--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/D44E9588-D638-43F2-B48C-19726C9AF9E7%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAviTP9UXo_uwt0tpgfkm82jv4cny%3DEFmjhqh%3DG6Eod9w%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/D44E9588-D638-43F2-B48C-19726C9AF9E7%40gmail.com.
அழகிய பாட்டால் என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி, தலைவரே! இதோ எனது பாடல்:சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2நாள்: 8-மார்ச்-2026நடுவர் : தலைவர் கவிமாமணி இலந்தையார்எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது படையேகடவுள் வாழ்த்து - முருகன் துதிசெடியார் வினைகள் செறுவாய் எனநான்தொடையார் தமிழால் தொழுதேன் - அடலார்அடையார் வெருவ அடியார்க் கருளும்படைவேல் உடையான் பதம்.(செடியார் = செடிகள் போல் பெருகி வளரும்; அடையார் = பகைவர்; தொடையார் = தொடுக்கப்பட்ட; அடல் = வலிமை; அடலார் அடையார் = வலிமைமிக்க பகைவர்)
...
பட்டிமன்றத் தலைவர் கவிவேழம்
அவர்களின் தலைமைக் கவிதைக்குப்
பின்னூட்டம்.
விருத்தப் பாவில் திருத்தமுற
விளக்கிச் சொன்னார் கவிவேழம்
பொருத்த மாகக் கவியாத்துப்
பொதுவில் வைத்தார்; அவ்வழியே
வருத்த மின்றி வண்டமிழில்
வன்னக் கவிதை வடித்திடலாம்
தருக்கம் செய்யும் மன்றத்தில்
தமிழ்ப்பா மேலும் மெருகேறும்!
-கருவூர் இனியன்.
படை குறித்துப் பாடிய பாவலர்
இமயவரம்பன் அவர்களின்
கவிதைக்குப் பின்னூட்டம்.
படைவேல் உடையான் பரிவோடு
படைத்தார் கவிதை படைகுறித்து
தடையே இல்லா ஓசையுடன்
தாவிச் செல்லும் வெண்பாக்கள்!
முற்றும் சிறப்பாய் இருந்தாலும்
முழுதாய் ஒப்பேன் அவர்கருத்தை
சற்றே இடிக்கக் காண்கின்றேன்
சாற்ற வருவேன் என்சுற்றில்!
-கருவூர் இனியன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/4C493C6D-1E3B-45E8-8F79-244E04ADEECF%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/EBAA5F77-C4EA-4833-8962-AFE63F16EEA3%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/EBAA5F77-C4EA-4833-8962-AFE63F16EEA3%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/1D35CB60-73ED-4466-AE48-2C94754FF5DB%40gmail.com.
தீராத அன்புடையார் சீரார் இராம்கிராம்
ஏரார்ந்த செஞ்சொல் இனிப்பு.
மிக்க நன்றி!
சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2
நாள்: 8-மார்ச்-2026
நடுவர் : கவிமாமணி இலந்தையார்
எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது கல்வியே
அவை வணக்கம்
அரங்கத் தலைவர் கவிவேழம்
அடிகள் போற்றி வணங்குகின்றேன்
அரங்கில் உள்ளோர் அனைவரையும்
அடியேன் வணங்கி மகிழ்கின்றேன்
அரங்கத் துள்ளான் அருளாலே
ஆக்கித் தருவேன் மாக்கவிதை
அரங்கில் நின்று கோலோச்சும்
அன்னைத் தமிழே அடிகோல்க!
அவையடக்கம்
பேச்சில் செயலில் பெருமையினைப்
பெரிதும் போற்ற விழைகின்ற
ஓய்ச்சல் ஒழிவே இல்லாமல்
ஒல்லும் வண்ணம் சிந்தித்து
மூச்சுக் கொருபா இயற்றுகின்ற
மூத்தோர் உள்ள அவையினிலே
கீச்கீச் சென்று கத்துகின்ற
கிளிபோல் யானும் வந்தேனே!
கல்வி
அமைவாய் தேசம் இருப்பதற்கு
அரணாய்ப் படைகள் அமைப்பாக
அமைய வேண்டும் என்பதனை
அடுக்க டுக்காய் அழகாக
இமய வரம்பன் எடுத்துரைத்தார்
எனினும் நாட்டின் வருமானம்
இமைக்கும் பொழுதில் தீர்ந்துவிடும்
இன்னல் விளைக்கும் போராலே!
கல்வி என்னும் கைவிளைக்கைக்
கையில் ஏந்தும் தலைவர்தாம்
சொல்லில் செயலில் தூய்மையினைச்
சுடராய்ப் படர விடுவார்கள்
அல்லும் பகலும் அறவினையை
அழகாய்ச் செய்ய முன்வருவர்
தொல்லை நல்கும் படைக்கலனைத்
தொட்டுப் பார்க்கச் செய்யாரே!
பிச்சை எடுத்துக் கற்பதையும்
பெரிதாய்ப் பேசும் இலக்கியங்கள்
கச்சை கட்டி வருகின்ற
கழிபே ரின்னல் கடிந்தேகப்
பச்சை விளக்காய்ப் பாதையிலே
பரவி நிற்கும்; அதனாலே
இச்சை கொண்டு கற்றால்தான்
இனிய தேசம் உருவாகும்!
கல்லா மாக்கள் என்பவர்கள்
கல்லும் மண்ணும் போன்றோரே
எல்லாம் இருந்தும் என்னபயன்
ஏற்ற கல்வி இல்லையெனின்
வல்லான் வகுக்கும் வாய்க்காலை
இல்லா தாக்கும் ஓர்கருவி
நல்ல கல்வி மட்டும்தான்
நல்லோர் இதனை ஏற்பாரே!
கல்வி என்னும் ஆயுதத்தைக்
கையில் எடுக்கும் பாரதமே
வெல்லும் செல்லும் திசையினிலே
வெற்றி வாகை சூடிடுமே
எல்லா நாடும் இதன்வழியை
ஏற்று நாளும் பின்பற்றும்
இல்லா தொழியும் இழிசெயல்கள்
இகத்தில் இன்பம் மேவிடுமே!
கற்று வாழக் கருதாதார்
கண்கள் இரண்டும் புண்ணென்று
முற்றும் முடிவாய் வள்ளுவனார்
முழக்கம் செய்தார் கேளீரோ
பெற்றுப் பிழைத்தல் வாழ்வாமோ
பெற்றம் அதனைச் செய்திடுமே
விற்றுத் தொலைத்தால் மானத்தை
விறைப்பாய் நிற்க முடியாதே!
நிறைவாய் ஒன்றைச் சொல்லிடுவேன்
நிலைத்த புகழ்சேர் பாரதத்தில்
மறைவாய் உள்ள மாசெல்லாம்
மாயம் நிகழ்ந்து நீங்கிவிட
துறைகள் தோறும் கல்வியினைத்
துலங்கச் செய்தல் முதற்கடமை
குறைகள் இருப்பின் என்கருத்தில்
குழந்தைப் பேச்சென் றொதுக்கிடுக!
-கருவூர் இனியன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gvdi%3DzSwdDdbt7QELbLeHKRC0aziLVQ81T4qxRPxOPHMg%40mail.gmail.com.
இந்தத் திரியிலேயே இனி அரங்கம் தொடரட்டும்
தயக்கம் வேண்டாம், தியாகந்தான்
தங்க வேலன் சாற்றிடுவார்
இலந்தை8-3-2026
அழகிய பாட்டால் என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி, தலைவரே! இதோ எனது பாடல்:
தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது படையேபடைப் பத்து(நேரிசை வெண்பா)
கடவுள் பெயராலே காழ்ப்பனைத்தும் காட்டிமடமை இருள்கவிய வாட்டிக் - குடியின்மகிழ்வனைத்தும் மாய்க்கும் மதவெறியாம் வெய்யபகையடக்க வேண்டும் படை.(10).- இமயவரம்பன்
சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2
நாள்: 8-மார்ச்-2026
நடுவர் : கவிமாமணி இலந்தையார்
எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது கல்வியே
அவை வணக்கம்
நிறைவாய் ஒன்றைச் சொல்லிடுவேன்
நிலைத்த புகழ்சேர் பாரதத்தில்
மறைவாய் உள்ள மாசெல்லாம்
மாயம் நிகழ்ந்து நீங்கிவிட
துறைகள் தோறும் கல்வியினைத்
துலங்கச் செய்தல் முதற்கடமை
குறைகள் இருப்பின் என்கருத்தில்
குழந்தைப் பேச்சென் றொதுக்கிடுக!
-கருவூர் இனியன்.
O
"கல்வி என்னும் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் பாரதமே வெல்லும்"
மிகச் சரியே.
'கல்லாதார் இலங்கை கட்டழித்த காகுத்தன்' என்கிறார் ஆழ்வார். கற்றறிந்து தர்மத்தை எடுத்துக்கூறும் ஒருவன் இருந்தான், அவனும் வெளியேறி காகுத்தனையே சரண் புகுந்தான், இனி இலங்கை 'கல்லாதார் இலங்கை'யாக ஆகிவிட்டது என்று கூறி இலங்கையை அழித்தான் என்பது விளக்கம்.
கல்விக்கே என் ஓட்டு
ஸௌந்தர்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gvdi%3DzSwdDdbt7QELbLeHKRC0aziLVQ81T4qxRPxOPHMg%40mail.gmail.com.