என் மனைவி பானு மறைந்து இன்றோடு பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.
ஈரைந் தாண்டுகள் ஏகி
விட்டன
என்னை விட்டவள் ஏகியே
வேரைச் சீரெனப் பாது காத்தவள்
விட்டுச்
சென்றனள் என்செய?
கூரை மீதிலே பொத்தல் பற்பல
கூடின
சரி யாயின
தேரை விட்டொரு தெய்வம் போனபின்
தேரைச் சுற்றியே பார்க்கிறேன்
காலம் இங்குக்க ழிந்து விட்ட
கணக்கை
எண்ணியே பார்க்கிறேன்
ஓலம் இட்டுநான் ஓய்ந்து போகவோ
ஓடுவேன்
இனும் ஓடுவேன்
ஞாலம் செய்திடும் நாட்டி யந்தனில்
நானும்
ஆடியே பார்க்கிறேன்
நீல வானினை நித்தம் காண்கிறேன்
நேசமந்த
நெ ருப்பிலே
புறத்தில் செய்வது மட்டு
மேயொரு
பூசனை எனச் சொல்வதோ
முறத்தி லேபுடை மூர்க்கம் தன்னிலும்
முந்தி
ஆடுமே தானியம்
மறத்தல் ஏதும னத்துள் வாழ்கையில்
மாளிகை புறத் தில்லையே!
பறக்கு மட்டும் பறந்து பார்க்கலாம்
பாதையில்
தடை இல்லையே!
இலந்தை
3-2-2026

இலக்கணம்.: எழுத்தெண்னிக்கை உண்டு. நேரசையில் தொடங்கினால் அடிக்குப் பதினெட்டு எழுத்துகள்.
நிரையசையில் தொடங்கினால் அடிக்குப் பத்தொன்பது எழுத்துகள்
தேரைச் சுற்றியே பார்க்கிறேன்
ஒவ்வொரு சொல்லும் உங்கள் அன்புத் துணைவியின் பிரிவுத்துயரம் இன்னும் உங்கள் மனத்தில் இருப்பதையும் உங்கள் இருவருக்கிடையே இருந்த/இருக்கும் அன்பின் ஆழத்தையும் வெளிப்படுத்துகிறது. நங்கநல்லூரில் உங்கள் இல்லத்திற்கு வரும்போதெல்லாம் அவர் விருந்து பரிமாறுவது நினைவுக்கு வருகிறது.
அன்புடன், அனந்த்
> தேரை விட்டொரு தெய்வம் போனபின்தேரைச் சுற்றியே பார்க்கிறேன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOCqY1jsR%2BQcerKekCfuhPL%3D6V6PA8feEW8_43uwDrMTw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAC64e_CaR6qTpL3181RqyBngEWLKeb%3DYOptfwsfQ-8jw%40mail.gmail.com.