி பெருமையாகச் சொல்கிறாள்
மல்பீசு
வேட்டிகட்டி
மத்தாளம் கையெடுத்து
விருத்தங்கள் சொல்லிவந்தா
வீதியிடம் கொள்ளாதே
ஆசாரி
மடத்துமேலே
அதிகச் சத்தம் சாமிச்சத்தம்
தொண்டயும் கம்மிராம
சுக்குத்தண்ணி போட்டுத்தாரேன்
ஏண்டா
நேரத்திலே வண்டியைக் கொண்டு வரவில்லை என்று கேட்ட முதலாளியிடம்
வண்டிக்காரன் சொல்வது. வண்டியும் மாடும் முதலாளிக்குச் சொந்தம்
மாடும் வயதாளி
மாட்டுக்காரன் குமராளி
நானுமொரு
நோயாளி
நடகுதில்லே முதலாளி
ஈழத்தில் தேயிலைத் தோட்த்தில் வேலைசெய்யும் பெண்கள் பாடும் பாட்டு. இருட்டிய பிறகும் கங்காணி வேலையை நிறுத்துவதில்லை
தண்ணி
கறுத்திரிச்சு
தவளைச் சத்தம் கேட்டுரிச்சி
புள்ளை அழுதிரிச்சி
புண்ணியரே வேலைவிடும்
கடலுக்குச் சென்ற கணவன் விசிலடித்துத் தன் வருகையைத் தெரிவிப்பானாம். நெடுந்தொலைவு கேட்குமாம் அச்சத்தம்
எல்லோரும்
உசுலடிச்சா
காதுருட்டும் கண்ணுருட்டும்
என் சாமி விசிலடிச்சா
தூத்துக்குடி தூள் பறக்கும்.
கடலுக்கு மீன்பிடிக்கப் போனவன் திரும்பவில்லை. அவன் மனைவி கடர்கரையில் காத்து நின்று பார்த்து விட்டு வீடு திரும்புகிறாள். ஹன் கணவன் த்ண்னி போட்டுவிட்டு எங்கே வீட்டை மறந்து விடுவானோ என்று வீட்டு அடையாளத்தையும் சொல்லுகிறாளாம்
கப்பல்
வருகுதின்னு
கடர்கரைக்குப் போயிருந்தேன்
கப்பல் வரவுமில்லை
கடர்கரையில் ஆசையில்லை
கெண்டை கொண்டு கால்நிறுத்தி
கெளுறுகொண்டு வலைபோட்டு
அயிரைகொண்டு மேய்ந்திருக்கும்
அதுதான்யா நம்ம வீடு
கொழும்புச்சீமைக்குப் போய்ப் பிழைக்கலாம் எனப் பேசுகிறார்கள்
மானத்திலே
மழையுமில்லை
மழைபொழியக் காலமில்லை
கூடிமாடிப் பேசுங்கடி
கொழும்புச்சீமை போய்ப் பிழைப்போம்
திருடுவதும் ஒரு தொழில்தான். திருட்டுத்தொழிலையும் திருடர்களையும் பற்றிப் பல நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன.
திருநெல்வேலிச் சீமையில் ஜம்புலிங்கம் என்று ஒரு திருடன் இருந்தான். செல்வரிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு அள்ளிக்கொடுத்தவன். சொல்லிவைத்துக் கொள்ளையடிப்பானாம். அதனாலே அவ்வளவு புகழ் பெற்றவன். அவனப் பற்றித் தெருக்கூத்துப் பாட்டுகளும் நாட்டுப்பாட்டுகளும் நிறைய உண்டு
ஜம்புலிங்கம்
மாந்தோப்புக்
குள்ளேபோயி
மலையாளம் எல்லாம்பேசி
தென்னந்தோப்புக் குள்ளே போயி
செந்தமிழும் நல்லாப்பேசி
வாரார் சொக்கத் தங்கம் – நம்ம
நாடார் ஜம்புலிங்கம்
எஃப்பே பியே படித்து
எப்போதும் இங்க்லீஷ்பேசி
தப்பாமே தாய்பாஷையும்
சிப்பாய்போலே தான்படித்து
வாரார் சொக்கத் தங்கம் – நம்ம
நாடார் ஜம்புலிங்கம்
ஆளிலே
அழகானவன்
ஆசாரப் பேச்சானவன்
தோள்கள் பருத்த மன்னன்
தொடையுருண்டு திரண்ட மன்ன ன்
வாரார்
சொக்கத் தங்கம் – நம்ம
நாடார் ஜம்புலிங்கம்
முறுக்கிவிட்ட
மீசையோடே
முன்னம்பல் வரிசையோடே
மினுக்கிவைத்த கத்தியோடே
மின்னுங்கையில் வெடிகளோடே
வாரார் சொக்கத் தங்கம் – நம்ம
நாடார் ஜம்புலிங்கம்
தாய்பிள்ளை எல்லாம் விட்டுத்
தன்வீட்டையும் கூடவிட்டுத்
தர்மத்தை மனசில்வச்சுத்
தைர்யத்தைக் கையில்பிடித்து
வாரார் சொக்கத் தங்கம் – நம்ம
நாடார் ஜம்புலிங்கம்
திருடன் பாட்டு
தண்டை சிலம்பு சலசலங்க
தாராபுரம் நங்கை நடந்து வாடி மங்கை
மாமன் நான் கூட வாரேன்
மத்தியான வேளையிலே
மாமன் செய்த கூத்தையெல்லாம்
மரியாதையாய்க் கேட்கையிலே
தாடிப்பத்திரிசீலை- இழுத்துப்போத்தடி மேலே
எண்டப் புளி ரோட்டு வழி
இடைவாழைக் காட்டுக்குள்ளே
திண்டுமுண்டு செய்தகதை
செம்மையாநீ கேட்கையிலே
தாடிபத்திரிசீலை இழுத்துப் போத்தடி மேலே
அம்பது கள்ளர்களுக்கு
அதிகாரியா நானிருந்தேன்
அம்பதும் என்னைப் பார்த்துட்டா
அடிபணிந்து நிற்கவேணும்
தாடிப்பத்திரி சில்லை இழுத்துப் போத்தடி மேலே
இன்னொரு திருடன் தன் சாமர்த்தியத்தைப் பேசுகிறான்
பறங்கிமலை பல்லாவரம்
பன்றி மேய்ச்சவனே- லோட்டா
கூழ் குடிச்சவனே- துண்டு
பீடி அடிச்சவனே
சீப்பு விக்கும் சென்னையிலே
பறக்குதே கருடன் – உலகத்திலே
ஆறாம் நம்பர்த் திருடன் பாடவந்த
கண்தெரியாக் குருடன்
கன்னக்கோலைக் கையிலெடுத்தால்
கட்டிடம் நாசம்- டெலிபோன்
என்னோடே பேசும் -போலீசு
என்மேலே நேசம்
கத்திக்குத்து பாணாவந்தால்
கைதேர்ந்த கேடி- சென்னையிலே
பேர்போன ரவுடி -வந்தாலும்
ஜெயிப்பேன் கில்லேடி
தொடரும்
ஒரேயொரு வயலை வைத்திருக்கிறாள். அதில் நாத்து நடும் பெண்கள் விலகி விலகி நடுகிறார்கள். அவர்களைப் பார்த்து வயலுக்குச் சொந்தக்காரி சொல்கிறாள். அவர்களைப் புகழ்ந்துகொண்டே செறுத்துப்போடுமாறு(நெருக்கி) கெஞ்சுகிறாள்
நாலு மூலை வயலுக்குள்ளே
நாத்து நடும் பொம்பிளே
நானும் கொஞ்சம் ஏழையட்
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு
நண்டு சாறு காய்ச்சிவிட்டு
நடு வரப்பில் போறபெண்ணே
தண்டைக் காலு அழக் கண்டு
கொஞ்சுரானாம் அஞ்சுமாசம்
நானும் கொஞ்ச ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு
பெண்டுகளே பெண்டுகளே
தண்டு போட்ட பெண்டுகளே- உன்
கொண்டை அழகைக் கண்டு
கொஞ்சுரானாம் ஆரு மாசம்
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு
காரை வீடு கட்டச் சுணாம்பு அரைப்பதுண்டு. சுண்ணாம்பு இடிப்பதுண்டு. சில சமயங்களில் பாதம் புண்ணாகிப் போகும்
சுண்ணம் இடிப்பவள் பாடும் பாட்டு
காலையிலே என்சாமி
வந்தோம் நாங்க வந்தோம்
காலுப்புண்ணு என்சாமி
நோவுதுங்க நோவுதுங்க
நானிடிக்கும் என்சாமி
நல்சுண்ணாம்பு நல் சுண்ணாம்பு
நல்லமெத்தெ என்சாமி
கட்டலாமே கட்டலாமே
புண்ணடிக்கும் என்சாமி
உதுச் சுண்ணாம்பு புதுச்சுண்ணாம்பு
புதுமெத்தெ என்சாமி
கட்டலாமே கட்டலாமே
தொட்டிலிலே என்சாமி
போட்டபிள்ளை போட்டபிள்ளை
தூக்கிப் பார்க்க நேரமில்ல
நேரமில்ல நேரமில்ல
என்னைப் பார்த்துப் போடவேண்டாம்
புண்ணைப் பார்த்துக் கூலிபோடு
குருவிக்கார் பாட்டு. அவர்களின் தொழில் பற்றிப் பாடுகிறார்கள்
த திம் மிதா குடதகதா- தக
தித்தாரித்த கிடதக – ததிமி
குருவிக்காரர் நாங்களய்யா – எந்தக்
கோணத்திலும் குடியிருப்போம்
வேங்கைப் புலி செந்நாய்
வேகச்சிறுத்தை ஓநாய்
நாங்க பிடிப்போம்- த திம் மிதா
கூவிவரும் குள்ளநரி
கோனாயி நொள்ள நரி
கல்லின்கீழ் மேஞ்சுவரும்
கல்ல மொசல் பில்ல மொசல்
கண்டு பிடிப்போம் – மார்… ரோ
காடை கௌதாரி மைனா
கானாங்க்கோழி குருவிகளாம்
கவணால் அடிச்சிடுவோம்-
கணக்காப் பிடிச்சிடுவோம் த திம் மித
அண்டத்தில் வலையைக் கட்டி
ஆகாயம் பறந்துவரும்
ஆண்கழுகு பொண்கழுகு
ஐயா பிடிச்சிடுவோம் - மார் … ரோ
அல்லடா தில்லாலே டப்பா
அலுக்கு குலுக்கு டப்பா
செம்மை குள்ளத்தாரா சிந்து
செளித்த தஞ்சாவூர் முந்து – ததிம்மிதா
ஓத்தில் துடுப்புத் தள்ளிக்கொண்டு போகிறவர்கள் பாடும் பாட்டு
முதலாள்-
அடி பூவே பரிமளமே – லே லங்கடி லேலே
2வது ஆள்: லே லங்கடி லேலே
1- நா போய்வரட்டா எங்கடமே- லே லங்கடி லேலே
2- ஆசப் பரிமளமே லே லங்கடி லேலோ
1- அய்ய லேலங்கடி லேலே
2 நேத்தரச்ச சந்தனமே லே லங்கடி லேலோ
1 சந்தன வாdaiயம்மா - லே லங்கடி லேலோ
2- அம்மா லே லங்கடி லேலோ
1 தனி வாடை வீசுதடி - லே லங்கடி லேலோ
2 குங்கும வாடையடா- லே லங்கடி லேலோ
1 அய்யா லே லங்கடி லேலோ
2 குளிர் வாட வீசுதடா - லே லங்கடி லேலோ
1 வீசுன வாடைரெண்டும் லே லங்கடி லேலோ
2 குளிச்ச மஞ்ச வாசனைடா லே லங்கடி லேலோ
இதுபோன்ற பாடல்களை நேரில் காத்து கொடுத்துக் கேட்டவர்கள் பெரும் பாக்யவான்கள். பகிர்ந்து கொண்ட திரு. கவிவேழம் அவர்களுக்கு மிக்க நன்றி.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBA%3DTo8OsndPEYn3G5HL425UC0RU9aU2y8rzyda5kwTC1w%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-Ko9CssXFu4OeHp31kVmDWmg71Md9d0wFcZdTSgJGaCdA%40mail.gmail.com.
அற்புதமான தாலாட்டுப் பாட்டு.. மீண்டும் மீண்டும் படித்து வியந்தேன்.
நேக்கா - இங்கிலீஸு கூட வருமோ...
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBB256sO3NvZGx7VJs5aDbS5gi5NbrH8h0WBWnow8rJpBw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-tVqqb4ddc5%3Dhy40%2BbEHEUqxEMfurVTdtyWr3vXF19ywg%40mail.gmail.com.
தாலாட்டுப் பாடல்களிலே குழந்தை ஏன் அழுகிறாய் என்று கேட்பதுபோல் பல பாடல்கள் உண்டு. அதிலே சிலவற்றை இங்கே பார்க்கலாம்
ஆரடித்தார் ஏனழுதே
அடித்தாரைச் சொல்லியழு
கண்ணே என் கண்மணியே
,கடிந்தாரைச் சொல்லியழு
இளக்கிவிட்ட வெண்ணையைப்போல்
வெந்துருகி நிற்கையிலே
கலத்திலிட்ட சோறதுபோல்
கண்கலக்கந் தீர்ந்தாயோ?
கொம்புக் கனியே
கோதுபடா மாங்கனியே
வம்புக் கழுதாயோ
வாயெல்லாம் பால்வடிய
மாமன் அடித்தானோ
மல்லிகைப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாளோ அல்லிமலர்ச் செண்டாலே
------------------------------
ஏனழுதான் என்னரியான்
ஏலம்பூ வாய்நோக?
கரும்புக் கழுதானோ
கண்ணிலிட்ட மைகரைய?
சிலம்புக் கழுதானோ
செங்கமல வாய்சிவக்க
மண்ணிலொரு புன்னைமரம்
வருசமொரு பூப்பூக்கும்
வருசமொரு பூப்பூக்கும்
வருந்தி ஒரு காய்காய்க்கும்
என்னரியான் புன்னைமரம்
இலையுதிரப் பிஞ்சுவிடும்
புன்னைப்பூக் கோதவந்த
புலந்திரனை யாரடித்தார்?
மகிழம்பூக் கொய்யவந்த
மகனாரை யாரடித்தார்?
ஆரும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
தானாய் அழுகின்றான்
தம்பிதுணை வேணுமென்று
அவனா அழுகின்றான்
ஆத்தாள் மடிதேடி.-(நகரத்தார் தாலாட்டு)
பாடல் 2
ஆராரோ ஆரிரோ – கண்ணே
ஆரடித்து நீயழுதே
அடித்தாரைச் சொல்லியழு- கண்ணே
அழுத கண்ணீர் வடிகிறதே
பேரைநீ சொல்லியழு – கண்ணே
பெருவிலங்கு போட்டிடலாம்
அத்தை அடித்தாளோ கண்ணே
அழுத கண்ணீர் துடைத்தாளோ
பாட்டி அடித்தாளோ -உனக்குப்
பாலூட்டும் கையாலே
மாமி அடித்தாளோ – உனக்கு
மைவைக்கும் கையாலே
அக்காள் அடித்தாளோ- கண்ணே
அணைக்கின்ற கையாலே
அம்மானும் வைதானோ- கண்ணே
அள்ளிக் கொடுக்கைய்லே
பெரியம்மா அடித்தாளோ உன்னைப்
பெத்தவள் அடித்தாளோ
தொட்டிலுக்குள் துள்ளிதுள்ளி – கண்ணே
துரையே நீ தூங்கிடடா
தேம்பி அழுகாதே- கண்ணே
திட்டாதே அம்மாவை
வாடாத பூவே – கண்ணே
வானத்தில் தாராவே
தேடாத் திரவியமே – கண்ணே
தெவிட்டாத் தெளிதேனே
கேட்டதெலாம் தருவேன்- கண்ணே
கிண்கிணியே கண்வளராய்
தொடரும்தாலாட்டுப் பாடல்களிலே குழந்தை ஏன் அழுகிறாய் என்று கேட்பதுபோல் பல பாடல்கள் உண்டு. அதிலே சிலவற்றை இங்கே பார்க்கலாம்
ஆரடித்தார் ஏனழுதே
அடித்தாரைச் சொல்லியழு
கண்ணே என் கண்மணியே
,கடிந்தாரைச் சொல்லியழு
இளக்கிவிட்ட வெண்ணையைப்போல்
வெந்துருகி நிற்கையிலே
கலத்திலிட்ட சோறதுபோல்
கண்கலக்கந் தீர்ந்தாயோ?
கொம்புக் கனியே
கோதுபடா மாங்கனியே
வம்புக் கழுதாயோ
வாயெல்லாம் பால்வடிய
மாமன் அடித்தானோ
மல்லிகைப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாளோ அல்லிமலர்ச் செண்டாலே
------------------------------
ஏனழுதான் என்னரியான்
ஏலம்பூ வாய்நோக?
கரும்புக் கழுதானோ
கண்ணிலிட்ட மைகரைய?
சிலம்புக் கழுதானோ
செங்கமல வாய்சிவக்க
மண்ணிலொரு புன்னைமரம்
வருசமொரு பூப்பூக்கும்
வருசமொரு பூப்பூக்கும்
வருந்தி ஒரு காய்காய்க்கும்
என்னரியான் புன்னைமரம்
இலையுதிரப் பிஞ்சுவிடும்
புன்னைப்பூக் கோதவந்த
புலந்திரனை யாரடித்தார்?
மகிழம்பூக் கொய்யவந்த
மகனாரை யாரடித்தார்?
ஆரும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
தானாய் அழுகின்றான்
தம்பிதுணை வேணுமென்று
அவனா அழுகின்றான்
ஆத்தாள் மடிதேடி.-(நகரத்தார் தாலாட்டு)
பாடல் 2
ஆராரோ ஆரிரோ – கண்ணே
ஆரடித்து நீயழுதே
அடித்தாரைச் சொல்லியழு- கண்ணே
அழுத கண்ணீர் வடிகிறதே
பேரைநீ சொல்லியழு – கண்ணே
பெருவிலங்கு போட்டிடலாம்
அத்தை அடித்தாளோ கண்ணே
அழுத கண்ணீர் துடைத்தாளோ
பாட்டி அடித்தாளோ -உனக்குப்
பாலூட்டும் கையாலே
மாமி அடித்தாளோ – உனக்கு
மைவைக்கும் கையாலே
அக்காள் அடித்தாளோ- கண்ணே
அணைக்கின்ற கையாலே
அம்மானும் வைதானோ- கண்ணே
அள்ளிக் கொடுக்கைய்லே
பெரியம்மா அடித்தாளோ உன்னைப்
பெத்தவள் அடித்தாளோ
தொட்டிலுக்குள் துள்ளிதுள்ளி – கண்ணே
துரையே நீ தூங்கிடடா
தேம்பி அழுகாதே- கண்ணே
திட்டாதே அம்மாவை
வாடாத பூவே – கண்ணே
வானத்தில் தாராவே
தேடாத் திரவியமே – கண்ணே
தெவிட்டாத் தெளிதேனே
கேட்டதெலாம் தருவேன்- கண்ணே
கிண்கிணியே கண்வளராய்
தொடரும்தாலாட்டுப் பாடல்களிலே குழந்தை ஏன் அழுகிறாய் என்று கேட்பதுபோல் பல பாடல்கள் உண்டு. அதிலே சிலவற்றை இங்கே பார்க்கலாம்
ஆரடித்தார் ஏனழுதே
அடித்தாரைச் சொல்லியழு
கண்ணே என் கண்மணியே
,கடிந்தாரைச் சொல்லியழு
இளக்கிவிட்ட வெண்ணையைப்போல்
வெந்துருகி நிற்கையிலே
கலத்திலிட்ட சோறதுபோல்
கண்கலக்கந் தீர்ந்தாயோ?
கொம்புக் கனியே
கோதுபடா மாங்கனியே
வம்புக் கழுதாயோ
வாயெல்லாம் பால்வடிய
மாமன் அடித்தானோ
மல்லிகைப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாளோ அல்லிமலர்ச் செண்டாலே
------------------------------
ஏனழுதான் என்னரியான்
ஏலம்பூ வாய்நோக?
கரும்புக் கழுதானோ
கண்ணிலிட்ட மைகரைய?
சிலம்புக் கழுதானோ
செங்கமல வாய்சிவக்க
மண்ணிலொரு புன்னைமரம்
வருசமொரு பூப்பூக்கும்
வருசமொரு பூப்பூக்கும்
வருந்தி ஒரு காய்காய்க்கும்
என்னரியான் புன்னைமரம்
இலையுதிரப் பிஞ்சுவிடும்
புன்னைப்பூக் கோதவந்த
புலந்திரனை யாரடித்தார்?
மகிழம்பூக் கொய்யவந்த
மகனாரை யாரடித்தார்?
ஆரும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
தானாய் அழுகின்றான்
தம்பிதுணை வேணுமென்று
அவனா அழுகின்றான்
ஆத்தாள் மடிதேடி.-(நகரத்தார் தாலாட்டு)
https://www.youtube.com/watch?v=AY5OIZYO3s0
பாடல் 2
ஆராரோ ஆரிரோ – கண்ணே
ஆரடித்து நீயழுதே
அடித்தாரைச் சொல்லியழு- கண்ணே
அழுத கண்ணீர் வடிகிறதே
பேரைநீ சொல்லியழு – கண்ணே
பெருவிலங்கு போட்டிடலாம்
அத்தை அடித்தாளோ கண்ணே
அழுத கண்ணீர் துடைத்தாளோ
பாட்டி அடித்தாளோ -உனக்குப்
பாலூட்டும் கையாலே
மாமி அடித்தாளோ – உனக்கு
மைவைக்கும் கையாலே
அக்காள் அடித்தாளோ- கண்ணே
அணைக்கின்ற கையாலே
அம்மானும் வைதானோ- கண்ணே
அள்ளிக் கொடுக்கைய்லே
பெரியம்மா அடித்தாளோ உன்னைப்
பெத்தவள் அடித்தாளோ
தொட்டிலுக்குள் துள்ளிதுள்ளி – கண்ணே
துரையே நீ தூங்கிடடா
தேம்பி அழுகாதே- கண்ணே
திட்டாதே அம்மாவை
வாடாத பூவே – கண்ணே
வானத்தில் தாராவே
தேடாத் திரவியமே – கண்ணே
தெவிட்டாத் தெளிதேனே
கேட்டதெலாம் தருவேன்- கண்ணே
கிண்கிணியே கண்வளராய்
https://www.youtube.com/watch?v=AY5OIZYO3s0
தொடரும்
தெவிட்டாத் தெளிதேனே
கேட்டதெலாம் தருவேன்- கண்ணே
கிண்கிணியே கண்வளராய்
தாலாட்டுப் பாடல்களை மனம்மகிழப் படித்தும், காதுகுளிரக் கேட்டும் களித்தேன். பகிர்ந்த அன்புக் கவிவேழம் அவர்களுக்கு மிக்க நன்றி.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAMD-FzUR3_SQCB4mb9d9m2zrG8VWb-uXKAT6v5THC-kghhEZ_Q%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAMD-FzUR3_SQCB4mb9d9m2zrG8VWb-uXKAT6v5THC-kghhEZ_Q%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAMD-FzViNP8-Wqq9kLVWwdmfsgahao7HKcS9yT2CuYe_GUwNTA%40mail.gmail.com.
குட்டக் குட்டக் குனியும் நம் நிலையைப் புட்டுப் புட்டு வெச்சீர்!ரமணி
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/33e842b0-9dba-4895-ae18-ded5d8bbfa2cn%40googlegroups.com.
நாட்டுக்குச் சேதமேது
நல்லவங்க வந்தாக்கா?
கூட்டத்தப் பாத்துமட்டும்
கூறுகெட்டுப் போவாம
கோட்டடிச்ச கோமாளிக்
கொரங்கெல்லாம் குந்தாம
ஓட்டளிக்கச் சொன்னராமு
ஒஸ்தியான பாட்டுமாமு!
*குந்தாம என்பதைத் தவிர மற்ற ‘உ” முடிவுகள் குற்றியலுகரம்!
On Monday, April 5, 2021 at 3:55:00 PM UTC+5:30 vrama...@gmail.com wrote:
தேர்தல்.வந்துருச்சு தேர்தலு வகவகயா கச்சிங்கபோட்டிபோட்டு வாக்குறுதி பொளுதெல்லாங் குடுக்குறாங்கஆகுமானு கேட்டாக்க அற்பனப்போல் பாக்குறாங்ககேள்விகேக்க விடாம கேணயாத்தான் வெக்கிறாங்க!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/33e842b0-9dba-4895-ae18-ded5d8bbfa2cn%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAEGjYpnxy%3Dm_qBp_wT-5c4SyZm0tzU3nUfE9GPkCC2TTkLJ_DA%40mail.gmail.com.
*குந்தாம என்பதைத் தவிர மற்ற ‘உ” முடிவுகள் குற்றியலுகரம்!
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BXYiF4Y9Gz3UnAHgQuv6RjkuO3GOCiTdO7-cj32oyHKCQ%40mail.gmail.com.
நண்பர்களே,
மார்ச்சு 21ந்தேதி கவிமாமணி மீவி தலைமையில் நாட்டுப்புறப் பாடல்கள் கவியரங்கம்.
அதற்குமுன் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிச் சில சிந்தனைகள் கவியரங்கத்துக்கு முன்னாள் வரை இந்தத் திரியில் வெளியாகும். யாப்பமைந்த பாடல்களுக்கு வெகு காலத்த்ற்கு ம்ன்பே நாட்டுப்புறப் பாடல்கள் உருவாகி விட்டன. எகனை மொகனை எல்லாம் இயல்பாகவே அமைந்து உணர்ச்சிகளின் வேகத்து ஈடு கொடுத்து எழுந்த பாடல்கள் அவை.
அவற்றில் ஆழமான கவிச்சுவையும் உண்டு.
காதல் உண்டு. கவலையும் உண்டு
ஏக்கம் உண்டு, இனிமையும் உண்டு
சண்டை உண்டு சமரசம் உண்டுஅழகு உண்டு அழுகையும் உண்டு
சமுதாயத்தைப் பாதித்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் நாட்டுப்புற மக்களைப் பாதித்திருக்கிறது.
இரயில் வண்டியை முதன்முதல் பார்த்தவர்கள் அதைப்பற்றி வியந்து பாடியிருக்கிறார்கள். முதன் முதல் திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்தவன் வழியிலுள்ள ஊர்களையெல்லாம் இணத்துப் பாடியிருக்கிறான். முதலிரவுக்கு பெண்ணையும் மாப்பிள்ளையும் அறைக்குள் அனுப்பிவிட்டு அவற்களுக்குக் குறிப்புக்கொடுத்தும் கிண்டலடித்தும் வெளியில் நின்றுகொண்டு பெண்கள் பாடும் பாடல்கள் உண்டு.
தாது வருஷப் பஞ்சத்தைப் பற்றிப் பாடியிருக்கிற நாட்டுப்புறப்பாடலைப் படித்தால் இப்பொழுதும் அக்காட்சிகளைக் கண்ணில் கண்டு க/ண்ணீர் வரும்.
நாட்டுப்புறப் பாடல்களில் முதல் இடம் பிடிப்பது சிருங்காரம். அதில்தான் எத்தனை உத்திகள்.
தாலாட்டு , தொழிற்பாட்டு, கடலில் போகும் மீனவர்கள் பாட்டு, ஏலேலோப் பாட்டு, தேசபக்திப் பாட்டு(வெள்ளைக்காரனைத் திட்டும் பாடல்களும் உண்டு)
இன்னும் சிலர் அவர்களைப் புகழ்ந்தும் பாடியிருக்கிறார்கள்.இன்னும் எத்தனை எத்தனையோ? நாட்டுப்புறப் பாடல்கள் பல நாட்டுப்புறக் கலைகளுக்கு வித்திட்டிருக்கின்றன. திரைப்படப் பாடல்கள் பல அங்கிருந்து வந்தவை தான். நாட்டுப்புறப் பாடல்களில் இலக்கியம் கொஞ்சம் மட்டுத்தான் என்று சொன்னவர்களை நானறிவேன். எனக்கென்னவோ நாட்டுப்புறப் பாடல்களில் இலக்கியம் மட்டும்தான் என்று சொல்லத் தோன்றுகிறது
கவியரங்கம் தொடங்க இன்னும் இருக்கும் ஒரு வாரத்தில் சில வகைகளப் பற்றிப் பார்ப்போம். அது கவியரங்க மாளிகைக்கு ஒரு தோரணமாக அமையும்.தொடக்கமாகச் சிருங்காரக் கவிதைகள் சிலவற்றை பார்க்கலாம்
காதலியின் நினைவு கதலனை வதைக்கிறது. அவன் பாடுகிறான்
'குஞ்சி முகத்தழகி
கூர் விழுந்த மூக்கழகி
சாம்பல் குருத்தழகி - இப்ப
சாகிறண்டி ஒன்னால'அவளுக்கும் அதே நிலை
எண்ணெய்த் தலையழகா
எழுத்தாணி மூக்கழகா
கோயில் சிலையழகா
கொல்லுதடா உன்னழகு”அவனுடைய தலை மயிரில் தலைவச்சுப் படுத்தால்தான் தூக்கம் வருமாம்
படுத்தா உறக்க மில்ல
பாய்விரிச்சா தூக்கம் வல்ல
சண்டாளன் தலைமயித்த
தலைக்கு வச்சா தூக்க முண்டு.அவளுடைய மயக்கத்திலே போட்ட வெற்றிலை கூட சிவக்கவில்லை
ஆத்தோரம் கொடிக்காலாம்,
அரும்பரும்பா வெத்திலையாம்,
போட்டா சிவக்குதில்லே,
பொன் மயிலே உன் மயக்கம்,
வெட்டி வேரு வாசம்
வெடலப்புள்ள நேசம்'
சிருங்காரம் நாளையும் தொடரும்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDhbtFwNcDAjcaH20aTNzantc1woquxxqgjR9gtRYd0mg%40mail.gmail.com.
திரு. கோபால் அவர்களே.. காரணத்தை இணைக்கப்பட்டுள்ள ஒலிப்பதிவில் விளக்கமுயன்றிருக்கிறேன்.. :)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CB63DE0E-C547-4FD9-BFF9-D23E73E736CE%40gmail.com.
Lyrics and Meaning:
ಮಾದೇವ… ಮಾದೇವ…
Maadeva… Maadeva…
Mahadeva… Mahadeva…
ಸೋಜುಗಾದ ಸೂಜುಮಲ್ಲಿಗೆ ಮಾದೇವ ನಿಮ್ಮ ಮಂಡೆ ಮ್ಯಾಲೆ ದುಂಡು ಮಲ್ಲಿಗೆ
Sojugaada Sooju Mallige Maadeva Nimma Mande Myaale Dundu Mallige
Mahadeva,
I offer various types of Jasmine flowers by placing them upon your head
ಅಂದಾವರೆ ಮುಂದಾವರೆ ಮತ್ತೆ ತಾವರೆ ಪುಷ್ಪ
Andaavare Mundaavare Matte Taavari Pushpa
And then various types of Lotus flowers
ಚಂದಕ್ಕಿ ಮಾಲೆ ಬಿಲ್ಪತ್ರೆ ಮಾದೇವ ನಿಮ್ಗೆ
Chandakki Maale Bilpatre Maadeva Nimge
And a beautiful garland of Vilva leaves, O Mahadeva
ಚಂದಕ್ಕಿ ಮಾಲೆ ಬಿಲ್ಪತ್ರೆ ತುಳಸಿ ದಳವ
Chandakki Maale Bilpatre Tulasi Dalava
A beautiful garland of Vilva and Tulsi leaves
ಮಾದಪ್ಪನ್ ಪೂಜೆಗೆ ಬಂದು ಮಾದೇವ ನಿಮ್ಮ
Maadappna Poojege Bandu Maadeva Nimma
O Mahadeva, I came to your worship
ತಪ್ಪಾಲೆ ಬೆಳಗಿವ್ನಿ ತುಪ್ಪಾವ ಕಾಯ್ಸಿವ್ನಿ
Tappaale Belagivnee Tuppaava Kaaisivni
I have washed and polished the vessel, and heated Ghee
ಕಿತ್ತಾಳೆ ಹಣ್ಣ ತಂದಿವ್ನಿ ಮಾದೇವ ನಿಮ್ಗೆ
ಕಿತ್ತಾಳೆ ಹಣ್ಣ ತಂದಿವ್ನಿ ಮಾದಪ್ಪ
Kittaale Hanna Tandivni Maadeva Nimge
Kittale Hanna Tandivni Maadappa
And have brought oranges for you, O Mahadeva
ಕಿತ್ತಾಡಿ ಬರುವ ಪರಸೆಗೆ ಮಾದೇವ ನಿಮ್ಮ
Kittaadi Baruva Parasege Maadeva Nimma
To your festival where people flock
ಬೆಟ್ ಹತ್ಕೊಂಡ್ ಹೋಗೋರ್ಗೆ ಹಟ್ಟಿ ಹಂಬಲವ್ಯಾಕ?
Bett Hatkondu Hogorge Hatti Hambalavyaaka?
Why should those who climb the mountains aspire to have a house?
ಬೆಟ್ಟದ್ ಮಾದೇವ ಗತಿಯೆಂದು ಮಾದೇವ ನೀವೇ…
ಬೆಟ್ಟದ್ ಮಾದೇವ ಗತಿಯೆಂದು ಅವರಿನ್ನು
Bettad Maadeva Gatiyendu Maadeva Neeve..
Bettad Maadeva Gatiyendu Avarinnu
Submitting to the Lord of the Mountain as their Ultimate Resort…
ಹಟ್ಟಿ ಹಂಬಲವ ಮರೆತಾರೋ ಮಾದೇವ ನಿಮ್ಮ
Hatti Hambalava Maretaaro Maadeva Nimma
Perhaps they will now forget their mundane aspirations
ಉಚ್ಚೆಳ್ಳು ಹೂವ್ನಂಗೆ ಹೆಚ್ಚೇವೋ ನಿನ್ನ ಪರುಸೆ
Uchchellu Hoovinhange Hechchevo Ninna Paruse
We have flocked for your festival like Nyger flowers
ಹೆಚ್ಚಾಳಗಾರ ಮಾದಯ್ಯ, ಮಾದಯ್ಯ ನೀನೇ
Hechchaalagaara Maadayya, Maadayya Neene
O Mahadeva, you are the greatest
ಹೆಚ್ಚಾಳಗಾರ ಮಾದಯ್ಯ ಏಳುಮಲೆಯ
Hechchaalagaara Maadayya Elumaleya
O Mahadeva of seven hills, you are the greatest
ಹೆಚ್ಚೇವು ಕೌದಳ್ಳಿ ಕಣಿವೇಲಿ ಮಾದೇವ ನಿಮ್ಮ
Hecchevu Koudalli Kaniveli Maadeva Nimma
O Mahadeva, we have flocked to the Koudalli valley for your festival
அங்காளம்மன் கோயிலுக்கு பொங்கலிட நான்போனேன்!பொங்கப் பொட்டி தூக்கச் சொன்னாளே!- ஏம் பொண்டாட்டிபொங்கப் பொட்டி..ஆறுமாசக் கீரத்தண்டுநிரு வத்திப் போகுதுன்னுஅதுக்குத் தண்ணி எறைக்கச் சொன்னாளே- எம்பொண்டாட்டிஇதுக்குத் தண்ணி எறைக்கச் சொன்னாளே!- கேட்ட பாட்டு.- புலவர் இராமமூர்த்தி.