சன்மார்க்கக் கவிதைகள்

50 views
Skip to first unread message

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Oct 4, 2025, 2:36:15 PM10/4/25
to சந்தவசந்தம்

திருஅருட்பிரகாச வள்ளலார் 
வருவிக்க உற்ற நாள் அக்டோபர் 5 

சன்மார்க்கக் குறள் வெண்பா 

அல்லல் அகற்றும் அருட்பா அமுதத்தை
சொல்லித் துதிக்கச் சுகம் 1

ஆரமுதை உண்டார்க் கழிவில்லை ஆகவே
ஊரமுதை உண்ணா தொழி 2

அன்புடன் வாழ்வார்க் கழிவில்லை ஆருயிரைத்
துன்புறுத்த  துன்பம் துணை 3

வானுள்ளோர் போல மரணமில்லா வாழ்வுதரும்
ஊனுண்னார் வாழும் உலகு 4

சன்மார்க்கச் சங்கத்தைச் சார்வார்க் கழிவில்லை
இன்பமாய் வாழ்வார் இசைந்து 5

இயற்கை இறைவனை ஏத்தினார்க் கில்லை
செயற்கை மரணச் செயல் 6

கரிசாலை தூதுவளை காலை புசிப்பான்
மரிக்கா நிலைபெறு வான் 7

மதம்பிடியா மக்களெலாம் மாநிலத்தில் என்றும் 
இதமோடு வாழ்வார் இசைந்து 8

பயமின்றி பாருலகில்  பற்றனைத்தும் விட்டு
தயவுடன் நிற்றல் தவம் 9

கள்ளப் புலனால் கடவுளைக் காணச்செல்
வள்ளல் பெருமான் வழி 10

Ram Ramakrishnan

unread,
Oct 4, 2025, 9:47:46 PM10/4/25
to santhav...@googlegroups.com
மிக அருமையான குறட் பாக்கள், திரு. தங்கவேல்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 5, 2025, at 00:06, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/fe18e3de-3d41-4729-ab8a-f305645a0036n%40googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Oct 5, 2025, 10:45:00 AM10/5/25
to சந்தவசந்தம்
சன்மார்க்கக் கலிவெண்பா 

AI தொழில்நுட்பத்தில் பாடலைக் கேட்க

அன்னை வயிற்றுள்ளே அல்லல் அடைந்தோமே
பின்னர் பிறந்து பிதற்றித் திரிந்தோமே
எல்லை  இலாத இறைவனே எங்குள்ளாய்
கல்லில் இருப்பாயோ காற்றில் இருப்பாயோ 
கண்ணில் படுவாயா காண விழைகின்றேன்
கண்டால் களிப்பேனே காணத் துடிக்கின்றேன்
கண்ணீர் விடுகின்றேன் கண்ணீர் விடுகின்றேன் 
மண்ணில் வரும்போரால் மாந்தர் பெருந்துன்பம்
பட்டே இறப்பாரே பச்சை மரமெல்லாம்
பட்டே விழுந்திடுமே பாவம் உயிரெல்லாம் 
மாயும் அதனாலே வள்ளல் பெருமான்போல் 
காயம் இறக்காத காலம் வரவேண்டும்
சாதி மதத்தாலே சண்டை இனிவேண்டாம் 
சோதி வடிவாகத் தோன்றி அருள்வாயே
அன்பே வடிவான ஐயா அருள்வாயே
துன்பம் இனிவேண்டாம் தூயா அருள்வாயே
என்றும் இறப்பில்லா இன்பம் அருள்வாயே
உன்னை மறக்காத உள்ளம் அருள்வாயே
உண்ண உணவின்றி உள்ள உலகோரும்
உண்டுப் பசியாறி உன்னைத் தொழவேண்டும்
ஊனே உணவென்றே உண்டுத் திரிவோரும் 
தானே மனம்மாறத் தாயே அருள்வாயே
தீய குணத்தார் திருந்தி விடவேண்டும் 
நேய மனத்தோடு நின்னைத் தொழவேண்டும்
ஊரமு துண்டுண் டொழியா தினிமக்கள் 
ஆரமு துண்ண அறிவைத் தரவேண்டும்
கள்ளுக் கடையில்லா காலம் வரவேண்டும் 
வள்ளல் பெருமானே மண்ணில் இனிமேலோர் 
போரும் நடந்தால் புவியில் உயிரெல்லாம்
சோரும் அதனாலே சோதி வடிவாய் 
இறைவா அருளாய் இசைந்து . 

On Sunday, October 5, 2025 at 7:17:46 AM UTC+5:30 Ram Ramakrishnan wrote:
மிக அருமையான குறட்பாக்கள், திரு. தங்கவேல்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

மிக்க நன்றி ஐயா  

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jan 31, 2026, 8:47:05 PM (6 days ago) Jan 31
to சந்தவசந்தம்

சிந்தனை அமுதப் பத்து

https://youtu.be/wmvgqDyUc18?si=-VQawuRIBXCJMBO9

 👆Presenting the devotional song “Sinthanai Amutha Pathu”,
a Tamil devotional composition in Aruseer Virutham,
based on the Sanmarga philosophy of
Thiru Arutprakasa Vallalar.


சிந்தனை அமுதப் பத்து

       (அறுசீர் விருத்தம்) 


மன்னும் உலகில் மனிதர் வாழ

  வள்ளல் பெருமான் வழியில் சென்றால் 

துன்பம் நிறைந்த வாழ்வும் மாறும் 

   துணையாய் வருவார் அருளைத் தருவார்

இன்பம் பெற்று நலமாய் வாழ

   இனிக்கும் அருட்பா அமுதை நாளும் 

இன்னும் கொஞ்சம் சிந்திப் போமே

   இறப்பைத் தவிர்த்து வாழ்வோம் இனிதே 


சரணம் என்று சன்மார்க் கத்தில்

    சார்ந்து பயின்று ஞானம் பெற்று

மரணம் என்னும் செயலை மாற்ற

   வள்ளல் பெருமான் வழியில் செல்லும் 

தருணம் இதுவே தருணம் இதுவே

   தயக்க மின்றி வாரீர் வாரீர் 

அருட்பா என்னும் அமுதக் கடலை

   ஆழ்ந்து நாளும் சிந்திப் போமே 


சாதி மதத்தை முற்றும் விட்டு

   சன்மார்க் கத்தில் இணைவோம் இன்று 

சோதி வடிவ மான ஞான

  சுத்த சிவத்தைக் கருணை யாலே

ஓதி உணர்ந்தே உண்மை அறிவோம் 

     உடலை வளர்க்கும் உபாயம் அறிவோம் 

நீதி நிறைந்த  அருட்பா  அமுதை

   நித்தம் நித்தம் சிந்திப் போமே 


கரிப்பான் தூது முசுக்கை ஆரை

  காலை நாளும் உண்டே வந்தால்

சரியும் உடலின் பிணிகள் நீங்கித்

   தங்கம் போல மின்னும் மேனி

மரியா நிலையும் பெறுவாய் என்று

  வள்ளல் பெருமான் வகுத்துத் தந்த 

அரிய அறிய அருட்பா அமுதை

  அமரர் ஆகச்  சிந்திப் போமே


நெற்றிக் கண்ணைத் திறக்கும் சாவி

    நெஞ்சில் கருணை வந்தால் கிட்டும் 

கற்று மறவாக் கல்வி கற்றுக்

     காலம் கடந்து வாழ்வோம் வாழ்வோம்

சற்றும் தயக்கம் இன்றி என்றும் 

   சாகா வரத்தை அளிக்க வல்ல

வெற்றி வள்ளல் தந்த அமுதை

   மெல்லப் பருகிச் சிந்திப் போமே


பயந்து பயந்து வாழ வேண்டாம் 

   பணத்தில் மோகம் கொள்ள வேண்டாம் 

மயக்கம் கொண்டு வாழ வேண்டாம் 

  வள்ளல் பெருமான் வழியில் சென்று 

தயவு நிறைந்த மனிதர் ஆகிச்

  சன்மார்க் கத்தைச் சார்ந்து வாழ்வோம் 

உயர்ந்த அருட்பா அமுதை நாளும் 

   ஓதி உணர்ந்து சிந்திப் போமே


அள்ளிப் பருக அமுதம் இருக்க

    அழிவை அளிக்கும் கள்ளை உண்ணேல்

கள்ளம் நிறைந்த எண்ணம் வேண்டாம் 

     களவு காமக் குரோதம்  வேண்டாம்

உள்ளத் தினிலே ஒளியுண் டாக

    உண்மை ஞானத் தெளிவுண் டாக

வள்ளல் தந்த அருட்பா அமுதை

   வாழ்வு மலரச் சிந்திப் போமே


உறங்கும் போதும் கவனம் வேண்டும் 

     உணவில் என்றும் கவனம் வேண்டும் 

உறவின் போதும் கவனம் வேண்டும்

    ஒழுக்க முறையை ஓம்ப வேண்டும் 

அறத்தில் வழியில் நடத்தல் வேண்டும்

     அன்பு கொண்ட நெஞ்சம் வேண்டும் 

இறப்பை அறுக்கும் அருட்பா அமுதை

      இன்னும் கொஞ்சம் சிந்திப் போமே


இருளை அகற்றி இன்பம் அளிக்கும் 

    எல்லா உயிர்க்குள் உயிராய் இருக்கும் 

கருணை நிறைந்த கடவுள் தன்னை 

    காயத் தினிலே காணும் வழியை

அருளும் வள்ளல் வழியில் செல்வோம் 

    அன்பைப் பகிர்ந்து மகிழ்ச்சி கொள்வோம் 

பெருமை மிக்க அருட்பா அமுதை

      பேணிப் போற்றிச் சிந்திப் போமே


கொல்லா விரதம்  உலகில் எங்கும் 

    குடிகொண் டாலே  நலமே விளையும் 

எல்லா உயிரும் வாழும் வாழ்த்தும் 

  இன்னல் தீரும் இன்பம் பெருகும் 

அல்லல் அகற்றும் அருட்பா அமுதை

   அல்லும் பகலும் சிந்திப் போமே

சொல்லித் துதித்தால் வள்ளல் புகழைச்

   சொர்க்கம் ஆகும் இந்தப் புவியே


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

பிற்குறிப்பு


பாடல் விவரங்கள்:
பாடல் வரிகள் : காஞ்சிபுரம் க. தங்கவேல்
குரல் & இசை : Suno AI
படம் உருவாக்கம் : ChatGPT & Pika AI
வீடியோ எடிட்டிங் : YouCut

இந்தப் பாடல்“சந்தவசந்தம்” Google Group-இல்
நடைபெற்ற கவியரங்கத்திற்காக எழுதப்பட்டது.

Kaviyogi Vedham

unread,
Feb 1, 2026, 11:02:23 AM (6 days ago) Feb 1
to santhav...@googlegroups.com
attagaasam. kavi vaazga,  yogiyaar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Swaminathan Sankaran

unread,
Feb 1, 2026, 11:50:48 AM (6 days ago) Feb 1
to santhav...@googlegroups.com
நன்று.

சங்கரன் 



--
 Swaminathan Sankaran

இமயவரம்பன்

unread,
Feb 1, 2026, 2:23:30 PM (5 days ago) Feb 1
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமை, திரு. தங்கவேல்
Reply all
Reply to author
Forward
0 new messages