வகையுளியால் எதுகை

172 views
Skip to first unread message

Siva Siva

unread,
Jan 8, 2016, 7:03:23 PM1/8/16
to santhavasantham
தமிழில் வகையுளியால் எதுகை அமைத்தல் மிகவும் அரிதே காணும் ஒன்றோ?
(இவ்வாறு வகையுளியைக்கொண்டு எதுகை அமைத்தல் கன்னடத்தில் பரவலாகக் கையாளப்படும் ஒன்று என்று படித்த ஞாபகம். மற்றோர் தெளிவுபடுத்தக்கூடும்);

சமீபத்தில் கண்ணிற்பட்ட இரு தேவாரப் பாடல்களில் இவ்வாறு எதுகை அமையக் கண்டேன். (முன்னர்ப் படித்த ஒரு திருவாசகப் பாட்டிலும் அப்படி அமைந்ததையும் நினைந்தேன்);

சம்பந்தர் தேவாரம் - 2.119.9
கரியமாலும் மயனும் மடியும்முடி காண்பொணா
எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்இட மீண்டுகா
விரியின்நீர்வந் தலைக்குங் கரைமேவு நாகேச்சரம்
பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே.


சம்பந்தர் தேவாரம் - 1.131.1
மெய்த்தாறு சுவையுமே ழிசையுமெண் குணங்களும் விரும்புநால்வே
தத்தாலு மறிவொண்ணா நடைதெளியப் பளிங்கேபோ லரிவைபாகம்
ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன் கருதுமூ ருலவுதெண்ணீர்
முத்தாறு வெதிருதிர நித்திலம்வா ரிக்கொழிக்கு முதுகுன்றமே.

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - 8.6.3
காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய்
வேருறு வேனை விடுதிகண் டாய்விளங் குந்திருவா
ரூருறை வாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே


அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Hari Krishnan

unread,
Jan 8, 2016, 9:01:12 PM1/8/16
to santhavasantham

2016-01-09 5:33 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:
தமிழில் வகையுளியால் எதுகை அமைத்தல் மிகவும் அரிதே காணும் ஒன்றோ?
(இவ்வாறு வகையுளியைக்கொண்டு எதுகை அமைத்தல் கன்னடத்தில் பரவலாகக் கையாளப்படும் ஒன்று என்று படித்த ஞாபகம். மற்றோர் தெளிவுபடுத்தக்கூடும்);

கம்பராமாயணத்தில் பல பாடல்கள் உண்டு.  கந்தரலங்காரத்திலோ அந்தாதியிலோ இப்படிப் பார்த்த நினைவிருக்கிறது.  இப்படிப் பல பாடல்கள் உண்டு.

அவ்வளவு ஏன்?

விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை
இடத்திலே வைத்த இறைவர் சடாம
குடத்திலே கங்கையொடுங் கும்

என்ற காளமேகப் பாடலில், சிலேடைக்காகப் பிரித்திருந்தாலும், வகையுளியால் எதுகை என்ற பிரிவிலும் வருமல்லவா?


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Pas Pasupathy

unread,
Jan 8, 2016, 9:14:47 PM1/8/16
to Santhavasantham
ஹரி சுட்டியபடி பல ‘சவால்’ ஈற்றடிகளுக்கு ‘பதில்’ வெண்பாக்களில் இப்படித்தான் இருக்கும் .

செய்குத் தம்பிப் பாவலரின் :
.....................................  சத் 
துருக்கனுக்கு ராமன் துணை.


 அரசஞ் சண்முகனாரின் : 
................................  இன்னும்கொஞ்
சம்தருக ராமானு ஜம். 



2016-01-08 21:01 GMT-05:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2016-01-09 5:33 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:
தமிழில் வகையுளியால் எதுகை அமைத்தல் மிகவும் அரிதே காணும் ஒன்றோ?
(இவ்வாறு வகையுளியைக்கொண்டு எதுகை அமைத்தல் கன்னடத்தில் பரவலாகக் கையாளப்படும் ஒன்று என்று படித்த ஞாபகம். மற்றோர் தெளிவுபடுத்தக்கூடும்);


Siva Siva

unread,
Jan 8, 2016, 9:36:23 PM1/8/16
to santhavasantham
ஆம், நீங்கள் சொன்னவாறு சிக்கலான சவால் வெண்பா ஈற்றடிகள் இப்படி வகையுளியில் தொடங்குவது நினைவிற்கு வந்தது.
ஆனால், மற்ற பாடல்களில் மிக அரிதோ? சிறப்பன்று என்று கருதப்படுகின்றதா?

Hari Krishnan

unread,
Jan 8, 2016, 9:47:22 PM1/8/16
to santhavasantham

2016-01-09 8:06 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:
ஆம், நீங்கள் சொன்னவாறு சிக்கலான சவால் வெண்பா ஈற்றடிகள் இப்படி வகையுளியில் தொடங்குவது நினைவிற்கு வந்தது.
ஆனால், மற்ற பாடல்களில் மிக அரிதோ? சிறப்பன்று என்று கருதப்படுகின்றதா?

அப்படியெல்லாம் ஒரு ஆசாரமும் கிடையாது.  ரொம்ப மடி பாக்கறவங்களுக்குதான் இதெல்லாம் தோணும் போல இருக்கு.  எத்தனையோ பாடல்களில் பாத்தும் ஞாபகத்தில் வச்சுக்காததுக்குக் காரணம், இவ்விடத்தில் மடி, ஆசாரம் ஒண்ணும் கிடையாது.  :))))

Vis Gop

unread,
Jan 9, 2016, 11:28:56 AM1/9/16
to santhav...@googlegroups.com
குடத்திலே கங்கையடங் கும்


என்று படித்த ஞாபகம்.
கோபால்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Pas Pasupathy

unread,
Jan 9, 2016, 11:39:38 AM1/9/16
to Santhavasantham
1) வெண்பாவின் ஈற்றடிகளில் வரும் இதைப் பொழிப்பு மோனை ( வகையுளி உள்ளது/ இல்லாதது) என்பதுடன் தொடர்பு படுத்தி அணுகவேண்டும் என்று தோன்றுகிறது. 
2) மற்ற பாடல்களில் இது அரிய பிரயோகமே என்று தற்போது தோன்றுகிறது.  

ஒரு சான்று: 

 நாமகண் மாமகள் சேர்காழி நாதர் நகுமிமயக்
கோமகள் பாகர் விடைப்பாகர் தென்கழுக் குன்றத்தொப்பி 
லாமகள் கோதைநம் போல்வா டலினிமை யாடலிற்றாள் 
பூமகள் சூடலி னையமின் றாலிவள் பூமகளே 

                             மீனாட்சி சுந்தரம் பிள்ளை ( சீகாழிக் கோவை) 



சந்தப் பாடல்களிலும், யமகப் பாடல்களிலும் தேடினால் கிடைக்கலாம்.  

2016-01-08 21:36 GMT-05:00 Siva Siva <naya...@gmail.com>:
ஆம், நீங்கள் சொன்னவாறு சிக்கலான சவால் வெண்பா ஈற்றடிகள் இப்படி வகையுளியில் தொடங்குவது நினைவிற்கு வந்தது.
ஆனால், மற்ற பாடல்களில் மிக அரிதோ? சிறப்பன்று என்று கருதப்படுகின்றதா?


Subbaiyar Ramasami

unread,
Jan 9, 2016, 12:46:40 PM1/9/16
to santhav...@googlegroups.com
I have written so many poems with this technique

Ramasami

--

Siva Siva

unread,
Jan 9, 2016, 9:49:28 PM1/9/16
to santhavasantham
மடி மைலிகெ எனக்கும் தெரியாது! :)

Siva Siva

unread,
Jan 9, 2016, 9:55:18 PM1/9/16
to santhavasantham
Yes, I think it probably occurs with high frequency in yamagam type songs.
However, I was wondering if there was some 'unstated' expectation to avoid it in other types of songs.

Based on the response received so far in this thread, vagaiyuLi across lines in a song is perfectly normal and is not considered as something to be avoided!

Hari Krishnan

unread,
Jan 9, 2016, 11:12:58 PM1/9/16
to santhavasantham

2016-01-10 8:25 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:
Yes, I think it probably occurs with high frequency in yamagam type songs.
However, I was wondering if there was some 'unstated' expectation to avoid it in other types of songs.

ணோவ்,

அப்படியெல்லாம் இல்ல.  கம்பராமாயணத்துல எத்தனையோ பாட்டு அப்படி இருக்கு.  முற்றோதல் சமயத்துல, 'இதோ இந்தக் கடைசிச் சீரை, அடுத்த அடியின் முதல் சீரில் இன்ன பகுதி வரைக்கும் சேத்துப் படிக்கணும்'னு எத்தனையோ பாடல்களுக்குச் சொல்லிப் படித்துக் காட்டியிருக்கிறேன்.  என்ன ஒண்ணு.  இதையெல்லாம் குறித்து வைக்கவில்லை.  இது ஒரு இஷ்யூவாவே தோணினதில்ல.  அவ்ளதான்.  யமக வகைப் பாடல்களுக்கு அவசியம் கருதி இது கூடுதலா தேவைப்பட்டிருக்கலாம்.  மத்த பாடல்களிலும் இப்படிப் பழக்கமுண்டு.  The frequency is--of course it has to be--comparatively less.

N. Ganesan

unread,
Jan 10, 2016, 11:47:33 AM1/10/16
to சந்தவசந்தம்


On Saturday, January 9, 2016 at 8:28:56 AM UTC-8, visgop wrote:
குடத்திலே கங்கையடங் கும்

என்று படித்த ஞாபகம்.
கோபால்.

இந்த வெண்பாவில் “அடங்கும்” என்ற சொல்தான் பொருள்மிகுந்தது.
அவ்வாறு காளமேகம் கவி.

நா. கணேசன் 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 10, 2016, 11:53:11 AM1/10/16
to சந்தவசந்தம்
>
Yes, I think it probably occurs with high frequency in yamagam type songs.
ஆம். யமகப் பாடல்களில் அடிகளுக்கிடையே வகையுளி வருவது அனுமதிக்கப் படுகிறது. தேடினால் பல கிட்டும்.
முன்னம் (2005-ல்) நான் இங்கிட்ட இரு யமகங்களில் பயன்படுத்திய வகையுளிகள்:

திரிபுர மூன்று தகர்த்திடுந் தாதை வழிமொழியத்
திரிபுர நாயகித் தாயவள் தாங்கிட வேங்கடவத்

திரிபுர மேவிடு மாமன் திருமடி தாவியமர்

திரிபுர மாறுடைத் தேவநின் சேவடி சேர்ந்தனனே

 

வேங்கட அத்திரி புரம்: வேங்கட மலையடியிலுள்ள திருப்பதி (adhri= mountain); திரி புரம் ஆறு உடைத்தேவன் : தான் திரிவதற்காக ஆறு ஊர்களை/படை வீடுகளைக் கொண்ட முருகன்.


தங்கை தரித்தனன் சக்கரஞ் சங்கந் தடாதகையாந்  

தங்கை அளித்தான் சடையன் களித்திடத் தாளினில்

தங்கை அசையத் தனிநடஞ் செய்தோன் தளிர்பதம்நி

தங்கை இணைசேர்த் திறைஞ்சிடச் சங்கடஞ் சார்ந்திலதே.



.. அனந்த்

 10-1-2016


விவேக் பாரதி

unread,
Jan 12, 2016, 6:21:12 AM1/12/16
to santhav...@googlegroups.com
இதே போல வகையுளி கொண்ட ஈற்றடிகளை வைத்து வெண்பா அமைப்பது குறித்து நானும் எனது பள்ளி நூலகத்தில் படித்துள்ளேன் அவையுள் எனக்குப் பிடித்ததாய் நான் எழுத நினைத்து இன்னும் எழுதாமலேயே வைத்திருக்கும் காளமேகப் புலவனது சில ஈற்றடிகள் மட்டும் இங்கே பதிகின்றேன் 

1) சங்கொடுவா ராமா நுசம் 
2) குடத்திலே கங்கையடங் கும் 
3) காரமுந் தித்திக்கும் காண்
4) டுங்கடுநட் புப்பகைகாட் டும் 
5) வசிதம் பரதே வனே 
6) டானைமுகற் காறிரண்டு கை 


மேலும் காளமேகப் புலவன் ஒரு வெண்பாவில் அற்புதமாக வகையுளியைப் பயன்படுத்தி எதுகையொடு முடித்தமை கண்டு நான் வியந்ததுண்டு அந்த வெண்பாவையும் இங்கே பதிகின்றேன் 

பகருங்கால் மேடம் இடப்பம்மிதது னங்கர்க்க
டகஞ்சிங் கங்கன்னி துலாம்விர்ச் - சிகந்த
நுசுமகரங் கும்பம் மீ னம்பன் னிரண்டும் 
வசையறுமி ராசி வளம் !!

(பாருங்காள் ஆகா ஆகா என்னே ஒரு தந்திரம் இதுதான் காளமேகம் !!! அப்பப்பா இப்பொது நினைத்தாலும் புல்லரிக்கின்றது) 

வித்தக இளங்கவி 
விவேக்பாரதி

9750588007

N. Ganesan

unread,
Jan 12, 2016, 6:43:27 AM1/12/16
to சந்தவசந்தம்


On Tuesday, January 12, 2016 at 3:21:12 AM UTC-8, விவேக் பாரதி wrote:
இதே போல வகையுளி கொண்ட ஈற்றடிகளை வைத்து வெண்பா அமைப்பது குறித்து நானும் எனது பள்ளி நூலகத்தில் படித்துள்ளேன் அவையுள் எனக்குப் பிடித்ததாய் நான் எழுத நினைத்து இன்னும் எழுதாமலேயே வைத்திருக்கும் காளமேகப் புலவனது சில ஈற்றடிகள் மட்டும் இங்கே பதிகின்றேன் 

1) சங்கொடுவா ராமா நுசம் 
2) குடத்திலே கங்கையடங் கும் 
3) காரமுந் தித்திக்கும் காண்
4) டுங்கடுநட் புப்பகைகாட் டும் 
5) வசிதம் பரதே வனே 
6) டானைமுகற் காறிரண்டு கை 



 

மேலும் காளமேகப் புலவன் ஒரு வெண்பாவில் அற்புதமாக வகையுளியைப் பயன்படுத்தி எதுகையொடு முடித்தமை கண்டு நான் வியந்ததுண்டு அந்த வெண்பாவையும் இங்கே பதிகின்றேன் 

பகருங்கால் மேடம் இடப்பம்மிதது னங்கர்க்க
டகஞ்சிங் கங்கன்னி துலாம்விர்ச் - சிகந்த
நுசுமகரங் கும்பம் மீ னம்பன் னிரண்டும் 
வசையறுமி ராசி வளம் !!

பகருங்கான் மேடமிட பம்மிதுனங் கற்க
டகஞ்சிங்கங் கன்னி துலாம்விர்ச் – சிகந்த
நுசுமகரங் கும்பமீனம் பன்னி ரண்டும்
வரையறு மிராசி வளம் 

இங்கே, மிராசி என்பதை குற்றியலிகரமாகக்கொண்டு அலகிட வேண்டுமோ?

--------------

இன்னுஞ்சில அடிகளில் வகையுளி இருக்கும். குக்கலிச்சிக் குங்கலைச்சிக் கு
ஒருவர் ஈற்றடிகளைத் தொகுத்துள்ளார்:

----------------------

ஒவ்வொரு புலவர் பாடலிலும் வகையுளி தொகுப்பின் நன்று.
உ-ம்: வள்ளலார்

குலத்திலே சமயக் குழியிலே நரகக்
            குழியிலே குமைந்துவீண் பொழுது
நிலத்திலே போக்கி மயங்கியே மாந்து
            நிற்கின்றார் நிற்கநா னுவந்து
வலத்திலே நினது வசத்திலே நின்றேன்
            மகிழ்ந்துநீ யென்னுள மெனும் அம்
பலத்திலே நின்றாய் எனக்கிது போதும்
            பண்ணிய தவம்பலித் ததுவே!  - திருவருட்பா

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 12, 2016, 6:46:46 AM1/12/16
to சந்தவசந்தம்

Hari Krishnan

unread,
Jan 12, 2016, 6:47:28 AM1/12/16
to santhavasantham

2016-01-12 17:13 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பகருங்கான் மேடமிட பம்மிதுனங் கற்க
டகஞ்சிங்கங் கன்னி துலாம்விர்ச் – சிகந்த
நுசுமகரங் கும்பமீனம் பன்னி ரண்டும்
வரையறு மிராசி வளம் 

இங்கே, மிராசி என்பதை குற்றியலிகரமாகக்கொண்டு அலகிட வேண்டுமோ?

வரையறு(ம்) ராசி வளம்.

Hari Krishnan

unread,
Jan 12, 2016, 6:50:56 AM1/12/16
to santhavasantham
2016-01-12 17:17 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
வரையறு(ம்) ராசி வளம்.

சரியான ஈற்றடி:

வசையறுமி ராசி வளம்.

மூன்றாமடி நுசு என்றிருக்கையில், நான்காமடி எப்படி வரை என்றிருக்க முடியும்?

N. Ganesan

unread,
Jan 12, 2016, 6:51:35 AM1/12/16
to சந்தவசந்தம்


On Tuesday, January 12, 2016 at 3:21:12 AM UTC-8, விவேக் பாரதி wrote:
இதே போல வகையுளி கொண்ட ஈற்றடிகளை வைத்து வெண்பா அமைப்பது குறித்து நானும் எனது பள்ளி நூலகத்தில் படித்துள்ளேன் அவையுள் எனக்குப் பிடித்ததாய் நான் எழுத நினைத்து இன்னும் எழுதாமலேயே வைத்திருக்கும் காளமேகப் புலவனது சில ஈற்றடிகள் மட்டும் இங்கே பதிகின்றேன் 

1) சங்கொடுவா ராமா நுசம் 
2) குடத்திலே கங்கையடங் கும் 
3) காரமுந் தித்திக்கும் காண்

”காரமும் தித்திக்கும் காண்” - வகையுளி காணேன். 
இந்த காளமேகம் வெண்பாத் தரவியலுமா? நன்றி.

N. Ganesan

unread,
Jan 12, 2016, 7:29:08 AM1/12/16
to சந்தவசந்தம்


On Tuesday, January 12, 2016 at 3:50:56 AM UTC-8, Hari Krishnan wrote:

2016-01-12 17:17 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
வரையறு(ம்) ராசி வளம்.

சரியான ஈற்றடி:

வசையறுமி ராசி வளம்.

மூன்றாமடி நுசு என்றிருக்கையில், நான்காமடி எப்படி வரை என்றிருக்க முடியும்?

ஆம்,  வசையறுமி ராசி வளம் - சரியாக தெரிகிறது.

Lalitha & Suryanarayanan

unread,
Jan 12, 2016, 7:47:46 AM1/12/16
to santhav...@googlegroups.com
வித்தக இளங்கவியே,

பகருங்கால் மேடம் இடப்பம்மிதது னங்கர்க்க
டகஞ்சிங் கங்கன்னி துலாம்விர்ச் - சிகந்த
நுசுமகரங் கும்பம் மீ னம்பன் னிரண்டும் 
வசையறுமி ராசி வளம் 

என்னும் இந்தப் பாடலை இப்படிப் பிரிப்பார்கள் :

பகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்க
டகஞ்சிங்கங் கன்னி துலாம்விர்ச் - சிகந்த
நுசுமகரங் கும்பமீ னம்பன் னிரண்டும் 
வசையறுமி ராசி வளம் .


சிவசூரி.


சிவசூரி.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 13, 2016, 11:34:42 AM1/13/16
to சந்தவசந்தம்

>> இதே போல வகையுளி கொண்ட ஈற்றடிகளை வைத்து வெண்பா அமைப்பது குறித்து நானும் எனது பள்ளி நூலகத்தில் படித்துள்ளேன்..

 - விவேக்


1999-ல் தொடங்கப் பட்ட தமிழ் இணையத் தளங்களில் ஒன்றானவெண்பா வடிக்கலாம் வா’- வில், ஈற்றடிப் புதிர் என்று தொடங்கிய விளையாட்டில்வகையுளி கொண்டனவாய் கொடுத்த ஈற்றடிகளுக்காக இட்ட எனது வெண்பாக்கள்: :

 

படமும் பசியாற்றும் பார்

 

ஆறுசுவைப் பண்டத்தோ டாவி பறக்குநற்

சோறுவர நேரஞ்சற் றாகுமெனக் - கூறும்

மடந்தை வளைக்கரத்தால் வந்தங் கிடும்பப்

படமும் பசியாற்றும் பார்.

 

{இதற்கான பசுபதியாரின் வெண்பா:

 

அடிசில் விரும்பி அடுக்களைக்குச் சென்றால்

கடிந்த மனையாளும் கைவிரித்தே காட்ட

நுடங்கியவோர் நோயாளி போன்ற பழம்பப்

படமும் பசியாற்றும் பார்.

(நுடங்கிய=துவண்ட; பப்படம்=அப்பளம்)}

 

கையால் கமழும் குழல்

 

பொன்னால் மிளிருஞ் செங்கழுத்து பூவையர்தம்

மின்னார் இடைமிளிரும் மென்பட்டால் - கன்னியிடும்

மையா லொளிரும் மலர்க்கண்கள் வாசமல்லி

கையாற் கமழுங் குழல்.

 

“ஆமை துரத்த முயல்”

 

முத்தும் பவளமுமாய் மூதறிஞர் யாத்திட்ட

முத்தமிழ்க் காவிய ரத்தினங்க- ளத்துணையும்

நீமெய்யாய்க் கற்று  நெக்குருக வேண்டின்கல்

லாமை துரத்த முயல்

 

ஊமையே யாயினு மூனக்கண் ணில்லெனினும்

வாமை யுனக்கருள வேண்டுதியேல்- நாமறிந்த

ஆமை முயலின் கதையுணர்ந்து நீமுய

லாமை துரத்த முயல்

 

அனந்த் 13-1-2016

Subbaiyar Ramasami

unread,
Jan 13, 2016, 7:27:16 PM1/13/16
to santhav...@googlegroups.com
சோழவந்தானில் அரசஞ்சண்முகனார் எனு தமிழ்ப்புலார் இருந்தார். அவர் வீட்டில் ஒரு விருந்து புலவர்கள் கூடியிருந்து உண்ட விருந்து.      அன்று பரிமாறியவர் பெயர் அருணாச்சலம்
ஒரு ஈற்றடி கொடுக்கப்பட்டது. அருணாச்சலம் தன் அருகே பரிமாற வரும் போது அங்கிருக்கும் புலவர் சந்தா அருணாச்சலம் என்னும் ஈற்றடி கொண்டு வெண்பாச் சொல்லவேண்டும். அது உணவுப்பண்டத்தைக் குறிப்பதாக இருக்க வேண்டும்.  ஒரு புலவர்  ...........ர
சந்தா அருணாச்சலம்  என்றார். இன்னொருவர்     ... அதிர   சந்தா அருணாச்சலம் என்றும் பாயசந்தா  ,அருணாச்சலம் என்றும் சென்றுகொண்டிருந்தது. சண்முகனாரின் இலையருகே வந்தபோது சம் சேர்த்துச் சொல்லும் பண்டங்கள் ஏதுமில்லை. எனவே அவர் சொன்னார் இன்னும் கொஞ்சந்தா அருணாசலம்

இலந்தை

Hari Krishnan

unread,
Jan 13, 2016, 9:56:56 PM1/13/16
to santhavasantham

2016-01-14 5:57 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
சோழவந்தானில் அரசஞ்சண்முகனார் எனு தமிழ்ப்புலார் இருந்தார். அவர் வீட்டில் ஒரு விருந்து புலவர்கள் கூடியிருந்து உண்ட விருந்து.      அன்று பரிமாறியவர் பெயர் அருணாச்சலம்
ஒரு ஈற்றடி கொடுக்கப்பட்டது. அருணாச்சலம் தன் அருகே பரிமாற வரும் போது அங்கிருக்கும் புலவர் சந்தா அருணாச்சலம் என்னும் ஈற்றடி கொண்டு வெண்பாச் சொல்லவேண்டும். அது உணவுப்பண்டத்தைக் குறிப்பதாக இருக்க வேண்டும்.  ஒரு புலவர்  ...........ர
சந்தா அருணாச்சலம்  என்றார். இன்னொருவர்     ... அதிர   சந்தா அருணாச்சலம் என்றும் பாயசந்தா  ,அருணாச்சலம் என்றும் சென்றுகொண்டிருந்தது. சண்முகனாரின் இலையருகே வந்தபோது சம் சேர்த்துச் சொல்லும் பண்டங்கள் ஏதுமில்லை. எனவே அவர் சொன்னார் இன்னும் கொஞ்சந்தா அருணாசலம்

அன்புள்ள இலந்தை,

கவிமாமணி குணசேகரனிடம் நான் கேட்டேனென்று சொல்லுங்கள்.  தசாவதானி ராமையாபிள்ளைக்கு (அவருடைய சின்ன மாமனார்--பதினாறு கவனகர் கனகசுப்புரத்தினம் அவருடைய மாப்பிள்ளை)) ஒரு அவதான பின்வரும் ஈற்றடி கொடுக்கப்பட்டது.

டத்து வசவரு டா

இவரை மடக்கிவிடவேண்டும் என்று ஈற்றடி கொடுத்தவர் நினைக்க, ராமையாபிள்ளை சிரித்துக் கொண்டே, 'சரி, சைவமா வேணுமா, வைணவமா வேணுமா' என்று கேட்க, ஈற்றடி கொடுத்தவர் விக்கித்துப் போனார்.  'வைணவமாகத்தான் பாடமுடியும்னு நினைச்சேன், சைவமாகவும் முடியுமோ?  ரெண்டுவிதமாகவும் பாடிடுங்களேன்' என்று கேட்டுக்கொள்ள, இரண்டுவிதங்களிலும் வெண்பா இயற்றினார்.

அந்த வெண்பாக்களின் முழுவடிவம் குணசேகரனிடம் (அந்தக் காலத்துல குணி என்று செல்லமாகக் கூப்பிடுவோம்!) கிடைக்கும்.  ஒரு ஃபோன் போட்டால் ஆச்சு.  என்னிடம் அவருடைய எண் இல்லை.  கொஞ்சம் கேட்டுச் சொல்கிறீர்களா?

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 13, 2016, 10:10:36 PM1/13/16
to சந்தவசந்தம்

Hari Krishnan

unread,
Jan 13, 2016, 10:20:56 PM1/13/16
to santhavasantham

2016-01-14 8:40 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
An earlier post on this:

இது நினைவில்லை.  மிக்க நன்றி.

(நினைவுக் கலையேந்தல் என்று தொடங்கி, மறந்து விடும் என்று முடியுங்கள் என்று ராமையா பிள்ளையை அந்தக் காலத்தில் சீண்டியதன் விளைவு என்று நினைக்கிறேன்.  நான் ஒரு நினைவுக் கொலையேந்தல்.  :))) )


--
அன்புடன்,
ஹரிகி.

veNbA virumbi

unread,
Jan 14, 2016, 8:07:32 PM1/14/16
to சந்தவசந்தம்

'சிலேடைப் புலி' வேம்பத்தூர்ப் பிச்சுவையர் பற்றிய ஒரு வரலாற்றுச் செய்தி (ஐயரவர்கள் எழுதியது):
**********

அப்பால் திருப்பெருந்துறையை அடைந்து அதன் தெற்கு வீதியிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் இவர் (பிள்ளையவர்கள்) பரிவாரங்களுடன் தங்கினார்.  இவர் அங்கே வந்துவிட்டதை ஸ்ரீ  ஆத்மநாதஸ்வாமி கோயிற் கட்டளை ஸ்தானத்திலிருந்த ஸ்ரீ  சுப்பிரமணிய தம்பிரானுக்குத் தெரிவிப்பதற்குப் பழனிக்குமாரத் தம்பிரானும் நானும் கட்டளை மடத்திற்குச் சென்றோம்.  அப்பொழுது மடத்தின் வெளியே உள்ள ஒரு மண்டபத்தில் நாட்டுக்கோட்டை நகரத்துத் தனவைசிய கனவான்கள் சிலரோடும், வேம்பத்தூர்ப் பிச்சுவையர் முதலிய தமிழ்ப் பண்டிதர்களோடும் இருந்து வன்றொண்டச் செட்டியார் பேசிக்கொண்டிருந்தார்.  பிச்சுவையர் பாடல் சொல்லி எல்லோரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தனர்.  அதைக் கவனித்த என்னை நோக்கி, "இவர்தாம் வேம்பத்தூர்ப் பிச்சுவையர்" என்று பழனிக்குமாரத் தம்பிரான் தெரிவித்தார்.  அவர் பாடல் சொல்லுதலைக் கேட்டுக்கொண்டே சிறிது நேரம் நின்றுவிட்டு உள்ளே சென்று சுப்பிரமணிய தம்பிரானைப் பார்த்துப் பிள்ளையவர்கள் வந்திருப்பதை நாங்கள் தெரிவித்தோம்.  இவருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்த அவர் அதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார்.  அச்சமயத்தில்,

"இன்றொண்டர் சூழ எழிலார்நின் சேவைசெய
வன்றொண்ட ரோடுகன வான்கள்சிலர் - இன்றொண்டு
பித்தற்கே செய்சுப் பிரமணிய நின்னோலக்
கத்திலே
வந்திருந்தார் கள்"

என்னும் பாடலைச் சொல்லிக்கொண்டே பிச்சுவையர் வந்தார்.  அவருடனிருந்த மற்றவர்களும் வந்தார்கள்.

வன்றொண்டர் முதலியவர்கள் வந்து வந்தனம் செய்து தம்பிரானிடம் விபூதிப்பிரசாதம் பெற்றுக்கொண்டார்கள்.  பிச்சுவையர் நிமிஷப்பொழுதிற் கவிசெய்யும் ஆற்றலைக் குறித்து வியந்து கொண்டே நாங்கள் இக்கவிஞர்பிரான் (பிள்ளையவர்கள்) இருந்த விடுதிக்குச் சென்றோம்.

அவ்விடத்திற் கோயிலார் மரியாதையுடன் வந்து பிரசாதங்களை இவரிடம் (பிள்ளையவர்களிடம்) கொடுத்துத் தரிசனத்திற்கு வரவேண்டுமென்று அழைத்தார்கள்.  உடனே இவர் ஆலயத்துக்குச் சென்றார்.  சுப்பிரமணிய தம்பிரான் அங்கே வந்து இவரை வரவேற்று முன்னே நின்று தரிசனம் செய்வித்தார்.  அன்றைத் தினம் திருவாதவூரடிகள் கொண்டருளியிருந்த மந்திரிக்கோலக் காட்சி எங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.

தரிசனமான பின்பு பிள்ளையவர்களுக்குத் தம்பிரானவர்களாற் காளாஞ்சிகள் கொடுக்கப்பெற்றன.  அவற்றை இவர் வாங்கி வேறொருவரிடம் கொடுப்பதற்குத் திரும்பினார்.  உடனே அங்கே நின்ற பிச்சுவையர் வந்து அவற்றை அன்புடன் வாங்கிக்கொண்டனர்; அவரைக் கண்டு பிள்ளையவர்கள், "துவடுக நாத துரை எப்பொழுது வந்தது?" என்று கேட்டனர்.

'துவடுக நாத துரை' என்று அவரைச் சொன்னதன் காரணத்தை நாங்கள் இவரிடம் பின்பு கேட்டுத் தெரிந்து கொண்டோம்:  ஒரு காலத்திற் சிவகங்கை ஸமஸ்தானத் தலைவராக இருந்த முத்துவடுகநாத துரையென்பவர் மீது பிச்சுவையர், காதலென்னும் ஒரு பிரபந்தம் செய்து அரங்கேற்றி ஸம்மானம் பெற்றனர்.  அப்பொழுது அங்கே ஆஸ்தான பண்டிதராக இருந்த முத்துவீரப்பப் பிள்ளை என்பவர் அவரைப் பார்த்து, முத்துவடுகநாத துரையென்பதை ஒரு வெண்பாவிலமைத்து ஐந்து நிமிஷங்களிற் பாட வேண்டுமென்று கூறினார்.  பிச்சுவையர் அப்படியே செய்து விட்டார்.  அச்செய்யுளின் முன்னிரண்டு அடிகள் எனக்குக் கிடைக்கவில்லை.  பின் இரண்டடிகள் மட்டும் கிடைத்தன.  அவை வருமாறு:

"கவடுக நாதனையே கைதொழுது வாழ்முத்
துவடுக
நாத துரை."

[கவடு உகத் தொழுதென்க; கவடு=வஞ்சனை; நாதன்=சிவபெருமான்]

அந்த வரலாற்றை ஒரு சமயம் பிள்ளையவர்கள் கேட்டு வியப்புற்று அது தொடங்கி அவரைக் காணுந்தோறும் 'துவடுக நாத துரை' என்றே அன்புடன் அழைக்கலாயினர்.

**********

நிற்க. 

வகையுளி வழியே தனிச்சொல்லில் எதுகை அமைந்த பாடலொன்று:

சத்திவாழ் வாமத்துச் சங்கரன்பொற் றாட்கமலப்
பத்தியாற் றேவார பாராய - ணத்தினால்
வான்றோய் புகழ்மிகுத்த வன்றொண்ட  னென்னும்பேர்
சான்றோய் நினக்குத் தகும்.

(பிள்ளையவர்கள் வாக்கு)

**********

On Friday, January 8, 2016 at 6:03:23 PM UTC-6, siva siva wrote:

Subbaiyar Ramasami

unread,
Jan 14, 2016, 9:14:28 PM1/14/16
to santhav...@googlegroups.com
இதோ ஒரு வகையுள்ப்பாடல் சிவசிவா இந்தத்திரியைத் தொடக்கியதால் அவர் பெயர் வருமாறு அமைத்துள்ளேன்

இன்னும் படிப்பேன் எனச்சொல்லும் மாணவனே

உன்னை வரவேற்றே ஒன்றுசொல்வேன்- நன்றே

அவசியம் என்மனையில் அன்பனே நீவா

சிவசிவா  என்றேன் சிரித்து.

 

நீ வாசி வசி  வா


Siva Siva

unread,
Jan 14, 2016, 9:27:57 PM1/14/16
to santhavasantham
Nice anecdote.

Siva Siva

unread,
Jan 14, 2016, 9:30:32 PM1/14/16
to santhavasantham
Nice!

Lot of interesting info and songs in this thread!

Hari Krishnan

unread,
Jan 14, 2016, 9:41:29 PM1/14/16
to santhavasantham

2016-01-15 8:00 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:
Nice!

Lot of interesting info and songs in this thread!

கவிமாமணி குணசேகரன் ஒரு பாடல் இயற்றியிருந்தார்.  அவருடைய கவிதைத் தொகுப்பை எங்கேயோ வைத்திருக்கிறேன்.  தேடிப்பார்த்து கிடைத்தால் இடுகிறேன்.  அன்றே தொலைபேசியில் சொன்னதைப்போல் அந்தப் பாடல்,

வேருக்கு... என்பதைப் போல ஆரம்பித்து, ஊருக்கு, நீருக்கு என்றெல்லாம் மாறி, செய்யா-தாருக்கு என்று கடைசி அடியில் பிரிந்து முடியும்.

இப்படியெல்லாம் இவருடைய பாடலில், இலந்தை பாடலில், இளையவன் பாடலில் என்று வகையுளியால் (அந்தக் காலத்தில் வகையுளி என்ற பெயர்கூடத் தெரியாத பருவம்) கேட்டுக் கேட்டே வளர்ந்தோம்.  அதனால், கவிதையென்றால் இப்படித்தான் இருக்கும் என்ற மனோபாவம் ஊறிவிட்டது.  இது ஒரு ஆச்சரியமாகவே தெரியமாட்டேன் என்கிறது.  இதை இவ்வளவு தூரம் விவாதிக்கும் அளவுக்கெல்லாம் வரும் என்று தெரியாமல் போய்விட்டது.  இல்லாவிட்டால் குறித்தாவது வைத்திருப்பேன்!  அந்தப் 17-18 வயதில் இது ஒன்றும் உறைக்கவில்லை.  இந்த 62லிருந்து திரும்பிப் பார்க்கும்போதுதான் எப்பேர்ப்பட்ட இமயங்களோடு சேர்ந்திருக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது என்பது புரிகிறது. 

பால்பொங்குவது போல பற்பல நலங்களும் பொங்கட்டும்.  இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.

Hari Krishnan

unread,
Jan 14, 2016, 9:53:47 PM1/14/16
to santhavasantham

2016-01-15 7:44 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

இன்னும் படிப்பேன் எனச்சொல்லும் மாணவனே

உன்னை வரவேற்றே ஒன்றுசொல்வேன்- நன்றே

அவசியம் என்மனையில் அன்பனே நீவா

சிவசிவா  என்றேன் சிரித்து.


யோசனையைத் தூண்டுகிற யோகம் பயின்றவரார்?
வாசனைகள் கொய்யும் வரம்பெற்றாரார்? - நேசம்
குவித்துச் சிவன் குளிர்க்கும் நியூஜெர்
சிவசிவா என்றேன் சிரித்து.

நியூஜெர்சியில் வசித்து, அங்கே வா என்று எல்லோரையும் கூப்பிடுபவர்.  கிகி...

(பெட்டு கட்றேன்.  =குளிர்க்கும்? ஆட்சியிருக்கிறதா? என்று கேட்பார்.  கேட்கட்டும். கிகிகி)

Siva Siva

unread,
Jan 14, 2016, 10:42:34 PM1/14/16
to santhavasantham
Very nice!

Will post mine shortly!

Siva Siva

unread,
Jan 14, 2016, 10:57:54 PM1/14/16
to santhavasantham

2016-01-14

----------------

மருந்து விரும்பிய வானவர்க்கா நஞ்சை

அருந்து பெருமான்கல் லால்கீழ் - இருந்து

தவசிநால் வர்க்கறஞ்சொல் தாழ்சடையன் ஓர்வஞ்

சிவசிவா மத்தன்சீர் செப்பு.



மருந்து - அமுதம்;

தவசி நால்வர்க்கு அறம் சொல் - சனகாதியர் நால்வருக்கு உபதேசித்த;

ஓர் வஞ்சி வசி வாமத்தன் சீர் - உமை தங்கும் இடப்பக்கம் உடையவன் புகழை

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-01-14 21:53 GMT-05:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2016-01-15 7:44 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

இன்னும் படிப்பேன் எனச்சொல்லும் மாணவனே

உன்னை வரவேற்றே ஒன்றுசொல்வேன்- நன்றே

அவசியம் என்மனையில் அன்பனே நீவா

சிவசிவா  என்றேன் சிரித்து.


யோசனையைத் தூண்டுகிற யோகம் பயின்றவரார்?
வாசனைகள் கொய்யும் வரம்பெற்றாரார்? - நேசம்
குவித்துச் சிவன் குளிர்க்கும் நியூஜெர்
சிவசிவா என்றேன் சிரித்து.

நியூஜெர்சியில் வசித்து, அங்கே வா என்று எல்லோரையும் கூப்பிடுபவர்.  கிகி...

(பெட்டு கட்றேன்.  =குளிர்க்கும்? ஆட்சியிருக்கிறதா? என்று கேட்பார்.  கேட்கட்டும். கிகிகி)

--
அன்புடன்,
ஹரிகி.




--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Hari Krishnan

unread,
Jan 14, 2016, 11:03:02 PM1/14/16
to santhavasantham

2016-01-15 9:27 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:

மருந்து - அமுதம்;

தவசி நால்வர்க்கு அறம் சொல் - சனகாதியர் நால்வருக்கு உபதேசித்த;

ஓர் வஞ்சி வசி வாமத்தன் சீர் - உமை தங்கும் இடப்பக்கம் உடையவன் புகழை


தூள்!


--
அன்புடன்,
ஹரிகி.

Girija Varadharajan

unread,
Jan 15, 2016, 3:08:01 AM1/15/16
to santhavasantham

என்பங்கிற்  கிரண்டுண்  டிங்கு.

காலன் பிழைகண்டு காலால் உதைத்தவன்,

பாலமுதம் அன்றீந்தான் பன்றிகட்கு. – ஞாலத்(து)

அனைவரும் நன்மையுற அஞ்சாமல் அந்நஞ்

சினையுண்டான் செம்மைதனைச் செப்பு.

 

நெல்லைவாழ் தேவி; நிலைத்த துணையாவாள்;    

எல்லையிலா அன்புடையாள் எம்மீது. - வெல்லும்  

எமதன்னை அன்றோ! எழிலோங்கும் அக்காந்

திமதியாள் சீர்செவிக்குத் தேன்.


அ கி வ   


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Thanks and Regards 

Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP:  91852063
Email:  girijavar...@gmail.com

Vis Gop

unread,
Jan 15, 2016, 4:23:31 AM1/15/16
to santhav...@googlegroups.com
கையுளியால் கல்லே கலையாகும் இங்கேவ
கையுளியால் வந்ததெது கை!
கோபால்.

Subbaiyar Ramasami

unread,
Jan 15, 2016, 4:35:11 AM1/15/16
to santhav...@googlegroups.com
அட்டகாசம்!


--

Subbaiyar Ramasami

unread,
Jan 15, 2016, 4:36:42 AM1/15/16
to santhav...@googlegroups.com
😅

Vis Gop

unread,
Jan 15, 2016, 4:45:41 AM1/15/16
to santhav...@googlegroups.com
அழகு!

என்பங்கிற்  கிரண்டுண்  டிங்கு.
"என்பங்கிற்  குண்டிரண் டிங்கு" என்ற தலைப்பு இன்னும் அழகு சேர்த்திருக்குமோ?
கோபால்.

2016-01-15 13:38 GMT+05:30 Girija Varadharajan <girijavar...@gmail.com>:

Siva Siva

unread,
Jan 15, 2016, 7:49:39 AM1/15/16
to santhavasantham
Nice. With some tweaking, it can be like:

கையுளி ஆக்கும் கவின்சிற்பம் இங்கேவ

கையுளி ஆக்குமெது கை.


Vis Gop

unread,
Jan 15, 2016, 10:42:51 PM1/15/16
to santhav...@googlegroups.com
super!
gopal.

OAGAI NATARAJAN

unread,
Jan 16, 2016, 7:00:36 AM1/16/16
to santhav...@googlegroups.com

(1) முருகன்

ஆக்கம் அறிவுடைமை ஆன்ற பொருளுடைமை
ஊக்கம் பெருமை ஒழுக்கமொடு - வீக்குபுகழ்
இத்தரையில் என்றும் இனிதடைய வேகுக்கு
டத்து வசவரு டா !

(2) பெருமாள்

ஆக்கம் அறிவுடைமை ஆன்ற பொருளுடைமை
ஊக்கம் பெருமை ஒழுக்கமொடு - வீக்குபுகழ்
இத்தரையில் என்றும் இனிதடைய வேகரு
டத்து வசவரு டா !


--

N. Ganesan

unread,
Jan 16, 2016, 7:08:16 AM1/16/16
to Santhavasantham
2016-01-16 4:00 GMT-08:00 OAGAI NATARAJAN <enge...@gmail.com>:

(1) முருகன்

ஆக்கம் அறிவுடைமை ஆன்ற பொருளுடைமை
ஊக்கம் பெருமை ஒழுக்கமொடு - வீக்குபுகழ்
இத்தரையில் என்றும் இனிதடைய வேகுக்கு
டத்து வசவரு டா !

(2) பெருமாள்

ஆக்கம் அறிவுடைமை ஆன்ற பொருளுடைமை
ஊக்கம் பெருமை ஒழுக்கமொடு - வீக்குபுகழ்
இத்தரையில் என்றும் இனிதடைய வேகரு
டத்து வசவரு டா !



அருமை!

N. Ganesan

unread,
Jan 16, 2016, 7:24:59 AM1/16/16
to Santhavasantham, Saravanan Palanisamy
2016-01-12 4:47 GMT-08:00 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:

பகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்க
டகஞ்சிங்கங் கன்னி துலாம்விர்ச் - சிகந்த
நுசுமகரங் கும்பமீ னம்பன் னிரண்டும் 
வசையறுமி ராசி வளம் . (காளமேகம்)

வித்தக இளங்கவி வகையுளிப் பாக்களுக்கு பழனி மாம்பழக் கவிராயர் பாடல்களைப் பார்க்கவேண்டும்.
நான் பொள்ளாச்சியில் இருக்கும்போது எப்பொழுதும் வந்து தங்குபவர்கள் பழனித் தமிழ்ப் பண்டிதர்,
சித்திரகவி பழனிச்சாமிப் புலவர். ஒருமுறை நா. மகாலிங்கம் அவர்களைப் பார்க்க அழைத்துச் சென்றேன். அவர் மாளிகையில் தங்கியிருந்து எழுதுங்கள் என்றார். அவ்வாறு பல மாதங்கள் இருந்து பழனி மாம்பழக் கவிச்சிங்கத்தின் பாடல்களுக்கு உரைவரைந்து தந்தார். பின்னாளில் 2 தொகுதிகளாய் அச்சானது. அனந்த் அவர்களிடம் அந்நூல் இருப்பதாகச் சொன்னதாக ஞாபகம். கோவை விஜயா பதிப்பகம் போன்றவற்றில் கேட்டால் கிட்டும் என நினைக்கிறேன். விற்றுத் தீராமல் இருந்தால், ந.க.ம கல்லூரி வெளியீடு. இங்கே, மாம்பழக் கவிராயரின் பாடல்களை வகையுளி உள்ளவை இடலாம். நன்றி.

சாமிநாதம் (உவேசா முன்னுரைகள்) - என்னும் அரிய நூலைப் படித்துக்கொண்டுள்ளேன்.
சென்னை ப. சரவணன் என்னும் தமிழாசிரியர் பதிப்புலகில் அரும்பணிகள் செய்துகொண்டுள்ளார். 

1906-ஆம் ஆண்டில் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் உவேசா பதிப்பித்துள்ளார்.
அதில் உள்ள பாண்டிநாட்டுச் சிவத்தலங்கள் பற்றிய பழைய வெண்பா:

              பதினான்கு ஸ்தலங்களாவன:
கூடல் புனவாயில் குற்றால மாப்பனூ
ரேடகநெல் வேலி யிராமேச - மாடானை
தென்பரங்குன் றஞ்சுழிய றெந்திருப்புத் தூர்கானை
வன்கொடுங்குன் றம்பூ வணம்


நா. கணேசன்


N. Ganesan

unread,
Jan 16, 2016, 8:06:28 AM1/16/16
to சந்தவசந்தம், pshara...@gmail.com
typo corrected:
தென்பரங்குன் றஞ்சுழிய றென்றிருப்புத் தூர்கானை

N. Ganesan

unread,
Jan 16, 2016, 8:53:42 AM1/16/16
to சந்தவசந்தம், vallamai, mintamil, housto...@googlegroups.com
Eureka! ஹரிகி குறிப்பிடும் 1972-வாக்கில் ’திருக்குறள்’ இராமையாபிள்ளை பாடிய வெண்பாக் கண்டேன்.
7 ஆண்டு முன்பும் என்னிடம் கேட்டார்:
2009/8/13 N. Ganesan <naa.g...@gmail.com>
மின்சாரம் சம்சாரமே
   - திருக்குறள் பெ. ராமையா

’சமயத்தில் ஒத்துழையா ‘ஷாக்’அடிக்கும் தொட்டால்
இமைசிமிட்டும் இன்பமதை ஊட்டும் - நமைஉயர்த்தும்
தன்சாரம் குன்றாத தன்மையால் எஞ்ஞான்றும்
மின்சாரம் சம்சார மே!’

விரிவுரை:
http://arivhedeivam.blogspot.com/2009/07/blog-post_31.html

நா. கணேசன்
 
கவனகர் ராமையா பிள்ளை அவர்கள் ‘டத்து வசவரு டா’என்ற ஈற்றடிக்கு இயற்றிய இரண்டு வெண்பாக்கள் அவரிடம் கிடைக்குமா என்று கேட்டுப் பாருங்கள்.  என்னால் அந்த ப்லாகில் மறுமொழி இடமுடியவில்லை.  இட்டால் ஏற்க மறுக்கிறது. 
-- 
அன்புடன்,
ஹரிகி.

------------------------------------------------------

ஆக்கம் அறிவுடைமை ஆன்ற பொருளுடைமை
ஊக்கம் பெருமை ஒழுக்கமொடு - வீக்குபுகழ்
இத்தரையில் என்றும் இனிதடைய வேகுக்கு/கரு
டத்து வசவரு டா 
                                                     - திருக்குறள் பெ. இராமையா

தெரிவு,
நா. கணேசன்

‘டத்து வசவரு டா !’

கோவில்பட்டி நகரின் நூலக வாரவிழா நிகழ்வில் நடந்த நிகழ்ச்சி இது. திருக்குறள் பெ.இராமையா அவர்களின் எண்கவனக சிறப்பு நிகழ்ச்சி. அதில் கொடுக்கப்பட்ட ஈற்றடி என்ன தெரியுமா?

‘டத்து வசவரு டா !’

ஈற்றடியின் பொருள் புரியாமல் அரங்கம் முழுவதும் குழப்பத்தில் அமைதியாய் இருந்தது. ஆனால் திருக்குறள்.இராமையா அவர்கள் தெளிவான புன்னகையுடன். ”ஈற்றடி கொடுத்தவரின் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?” என்று வினவினார்.

”பெரும்புலவர் அங்கப்ப பிள்ளை !” என கூட்டத்திலிருந்து பதில் வந்தது.

”அதானே பார்த்தேன். ஈற்றடியைப் பார்த்தால் சாதரணமாகத் தெரியவில்லையே.. இந்தக் கோவில்பட்டி மண்ணில் இப்படி ஈற்றடி கொடுப்பதற்கும் ஆள் இருக்கிறதா என்று சி்ந்தித்தேன்..! என்றார்.

உடனே அங்கப்பபிள்ளை, “பாடுவதற்குச் சிரமமாய் இருந்தால் வேறு ஈற்றடி தருகிறேன்” என்கிறார்.

திருக்குறளார் சிரித்துக்கொண்டே”ஈற்றடிக்கு மாற்றடி தேவையில்லை. பாடல் சைவக் கடவுளுக்குப் பொருத்தமாய் வேண்டுமா அல்லது வைணவக் கடவுளுக்குப் பொருத்தமாய் வேண்டுமா? என்பதை மட்டும் தெரிவித்தால் போதும் !” என்றார்

இப்போது அங்கப்பபிள்ளை ஆடிப்போய்விட்டார். ஏனெனில் அவர்,”சைவக் கடவுளுக்கு மட்டுமே இந்த ஈற்றடியை வைத்துப் பாடமுடியும்’என்ற முடிவில் இருந்தார். தன் சந்தேகத்தை வெளிப்படுத்தும் வண்ணம்,”வைணவக் கடவுளுக்கு எப்படி...இந்த ஈற்றடியை”....என்று இழுத்தார்.

உடனே ”நான் இரண்டு கடவுளுக்கும் பொதுவாகப் பாடிவிடுகிறேன். நீங்கள் உங்கள் விருப்பம் போல் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு

”ஆக்கம் அறிவுடைமை


ஆன்ற பொருளுடைமை

ஊக்கம் பெருமை

ஒழுக்கமொடு வீக்குபுகழ்


இத்தரையில் என்றும்

இனிதடைய வேகுக்கு/கரு

டத்து வசவரு டா !”

இந்த வெண்பாவைப் பாடினார்.

”ஆக்கம்,அறிவு,செல்வம்,ஊக்கம்,பெருமை,ஒழுக்கம்,புகழ் என்னும் இத்தனை நன்மைகளையும் எனக்கு அருள வேண்டும் !” என்று கடவுளிடம் வேண்டும் விதத்தில் இந்த வெண்பா அமைந்துள்ளது.

சரி, எந்தக் கடவுளிடம் வேண்டுவது?

சைவ நெறியைப் பின்பற்றுவோர் முருகனிடம் வேண்டுவதாக இந்தப் பாடலை எடுத்துக்கொள்ளலாம் . எப்படி?

“குக்குடத் துவச அருள் தா !”

’குக்குடம்’ என்றால் சேவல், ‘துவசம்’ என்றால் கொடி. சேவற்கொடியோனாகிய முருகனே அருள் தா !’ என்பதாக பொருள் வரும்.


அதே சமயம் ’குக்கு’ வை எடுத்துவிட்டு அந்த இடத்தில் ‘கரு’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொண்டால் வைணவக் கடவுளான திருமாலுக்கு உரிய பாடலாக மாறிவிடும். ’கருடன்’ என்றால் பருந்து. துவசம் என்றால் வாகனம் ‘கருடனை வாகனமாய் உடைய திருமாலே அருள் தா ! ’ என்பதாகவும் பொருள்தரும் என விளக்கினார்.

இந்த விளக்கத்தைக் கேட்டு அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

நன்றி 2002 ஏப்ரல் கவனகர் முழக்கம்

N. Ganesan

unread,
Jan 16, 2016, 10:16:22 AM1/16/16
to சந்தவசந்தம்

2016-01-14 5:57 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
சோழவந்தானில் அரசஞ்சண்முகனார் எனு தமிழ்ப்புலார் இருந்தார். அவர் வீட்டில் ஒரு விருந்து புலவர்கள் கூடியிருந்து உண்ட விருந்து.      அன்று பரிமாறியவர் பெயர் அருணாச்சலம்
ஒரு ஈற்றடி கொடுக்கப்பட்டது. அருணாச்சலம் தன் அருகே பரிமாற வரும் போது அங்கிருக்கும் புலவர் சந்தா அருணாச்சலம் என்னும் ஈற்றடி கொண்டு வெண்பாச் சொல்லவேண்டும். அது உணவுப்பண்டத்தைக் குறிப்பதாக இருக்க வேண்டும்.  ஒரு புலவர்  ...........ர
சந்தா அருணாச்சலம்  என்றார். இன்னொருவர்     ... அதிர   சந்தா அருணாச்சலம் என்றும் பாயசந்தா  ,அருணாச்சலம் என்றும் சென்றுகொண்டிருந்தது. சண்முகனாரின் இலையருகே வந்தபோது சம் சேர்த்துச் சொல்லும் பண்டங்கள் ஏதுமில்லை. எனவே அவர் சொன்னார் இன்னும் கொஞ்சந்தா அருணாசலம்


                  தவசிப்பிள்ளை அருணாசலத்துக்குச் சொல்லியது:

இந்தாபார்! இன்னமு துண்ணும் எனக்குர
சந்தா! அருணாச் சலம்! 

                                      ~நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 16, 2016, 10:42:22 AM1/16/16
to வல்லமை, santhav...@googlegroups.com, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, R. Radhakrishnan
காவிரி டெல்ட்டா மாவட்டங்களில் அடுப்பில் மடுக்கும் (சமைக்கும்) மடையரை (cooks)
தவசிப்பிள்ளை என்பார்கள். இது நாற்றம் என்ற சொல் வடசொல்லால் வாசம் என்பதுபோல்
இடைக்காலத்தே ஆன மாற்றம் ஆகும். அடுப்பு < மடுப்பு (cf. அலர் < மலர்).

வகையுளியால் எதுகை அமைந்த குறள் ஒன்று சொன்னேன்:


2016-01-14 5:57 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
சோழவந்தானில் அரசஞ்சண்முகனார் எனு தமிழ்ப்புலார் இருந்தார். அவர் வீட்டில் ஒரு விருந்து புலவர்கள் கூடியிருந்து உண்ட விருந்து.      அன்று பரிமாறியவர் பெயர் அருணாச்சலம்
ஒரு ஈற்றடி கொடுக்கப்பட்டது. அருணாச்சலம் தன் அருகே பரிமாற வரும் போது அங்கிருக்கும் புலவர் சந்தா அருணாச்சலம் என்னும் ஈற்றடி கொண்டு வெண்பாச் சொல்லவேண்டும். அது உணவுப்பண்டத்தைக் குறிப்பதாக இருக்க வேண்டும்.  ஒரு புலவர்  ...........ர
சந்தா அருணாச்சலம்  என்றார். இன்னொருவர்     ... அதிர   சந்தா அருணாச்சலம் என்றும் பாயசந்தா  ,அருணாச்சலம் என்றும் சென்றுகொண்டிருந்தது. சண்முகனாரின் இலையருகே வந்தபோது சம் சேர்த்துச் சொல்லும் பண்டங்கள் ஏதுமில்லை. எனவே அவர் சொன்னார் இன்னும் கொஞ்சந்தா அருணாசலம்


veNbA virumbi

unread,
Jan 16, 2016, 4:07:45 PM1/16/16
to சந்தவசந்தம்

வகையுளியால் எதுகை, பொங்கல் திருநாள் என்னும் இரு மடலிழைகளுக்கும் பொதுவாக அமைந்த பாடல் வருமாறு.  குறை பொறுக்கவும்; கருத்திருப்பின் தெரிவிக்கவும்.  நன்றி.
********************
(நேரிசை வெண்பா)

மென்பனி வானிடை மேவுதைப் பொங்கலன்று
தென்பதஞ்சேர்த் தன்பரிட்ட செய்யுளா - மின்கரும்
பிக்குழுமத் துண்டுளத்தின் பெய்தியவெண் பாவிரும்
பிக்குரிய தென்பீரப் பேர்.

********************

On Thursday, January 14, 2016 at 9:57:54 PM UTC-6, siva siva wrote:

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 16, 2016, 5:18:17 PM1/16/16
to சந்தவசந்தம்
உங்கள் கவிதையில் ஒளிந்திருக்கும் உங்கள் சரித்திரத்தை இரசித்தேன். இதோ உங்களுக்கு ஒன்று (இது இந்தத் தைத் திங்களில் இங்கு வந்து குவியும் செய்யுள்களைப் பார்த்ததால் தோன்றிய ஈற்றடி!)  :

மனமுண்டாம் நட்பை வளர்க்கக் கவிஞர்

இனமுண்டாம் கூடி இணைய; - தினம்தூரி

கைக்குண்டாம் கற்பனையைத் தாளில் வடிக்கஇலந்

தைக்குண்டாம் யாப்புத் திறன்.   

அனந்த்

2016-01-14 21:14 GMT-05:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

veNbA virumbi

unread,
Jan 16, 2016, 10:34:01 PM1/16/16
to சந்தவசந்தம்

2008-ஆம் ஆண்டில் ஐயரவர்களின் பிறந்த தினத்தையொட்டி இங்கிட்ட பதிகத்தினின்று ஒரு பாடல்; வகையுளி வழிவரும் எதுகை கொண்டது.

********************
(நேரிசை வெண்பா)

அந்தமலி அம்பலத்தா டய்யனின் பாதார
விந்த மறவாத மீனாட்சி - சுந்தரனின்
தாசனைப் பன்மேன்மைத் தந்துதந்த செந்தமிழ்வி
யாசனைப் போற்றாதார் யார்.


அந்தம்=அழகு; தந்து=நூல்

'முற்காலத்தில் ஸம்ஸ்கிருத வேதங்களையும், இதிஹாஸ புராணங்களையும் வியாஸர் எப்படித் தேடித் திரட்டி உருவாக்கித் தந்தாரோ அப்படியே தமிழ் இலக்கிய ரத்தினங்களை ஸ்ரீமான் உ.வே.சாமிநாதையர் இக்காலத்தில் தேடித் திரட்டித் தந்தவர்.  ஆகையால் ஸ்ரீ சாமிநாதையருக்கு 'தமிழ் வியாஸர்' என்றே நாம் புதுப்பட்டம் இடலாம்.' - ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாசாரியார் 1935-ஆம் ஆண்டு ஆனந்தவிகடனில் எழுதிய 'தமிழ் வியாஸர்' என்ற சிறு கட்டுரையின் தொடக்கப் பகுதி
********************

On Saturday, January 16, 2016 at 4:18:17 PM UTC-6, ananth wrote:

N. Ganesan

unread,
Jan 17, 2016, 7:36:43 AM1/17/16
to சந்தவசந்தம்


On Saturday, January 16, 2016 at 7:34:01 PM UTC-8, veNbA virumbi wrote:

2008-ஆம் ஆண்டில் ஐயரவர்களின் பிறந்த தினத்தையொட்டி இங்கிட்ட பதிகத்தினின்று ஒரு பாடல்; வகையுளி வழிவரும் எதுகை கொண்டது.
********************
(நேரிசை வெண்பா)

அந்தமலி அம்பலத்தா டய்யனின் பாதார
விந்த மறவாத மீனாட்சி - சுந்தரனின்
தாசனைப் பன்மேன்மைத் தந்துதந்த செந்தமிழ்வி
யாசனைப் போற்றாதார் யார்.



டகர வர்க்கத்தில் தொடங்கும் ஒரு வெண்பா சந்தவசந்தத்தார் தரலாமே.

ஆக்கம் அறிவுடைமை ஆன்ற பொருளுடைமை
ஊக்கம் பெருமை ஒழுக்கமொடு - வீக்குபுகழ்
இத்தரையில் என்றும் இனிதடைய வேகுக்கு/கரு
டத்து வசவரு டா 
                                                     - திருக்குறள் பெ. இராமையா

காளமேகம் - டகர வர்க்க வகையுளி வெண்பா:

நீரோ பிறவா நெறிகாட்டியா ரெமக்கு
நீரோ சமுசை நிலையிட்டீர் - நீரேயிவ்
விங்களமேன் செய்தீர் விடுங்கடுங்காற் றும்மழைகாட்
டுங்கடுநட் புப்பகைகாட் டும்

-----------------------

Hari Krishnan

unread,
Jan 17, 2016, 8:18:14 AM1/17/16
to santhavasantham

2016-01-17 18:06 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
டகர வர்க்கத்தில் தொடங்கும் ஒரு வெண்பா சந்தவசந்தத்தார் தரலாமே.

டக்கர்பா டப்பாவில் டான்ஸப்பா போட்டிருக்கும்
நிக்கர்பா அங்கப்பா நிக்கலப்பா - மக்கர்பா;
டாப்புலப்பா பாத்தா டமுக்கப்பா; நெஞ்சில்வீ
டாப்பாவை நீக்கணும்னா டப்பு.

டாப்பு டமுக்கு=தலைல சொட்டை
நெஞ்சில்வீடாப்பாவை=திகடசக்கரத்தால் அறிக.



--
அன்புடன்,
ஹரிகி.

Vis Gop

unread,
Jan 17, 2016, 8:46:15 AM1/17/16
to santhav...@googlegroups.com
டகர வர்க்கத்தில் தொடங்கும் ஒரு வெண்பா சந்தவசந்தத்தார் தரலாமே.
 
திரு கணேசன்,
தமிழ்ச் சொல் ட-வில் தொடங்காது என்று தெரிந்தும் இந்தப் பயிற்சி எதற்கு? வகையுளி எதுகைக்கு உதவுகையில் 2 ஆம் அடிக்குமேல் புலவர் சிலர் எழுதியிருக்கிறார்கள் என்பதால் ட, ற, ன. போன்ற எழுத்தோடு ''தொடங்கும்' கவிதை எழுதிப் பழகுவது என்ன பயன் தரும்?  இயன்றவரை வகையுளி எதுகை இல்லாத பாட்டு எழுதப் பழகுவதே கற்போருக்கு நலம் தரும். கற்றோருக்கு இது பெரிய சவால் இல்லை. ஆகவே நீங்கள் சொல்கிற பயிற்சி தவிர்க்கத் தக்கது என்பது என் சிற்றறிவின் எண்ணம்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2016-01-17 18:06 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

N. Ganesan

unread,
Jan 17, 2016, 8:52:34 AM1/17/16
to சந்தவசந்தம்


On Sunday, January 17, 2016 at 5:46:15 AM UTC-8, visgop wrote:
டகர வர்க்கத்தில் தொடங்கும் ஒரு வெண்பா சந்தவசந்தத்தார் தரலாமே.
 
திரு கணேசன்,
தமிழ்ச் சொல் ட-வில் தொடங்காது என்று தெரிந்தும் இந்தப் பயிற்சி எதற்கு? வகையுளி எதுகைக்கு உதவுகையில் 2 ஆம் அடிக்குமேல் புலவர் சிலர் எழுதியிருக்கிறார்கள் என்பதால் ட, ற, ன. போன்ற எழுத்தோடு ''தொடங்கும்' கவிதை எழுதிப் பழகுவது என்ன பயன் தரும்?  இயன்றவரை வகையுளி எதுகை இல்லாத பாட்டு எழுதப் பழகுவதே கற்போருக்கு நலம் தரும். கற்றோருக்கு இது பெரிய சவால் இல்லை. ஆகவே நீங்கள் சொல்கிற பயிற்சி தவிர்க்கத் தக்கது என்பது என் சிற்றறிவின் எண்ணம்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.


நன்றி, முனைவரே,
Reply all
Reply to author
Forward
0 new messages