Are both spellings - மனோன்மனி - மனோன்மணி - accepted in Tamil?Just curious!
On Tuesday, December 8, 2015 at 8:16:12 PM UTC-8, siva siva wrote:Today a word happened to catch my eye.thevaaram.org uses the spelling மனோன்மனி in all songs where this word occurs.The last letter is னி (and not ணி).That spelling corresponds to what I see in Sanskrit dictionary:मनोन्मनी A form of Durgā.However, the Tamil dictionary uses a slight variation in the spelling - மனோன்மணி.மனோன்மணி maṉōṉmaṇi , n. < manōn- manī. Pārvatī; பார்வதி. (பிங்.)

கோபால்.நல்வாழ்த்துக்களுடன்,நகுபோலியன், தேவராஜ் ஆகியோர் சரியான விளக்கம் தருவார்கள்.மனோன்மணி என்பது தவறென்று தோன்றவில்லை. ஆனால் பொருள் வேறுபடும். மனத்தைக் கொள்ளைகொள்ளும் (அள்ளும்) மணி (கல்) என்ற பொருள் பொருந்தலாம்.மனோன்மனீ ( மனோன்மனி ) என்பதே பெரும்பாலான இடங்களில் இறைவியைக் குறிக்கப் பயன்படும் சொல்.மனோன்மனீ = மனத்தில் கிளர்ச்சி செய்பவள்; புத்துணர்ச்சி தருபவள்.
”பெருமாட்டியின் இரண்டு நகில்களும் செப்பை உவமையாக உரைக்கும் வடிவுடையன; அன்னையின் மருங்குலை வருத்துவன.
செப்பு உரைசெய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல்.
புணர்முலை-இரண்டு தனங்கள்; காமேசுவரனோடு ஒன்றுகின்ற தனங்கள் என்றும் சொல்லலாம். இத்தகைய மருங்குலையுடைய மனோன்மணி என்று அம்பிகையைப் புகழ்கிறார்.
மனோன்மனி என்பது தமிழில் மனோன்மணி என்று வந்தது. லலிதாம்பிகையின் திருநாமங்களில் மனோன்மணி என்பதும் ஒன்று. அத்திருநாமத்துக்கு மனத்தை ஞான நிலைக்கு எழும்புகிறவள் என்பது ஒரு பொருள். ஸ்ரீவித்யாஸ்வரூபியாகிய அம்மை ஞானத்தை அடியார்களுக்கு அருள்பவள். ஞானப் பெட்டகமாகிய வடிவை உடையவள். தன்னை விரும்பிக் குழந்தையாகியவர்களுக்கு ஞானப்பாலை ஊட்டுகிறவள். ஞானத்தின் உறைவிடத்தையே தனமாகக் கொண்டவள் என்று நினைத்தவுடன், அவள் ஞான நிலைக்கு மனத்தை ஏற்றும் தகைமையினள் என்ற நினைவும் வந்து, அதனைக் குறிக்கும் திருநாமமாகிய மனோன்மணி என்பதும் நினைவுக்கு வருகிறது. எல்லாவற்றையும் சேர்த்து,
புணர்முலையால் வருந்திய வஞ்சி
மருங்குல் மனோன்மணி
என்று பாடுகிறார்.
புருவ மத்திக்குமேலே பிரமரந்திரத்திற்குக் கீழே உள்ள இந்து முதலிய எண்வகை நிலைகளில் இறுதிநிலை உன்மனி அல்லது மனோன்மனியாகும். அவ்விடத்தே உறைதலின் அன்னைக்கு மனோன்மணியென்ற திருநாமம் வந்தது என்பது ஒரு சாரார் கொள்கை. மனம் பற்றற்றுச் சலனமற்று இயங்காமல் நிற்கும் நிலையை உன்மனி என்று கூறுவர். அந்த மனோலயத்தை அருளுவதனால் இந்தத் திருநாமம் வந்தது என்று சொல்வதும் பொருந்தும்.”
தெரிவு:
நா. கணேசன்