பாரதியார் நினைவு தினம் - "வினை" கவிதை

157 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
Sep 12, 2015, 10:14:50 AM9/12/15
to santhav...@googlegroups.com
வணக்கம்,

பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு  நேற்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 
"நாளெல்லாம் வினை செய்" என்ற தலைப்பின் உரை நிகழ்த்தினேன்.  அப்போது நான் வாசித்த "வினை" கவிதை இதோ :-

அன்புடன்,
நிரஞ்சன்

***********************************************************************************************************

நீ பிறக்க
தாய் தந்தை
ஆற்றினர் ஒருவினை ;
உன் வருகைக்காக
இறைவன் திறந்தான் ஒரு கருவினை ;

பிறந்த பின்
நீ ஆற்றத்
தொடங்கினாய் பல வினை ;
பயன் தந்திருக்கும் சில வினை ;
பயன் தந்திருக்காது சில வினை;

நண்பர்களே !!
நான் இப்போது
வாசிக்கப் போகிறேன்
நானெழுதிய பாவினை ;
உன் சிந்தனையில் சூடு
நான் தொடுக்கும் கவிதைப் பூவினை ;

ஆற்று ஒரு வினை ; பரவாயில்லை
ஆனால் ஆகட்டும் அந்த ஒருவினை ஓர் அருவினை;
அருவினை செய்து செய்து
பெருக்கு உன் திருவினை ;

நாள்தோறும் செய் வினை ;
யாருக்கும் வைத்துவிடாதே செய்வினை ;

அவ்வினை செய்யினும்
இவ்வினை செய்யினும்
எவ்வினை செய்யினும்
செய்யாதே நீ வெவ்வினை;
செய் நீ எப்போதும் செவ்வினை ;

பட்டை தீட்டு
உன் அறிவினை ;
படித்துப் படித்துக் 
கூராக்கு அதன் செறிவினை ;

நித்தமும் பேண்
உன் உறவினை ;
உன் உறவுகளோடு
தவிர் முறிவினை ;

உதவி கேட்டு வருவோர்க்கு
செய் கர வினை ;
வினை பல செய்யினும்
செய்யாமல் இருக்காதே அற வினை ;

அரியர்ஸ் வந்தாலும்
தைரியமாய் எழுது நீ தேர்வினை ;
அப்போது அருகே வந்தால்
எட்டி உதை அந்தச் சோர்வினை ;
அதன் பின் காண்பாய்
உன் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வினை ;

துன்பம் வந்தால் 
செய் துன்பத்திற்கோர் முடிவினை ;
அப்போது காண்பாய் வாழ்வில்
ஓர் விடிவினை ;

குறை உன் செலவினை ;
கூட்டு உன் வரவினை ;

செம்மையாக்கு உன் வடிவினை ;
உள்ளத்தால் அழகாக்கு உன் உருவினை ;

விழுந்தாலும் பொருட்டாக
மதிக்காதே உன் சரிவினை ;
சரியும் போது
நினை உன் உயர்வினை ;
அறவே போக்கு உன் அயர்வினை ;

முயன்று முயன்று
முயன்று முயன்று பார்த்தால்
ஓடும் உன் ஊழ்வினை ;
ஊழ்வினையை அழித்து
வளமாக்கு உன் வாழ்வினை ;
வாழ்வினை வளமாக்கினால்
வெல்வாய் நீ சாவினை ;

Siva Siva

unread,
Sep 12, 2015, 11:10:27 AM9/12/15
to santhavasantham
/நண்பர்களே !! .... உன் சிந்தனையில் சூடு
நான் தொடுக்கும் கவிதைப் பூவினை ;/

Any reason for this mix of plural and singular?

/மதிக்காதே உன் சரிவினை ;/
மதியாதே?

/உதவி கேட்டு வருவோர்க்கு
செய் கர வினை ;/

கரவினை - Here it can be ambiguous or misleading.

/செய்யாமல் இருக்காதே அற வினை ;/
இராதே?


--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

vidhyasagar1976

unread,
Sep 12, 2015, 1:17:38 PM9/12/15
to santhav...@googlegroups.com
ஆகா ஆகா.. மிக மிக அருமை.. ஐயா வாலி எழுதி படித்ததைப்போல் நடையழகும் அர்த்த செறிவோடும் அற்புதமாகயிருந்தது திரு. நிரஞ்சன். வாழ்த்துக்கள். மகாகவியை நினைவுகூர்ந்துச் செய்தமை மேலும் சிறப்பு. நன்றி. வணக்கம்..

வித்யாசாகர்



Sent from my Samsung device

N. Ganesan

unread,
Sep 12, 2015, 1:23:16 PM9/12/15
to சந்தவசந்தம், vallamai, mintamil


On Saturday, September 12, 2015 at 10:17:38 AM UTC-7, வித்யாசாகர் குவைத் wrote:
ஆகா ஆகா.. மிக மிக அருமை.. ஐயா வாலி எழுதி படித்ததைப்போல் நடையழகும் அர்த்த செறிவோடும் அற்புதமாகயிருந்தது திரு. நிரஞ்சன். வாழ்த்துக்கள். மகாகவியை நினைவுகூர்ந்துச் செய்தமை மேலும் சிறப்பு. நன்றி. வணக்கம்..

வித்யாசாகர்


நிரஞ்சனின் பாட்டனார் தன் 14 வயதில் எழுதிய சீட்டுக்கவி படிக்கவும்,
கவிஞர் வித்யாசாகர். 

பாரதியார் எழுத்துக்கள் கூட இன்னும் இணையத்தில் இல்லையே.
ஒரு 2+ லட்சம் புஸ்தகங்களாவது தமிழில் இருந்து இணையத்தில் வந்தால்
தமிழின் ஆழம், அகலம், அழகு, இந்திய சமூக, சமய வரலாறுகள் தெள்ளென
விளங்கும்.

நா. கணேசன்
கிண்டி பொறியியற்கல்லூரியில் நிரஞ்சனின் பெற்றோர் இருவரும் என் க்ளாஸ்மேட்ஸ். ‘81 B. E. (Hons) வகுப்பு.

N. Ganesan

unread,
Sep 12, 2015, 1:27:01 PM9/12/15
to சந்தவசந்தம்
திருமிகு. நிரஞ்சன்,

எங்கள் ஊரில் கவிதை வாசித்தமைக்கு நன்றி.

சிவா சொல்லும் திருத்தங்களை ஏற்றல் மிளிரும்.

வாழ்த்துக்களுடன்,
நா. கணேசன்

Niranjan Bharathi

unread,
Sep 12, 2015, 2:40:05 PM9/12/15
to santhav...@googlegroups.com

தவறுக்கு மன்னிக்கவும்

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Kavingar Jawaharlal

unread,
Sep 13, 2015, 12:09:25 AM9/13/15
to santhavasantham
அன்பு நிரஞ்சன் ! கவிதை அருமை. சுட்டும் குறைகளை நிறைகளாக்கி வெற்றி காண வாழ்த்துகிறேன் .
--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119

Ramamoorthy Ramachandran

unread,
Sep 13, 2015, 2:13:34 AM9/13/15
to santhav...@googlegroups.com
நிரவலே  ராகந்  தன்னை  நிகழ்த்திடும்;  அதனால் , அன்ப! 
வரவினை   விரித்து  வைத்து  வாழும்சொற்  சிக்க  னத்தால் 
தரவினை  அறிந்து  தேர்ந்து   தமிழ்வினைக்  கவிதை செய்தால்
தரமான   வினையென்  றிங்கே  சான்றோர்கள்  போற்ற வாரே !
 
நிரஞ்சனின் முயற்சிகள்  சிறந்து மிக்கோங்குக!
அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

Ramamoorthy Ramachandran

unread,
Sep 13, 2015, 2:14:35 AM9/13/15
to santhav...@googlegroups.com
திருத்தம் : போற்றுவாரே 
Reply all
Reply to author
Forward
0 new messages