On Oct 5, 2025, at 00:06, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/fe18e3de-3d41-4729-ab8a-f305645a0036n%40googlegroups.com.
மிக அருமையான குறட்பாக்கள், திரு. தங்கவேல்.அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
சிந்தனை அமுதப் பத்து
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/f995cf6d-9f60-435b-929a-1362a2af6b8cn%40googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-K%2BGnV7WNMc4%2BCAKsusufTOOJmcrwLtp6NzX1XcK8%3D83w%40mail.gmail.com.
காய் இருக்க பயமேன். காய்கறிகளை சமைத்தால் உணவாகிறது. காய்கறிகளை அரைத்து சாறாக பருகினால் மருந்தாகிறது. காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் ஞானமாகிறது. மேன்மையான குணங்களை தன்னகத்தே பெற்றுள்ளதால் இறைவனுக்கு நன்றி செலுத்த காய்கறிகள் படைக்கப்படுகிறது. பிறவிக்குறைகளையும் நீக்கும் வல்லமை படைத்ததால் காய்கறிகளை நீத்தோருக்கு படையலாக்கி அவர்களுக்கு ஞாபகமூட்டப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ளதால் உடலை கழிவில்லா பொக்கிஷமாக்கிறது. ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் உடலை பலமாக்குகிறது. அதாவது நோய் வராது வரும் முன் காக்கின்றது. ஆங்காங்கே கிடைக்கும் காய்கறிகள் தானியங்கிகளுக்கு மாற்றாக சத்தான உணவாகின்றது. காய்கறிகளின் கழிவுகளை கொண்டு சிறிய அளவில் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் உள்ள கழிவுகள் விவசாயத்திற்கு உரமாகின்றது. பிரித்தெடுத்த நார்ப்பொருட்களை கொண்டு பல தொழில் நுட்பத்தின் துணையால் பல்வேறு பொருட்களை தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றது. காய்கறிகளை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்த முடியும். அதற்கு உதாரணம் இராஜஸ்தானில் விளையும் கொத்தவரங்காயை ஏற்றுமதி செய்யப் படுவதால் அம்மாநிலத்தின் தனி நபர் வருமானம் மேம்பட்டுள்ளது. நாட்டின் பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதில் காய்கறிகள் அங்கம் வகிக்கின்றது. இத்தனை சிறப்புகளை பெற்றுள்ள காய்கறிகளை முழுமையாக நாம் பயன்படுத்துகின்றோமா? என்றால் நிச்சயம் இல்லை. தேங்காயை வழிபடும் ஓர் இனம் அதன் மேல் தோஷம் போடுவது அறிவியலா? அல்லது அறியாமையா? என்று சிந்தித்து செயல்படவேண்டிய தருணம் இது. நாட்டுக் காய்கறிகள் வீர்யம் வாய்ந்தது.
உதாரணத்திற்கு
ஜீரண மண்டலத்திற்கு வெண் பூசணிக்காய், சிறுநீரக மண்டலத்திற்கு கத்திரிக்காய், நரம்பு மண்டலத்திற்கு கொத்தவரங்காய், வாயு மண்டலத்திற்கு புடலங்காய், தசை மண்டலத்திற்கு அரசாணிக்காய், தோல் மண்டலத்திற்கு கோவைக்காய், சுவாச மண்டலத்திற்கு முருங்கைக்காய், நிணநீர் மண்டலத்திற்கு பீர்க்கங்காய், எலும்பு மண்டலத்திற்கு தேங்காய், நாளமில்லா சுரப்பி மண்டலத்திற்கு எலுமிச்சை, நாளமுள்ள சுரப்பி மண்டலத்திற்கு வெண்டைக்காய், இரத்த ஓட்ட மண்டலத்திற்கு வாழைக்காய், என உடலின் முக்கியமான மண்டலத்திற்கு இந்த காய்கறிகளின் பங்கு அவசியமாகின்றது.
காய்கறி வைத்தியம் விருத்தம்
...
வாழைக்காய் இதயத்தை வலுப்படுத்தும் காயாகும்வாழைப்பூ பெரும்பாடு வலிநீக்கும் மாமருந்துஏழைக்குக் கிடைக்கின்ற எளிதான காய்தானேவாழைக்காய் உண்பார்கள் வாழ்வாங்கு வாழ்வாரே
...
On Feb 18, 2026, at 08:44, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPys72mC437gMTNaRn_aEBDPY86Cr5EDz541psU%3D__XAw%40mail.gmail.com.
அருமையான சன்மார்க்க விருத்தம், திரு. தங்கவேல்.அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
தொன்றுதொட்டு இருக்கும் காய்கறி வைத்தியத்தைப் பழவைத்தியம் என்று சொல்வது பொருத்தமன்றோ! :)வி. சுப்பிரமணியன்
காய்கறி வைத்தியம் விருத்தம்
அசைவத்தைத் தின்னாதீர் ஆபத்தோ ஆபத்து
பசிவந்தால் காய்கறியைப் பக்குவமாய் உண்டுவரவிசைகொண்ட வியாதிகளும் விலகிடுமே மக்களுக்குத்
திசையெங்கும் சென்றுரைப்பீர் சிறப்புடன்நாம் வாழ்ந்திடவே
பரங்கிக்காய் என்றதனைப் பாரோர்கள் அழைக்கின்றஅரசாணிக் காயுண்ண அற்புதங்கள் நிகழ்ந்திடுமேதரமாக உறுப்புகளின் தசைமுழுதும் வலுப்படுத்தும்வரம்பில்லாச் சத்துள்ள மஞ்சளான காய்தானே
மாபறங்கிக் காய்தானே - may possibly fit mOnai and will explicitly indicate the vegetable name.V. Subramanian
On 7 Apr 2026, at 3:57 PM, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/8399024a-df06-4799-96c9-64a70c31d3a3n%40googlegroups.com.
மிக அருமை, திரு. தங்கவேல்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/43c3db22-8aaa-4964-b3c7-8fa62afe1938n%40googlegroups.com.
தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது
பாராப் பராபரம் பார்.பர, அபர வித்தைகள் காணாதோருக்குத் சொல்ல முடியாத தூரமாயும், கண்டவருக்கு வெகு அருகிலும் இருக்கும்.On Tue, Apr 14, 2026 at 9:47 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:ரா எதுகை சிறப்பு.தமிழ் நாட்டில் பலவருடங்கள் உயர்ந்த கட்டடம் எல்.ஐ.சி. கட்டடம் தான். தமிழகம் கொணர்ந்தவர் இருமொழிகளில் நல்ல தேர்ச்சியாளர். தமிழ்ப் புரவலர். நாராயணசாமி அவர்கள். அவரது மகள் உஷா திருமணத்தின்போது பாரதிதாசன் பாடிய ஒரு விருத்தம்ரா வர்க்க எதுகையை நினைவூட்டுகிறது.ஒரேகாதல் பாட்டுப் பாடும்
இரண்டுள்ளம் ஒன்றை ஒன்று
சரேலெனத் தழுவக் கண்டோம்
தங்கத்து மணவ றைக்குள்!
வரா இன்பம் வரப்பெற் றார்கள்
மணமக்கள் குறைவோ ஒன்றும்
இராஇல்ல றத்தேர் தன்னை
இழுப்பார்கள் புகழூர் நோக்கிஇணையப் பல்கலைத் தளத்தில் பல பக்கங்கள் திறப்பதில்லை. அரசாங்க வேலைதானே!----------------போப்பையர் அறிவுறூஉ அமெரிக்க ஜனாதிபதி செவியேறின் உங்கள் விழைவு நிறைவேறும்.
தமிழ்ப் புது வருட வாழ்த்துடன்,நா. கணேசன்
On Mon, Apr 13, 2026 at 10:04 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
தமிழ்த் புத்தாண்டு வெண்பாபராபவ வந்தது பாரிலினி போரும்இராதபடி செய்வாய் இறைவா - இராசாநிராகுலா மக்களினி நித்தியமாய் வாழவராம்ருதா வாராய் மகிழ்ந்து.
Kanchipuram K Thangavel
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUdXwxDP_E7eRyKyq4-Rh0HaFvpsemd%2BEJ70SMBOT%3DqrvA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKMOGcBYHMAsXm2UXWYKkg1kPk8mD%3Du%3Dgpqi%2BM5vb_hT1fJRvA%40mail.gmail.com.
ஆமாம், கணேசன் ஐயா,பல நாட்களாக இணையப் பல்கலைக் கழகத்தின் 'திருவருட்பா' பகுதியின் பக்கங்கள் திறப்பதில்லை. அடியேனும் கிடைத்த சில முகவரிக்கு ஈமெய்ல் அனுப்பினேன். பதில் ஒன்றும் கிட்டவில்லை ; பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை.உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் அந்தக் குழுவில் இருந்தால் அவர்களுடன் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கொண்டு தரும்படி ஏற்பாடு செய்ய முடியுமா ?அன்புடன்,குமார் (சிங்கை)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/8d6b8f09-91a4-4341-b637-b9ea999a2d05n%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/45157ea3-ef83-4065-a15e-e479f8834e03n%40googlegroups.com.
சுத்த சன்மார்க்க சாதகர்கள் எக்காலத்தும் புழுக்காதிருக்கிற வஸ்துவைக் கொள்ளல் வேண்டும். புழுக்காத வஸ்துக்கள் யாவெனில்:- சர்க்கரை, தேன், கற்கண்டு, வெல்லம், அயம் முதலிய செந்தூரம், தாமிர முதலிய பஸ்பம். ஆதலால் அவசியம் ஆகாரத்திற்கு முக்கிய வஸ்து மேற்குறித்தவை பரியாயத்தில் சர்க்கரையென்று லவணத்தைச் சொல்லுவதுமுண்டு. மேற்படி லவணத்தைத் துரிசு போக்கி ஜய லவணமாய்க் கட்டி ஆகாரத்தில் கொண்டால் தேகம் நீடிக்கும். இதன்றி, சத்வ பதார்த்தத்தில் லவணம் சிறுகச் சேர்த்துக்கொள்ளவுங் கூடும்.
சன்மார்க்க ஆகாரம்
நெய் பால் தயிர் மோர் - இவைகளை ஆகாரத்தில் விசேஷம் சேர்ப்பது தேக நஷ்டம். மனிதர்களுக்கு எல்லாத் தாதுக்களிலும் முதல் தாது கொழுப்பு. அதன் சத்து நெய். அதை எடுத்தால் தேக நஷ்டம். இதுபோல் பசுக்களினது முதற்றாது நெய். ஆதலால் அதையெடுப்பது சுத்த சன்மார்க்க மரபல்ல. சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்து கொள்வதற்காவது புறப்புறவமுதம். ஆதலால், ஊற்றுநீர் பொற்றலைக் கரிசலாங்கண்ணி வாழை தென்னை முதலியவற்றின்மேல் பெய்கிற பனிசலம் மழைச்சலம் - இவைகள்தான் சுத்தசலம் அல்லது அமுதம். அல்லது சாதாரண ஜலமுங் கொள்ளலாம். அதாவது மேற்குறித்த ஜலத்தை 5-ல் 3, 5-ல் 2 பாகம் நிற்கக் காய்ச்சி, சர்க்கரை வெல்லம் இவைகளைச் சேர்த்துக் குடிக்கலாம். இவைகள் தேகவிருத்தி செய்யும். சுத்த சன்மார்க்க மரபிற் குரியது இனிப்புத்தான். ஆதலால் தேன் சர்க்கரை கற்கண்டு வெல்லம் இவைகளை ஆகாரத்தில் சேர்த்துக் கொள்வது உத்தமம்.
உப்பு
தேக நஷ்டஞ் செய்வது உப்பு. உப்பைக் கட்டி யாகாரத்திற் சேர்ப்பது சித்தமார்க்கம்.
சர்க்கரை
சர்க்கரை எந்தக் காலத்திலும் புழுத்தலின்றாகலி னுத்தமவாகாரமாம். மற்ற வஸ்துக்கள் எல்லாம் புழுக்கும்.
சன்மார்க்க ஆகார விலக்கு
சுத்த சன்மார்க்க சாத்தியர்கள் நெய் முதலிய வஸ்துக்கள் கொள்ளப்படாது. அதுபோல் சாதகர்களும்....ஒருவாறு கொள்ளப்படும். ஏனெனில், ஓர் தேகத்திலுள்ள தாதுக்களில் முதல்தாது கொழுப்பு, அதின் அம்சமே பால், அதின் அம்சம் நெய், மேற்படி ஆபாசம் மோர் தயிர். ஆதலால், மேற்படி கொழுப்பு வெளிப்பட்டால், மேற்படி பசுவின்கண் கெடுதியும் நேரும். ஆதலால் கொலை. கன்றுக்கு ஒருவாறு விட்டு பாலை கிரகிக்கலாம். ஆதலால், இஃதால் ஜீவ இம்சை நேருதலால், மேற்படி வஸ்துக்கள் கொள்ளலாகாது; நேராத பக்ஷத்தில் கொள்ளலாம்.
சாதம்
சாதம் வடித்துச் சாப்பிடுதல் நலமா, பொங்கிச் சாப்பிடுதல் நலமா எனில்:- வடித்துச் சாப்பிடுவது அதிலுள்ள எண்ணெய் போய் விடுவதால் நலம். பொங்குவதில் எண்ணெய் போகாது; தாமச குணம் உண்டாகும். இதுபோலவே உப்பு, புளி, மிளகாய் முதலிய வஸ்துக்களின் எண்ணெய் போகச்சுட வைத்துச் சாப்பிடுதல் வேண்டும். பச்சரிசி என்பது இப்போது கொண்டுவருவது அல்ல... மேலும் உஷ்ணத்தை உண்டுபண்ணக்கூடிய ஆகாரங்கள் கொள்ளுதல் வேண்டும்.
116. வெந்நீர்
அண்டத்தையும் பிண்டத்தையும் ஓருங்கே வளர்ப்பது புறப்புற அமுதம். ஆதலால் அஃதே கொள்ளல் வேண்டும். யாதெனில்:- ஊற்றுநீர், பொற்றலை, வாழை, தென்னை முதலியவற்றின் பேரிலுள்ள பனிஜலம், மழைஜலம் - இவைகள் கொள்ளலாம்; சாதாரண ஜலங்கொள்ளுவது கெடுதி. ஏனெனில் மேற்படி ஜலத்தில் மூன்று குணமுண்டு. எனைஎனில்: விஷம், பூதம், அமுதம். இம்மூன்று மொன்றாகவே இருக்கும். எப்படியெனில்: மேல்பாகத்தில் சிலிர்ப்பாகிய விஷமும், அதனடியில் ஏகதேசம் சுடுகையுள்ள பூதமும், அதனடியில் விசேஷ உஷ்ணமுள்ள அமுதமும் கூடி ஒன்றாயிருக்கும். மேற்படி ஜலத்தினது குணங்கள் ஆவன: பூதஜலம் தத்துவ விருத்தி செய்யும்; அமுதஜலம் பிராணசக்தி செய்யும்; விஷஜலம் தத்துவத்துரிசைப் போக்கும். ஆதலால் இடபேதத்தால் மேற்படி நீர்கள் தனித்தனியாகவுமுள்ளன; ஒவ்வொன்றில் மும்மூன்றாகவும் விரியும். ஆதலால், மேற்படி சுத்தாமுதங்கிடையாத பக்ஷத்தில் இதர ஜலங்களைப் பச்சையாகக் கொள்ளப்படாது; வெந்நீராகக் கொள்ளுதல் வேண்டும். அந்நீரும் ஐந்து மூன்றும் ஐந்து இரண்டுமாகக் காய்ச்சி, சர்க்கரை வெல்லம் கற்கண்டு - இவைகள் சேர்த்துக் கொள்ளவும். நேராத பக்ஷத்தில், தென்னை நாயுருவி வாழை முதலிய வஸ்துக்களைச் சம்பந்தப்படுத்தியாவது, சூரிய கிரணத்தில் வைத்தாவது, சூரியசரத்தால் பார்த்தாவது, சிகரத்தை உன்னியாவது கொள்ளல் வேண்டுமேயல்லது பச்சையாய்க் கொள்ளப்படாது. சநிநீராடென்று சொல்வது சநி போன்ற கருமையான கருகியநீராலாடென்று சொன்னது. யாதெனில் வெந்நீர், ஒருவாறு ஊற்றுநீர். இதன்றி - மற்றப்படி - சொல்வது தெரியாமை.
வெந்நீர்
சுத்த சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்தல் வெந்நீராதலால். எக்காலத்தும் சுத்தஜலம் சேர்க்கக்கூடாது. பச்சை ஜலத்தினிடத்தில் மூன்று குணமுண்டு: விஷஜலம், பூதஜலம், அமுதஜலம். இந்த மூன்றும் ஒன்றாகவே இருக்கும். ஜலத்தின் மேல் பாகத்தில் விஷமாகிய சிலிர்ப்பும், அதனடியில் கொஞ்சம் சுடுகையுள்ள பூதமும், அதனடியில் விசேஷம் சுடுகையுள்ள அமுதமுமாக இருக்கும். பூதஜலம் தத்துவ விருத்தி செய்யும். அமுதஜலம் பிராணவாயுவை விருத்தி செய்யும். விஷஜலம் ஆபாசநீர்களாகப் பற்றும். ஆதலால் பச்சைஜலம் கொள்ளப்படாது. வெந்நீர் நேரிடாத பக்ஷத்தில், சர்க்கரை நாயுருவி தென்னை வாழை முதலிய வஸ்துக்களைச் சம்பந்தப்படுத்தியாவது கொள்ள வேண்டும்.
குளிர்ந்த ஜலம்
காலங்கடந்து குளிர்ந்த ஜலத்தில் குளித்து ஈர உடையுடன் இருப்பது தேகக்கெடுதி. குளிக்க வேண்டுமானால் வெந்நீரில் குளிக்க வேண்டும்.
117. கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
கரிசாலையை தினந்தோறும் பச்சையாகவாவது சமையல் செய்தல் முதலிய வகையாலாவது சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பாகியதை நீடிக்கப் பண்ணும். மேற்குறித்த மூலிகையை அலக்ஷியம் செய்யாது ஆசாரியன் திருவடியின் கண்ணே இலக்ஷியம் வைத்து, எவ்வித தந்திரத்தினாலாவது தினம் தினம் உட்கொண்டால், தேகக் கெடுதியாகிய அசக்தம் நீங்கி, தேகம் வலுவுள்ளதாய் நெடுநாளைக்கு இருக்கும். முத்தியடைவதற்கு சகாயமாயுமிருக்கும். மகான்களிடத்தில் அனந்த காலம் காத்தாலும் மேற்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் வெளியிடார்கள். பரம கருணாநிதியாகிய நம் தலைவனால் கிடைத்தது. அசட்டையின்றி உட்கொள்ளல் வேண்டும். மேற்குறித்த மூலிகை ஜலமில்லாத இடத்தில் இருக்கிறது விசேஷ நன்று. ஜலமுள்ள இடத்திலுள்ளதில் காரமிராது. தந்தசுத்தி செய்து அண்ணாக்கில் தர்ஜனி விரலால் தேய்க்க - மேற்குறித்த மூலிகையால் - பித்தநீர் கபநீர் வெளியாகி, கண்ணொளி விசேஷ’க்கும். நேராத பக்ஷத்தில் பொற்றலைக் கையாந்தக்கரை கூடும். மேற்குறித்த மூலிகை செந்தூரம் செய்வதற்குச் சிறந்தது. உலர்த்திக் குழித்தயிலம் வாங்கியும் செந்தூரஞ் செய்யலாம். அது போலவே, அறிவை விளக்குவதற்கும், கவனசத்தி உண்டுபண்ணுவதற்கும், கரணம் ஓய்வதற்கும், கபத்தை அரிப்பதற்கும் யோக்கிதையுடைய ஓஷதி தூதுளை. அதை மேற்குறித்தபடி அனுஷ்டித்தால் விசேஷ நன்மை செய்யும். கரிசாலை தந்த சுத்தியால் வசீகரமும் நேரிடும். உண்மை.
கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
கரிசலாங்கண்ணியைப் பச்சையாகவாவது அல்லது சமையல் செய்தாவது தினந்தோறும் அனுஷ்டானம் செய்துவர வேண்டும். தேகம் திடமுள்ளதாகி நெடுநாளைக்கிருக்கும். தூதுளையையுமப்படியே சேர்த்துக் கொண்டு வந்தால், புத்தியை விகாசப்படுத்தும்......
வள்ளலார் பெருமான் உபதேச குறிப்பை முழுவதும் படிக்க
https://www.vallalar.org/Tamil/VORG000000047B
சன்மார்க்க அட்டகம்
( இலிங்காஷ்டகம் அமைப்பைத் தழுவி எழுதப்பட்டது.மூன்றடி மேல் மூன்றடி வைப்பு.இறுதி அடிகள் வள்ளலார் கூறிய மகா மந்திரம்அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதிதனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி)
...
விளம் விளம் விளம் தேமா என்ற அமைப்பில் இயற்றிய அட்டகம் நன்று.லிங்காஷ்டகம் சந்தப் பாடல்.வி. சுப்பிரமணியன்