கேடில் விழுச்செல்வங் கல்வி

517 views
Skip to first unread message
Message has been deleted

naa.g...@gmail.com

unread,
Mar 9, 2012, 2:26:28 PM3/9/12
to Santhavasantham
கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

ஒருவற்குக் கேடு இல் விழுச்செல்வம் கல்வி -ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த
செல்வம் கல்வியே; மற்றையவை மாடு அல்ல-மற்றப் பொருட் செல்வங்களெல்லாம்
இயற்கையாலுஞ் செயற்கையாலும் அழிந்துபோந் தன்மையன வாதலின் சிறந்த
செல்வங்களாகா.

கல்வியின் கேடின்மையை,

"வெள்ளத்தாற் போகாது வெந்தழலால் வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது
கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது கல்வியெனும்
உள்ளத்தே பொருளிருக்க வுலகெல்லாம் பொருள்தேடி யுழல்வதேனோ"

என்னும் பழந்தனியனால் அறிக.கல்விச் சிறப்பு அறிவொழுக்கமும் அரசனாலும்
மதிக்கப்பெறுதலும் மறுமையில் நற்பதப்பேறுமாம்.

"அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையும் நாட்டும்-உறுங்கவலொன்
றுற்றுழியுங் கைக்கொடுக்குங் கல்வியி னூங்கில்லை
சிற்றுயிர்க் குற்ற துணை".

என்பது நீதிநெறி விளக்கம்(2).

முதற்காலத்தில் ஆவுங்காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக்
கருதப்பட்டதினால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று.
மேலைநாடுகளிலும் இங்ஙனமே மாடு செல்வமாகக் கொள்ளப்பெற்றது.

L.pecu-cattle, pecunia-money. E. pecuniary-(consisting) of money.

- Devaneya Pavanar's Tirukkural commentary.

Siva Siva

unread,
Mar 9, 2012, 2:58:00 PM3/9/12
to santhav...@googlegroups.com
/முதற்காலத்தில் ஆவுங்காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக்
கருதப்பட்டதினால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று. /

Interesting conjecture.

(OTL lists some other word as a possible root for this word when it refers to 'wealth')

In thevaram, even though the phrase 'மாடு' is used in many places, I do not recall any place where it is used to refer to cattle. To my recollection, in thevaram this word has always been used to mean 'side', 'wealth', etc. only!

Are there references in thirukkuRaL where the word 'மாடு' is used to refer to cattle?




கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

ஒருவற்குக் கேடு இல் விழுச்செல்வம் கல்வி -ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த
செல்வம் கல்வியே; மற்றையவை மாடு அல்ல-மற்றப் பொருட் செல்வங்களெல்லாம்
இயற்கையாலுஞ் செயற்கையாலும் அழிந்துபோந் தன்மையன வாதலின் சிறந்த
செல்வங்களாகா.

..........

naa.g...@gmail.com

unread,
Mar 9, 2012, 3:06:29 PM3/9/12
to சந்தவசந்தம்

On Mar 9, 11:58 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> /முதற்காலத்தில் ஆவுங்காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக்
> கருதப்பட்டதினால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று. /
>
> Interesting conjecture.
>
> (OTL lists some other word as a possible root for this word when it refers
> to 'wealth')
>
> In thevaram, even though the phrase 'மாடு' is used in many places, I do not
> recall any place where it is used to refer to cattle. To my recollection,
> in thevaram this word has always been used to mean 'side', 'wealth', etc.
> only!
>
> Are there references in thirukkuRaL where the word 'மாடு' is used to refer
> to cattle?

Not any that I am aware. But Kamban defintely uses mADukaL as cattle.
In my view, mADu is ancient Tamil/Dravidian word, esp. the female milk
yielding
cows. mADu the name has originally to do with maDi "udder of a milk-
cow".
Also, mADai - a gold coin comes from mADu "cow" - probably the price
of a or few cow/s.
VaLLuvar uses mADu as wealth & Pavanar is correct to tell its meaning.

~ ng

>
> 2012/3/9 naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com>

naa.g...@gmail.com

unread,
Mar 31, 2012, 10:56:08 AM3/31/12
to சந்தவசந்தம்

> On Mar 9, 11:58 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
>
> > /முதற்காலத்தில் ஆவுங்காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக்
> > கருதப்பட்டதினால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று. /
>
> > Interesting conjecture.
>
> > (OTL lists some other word as a possible root for this word when it refers
> > to 'wealth')
>

சிவா,

உங்கள் மடல் கண்டு நினைவுக்கு இந்த இழை வந்தது.

------------------

மாடு என்பதுடன் ஒப்பிட மாஷ என்ற வடசொல்லை தருகிறது.
பொருந்தவில்லை.

மாடு வேறு, மாஷ எனும் வடசொல் வேறு. ழகரம் வடமொழியில் ஷகரமாக
திரிதல் உண்டு. பொன் என்னும் மாழை (ஒளிமிகுந்தது - மாழை ஒண்கண்ணி -
தேவாரம்)
தரும் வடசொல் மாஷ என கருதுகிறேன்.
பொன் < பொல்- (பொலி-). பொலம்/பொலன் = பொன், பொற்றோடு (பொல்- இருப்பது
பார்க்கலாம்).

மாடு என்ற சொல் பற்றி மேலும் பார்க்கவேண்டும்.
உ-ம்: மாட்டூர், மாட்டுப்பள்ளி - தேவாரங்களில் வரும் தலங்கள் அல்லவா?
இந்த ஊர்ப் பெயர்கள் சொற்பழமை காட்டி நிற்பவை,

பிற பின்,
நா. கணேசன்

Hari Krishnan

unread,
Mar 31, 2012, 8:53:46 PM3/31/12
to santhav...@googlegroups.com



மாடு என்பதுடன் ஒப்பிட மாஷ என்ற வடசொல்லை தருகிறது.
பொருந்தவில்லை.

மாஷா பூபம்?

--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Oct 19, 2017, 11:49:37 PM10/19/17
to சந்தவசந்தம்


On Friday, March 9, 2012 at 11:58:00 AM UTC-8, siva siva wrote:
/முதற்காலத்தில் ஆவுங்காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக்
கருதப்பட்டதினால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று. /

Interesting conjecture.

(OTL lists some other word as a possible root for this word when it refers to 'wealth')

In thevaram, even though the phrase 'மாடு' is used in many places, I do not recall any place where it is used to refer to cattle. To my recollection, in thevaram this word has always been used to mean 'side', 'wealth', etc. only!

2012 மடலுக்கு ஓர் மறுமொழி.

மாடு என்பது மடி ‘udder' என்னும் சொல்லுடன் தொடர்புடையது. மாடு = (பெண்) பசுமாடு.
இந்த மாட்டை சிவபிரான் ஊர்தியாகக் கொள்வதில்லை.

ஆண்பசு - எனவே, காளை, சே, எருது, பசு, ... என்றெல்லாம் தேவாரத்தில் சிவன் ஊர்தி வருகிறதே ஒழிய, மாடு என்பதில்லை.
அரை ஆனுக்கும், இடை பெண்ணுக்கும் அனேகமாகப் பழைய இலக்கியங்களில் சொல்லுவர். அதுபோல,
மாடு பால் கறக்கவும், காளை, எருது சிவபெருமான் வாகனமாகவும் இருக்கிறது. கன்று பாலை மடுத்தும்
உறுப்பு மடி. மாடு - சினையாகுபெயர். நிலமற்ற உழக்குடிகளுக்கு மாடே (பெண்பசு) துணை. காளை பயனில்லை.
காளைக் கன்றை பாணர்க்கு அளிப்பது மரபு. நற்றிணை 310. http://nganesan.blogspot.com/2012/12/310.html
 Agriculture's natural recycling process.

பின்னர் காலப்போக்கில், மாடு என்றால் இரு பாலுக்கும் ஆகிறது.
மாடேறு மீசர்தமக் ...... கினியோனே - திருப்புகழ்
 
பெண்ணை என்றால் பெண்பனை, ஏற்றை என்றால் ஆண்பனை:
அதுபோல, மாடு X காளை - வேற்பாட்டை தேவாரத்தில் காண்கிறோம்.
மாடு ஏறி சிவன் செல்வதாகப் பாடல்கள் அதில் இல்லை.

நா. கணேசன்



Are there references in thirukkuRaL where the word 'மாடு' is used to refer to cattle?




கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

ஒருவற்குக் கேடு இல் விழுச்செல்வம் கல்வி -ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த
செல்வம் கல்வியே; மற்றையவை மாடு அல்ல-மற்றப் பொருட் செல்வங்களெல்லாம்
இயற்கையாலுஞ் செயற்கையாலும் அழிந்துபோந் தன்மையன வாதலின் சிறந்த
செல்வங்களாகா.

கல்வியின் கேடின்மையை,

"வெள்ளத்தாற் போகாது வெந்தழலால் வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது
கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது கல்வியெனும்
உள்ளத்தே பொருளிருக்க வுலகெல்லாம் பொருள்தேடி யுழல்வதேனோ"

என்னும் பழந்தனியனால் அறிக.கல்விச் சிறப்பு அறிவொழுக்கமும் அரசனாலும்
மதிக்கப்பெறுதலும் மறுமையில் நற்பதப்பேறுமாம்.

"அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையும் நாட்டும்-உறுங்கவலொன்
றுற்றுழியுங் கைக்கொடுக்குங் கல்வியி னூங்கில்லை
சிற்றுயிர்க் குற்ற துணை".

என்பது நீதிநெறி விளக்கம்(2).

முதற்காலத்தில் ஆவுங்காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக்


கருதப்பட்டதினால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று.
மேலைநாடுகளிலும் இங்ஙனமே மாடு செல்வமாகக் கொள்ளப்பெற்றது.

L.pecu-cattle, pecunia-money. E. pecuniary-(consisting) of money.

                     - Devaneya Pavanar's Tirukkural commentary. 

N. Ganesan

unread,
Oct 20, 2017, 10:10:33 AM10/20/17
to சந்தவசந்தம்


On Friday, March 9, 2012 at 11:58:00 AM UTC-8, siva siva wrote:
/முதற்காலத்தில் ஆவுங்காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக்
கருதப்பட்டதினால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று. /

Interesting conjecture.

(OTL lists some other word as a possible root for this word when it refers to 'wealth')

In thevaram, even though the phrase 'மாடு' is used in many places, I do not recall any place where it is used to refer to cattle. To my recollection, in thevaram this word has always been used to mean 'side', 'wealth', etc. only!

Are there references in thirukkuRaL where the word 'மாடு' is used to refer to cattle?



உங்கள் வினா சிந்தனையைத் தூண்டுகிறது. திருவள்ளுவர் கூறும் மாடு எது?
மயிலை சீனி வேங்கடசாமி முதலில் குறளில் உள்ள மாடு என்பது “கற்றா”
காரணமாக வந்த சொல் என்று எழுதினார். பாவாணர் தம் குறள் உரையில் தொடர்ந்தார்.

கிருஷ்ணாவதாரத்தை விரிவாகப் பாடும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலே
கூட மாடு என்றால் கன்று காலி, கற்றா, ஆக்கள் எனக் காணோம். சங்க இலக்கியம்,
தேவாரம் போன்றவற்றிலும் இல்லை. பொதுவூழி (கி.பி., CE) முதலாயிரத்தில்
(First Millennium) மாடு = ஆக்கள் என்று காணோம். மாடு என்றால்
செல்வம் (அல்லது) பக்கம் என்ற பொருளைப் பரக்க இருக்கிறது.

மாடு மேய்க்கும் கண்ணே!
கண்ணனைப் பாடும்போது மாடு என்ற சொல்லே காணோமே.
அப்போது, மாடு என்பது ஆக்கள் என்றால் அதிலிருந்தா மாடு = செல்வம்
என்ற சொல்???

பொதுவூழி இரண்டாயிரத்தில் மாடு = கன்றுகாலி என்னும் பயன்பாடு பெருகிவிடுகிறது.
கோவர்த்னகிரிதாரனை பாடும் பழைய பாடல் தொல்காப்பிய உரையில் காண்கிறோம்:

குன்றுகொண்டு நின்றமாடு 
பொன்ற வந்த மாரி 
சென்று காத்த திறலடி தொழுமே

இதன்கண் முதலடி ஐந்தெழுத்தான் வந்தது.
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/page274-859px-தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf.jpg

”குறளில் மாடு” என்னும் தலைப்பில் மாடு என்றால் என்ன என என்கருத்தை எழுத எண்ணியுள்ளேன்.

பொ.ஊ (Current Era, CE) முதலாயிரத்திலே, ஆயன், இடையன், ஆக்கள், ஆ/ஆன் தான் போலும்.
எதுகை நோக்கி “ஆடுமாடு” என்றானது பொ.ஊ. இரண்டாமாயிர காலம்.
“பசுக்களை, `மாடு` என வழங்குதல் உயர்ந்தோர் வழக்கிற் காணப்படாமையின், ``மாடு`` என்றதற்கு, `பசு` என்று உரைத்தல் ஆகாது என்க. ``ஆள்வார் இலி மாடு ஆவேனோ`` என்றதில் ஆக்கம் `உவமை குறித்தது` என்பர், மாதவச் சிவஞான யோகிகள் (சிவஞானபோதம்-சூ.7, அதி.3, சிவ ஞானசித்தி - சூ.8.29.) `ஏமாத்தல், ஏமாறுதல்` என்னும் சொற்களிடை வேறுபாடு அறியாதார் `ஏமாத்தல்` என்பதற்கும், `ஏமாறுதல்` என்பதன் பொருளே பொருளாக உரைப்பர்; அது பொருந்தாமையை, சான்றோர் செய்யுட்கள் நோக்கி அறிந்துகொள்க. `ஏமாறுதல்` என்பது, `ஏமம் மாறுதல்` என்பதன் மரூஉ. எனவே, இது, பிற்கால மரூஉ மொழிகளுள் ஒன்று என்க.”

கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
  நினைத்து முலைவழியே நின்றுபால் சோர - திருப்பாவை

வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ?
கானோ? ஒருங் கிற்றும் கண்டிலமால்,- ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,
வன்துயரை யாவா! மருங்கு.

கற்றாய ரோடுநீ கன்றுகள் மேய்த்துக் கலந்துடன் வந்தாய் போலும்.

இப்போது கறவைமாடு, முன்பு கறவா.
கறவா மடநாகுதன் கன்றுள்ளி னாற்போல்,
மறவா தடியே னுன்னையே யழைக்கின்றேன்,

புட்டியில் சேறும் புழுதியும் கொண்டுவந்து
அட்டி யமுக்கி அகம்புக் கறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும்உண்
பட்டிக்கன் றேகொட்டாய் சப்பாணி பற்பநா பாகொட்டாய் சப்பாணி.

யசோதை கூற்று:
தாய்மார் மோர்விற்கப் போவர் தகப்பன்மார் கற்றா நிறைப்பின்பு போவர்
நீஆய்ப் பாடிஇளங் கன்னி மார்களை நேர்பட வேகொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பன வேசெய்து கண்டார் கழறத் திரியும்
ஆயா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.

நா. கணேசன்

 



N. Ganesan

unread,
Oct 20, 2017, 10:28:44 AM10/20/17
to சந்தவசந்தம்


On Saturday, March 31, 2012 at 5:53:46 PM UTC-7, Hari Krishnan wrote:


2012/3/31 naa.g...@gmail.com <naa.g...@gmail.com>
மாடு என்பதுடன் ஒப்பிட மாஷ என்ற வடசொல்லை தருகிறது.
பொருந்தவில்லை.

மாஷா பூபம்?

மாஷ + அபூபம்.

அப்பம் என்ற தமிழ்ச் சொல் வடமொழியிலே அபூபம் என்றாகிறது என சம்ஸ்கிருத வல்லுனர்கள் கட்டுரைகளிலே படித்துள்ளேன்.

மாஷ = உழுந்து. உழுந்தின் கருமை நிறத்தால் வந்த பெயர்போலும். மா, மாழ் = கறுப்பு. ழககம் ஷகரம் ஆகும் நிலை:
கலூழ் > கலூஷ. விழைவு/விழைச்சு ‘பொருள்புணர்ச்சி’, விழய > விஷய.  மாழ்- > மாஷ “உழுந்து, இரும்பு’.
இரும்புக் காலத்திலே, மாஷ இரும்புக்கும், அதனால் எல்லா உலோகத்துக்கும் பெயர்.

மாடு (குறள்) - மாஷ. பழைய நாணயங்கள் கறுத்திருக்கும். வெள்ளி, காரீயம் (Lead), ... மாஷ ‘உலோகம்’ மாடு குறளில் எனலாம்.

அன்புடன்,
நா. கணேசன்
 

Reply all
Reply to author
Forward
0 new messages