திடமுடி வோடு!
[தனதன தான தனதன தான
தனதன தான தனதான]
உடலில மாக உயிரதி லாக
உறவுக ளான உணர்வோடே
உமையொரு பாதி உடையபி ரானின்
ஒருமையில் ஆகம் உறையாமல்,
இடரிது நாளை எனவறியாமல்
இகசுக மூறி உழலாதே!
இருவினை பேசும் இயமனின் ஏடும்
இனியழு தாலும் அழியாது!
மிடறடர் ஆல விடமுடை யானை
மிகுதுணை ஏதும் இவணேது?
விழவிழை யாது விதிநினை யாது
விடையனை ஏகி விடிவேகு!
திடமுடி வோடு திலையனை நாடு!
திருவடி பாடு! தெளிவோடு
திமிரமி லாத சிவவொளி யோடு
திருநிறை வோடு திகழ்வாயே!
நல்வாழ்த்துகளுடன்
கோபால்
[01.feb.2020]
————————————
வண்ணச்சந்தம் (4) 03/02/2020
நந்தவனம்
[தந்தனன தனனதன தனதான]
அம்புதியில் அரவணையி லயர்வோனே
அம்புமல ருறைமகளை அணைவோனே
உம்பருடை முடிகள்தொடும் அடியோனே
உந்திதனி லலரயனை உடையோனே
கொம்புவிலு மசிகதையொ டுழலாழி
கொண்டவுண ருனிலிணைய அருள்வோனே
நம்புமென துளமுனது விளையாடும்
நந்தவனம் அதிலுகள வருவாயே!
கொம்புவி(ல்)லும், அசி, கதையொடு, உழலாழி(யும்)
கொண்டு, அவுணர் உன்னில் இணைய அருள்வோனே
நம்புமென துளமுனது விளையாடும்
நந்தவனம் அதிலுகள வருவாயே!
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/36F84234-D0C7-433F-A87D-B950E9E69F53%40gmail.com.
உதாரணமாக -
11.40.7
("தனதனா .. தனதான" )
பதிகம்ஏ ழெழுநூறு பகருமா கவியோகி
.. பரசுநா வரசான பரமகா ரணவீசன்
அதிகைமா நகர்மேவி யருளினா லமண்மூடர்
.. அவர்செய்வா தைகள்தீரு மனகன்வார் குழல்சூடின்
நிதியரா குவர்சீர்மை யுடையரா குவர்வாய்மை
.. நெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால
மதியரா குவரீச னடியரா குவர்வானம்
.. உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே.
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/C8EA90FD-D704-48A5-8A86-6997CED7DE6D%40gmail.com.
எனத்த - என் அத்த = என் அத்தனே;நினபெயர் = நின பெயர்கள் = உனது திருப்பெயர்களை;
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPhD9_yRz%2Bm_D%2BqEv0V%2BNdr23OSPsvoNzu%3DjDjenpy20g%40mail.gmail.com.
3.4.1
இடரினும் தளரினும் என(து) உறு நோய்
தொடரினும் உன கழல் தொழு(து) எழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
உன என்று வரும் இன்னொரு பாடல்:
7.60.3
புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்
போலும் வாழ்க்கை பொருளிலை நாளும்
என்னெ னக்கினி இற்றைக்கு நாளை
என்றி ருந்திட ருற்றனன் எந்தாய்
முன்ன மேஉன சேவடி சேரா
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
இன்னம் என்றனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே.
நீங்கள் குறிப்பிடும் இப்பாடல்கள் போல,
மற்றவற்றைத் தேவார ஒளிநெறி நூல்களில் இருந்து தொகுக்கலாம்.
--------------
https://www.jstor.org/stable/600654?seq=1
மொழியியல்படி என்ன சொல்கிறார் எனப் பார்க்கவேண்டும்:
Zvelebil, K. V. (Apr. - Jun., 1972). "Dravidian Case-Suffixes: Attempt at a Reconstruction". Journal of the American Oriental Society (American Oriental Society) 92 (2): 272–276. doi:10.2307/600654. பார்த்த நாள்: 2010-05-03. "The entire problem of the concept of 'case' in Dravidian will be ignored in this paper. In fact, we might posit a great number of 'cases' for perhaps any Dravidian language once we departed from the familiar types of paradigms forced upon us by traditional, indigenous and European grammars, especially of the literary languages. It is, for instance, sheer convention based on Tamil grammatical tradition (influenced no doubt by Sanskrit) that, as a rule, the number of cases in Tamil is given as eight.".
NG
.....
/ உனையோர்ந்தே /
/ ஆரம் பமற்றபர மானந் தமுற்றனையின் /Can sound better if modified.
or, may be the meter can be stated as "தானந்த தத்ததன ...... "?
விரை சூழும் வயற்கழனி/ = ?
/ உனையோர்ந்தே /
--
/ உனையோர்ந்தே /
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/E9219B57-9BDE-43B7-B625-310EE8CC3DCD%40gmail.com.
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/fa15783e-68b4-49d2-bcc0-00d21e95d838%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABbwQoJictxbZ9HDLBuwY%3DWe-JkSJfFoAh8BaMhUHbodwhO5FQ%40mail.gmail.com.
கருவாழக்கரை உமை![தனதன தனந்த தத்தத் தனதன தனந்த தத்தத்தனதன தனந்த தாத்தத் தனதான]எனக்கும் எடுத்துத்தந்து உதவினீர்கள் , நன்றி !புவிதனில் உயர்ந்த சந்தக்கவிகளைப் படைத்த ளித்துச்செவிகளில் விருந்த ருத்துங் ...செயலாலே
புண்ட ரிகமாத வனரி வனமாலிபுங்க வனுநீல வணனோடும்,
சந்த இசைமேவ மகிழ்வோனே!
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/908BF893-578F-47C2-8F40-E3D29DBBD33A%40gmail.com.
வண்ணச்சந்தம் (11) (07/05/2020)களிறு வடிவோனே[தனன தனன தனன தனனதனன தனன தனதானா]அகர முகர மகர மிணைய
அதனி லெழுமொ ருருவாவாய்!அசைவு நிலையொ டிழைய விளையு
மழலு மொலியு மெனஆவாய்!
சகட விதியி லுலக முழல
சலன மிலென நடுவாவாய்!
சரண மரணெ னவல மறிக
சடிதி யுதவ வருவாயே!
பகலு மிரவு மிறவி பிறவி
பயண மனுப வமுநீயே!பகுதி விகுதி பழமை புதுமைபலவு முதய முனில்தானே!
நிகரு மிலது நிழலு மிலது
நினது நிசமு மறிவாரார்?
நினைவி லுலவி நெகிழ மகிழு
நிமல களிறு வடிவோனே!பொருள் விளக்கம்அகரம், உகரம், மகரம் - இவை இணைய
அதனில் எழும் ஒரு உருவான ஓங்காரம் நீ!அசைவதும் நிலைத்திருப்பதும் (ஒன்றோடொன்று) இழைய அதில் விளையும்
அழலும் (தீ) ஒலியும் நீயே ஆவாய்!
சகடத்தின் சுழற்சி விதிப்படி உலகம் உழன்று கொண்டிருக்க,
சலனமில்லாத நடுத்தானமாய் (அச்சாய்) நீ இருப்பாய் !
உன் சரணம் (பாதம்) எனக்கு அரண்! என் அவலத்தை நீ அறிந்துகொள்!
சடிதி (விரைவில்) உதவி செய்ய வாராய் !
பகலும், இரவும், இறப்பும், பிறப்பும்,
வாழ்க்கைப் பயணமும் அதில் அடையும் அனுபவமும் நீயே!பகுதி (ப்ரக்ருதி, இயற்கை), விகுதி (விக்ருதி, மாற்றம்), பழமை, புதுமை,ஆகிய பலவும் உதயதயமாவது உன்னிடம் தானே!
நிகரும் (ஒப்புமை) இல்லாதது, நிழலும் (பிம்பம்) இல்லாதது உன் நிலை!
--> உழலச் சலனம் -- பொதுவாக ச் மிக்கு வரும். 'உழல' என்பது வியங்கோள் எனில் ச் மிகாது.
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPT%3D-%3DvG0beFcurkG%2BhNaHKnOAhvb0NpmCH2o2zXc9yXw%40mail.gmail.com.
... அனந்த்
வண்ணச்சந்தம் (12) (9.5.2020)
சித்தசுத்தி
[தத்தந் தத்தந் தனதான]
சித்துஞ் சத்தும் பிணைசேர
உத்தம் பித்தம் தலையேற
நித்தம் புத்தம் புதிதாக
அத்தன் நித்தம் புரிவானே!
சத்தங் கத்தும் குரலாலே
முத்தம் பத்தம் கொடுபாடித்
தத்தம் மொத்தம் தருநேயர்
சித்தம் சுத்தம் பெறுவாரே!
பொருள் விளக்கம்:
[நித்தம் = நடனம்; நித்தம்=தினமும; முத்தம்=அன்பு; பத்தம்=நன்றி, பத்தி]
சித்து சத்தென்னும் இறைமையின் தத்துவ ஸ்வரூபங்கள் இறுகிப் பிணைய,
ஆனந்தமென்னும் பித்தின் நிலை உச்சம் பெற,
நித்தமும் புதுமை விளங்கும்
ஆட்டத்தை இறைவன் ஆடுவான்! (அப்போது)
உரத்த குரல் கொண்டு
அன்போடும் நன்றியோடும் துதிபாடித்
தங்களின் அனைத்தையும் அர்ப்பணிக்கும் அன்பர்கள்
சித்த சுத்தி பெறுவார்கள்!
திரு சிவசிவா சுட்டிய பிழை திருத்தப்பட்ட பின்:
வண்ணச்சந்தம் (12) (9.5.2020)
சித்தசுத்தி
[தத்தந் தத்தந் தனதான]
சித்துஞ் சத்தும் பிணைசேர
உத்தம் பித்தம் தலையேற
நித்தம் புத்தம் புதிதாக
நித்தம் சித்தன் புரிவானே!
சத்தங் கத்தும் குரலாலே
முத்தம் பத்தம் கொடுபாடி
மொத்தம் தத்தம் தருநேயர்
சித்தம் சுத்தம் பெறுவாரே!
பொருள் விளக்கம்:
[நித்தம் = நடனம்; நித்தம்=தினமும்; சித்தன்=ஞானி,சிவன்; முத்தம்=அன்பு; பத்தம்=நன்றி, பத்தி; தத்தம்=அர்ப்பணித்தல்]
சித்து சத்தென்னும் இறைமையின் தத்துவ ஸ்வரூபங்கள் இறுகிப் பிணைய,
ஆனந்தமென்னும் பித்தின் நிலை உச்சம் பெற,
நித்தமும் புதுமை விளங்கும்
ஆட்டத்தை இறைவன் ஆடுவான்!
உரத்த குரல் கொண்டு
அன்போடும் நன்றியோடும் துதிபாடித்
தங்களின் அனைத்தையும் அர்ப்பணிக்கும் அன்பர்கள்
சித்த சுத்தி பெறுவார்கள்!
நல்வாழ்த்துகள்
கோபால்.
தந்தனந் தந்தத் ...... தனதான
.. தந்தனந் தந்தத் ...... தனதான
சந்ததம் பந்தத் ...... தொடராலே
.. சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே
கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
.. கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
.. சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
.. தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CD2B4DE4-4F0E-4D28-97AB-4A46C83E10B2%40gmail.com.
தெரியாமலே திருத்திவிட்டீரோ!
ந்த - என்ற இடத்தில் வல்லின ஒற்றும் அதனைத் தொடர்ந்து வல்லின உயிர்மெய் (அரிதாக இடையின உயிர்மெய்?) வரும்.
வண்ணச்சந்தம் (13) (10.05.2020)
உன்னருமை அறியேனே!
[தன்ன தனன தனதான]
அன்னை நினது மடிமீதிச்
சின்ன வுலக மதுபேணி
அன்ன வமுது வளிநீரும்
இன்னு மெணறு வளமாக
மின்னு மெழிலு மிசையாவும்
பின்னி முழுமை யுடனீயும்
தன்ன லமிறை கலவாத
உன்ன ருமையை அறியேனே!
பொருள் விளக்கம்
[இறை = சிறிது]
அன்னையே! உன்றன் மடிமீது இந்தச்
சிறிய உலகத்தைப் பேணிக் காத்து,
அமுதாகும் உணவையும் காற்றையும் நீரையும்
இன்னும் எண்ணற்ற வளங்களாக
மின்னுகிற இயற்கை எழிலையும் இசைமுதலான (இன்பம் தரும்) யாவற்றையும்,
ஒன்றோடொன்று இயையச் சேர்த்து முழுமையுடன் தந்திருக்கின்ற
தன்னலம் சிறிதும் கலவாத
உன் அருமையை நான் அறிந்திலேனே!
இந்தத்தாய் ஜகஜ்ஜனனீ!
... அனந்த்
Beautiful.... அனந்த்
வண்ணச்சந்தம் (14) (11.05.2020)
அருள்வானே!
[தனனந் தனனந் தனனத் தனத்த தனதான]
சிவனுஞ் சிவையுந் திமிலிற் பருத்த விடையேறிச்
...சிறுவன் குகனும் திகழக் களிற்று முகனோடு
கவருங் கலையுங் கமலக் கரத்தி னருளோடும்
...கமழுங் கவினென் கணிலெக் கணத்தி லுறுவேனோ
தவமும் பணியும் தணிவற் றியற்றி வருவோர்கள்
...தயவுஞ் சரணுஞ் சரணத் தலத்தி லடைவாரே
கவலும் கனலின் கணனைத் துதிக்க இலதாகும்
...கரமுஞ் சிரமுங் கழலிற் பதிக்க அருள்வானே!
பொருள்விளக்கம்:
சிவனும் அம்பிகையும் பருத்த திமிலுடைய இடபத்தில் ஏறி அமர்ந்திருக்க
சிறுவன் முருகனும் ஆனைமுகனோடு அங்கிருக்க,
தாமரை போன்ற அருட்கரங்களோடு வசீகரமான கலையுருவாய்க்
கமழ்கின்ற அழகை எப்போது நான் என் கண்ணால் காண்பேனோ?!
இடையறாது தவமும் தொண்டும் செய்து வருபவர்கள்
இறைவனின் தயவும், அவன் சரணத்தில் அடைக்கலமும் அடைவார்கள் !
கவலைகள் யாவும் தீக்கண்ணனைத் துதிக்க மறைந்து விடும்!
அவன் திருவடியில் கைகளையும் சிரத்தையும் பதிக்க அவன் அருள் புரிவான்.
நல்வாழ்த்துகள்
கோபால்.
மாமதுரை ஏகு பெருமானே!
[தானதன தானதன தான தனதான]
நாடுமுழு தாகவுனை நாடி வருவோர்கள்
தேடுவகை யாகவெரி தீயி லுடல்வேகும்
காடுதொறு மோடுவது, கால முணராமல்
ஆடுவது, சூடுமணல் ஆக மதுமூடச்
சூடுவது, போது(ம்)அதி சோக மொ(டு)அவாவும்
மாடு,நின தாசைமனை, மா(ல்)அய(ன்)இராசன்
பாடுமடி யார்,உனது பாலர் இவர்காணப்
பீடுகொடு மாமதுரை ஏகு பெருமானே!
பொருள் விளக்கம்:
மதுரை ஈசன் நாட்டை விட்டு அவன் விளையாடும் சுடுகாட்டில் சுற்றுவதைக் கண்டு அவனை நாட்டுக்கு அழைக்கும் பாடல்.
நாடுமுழுதாக உன்னை நாடி வருவோரும்
தேடும் வகையாக, எரியும் தீயில் உடல் வேகும்
சுடுகாடுதோறும் ஓடுவதும், காலம் போவதை உணராமல் அங்கே
ஆடுவதும், சூடுமணல் ஆகத்தை(=தேகத்தை) மூடுமளவு
சூடுவதும், போதும்! அதிசோகத்தோடு அவாவும் (=உன்னைக் காண ஆவல் கொண்ட)
உன் காளைமாடு, நினது ஆசைமனைவி, திருமால், அயன்(=பிரமன்), இராசன்(=நாட்டு மன்னன்),
பாடும் அடியார்கள், உனது பாலகர்கள், ஆகிய இவர்களைக் காணப்
பீடுகொண்டு(=பெருமையுடன்) மாமதுரைக்கு ஏகு(=வா), பெருமானே!
சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்
நாதனமை யாளுடைய நம்பனிட மென்பர்
வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன்
பாதமவை யோதநிகழ் கின்றபழு வூரே.
இது தேவாரத்தில் காணப்படும் சந்தங்களுள் ஒன்று.இதனைத் "தானதன தானதன தானதன தானா" என்று நோக்குக.உதாரணமாக:
... அனந்த்
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAMD-FzWOG54pNR80HPneTV929QPtU0FsVhy_ZErk3oJR_fX%3Dwg%40mail.gmail.com.
தற்போது உலவிவரும் தொற்றுநோயை உள்ளடக்கி
என்று தாங்கள் சொல்லவந்ததே தங்கள் பின்னூட்டத்தில் தொனிக்கிறது.தற்போது உலவிவரும் தொற்றுநோயை முழுதும் உலகிலிருந்து நீக்கக் கோரும் பிரார்த்தனையை உள்ளடக்கி
பாப்புனை மொழி அருள்க!
[தாத்தன தனனத் தனதன தனதன தனதான x 2 ]
(முன்னரை, பின்னரை அடிகளில் தனித்தனியே எதுகை காண்க)
கூப்பியு னெதிரிற் குனிகிற பணியது தருவாயேல்
......கூற்றுவ னருகிற் குறுகினு மிருதய(ம்) மருளேனே!
யாப்பினி லறிவுற் றனுபவ மிகுபவர் மகிழ்வாக
......யாற்றிழை புனலொத் தசைவுட னமுதென அழகாகப்
பாப்புனை மொழியைப் பரிவுட னருளுக! உறுபாவம்
......பாற்றிட உருகிப் பகலிர விசைகொடு பணிவேனே!
காப்புன தழகுக் கழலடி நிழலென மறவேனே!
......காற்றினி லகவற் கருமயி லிலுலவி வருவோனே!
பொருள்விளக்கம்
[குறுகுதல் = நெருங்குதல்; மருளுதல் = கலங்குதல்; யாறு = ஆறு; பாற்றிட = நீங்கிட]
உன் திருமுன் கூப்பிய கரங்களோடு பணிகிற பணியை நீ அருளினால்
கூற்றுவன் என்னை அணுகி வருகையிலும் மனம் கலங்கமாட்டேன்.
யாப்பறிவு பெற்றவரும் மகிழ்வடையும் வண்ணம்
ஆற்றின் நீரோட்டத்தின் அசைவையும் அழகையும் கொண்ட அமுதமான
பாடல்கள் எழுதும் கவித்துவ மொழியைப் பரிவோடு அருள்க! (அதைக்கொண்டு)
உற்ற பாவங்கள் விலக வேண்டி, பகலிரவாக உருகி இசையால் உன்னை வழிபடுவேன்.
எனக்குக் காப்பு அழகான உன் கழலடி நிழலே என்பதை நான் மறக்க மாட்டேன்.
அகவுகின்ற கருமயிலில் ஏறிக் காற்றில் உலா வருகின்ற முருகப் பெருமானே!
நல்வாழ்த்துகள்
கோபால்
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/863FBF0A-DD5D-4B3C-B67F-B2137F63E7C0%40gmail.com.
வண்ணச்சந்தம் (18) (19.06.2020)பாப்புனை மொழி அருள்க!
[தாத்தன தனனத் தனதன தனதன தனதான x 2 ]
(முன்னரை, பின்னரை அடிகளில் தனித்தனியே எதுகை காண்க)
கூப்பியு னெதிரிற் குனிகிற பணியது தருவாயேல்
......கூற்றுவ னருகிற் குறுகினு மிருதய(ம்) மருளேனே!
யாப்பினி லறிவுற் றனுபவ மிகுபவர் மகிழ்வாக
......யாற்றிழை புனலொத் தசைவுட னமுதென அழகாகப்
பாப்புனை மொழியைப் பரிவுட னருளுக! உறுபாவம்
......பாற்றிட உருகிப் பகலிர விசைகொடு பணிவேனே!
காப்புன தழகுக் கழலடி நிழலென மறவேனே!
......காற்றினி லகவற் கருமயி லிலுலவி வருவோனே!
--
வண்ணச் சந்தம் (20) [26/06/2020]பெரும் பெரியவர்[தத்ததன தத்ததன தத்ததனந் தனதனனந்தத்ததன தத்ததன தனதான]
....
புத்தரன சித்தரவர் அச்சுதனும் பரசிவனும்......புக்கமனி தப்பிறவி! அவர்நாடிப்......பொற்பதம் அகத்தினிடை வைத்தவரின் வழிமுழுதும்......புத்தொளிபெ றத்தருபெ ரியவாளே!பொருள் விளக்கம்
......