உ
வெண்பாக் கவியரங்கம்
1 . கண்ணெல்லாம் ஆகுமோ கண்
தித்திக்கும் கோவா திரட்டும் திருவில்லிப்
புத்தூர்க் கொருநாள்தான் போய்வந்தே-இத்தரைகொள்
விண்ணுயர் கோபுர மேன்மையைக் காணாத
கண்ணெல்லாம் ஆகுமோ கண்.
2. பொந்துக்குள் இன்னுமொரு பொந்து.
எம்மூரின் வான்குருவி இட்டமுட்டை காக்கத்தான்
தம்வீட்டைக் கட்டுமே தச்சனைப்போல்-கம்பத்தில்
பந்துபோல்த் தொங்கும் பறவைவாழ் கூட்டில்பார்
பொந்துக்குள் இன்னுமொரு பொந்து.
3. நேசமாய் வந்த நெருப்பு
வைத்ததொரு புஸ்வாணம் மங்கி வெடித்ததனால்
புத்தாடை தீபற்றிப் போனதே- அத்தையார்
ஆசையாய் வாங்கிவந்த அந்தவொரு வாணந்தான்
நேசமாய் வந்த நெருப்பு.
4. காதுக்கு வேண்டாம் கதவு.
சுற்றமும் நட்புமே சொல்வதைக் கேட்டபின்
உற்றதை ஏற்றே உயர்ந்திடுவோம்
-மற்றவர்சொல்
தீதுடன் நன்றும் தெளிவாகக் கேட்கட்டும்
காதுக்கு வேண்டாம் கதவு.
5.போதிலே பூத்ததிப் போது
சோலைக்குப் போய்த்தான் சுகமாகத் தேடினோம்
மாலை தொடுக்க மலர்களை- காலையில்
பாதி விரிசெம் பருத்தி பனிவிழும்
போதிலே பூத்ததிப் போது.
6. பள்ளியாம் பாதையும் பார்.
இன்பதுன் பம்தரும் இல்லறத்தி னுள்ளிலே
என்றும் நுழைதல் எளியதே- அன்பினை
அள்ளித் தருநல் லறமாம் துறவெனும்
பள்ளியாம் பாதையும் பார்.
7.பார்ப்பாரே! பார்ப்பாரே! பார்.
அயல்நாடு சென்றதும் அங்கிருநம் மூரார்
வியந்துதான் கேட்பார் விலாசம்- தயங்கியே
ஊர்பெயரைச் சொன்னால் உவந்து முகமலர்ந்தே
பார்ப்பாரே! பார்ப்பாரே! பார்.
8. குறுக்குத் தெருவில் குடி.
திக்கெல்லாம் சென்று திரவியம் ஈட்டியும்
குக்கிரா மத்தோர்தான் கொண்டாடும் - சுக்கின்
நறுமணக்கும் காபியை நாடித்தே டித்தான்
குறுக்குத் தெருவில் குடி.
9. முதலைத் தொடரும் முடிவு.
தலைவனைப் பின்பற்றித் தாமும் நடக்கும்
கலையினைக் கற்றோரே காப்போர்- அலைபோல்ப்
பதங்களை வீசியவர் பாங்காய் நடத்தல்
முதலைத் தொடரும் முடிவு.
10. வானம் இறங்கி வரும்
சந்தம் சுருதியுடன் தாளமும் சேர்ந்ததுமே
வந்த இசைதான் வளம்சேர்க்கும்- அந்தவொரு
கானத்தைக் கேட்பதற்காய்க் கந்தர்வ ரோடுதான்
வானம் இறங்கி வரும்.
11. கண்ணைமூ டிக்கொண்டே காண்
கண்டவர் சொன்னதில்லை கண்டதில்லை சொன்னவர்
விண்ணுலகம் என்றுமொரு விந்தையன்றோ? -கண்குளிர
மண்ணுலகில் வாழ்ந்துகொண்டே மாதரங்கே ஆடுவதைக்
கண்ணைமூ டிக்கொண்டே காண்.
12. மறதியும் கூட வரம்.
முன்ஜென்மத் தில்செய்த மூடத் தனங்களெல்லாம்
இன்றும் நினைவிருந்தால் ஏளனமே- என்றோ
இறப்புவரும் போதில் எவர்க்கும் கிடைக்கும்
மறதியும் கூட வரம்.
13. நெருப்பை அணைக்காத நீர்.
அடுத்தவர் துன்பம் அகற்றுமே வள்ளல்
எடுத்த பிறவிசெய் ஈகை - கொடுக்க
விருப்பமே இல்லாத வீணர்கைச் செல்வம்
நெருப்பை அணைக்காத நீர்.
14. கொஞ்சமே னும்மிதைக் கொள்.
கிண்ணத்தில் சாம்பார் கிளிமாங்காய் ஊறுகாய்
தண்மைகொள் மோருடன் சாதத்தை - உண்டபிள்ளாய்!
மிஞ்சும் அடிக்குழம்பு விஞ்சு சுவைகொள்ளும்
கொஞ்சமே னும்மிதைக் கொள்.
15. நட்டத்தில் உச்ச நடம்.
அட்டையைத் தேய்த்துத்தான் அங்காடிச் சாமானும்
குட்டித்தீ வையுமே வாங்கலாம்- திட்டமின்றி
வட்டிக்கு வாங்கியே வாழ்க்கையை ஓட்டுவதே
நட்டத்தில் உச்ச நடம்.
16. நீயென்றேன் நீயென்றாய் நீ.
நாமணக்கும் பேச்சினால் நாயகனின் தோற்றத்தால்
பூமணக்கும் உன்மனத்தைப் புன்னகையால்-காமத்தால்
தீயென்றே தொட்ட திருமகனைக் காட்டுவாய்
நீயென்றேன் நீயென்றாய் நீ.
17. புன்னகை யார்க்கும் பொது.
மொட்டுவிரி பூவை முடியின்மேல் சூடியதும்
கட்டியவன் சம்பளத்தைக் கண்டதும்
-பட்டுடனே
பொன்நகையைப் பார்த்ததும் பூக்கின்ற மங்கையரின்
புன்னகை யார்க்கும் பொது.
18.கட்டுக்குள் மாட்டாத கட்டு.
நிறைவான வாழ்வுடன் நிம்மதியும் சேர
மறையுமே சொல்லும் வழியாம்
-இறைபதத்தைக்
கட்டிப் பிடித்தலே கர்மம்சேர் சம்சாரக்
கட்டுக்குள் மாட்டாத கட்டு.
—- சத்ய வேழன் H சாயி கணேசன்.
30-06-2026
சத்ய வேழன் H சாயி கணேசன் பாட்டுக்கு என் பின்னூட்டம்.
பொந்துக்குள் இன்னுமோர் பொந்து
போற்றுகின்றேன் நல்லதோர் வெண்பா
சந்தமிக்க பாக்களைத் தந்தார்
சான்றோர்தம் நெஞ்சிலே நின்றார்!
-கருவூர் இனியன்,
உ
வெண்பாக் கவியரங்கம்
1 . கண்ணெல்லாம் ஆகுமோ கண்
தித்திக்கும் கோவா திரட்டும் திருவில்லிப்
புத்தூர்க் கொருநாள்தான் போய்வந்தே-இத்தரைகொள்
விண்ணுயர் கோபுர மேன்மையைக் காணாத
கண்ணெல்லாம் ஆகுமோ கண்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gu2PcfW9NoEDc-KgavhembOA8tRZvwnUMh1e%3DuKEswAdQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAOJiLF23iZzF2azv5FAXXn%2Bj_Y-a3Eic9dPDt47nVGUSRrnQGA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXYPjD92sBFPnbj53gvMUN0R%2B0DT5RnEKSsA1LYoB-jSvA%40mail.gmail.com.
உ
வெண்பாக் கவியரங்கம்
1 . கண்ணெல்லாம் ஆகுமோ கண்
தித்திக்கும் கோவா திரட்டும் திருவில்லிப்
புத்தூர்க் கொருநாள்தான் போய்வந்தே-இத்தரைகொள்
விண்ணுயர் கோபுர மேன்மையைக் காணாத
கண்ணெல்லாம் ஆகுமோ கண்.
2. பொந்துக்குள் இன்னுமொரு பொந்து.
எம்மூரின் வான்குருவி இட்டமுட்டை காக்கத்தான்
தம்வீட்டைக் கட்டுமே தச்சனைப்போல்-கம்பத்தில்
பந்துபோல்த் தொங்கும் பறவைவாழ் கூட்டில்பார்
பொந்துக்குள் இன்னுமொரு பொந்து.
3. நேசமாய் வந்த நெருப்பு
வைத்ததொரு புஸ்வாணம் மங்கி வெடித்ததனால்
புத்தாடை தீபற்றிப் போனதே- அத்தையார்
ஆசையாய் வாங்கிவந்த அந்தவொரு வாணந்தான்
நேசமாய் வந்த நெருப்பு.
4. காதுக்கு வேண்டாம் கதவு.
சுற்றமும் நட்புமே சொல்வதைக் கேட்டபின்
உற்றதை ஏற்றே உயர்ந்திடுவோம்
-மற்றவர்சொல்
தீதுடன் நன்றும் தெளிவாகக் கேட்கட்டும்
காதுக்கு வேண்டாம் கதவு.
5.போதிலே பூத்ததிப் போது
சோலைக்குப் போய்த்தான் சுகமாகத் தேடினோம்
மாலை தொடுக்க மலர்களை- காலையில்
பாதி விரிசெம் பருத்தி பனிவிழும்
போதிலே பூத்ததிப் போது.
6. பள்ளியாம் பாதையும் பார்.
இன்பதுன் பம்தரும் இல்லறத்தி னுள்ளிலே
என்றும் நுழைதல் எளியதே- அன்பினை
அள்ளித் தருநல் லறமாம் துறவெனும்
பள்ளியாம் பாதையும் பார்.
7.பார்ப்பாரே! பார்ப்பாரே! பார்.
அயல்நாடு சென்றதும் அங்கிருநம் மூரார்
வியந்துதான் கேட்பார் விலாசம்- தயங்கியே
ஊர்பெயரைச் சொன்னால் உவந்து முகமலர்ந்தே
பார்ப்பாரே! பார்ப்பாரே! பார்.
8. குறுக்குத் தெருவில் குடி.
திக்கெல்லாம் சென்று திரவியம் ஈட்டியும்
குக்கிரா மத்தோர்தான் கொண்டாடும் - சுக்கின்
நறுமணக்கும் காபியை நாடித்தே டித்தான்
குறுக்குத் தெருவில் குடி.
9. முதலைத் தொடரும் முடிவு.
தலைவனைப் பின்பற்றித் தாமும் நடக்கும்
கலையினைக் கற்றோரே காப்போர்- அலைபோல்ப்
பதங்களை வீசியவர் பாங்காய் நடத்தல்
முதலைத் தொடரும் முடிவு.
அலைபோற் பதங்களை
10. வானம் இறங்கி வரும்
சந்தம் சுருதியுடன் தாளமும் சேர்ந்ததுமே
வந்த இசைதான் வளம்சேர்க்கும்- அந்தவொரு
கானத்தைக் கேட்பதற்காய்க் கந்தர்வ ரோடுதான்
வானம் இறங்கி வரும்.
11. கண்ணைமூ டிக்கொண்டே காண்
கண்டவர் சொன்னதில்லை கண்டதில்லை சொன்னவர்
விண்ணுலகம் என்றுமொரு விந்தையன்றோ? -கண்குளிர
மண்ணுலகில் வாழ்ந்துகொண்டே மாதரங்கே ஆடுவதைக்
கண்ணைமூ டிக்கொண்டே காண்.
12. மறதியும் கூட வரம்.
முன்ஜென்மத் தில்செய்த மூடத் தனங்களெல்லாம்
இன்றும் நினைவிருந்தால் ஏளனமே- என்றோ
இறப்புவரும் போதில் எவர்க்கும் கிடைக்கும்
மறதியும் கூட வரம்.
13. நெருப்பை அணைக்காத நீர்.
அடுத்தவர் துன்பம் அகற்றுமே வள்ளல்
எடுத்த பிறவிசெய் ஈகை - கொடுக்க
விருப்பமே இல்லாத வீணர்கைச் செல்வம்
நெருப்பை அணைக்காத நீர்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCM2SefVCcenSvzk37EbZHCpzjo7H-x-V49oSzzo1N5XVg%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAOJiLF3nEn4%3DH7qG10Dnv2SjU8itzmFyYGJpn%3Dt-Y5xDq8m5kg%40mail.gmail.com.
விருப்பமே இல்லாத வீணர்கைச் செல்வம்
நெருப்பை அணைக்காத நீர்.
உ
வெண்பாக் கவியரங்கம்
1 .
13. நெருப்பை அணைக்காத நீர்.
அடுத்தவர் துன்பம் அகற்றுமே வள்ளல்
எடுத்த பிறவிசெய் ஈகை - கொடுக்க
விருப்பமே இல்லாத வீணர்கைச் செல்வம்
நெருப்பை அணைக்காத நீர்.
14.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/9ff1beb2-f9e2-4d7e-a155-e588443eb1b6n%40googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBvfqbKAqxgCezHbFSAwcyQfDBX0X1ZJOb%3Do41TcS_Fpg%40mail.gmail.com.
// வைத்ததொரு புஸ்வாணம் மங்கி வெடித்ததனால்
புத்தாடை தீபற்றிப் போனதே- அத்தையார்
ஆசையாய் வாங்கிவந்த அந்தவொரு வாணந்தான்
நேசமாய் வந்த நெருப்பு. //
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAOJiLF23iZzF2azv5FAXXn%2Bj_Y-a3Eic9dPDt47nVGUSRrnQGA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtipFbOxD9XdAeYX7HsWZeGEnMmpkdoogV2qSO1BtQ%2B7aA%40mail.gmail.com.