திருச்செந்தூர்க் கவிதைகள்

2 views
Skip to first unread message

Sai Ganesan H

unread,
Feb 28, 2026, 4:35:03 AM (yesterday) Feb 28
to santhav...@googlegroups.com
இரு நாட்களாக திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் ஷண்முகரைத் தரிசிக்கும் பேறு பெற்றேன். அப்பொழுது புனைந்த கவிதைகளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

1. வெற்றிவேர்ச் சப்பரம் ( வெண்பா) 

ஷண்முகவி லாசத்தில் ஷண்முகர்தான் வந்ததுமே

தண்மலரால் அர்ச்சிப்போம் தாள்வணங்கி- மண்காக்க

வெற்றிவேர்ச் சப்பரத்தில் வீதியுலா செல்வதற்காய்க்

கொற்றவனாய் நிற்பான் குகன்.


2. சிவப்பு சாத்தி ( வெண்பா)

சிவமாய் எழுகையில் சீர்ஷண் முகர்தான்

தவம்செய் பலன்கள் தருவார்- உவந்தே

குறத்தி மகள்தேவ குஞ்சரி யோடே

சிறப்பாய் அணிவார் சிவப்பு. 


3. வெள்ளை சாத்தி (வெண்பா) 

வெள்ளைநிறம் சாத்திய வேலவரே! வேண்டுகிறேன்

அள்ளி யருள்வாய் அருந்தமிழை- வள்ளிதெய்வ

யானையுறை ஷண்முகரே!  ஏழிசைக்காய்த் தந்தருள்வாய்

மோனை எதுகை மொழி. 


4. பச்சை சாத்தி ( வெண்பா) 

பச்சையணி ஷண்முகரைப் பக்தியுடன் நாம்வேண்ட

நிச்சயம் நல்குவார் நிம்மதியை- மெச்சுபுகழ்

நாதஸ் வரமழையில் நன்குநனை யும்மிரண்டு

கோதையர்கை பற்றியஅக் கோன். 


5. செந்தூர் ஷண்முகர் ( கட்டளைக் கலித்துறை) 

செந்தூரின் ஷண்முகா! சிங்கார வேலா! திருவருளும்

தந்தைக் கிளைய தனயனே! வேண்டிடத்  தந்தருள்வாய்! 

சொந்தமும் பந்தமும் சூழ்ந்தயில் வாழ்வில் சுகத்துடனே

விந்தை யுலகிலே மீண்டும் பிறவாநல் வீட்டையுமே. 


— சத்ய வேழன் H சாயிகணேசன்

28-02-2026







Ram Ramakrishnan

unread,
Feb 28, 2026, 8:23:41 AM (yesterday) Feb 28
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. சத்யவேழன்.

முதற்பாட்டின் முதல் சீரில் சண்முகன் என்னலாமோ?

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 28, 2026, at 04:35, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAOJiLF1pBkQvkFq%2BmX0g6uE2PVPqL48kga3R8qM5xiAsYx9dqA%40mail.gmail.com.

Sai Ganesan H

unread,
Feb 28, 2026, 8:41:02 AM (yesterday) Feb 28
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா! ஷண்முக விலாசம் என்பது திருச்செந்தூர் கோவிலுக்கு உள்ளே முகப்பினரிகிலுள்ள மண்டபம்.ஷண்முகர்  வீதி உலா தொடங்குவதற்கு முன்னால் இங்கு வைத்துத்தான் 
ஷண்முகர் அர்ச்சனை நடைபெறும். இந்த நிகழ்வைத்தான் வெண்பாவில் குறிப்பிட்டிருக்கிறேன். 

— சத்ய வேழன்.
28-02-2026

Siva Siva

unread,
Feb 28, 2026, 10:28:38 AM (yesterday) Feb 28
to santhav...@googlegroups.com
சில கருத்துகளைக் கீழே காண்க.

வி. சுப்பிரமணியன்

On Sat, Feb 28, 2026 at 4:35 AM Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:
இரு நாட்களாக திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் ஷண்முகரைத் தரிசிக்கும் பேறு பெற்றேன். அப்பொழுது புனைந்த கவிதைகளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

1. வெற்றிவேர்ச் சப்பரம் ( வெண்பா) 

ஷண்முகவி லாசத்தில் ஷண்முகர்தான் வந்ததுமே

தண்மலரால் அர்ச்சிப்போம் தாள்வணங்கி- மண்காக்க

வெற்றிவேர்ச் சப்பரத்தில் வீதியுலா செல்வதற்காய்க்

கொற்றவனாய் நிற்பான் குகன்.


==> 
வெற்றிவேர்...?  வெட்டிவேர்...?

/வீதியுலா செல்..../
ச் மிகும்.

 

2. சிவப்பு சாத்தி ( வெண்பா)

சிவமாய் எழுகையில் சீர்ஷண் முகர்தான்

தவம்செய் பலன்கள் தருவார்- உவந்தே

குறத்தி மகள்தேவ குஞ்சரி யோடே

சிறப்பாய் அணிவார் சிவப்பு. 


3. வெள்ளை சாத்தி (வெண்பா) 

வெள்ளைநிறம் சாத்திய வேலவரே! வேண்டுகிறேன்

அள்ளி யருள்வாய் அருந்தமிழை- வள்ளிதெய்வ

யானையுறை ஷண்முகரே!  ஏழிசைக்காய்த் தந்தருள்வாய்

மோனை எதுகை மொழி. 


==>
/வள்ளிதெய்வ யானையுறை ஷண்முகரே/ = ?

Sai Ganesan H

unread,
Feb 28, 2026, 7:59:00 PM (17 hours ago) Feb 28
to santhav...@googlegroups.com
தங்களின் கருத்துகளுக்கு நன்றி! 

வெற்றிவேர் என்றுதான் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்தது. 

வீதியுலாச் - ஒற்றுப்பிழை திருத்திக் கொள்கிறேன். 

தேவானையை தெய்வயானை என்று குறிப்பிட்டுள்ளேன்.



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Sai Ganesan H

unread,
Feb 28, 2026, 8:07:42 PM (16 hours ago) Feb 28
to santhav...@googlegroups.com
6. கவிஞர். மீ. விஸ்வநாதன் அவர்களின் ஈற்றடிக்கு ( சிறு மாறுதல்களுடன்) எழுதிய வெண்பா! 

ஈராறு கைகள் எழில்கொள் வதனங்கள்
ஓராறும் காக்கும் உலகோரைத்- தீராத
வல்வினைகள் தீர்க்கின்ற வல்லவனே! தந்தருள்வாய்! 
நல்லதே சொல்கின்ற நாக்கு. 

Siva Siva

unread,
Feb 28, 2026, 8:51:35 PM (16 hours ago) Feb 28
to santhav...@googlegroups.com

/வள்ளிதெய்வ யானையுறை ஷண்முகரே/ = ?

This phrase seems unusual.
வள்ளியும் தெய்வயானையும் உறைகின்ற ஷண்முகரே = ?

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
12:04 AM (12 hours ago) 12:04 AM
to santhav...@googlegroups.com
வள்ளியும் தெய்வயானையும் உறைகின்ற ஷண்முகரே = ?

இறுதியடியில்்விளாங்காய்ச்சீர் ஏற்கற் பாலது என்ற நோக்கிலா?


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 28, 2026, at 20:51, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Sai Ganesan H

unread,
12:58 AM (12 hours ago) 12:58 AM
to santhav...@googlegroups.com
வள்ளிதெய்வ ‘யானைமகிழ்’ ஷண்முகரே! என மாற்றிவிடுகிறேன். 

-சத்ய வேழன்
01-03-2026


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages