கவிதைத் தொடர் பட்டிமண்டம் 2

34 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Mar 8, 2026, 12:02:45 PM (2 days ago) Mar 8
to santhavasantham
இந்தத் திரியிலேயே இனி அரங்கம் தொடரட்டும்

மார்ச்சு 12ந்தேதி அரங்கம் தொடங்கும் என்றிருந்துவிட்டேன்.  இன்றைக்கு அதாவது மார்ச்சு 8ந்தேதி தொடங்குகிறது என்பதை இப்போதுதான் அறிந்தேன். 

வஞ்சத்தில் ஒன்றானை நெஞ்சத்தில் நின்றானை மாசற் றானை
 வலம்வந்து கனியொன்றைப் பெற்றானை, வயிற்றானை, துதிக்கை யானை
விஞ்சித்தான் நின்றிட்ட கஜமுகனை வென்றானை மாற்றிட் டானை
  வித்தானை மறையானை, குறையானை, வள்ளியினை வெருட்டி னானை
கஞ்சத்தாள் பதத்தானை, கதித்தோடும் மதத்தானை, கருணை யானை
  கமண்டலத்தைக் கவிழ்த்தானை காவிரியை விரித்தானை, கவிதை யானை
தஞ்சந்தான் என்றவரைத் தள்ளானை புரப்பானை தாங்கு வானைத்
  தமிழ்கேட்கும் இருபெரிய செவியானைப் பாடுகின்றேன் காக்க நன்றே

தொடக்கம்
கவிதைத் தொடர் பட்டிமண்டம்

தலைப்பு:  ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது
\
படை, குடி, கூழ்,  அமைச்ச், நட்பு, அரண், இயற்கை வளம், தியாகம், கல்வி


சண்டை போட்டால் சிலசம யத்தில்
   சந்தோ ஷம்மேன்  வருகிறது?
மண்டைக் குள்ளே வாதுக ளுக்குள்
   மாட்டிக் கொள்ளும் வகையுண்டோ
சிண்டு முடித்தல் என்கிற ஒன்றும்
   செய்வ துண்டு சிலசமயம்
உண்டிங் கேயோர் சொல்விளை யாட்டே
    உற்சாகம்நாம் பெற்றிடலாம்

பட்டி  மண்ட பத்தினில் இன்று
 பாடல், கவிதை விளையாடும்
வெட்டிப் பேச்சை வீசிட வேண்டாம்
  வித்தை காட்டும் ஆவேசம்
எட்டிப் பார்த்தால் எவ்விடத் தேயும்
   எரிச்சல் மூட்டும் நரியாட்டம்
கொட்டித் தீர்ப்போம் சொல்விளை யாட்டில்
  கும்மா ளந்தான், வாருங்கள்

**

நாடு சிறக்க மிகவதிகம்
   நமக்குத் தேவை எதுவென்றே
கூடி அலசிப் பேசுதற்கே
   குழுமி  யுள்ளோம் , வள்ளுவரின்
ஏடு நமக்கு வழிகாட்ட 
   எடுத்துக் கொண்ட தலைப்பினிலே
போடு போடென் றிங்கேநாம்
    புலமை காட்டப் போகின்றோம்.

தங்கள் கருத்தை வலியுறுத்தத்
    தக்க வாறு மற்றோர்க்குப்
பங்கம் வாரா வகையினிலே
   பதமாய் மறுத்துப் பேசிடலாம்
இங்கே வேண்டும் கண்ணியமும்
   இதமும் வாதத் திறமையுமே
சிங்கங் கள்தாம் எல்லோரும்
     தெரிந்தே இங்கே அழைக்கின்றேன்


இமய வரம்பன் படையென்பார்
   இனியன் கல்வி எனச் சொல்வார்
அமைவாய்க் கவிராம் கூழென்பார்
   ஆம்சாய் கணேஷோ அரணென்பார்
நமக்கு நேர்மை தானேன்றே
    நல்கு வாரே சுதாவேதம்
எமக்கு நட்பே , புஷ்பாவும்
   எடுத்துச் சொல்வார் , நாம் கேட்போம்

இயற்கை வளமே அதிகமென
     இசைப்பார் அரசி பழனியப்பன்
தயக்கம் வேண்டாம், தியாகந்தான்
      தங்க வேலன் சாற்றிடுவார்
இயக்கம் யாவும் குடிபடையின்
      இருப்பில் என்பார் கவிஞரஷோக்
நியமம் செப்பும் அமைச்சுக்கு
      நேரம் இன்னும் இருக்கிறது

எல்லாம் தேவை என்றாலும்
  இதுதான் அதிகம் தேவையென
வல்லாங் கிங்கே வாதிடவே
  வாருங்கள்சொல் வல்லோரே
கல்லை எடுத்து வீசாமல்
  களத்தில் சொல்லை வீசுகிறோம்
சொல்லும் தாக்கும், வடுவின்றிச்
   சொல்லத் தெரிந்தால் அதுபோதும்

இற்றை நாளில் படைக் கென்றே
  எடுத்து வைக்கும் நிதியதிகம்
கற்றுக் கொள்ள வில்லையெனில்
  காசா இங்கே காப்பாற்றும்
பெற்றுக் கொள்ளும் கல்வியில்தான்
   பிழைப்பே உண்டென் ரியம்பிடலாம்
வெற்றுப் பேச்சேன்? கூழின்றி
    வீழ்ந்து கிடந்தால் என்ன பயன்?

எல்லா மிருந்தும் கொள்ளையிட
    எதிரி இருப்பான், காப்பாற்ற
நல்ல பாது காப்பாக, 
   நமக்குத் தேவை அரணன்றோ
வெல்லுமா வீண் பகைக் கூட்டம்
   வேண்டும் நட்பே வெற்றிதரும்
அல்ல அல்ல , நேர்மையினுக்(கு)
   அடுத்த படிதான் மற்றெல்லாம்

அன்று நாட்டு விடுதலையை
    ஐயா பெற்றோம் தியாகத்தால்
இன்றைக் கும்தான் அதுதேவை
    இயற்கை வளத்திற் கீடாக
ஒன்றை எடுத்துச் சொலப்போமா?
     உமக்கு வேண்டும் நல்லமைச்சன்
அன்று சாணக் கியனாலே
     ஆட்சி அமைந்த தறியீரோ

என்றெல் லாமிங் கிதமாக
     எடுத்துப் பேச வந்துள்ளீர்
ஒன்று சொல்வேன் , வித்தகமும்
     உள்ளே ஊறும் கவிப்பெருக்கும்
மன்றில் நடனம் ஆடட்டும்
     மகிழ்ச்சி வெள்ளம் பொங்கட்டும்
நன்று நடக்கும் அரங்கத்தின்
      நாட கத்தைக் கண்டிடலாம்
   

 இலந்தை
 8-3-2026
  
   








Subbaier Ramasami

unread,
Mar 8, 2026, 12:06:58 PM (2 days ago) Mar 8
to santhavasantham
முதல் அழைப்பு:    கவிஞர் இமயவரம்பன்

இமய மேதன் எல்லையென
  எடுத்துப் பேரில் வைத்துள்ள
இமய வரம்பன், நற்கவிஞர்
   இசைவாய்ப் பேசும் பேச்சாளர்
அமைவாய் உரைகள் எழுதுபவர்
    ஆராய் கின்ற அறிவாளி
தமது பங்காய்ப் படைச்சிறப்பைச்
    சாற்ற இங்கே அழைக்கின்றேன்

இலந்தை
8-3-2026

இமயவரம்பன்

unread,
Mar 8, 2026, 5:28:39 PM (2 days ago) Mar 8
to santhav...@googlegroups.com, santhavasantham
அழகிய பாட்டால் என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி, தலைவரே! இதோ எனது பாடல்:

சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2
நாள்: 8-மார்ச்-2026
நடுவர் : தலைவர் கவிமாமணி இலந்தையார்
எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது படையே

கடவுள் வாழ்த்து - முருகன் துதி
செடியார் வினைகள் செறுவாய் எனநான்
தொடையார் தமிழால் தொழுதேன் - அடலார்
அடையார் வெருவ அடியார்க் கருளும் 
படைவேல் உடையான் பதம். 

(செடியார் = செடிகள் போல் பெருகி வளரும்; அடையார் = பகைவர்; தொடையார் = தொடுக்கப்பட்ட; அடல் = வலிமை; அடலார் அடையார் = வலிமைமிக்க பகைவர்)

தலைவர் வாழ்த்து
சொன்னயம் சான்ற சுடர்க்கவிஞர் உள்ளத்தில் 
உன்னதம் ஓங்கும் ஒருதலைவர்  - மன்னு
புகழ்சேர் இலந்தையார் பூந்தமிழாம் துன்பப்
பகைதீர்த் தொழிக்கும் படை.  

அவை அடக்கம்
சீராரும் தேவேந் திரனவையில் மேனகையின்
நேரேயோர் பேயாடி நின்றதுபோல் - ஏரார்
நடைநின்ற நாவலர்வாழ் நல்லவையில் நானும்
படையென்று பாடினேன் பா.

தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது படையே

படைப் பத்து
(நேரிசை வெண்பா)

விதையிட்டுச் செந்நெல் விளைமுன்னே மிக்க
முதலிட்(டு) அருந்தொழில்செய் முன்னே - புதிதோர்
கலமாக்கி விண்பயணம் காண்முன்னே நாட்டைப்
பலமாக்க வேண்டும் படை. (1).
(கலம் ஆக்கி = விண்கலம் செய்து)

சாலப் பழநெறிகள் தாம்சிறக்க எங்கும்நாம்
கோல விழவெல்லாம் கொண்டாடப் - பாலை
நனிவெயிலில் முந்நீர் நடுவில் குளிரும் 
பனிமலையில் வேண்டும் படை. (2).
(விழவு = விழா; முந்நீர் = கடல்)

ஆலைத் தொழில்வளர்க்க ஆன்ற கலைசிறக்கக்
காலம் கடக்கும் கவியிசைக்க - மூல
அடித்தளமாம் நல்ல அரணமைக்கும் சத்தி
படைத்திடவே வேண்டும் படை. (3).

விடம்பாய்ச்சித் தாக்காமல் வேற்றார் வெருவப்
படம்காட்டி ஓட்டிடுமாம் பாம்பும் - அடங்காத் 
துயருறுத்தும் வெம்பகையைத் தோள்வலிமை காட்டிப்
பயமுறுத்த வேண்டும் படை.  (4).
(வேற்றார் = பகைவர்; வெருவ = அஞ்சும்படியாக;)

ஞாலமிசைத் தாழாமல் நாடு தழைத்திடவும்
காலமெலாம் தன்னுரிமை  காத்திடவும் - மேலோர்
மதித்திடவோர் தொல்வழியில் வாழ்ந்துயர்ந்து வெற்றி
பதித்திடவும் வேண்டும் படை.   (5).

ஆதி அறங்காக்க அன்பின் நலங்காக்க 
தீதில் வினைஞர் திறல்காக்க - நீதி
நிலைகாக்க எங்கும் நிறைந்தோங்கும் செல்வம்
பலகாக்க வேண்டும் படை.  (6).

வரப்புடைக்கும் வெள்ளத்தும் வான்பிணிக்கா லத்தும் 
பொருப்புடைக்கும் பூப்பிளப்பின் போதும் - நிரப்பாம்
நசிவறுத்துச் சோறு நனிவழங்கி மக்கள்
பசியொழிக்க வேண்டும் படை (7).
(பொருப்பு  = மலை; பூப்பிளப்பு = பூகம்பம்; நிரப்பு = வறுமை;)

நிதியுயர வாழ்க்கை நிலையுயரக் கோணா
மதியுயர வாய்மை மலரக் - கதிர்போல்
கொடியுயரக் கோலுயரக் கோதிலா மாதர்
படியுயர வேண்டும் படை.  (8).
(கோது = மாசு; படி = நிலை)

சட்டமெலாம் சாய்ந்து தவறே பெருகுங்கால்
கெட்டழிவோர் கூக்குரல் கேட்குங்கால் - கட்டமெழும்
காலத்தே ஆட்சி கவிழுங்கால்  தேசத்தைப்
பாலிக்க வேண்டும் படை. (9).
(கட்டம் = கஷ்டம்; ஆட்சி = அரசு; பாலிக்க = காக்க)

கடவுள் பெயராலே காழ்ப்பனைத்தும் காட்டி
மடமை இருள்கவிய வாட்டிக் - குடியின் 
மகிழ்வனைத்தும் மாய்க்கும் மதவெறியாம் வெய்ய
பகையடக்க வேண்டும் படை.(10).

- இமயவரம்பன் 

Kaviyogi Vedham

unread,
Mar 8, 2026, 8:43:56 PM (2 days ago) Mar 8
to santhav...@googlegroups.com
  ஆஹா. முதல் கவியே நல்ல  பொருள் சிறப்பைக் கொண்டதாக அழகுற அமைந்தது.  வாழ்க  இமயம் கவி..
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/D44E9588-D638-43F2-B48C-19726C9AF9E7%40gmail.com.

Kaviyogi Vedham

unread,
Mar 8, 2026, 8:47:39 PM (2 days ago) Mar 8
to santhav...@googlegroups.com
தலைமைக்கவிதை  மிக்க  சுவை. வாழ்க தலைவர்,
  யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Mar 8, 2026, 9:05:16 PM (2 days ago) Mar 8
to சந்தவசந்தம்
நாற்படையில் முற்படையாம் நல்லநடை வெண்பாவாம் 
தேர்ப்படையில்  எண்ணங்கள் தேர்ந்தெடுத்தே - ஆர்ப்பரித்து  
வல்ல களம்கண்டீர் ; வன்தேர்ப் படையிதுவே 
வெல்லுமோ? காண்போம் விரைந்து!

அன்புடன் 
அரசி. பழனியப்பன் 



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 8, 2026, 10:28:30 PM (2 days ago) Mar 8
to santhav...@googlegroups.com

படை என்றதும் பாடலைப் படைத்துவிட்டீர்!

Nice.

One minor comment inline below.

V. Subramanian



On Sun, Mar 8, 2026 at 5:28 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
அழகிய பாட்டால் என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி, தலைவரே! இதோ எனது பாடல்:

சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2
நாள்: 8-மார்ச்-2026
நடுவர் : தலைவர் கவிமாமணி இலந்தையார்
எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது படையே

கடவுள் வாழ்த்து - முருகன் துதி
செடியார் வினைகள் செறுவாய் எனநான்
தொடையார் தமிழால் தொழுதேன் - அடலார்
அடையார் வெருவ அடியார்க் கருளும் 
படைவேல் உடையான் பதம். 

(செடியார் = செடிகள் போல் பெருகி வளரும்; அடையார் = பகைவர்; தொடையார் = தொடுக்கப்பட்ட; அடல் = வலிமை; அடலார் அடையார் = வலிமைமிக்க பகைவர்)


==>
/செறுவாய் /

செறுதல் - செறாய் - என்று வரும் என்று எண்ணுகின்றேன்.
செறுக - may possibly fit.
 
...

Govindaraju Arunachalam

unread,
Mar 9, 2026, 1:06:06 AM (yesterday) Mar 9
to santhav...@googlegroups.com

பட்டிமன்றத் தலைவர் கவிவேழம்

அவர்களின் தலைமைக் கவிதைக்குப்

பின்னூட்டம்.

 

விருத்தப் பாவில் திருத்தமுற

   விளக்கிச் சொன்னார் கவிவேழம்

பொருத்த மாகக் கவியாத்துப்

   பொதுவில் வைத்தார்; அவ்வழியே

வருத்த மின்றி வண்டமிழில்

   வன்னக் கவிதை வடித்திடலாம்

தருக்கம் செய்யும் மன்றத்தில்

   தமிழ்ப்பா மேலும் மெருகேறும்!


-கருவூர் இனியன்.

 

Govindaraju Arunachalam

unread,
Mar 9, 2026, 1:19:31 AM (yesterday) Mar 9
to santhav...@googlegroups.com

படை குறித்துப் பாடிய பாவலர்

இமயவரம்பன் அவர்களின்

கவிதைக்குப் பின்னூட்டம்.

 

படைவேல் உடையான் பரிவோடு

   படைத்தார் கவிதை படைகுறித்து

தடையே இல்லா ஓசையுடன்

   தாவிச் செல்லும் வெண்பாக்கள்!

 

முற்றும் சிறப்பாய் இருந்தாலும்

   முழுதாய் ஒப்பேன் அவர்கருத்தை

சற்றே இடிக்கக் காண்கின்றேன்

   சாற்ற வருவேன் என்சுற்றில்!

 

-கருவூர் இனியன்.

 

Arasi Palaniappan

unread,
Mar 9, 2026, 2:31:46 AM (yesterday) Mar 9
to சந்தவசந்தம்
நடுவர்,கவிமாமணி இலந்தைக் கவிவேழம் அவர்களின் தலைமைக் கவிதைக்குப் பின்னூட்டம் 

கவிதைத் தொடராம்
 பட்டிமன்றக் 
     கனிவார் தலைமை நனியேற்றுச் 
செவியில் தைக்கும் வகையினிலே 
      செம்மை யாகத் தலைப்புகளைக் 
கவிஞர் தங்கள் பெயரோடு 
      காட்டும் விதமோ மிகுசிறப்பு 
குவித்தேன் என்கை,இயற்கையெனும் 
      கொஞ்சும் வளங்கள் மனம்கொண்டே!

அரசி. பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Mar 9, 2026, 6:15:02 AM (yesterday) Mar 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
யோகியாரின் அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றி த்

இமயவரம்பன்

unread,
Mar 9, 2026, 6:21:58 AM (yesterday) Mar 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
பசுந்தமிழ்தேர் சீரார் பழனியப்பர் வாழ்த்தால்
வசந்தமெனப் பூக்கும் மனம்.

இமயவரம்பன்

unread,
Mar 9, 2026, 6:23:57 AM (yesterday) Mar 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நகைச்சுவையுடன் வாழ்த்திய திரு. சிவசிவா அவர்களுக்கு மிக்க நன்றி!

“செறுக” - நல்ல பரிந்துரை!

இமயவரம்பன்

unread,
Mar 9, 2026, 6:33:16 AM (yesterday) Mar 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
தாக்கும் படைபோற்றித் தந்தார் இனியனார்
வாக்கில் சிறந்ததமிழ் வாழ்த்து.

🙏

M. Viswanathan

unread,
Mar 9, 2026, 8:03:41 AM (yesterday) Mar 9
to Santhavasantham
"வேழம் முழங்க இமயப் படைசெல்லத்
தாழம்பூ வாசத் தமிழ்."

அற்புதம்.

அன்பன்,
மீ.விசுவநாதன்
09.03.2026 17.30pm


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Mar 9, 2026, 8:39:27 AM (yesterday) Mar 9
to santhav...@googlegroups.com, Santhavasantham
மிக்க நன்றி, திரு. மீவி.

Subbaier Ramasami

unread,
Mar 9, 2026, 11:17:43 AM (yesterday) Mar 9
to santhav...@googlegroups.com
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Mar 9, 2026, 11:20:37 AM (yesterday) Mar 9
to santhav...@googlegroups.com
கவிதைத் தொடர் பட்டிமண்டபத் தலைவர் கவிவேழம் அவர்தம் அழைப்புக் கவிதைக்குப் பின்னூட்டம்:

படையின் பலத்தைப் பறைசாற் றிடவும்
… பணமும் உணவும் தேவை யென்றும்
இடையில் பகையை ஒழிப்ப தற்கே
… இயல்பாய் அரணும் இயற்கை யென்னும்
தடையில் லாத தனித்தாம் சிறப்பில்
… தங்கும் நேர்மை நட்பும் தியாகம்
குடிகள் மனத்தில் குறிக்கோ ளாக்கக்
… கொடுத்த கருத்தால் சிரம்தாழ் கின்றேன்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Mar 9, 2026, 11:21:25 AM (yesterday) Mar 9
to santhav...@googlegroups.com
இமயவரம்பனார் கவிதைக்குப் பின்னூட்டம்

படைச்சிறப்புப் பற்றியிங்கே பத்தாதோ என்றே
நடைச்சிறப்புப் பாடல் நவின்றார்- தொடக்கமாய்
வாதிங்கு  இமய வரம்பன் வழங்கினார்
ஏதுண்டு பின்னர் இவண்?

இலந்தை

இமயவரம்பன்

unread,
Mar 9, 2026, 11:27:32 AM (yesterday) Mar 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, தலைவரே!

Subbaier Ramasami

unread,
Mar 9, 2026, 11:31:40 AM (yesterday) Mar 9
to santhav...@googlegroups.com
இரண்டாம் அழைப்பு  கவிஞர் இனியன்

ஆயுதங்கள் படைபலமாய் வைத்தி  ருந்தும்
    அவையியக்கம் பெறுவதற்கோ கல்வி வேண்டும்
போயுதவி வேறிடத்தே பெறவா கூடும்?
      புலமையின்றிக் கவிபாட முனையப் போமா? 
பாயுமொரு வீரத்தோடு இயக்கு கின்ற
       பட்டறிவும், தந்திரமும், படைக்கு வேண்டும்
ஆயுமொரு பார்வையினால் கல்வி மேன்மை
      அளிப்பதற்கு வருகின்றார் இனியன் இங்கே!

நல்லா சிரிய ராய்ப்பெருமை
  நாட்டி யுள்ள கவி இனியன்
சொல்லா டலிலே வல்லவராய்
  துளைந்து முத்தை எடுக்கிறவர்
கல்லா விட்டால் எப்பேறு
   கண்ட போதும் போதாதாம்
நல்லா ராய்ச்சி செய்திங்கே
    நல்க வருக கவியினியன்

இலந்தை



 

Subbaier Ramasami

unread,
Mar 9, 2026, 11:33:46 AM (yesterday) Mar 9
to santhav...@googlegroups.com
இங்கே இமயவரம்பன் முதலில் வாதத்தை வைத்துள்ளதால்  எவரின் வாதத்திற்கும் பதில் வாதம் செய்ய வாய்ப்பில்லை. எனவே  இறுதியில் அவருக்கு  எதிர்வாதம் செய்ய வாய்ப்பளிக்கப்படும்

இலந்தை

இமயவரம்பன்

unread,
Mar 9, 2026, 11:37:30 AM (yesterday) Mar 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
இரண்டாவது வாய்ப்புக்கு மிக்க நன்றி, தலைவரே!

Ram Ramakrishnan

unread,
Mar 9, 2026, 11:37:46 AM (yesterday) Mar 9
to santhav...@googlegroups.com
கவிஞர் இமயவரம்பன் கவிதைக்குப் பின்னூட்டம்:

படையின் பலத்தினைப் பாங்காய் உரைத்தீர்
குடிநலம் பேணற்குக் கொள்க - படையெனவே
யாத்த கவிப்பூக்கள் சேர்த்தளித்த செம்மையை
ஏத்துதற் கின்றொருசொல் இல்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Mar 9, 2026, 11:48:11 AM (yesterday) Mar 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com

தீராத அன்புடையார் சீரார் இராம்கிராம்

ஏரார்ந்த செஞ்சொல் இனிப்பு.


மிக்க நன்றி! 

Govindaraju Arunachalam

unread,
Mar 9, 2026, 10:20:04 PM (15 hours ago) Mar 9
to santhav...@googlegroups.com
காலை எழுந்தவுடன் அரங்கத் தலைவரின் அழைப்பைக் கண்ணுற்றேன். இன்னும் சற்று நேரத்தில் என் வாதத்தை முன்வைப்பேன். நன்றி.

-கருவூர் இனியன்.

Govindaraju Arunachalam

unread,
Mar 9, 2026, 11:23:02 PM (14 hours ago) Mar 9
to santhav...@googlegroups.com

சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2

நாள்: 8-மார்ச்-2026

நடுவர் : கவிமாமணி இலந்தையார்

எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது கல்வியே

 

அவை வணக்கம்

 

அரங்கத் தலைவர் கவிவேழம்

   அடிகள் போற்றி வணங்குகின்றேன்

அரங்கில் உள்ளோர் அனைவரையும்

    அடியேன் வணங்கி மகிழ்கின்றேன்

அரங்கத் துள்ளான் அருளாலே

    ஆக்கித் தருவேன் மாக்கவிதை

அரங்கில் நின்று கோலோச்சும்

   அன்னைத் தமிழே அடிகோல்க!

 

அவையடக்கம்

 

பேச்சில் செயலில் பெருமையினைப்

   பெரிதும் போற்ற விழைகின்ற

ஓய்ச்சல் ஒழிவே இல்லாமல்

   ஒல்லும் வண்ணம் சிந்தித்து

மூச்சுக் கொருபா இயற்றுகின்ற

   மூத்தோர் உள்ள அவையினிலே

கீச்கீச் சென்று கத்துகின்ற

   கிளிபோல் யானும் வந்தேனே!

 

கல்வி

 

அமைவாய் தேசம் இருப்பதற்கு

   அரணாய்ப் படைகள் அமைப்பாக

அமைய வேண்டும் என்பதனை

   அடுக்க டுக்காய் அழகாக

இமய வரம்பன் எடுத்துரைத்தார்

   எனினும் நாட்டின் வருமானம்

இமைக்கும் பொழுதில் தீர்ந்துவிடும்

   இன்னல் விளைக்கும் போராலே!

 

கல்வி என்னும் கைவிளைக்கைக்

   கையில் ஏந்தும் தலைவர்தாம்

சொல்லில் செயலில் தூய்மையினைச்

   சுடராய்ப் படர விடுவார்கள்

அல்லும் பகலும் அறவினையை

   அழகாய்ச் செய்ய முன்வருவர்

தொல்லை நல்கும் படைக்கலனைத்

   தொட்டுப் பார்க்கச் செய்யாரே!

 

பிச்சை எடுத்துக் கற்பதையும்

   பெரிதாய்ப் பேசும் இலக்கியங்கள்

கச்சை கட்டி வருகின்ற

   கழிபே ரின்னல் கடிந்தேகப்

பச்சை விளக்காய்ப் பாதையிலே

   பரவி நிற்கும்; அதனாலே

இச்சை கொண்டு கற்றால்தான்

   இனிய தேசம் உருவாகும்!

 

கல்லா மாக்கள் என்பவர்கள்

   கல்லும் மண்ணும் போன்றோரே

எல்லாம் இருந்தும் என்னபயன்

   ஏற்ற கல்வி இல்லையெனின்

வல்லான் வகுக்கும் வாய்க்காலை

   இல்லா தாக்கும் ஓர்கருவி

நல்ல கல்வி மட்டும்தான்

   நல்லோர் இதனை ஏற்பாரே!

 

கல்வி என்னும் ஆயுதத்தைக்

   கையில் எடுக்கும் பாரதமே

வெல்லும் செல்லும் திசையினிலே

   வெற்றி வாகை சூடிடுமே

எல்லா நாடும் இதன்வழியை

   ஏற்று நாளும் பின்பற்றும்

இல்லா தொழியும் இழிசெயல்கள்

   இகத்தில் இன்பம் மேவிடுமே!

 

கற்று வாழக் கருதாதார்

   கண்கள் இரண்டும் புண்ணென்று

முற்றும் முடிவாய் வள்ளுவனார்

   முழக்கம் செய்தார் கேளீரோ

பெற்றுப் பிழைத்தல் வாழ்வாமோ

   பெற்றம் அதனைச் செய்திடுமே

விற்றுத் தொலைத்தால் மானத்தை

   விறைப்பாய் நிற்க முடியாதே!

 

நிறைவாய் ஒன்றைச் சொல்லிடுவேன்

   நிலைத்த புகழ்சேர் பாரதத்தில்

மறைவாய் உள்ள மாசெல்லாம்

   மாயம் நிகழ்ந்து நீங்கிவிட

துறைகள் தோறும் கல்வியினைத்

   துலங்கச் செய்தல் முதற்கடமை

குறைகள் இருப்பின் என்கருத்தில்

   குழந்தைப் பேச்சென் றொதுக்கிடுக!

 

-கருவூர் இனியன்.

 

 

Arasi Palaniappan

unread,
Mar 9, 2026, 11:46:40 PM (14 hours ago) Mar 9
to சந்தவசந்தம்
இனியனார் கவிதைக்குப் பின்னூட்டம் 

கல்வி கற்ற பேராசான் 
    கல்வி மேன்மை 
கனிந்துரைத்தார் 
செல்வம் சற்றும் வேண்டாமோ?
    தேசம் செழித்தே ஓங்குதற்கே!
நல்வ ளங்கள் வேண்டாவோ?
     நாடு தழைத்தே ஓங்குதற்கே!
சொல்வார் நடுவர்  நாடுயரச்
     சொக்கு தமிழில் நல்தீர்ப்பே!

அரசி. பழனியப்பன் 
      
      
       
    
      
     
     
     

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
1:06 AM (12 hours ago) 1:06 AM
to சந்தவசந்தம்
On Sunday, March 8, 2026 at 9:32:45 PM UTC+5:30 Subbaier Ramasami wrote:
இந்தத் திரியிலேயே இனி அரங்கம் தொடரட்டும்

தயக்கம் வேண்டாம், தியாகந்தான்
      தங்க வேலன் சாற்றிடுவார்

 இலந்தை
 8-3-2026
  
   
தலைவரே எழுதத் தொடங்குகிறேன் .
தியாகத்தைப்பற்றி
நன்றி

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
1:09 AM (12 hours ago) 1:09 AM
to சந்தவசந்தம்

இமையவரம்பன் அவர்களின் கவிதை அனைத்து இனிக்கிறது.


( பாவகை வஞ்சி விருத்தம் பூ பூ மா)

படைக்கப்பட்ட அற்புதமான பா
படைக்குச்சென்றோர் தியாகத்தையெண்ணிப் பார்
படைக்குச்சென்றி றந்தோரையுமெண்ணி பார்
படைக்குப்பின்னே தியாகத்தையெண்ணிப் பார்


On Monday, March 9, 2026 at 2:58:39 AM UTC+5:30 இமயவரம்பன் wrote:
அழகிய பாட்டால் என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி, தலைவரே! இதோ எனது பாடல்:


தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது படையே

படைப் பத்து
(நேரிசை வெண்பா)

கடவுள் பெயராலே காழ்ப்பனைத்தும் காட்டி
மடமை இருள்கவிய வாட்டிக் - குடியின் 
மகிழ்வனைத்தும் மாய்க்கும் மதவெறியாம் வெய்ய
பகையடக்க வேண்டும் படை.(10).

- இமயவரம்பன் 

மிகவும் சிறப்பான கவிதை இது.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
3:29 AM (10 hours ago) 3:29 AM
to சந்தவசந்தம்
கருவூர் இனியன் அவர்களின் பாடல்கள் 
எப்போதும் இனிக்கும் கற்கண்டு.


குறைகள் ஏதும் இல்லாத
   குறிப்பு மிக்க தரமான
நிறைகள் நிறைந்த பாடலது
   நித்தம் கல்வி கற்றிடவே
மறைவாய் தியாகம் செய்வோரும்
  மண்ணில் இருந்து நிஜம்தானே
துறைகள் பலவும் இருந்தாலும்
  துயரைத் துடையோர் தியாகிகளே

On Tuesday, March 10, 2026 at 8:53:02 AM UTC+5:30 Govindaraju Arunachalam wrote:

சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2

நாள்: 8-மார்ச்-2026

நடுவர் : கவிமாமணி இலந்தையார்

எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது கல்வியே

 

அவை வணக்கம்

 


நிறைவாய் ஒன்றைச் சொல்லிடுவேன்

   நிலைத்த புகழ்சேர் பாரதத்தில்

மறைவாய் உள்ள மாசெல்லாம்

   மாயம் நிகழ்ந்து நீங்கிவிட

துறைகள் தோறும் கல்வியினைத்

   துலங்கச் செய்தல் முதற்கடமை

குறைகள் இருப்பின் என்கருத்தில்

   குழந்தைப் பேச்சென் றொதுக்கிடுக!

 

-கருவூர் இனியன்.

 


 

 

 

O

Rajagopalan Soundararajan

unread,
6:57 AM (6 hours ago) 6:57 AM
to சந்தவசந்தம்
பட்டி மண்டபத்துக்கே உரிய விறுவிறுப்பு. படை உதவாது என்று வாதாடி, இவரும் கையிலே ஆயுதத்தையே எடுக்கச் சொல்கிறார்!

"கல்வி என்னும் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் பாரதமே வெல்லும்"

மிகச் சரியே. 

'கல்லாதார் இலங்கை கட்டழித்த காகுத்தன்' என்கிறார் ஆழ்வார். கற்றறிந்து தர்மத்தை எடுத்துக்கூறும் ஒருவன் இருந்தான், அவனும் வெளியேறி காகுத்தனையே சரண் புகுந்தான், இனி இலங்கை 'கல்லாதார் இலங்கை'யாக ஆகிவிட்டது என்று கூறி இலங்கையை அழித்தான் என்பது விளக்கம்.

கல்விக்கே என் ஓட்டு

ஸௌந்தர் 



Ram Ramakrishnan

unread,
11:47 AM (2 hours ago) 11:47 AM
to santhav...@googlegroups.com
இனியனார் கவிதைக்குப் பின்னூட்டம்

பார்போற்றுங் கல்வியதன் பங்கைத் தந்தார்
… படையன்று நாட்டிற்கு முதன்மை என்றார்
தீர்வதனைச் சொல்கின்ற திகட்டாப் பேச்சு
… தெம்புதர மக்கள்தமைத் தெருட்டும் வீச்சு
ஈர்கின்ற கவிதையதில்  இனியன்  சொன்னார்
... ஏற்கின்ற வகையமைந்தே ஆர்க்கும் தன்னால்
சார்வோமோ தீர்ப்பிதென்றே நாட்டின் தேவை
… தருணமல்ல முடியும்வரை காத்தற் காவல்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages