தவசி யர்க்கு சொல்கொடுத்த தாசரதீ!
தவறு டைத்த என்றனையும் காத்திடுவாய்
அவசி யத்தில் அடியேனும் அழைக்கின்றேன்
அஞ்ச லென்றே கரமென்பால் இட்டிடுவாய்
திவச முன்னை நினைக்காத நெஞ்சுடைத்தேன்
திசைமு ழுக்க வுன்கருணை காணவைத்தாய்
கவச மென்ன நின்நாமம் பாடவைத்துக்
கதியெ னக்கு யீயுமந்நாள் எந்நாளோ?