கவியரங்கம் தலைப்பு ''எனக்குப் பிடித்த.....''

849 views
Skip to first unread message

Ramamoorthy Ramachandran

unread,
Apr 13, 2014, 3:20:59 AM4/13/14
to santhav...@googlegroups.com
                            கடவுள் வாழ்த்து!
 
          நம்பிக்கை  வைத்தே நவின்றே  துதிக்கின்றோம் 
          தும்பிக்கை நாதன்  துணை 
                              
          ஐந்துக  ரத்தொடும்   ஆனைமு  கத்தொடும் 
                          ஆணைபு  ரிந்திடும்                அரசேநல் 
          இந்தின்  இளம்பிறை  போன்றநின்  கொம்பினால் 
                          இமயத்தில் எழுதிடும்           புலவோனே!
 
          சந்தமி    குத்திடும் செந்தமி  ழவ்வைசொல் 
                          தன்னையு  ணர்ந்தருள்         புரிவோனே 
          சிந்தைம  கிழ்ந்திடச  சேரனை  முந்தியத் 
                           திருக்கயி  லைதனில்           திகழ்வோனே!
   
          இந்தபுத்  தாண்டினில்  எங்கள்வி  ருப்பங்கள் 
                            எய்திடக்  கவிமலர்              இடுகின்றோம்!
           சந்தவ    சந்தத்தின்   சாதனை  ஆண்டெனச்
                            சாற்றும்பு  கழெம்பா            லெய்திடவே,

           தந்தனத்  தானனச்     சந்தமு   ணர்ந்துடன் 
                             தாண்டவ  மாடிடுஞ்             சற்குருவே! 
           ''வந்தருள்   தந்தருள்''   என்றுவ    ணங்கியெம் 
                             வாயுரை   கையுறை        ஆக்குவமே!
             
                     
        '''ஜய''வென்னும்  நல்வெற்றி  சாதனைக்கோர்  புத்தாண்டாய்  
         நயம்செய்க    எங்கும்  நலம்!

                                           
        அமுதுண்ட  விண்ணோர்கள்  அனைவருமே  மாய்ந்துவிட 
                             ஆலகா  லத்தை  உண்டே,
                   அழியாமல்  எந்நாளும்  அடியாரை வாழ்விக்க 
                              அரங்கத்தில் ஆடு கின்றாய்!
        கமுகோடு  தென்னையும்  கடம்பும்வ  ளர்ந்திடும் 
                              கானகப்  பொதிகை  மலையில் 
                    கவினார்ந்த  தமிழ்தனை  அகத்தியர்க்  கருளியே 
                               காலத்தை  வென்று நின்றாய் !
         தமிழான   அமுதுண்டு  தளிர்த்திட்ட  புலவோர்கள் 
                                தருபே  ரிலக்கி  யத்தின்
                     தரங்கண்டு  பாராட்டும்  முருகனின்  உபதேசம் 
                                தாழ்ந்தே  பணிந்துகேட் டாய்!
         உமியான  எனக்குள்ளும்  ஒளியான கனல்மூட்டி 
                                 யோகம்  பயிற்று  வித்தே, 
                      ஒருசிறிய  மின்னலை  உருவாக்கி  உலகிற்கே 
                                   ஒளிகூட்ட  வேண்டு  வேனே!
                                        
                                   தமிழ் வாழ்த்து 
      
        நீரில்நெ  ருப்பினில்    நீந்தினாய்!   கரையிலே 
                         நின்றவர்க்  குறுதிசொன்  னாய்!
                 நின்னருட்  பெருமையை  நெஞ்சாரப்  போற்றினோர் 
                          நிம்மதி கொள்ள வைத்தாய்!
       பாரில்   தமிழ்நலம்    பாலித்த    பாங்கினைப் 
                          பலமுறை  பார்க்கவைத்   தாய்!
                  பரிவதன்  உருவான  பரமனின்  ஆணை 
                           பலித்ததைப்   பார்த்து  விட்டோம்!
        தேரிலே   ஏற்றியும்  தெருவிலே  போற்றியும் 
                         தெய்வமாய் நின்னை  எண்ணி 
                தெரிசனம்  வேண்டினோர்  சிந்தித்த  யாவையும் 
                          செயலில்நி  றைவேற்றி  னாய்!
        காரிய சித்தியைக்   கண்முனே  காட்டுவாய்!
                          கைகூப்பிப்  போற்று  கின்றோம்!
                கடலை  போற்பல  உடல்கொண்ட  அன்னையே 
                           கன்னித் தமிழ்த்  தெய்வமே!                     
                            
                      புத்தாண்டு  வாழ்த்து 

        வையம்  செழித்திட  வானம்  பொழிந்திட 
                       வந்தது    புத்தாண்டு!  - இனி
                       மகிழுவம்   பல்லாண்டு!- நம் 
        ஐயமும்  அச்சமும்  அகன்றிடத்  தந்தனன் 
                        ஆனந்தப்  பூச்செண்டு - பெரும் 
                         ஆவல் மிகக் கொண்டு !

        கைகள்  உழைத்திடக்  கண்களில்  நீர் ஏன்?
                         கவலையைத்  தள்ளுங்கள்! - புதுக்     
                         கனவுகள்  காணுங்கள் ! - உங்கள் 
        செய்கையில் இன்பமே   சேர்ந்திடும் நல்லன 
                          தினம்தினம்  செய்யுங்கள் - நல்ல 
                          செந்தமிழ்   நெய்யுங்கள்! 
                         
       நேற்றிருந்த வாழ்க்கைதனில்  நிறைவே இல்லை    
            இன்று வந்த புத்தாண்டோ  எழிலின்  சோலை!!
        நாளையிந்த  சோலையிலுன்  நகலும் இல்லை 
             நாட்டிடுவாய்  உன்புகழை, நரனடா  நீ!
        ஆற்றுவெள்ளம் ஓடிவரும்  நாளைக்  காலை 
             ஆயிரமாய்ப்  பூப்பூக்கும்  அன்று  மாலை!
         சேற்றுவயல்  நாற்றுகளில் கதிரின் வேலை
              செய்திடும்நல்  லோவியத்தின் காட்சிச்  சாலை!
 
              தலைப்பைப பற்றி...
 
       இந்தபுத்   தாண்டிலே  எனக்குப்  பிடித்த...வர் , 
                எல்லாரும்  போற்றுபவர் 
        சொந்தத்  தலைவராய்த்   தோத்திரம்  பெறுபவர் 
                  சூராதி  சூரரா    வார்!
        வெந்திடும்  போதிலும்  நொந்திடும்  நிலையிலும் 
                   வந்தே  மாதரத்   தை 
         அந்தமும்  சிந்திட  ஆயிரம்  முறைசொலும் 
                     ஆடவர் ''சிதம்பர   னார்''!


       அவரைப்  போற்றியே  ஆறுதல்  கொண்டிடல் 
                   யாவர்க்கும்  உரிமை  யன்றோ?
       இவருக்  கிணையாய்  எவரைச்  சொல்லலாம்?
                    இவரே   இவர்க்கிணை!  ஆம்!
       சுவரும்  எதிரொலி  சொல்லச்  சிறைதனில் 
                     சுதந்தர  தேவிபுகழ் 
       தவறில்   லாமல்  வெள்ளையர்க்  குணர்த்திய  
                     சாதனை  மன்னர் அவர்!

               செக்கிழுத்த செம்மல்  வ.உ. சி 
                           இருபா  இரு ப.:. து!   
                                   **************
     தூத்துக்   குடிநெல்லை  ஏத்தும்  வழக்கறிஞர் 
     கூத்தன்  திருவடியே  கும்பிட்டார் - ஏற்றமுடன் 
     தென்னா  டுடையானைத்  தேறும்  சிதம்பரம்போல் 
     எந்நாளில்   காண்போ  மினி? 1                                       1.

      இனிதாகும்  இல்லறத்தின்  மாண்பைப்  போற்றி 
                 இணையற்ற  மழலைகளைப்  பெற்ற தந்தை 
     தனியாகத்  தாம்பயின்று  ''வக்கீல்''  ஆகித் 
                 தாய்நாட்டுக்  காய்வாதம்  செய்த சான்றோர் 
      கனிவான  மனங் கொண்டே  நாட்டு  மக்கள் 
                 கடைத்தேறப்  போர்க்கொடியை  உயர்த்தும்  தீரர்!
      மனையாளின்  இன்குரலால்  இறுதிநாளில் 
                 மகாகவியின்  பாக்கேட்டே  மகிழ்ந்தார்  அன்பர்!2

     அன்புமிக  பாரதியை  ''மாப்பிள்ளை''  என்றழைத்தே 
      இன்புற்ற  ''மாமா''  சிதம்பரனார்  -- முன்புற்ற 
      வெள்ளையன் ''விஞ்ச்''சை  உரையாலே  வீழ்த்தியுளம் 
      கொள்ளைகொண்   டானேயக்  கோ!3

       கோட்டுடனே  தலைப்பாகைக்   கோலம்  காட்டிக்  
              குலவுதமிழ்  பாரதிபால்  அன்பைக் காட்டி,
       நாட்டிலுயர்  சுப்ரமண்ய  சிவாவின் பேச்சை  
               நாடிவந்தே  போற்றுகின்ற நட்பைக் காட்டிக் 
       காட்டாட்சி  வெள்ளையாரை  விரட்டியோட்டிக்  
               கனிவுடனே  தொழிலாளர்  கூட்டம்  கூட்டி,
       வாட்டமிலா  வாழ்வுதரக்  கப்பல்  ஓட்டும்  
               மாண்புடைய  சிதம்பரத்தை  வாழ்த்து  வோமே!4
 
      ஓமென்றே  சொல்லும்    ஒருமந்   திரம்கூறிச்  
      சேமம்சேர்  சீருலக  நாதர்பால்  -- பூமிபுகழ் 
      மைந்தனாய்த் தோன்றி வளர்ந்த  சிதம்பரமென் 
       சிந்தையுள்  நின்றார் செழித்து 5 

       செழித்திருந்த  செல்வத்தின்  சிறப்புத் தோன்ற  
               திருச்சியிலே  கணபதியின்  சட்டப் பள்ளி 
        வழிகாட்ட  வழக்கறிஞர்  பட்டம் பெற்றார் 
               வாதாடும்  தொழிலாலே  வருவாய்  பெற்றார்        
        மொழித்திறத்தில்  புலமை பெற்றே  ஊரார் போற்ற 
                முதன்மையுறும்  தலைவரென  விளங்கலானார்.
        இழிவுபெற்ற   தொழிலாளர்  உயர்வுக்காக 
                 எழுச்சிமிகும்  தொழிற்சங்கத்  தலைமை பெற்றார்.6

        பெற்ற  விடுதலையைப் பேணாத  மானிடர்காள் 
        கற்றுக்கொள்  வீரன்னான்  காவியத்தை -= முற்றும் 
        அறிவீர்  வரலாற்றை, அப்போது  தானே 
        வெறியூட்டும்  வீரம்  வரும்?7

       வீரமிகும்  பாரதியின்  நட்பைப்  பெற்றார் 
             விடுதலையை  நாடிவளர்  வேட்கை கொண்டார் 
        சாரமிகும்  தர்மசங்க  நெசவுச் சாலை 
               தனித்தசுதே  சிப்பிரச்சா  ரத்தின் சங்கம் 
         ஊரிலுரு  வாக்கிமிக  ஊக்கத்  தோடே 
                உண்ணாமல்  உறங்காமல்  தொண்டு செய்தார் 
         யாருமவர்  பின்சென்றார்  ஆங்கி  லேயர்
                அஞ்சிடவே  கப்பல்விட  ஆலோ   சித்தார்! 8
                
        ஆர்வமுடை  ஆசான்  பெருமாளும்  பாட்டியுடன் 
        சேர்ந்தே  இதிகாசத் தேனமுதை - ஆரக் 
        கற்பித்தார்! ஆங்கிலத்தை  கற்றார்நற் கல்விதரும் 
        பொற்புடைய பள்ளியிற்  புக்கு. 9

        புக்கவெள்ளைக்  காரரரவர்  புரிந்த தீங்கைப் 
             போக்கிடவே  ஆங்கிலத்தில்  புலமை பெற்றார்; 
        தக்கவராய்த்  தொழிலாளர்  சங்கம் கண்டே 
              தனிவேலை  நிறுத்தத்தில்  ஈடு  பட்டார்;
        மிக்கவெள்ளை  தனைப்பணியச்  செய்த  போரால் 
               வேண்டுவன  நிறைவேற,  வியந்தார்  நாட்டார்!
        மக்களினம்  வாழ்த்திடவே  சந்திர  பாலர் 
               வருகைதரப்  பொதுக்கூட்டம்  நடத்திவைத்தார்10!

        வைத்த  பணத்தையெலாம்  வாரிச்  சுருட்டிடவே 
        சைத்தானாய்   வெள்ளை  சதிசெய்தான்- எய்த்த 
        சுப்பலெலாம்  துள்ளிக்  குதித்தெழவே  ஓட்டினார் 
        கப்பல்தனைத்  தெற்குக்  கடல்! 11

       கடலின்  அலைபோல  மீண்டும் மீண்டும் 
              காதகராம்  வெள்ளையர்கள்  சூழ்ச்சி செய்தார்  
       மடங்கலை குகைக்குள்ளே  அடக்கல்  போலே 
               வ.உ.சி  சிவா என்ற  இருவர்  மேலும்               
        தடைச் சட்டம்  ஏவிவிட்டார் கலங்கிடாத 
                தன்மானச் சிங்கங்கள்  மீறிச் சென்றார் 
        கடைசியிலே  தீவுக்குள்  இருப  தாண்டு 
                காராக்கி ரகமென்றார்; வெகுண்டார்  ஊரார்! 12

       ஊரவரின்  ஊக்கம்  உலைக்குள்ளே  வெந்நீராய் 
       சீறியே   ஓங்கச்  சிறைதன்னைப்  -- பாரோர் 
       தகர்க்க  வெளிப்பட்டார் சதியாளர் தோற்க 
       நகைத்ததே   நெல்லை   நகர்!13

       நகராகும்   கோவையுடன்  கண்ண  னூரும் 
            நல்லவராம்  இருவரையும்   சிறைக்குள்  தாங்கிப் 
       புகழாரம்  பெற்றனவாம்  செக்கி  ழுத்த
             புனிதர்சிதம்  பரத்தின்கரம்  பட்ட  தாலே  ,  
       நகைபூத்த   கண்ணனவன் குழலைப் போலே 
              நாதவெள்ளம்  செக்கினிலும்  பெருகிற்   றம்மா!
       பகைவரையே  நடுங்க வைத்த  தேச பக்தர்   
              பரம்பரையில்   பிறத்தலும்நம்  பாக்ய  மன்றோ?14

       மன்றாடும்  பெம்மான்  மகிமை விடத்தாலே 
       இன்றோ  இவர்பெருமை செக்காலே - என்றும் 
       ஊராரைக்  காப்பார் உடல்துன்பம் பாராரே 
       சீரார் சிதம்பரம்போல்  செய்! 15

        செய்தபிழை  ஆஷின்மேல்  திரும்ப  வந்தே 
             சீறிவரும்  துப்பாக்கி  ரவையாய்ப்  பாய்ந்தே 
        எய்தியதை  என்வாஞ்சி  மாமா  செய்தார் 
              எதிர்வினைகள்  அரசியலில் என்றும் உண்டாம் 
        மெய்யன்பர்  முறையீட்டால்  சிறைசெல் காலம் 
              மிகவிரைவில்  ஆறாண்டாய்க்  குறைந்த தம்மா!
        ஐயன்சிதம்  பரம்மீண்டும் வக்கீ   லாகும்
              அரும்வாய்ப்பை  வாலிஸ்எனும்  அன்பர் தந்தார்!16 

       தந்தவர்க்கே  நன்றி  தகுமென்றே தம்மகன்பேர் 
       அந்தவா  லீஸ்வரனாய்  ஆக்கினார் -- சொந்தம்
       மதங்கடந் தென்றும்  வளரும்  எனவே 
       சிதம்பரம்  செய்தார்  சிறப்பு! 17

        சிறந்தவரின்   கப்பல்தொழில்   செய்தா ரெல்லாம்  
             சீரழிந்தே   கப்பல்தனை  விற்று    நன்றி 
        மறந்தாரே! என்செய்வேன் என்று மாழ்கி 
             மண்ணெண்ணெய்  விற்றிட்டார்  அரிசி விற்றார் 
        அறம்மாய்ந்தே  மறம்ஓங்கி ஆண்மை  நீங்கி 
              அறிவற்றே  நாட்டினரும்  அடிமை மோகத்  
         திறங்கிட்டார் இவர்நிலைமை  என்றே  ஓயும்?
                சிதம்பரனார்  வறுமையிலும்  செம்மை  கொண்டார்! 18

        கொண்டதம்  பேரறிவின்  கொடையாய்த்  தமிழ்நூல்கள்
        அண்டம்   புகழவே  ஆக்கிட்டார் -  மண்டும் 
        மிடியைஜேம்ஸ்  ஆலன்நூல் மெய்ம்மை அறத்தை 
        வடித்தார்  தமிழில்  மகிழ்ந்து!19

         மகிழ்ந்தே  தம்மருமகனின்  பாடல்  தன்னை 
              மனைவியவள்  பாடுவதைக்  கேட்ட   வாறே  
         புகுந்தார்நம்  பாரதத்தாய்  அடியின் நீழல்  
               பொன்னொளிரும்  சுதந்திரத்தின்  சுவை  காணாமல் 
         தகுமோநம்  சிதம்பரனார்க்  கிந்தத்   தாழ்வு?
                தரணியிதைத்  தாங்கிடுமோ? தமிழ்தோற்  கும்மோ?
         நகல்வேண்டா, நான்விரும்பும் நல்லோர்தம்மை 
                 ஞாலத்தீர்,  மறவாதீர்;  போற்றி  வாழ்வீர்!20


      கவியரங்கத் தலைமை எனும்  சுமையை  வைத்த 
             கவிவேழம் உள்ளிட்டோர்க்  கென்வ ணக்கம்; 
      புவியரங்கில்  என்பாட்டும்  புகவைத்  திட்ட 
              புகழ்சந்த வசந்தத்தார்க்  கென்வ ணக்கம்  
      செவிமகிழ  இதைமீண்டும்  சொல்லிப் பார்த்தே 
              சிறப்பென்றே  பொய்யுரைப்போர்க்  கென்வ  ணக்கம்;
       அவிமனமும்  ஆழ்புலமைத்  திறமும் பெற்ற 
              ஆன்றோர்க்கும்  வணக்கம்சொலி  அமைகின் றேனே!     
         
      அடுத்த  கவிஞரை  எடுத்து     ரைத்திடின் 
            படுத்த  வரும்விரைந்                தெழும்புவார்...
       எடுத்த  சொல்தொறும் விடுத்த பொருள்தரும்  
             மிடுக்கை  எதிர்கொளக்               கலங்குவார்
        தொடுத்த  தமிழமு தெடுத்த   குவளையில்  
              கொடுத்த  கவிதையுள்               மயங்குவார்
         விடுத்த தெளிவினை மடுத்த  கஜமுகன் 
               அடிக்குள்   அடிபல                     அடுக்குவார்     
           
         படைத்த கவிதையுள்  மிடைந்த  கருத்தெனப்  
                   பரவிய     எழுத்தவல்         பொரியாகும் 
          பொலிந்த    மனமெனப்  பருத்த  புஜமெனப்  
                    பொதுளிய  அசையப்ப       மதுவாகும் 
          அடைத்த   வரிகளுள்  கொடுத்த  விரிவினில் 
                     அணிந்தசீர்       சிறுமோ             தகமாகும் 
          தடுத்த     தளைகளுள்  சிலைத்த    ஒலிநயம் 
                     கடித்திடும்   சீடைதம்             வகையாகும் 
                    
           அடுத்த  அடிகளில்  கொடுத்த  கவித்திறம் 
                     செடித்திடும்  அருகம்புல்         லதுவாகும் 
            தொடுத்த  தொடையதில்  அடங்கும்  இயல்திறம்  
                      திதித்திடு       சுழியத்தின்      சுவையாகும்
            படைத்த   பாவகை  மொழிந்த  மொழிவளம் 
                       கடித்திடும்   கரும்பதன்       சுவையாகும் 
            நடக்கும்  வேழத்தின்   தடத்தை  அறிந்தநம்            
                        இலந்தையின்  கவிதைகள்  நமைச்சாரும்.....               
          
          கவிவேழம்  "பிடித்த"தனைக்   கனவேகம்  கொடுப்பதனைக் 
           செவிகொடுத்துக்   கேட்பதுவும்   விழிவிரித்துக்   காண்பதுவும் 
           புவியோரின்  பாக்கியமே, புலவோரின்  போக்கியமே
           கவிஞரெலாம்  சேர்ந்திடுக  கதித்தெழுந்தே அணிதிரள்க!  

            வருக கவி தருக !

             வணக்கம் 
           
      
             
       சகத்திலினித்  துன்பமெலாம்  இன்பம், நாமும் 
                
 


 
         
      
         

  

 
              
         
        

     


              
          
         




         















      நாற்பதாம்  கவியரங்கின்  முதல்  கவிஞராக 
         கவிவேழம்  இலந்தையாரை  அன்புடன் அழைக்கிறேன்!......
                              **********************


       எண்ணத்தில்  உயர்ந்தானை  இணையத்தின் 
                வேந்தனென   இயங்கு  வானை 
       பண்ணொத்த கவிதைதரும்  பாரதியை 
                உள்ளத்தில்  பதித்துள்  ளானை 
       கண்ணொத்த சிவன்கழலைக்  காரைக்கா 
                 லம்மைவழி  காட்டுவானை 
       விண்ணொத்த  புகழின்கவி  வேழமெனத் 
                  திகழ்வானை  வேண்டு கின்றேன்!

   
       மனக்கோயில்  தேவனென  மதயானை 
                   தனைப்போற்றிப்  பூசை  செய்யும் 
       இனத்தாரின்  உளங்கவர்ந்த  இலந்தைநகர் 
                     ஏந்தலெனும்  இராம   சாமீ!
        எனக்கொன்று  பிடித்ததென  எதனைத்தான் 
                      காட்டிடினும்  ஏற்றுக்  கொள்வோம் 
        தனக்குவமை  இல்லாய்நின்  தமிழ்க்குவமை 
                     கண்டிடயாம்  தவிக்கின்றோம், வா!         

    
          
               

Dr Subramanian

unread,
Apr 13, 2014, 5:36:50 AM4/13/14
to santhav...@googlegroups.com
அன்புமிகு  புலவர் இராமமூர்த்தி அவர்களே
அட்டகாசமான ஆரம்பம். செவி மடுத்தேன் ; விழி விரித்தேன். முதல் அழைப்பில் யானைப் பாகனாய் மாறி வேழ பவனி நடத்துகிறீர். வாழ்த்துகள்
அன்புடன்
வவேசு


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Managing Editor,
Journal of Algal Biomass Utilization (JABU): ISSN: 2229 – 6905 
http://jalgalbiomass.com
President ,IBA-Indian Biomass Association (Regd)
President, KIA,Chennai (Regd)
Off: 044-26208896 Res: 044-24748674
Mobile: 9381044470
Skype ID vavesu1

Kaviyogi Vedham

unread,
Apr 13, 2014, 6:28:43 AM4/13/14
to santhavasantham
அற்புதம் அற்புதம் உங்கள் சொற்பதம்
பொற்பதம் தமிழன்னை பிடித்தீர் அதனால்
நற்குயில் போன்றுநீர்  இன்குரல்பா விரித்தீர்
சிற்சபை கூட உம் செந்தமிழ் கேட்டதே!
.

 எனக்குப்பிடித்தவரி.. தலைவரே எதுவெனக்கேட்பின்..
.
  அன்புமிக  பாரதியை  ''மாப்பிள்ளை''  என்றழைத்தே 
      இன்புற்ற  ''மாமா''  சிதம்பரனார்  -- முன்புற்ற 
      வெள்ளையன் ''விஞ்ச்''சை  உரையாலே  வீழ்த்தியுளம் 
      கொள்ளைகொண்   டானேயக்  கோ!3

       கோட்டுடனே  தலைப்பாகைக்   கோலம்  காட்டிக்  
              குலவுதமிழ்  பாரதிபால்  அன்பைக் காட்டி,
       நாட்டிலுயர்  சுப்ரமண்ய  சிவாவின் பேச்சை  
               நாடிவந்தே  போற்றுகின்ற நட்பைக் காட்டிக் 
       காட்டாட்சி  வெள்ளையாரை  விரட்டியோட்டிக்  
               கனிவுடனே  தொழிலாளர்  கூட்டம்  கூட்டி,
       வாட்டமிலா  வாழ்வுதரக்  கப்பல்  ஓட்டும்  
               மாண்புடைய  சிதம்பரத்தை  வாழ்த்து  வோமே!..
 யோகியார்


வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 

Kavingar Jawaharlal

unread,
Apr 13, 2014, 8:17:07 AM4/13/14
to santhavasantham
அருமையான தலைமைக் கவிதை. அற்புதமான வ .உ.சி.க்கவிதை பாராட்டுகள்.
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119

Swaminathan Sankaran

unread,
Apr 13, 2014, 8:47:45 AM4/13/14
to santhav...@googlegroups.com
அமோகமான ஆரம்பம். அருமையான கவிதை. சிறந்த தலைப்பு.

சங்கரன்
 Swaminathan Sankaran

ramaNi

unread,
Apr 13, 2014, 9:18:10 AM4/13/14
to santhav...@googlegroups.com
செக்கிழுத்த செம்மலைப் பற்றிய சொக்கவைக்கும் கவிமாலை!


> உமியான எனக்குள்ளும் ஒளியான கனல்மூட்டி
> . யோகம் பயிற்று வித்தே,
> . . ஒருசிறிய மின்னலை உருவாக்கி உலகிற்கே
> . . . ஒளிகூட்ட வேண்டு வேனே!

மிக அழகிய வரிகள்!

ரமணி

*****

Subbaier Ramasami

unread,
Apr 13, 2014, 10:09:01 AM4/13/14
to சந்தவசந்தம்
எப்படிப்  பாடல் துள்ளி வந்தது?
    எப்படி இன்பம் தந்தது
எப்படிச் சொல்லும் ஏற்ற மாகவே
    ஏறியே வந்து நின்றது
செப்படி வித்தை செய்த போலவே
    தீந்தமிழ்ப் பாட்டு நெய்தனர்
செப்புவோம் ‘ஆகா! செப்பிப் போற்றுவோம்
    செந்தமிழ் இன்று வென்றது


இந்தப் புத்தாண் டினிய புத்தாண்டு
இராம மூர்த்தி கவிதையால்
சந்தம் வந்து தாளம் போட்டுச்
சாத னைகள் செய்ததால்
முந்தி வந்த புலவர் பாடல்
மூட்டி விட்ட சிறப்பினால்
இந்த  மேடை வெற்றி வெற்றி
என்று சங்கம் ஊதுவோம்.

இலந்தை






--

Pas Pasupathy

unread,
Apr 13, 2014, 10:41:00 AM4/13/14
to santhav...@googlegroups.com
புத்தாண்டில் வந்த புலவர் விருந்திலிரு
பத்தை ரசமாய்ப் பரிமாறி -- அத்துடன்
வேழம் அழைப்பை விடுத்தார் வியஞ்சனமாய்!
வாழியரா. மூர்த்திதலை மை! 

பசுபதி
13-04-14


2014-04-13 3:20 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:

               செக்கிழுத்த செம்மல்  வ.உ. சி 
                           இருபா  இரு ப.:. து!   
                                   **************
     

      நாற்பதாம்  கவியரங்கின்  முதல்  கவிஞராக 
         கவிவேழம்  இலந்தையாரை  அன்புடன் அழைக்கிறேன்!......
                              **********************


       

Siva Siva

unread,
Apr 13, 2014, 10:57:28 AM4/13/14
to santhavasantham
அருமையான ஆரம்பம்!
வ.உ.சி. வாழ்க்கையைப் போற்றிய பாடல்களோடு புத்தாண்டை வரவேற்கும் நீர் வாழ்க!

அன்புடன்,
வி. சுப்பிரமணீயன்.

2014-04-13 3:20 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
                            கடவுள் வாழ்த்து!
 
          நம்பிக்கை  வைத்தே நவின்றே  துதிக்கின்றோம் 
          தும்பிக்கை நாதன்  துணை 
                              
          ஐந்துக  ரத்தொடும்   ஆனைமு  கத்தொடும் 
                          ஆணைபு  ரிந்திடும்                அரசேநல் 
          இந்தின்  இளம்பிறை  போன்றநின்  கொம்பினால் 
                          இமயத்தில் எழுதிடும்           புலவோனே!
 
          சந்தமி    குத்திடும் செந்தமி  ழவ்வைசொல் 
                          தன்னையு  ணர்ந்தருள்         புரிவோனே 
          சிந்தைம  கிழ்ந்திடச  சேரனை  முந்தியத் 
                           திருக்கயி  லைதனில்           திகழ்வோனே!
   
          இந்தபுத்  தாண்டினில்  எங்கள்வி  ருப்பங்கள் 
                            எய்திடக்  கவிமலர்              இடுகின்றோம்!
           சந்தவ    சந்தத்தின்   சாதனை  ஆண்டெனச்
                            சாற்றும்பு  கழெம்பா            லெய்திடவே,

           தந்தனத்  தானனச்     சந்தமு   ணர்ந்துடன் 
                             தாண்டவ  மாடிடுஞ்             சற்குருவே! 
           ''வந்தருள்   தந்தருள்''   என்றுவ    ணங்கியெம் 
                             வாயுரை   கையுறை        ஆக்குவமே!
             

-->> 'கையூட்டு' ஒன்றே அறியும் இக்காலத்தில் கையுறை என்ற சொல்லைக் காண்பது அரிதே!
 
                     
        '''ஜய''வென்னும்  நல்வெற்றி  சாதனைக்கோர்  புத்தாண்டாய்  
         நயம்செய்க    எங்கும்  நலம்!

                                           
        அமுதுண்ட  விண்ணோர்கள்  அனைவருமே  மாய்ந்துவிட 
                             ஆலகா  லத்தை  உண்டே,
                   அழியாமல்  எந்நாளும்  அடியாரை வாழ்விக்க 
                              அரங்கத்தில் ஆடு கின்றாய்!
        கமுகோடு  தென்னையும்  கடம்பும்வ  ளர்ந்திடும் 
                              கானகப்  பொதிகை  மலையில் 
                    கவினார்ந்த  தமிழ்தனை  அகத்தியர்க்  கருளியே 
                               காலத்தை  வென்று நின்றாய் !
         தமிழான   அமுதுண்டு  தளிர்த்திட்ட  புலவோர்கள் 
                                தருபே  ரிலக்கி  யத்தின்
                     தரங்கண்டு  பாராட்டும்  முருகனின்  உபதேசம் 
                                தாழ்ந்தே  பணிந்துகேட் டாய்!
         உமியான  எனக்குள்ளும்  ஒளியான கனல்மூட்டி 
                                 யோகம்  பயிற்று  வித்தே, 
                      ஒருசிறிய  மின்னலை  உருவாக்கி  உலகிற்கே 
                                   ஒளிகூட்ட  வேண்டு  வேனே!
                                        
                                   தமிழ் வாழ்த்து 
      
        நீரில்நெ  ருப்பினில்    நீந்தினாய்!   கரையிலே 
                         நின்றவர்க்  குறுதிசொன்  னாய்!
                 நின்னருட்  பெருமையை  நெஞ்சாரப்  போற்றினோர் 
                          நிம்மதி கொள்ள வைத்தாய்!


-->> வைகை ஆற்றங்கரைக்கே அழைத்துச்சென்றுவிட்டீர்!
-->> /வெறியூட்டும்  வீரம்/ 
வெறியோட்டும்  வீரம்?


       வீரமிகும்  பாரதியின்  நட்பைப்  பெற்றார் 
             விடுதலையை  நாடிவளர்  வேட்கை கொண்டார் 
        சாரமிகும்  தர்மசங்க  நெசவுச் சாலை 
               தனித்தசுதே  சிப்பிரச்சா  ரத்தின் சங்கம் 
         ஊரிலுரு  வாக்கிமிக  ஊக்கத்  தோடே 
                உண்ணாமல்  உறங்காமல்  தொண்டு செய்தார் 
         யாருமவர்  பின்சென்றார்  ஆங்கி  லேயர்
                அஞ்சிடவே  கப்பல்விட  ஆலோ   சித்தார்! 8
                
        ஆர்வமுடை  ஆசான்  பெருமாளும்  பாட்டியுடன் 
        சேர்ந்தே  இதிகாசத் தேனமுதை - ஆரக் 
        கற்பித்தார்! ஆங்கிலத்தை  கற்றார்நற் கல்விதரும் 
        பொற்புடைய பள்ளியிற்  புக்கு. 9

        புக்கவெள்ளைக்  காரரரவர்  புரிந்த தீங்கைப் 
             போக்கிடவே  ஆங்கிலத்தில்  புலமை பெற்றார்; 
        தக்கவராய்த்  தொழிலாளர்  சங்கம் கண்டே 
              தனிவேலை  நிறுத்தத்தில்  ஈடு  பட்டார்;
        மிக்கவெள்ளை  தனைப்பணியச்  செய்த  போரால் 
               வேண்டுவன  நிறைவேற,  வியந்தார்  நாட்டார்!
        மக்களினம்  வாழ்த்திடவே  சந்திர  பாலர் 
               வருகைதரப்  பொதுக்கூட்டம்  நடத்திவைத்தார்10!

        வைத்த  பணத்தையெலாம்  வாரிச்  சுருட்டிடவே 
        சைத்தானாய்   வெள்ளை  சதிசெய்தான்- எய்த்த 
        சுப்பலெலாம்  துள்ளிக்  குதித்தெழவே  ஓட்டினார் 
        கப்பல்தனைத்  தெற்குக்  கடல்! 11

-->> சுப்பல்  = ?
-->> ஓசை நயமிக்க பாடல்.

Subbaier Ramasami

unread,
Apr 13, 2014, 11:50:29 AM4/13/14
to சந்தவசந்தம்

கவிதையை என்னுள் கனிவாய்ப் பொழியும்

அவனை வணங்கும் அகம்.

 

கவியுணர்வைச் சுண்டிக் கணிக்கின்ற நல்ல

அவைரசனை வேண்டாதார் யார்?

 

சொற்பொழிவு, கட்டுரைகள், கவிதை, பாட்டு

       துலங்குகிற ஆராய்ச்சி, என்றே இங்கே

விற்பனங்கள் காட்டுகின்ற இராம மூர்த்தி

       மேனாளில் நல்லபெயர் பெற்ற ஆசான்

பொற்புடனே இந்நாளும் அவர்மா ணாக்கர்

       புகலுகிறார் பெருமையுடன் அவரின் பேரை

கற்பனைகள் பொங்கிவரக் கவிதை நெய்யும்

       கவியரங்கத் தலைவருக்கென் வணக்கம், வாழ்க!

 

எனக்குப் பிடித்த பூவுண்டு,

       எனக்குப் பிடித்த பாவுண்டு,

எனக்குப் பிடித்த உணவு வகை

       எத்த னையோ இங்குண்டு,

எனக்குப் பிடித்த கவியொருவன்

        எனக்குப் போக்குக் காட்டுகிறான்

எனக்கு முன்னே விளையாடி

       இருக்கிறேன் நான் என்கின்றான்.

 

என்ன பேரோ தெரியாது,

       எங்கே வாசம் அறியேன் நான்

என்ன மொழியோ அவன்மொழியும்

       இதுவும் எனக்குத் தெரியாது,

சின்ன உருவா, பேருருவா

       சிவாப்பா வெளுப்பா தெரியாது.

என்னைக் கவியால் ஈர்க்கின்றான்

       என்னுள் கவிதை வார்க்கின்றான்

 

கண்முன் னாலே வரமாட்டான்

       காட்டு மொழியில் தாட்டான்

பண்கள் இசைப்பான், புயலாவான்

       பரிந்து தென்றல் இதமாவான்

எண்ண மெல்லாம் அவன்நிறைவான்

       எனினும் முகத்தை அவன்காட்டான்

அண்ணல் அவனே பிடித்த கவி

       அவனைப் பற்றிப் பாடுகிறேன்.

      

 

அந்தக் கவிஞனைத் தேடுகிறேன் அவன்

       யாரென இன்னும்நான் காணவில்லை

எந்த இடத்திலும் காணலாம் என்கிறார்

       ஏனோ எனக்குத் தெரியவில்லை                  (அந்தக்..)

 

உள்ளுக்குள் நின்றெனை ஊக்கப் படுத்தியே

       ஓவ்வோர் உணர்வினைத் தட்டுகிறான்

கள்ளத் தனமாக என்றன் கனவினில்

       காணாமலே இசை கொட்டுகிறான்                 (அந்தக்..)

 

கோடை இடியிலே கொண்டல் பொழிவிலே

       கொட்டும் அருவி முழவினிலே

ஆடைகழற்றிய புல்லின் உராய்விலே

       அட்டகாசமாகப் பாடுகிறான்                      (அந்தக்..)

 

சோறு கொதிக்கும் உலையில் அகவலின்

       சுத்த சங்கீதத்தைக் காட்டுகிறான்

ஆறு நடக்கும் நடையில் விருத்தத்தின்

       அத்தனை சந்தமும் மீட்டுகிறான்                  (அந்தக்..)

 

சாக்கடை நாற்றத்தை வார்த்தையில் பூசியே

       சவ்வாது போலவே மாற்றுகிறான்

தீக்கடையும் உலைக் கூடத் துருத்தியில்

       ஜீவனை வாங்கியே சாற்றுகிறான்                 (அந்தக்..)

 

துள்ளு மனமெனில் துள்ளுகிறான் சுக

       சோகத்தை வார்த்தையில் அள்ளுகிறான்

பள்ளு சந்தம் சிந்து பாவகை யாவையும்

       பாடிப்பாடிப் பாடித் தள்ளுகிறான்                  (அந்தக்..)

 

 

அங்கொரு மல்லிகை மெல்லிதழ் கோதியே

       ஆகா, மதுர கவி பொழிவான்

எங்கும் இயங்கும் இயக்க மனைத்திலும்

       ஏற்றதோர் ஆசு கவி மொழிவான்                 (அந்தக்..)

 

காலை வெளுப்பிலும் மாலைச் சிவப்பிலும்

       காட்டும் மிறைப்பா ஒரு புதுமை

ஓலக் கடலலை உச்சியில் வித்தாரம்

       ஓமெனப் பாடுதல் ஓர் இனிமை                   (அந்தக்..)

 

சேவலின் கட்டியம் யார்கவிதை ?- எழும்

       சிங்கத்தின் கர்ச்சனை யார் கவிதை

நாவல் மரக்குயில் தொண்டையிலே இசை

       நாதம் பொழிவது யார்கவிதை?                   (அந்தக்..)

 

சின்னக் குழந்தை மழலையிலே சுகம்

       தேக்கி இசைப்பது யார்கவிதை

தென்றல் நடிப்பில் புயல் இடிப்பில் இதச்

       சீற்றம் கொடுப்பது யார்கவிதை                   (அந்தக்..)

 

காணவிலை, தனைக் காட்டவிலை என்ன

       காரணம் என்றும் தெரியவிலை

பாணம் விரைகிற ஓசையைக் கேட்கிறேன்

       பார்வையில் ஏனோ தெரியவில்லை        (அந்தக்..)

 

காட்சிகள் யாவும் கவியெனச் செய்பவன்

       காட்சிப் பொருளென மாறுவனோ?

சாட்சியாய் நின்றவன் சாற்றும் புதுப்புது

       சங்கதி யாவையும் கூறுவனோ?                  (அந்தக்..)

 

என்றன் உளங்கவர் அந்தக் கவிஞனை

       எந்தப் பெயர் சொல்லிக் கூப்பிடுவேன்?

என்ன இருக்குது பேரினில் நண்பரே

       என்சொற் கவனையே காப்பிடுவேன்              (அந்தக்..)

 

 

 



2014-04-13 2:20 GMT-05:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:

--

Kaviyogi Vedham

unread,
Apr 13, 2014, 12:04:05 PM4/13/14
to santhavasantham
அபாரம் இலந்தையாரே.
 என்ன சொற்சுவை!!
 வாழ்க நீவிர்
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 



VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 13, 2014, 12:05:12 PM4/13/14
to சந்தவசந்தம்

புலவர் பெருமான் புகுந்துவிளை யாடிக்

கலக்கிவிட் டார்தம் கவியால்! – இலந்தையெனும்

ஆனைக்கு அனுப்பினார் அழைப்பு தமிழமுதப்

பானையைக் கவிழ்த்துத் தர.    

 

அனந்த் 13-4-2014

முற்றிலும் கவிநயம் சொட்டும் படைப்பில் எனக்கு மெத்தப் பிடித்தவை, "படைத்த கவிதையுள்  மிடைந்த  கருத்தெனப்  பரவிய     எழுத்தவல்         பொரியாகும்.." என்று தொடங்கி அருணகிரிநாதர் ‘பக்கரை விசித்ர மணி..’ என்னும் திருப்புகழில் விரித்த கணபதியெனும் ஆனையின் உணவு வகைகளைக் கவிவேழத்தின் செய்யுள் பகுதிகளாக்கிய அரங்கத் தலைவரின் திறனும் அழகும். 

 



2014-04-13 3:20 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
                            கடவுள் வாழ்த்து!
          நம்பிக்கை  வைத்தே நவின்றே  துதிக்கின்றோம் 
          தும்பிக்கை நாதன்  துணை 
                              
          ஐந்துக  ரத்தொடும்   ஆனைமு  கத்தொடும் 
                          ஆணைபு  ரிந்திடும்                அரசேநல் 
          இந்தின்  இளம்பிறை  போன்றநின்  கொம்பினால் 
                          இமயத்தில் எழுதிடும்           புலவோனே!
 
        ...................................... 

         படைத்த கவிதையுள்  மிடைந்த  கருத்தெனப்  
                   பரவிய     எழுத்தவல்         பொரியாகும் 
          பொலிந்த    மனமெனப்  பருத்த  புஜமெனப்  
                    பொதுளிய  அசையப்ப       மதுவாகும் 
          அடைத்த   வரிகளுள்  கொடுத்த  விரிவினில் 
                     அணிந்தசீர்       சிறுமோ             தகமாகும் 
          தடுத்த     தளைகளுள்  சிலைத்த    ஒலிநயம் 
                     கடித்திடும்   சீடைதம்             வகையாகும் 
                    
           அடுத்த  அடிகளில்  கொடுத்த  கவித்திறம் 
                     செடித்திடும்  அருகம்புல்         லதுவாகும் 
            தொடுத்த  தொடையதில்  அடங்கும்  இயல்திறம்  
                      திதித்திடு       சுழியத்தின்      சுவையாகும்
            படைத்த   பாவகை  மொழிந்த  மொழிவளம் 
                       கடித்திடும்   கரும்பதன்       சுவையாகும் 
            நடக்கும்  வேழத்தின்   தடத்தை  அறிந்தநம்            
                        இலந்தையின்  கவிதைகள்  நமைச்சாரும்.....               
          
          கவிவேழம்  "பிடித்த"தனைக்   கனவேகம்  கொடுப்பதனைக் 
           செவிகொடுத்துக்   கேட்பதுவும்   விழிவிரித்துக்   காண்பதுவும் 
           புவியோரின்  பாக்கியமே, புலவோரின்  போக்கியமே
           கவிஞரெலாம்  சேர்ந்திடுக  கதித்தெழுந்தே அணிதிரள்க!  

            வருக கவி தருக !

             வணக்கம் 
           
     

 
         
      
         

  

 
              
         
        

     


              
          
         




         















      நாற்பதாம்  கவியரங்கின்  முதல்  கவிஞராக 
         கவிவேழம்  இலந்தையாரை  அன்புடன் அழைக்கிறேன்!......
                              **********************


       எண்ணத்தில்  உயர்ந்தானை  இணையத்தின் 
                வேந்தனென   இயங்கு  வானை 
       பண்ணொத்த கவிதைதரும்  பாரதியை 
                உள்ளத்தில்  பதித்துள்  ளானை 
       கண்ணொத்த சிவன்கழலைக்  காரைக்கா 
                 லம்மைவழி  காட்டுவானை 
       விண்ணொத்த  புகழின்கவி  வேழமெனத் 
                  திகழ்வானை  வேண்டு கின்றேன்!

   
       மனக்கோயில்  தேவனென  மதயானை 
                   தனைப்போற்றிப்  பூசை  செய்யும் 
       இனத்தாரின்  உளங்கவர்ந்த  இலந்தைநகர் 
                     ஏந்தலெனும்  இராம   சாமீ!
        எனக்கொன்று  பிடித்ததென  எதனைத்தான் 
                      காட்டிடினும்  ஏற்றுக்  கொள்வோம் 
        தனக்குவமை  இல்லாய்நின்  தமிழ்க்குவமை 
                     கண்டிடயாம்  தவிக்கின்றோம், வா!         

    
          
               

--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 13, 2014, 12:16:04 PM4/13/14
to சந்தவசந்தம்
கவியரங்கத் தலைவரின் கவிதை ஆற்றோட்டத்தின் நடுவே, இலந்தையார் அழைப்புப் பகுதியின் நடுவில்,  ”சகத்திலினித்  துன்பமெலாம்  இன்பம், நாமும்” என்ற ஒருவரி தனித்துக் காண்கிறது. இது என் கணினியில் மட்டுமா எனத் தெரியவில்லை. இதன் தொடர்ச்சியாக மேலும் எழுதியிருந்தால் தலைவர் அதை இங்கு இடலாம்.

அனந்த்
               
2014-04-13 3:20 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:

Swaminathan Sankaran

unread,
Apr 13, 2014, 1:44:00 PM4/13/14
to santhav...@googlegroups.com
இலந்தையாரின் கவிதை அற்புதம். என்ன சொல்லாட்சி! கருத்துச் செறிவு! பாரதி, பாரதிதாசன், கவிமணி, நாமக்கல்லார் எல்லோரையும் ஒருங்கு சேர நினைவூட்டுகிறது.

சங்கரன்


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 Swaminathan Sankaran

Chandar Subramanian

unread,
Apr 13, 2014, 9:50:26 PM4/13/14
to santhavasantham
வெவ்வேறு பாவடிவங்களில் தொகுத்தளித்த தலைமைக் கவிதை அழகு.


ஒட்டபிடா ரம்பிறந்தான்; ஓங்குதமிழ் கற்றறிந்தான்;
சட்டம் பயின்றதனால் சாதித்தான் - திட்டத்தோ(டு)
ஒப்புதல் பெற்றன்றோர் ஆயிரம் பேர்சேர்த்துக்
கப்பலையும் ஓட்டினான் காண்




2014-04-13 12:50 GMT+05:30 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
                            கடவுள் வாழ்த்து!
          நம்பிக்கை  வைத்தே நவின்றே  துதிக்கின்றோம் 
          தும்பிக்கை நாதன்  துணை 
                              

               செக்கிழுத்த செம்மல்  வ.உ. சி 
                           இருபா  இரு ப.:. து!   
                                   **************



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Chandar Subramanian

unread,
Apr 13, 2014, 10:18:52 PM4/13/14
to santhavasantham
'அந்தக் கவிஞன்' கவிதை மிக அழகு. இக்கவிதையை 35-ஆம் கவியரங்கத்தில் வழங்கினீர்கள் என்று நினைக்கிறேன். 


எண்ணத்துத் தூரிகையால் என்னுளத்துள் சொல்பதித்து
வண்ணப்பா நாளும் வரைகின்றாய் - கண்வழியே
காலத்தின் ஒவ்வோர் கணமுமுளம் இன்புறத்தான்
கோலப்பா என்றும் கொடு




2014-04-13 21:20 GMT+05:30 Subbaier Ramasami <elan...@gmail.com>:

 

அந்தக் கவிஞனைத் தேடுகிறேன் அவன்

       யாரென இன்னும்நான் காணவில்லை

எந்த இடத்திலும் காணலாம் என்கிறார்

       ஏனோ எனக்குத் தெரியவில்லை                  (அந்தக்..)


Subbaier Ramasami

unread,
Apr 13, 2014, 10:32:28 PM4/13/14
to சந்தவசந்தம்
அப்படியா? பார்க்கவேண்டும். 


--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 13, 2014, 10:32:59 PM4/13/14
to சந்தவசந்தம்

அந்தக் கவிஞனை அன்புள்ள நண்பா!நீ

.. அங்கிங்கே தேடாதே, உன்னுடைய

சிந்தை தனிலே இலந்தை எனும்பேரில்

.. சிந்துக் கவிவழி தென்படுவான்!

  

அனந்த்


As usual, please retain relevant portions of previous postings and delete the rest. This saves web space and helps those who use hand devices to read the postings.

2014-04-13 11:50 GMT-04:00 Subbaier Ramasami <elan...@gmail.com>:

>>அந்தக் கவிஞனைத் தேடுகிறேன் அவன்

       யாரென இன்னும்நான் காணவில்லை

>> எந்த இடத்திலும் காணலாம் என்கிறார்

       ஏனோ எனக்குத் தெரியவில்லை

>> என்றன் உளங்கவர் அந்தக் கவிஞனை

       எந்தப் பெயர் சொல்லிக் கூப்பிடுவேன்?


 ------------------

என்ன பேரோ தெரியாது,

       எங்கே வாசம் அறியேன் நான்

என்ன மொழியோ அவன்மொழியும்

       இதுவும் எனக்குத் தெரியாது,

சின்ன உருவா, பேருருவா

       சிவாப்பா வெளுப்பா தெரியாது.

என்னைக் கவியால் ஈர்க்கின்றான்

       என்னுள் கவிதை வார்க்கின்றான்

 

கண்முன் னாலே வரமாட்டான்

       காட்டு மொழியில் தாட்டான்

பண்கள் இசைப்பான், புயலாவான்

       பரிந்து தென்றல் இதமாவான்

எண்ண மெல்லாம் அவன்நிறைவான்

       எனினும் முகத்தை அவன்காட்டான்

அண்ணல் அவனே பிடித்த கவி

       அவனைப் பற்றிப் பாடுகிறேன்.

      

என்றன் உளங்கவர் அந்தக் கவிஞனை

Subbaier Ramasami

unread,
Apr 13, 2014, 10:54:33 PM4/13/14
to சந்தவசந்தம்
இப்பொழுதுதான் பார்த்தேன். அந்தக்கவியரங்கில் இட்டதையே இங்கிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.     என்றாலும் பலருக்கு இது புதியதுதான்.

இலந்தை

Subbaier Ramasami

unread,
Apr 14, 2014, 12:32:15 AM4/14/14
to சந்தவசந்தம்
அந்தக் கவிதையை இப்பொழுது மாற்றிவிட்டேன். 
இப்பொழுது தலைப்பு

எனக்குப் பிடித்த என் ஆசான்.


கவிதையை என்னுள் கனிவாய்ப் பொழியும்

அவனை வணங்கும் அகம்.

 

கவியுணர்வைச் சுண்டிக் கணிக்கின்ற நல்ல

அவைரசனை வேண்டாதார் யார்?

 

சொற்பொழிவு, கட்டுரைகள், கவிதை, பாட்டு

       துலங்குகிற ஆராய்ச்சி, என்றே இங்கே

விற்பனங்கள் காட்டுகின்ற இராம மூர்த்தி

       மேனாளில் நல்லபெயர் பெற்ற ஆசான்

பொற்புடனே இந்நாளும் அவர்மா ணாக்கர்

       புகலுகிறார் பெருமையுடன் அவரின் பேரை

கற்பனைகள் பொங்கிவரக் கவிதை நெய்யும்

       கவியரங்கத் தலைவருக்கென் வணக்கம், வாழ்க!


என் ஆசான்


நீலவான் பார்த்துக் கீழே

            நிலத்தையும் பார்த்துக் கொள்ளும்

கோலமும் இன்றிக் கொள்கைக்

            குறிப்பெதும் இன்றி , எங்கோ

மூலையில் கிடந்த என்னை

            முன்னிலை சேர்த்து விட்ட

சீலனைத் தொழுதே என்றன்

            செயலினைத் தொடங்கு கின்றேன்

 

வந்துநான் நின்ற போது

            வாழ்த்தினாய்வளமார் கல்வி

தந்தெனைக் காத்து நின்றாய்

            தண்பெரும் தமிழைத் தந்தாய்

முந்திடும் வாழ்வில் என்னை

            முன்னிலை சேர்த்துவ் இட்டாய்

செந்தமிழ்ச் செம்மலே என்

            தெய்வமே நின் தாள் போற்றி

குருவருள்

 

ஆக்கிய சோற்றைத் தட்டில்

அன்பொடு வைத்துப் பாசம்

தேக்கிய கண்க ளோடு

சேர்ப்பவர் இருந்தால் தானே

போக்கலாம் பசியை , நாமே

போட்டதைத் தின்றால் விக்கல்

தூக்கிடும் போது முந்தித்

துணைசெய வருவார் யாரே!

 

ஆக்கிய சோறு தெய்வம்,

அன்பொடு நெய்யை வார்த்து

நாக்கிலே சுவையைச் சேர்க்கும்

நலத்திலே பதப்ப டுத்தி

நோக்கிலே கனிவைக் கூட்டி

நொருங்கிடத் தின்ன வைக்கும்

ஊக்கமும் வலிவும் சேர்க்கும்

உத்தமர் குருவே ஆவார்

 

 

என் ஆசான்

 

விண்சுமக்கக் கூடாத வேகத்தின் உந்துதலால்

மண்சுமக்க வந்திங்கு மலர்ந்திட்ட  இளம்பச்சை

கண்சுமக்கும் மாமாயக் காட்சிகளைத் தேராமல்

பண்சுமக்கும் ஒலிச்சிதறல் பலப்பலவாய்ச் சிந்தியநாள்

 

                        அம்மா' சொல்நீ  எனும்குரலில்

                                    ஆதிகாலக் கனவுதிர

                        அம்மா என்றேன் . தாய்நின்றாள்

                                    அவளே என்றன் முதல் ஆசான்

 

நாவாடும் ஆட்டத்தின் நளினத்தில் தான்மயங்கிப்

பாவாடும் சொல்மிழற்றி , பலருக்கும் மதுவேற்றி

தூவானம்  பெய்தங்கே தொடர்பின்றிப் பேசுகையில்

போவோரும் வருவோரும் பூரித்த அந்நாளில்

 

                        ஒன்றும் ஒன்றும் இரண்டென்றார்

                                    உணர்ந்துசொல்லைப் பேசென்றார்

                        என்றன் தந்தை எதிர்நின்றார்

                                    எனக்கோர் ஆசான் அவரானார்

 

விண்ணதிர மழைபெய்து வெளியெல்லாம் நீராகும்

கண்ணயர்ந்த புல்பூண்டு கால் ஊன்றித் தலை நிமிரும்

வண்ணமுறும் பூவகைகள் மணம்வீசும் என்றாலும்

எண்ணமெல்லாம் எதைப்பார்க்க எனவெண்ணி ஏங்குகையில்

 

                        படத்தைக் காட்டிக் கதைசொன்னார்

                                    பாதை செல்லத் துணைநின்றார்

                        படிக்கப் பள்ளி ஏகுகையில்

                                    பாடம் சொன்னார் என்னாசான்

 

விட்டத்தில் கா லூன்றி  மேல்கூரை படர்ந்திட்ட

ஒட்டடடையை நீக்குகிற உற்சாக வேகத்தில்

சட்டென்று காலிடறித்  தரையினிலே வீழ்ந்துவிட

எட்டியொரு அடிவைக்க இயலாத அந்நாளில்

 

                       

வீட்டுக்குள்ளே இடந்தந்து

            மேகம் போலப் பரிவாகிப்

தீட்டும் அன்புச் சுடராகித்

            தெய்வம் ஆனார் ஓராசான்

 

பள்ளியினைத் தாண்டியதும் பாதைவழி தேராமல்

அள்ளுகிற பசிக்கணப்பின் ஆங்காரம் தாங்காமல்

துள்ளிவரும் பருவத்தில் ஹோட்டலிலே  தொழில்செய்து

எள்ளலுக் கஞ்சாமல் இருந்திட்ட அந்நாளில்

 

                        எண்ணைப் பண்டம் தின்னாதே

                                    என்றோ ஒருநாள் பெரியவனாய்

                        நண்ணும் வெற்றி உனக்குவரும்

                                    நவின்றார் அங்கே ஓராசான்

 

தேர்வினிலே வெற்றபெற்ற செய்தியினைப் பார்த்ததுமே

ஆர்வமுடன் சான்றிதழை அடைந்துவிடும் வேட்கையிலே

ஊர்செலவும் சான்றிதழை உன்னிடத்தில் தரமாட்டேன்

சீர்பெறவே கல்லூரி சென்றிடுக எனச்சொல்லி

                                   

                        ஊக்கம் தந்து கல்லூரி

                                    உடனே செல்ல பணித்திட்டார்

                        தேக்கம் வந்த அப்போதில்

                                    தெம்பைத் தந்தார் அவ்வாசான்

 

வேகின்ற வெய்யிலிலே வேறொருவர் துணையின்றி

போகின்ற காலத்தில் புண்ணாகும் நெஞ்சத்தில்

ஆகின்ற வாழ்க்கையதன் அடிச்சுவடே காணாமல்

சோகத்தின் உச்சியினைத் தொட்டுவிட்ட நேரத்தில்

           

 

காவா என்ற என்குரலும்

            கடவுள் காதில் விழுந்ததுவோ?

வாவா என்றே ஓர்குரலும்

வரவு பாடி  வாழ்த்தியது

 

கேட்டகுரல் கிண்கிணியின் கீதத்தில் அமுதயிசை

மீட்டிவரும், சோகத்தை வீட்டிவரும், உயிர்ச்சொல்லை

ஊட்டிவரும், கேட்டாலே உற்சாகம் பொங்கிவரும்

நாட்டமெலாம் அக்குரலின் நாதத்தில் ஒன்றிவிடும்

 

                        கருணை மழையைப் பொழிகண்கள்

                                    காந்தம் போலக் கவர்ந்துவிடும்

                        உருகிச் சொல்லும் கவிதையிலே

                                    உலகம் முனே மறைந்துவிடும்

 

கோடையிலே வீசுகிற குளிர்தென்றல் அவர்பேச்சு

வாடுகின்ற  மனப்பயிர்க்கு வார்த்துவிடும் நல்லமழை

தேடுகின்ற தெய்வதத்தின் தெரிசனத்தை, இலக்கியத்தை

நாடிவரும் அன்பருக்கு நல்கிவிடும் பேராற்றல்

 

                        வீட்டில் தங்க இடந்தந்தார்

                                    விரிந்த உளத்தில் இடந்தந்தார்

                        பாட்டைத் தந்தார், தமிழ் தந்தார்

                                    பண்பின் ஆசான் .சீ.ரா

 

காவியங்கள் ஆய்ந்த மனம் , கம்பனிலே தோய்ந்த உளம்

நாவினிக்கப் பேசியதை நாம் பருகக் காட்டுதிறம்

பாவிரிக்கும் பந்தலிலே படர்நிழலில் பூமலரும்

மேவுமவர் ஊக்கத்தில் வெற்றுளத்தும் பாமலரும்

 

                        மேலை நாட்டுக் கலைசெல்வம்

                                    விரும்பிக் கற்றுப் பலர்காணக்

                        கோலம் போட்டுக் காட்டியவர்

                                    கொஞ்சு தமிழில் கூட்டியவர்

 

அறிவென்றும் அழகென்றும் பரிவென்றும் மூவழியாய்ச்

செறிவோடு கவிதையதன் திறம்காட்டும் செம்மலவர்

பறைசாற்றத் தெரியாமல் பணமுடிப்பு இலட்சத்தை

திறனாய்வுத் தமிழுக்கே சேர்த்திட்ட வள்ளலவர்.

 

                        வங்கக் கவிஞர் தாகூரின்

                                    வார்த்தை தன்னில் தான்மயங்கித்

                        துங்கம் உயரத் தமிழ்மொழியில்

                                    தொடுத்துத் தந்தார் என்னாசான்.

 

மெல்லிதழ் சேர் ரோஜாவின் மென்மையினைப் பேசுவதோ?

சொல்லாலே தெய்வதத்தின் சோதிசொலக் கூடுவதோ?

மல்லிகையின் நறுமணத்தை வார்த்தைக்குள் பூட்டுவதோ?

புலிதழின் பசுமையினைப் புகலுவதும் எவ்வாறு?

 

                        என்றன் வார்த்தை வளைவுக்குள்

என்னால் சொல்லல் ஆகாது

                        இன்னும் இன்னும் அவரின்புகழ்

                                    ஏற்றம் பெற்றுவாழியவே!

 

ஊற்றாண்டு கொண்டிருக்கும் நதிவற்றிப் போகாது

காற்றாண்டு வரும்போது கனல் ஆறிப் போகாது

நேற்றாண்டு கொண்டிருந்தோர் நினைவடங்கிப் போனாலும்

நூற்றாண்டு கண்ட குரு புகழடங்கிப் போகாது

 

                        இங்கே இன்னும் எப்பொழுதும்

                                    எதையோ கற்க விரைகின்றேன்

                        எங்குச்  சென்ற போதினிலும்

                                    இன்னும் நானோர் மாணவனே!

  



2014-04-13 21:54 GMT-05:00 Subbaier Ramasami <elan...@gmail.com>:
இப்பொழுதுதான் பார்த்தேன். அந்தக்கவியரங்கில் இட்டதையே இங்கிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.     என்றாலும் பலருக்கு இது புதியதுதான். மாற்றிவிடுகிறேன்

ramaNi

unread,
Apr 14, 2014, 12:32:35 AM4/14/14
to santhav...@googlegroups.com
இயற்கை அழகை இறைவன் எழுத
நயக்கும் உளமே நகாசு ஒளிர
வியக்கும் கவிதை எழுதும் கவியாய்
நயமுறச் சொன்னது நன்று.

--ரமணி, 14/04/2014

*****

ramaNi

unread,
Apr 14, 2014, 12:51:42 AM4/14/14
to santhav...@googlegroups.com
ஆசு கவியாகி அன்னையை ஆசானை
நேசம் நிறைந்துளம் நெக்குருக வைத்துநீங்கள்
பேசும் கவிதையில் பேணி அகத்துறையும்
பாசம் உரைத்தது பாட்டு.

--ரமணி, 14/04/2014

*****

Kavingar Jawaharlal

unread,
Apr 14, 2014, 1:31:10 AM4/14/14
to santhavasantham
 ஒன்றுக்கு இரண்டாகச் சுவைக்கவிதைகள் கிடைத்தன.முதற்கவிதை மயக்குகிறது.இரண்டாவதோ உள்ளத்தை நீவுகிறது.பாராட்டுகள்.


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119

Ramamoorthy Ramachandran

unread,
Apr 14, 2014, 1:59:55 AM4/14/14
to santhav...@googlegroups.com
நன்றி திரு வ வே சு மற்றும் கவியோகியார் அவர்களே உங்கள் பாராட்டு
புத்தாண்டு வாழ்த்தாக வந்தது. பின்னூட்டம் தந்த சவகருக்கு வணக்கம்
-நன்றி, அன்புடன் புலவர் இராமமூர்த்தி

2014-04-13 15:58 GMT+05:30 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>:

Ramamoorthy Ramachandran

unread,
Apr 14, 2014, 2:36:59 AM4/14/14
to santhav...@googlegroups.com
இலந்தை இப்போதெல்லாம் இரட்டைப் பிள்ளைகளைப் பெறுகிறார்.
திரண்டு படையெடுத்த செந்தமிழ்ப் பாவாம்
இரண்டும் இனிப்பே எமக்கு.

அந்தக் கவிஞன் தமிழ்ச்சீனி
அவன்றன் திருப்பெயர் அ. சீ. ரா.
சிந்தை கவர்ந்த பேராசான்
தரிசனம் அடியேன் பெற்றுள்ளேன்
பந்தம் மிகுத்தே சொல்லாடிப்
பழகிய மொழியால் உரையாடி
எந்தச் சூழலும் இனித்திடவே
இலங்கிய 'நாணல்' புகழ் வாழ்க.

இரண்டும் ஒன்றாய் ஆனவராய்
இதயம் களிக்கப் பாட்டெழுதும்
தரத்தில் உயர்ந்த கவி வேழத்
தமிழின் தாளைப் போற்றுகிறேன்
இரண்டு மூன்று அகவைகளில்
எனக்கும் மூத்த பெருங்கவிஞர்
சரணம் தலைக்கணி எனப்பாடல்
தகுமே எனக்குமத் 'தாள் 'வாழ்க.!

அடுத்த கவிஞர் இவ்வரங்கை
ஆனந் தக்கூத் தாட்டிடுவார் ,
எடுத்த சொல்லர்! இசை வல்லர்!
ஈடில் லாப்பே ராசிரியர்.!
கொடுத்த நூலால் பயில்வோர்தம்
குறைவை நிறைவாய் மாற்றுபவர்!
மடுத்த தமிழ்த்தேன் வழங்கிடவே
வருகென 'அனந்த்'தை அழைக்கின்றேன்!

''பிடித்த'' பத்தை இவர் சொன்னால்
பிறங்கிடும் சுவைநம் நெஞ்சள்ளும்:
இடித்தல் செய்யும்; இசைகொஞ்சும்
எல்லா ருக்கும் வழிகாட்டும்;
தடித்த பாச வினையகலத்
தாய்போல் தழுவித் தத்துவத்தைக்
குடிக்க ஊட்டும்! அதைநாடிக்
கொள்வோம் வாரீர் , குவலயத்தீர்!

Kaviyogi Vedham

unread,
Apr 14, 2014, 3:56:45 AM4/14/14
to santhavasantham
இரட்டைப் பிள்ளைகள் பெறும் அளவிற்கு
சுருசுரு எனவீரியம் மிகுஇலந்தைக் கவிதை
கருகரு என(வெள்ளை) என் முடியில் கற்பனை 
 பரத்தி வளர்த்ததெனில் ஆச்சர்யம் இல்லைகாண்!
 வாழ்க இலந்தை!
யோகியார்

Subbaraman NV

unread,
Apr 14, 2014, 5:44:43 AM4/14/14
to santhav...@googlegroups.com
கவி அரங்கத் தலைமைக் கவிதையும், இலந்தையார் முதற் கவிதையும், ஜய ஆண்டின் துவக்கத்தில் என்னை, எனதருமைக் கவிஞர் பெருமக்களை இயத்திற்கே இட்டுச் சென்றிருக்கும்.. இந்த ஆண்டு இலக்கியத்துறையில் ஈடற்ற ஆண்டாய் விளங்குவது திண்ணம். தமிழன்னை ஆசியினால் தவறாமல் நடக்கும். 
என் வி சுப்பராமன்
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101

Visit http://www.youngpoet.org
Visit http://www.poemhunter.com/subbaraman-n-v/

Siva Siva

unread,
Apr 14, 2014, 8:09:01 AM4/14/14
to santhavasantham
வாழ்க்கைப்பயணத்தில் வழிகாட்டியோரை நினைந்து பாடிய பாடல் நன்று.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2014-04-14 0:32 GMT-04:00 Subbaier Ramasami <elan...@gmail.com>:
அந்தக் கவிதையை இப்பொழுது மாற்றிவிட்டேன். 
இப்பொழுது தலைப்பு

எனக்குப் பிடித்த என் ஆசான்.


கவிதையை என்னுள் கனிவாய்ப் பொழியும்

அவனை வணங்கும் அகம்.

 

.......

Subbaier Ramasami

unread,
Apr 14, 2014, 9:46:08 AM4/14/14
to சந்தவசந்தம்
என் கவிதைகளைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி

இலந்தை

Pas Pasupathy

unread,
Apr 14, 2014, 10:05:11 AM4/14/14
to santhav...@googlegroups.com
(இலக்கியச்) சீனியின் இனிப்பு  யாவருக்கும் பிடிக்கத்தானே செய்யும்?

ஆசானைப் போற்றியொரு அருமையான கவிதை !


2014-04-14 0:32 GMT-04:00 Subbaier Ramasami <elan...@gmail.com>:
அந்தக் கவிதையை இப்பொழுது மாற்றிவிட்டேன். 
இப்பொழுது தலைப்பு

எனக்குப் பிடித்த என் ஆசான்.



Ramamoorthy Ramachandran

unread,
Apr 14, 2014, 10:08:28 AM4/14/14
to santhav...@googlegroups.com
i mean only the double benefit we got through your offspring of poems.
pulavar
> --
> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> பெறுகிறீர்கள்:

Swaminathan Sankaran

unread,
Apr 14, 2014, 10:20:56 AM4/14/14
to santhav...@googlegroups.com
ஆசான்களைப் போற்றும் அருமையான கவிதை.
ஆசான்களாக வருவோர்க்கு முன்னோடிகளைத் தரும் கவிதை.

சங்கரன்



2014-04-14 0:32 GMT-04:00 Subbaier Ramasami <elan...@gmail.com>:

Chandar Subramanian

unread,
Apr 14, 2014, 10:13:24 PM4/14/14
to santhavasantham
நீங்கள் எழுதிய 'ஆசீரா அவர்களின் வாழ்க்கை வரலாறு' நூலைக்குறித்து திரு சூரி அவர்களிடம் சில மாதங்களுக்கு முன் உரையாடிக்கொண்டிருக்கும் போது, அந்நூல் குறித்த என்னுடைய நிலையையே அவர்களும் குறித்தது கண்டு வியப்புற்றேன். அந்நூலின் எந்தப்பக்கங்களைப் படிக்கும் போது எனக்குக் கண்கள் பனித்தன என்று நான் கூறினேனோ அதே பக்கங்களை திரு சூரி அவர்களும் அவருடைய மனைவி அவர்களும் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

கவிஞனின் நெஞ்சில் எழுந்த அந்த உணர்வுகள், வரிகளின் மூலமாய்க் காலம் கடந்து வாசகனை அடைகிறதோ அன்றே கவிதை, கவிதையாய் அமைகிறது. இக்கவிதை அதற்கான ஒரு உதாரணம். 

முதல் கவிதையை ஏற்கனவே இட்டதுதான் என்று நான் குறிப்பிட்டதால் இந்தக் கவிதை படிக்கக் கிடைத்தது. நன்றி. 


2014-04-14 10:02 GMT+05:30 Subbaier Ramasami <elan...@gmail.com>:
அந்தக் கவிதையை இப்பொழுது மாற்றிவிட்டேன். 
இப்பொழுது தலைப்பு

எனக்குப் பிடித்த என் ஆசான்.

ஆக்கிய சோறு தெய்வம்,

அன்பொடு நெய்யை வார்த்து

நாக்கிலே சுவையைச் சேர்க்கும்

நலத்திலே பதப்ப டுத்தி

நோக்கிலே கனிவைக் கூட்டி

நொருங்கிடத் தின்ன வைக்கும்

ஊக்கமும் வலிவும் சேர்க்கும்

உத்தமர் குருவே ஆவார்

 


VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 14, 2014, 10:38:06 PM4/14/14
to சந்தவசந்தம்

சந்த வசந்தக் கவியரங்கம்-40


தலைவர்- புலவர் திரு. இராமமூர்த்தி

தலைப்பு- எனக்குப் பிடித்த..... 

    

இறைவணக்கம்-


என்றும் எனதுள்ளம் ஈசா!நின் எண்ணத்தில்

ஒன்றி இருக்க உதவிடுவாய் – மன்றிதனில்

யானெழுதும் யாவும் உனதுபுக ழாய்மாறத்

தானமளிப் பாய்உன் தயை.

 

தலைமை வாழ்த்து-


பள்ளத்தை நோக்கிப் பறந்து வரும்பெரும்

வெள்ளம் எனவிரும்பிக் கேட்போர்தம்- உள்ளத்தில்

தெள்ளுகவித் தே(ன்)நீர் சொரியும் தலைவருக்கு

உள்ளபடி முன்வாழ்த்(து) உரித்து.

 

அவையோர் வாழ்த்து-


வெற்றிப் பெயரில் விளங்குமிப் புத்தாண்டில்

சுற்றும் உலகத்தைச் சூழ்ந்துள்ள – தெற்றனைத்தும்

தீர வழிகாட்டும் தீரரென இவ்வரங்கில்

சேர்ந்தோர்க்குச் செப்புவேன் வாழ்த்து.


 

அரங்கக் கவிதை- எனக்குப் பிடித்த பெரியோன்

 

கருத்தனை நம்முள்ளே காண்பதே வாழ்வின்

அருத்தம்எனத் தாம்அறியா மாந்தர் - வருத்தும்

கருச்சுழியில் சிக்காமல் காப்பதற்(கு) அன்று

திருச்சுழியில் தோன்றியதோர் தீ  1

 

தீப்பிழம்பாய்த் தோன்றிய தேவின் திருத்தலப்பேர்

நாப்பழக்க மாய்க்கொண்ட நல்லோனைப்  – பாப்புனைந்து

போற்றும் செயலால் புனிதம் பெறநினைத்துச்

சாற்றுவேன் அன்னான் தகை  2

 

அன்ன(ம்)நிகர்ப் பெண்ணொருத்தி ஆரூரன் நாமத்தை

முன்னம் பிறர்மொழியக் கேட்டதுபோல்** – தன்னுள்ளே

தாரக மாயொலித்த சத்தம் ஒருதலத்தின்

பேரென்று பிள்ளைஅறிந் தான்  3

 

அறிவில் நிலைத்த அருணையின் வண்ணம்

குறித்துமனம் கொண்ட களிப்பில் – வெறிகொண்டு

பித்தன் எனப்பிறர் பேசும் நிலையடைந்தான்

சித்தனாய்ப் பின்திகழ்ந் தோன்  4

 

தோன்றும் பொருள்யாவும் சோணா சலமெனஉள்

ஊன்றி அதிலுறைவோன் உள்ளபடி – ஈன்றதன்

தந்தையென ஏற்றுத் தனைப்பெற்றோர் சுற்றம்பால்

பந்தமறுத் தான்பா லகன்  5

 

அகத்தைக் கவர்ந்ததன் அத்தனைத் தேடிச்

சகமெலாம் சுற்றியபின் சேர்ந்தான் – இகத்திலெங்கும்

காணவொண்ணா அண்ணா மலையானை; கண்டபின்

நாணமிலா நங்கைஒத் தான்.##   6

 

தான்யார் எனவறியான் தன்நாமங் கெட்டான்அக்

கோன்பால் தலைப்பட்டான் குன்றதனில் – மோனத்தில்

ஆழ்ந்தான் அருணா அசலம்போல் ஆனந்தம்

சூழ்ந்ததவன் உள்ளில் தொடர்ந்து  7

 

தொடங்கிய நாள்முதலாய் தோல்போர்த்த தேகம்

விடவந்த வேளைவரை தன்னை – அடைந்தோர்க்குக்

காட்டினான் கல்லாலின் நீழல்கீழ் நால்வர்ஐயம்

ஓட்டியவன் ஒத்தோர் வழி   8   

 

வழிந்தோடும் எண்ணப் பெருக்கே மனம்அஃ(து)

அழிந்திட”நான் ஆர்”என்னும் கேள்வி – ஒழியாது

நம்முள் எழுப்பின் நசியும்அகங் காரமெனும்

வெம்மைமிகு நோய்நமை விட்டு  9

 

நமைநாம் உணரின்நம் உண்மைச் சொருபம்

அமைதியே என்றறிய வைத்த – உமைமகிழும்

ஈசன் உருவாம் இரமணப்பே ராசானின்

ஆசிநமக் கென்றும் அரண்  10


 

பின்குறிப்பு:


**திருவாரூரில் குடிகொண்டுள்ள தியாகேசன்பால் தீராக் காதல் வயப்பட்ட நங்கை ஒருத்திக்கு நிகழ்ந்த மாற்றங்களைத் திருநாவுக்கரசப் பெருமானார்  தமது பாடலொன்றில் அழகுற வருணித்துள்ளார்:


முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
   
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்


பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
   
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்


அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
   
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்


தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
   
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.   – (திருமுறை 6.25.7)


**பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்கள் ஒவ்வொன்றும் அந்த நங்கைக்கு ஏற்பட்டவைகளோடு ஒத்திருப்பதை, திருமதி. கனகம்மாள் ”ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை” என்னும் நூலில் சுட்டியுள்ளார். மேல்காணும் கவிதை அக்கருத்தை ஒட்டி (மண்டலித்தல் இல்லாத) அந்தாதி வெண்பாக்களால் அமைக்கப்பட்டது.


## இரமணர் இயற்றிய அருணாசல அக்ஷர மணமாலை என்னும் துதியில் அருணாசலத் திறைவன்பால் மையல் வயப்பட்ட தலைவியாகத் தம்மைப் பாவித்து எழுதிய பாடல் வரிகள் சிலவற்றைக் குறிப்பது.


அனந்த் 14-4-2014 ’ஜய’ புத்தாண்டு நாள்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 14, 2014, 10:48:31 PM4/14/14
to சந்தவசந்தம்
கவியரங்கத் தலைவருக்கு என்னை ஏப்ரில் 22-க்குப் பின் அழைக்கும்படி முன்னம் வேண்டுகோள் விட்டிருந்ததால்,
இன்று மதிய வேளையில், அவர் எனக்கு விடுத்த அழைப்புக் கண்ணில் படும்வரை கொடுத்திருந்த தலைப்புக்கான பொருளைத் தேர்ந்தெடுக்காமல் இருந்துவிட்டேன்.  அதன்பின்னர் என் மனத்தில் தோன்றிய கருத்தொன்றிற்குக் கவிதை உருவம் கொடுக்கத் தொடங்கிச் சற்றுமுன்பு முடித்தேன். அந்தக் கவிதையை அடுத்த இடுகையில் காணலாம். சோம்பித் திரிந்த என்னைச் சொடுக்கி எழுதவைத்த புலவர் பெருமானுக்கு என் நன்றி!

அனந்த் 14-4-2014


2014-04-14 2:36 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:

ramaNi

unread,
Apr 14, 2014, 11:04:48 PM4/14/14
to santhav...@googlegroups.com
இரமண சரிதத் திறைநிலைக் கருணை
திருச்சுழி தொடங்கித் தேடிச் சுற்றியே
அருணையில் அமர்ந்தே அருள்வடி வானதன்
பெருமை யனந்தவர் பெற்றியாற் பொலியுதே.

--ரமணி, 15/04/2014

*****

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 14, 2014, 11:20:10 PM4/14/14
to சந்தவசந்தம்

பாடல் 7-ன் முதலடியை,

’தான்யார் எனமறந்தான் தன்நாமங் கெட்டான்அக்’ என்று திருத்திப் படிக்கவும்.


.. அனந்த்



2014-04-14 22:38 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

சந்த வசந்தக் கவியரங்கம்-40


தலைவர்- புலவர் திரு. இராமமூர்த்தி

தலைப்பு- எனக்குப் பிடித்த..... 

     --------

 

அரங்கக் கவிதை- எனக்குப் பிடித்த பெரியோன்

 

...........................

Kavingar Jawaharlal

unread,
Apr 15, 2014, 12:41:39 AM4/15/14
to santhavasantham
அனந்தின் ரமண அந்தாதி வெண்பாக்கள் ஓட்டத்திலும் பக்தி நாட்டத்திலும் அருமை.


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119

Ramamoorthy Ramachandran

unread,
Apr 15, 2014, 2:25:08 AM4/15/14
to santhav...@googlegroups.com
அரணாம் அருணா சலத்தின் அறிவன்
தருணாம் புயத்தின் தியானம் - பயின்றால்
உருவழியும் பின்னர் ஓயாத் தவத்தால்
கருவழியும் இ.:.தே கருத்து.

என்ற பாடலுடன் மண்டலித்தால் அந்தாதி சிறக்கும்தானே?

அரிய பெருமான் ரமணர்தம் ஆற்றலினைத்
தெரிய அறிவித்த தீரர் - பரிவார்
அனந்த்தின் கவிதை அகிலத்தார் வாழ்வை
தினமும் உயர்த்தும் தெளி.

அ. சீ.ரா. மற்றும் அரியகவி ஞர்பற்றி
நேசர் இலந்தை நிகழ்த்தவே - ஓசை
நயத்தால் உயர்ந்திட்ட நாற்பதாம் மேடை
ஜயத்தின் வழியே செல..

மேலும் அதனை உயர்த்தும் வியன்பொருளாய்
சால வளர்த்த தகவுடையார் - ஞாலம்
போற்றும் கனடா அனந்த்தின் கவிதையால்
ஏற்றம் அடைந்த திவண்!

பாடலோர் பத்தால்நம் பற்றை வளர்த்திட்ட
ஏடார் அனந்த்தின் இசைபோற்றிப் பாடிப்
பணிந்தேன் பலமுறை பாவலரின் வாழ்த்தாய்
அணிந்தேன் முடிமேல் அடி

அடுத்த கவிவாணர் ஆழ்ந்த சிவஞானி
எடுத்த திருப்பாதம் ஏத்தும் மிடுக்குள்ளார்
பிடித்த பெயரார் சிவசிவா என்னும்
அடியார்தாம் செய்வார் அளி!

ஆசு கவியால் அகிலமே போற்ற
வீசு சிவசிவா வெல்கவிதை - கூசும்
மலர்ப்பாதம் போலே மகிழ்வை உருவாக்கிப்
பலர்க்கும் அளிக்கும் பதம்

வருக சிவசிவா வான்கவிதை பாடித்
தருக பிடித்த தனை.....

அன்புடன் இராமமூர்த்தி

Kaviyogi Vedham

unread,
Apr 15, 2014, 4:11:54 AM4/15/14
to santhavasantham
அதனால் என்? வந்த உங்கள் சுறுசுறுப்புக்கவிதை ரமணர் மேல் நீவிர் வைத்த காதலால் வேகமாய் ..’உள்’ இருந்து வெளிவந்ததென்பேன்... so to say.. extempore!
 உங்கள் உள்ளே சொடுக்கிய பெம்மான் ரமணர்...அறிவேன்.
யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 



Subbaier Ramasami

unread,
Apr 15, 2014, 8:09:45 AM4/15/14
to சந்தவசந்தம்

அனந்தின் வெண்பாக்கள் மிக அருமை. இரமணரின் போதனைகளை மிகச் சுருக்கி ஆனால் தெளிவாகக் காட்டிவிட்டார்

 

கருச்சுழியில் சிக்காமல் காப்பதற்(கு) அன்று

திருச்சுழியில் தோன்றியதோர் தீ -       மிக அற்புதம்

 

இதையே தொடர்ந்து அவர் இரமண சரிதை முழுதும் பாடலாம். நல்ல நூல் நமக்குக் கிட்டும்.

 

இலந்தை

 பி.கு: நின்று நிதானித்து எழுதுவதை விட அவசரமாக எழுதப்படும் சில கவிதைகள் அருமையாக அமைந்துவிடும். அப்படி அமைந்தது இது.  



Pas Pasupathy

unread,
Apr 15, 2014, 8:40:08 AM4/15/14
to santhav...@googlegroups.com
அழைத்தார் தலைவர்!
விழித்தார் அனந்தர்!
நுழைந்தார் ரமணர்!
பொழிந்தார் கவிதை!

பசுபதி

2014-04-14 22:38 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:


 

அரங்கக் கவிதை- எனக்குப் பிடித்த பெரியோன்

 


நமைநாம் உணரின்நம் உண்மைச் சொருபம்

அமைதியே என்றறிய வைத்த – உமைமகிழும்

ஈசன் உருவாம் இரமணப்பே ராசானின்

ஆசிநமக் கென்றும் அரண்  10


 

--

Swaminathan Sankaran

unread,
Apr 15, 2014, 9:48:33 AM4/15/14
to santhav...@googlegroups.com
ரமணரின் போதனைகளை சுருங்கக் கூறி விளங்க வைத்து, அவர் புகழ் பாடிடும் கவிதை அருமை.




2014-04-14 22:38 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 15, 2014, 9:57:20 AM4/15/14
to சந்தவசந்தம்
அரங்கத் தலைவரின் அன்புமொழிகளுக்கு என் நன்றி. அவர் கூறியதை மனத்தில் கொண்டு, அந்தாதியின் இறுதியில் மண்டலித்து வருமாறு ஒரு பாடலை இணைத்துள்ளேன்:


எனக்குப் பிடித்த பெரியோன்

 

கருத்தனை நம்முள்ளே காண்பதே வாழ்வின்

அருத்தம்எனத் தாம்அறியா மாந்தர் - வருத்தும்

கருச்சுழியில் சிக்காமல் காப்பதற்(கு) அன்று

திருச்சுழியில் தோன்றியதோர் தீ  1

 

தீப்பிழம்பாய்த் தோன்றிய தேவின் திருத்தலப்பேர்

நாப்பழக்க மாய்க்கொண்ட நல்லோனைப்  – பாப்புனைந்து

போற்றும் செயலால் புனிதம் பெறநினைத்துச்

சாற்றுவேன் அன்னான் தகை  2

 

அன்ன(ம்)நிகர்ப் பெண்ணொருத்தி ஆரூரன் நாமத்தை

முன்னம் பிறர்மொழியக் கேட்டதுபோல்** – தன்னுள்ளே

தாரக மாயொலித்த சத்தம் ஒருதலத்தின்

பேரென்று பிள்ளைஅறிந் தான்  3

 

அறிவில் நிலைத்த அருணையின் வண்ணம்

குறித்துமனம் கொண்ட களிப்பில் – வெறிகொண்டு

பித்தன் எனப்பிறர் பேசும் நிலையடைந்தான்

சித்தனாய்ப் பின்திகழ்ந் தோன்  4

 

தோன்றும் பொருள்யாவும் சோணா சலமெனஉள்

ஊன்றி அதிலுறைவோன் உள்ளபடி – ஈன்றதன்

தந்தையென ஏற்றுத் தனைப்பெற்றோர் சுற்றம்பால்

பந்தமறுத் தான்பா லகன்  5

 

அகத்தைக் கவர்ந்ததன் அத்தனைத் தேடிச்

சகமெலாம் சுற்றியபின் சேர்ந்தான் – இகத்திலெங்கும்

காணவொண்ணா அண்ணா மலையானை; கண்டபின்

நாணமிலா நங்கைஒத் தான்.##   6

 

தான்யார் எனவறியான் தன்நாமங் கெட்டான்அக்

கோன்பால் தலைப்பட்டான் குன்றதனில் – மோனத்தில்

ஆழ்ந்தான் அருணா அசலம்போல் ஆனந்தம்

சூழ்ந்ததவன் உள்ளில் தொடர்ந்து  7

 

தொடங்கிய நாள்முதலாய் தோல்போர்த்த தேகம்

விடவந்த வேளைவரை தன்னை – அடைந்தோர்க்குக்

காட்டினான் கல்லாலின் நீழல்கீழ் நால்வர்ஐயம்

ஓட்டியவன் ஒத்தோர் வழி   8   

 

வழிந்தோடும் எண்ணப் பெருக்கே மனம்அஃ(து)

அழிந்திட”நான் ஆர்”என்னும் கேள்வி – ஒழியாது

நம்முள் எழுப்பின் நசியும்அகங் காரமெனும்

வெம்மைமிகு நோய்நமை விட்டு  9

 

நமைநாம் உணரின்நம் உண்மைச் சொருபம்

அமைதியே என்றறிய வைத்த – உமைமகிழும்

ஈசன் உருவாம் இரமணப்பே ராசானின்

ஆசிநமக் கென்றும் அரண்  10


அரவணைக்கும் அன்னை அருளொளி வீசும்

இரவி எனரமணர் அந்நாள் - கருணை

அலையாய் நமக்களித்த ஆன்மவி சாரம்

கலையா(து)உள் நிற்கும் கருத்து.  11.


.. அனந்த்

Siva Siva

unread,
Apr 15, 2014, 12:28:00 PM4/15/14
to santhavasantham
இனிய பாடல்களில் இரமணர் வாழ்வையும் போதனையையும் எடுத்துச் சொன்னீர்! வாழ்க!

Siva Siva

unread,
Apr 15, 2014, 12:30:34 PM4/15/14
to santhavasantham

ந்தவசந்தக் கவியரங்கம்-40 - "எனக்குப் பிடித்த ...."
2014-04-12
 
எனக்குப் பிடித்தது
-------------------------
0-1) ---- இறைவணக்கம் --- (அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' அரையடி வாய்பாடு) --
படித்த படிப்பின் பயனெல்லாம் .. பணத்தைத் திரட்ட என்றபித்துப்
பிடித்து நாளைக் கழிக்கின்ற .. பேதை மார்கள் காலமிதில்,
துடித்த தேவர் ஓடிவந்து .. துதிக்கக் கடலின் நஞ்சுண்டாய்,
அடித்த லத்தை ஆதரிக்கும் .. அகமெ னக்குத் தந்தாயே!

0-2)
-- இறைவணக்கம் --- (கலிவிருத்தம் - 'மா மா விளம் காய்' வாய்பாடு) --
அலையார் சடையா அம்மலர்த் தாள்போற்றி
தலைமா லையணி தலைவனே தாள்போற்றி
சிலையால் எயில்கள் செற்றவா தாள்போற்றி
தொலையாச் செல்வா தூமலர்த் தாள்போற்றி.

0-3) -- அவை வணக்கம் -- (அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' வாய்பாடு) --
கொன்றை சூடும் கூத்தன் கழலைக் கும்பிட் டும்முன்னே
என்றன் விருப்பில் ஒன்றைப் பாட்டில் இயம்ப ஆசைகொண்டேன்
மன்றில் திரண்டி ருக்கும் அன்பீர் வணங்கி மகிழ்கின்றேன்
இன்று சொல்லும் இதனிற் குறைகள் இருப்பின் உரைப்பீரே.

எனக்குப் பிடித்தது
-------------------------
(அந்தாதித்தொடை அமைந்த பாடல்கள்)
1) -- அறுசீர் விருத்தம் ('விளம் மா தேமா' அரையடி வாய்பாடு) –
உளமகிழ் கின்ற வற்றுள் .. ஒன்றினை எழுத வந்தேன்
பளபள வென்றி ருக்கப் .. பலநினை வுகளைத் தேய்த்தேன்
மளமள வென்று தாளில் .. வரைந்திட அமர்ந்தேன் ஆனால்
உளறலாய்ப் போகும் என்ற .. உண்மையை உணர்ந்து கொண்டேன்.

2
)
கொள்கிற பொருள்கள் வீட்டில் .. குவிந்துகி டப்ப தொத்தே
உள்கிடில் உணர லாகும் .. உகப்பன எண்ணல் ஆகா
வெள்கினேன் எவ்வா றொன்றை .. விரும்பிய தென்பேன் சொன்னால்
எள்குமே என்னை நோக்கி .. ஏனைய விருப்ப மெல்லாம்.

3) --
அறுசீர் விருத்தம் ('மா மா காய்' அரையடி வாய்பாடு) –
எல்லா ருக்கும் தெரிந்தவொன்றே .. இப்பி றப்பைத் தந்ததெது
வில்லால் காமன் எய்தகணை .. விளைத்த தென்பர் இவ்வுடலை
வல்லார் அறிவர் வல்வினையால் .. வாய்த்த திந்தப் பிறப்பென்று
பொல்லா ஆசைப் புயலோய்ந்தால் .. புவியில் மீண்டும் பிறவோமே.

4)
பிறவியைப் பொருத்து விருப்பங்கள் .. பிறந்த பின்னும் பருவத்தின்
உறவினில் உதிக்கும் விருப்பங்கள் .. உயிரைக் கொள்ளப் பக்கத்தில்
மறலியின் தமர்கள் வந்தாலும் .. மனத்தில் இன்னும் விருப்பங்கள்
அறவிடல் ஆமோ ஆசைகளை .. அதற்கோர் வழியும் இங்குண்டோ?

5)
உண்டென் கின்றார் வள்ளுவரும் .. ஒருவன் கழலைப் பற்றிவிடில்
விண்டு போகும் பற்றென்றார் .. மிகவும் எளிய வழிபோலக்
கண்டும் வாழ்வில் கடைப்பிடிக்கக் .. கருது வார்கள் மிகச்சிலரே
தொண்டு பட்டார் தொடர்பிருந்தால் .. சுலப மாகப் பெறலாமே.

6) --
(கலிவிருத்தம் - 'மா மா மா விளம்' வாய்பாடு) --
பெறலாம் மண்ணிற் பெரிதும் நயந்தன
சிறவா வினைபோய்ச் சேமம் எய்தலாம்
நறவார் தமிழாம் நாவுக் கரசர்சொல்
மறவா மனத்தார்க் கருங்காப் பாலனே.

**7**) -- திருநாவுக்கசர் தேவாரம் - திருநேரிசை - 4.67.9.
பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளுங் குறிக்கோளி லாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே
.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2014-04-15 2:25 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
.....


அடுத்த  கவிவாணர் ஆழ்ந்த  சிவஞானி
எடுத்த  திருப்பாதம்  ஏத்தும்  மிடுக்குள்ளார்
பிடித்த  பெயரார் சிவசிவா என்னும்
அடியார்தாம்  செய்வார்  அளி!

ஆசு   கவியால் அகிலமே  போற்ற
வீசு   சிவசிவா  வெல்கவிதை - கூசும்
மலர்ப்பாதம் போலே மகிழ்வை உருவாக்கிப்
பலர்க்கும்  அளிக்கும்  பதம்

வருக  சிவசிவா வான்கவிதை  பாடித்
தருக   பிடித்த  தனை.....

   அன்புடன்  இராமமூர்த்தி




--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Pas Pasupathy

unread,
Apr 15, 2014, 1:25:53 PM4/15/14
to santhav...@googlegroups.com
பிறவா வரத்தை பெறுவதற்கு,
அறவே  ஆசை விடுவதற்கு,
இறைவன் கழலைப் பற்றென்று, 
அறவோர் சொன்ன அவ்வழியைச்  
சிறப்பாய் உரைத்தார் மணியனிங்கே

பசுபதி

2014-04-15 12:30 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:


3) --


வல்லார் அறிவர் வல்வினையால் .. வாய்த்த திந்தப் பிறப்பென்று
பொல்லா ஆசைப் புயலோய்ந்தால் .. புவியில் மீண்டும் பிறவோமே.

4)

அறவிடல் ஆமோ ஆசைகளை .. அதற்கோர் வழியும் இங்குண்டோ?

5)
உண்டென் கின்றார் வள்ளுவரும் .. ஒருவன் கழலைப் பற்றிவிடில்
விண்டு போகும் பற்றென்றார் .. மிகவும் எளிய வழிபோலக்
கண்டும் வாழ்வில் கடைப்பிடிக்கக் .. கருது வார்கள் மிகச்சிலரே
தொண்டு பட்டார் தொடர்பிருந்தால் .. சுலப மாகப் பெறலாமே.

Ramamoorthy Ramachandran

unread,
Apr 15, 2014, 1:31:00 PM4/15/14
to santhav...@googlegroups.com
சிவசிவா வணக்கம் 
பிறப்பே  விருப்பம் பிறந்திட்டால் 
இறப்பே  விருப்பம்  இறந்திட்டால் 
சிறக்கும்  தலைவன் தாள் பற்றல் 
பிறப்பின்  விருப்பம் பிறிதாமோ?

குறிக்கோள்  உயர்ந்தால் குழைவு வரும் 
குறிக்கோள்  மறந்தால்  குறைவு வரும் 
குறிக்கோள் நிரம்பும்  இறையருளால் 
குறிக்கோள்  கொள்வீர்  குறைவில்லை 

என்றே  குறிக்கோள்  விருப்பத்தை 
எனக்குப்  பிடித்தது  என்றிட்டீர் 
நன்றே  இறைவன்  தாள் கருதி 
நாளும் முயல்தல்  நன்றென்றே 

இன்றும்  என்றும் நினைவீர் என்று 
என்றும்  எங்கள் உளம் வென்றீர் 
நன்றே உங்கள்  விருப்பந்தான் 
நாளும் அதையாம்   மேற்கொள்வோம் 

சிவசிவா  தேர்ந்தெடுத்த  சீரடிசேர்  விருப்பத்தை 
தவறிலா  தெந்நாளும்  சார்ந்து பயன்  எய்திடுவோம் 
எவருக்கும்  எப்போதும்  இதுதானே  நல்விருப்பம்?
சிவனவன் சிரிக்கின்றான்  செயலெல்லாம் அவன் செயலே!

அடுத்து  வருகிறார் 
பேராசிரியர்  கனடா  பசுபதி.

இயலா?   இசையா?  நாடகமா?  எல்லாம்  அறிந்த  நல்லவரை 
செயலில்  விரைவைச்  சேர்த்தவரை தெளிவை அளிக்கத்  தெரிந்தவரை 
அயல்நா  டென்றால் அதுவும்நமக்  கானபிழைப்பைத் தருவதென 
மயலே இன்றி  உழைத்தவரை மாண்பார்  கனடா பசுபதியை 
தயவாய்க்  கவிதை தருகவெனத் தாளை வேண்டித்  தவம் செய்வேன்  
பயல்நான்  எனைக்கண்  பார்த்திட்டால் பயனைப் பலவாய்ப் பெறுவேனே 
குயவன்  வனையாக் கும்பமெனும்  கவிதைக்  குடத்தின்  தமிழமுதைச்  
'ஜய'வென்  கின்ற  புத்தாண்டில்  சரித்தே வார்த்திட  வேண்டுவனே!



 
  


--

Pas Pasupathy

unread,
Apr 15, 2014, 2:15:14 PM4/15/14
to santhav...@googlegroups.com
சந்த வசந்தக் கவியரங்கம் -40: 
  தலைவர் : திருச்சி புலவர் இரா.இராம மூர்த்தி  
தலைப்பு: எனக்குப் பிடித்த ....... 

கதிதனைக் காணேன் விதிகள் மறந்தேன் ;
சிதறும் கருத்தினைச் செப்பனிட்டென் நெஞ்சில்        
உதிக்கும் பிதற்றலை ஓசைக் கவியாய்ச்
செதுக்குவாய் ஆடலர சே.

அந்தமிகு பாக்கள் அளிக்கும் அவையிதற்கு
வந்தனங்கள் சொல்வேன் மகிழ்ந்து. 


இலங்கு கவிதை கட்டுரையால்
  இலக்கி யத்தில் பேராளர்,
பொலியும் கம்பன் காதையிலே 
  புதுமை* காட்டும் ஆய்வாளர்,
புலமை மிக்க ஆசானைப் 
  போற்றும் நூலின்% படைப்பாளர்,
தலைவர் இராம மூர்த்திக்கென்
  தலையைத் தாழ்த்தி வணங்குவனே.

* ”கம்ப இராமாயணத்தில் அறிவியல்” 
% “தமிழ்க் கடல்மணி” ( பேராசிரியர் திருச்சி இரா.இராதாகிருஷ்ணன் பற்றி)

அரங்கக் கவிதை 
================
எனக்குப் பிடித்த எழுத்து!

நாட்டு நலனை ஏப்பம் விட்ட 
  நச்ச ரவங்கள் தோலு ரித்து, 
ஆட்சி மாற்றம் செய்து காட்ட
  அனலெ ழுப்பும் எழுத்து ! --அதுவே
  எனக்குப் பிடித்த எழுத்து!                     (1)

காந்தி பக்தன் என்று கூறிக்
  காந்தி நோட்டில் கவனம் காட்டும் 
மாந்தர் நடுவில் மகானின் உண்மை 
  மாண்பு ரைக்கும் எழுத்து! -- இதுநான்
  வேண்டிப் படிக்கும் எழுத்து!                  (2)

கயிறு திரித்த நூல்கள் மிகுந்த
  கன்னித் தமிழி லக்கி யத்தில்
உயர்வு நவிற்சி ஒன்று மின்றி 
  உண்மை காணும் எழுத்து! --இதுநான்
  உன்னிப் படிக்கும் எழுத்து!                     (3)

மொழிக்கு வேலி என்ற பேரில் 
  முட்டுக் கட்டை முள்ளி டாமல்
தழைத்துப் படரும் கொடியைப் போல்நம்
   தலைநி மிர்த்தும் எழுத்து ! -- இதுநான்
   அலைந்து படிக்கும் எழுத்து !                 (4)

திரிபு ரமெரி சிவனைப் போலச்
  சிரிப்பு திர்ப்போம், சிரமம் போக்க! 
கரிப்பைச் சுருக்கிக் களிப்பை விரித்த 
  ‘கல்கி’ ‘தேவன்’ எழுத்து! -- இதுநான்
   கெல்லிப் படிக்கும் எழுத்து!                   (5) 

சிறிய கதைகள் செதுக்கு வோர்கள்
  குறைந்தி ருக்கும் கொடுமை மாற்றி
மறைய விருக்கும் கலைக்கு மீண்டும்
  வாழ்வ ளிக்கும் எழுத்து! --இதுநான்
  ஆழ்ந்து படிக்கும் எழுத்து !                       (6)

தரணி போற்றும் சங்கப் பாட்டின்
  சாறெ டுத்துச் சான்றோர் தத்தம்
உரைகள் மூலம் உணர்வு புனைவின்
  உயர்வைக் காட்டும் எழுத்து! -- அதுநான்
  வியந்து படிக்கும் எழுத்து!                          (7) 

செவியைத் தாக்கிச் சீர ழிக்கும் 
  சின்னத் திரையின் இன்னல் நடுவே
தவிக்கும் உள்ளத் தாகம் தணித்து, 
  சாந்தி கொடுக்கும் எழுத்து! -- எனக்குப்
  பாந்த மான எழுத்து!                                    (8) 

பசுபதி
15-04-2014

============


2014-04-15 13:31 GMT-04:00 Ramamoorthy Ramachandran 
அடுத்து  வருகிறார் 
பேராசிரியர்  கனடா  பசுபதி.

இயலா?   இசையா?  நாடகமா?  எல்லாம்  அறிந்த  நல்லவரை 
செயலில்  விரைவைச்  சேர்த்தவரை தெளிவை அளிக்கத்  தெரிந்தவரை 
அயல்நா  டென்றால் அதுவும்நமக்  கானபிழைப்பைத் தருவதென 
மயலே இன்றி  உழைத்தவரை மாண்பார்  கனடா பசுபதியை 
தயவாய்க்  கவிதை தருகவெனத் தாளை வேண்டித்  தவம் செய்வேன்  
பயல்நான்  எனைக்கண்  பார்த்திட்டால் பயனைப் பலவாய்ப் பெறுவேனே 
குயவன்  வனையாக் கும்பமெனும்  கவிதைக்  குடத்தின்  தமிழமுதைச்  
'ஜய'வென்  கின்ற  புத்தாண்டில்  சரித்தே வார்த்திட  வேண்டுவனே!


-- 

Siva Siva

unread,
Apr 15, 2014, 3:36:28 PM4/15/14
to santhavasantham
தேவைப்படின்:
முன்னர் இட்ட பாடலில் சில சொற்களுக்குப் பொருளோடு:



2014-04-15 12:30 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

ந்தவசந்தக் கவியரங்கம்-40 - "எனக்குப் பிடித்த ...."
2014-04-12
 
எனக்குப் பிடித்தது
-------------------------
0-1) ---- இறைவணக்கம் --- (அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' அரையடி வாய்பாடு) --
படித்த படிப்பின் பயனெல்லாம் .. பணத்தைத் திரட்ட என்றபித்துப்
பிடித்து நாளைக் கழிக்கின்ற .. பேதை மார்கள் காலமிதில்,
துடித்த தேவர் ஓடிவந்து .. துதிக்கக் கடலின் நஞ்சுண்டாய்,
அடித்த லத்தை ஆதரிக்கும் .. அகமெ னக்குத் தந்தாயே!


நஞ்சுண்டாய் நஞ்சை உண்டவனே;
("துடித்த தேவர் ஓடிவந்து துதிக்கக் கடலின் நஞ்சுண்டாய்" - என்ற அடியை முதலிற்கொண்டு பொருள்கொள்க.) 


0-2)
-- இறைவணக்கம் --- (கலிவிருத்தம் - 'மா மா விளம் காய்' வாய்பாடு) --
அலையார் சடையா அம்மலர்த் தாள்போற்றி
தலைமா லையணி தலைவனே தாள்போற்றி
சிலையால் எயில்கள் செற்றவா தாள்போற்றி
தொலையாச் செல்வா தூமலர்த் தாள்போற்றி.


அம் - அழகிய;
சிலை - வில்;

எயில் - கோட்டை; 



0-3) -- அவை வணக்கம் -- (அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' வாய்பாடு) --
கொன்றை சூடும் கூத்தன் கழலைக் கும்பிட் டும்முன்னே
என்றன் விருப்பில் ஒன்றைப் பாட்டில் இயம்ப ஆசைகொண்டேன்
மன்றில் திரண்டி ருக்கும் அன்பீர் வணங்கி மகிழ்கின்றேன்
இன்று சொல்லும் இதனிற் குறைகள் இருப்பின் உரைப்பீரே.

எனக்குப் பிடித்தது
-------------------------
(அந்தாதித்தொடை அமைந்த பாடல்கள்)
1) -- அறுசீர் விருத்தம் ('விளம் மா தேமா' அரையடி வாய்பாடு) –
உளமகிழ் கின்ற வற்றுள் .. ஒன்றினை எழுத வந்தேன்
பளபள வென்றி ருக்கப் .. பலநினை வுகளைத் தேய்த்தேன்
மளமள வென்று தாளில் .. வரைந்திட அமர்ந்தேன் ஆனால்
உளறலாய்ப் போகும் என்ற .. உண்மையை உணர்ந்து கொண்டேன்.

2
)
கொள்கிற பொருள்கள் வீட்டில் .. குவிந்துகி டப்ப தொத்தே
உள்கிடில் உணர லாகும் .. உகப்பன எண்ணல் ஆகா
வெள்கினேன் எவ்வா றொன்றை .. விரும்பிய தென்பேன் சொன்னால்
எள்குமே என்னை நோக்கி .. ஏனைய விருப்ப மெல்லாம்.


கொள்ளுதல் - விலைக்கு வாங்குதல்; பெறுதல்;
உள்குதல் - சிந்தித்தல்;
உகப்பன எண்ணல் ஆகா - விரும்புவன எண்ணற்றவை;
வெள்குதல் - நாணுதல்;

எள்குதல் - இகழ்தல்; 


3) --
அறுசீர் விருத்தம் ('மா மா காய்' அரையடி வாய்பாடு) –
எல்லா ருக்கும் தெரிந்தவொன்றே .. இப்பி றப்பைத் தந்ததெது
வில்லால் காமன் எய்தகணை .. விளைத்த தென்பர் இவ்வுடலை
வல்லார் அறிவர் வல்வினையால் .. வாய்த்த திந்தப் பிறப்பென்று
பொல்லா ஆசைப் புயலோய்ந்தால் .. புவியில் மீண்டும் பிறவோமே.

4)
பிறவியைப் பொருத்து விருப்பங்கள் .. பிறந்த பின்னும் பருவத்தின்
உறவினில் உதிக்கும் விருப்பங்கள் .. உயிரைக் கொள்ளப் பக்கத்தில்
மறலியின் தமர்கள் வந்தாலும் .. மனத்தில் இன்னும் விருப்பங்கள்
அறவிடல் ஆமோ ஆசைகளை .. அதற்கோர் வழியும் இங்குண்டோ?


மறலி - யமன்;

அற - முழுதும்; 


5)
உண்டென் கின்றார் வள்ளுவரும் .. ஒருவன் கழலைப் பற்றிவிடில்
விண்டு போகும் பற்றென்றார் .. மிகவும் எளிய வழிபோலக்
கண்டும் வாழ்வில் கடைப்பிடிக்கக் .. கருது வார்கள் மிகச்சிலரே
தொண்டு பட்டார் தொடர்பிருந்தால் .. சுலப மாகப் பெறலாமே.


விண்டு - நீங்கி; (விள்ளுதல் - நீங்குதல்);

தொண்டுபட்டார் - தொண்டுசெய்யும் அடியவர்கள்; 


6) --
(கலிவிருத்தம் - 'மா மா மா விளம்' வாய்பாடு) --
பெறலாம் மண்ணிற் பெரிதும் நயந்தன
சிறவா வினைபோய்ச் சேமம் எய்தலாம்
நறவார் தமிழாம் நாவுக் கரசர்சொல்
மறவா மனத்தார்க் கருங்காப் பாலனே.


நயந்தன - விரும்பியன;
சிறவா வினை - சிறத்தல் இல்லாத வினை - தீவினை;
சேமம் - க்ஷேமம் - நல்வாழ்வு; பாதுகாவல்;
நறவு ஆர் தமிழ் - தேன் பொருந்திய தமிழ்;
அரும் காப்பு - அரிய பாதுகாவல்;

ஆலன் - கல்லாலின் புடையமர்ந்தவன் - கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த தட்சிணாமூர்த்தி; 



**7**) -- திருநாவுக்கசர் தேவாரம் - திருநேரிசை - 4.67.9.
பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளுங் குறிக்கோளி லாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே
.



 
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2014-04-15 2:25 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
.....


அடுத்த  கவிவாணர் ஆழ்ந்த  சிவஞானி
எடுத்த  திருப்பாதம்  ஏத்தும்  மிடுக்குள்ளார்
பிடித்த  பெயரார் சிவசிவா என்னும்
அடியார்தாம்  செய்வார்  அளி!

ஆசு   கவியால் அகிலமே  போற்ற
வீசு   சிவசிவா  வெல்கவிதை - கூசும்
மலர்ப்பாதம் போலே மகிழ்வை உருவாக்கிப்
பலர்க்கும்  அளிக்கும்  பதம்

வருக  சிவசிவா வான்கவிதை  பாடித்
தருக   பிடித்த  தனை.....

   அன்புடன்  இராமமூர்த்தி



VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 15, 2014, 5:15:34 PM4/15/14
to சந்தவசந்தம்
ஆசு கவிஎழுத்தில் ஆசான்பால் கொண்ட
நேசத்தை நாமுணர்ந்தோம் நன்கு.

அனந்த்


2014-04-14 0:32 GMT-04:00 Subbaier Ramasami <elan...@gmail.com>:


எனக்குப் பிடித்த என் ஆசான்.


என் ஆசான்


நீலவான் பார்த்துக் கீழே

            நிலத்தையும் பார்த்துக் கொள்ளும்

கோலமும் இன்றிக் கொள்கைக்

            குறிப்பெதும் இன்றி , எங்கோ

மூலையில் கிடந்த என்னை

            முன்னிலை சேர்த்து விட்ட

சீலனைத் தொழுதே என்றன்

            செயலினைத் தொடங்கு கின்றேன்

 

 

 

என் ஆசான்

 

விண்சுமக்கக் கூடாத வேகத்தின் உந்துதலால்

மண்சுமக்க வந்திங்கு மலர்ந்திட்ட  இளம்பச்சை

கண்சுமக்கும் மாமாயக் காட்சிகளைத் தேராமல்

பண்சுமக்கும் ஒலிச்சிதறல் பலப்பலவாய்ச் சிந்தியநாள்

 

                      


                        கருணை மழையைப் பொழிகண்கள்

                                    காந்தம் போலக் கவர்ந்துவிடும்

                        உருகிச் சொல்லும் கவிதையிலே

                                    உலகம் முனே மறைந்துவிடும்

 

றிப் போகாது

காற்றாண்டு வரும்போது கனல் ஆறிப் போகாது

நேற்றாண்டு கொண்டிருந்தோர் நினைவடங்கிப் போனாலும்

நூற்றாண்டு கண்ட குரு புகழடங்கிப் போகாது

 

                        இங்கே இன்னும் எப்பொழுதும்

                                    எதையோ கற்க விரைகின்றேன்

                        எங்குச்  சென்ற போதினிலும்

                                    இன்னும் நானோர் மாணவனே!

  


VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 15, 2014, 5:31:38 PM4/15/14
to சந்தவசந்தம்

அனலெ ழுப்பும் மாண்பு ரைக்கும்

மனத்தில் உண்மை பூண்ட ளிக்கும்

தலைநி மிர்த்தி ஓங்கி நிற்கும்

உளத்தில் சாந்தி கூட்டும் – அந்த

எழுத்தில் இவர்க்கு நாட்டம்!

 

நல்ல ஓட்டமுள்ள எழுத்தும் நடையும் கொண்ட எனக்குப் பிடித்த கவிதை.

அனந்த்

  



2014-04-15 14:15 GMT-04:00 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:
சந்த வசந்தக் கவியரங்கம் -40: 

Swaminathan Sankaran

unread,
Apr 15, 2014, 6:08:55 PM4/15/14
to santhav...@googlegroups.com
அருமை, அருமை, பசுபதி. சரளமான, தங்கு தடை இல்லாத சொல்லோட்டம். சினல்ல எழுத்தை நாடி சிறப்பிக்கும் கருத்தோட்டம்.

சங்கரன்


2014-04-15 14:15 GMT-04:00 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 Swaminathan Sankaran

Subbaier Ramasami

unread,
Apr 15, 2014, 6:16:48 PM4/15/14
to சந்தவசந்தம்
ஓர்பற்றைப் பற்றிவிடின் மற்ற வெல்லாம்

ஒன்றுக்குள் தானடங்கி ஒன்றிப்போகும்

தீர்பற்றாய்ப் பற்றுகின்ற தெய்வப்பற்றைச்
சிவசிவா எடுத்துரைத்துத் தெளிவு செய்தார்

வேர்விட்ட செந்தமிழின் விருத்த மெல்லாம்

விதவிதமாய் எடுத்துரைத்து மரபு யாப்பின்

சீர்பற்றை விதந்துரைத்தார், தமிழின் ஊற்றச்
சிறப்பதனை நாம்கண்டோம் வாழ்க, வாழ்க!

இலந்தை


--

Subbaier Ramasami

unread,
Apr 15, 2014, 6:18:04 PM4/15/14
to சந்தவசந்தம்
கவியரங்கத் தலைவர் அவர்களே ,
நீங்கள் அழைத்த கவிஞர் கவிதையை இட்டதும்  மற்றவர்கள் பின்னூட்டம் கொடுப்பதற்கு ஒரு நாளாவது அவகாசம் கொடுங்கள். முத்தாய்ப்பாக உங்கள் பின்னூட்டத்தையும் அடுத்த கவிஞரின் அழைப்பையும் கொடுக்கலாம் 




2014-04-15 12:31 GMT-05:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 15, 2014, 6:30:59 PM4/15/14
to சந்தவசந்தம்

பற்றற்றான் பால்பற்றைப் பற்றியவர் தமைச்சேர்தல்


உற்றதோர் விருப்பமென உரைத்தநயம் வெகுஅழகு.



... அனந்த்



>> தொண்டு பட்டார் தொடர்பிருந்தால் .. சுலப மாகப் பெறலாமே.

2014-04-15 12:30 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

ந்தவசந்தக் கவியரங்கம்-40 - "எனக்குப் பிடித்த ...."
2014-04-12
 

எனக்குப் பிடித்தது
-------------------------

எனக்குப் பிடித்தது
-------------------------
(அந்தாதித்தொடை அமைந்த பாடல்கள்)



3) --
அறுசீர் விருத்தம் ('மா மா காய்' அரையடி வாய்பாடு) –

எல்லா ருக்கும் தெரிந்தவொன்றே .. இப்பி றப்பைத் தந்ததெது
வில்லால் காமன் எய்தகணை .. விளைத்த தென்பர் இவ்வுடலை
வல்லார் அறிவர் வல்வினையால் .. வாய்த்த திந்தப் பிறப்பென்று
பொல்லா ஆசைப் புயலோய்ந்தால் .. புவியில் மீண்டும் பிறவோமே.

4)
பிறவியைப் பொருத்து விருப்பங்கள் .. பிறந்த பின்னும் பருவத்தின்
உறவினில் உதிக்கும் விருப்பங்கள் .. உயிரைக் கொள்ளப் பக்கத்தில்
மறலியின் தமர்கள் வந்தாலும் .. மனத்தில் இன்னும் விருப்பங்கள்
அறவிடல் ஆமோ ஆசைகளை .. அதற்கோர் வழியும் இங்குண்டோ?

5)
உண்டென் கின்றார் வள்ளுவரும் .. ஒருவன் கழலைப் பற்றிவிடில்
விண்டு போகும் பற்றென்றார் .. மிகவும் எளிய வழிபோலக்
கண்டும் வாழ்வில் கடைப்பிடிக்கக் .. கருது வார்கள் மிகச்சிலரே
தொண்டு பட்டார் தொடர்பிருந்தால் .. சுலப மாகப் பெறலாமே.

2014-04-15 2:25 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
.....


அடுத்த  கவிவாணர் ஆழ்ந்த  சிவஞானி
எடுத்த  திருப்பாதம்  ஏத்தும்  மிடுக்குள்ளார்
பிடித்த  பெயரார் சிவசிவா என்னும்
அடியார்தாம்  செய்வார்  அளி!

ஆசு   கவியால் அகிலமே  போற்ற
வீசு   சிவசிவா  வெல்கவிதை - கூசும்
மலர்ப்பாதம் போலே மகிழ்வை உருவாக்கிப்
பலர்க்கும்  அளிக்கும்  பதம்

வருக  சிவசிவா வான்கவிதை  பாடித்
தருக   பிடித்த  தனை.....

   அன்புடன்  இராமமூர்த்தி




--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 15, 2014, 7:08:03 PM4/15/14
to சந்தவசந்தம்
என் கவிதையைப் பாராட்டி எழுதிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

அனந்த்

Siva Siva

unread,
Apr 15, 2014, 7:18:55 PM4/15/14
to santhavasantham
படித்த எழுத்தில் பிடித்த எழுத்தை இனிது கூறினீர்.

/காந்தி நோட்டில் கவனம் காட்டும் 
மாந்தர்/

காந்தி உடைய நோட்டு எவரையும் கவருமன்றோ! :)

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2014-04-15 14:15 GMT-04:00 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:

ramaNi

unread,
Apr 15, 2014, 10:07:04 PM4/15/14
to santhav...@googlegroups.com
ஆண்டவனே தொண்டர்க் கடியானாய் ஆகையிலே
மாண்டபின் மீள்வரா மாண்பெய்த - வேண்டியவன்
தொண்டடியார் தாள்பற்றத் தொல்வினை ஏகிடவே
உண்டாகா தோநம துய்வு?

ரமணி, 16/04/2014

*****

Chandar Subramanian

unread,
Apr 15, 2014, 10:32:43 PM4/15/14
to santhavasantham
'நாணமிலா நங்கைஒத்த' ஞானியவன்! இஃதுபுதுக்
கோணப்பா அந்தாதிக் கோலமன்றோ! - காணுலகில்
பாண்டங்கள் வேறாயென்? பானம் பரமனெனும்  
நீண்டகதை சொல்லும் நிஜம்



2014-04-15 8:08 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

 

அகத்தைக் கவர்ந்ததன் அத்தனைத் தேடிச்

சகமெலாம் சுற்றியபின் சேர்ந்தான் – இகத்திலெங்கும்

காணவொண்ணா அண்ணா மலையானை; கண்டபின்

நாணமிலா நங்கைஒத் தான்.##   6

 



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Chandar Subramanian

unread,
Apr 15, 2014, 10:36:20 PM4/15/14
to santhavasantham
பிறப்பின் ஆதியை அலசும் அந்தாதி அழகு.

நீள்கின்ற ஆசை நிறுத்த வழியுளதோ?
மீள்கின்ற வாழ்க்கையென்று மேம்படுமோ? - ஆள்கின்ற
நாதன் அவனருளை நம்பும் மனத்தார்க்குப்
பாதம் கொடுக்கும் பலம்



2014-04-15 22:00 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:

எல்லா ருக்கும் தெரிந்தவொன்றே .. இப்பி றப்பைத் தந்ததெது
வில்லால் காமன் எய்தகணை .. விளைத்த தென்பர் இவ்வுடலை
வல்லார் அறிவர் வல்வினையால் .. வாய்த்த திந்தப் பிறப்பென்று
பொல்லா ஆசைப் புயலோய்ந்தால் .. புவியில் மீண்டும் பிறவோமே.

ramaNi

unread,
Apr 15, 2014, 11:35:23 PM4/15/14
to santhav...@googlegroups.com
பேராசிரியர் பசுபதி யவர்களுக்கு,

உங்கள் கவிதையில் அழகும் அமைதியும் தயிரில் வெண்ணையாய்த் திரள்கிறது!

எழுத்தின் இலக்கை இயல்பை விரிக்கும்
பழுத்த கவிதையின் பாங்கை - வழுத்தி
விழுப்பை யகற்றி விழுதென நிற்கும்
எழுத்தை எழுதுவோ மே.

--ரமணி, 16/04/2014


> கதிதனைக் காணேன் விதிகள் மறந்தேன்

செய்திக்கேற்ப வேண்டுமென்றே பொழிப்பு மோனையில்லாமல் அமைத்த அடிதானே இது?


> நாட்டு நலனை ஏப்பம் விட்ட
> . நச்ச ரவங்கள் தோலு ரித்து,
> ஆட்சி மாற்றம் செய்து காட்ட
> . அனலெ ழுப்பும் எழுத்து ! --அதுவே
> . எனக்குப் பிடித்த எழுத்து! (௧)

இது என்ன பாவடிவம்?

அன்புடன்,
ரமணி

*****

Kavingar Jawaharlal

unread,
Apr 16, 2014, 1:16:04 AM4/16/14
to santhavasantham
சிவா வின் பாடல்கள் அருமை.


2014-04-15 22:00 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Kavingar Jawaharlal

unread,
Apr 16, 2014, 1:21:58 AM4/16/14
to santhavasantham
பசுபதியாரே! தங்கள் பார்வையும் பாடலும் உள்ளங் கவர்ந்தன. பாராட்டுகள்.

Ramamoorthy Ramachandran

unread,
Apr 16, 2014, 10:01:40 AM4/16/14
to santhav...@googlegroups.com
அன்பிற்குரிய  சிவசிவா ! 
பாரதிதாசன்  வெகுண்டு பாடிய  கவிதை ஒன்றுண்டு , அது,

செப்புதல் கேட்பீர்! இந்தச் 
      செகத்தொழிலாளர்கள்  மிகப்பலராதலின் 
''சுப்பல்''களாக இனித் 
      தொழும்பர்கலாக மதித்திட  வேண்டாம் !
இப்பொழுதே நீர் - பொது 
   இன்பம் விளைந்திட  உங்களின் சொத்தை 
ஒப்படைப்பீரே  எங்கள் 
உடலில் இரத்தம் கொதிப்பேறும்  முன்பே 
      ஒப்படைப்பீரே!
என்று பாடியுள்ளார். அந்தக் கடைச் சரக்கு தான் 
     'சுப்பல்'' நன்றி வணக்கம் புலவர் இராமமூர்த்தி.
          

Subbaier Ramasami

unread,
Apr 16, 2014, 10:11:41 AM4/16/14
to சந்தவசந்தம்
கயிறு திரித்த நூல்கள் மிகுந்த
  கன்னித் தமிழி லக்கி யத்தில்
உயர்வு நவிற்சி ஒன்று மின்றி 
  உண்மை காணும் எழுத்து! --இதுநான்
  உன்னிப் படிக்கும் எழுத்து!              

poetry is a fine excess என்று கூறுவார்கள். சற்றே மிகைப்படுத்தல் ஓரழகு.  ஒரு நயம்.   உயர்வு நவிற்சி ஒரு உத்தி. அதை அறவே கூடாது என்று சொல்வதை என்னால் ஏற்க இயலவில்லை

ஆனால் உண்மையின் அடிப்படை கொஞ்சமும் இல்லாமல்”பொய்யழகு’ என்று கயிறு திரிப்பது கூடாதுதான்.


பிடித்த எழுத்து கவிதை வடித்த எழுத்து.


இலந்தை

--

Pas Pasupathy

unread,
Apr 16, 2014, 11:22:23 AM4/16/14
to santhav...@googlegroups.com
மனத்தில் இருந்ததை நான் சரியாய் வடிக்கவில்லை...

கயிறு திரித்த நூல்கள் மிகுந்த
  கன்னித் தமிழின் சரித்தி ரத்தில் 
உயர்வு நவிற்சி ஒன்று மின்றி 
  உண்மை காணும் எழுத்து! --இதுநான்
  உன்னிப் படிக்கும் எழுத்து!   

என்று மாற்றிப் படிக்கவும்! 


2014-04-16 10:11 GMT-04:00 Subbaier Ramasami <elan...@gmail.com>:
கயிறு திரித்த நூல்கள் மிகுந்த
  கன்னித் தமிழி லக்கி யத்தில்
உயர்வு நவிற்சி ஒன்று மின்றி 
  உண்மை காணும் எழுத்து! --இதுநான்
  உன்னிப் படிக்கும் எழுத்து!              

poetry is a fine excess என்று கூறுவார்கள். சற்றே மிகைப்படுத்தல் ஓரழகு.  ஒரு நயம்.   உயர்வு நவிற்சி ஒரு உத்தி. அதை அறவே கூடாது என்று சொல்வதை என்னால் ஏற்க இயலவில்லை

ஆனால் உண்மையின் அடிப்படை கொஞ்சமும் இல்லாமல்”பொய்யழகு’ என்று கயிறு திரிப்பது கூடாதுதான்.


பிடித்த எழுத்து கவிதை வடித்த எழுத்து.


இலந்தை
2
--

Pas Pasupathy

unread,
Apr 16, 2014, 11:44:08 AM4/16/14
to santhav...@googlegroups.com
>> கதிதனைக் காணேன் விதிகள் மறந்தேன் 

>செய்திக்கேற்ப வேண்டுமென்றே பொழிப்பு மோனையில்லாமல் >அமைத்த அடிதானே இது?
==============
சில சமயம், இப்படி .... 1,2 மோனை , பொழிப்பு எதுகை போல் வேறுபட்ட தொடைகள் வெண்பா அடிகளில் அமர்ந்து விடும்.
============
>> நாட்டு நலனை ஏப்பம் விட்ட 
>> . நச்ச ரவங்கள் தோலு ரித்து, 
>> ஆட்சி மாற்றம் செய்து காட்ட
>> . அனலெ ழுப்பும் எழுத்து ! --அதுவே
>> . எனக்குப் பிடித்த எழுத்து! (௧)

இது என்ன பாவடிவம்?
=============
:-) எழுதும்போது யோசிக்கவில்லை. சிந்து + ஒரு மடக்கு அல்லது மேல்வைப்பு என்று கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
============


2014-04-15 23:35 GMT-04:00 ramaNi <sai...@gmail.com>:
பேராசிரியர் பசுபதி யவர்களுக்கு,

உங்கள் கவிதையில் அழகும் அமைதியும் தயிரில் வெண்ணையாய்த் திரள்கிறது!

எழுத்தின் இலக்கை இயல்பை விரிக்கும்
பழுத்த கவிதையின் பாங்கை - வழுத்தி
விழுப்பை யகற்றி விழுதென நிற்கும்
எழுத்தை எழுதுவோ மே.

--ரமணி, 16/04/2014


> கதிதனைக் காணேன் விதிகள் மறந்தேன்

செய்திக்கேற்ப வேண்டுமென்றே பொழிப்பு மோனையில்லாமல் அமைத்த அடிதானே இது?


> நாட்டு நலனை ஏப்பம் விட்ட
> . நச்ச ரவங்கள் தோலு ரித்து,
> ஆட்சி மாற்றம் செய்து காட்ட
> . அனலெ ழுப்பும் எழுத்து ! --அதுவே
> . எனக்குப் பிடித்த எழுத்து! (௧)

இது என்ன பாவடிவம்?

அன்புடன்,
ரமணி

*****



Chandar Subramanian

unread,
Apr 16, 2014, 10:31:58 PM4/16/14
to santhavasantham
எழுத்தறிவிற் கேற்ற இலக்கணங்கள் காட்டி
விழுப்பொருளை ஈந்தார் விருந்தாய் -  இழப்பிலாது
தண்டமிழ் மண்ணில் தழைத்தோங்கப் பல்வேறாய் 
எண்ணங்கள் ஈனும் எழுத்து


2014-04-15 23:45 GMT+05:30 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:
நாட்டு நலனை ஏப்பம் விட்ட 
  நச்ச ரவங்கள் தோலு ரித்து, 
ஆட்சி மாற்றம் செய்து காட்ட
  அனலெ ழுப்பும் எழுத்து ! --அதுவே
  எனக்குப் பிடித்த எழுத்து!                     (1)


pushpa christy

unread,
Apr 16, 2014, 10:35:53 PM4/16/14
to santhav...@googlegroups.com
புலவர் ஐயாவின் புதுமையான கவிவரிகள்..
சிந்திக்க வைக்கும் சிந்தனை வரிகள்..
வாழ்த்துக்கள்..
சோதரி


On Sun, Apr 13, 2014 at 2:36 AM, Dr Subramanian <vav...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (vav...@gmail.com) Add cleanup rule | More info

அன்புமிகு  புலவர் இராமமூர்த்தி அவர்களே
அட்டகாசமான ஆரம்பம். செவி மடுத்தேன் ; விழி விரித்தேன். முதல் அழைப்பில் யானைப் பாகனாய் மாறி வேழ பவனி நடத்துகிறீர். வாழ்த்துகள்
அன்புடன்
வவேசு


2014-04-13 12:50 GMT+05:30 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
                            கடவுள் வாழ்த்து!
 
          நம்பிக்கை  வைத்தே நவின்றே  துதிக்கின்றோம் 
          தும்பிக்கை நாதன்  துணை 
                              
          ஐந்துக  ரத்தொடும்   ஆனைமு  கத்தொடும் 
                          ஆணைபு  ரிந்திடும்                அரசேநல் 
          இந்தின்  இளம்பிறை  போன்றநின்  கொம்பினால் 
                          இமயத்தில் எழுதிடும்           புலவோனே!
 
          சந்தமி    குத்திடும் செந்தமி  ழவ்வைசொல் 
                          தன்னையு  ணர்ந்தருள்         புரிவோனே 
          சிந்தைம  கிழ்ந்திடச  சேரனை  முந்தியத் 
                           திருக்கயி  லைதனில்           திகழ்வோனே!
   
          இந்தபுத்  தாண்டினில்  எங்கள்வி  ருப்பங்கள் 
                            எய்திடக்  கவிமலர்              இடுகின்றோம்!
           சந்தவ    சந்தத்தின்   சாதனை  ஆண்டெனச்
                            சாற்றும்பு  கழெம்பா            லெய்திடவே,

           தந்தனத்  தானனச்     சந்தமு   ணர்ந்துடன் 
                             தாண்டவ  மாடிடுஞ்             சற்குருவே! 
           ''வந்தருள்   தந்தருள்''   என்றுவ    ணங்கியெம் 
                             வாயுரை   கையுறை        ஆக்குவமே!
             
                     
        '''ஜய''வென்னும்  நல்வெற்றி  சாதனைக்கோர்  புத்தாண்டாய்  
         நயம்செய்க    எங்கும்  நலம்!

                                           
        அமுதுண்ட  விண்ணோர்கள்  அனைவருமே  மாய்ந்துவிட 
                             ஆலகா  லத்தை  உண்டே,
                   அழியாமல்  எந்நாளும்  அடியாரை வாழ்விக்க 
                              அரங்கத்தில் ஆடு கின்றாய்!
        கமுகோடு  தென்னையும்  கடம்பும்வ  ளர்ந்திடும் 
                              கானகப்  பொதிகை  மலையில் 
                    கவினார்ந்த  தமிழ்தனை  அகத்தியர்க்  கருளியே 
                               காலத்தை  வென்று நின்றாய் !
         தமிழான   அமுதுண்டு  தளிர்த்திட்ட  புலவோர்கள் 
                                தருபே  ரிலக்கி  யத்தின்
                     தரங்கண்டு  பாராட்டும்  முருகனின்  உபதேசம் 
                                தாழ்ந்தே  பணிந்துகேட் டாய்!
         உமியான  எனக்குள்ளும்  ஒளியான கனல்மூட்டி 
                                 யோகம்  பயிற்று  வித்தே, 
                      ஒருசிறிய  மின்னலை  உருவாக்கி  உலகிற்கே 
                                   ஒளிகூட்ட  வேண்டு  வேனே!
                                        
                                   தமிழ் வாழ்த்து 
      
        நீரில்நெ  ருப்பினில்    நீந்தினாய்!   கரையிலே 
                         நின்றவர்க்  குறுதிசொன்  னாய்!
                 நின்னருட்  பெருமையை  நெஞ்சாரப்  போற்றினோர் 
                          நிம்மதி கொள்ள வைத்தாய்!
       பாரில்   தமிழ்நலம்    பாலித்த    பாங்கினைப் 
                          பலமுறை  பார்க்கவைத்   தாய்!
                  பரிவதன்  உருவான  பரமனின்  ஆணை 
                           பலித்ததைப்   பார்த்து  விட்டோம்!
        தேரிலே   ஏற்றியும்  தெருவிலே  போற்றியும் 
                         தெய்வமாய் நின்னை  எண்ணி 
                தெரிசனம்  வேண்டினோர்  சிந்தித்த  யாவையும் 
                          செயலில்நி  றைவேற்றி  னாய்!
        காரிய சித்தியைக்   கண்முனே  காட்டுவாய்!
                          கைகூப்பிப்  போற்று  கின்றோம்!
                கடலை  போற்பல  உடல்கொண்ட  அன்னையே 
                           கன்னித் தமிழ்த்  தெய்வமே!                     
                            
                      புத்தாண்டு  வாழ்த்து 

        வையம்  செழித்திட  வானம்  பொழிந்திட 
                       வந்தது    புத்தாண்டு!  - இனி
                       மகிழுவம்   பல்லாண்டு!- நம் 
        ஐயமும்  அச்சமும்  அகன்றிடத்  தந்தனன் 
                        ஆனந்தப்  பூச்செண்டு - பெரும் 
                         ஆவல் மிகக் கொண்டு !

        கைகள்  உழைத்திடக்  கண்களில்  நீர் ஏன்?
                         கவலையைத்  தள்ளுங்கள்! - புதுக்     
                         கனவுகள்  காணுங்கள் ! - உங்கள் 
        செய்கையில் இன்பமே   சேர்ந்திடும் நல்லன 
                          தினம்தினம்  செய்யுங்கள் - நல்ல 
                          செந்தமிழ்   நெய்யுங்கள்! 
                         
       நேற்றிருந்த வாழ்க்கைதனில்  நிறைவே இல்லை    
            இன்று வந்த புத்தாண்டோ  எழிலின்  சோலை!!
        நாளையிந்த  சோலையிலுன்  நகலும் இல்லை 
             நாட்டிடுவாய்  உன்புகழை, நரனடா  நீ!
        ஆற்றுவெள்ளம் ஓடிவரும்  நாளைக்  காலை 
             ஆயிரமாய்ப்  பூப்பூக்கும்  அன்று  மாலை!
         சேற்றுவயல்  நாற்றுகளில் கதிரின் வேலை
              செய்திடும்நல்  லோவியத்தின் காட்சிச்  சாலை!
 
              தலைப்பைப பற்றி...
 
       இந்தபுத்   தாண்டிலே  எனக்குப்  பிடித்த...வர் , 
                எல்லாரும்  போற்றுபவர் 
        சொந்தத்  தலைவராய்த்   தோத்திரம்  பெறுபவர் 
                  சூராதி  சூரரா    வார்!
        வெந்திடும்  போதிலும்  நொந்திடும்  நிலையிலும் 
                   வந்தே  மாதரத்   தை 
         அந்தமும்  சிந்திட  ஆயிரம்  முறைசொலும் 
                     ஆடவர் ''சிதம்பர   னார்''!


       அவரைப்  போற்றியே  ஆறுதல்  கொண்டிடல் 
                   யாவர்க்கும்  உரிமை  யன்றோ?
       இவருக்  கிணையாய்  எவரைச்  சொல்லலாம்?
                    இவரே   இவர்க்கிணை!  ஆம்!
       சுவரும்  எதிரொலி  சொல்லச்  சிறைதனில் 
                     சுதந்தர  தேவிபுகழ் 
       தவறில்   லாமல்  வெள்ளையர்க்  குணர்த்திய  
                     சாதனை  மன்னர் அவர்!

               செக்கிழுத்த செம்மல்  வ.உ. சி 
                           இருபா  இரு ப.:. து!   
                                   **************
     தூத்துக்   குடிநெல்லை  ஏத்தும்  வழக்கறிஞர் 
     கூத்தன்  திருவடியே  கும்பிட்டார் - ஏற்றமுடன் 
     தென்னா  டுடையானைத்  தேறும்  சிதம்பரம்போல் 
     எந்நாளில்   காண்போ  மினி? 1                                       1.

      இனிதாகும்  இல்லறத்தின்  மாண்பைப்  போற்றி 
                 இணையற்ற  மழலைகளைப்  பெற்ற தந்தை 
     தனியாகத்  தாம்பயின்று  ''வக்கீல்''  ஆகித் 
                 தாய்நாட்டுக்  காய்வாதம்  செய்த சான்றோர் 
      கனிவான  மனங் கொண்டே  நாட்டு  மக்கள் 
                 கடைத்தேறப்  போர்க்கொடியை  உயர்த்தும்  தீரர்!
      மனையாளின்  இன்குரலால்  இறுதிநாளில் 
                 மகாகவியின்  பாக்கேட்டே  மகிழ்ந்தார்  அன்பர்!2

     அன்புமிக  பாரதியை  ''மாப்பிள்ளை''  என்றழைத்தே 
      இன்புற்ற  ''மாமா''  சிதம்பரனார்  -- முன்புற்ற 
      வெள்ளையன் ''விஞ்ச்''சை  உரையாலே  வீழ்த்தியுளம் 
      கொள்ளைகொண்   டானேயக்  கோ!3

       கோட்டுடனே  தலைப்பாகைக்   கோலம்  காட்டிக்  
              குலவுதமிழ்  பாரதிபால்  அன்பைக் காட்டி,
       நாட்டிலுயர்  சுப்ரமண்ய  சிவாவின் பேச்சை  
               நாடிவந்தே  போற்றுகின்ற நட்பைக் காட்டிக் 
       காட்டாட்சி  வெள்ளையாரை  விரட்டியோட்டிக்  
               கனிவுடனே  தொழிலாளர்  கூட்டம்  கூட்டி,
       வாட்டமிலா  வாழ்வுதரக்  கப்பல்  ஓட்டும்  
               மாண்புடைய  சிதம்பரத்தை  வாழ்த்து  வோமே!4
 
      ஓமென்றே  சொல்லும்    ஒருமந்   திரம்கூறிச்  
      சேமம்சேர்  சீருலக  நாதர்பால்  -- பூமிபுகழ் 
      மைந்தனாய்த் தோன்றி வளர்ந்த  சிதம்பரமென் 
       சிந்தையுள்  நின்றார் செழித்து 5 

       செழித்திருந்த  செல்வத்தின்  சிறப்புத் தோன்ற  
               திருச்சியிலே  கணபதியின்  சட்டப் பள்ளி 
        வழிகாட்ட  வழக்கறிஞர்  பட்டம் பெற்றார் 
               வாதாடும்  தொழிலாலே  வருவாய்  பெற்றார்        
        மொழித்திறத்தில்  புலமை பெற்றே  ஊரார் போற்ற 
                முதன்மையுறும்  தலைவரென  விளங்கலானார்.
        இழிவுபெற்ற   தொழிலாளர்  உயர்வுக்காக 
                 எழுச்சிமிகும்  தொழிற்சங்கத்  தலைமை பெற்றார்.6

        பெற்ற  விடுதலையைப் பேணாத  மானிடர்காள் 
        கற்றுக்கொள்  வீரன்னான்  காவியத்தை -= முற்றும் 
        அறிவீர்  வரலாற்றை, அப்போது  தானே 
        வெறியூட்டும்  வீரம்  வரும்?7

       வீரமிகும்  பாரதியின்  நட்பைப்  பெற்றார் 
             விடுதலையை  நாடிவளர்  வேட்கை கொண்டார் 
        சாரமிகும்  தர்மசங்க  நெசவுச் சாலை 
               தனித்தசுதே  சிப்பிரச்சா  ரத்தின் சங்கம் 
         ஊரிலுரு  வாக்கிமிக  ஊக்கத்  தோடே 
                உண்ணாமல்  உறங்காமல்  தொண்டு செய்தார் 
         யாருமவர்  பின்சென்றார்  ஆங்கி  லேயர்
                அஞ்சிடவே  கப்பல்விட  ஆலோ   சித்தார்! 8
                
        ஆர்வமுடை  ஆசான்  பெருமாளும்  பாட்டியுடன் 
        சேர்ந்தே  இதிகாசத் தேனமுதை - ஆரக் 
        கற்பித்தார்! ஆங்கிலத்தை  கற்றார்நற் கல்விதரும் 
        பொற்புடைய பள்ளியிற்  புக்கு. 9

        புக்கவெள்ளைக்  காரரரவர்  புரிந்த தீங்கைப் 
             போக்கிடவே  ஆங்கிலத்தில்  புலமை பெற்றார்; 
        தக்கவராய்த்  தொழிலாளர்  சங்கம் கண்டே 
              தனிவேலை  நிறுத்தத்தில்  ஈடு  பட்டார்;
        மிக்கவெள்ளை  தனைப்பணியச்  செய்த  போரால் 
               வேண்டுவன  நிறைவேற,  வியந்தார்  நாட்டார்!
        மக்களினம்  வாழ்த்திடவே  சந்திர  பாலர் 
               வருகைதரப்  பொதுக்கூட்டம்  நடத்திவைத்தார்10!

        வைத்த  பணத்தையெலாம்  வாரிச்  சுருட்டிடவே 
        சைத்தானாய்   வெள்ளை  சதிசெய்தான்- எய்த்த 
        சுப்பலெலாம்  துள்ளிக்  குதித்தெழவே  ஓட்டினார் 
        கப்பல்தனைத்  தெற்குக்  கடல்! 11

       கடலின்  அலைபோல  மீண்டும் மீண்டும் 
              காதகராம்  வெள்ளையர்கள்  சூழ்ச்சி செய்தார்  
       மடங்கலை குகைக்குள்ளே  அடக்கல்  போலே 
               வ.உ.சி  சிவா என்ற  இருவர்  மேலும்               
        தடைச் சட்டம்  ஏவிவிட்டார் கலங்கிடாத 
                தன்மானச் சிங்கங்கள்  மீறிச் சென்றார் 
        கடைசியிலே  தீவுக்குள்  இருப  தாண்டு 
                காராக்கி ரகமென்றார்; வெகுண்டார்  ஊரார்! 12

       ஊரவரின்  ஊக்கம்  உலைக்குள்ளே  வெந்நீராய் 
       சீறியே   ஓங்கச்  சிறைதன்னைப்  -- பாரோர் 
       தகர்க்க  வெளிப்பட்டார் சதியாளர் தோற்க 
       நகைத்ததே   நெல்லை   நகர்!13

       நகராகும்   கோவையுடன்  கண்ண  னூரும் 
            நல்லவராம்  இருவரையும்   சிறைக்குள்  தாங்கிப் 
       புகழாரம்  பெற்றனவாம்  செக்கி  ழுத்த
             புனிதர்சிதம்  பரத்தின்கரம்  பட்ட  தாலே  ,  
       நகைபூத்த   கண்ணனவன் குழலைப் போலே 
              நாதவெள்ளம்  செக்கினிலும்  பெருகிற்   றம்மா!
       பகைவரையே  நடுங்க வைத்த  தேச பக்தர்   
              பரம்பரையில்   பிறத்தலும்நம்  பாக்ய  மன்றோ?14

       மன்றாடும்  பெம்மான்  மகிமை விடத்தாலே 
       இன்றோ  இவர்பெருமை செக்காலே - என்றும் 
       ஊராரைக்  காப்பார் உடல்துன்பம் பாராரே 
       சீரார் சிதம்பரம்போல்  செய்! 15

        செய்தபிழை  ஆஷின்மேல்  திரும்ப  வந்தே 
             சீறிவரும்  துப்பாக்கி  ரவையாய்ப்  பாய்ந்தே 
        எய்தியதை  என்வாஞ்சி  மாமா  செய்தார் 
              எதிர்வினைகள்  அரசியலில் என்றும் உண்டாம் 
        மெய்யன்பர்  முறையீட்டால்  சிறைசெல் காலம் 
              மிகவிரைவில்  ஆறாண்டாய்க்  குறைந்த தம்மா!
        ஐயன்சிதம்  பரம்மீண்டும் வக்கீ   லாகும்
              அரும்வாய்ப்பை  வாலிஸ்எனும்  அன்பர் தந்தார்!16 

       தந்தவர்க்கே  நன்றி  தகுமென்றே தம்மகன்பேர் 
       அந்தவா  லீஸ்வரனாய்  ஆக்கினார் -- சொந்தம்
       மதங்கடந் தென்றும்  வளரும்  எனவே 
       சிதம்பரம்  செய்தார்  சிறப்பு! 17

        சிறந்தவரின்   கப்பல்தொழில்   செய்தா ரெல்லாம்  
             சீரழிந்தே   கப்பல்தனை  விற்று    நன்றி 
        மறந்தாரே! என்செய்வேன் என்று மாழ்கி 
             மண்ணெண்ணெய்  விற்றிட்டார்  அரிசி விற்றார் 
        அறம்மாய்ந்தே  மறம்ஓங்கி ஆண்மை  நீங்கி 
              அறிவற்றே  நாட்டினரும்  அடிமை மோகத்  
         திறங்கிட்டார் இவர்நிலைமை  என்றே  ஓயும்?
                சிதம்பரனார்  வறுமையிலும்  செம்மை  கொண்டார்! 18

        கொண்டதம்  பேரறிவின்  கொடையாய்த்  தமிழ்நூல்கள்
        அண்டம்   புகழவே  ஆக்கிட்டார் -  மண்டும் 
        மிடியைஜேம்ஸ்  ஆலன்நூல் மெய்ம்மை அறத்தை 
        வடித்தார்  தமிழில்  மகிழ்ந்து!19

         மகிழ்ந்தே  தம்மருமகனின்  பாடல்  தன்னை 
              மனைவியவள்  பாடுவதைக்  கேட்ட   வாறே  
         புகுந்தார்நம்  பாரதத்தாய்  அடியின் நீழல்  
               பொன்னொளிரும்  சுதந்திரத்தின்  சுவை  காணாமல் 
         தகுமோநம்  சிதம்பரனார்க்  கிந்தத்   தாழ்வு?
                தரணியிதைத்  தாங்கிடுமோ? தமிழ்தோற்  கும்மோ?
         நகல்வேண்டா, நான்விரும்பும் நல்லோர்தம்மை 
                 ஞாலத்தீர்,  மறவாதீர்;  போற்றி  வாழ்வீர்!20


      கவியரங்கத் தலைமை எனும்  சுமையை  வைத்த 
             கவிவேழம் உள்ளிட்டோர்க்  கென்வ ணக்கம்; 
      புவியரங்கில்  என்பாட்டும்  புகவைத்  திட்ட 
              புகழ்சந்த வசந்தத்தார்க்  கென்வ ணக்கம்  
      செவிமகிழ  இதைமீண்டும்  சொல்லிப் பார்த்தே 
              சிறப்பென்றே  பொய்யுரைப்போர்க்  கென்வ  ணக்கம்;
       அவிமனமும்  ஆழ்புலமைத்  திறமும் பெற்ற 
              ஆன்றோர்க்கும்  வணக்கம்சொலி  அமைகின் றேனே!     
         
      அடுத்த  கவிஞரை  எடுத்து     ரைத்திடின் 
            படுத்த  வரும்விரைந்                தெழும்புவார்...
       எடுத்த  சொல்தொறும் விடுத்த பொருள்தரும்  
             மிடுக்கை  எதிர்கொளக்               கலங்குவார்
        தொடுத்த  தமிழமு தெடுத்த   குவளையில்  
              கொடுத்த  கவிதையுள்               மயங்குவார்
         விடுத்த தெளிவினை மடுத்த  கஜமுகன் 
               அடிக்குள்   அடிபல                     அடுக்குவார்     
           
         படைத்த கவிதையுள்  மிடைந்த  கருத்தெனப்  
                   பரவிய     எழுத்தவல்         பொரியாகும் 
          பொலிந்த    மனமெனப்  பருத்த  புஜமெனப்  
                    பொதுளிய  அசையப்ப       மதுவாகும் 
          அடைத்த   வரிகளுள்  கொடுத்த  விரிவினில் 
                     அணிந்தசீர்       சிறுமோ             தகமாகும் 
          தடுத்த     தளைகளுள்  சிலைத்த    ஒலிநயம் 
                     கடித்திடும்   சீடைதம்             வகையாகும் 
                    
           அடுத்த  அடிகளில்  கொடுத்த  கவித்திறம் 
                     செடித்திடும்  அருகம்புல்         லதுவாகும் 
            தொடுத்த  தொடையதில்  அடங்கும்  இயல்திறம்  
                      திதித்திடு       சுழியத்தின்      சுவையாகும்
            படைத்த   பாவகை  மொழிந்த  மொழிவளம் 
                       கடித்திடும்   கரும்பதன்       சுவையாகும் 
            நடக்கும்  வேழத்தின்   தடத்தை  அறிந்தநம்            
                        இலந்தையின்  கவிதைகள்  நமைச்சாரும்.....               
          
          கவிவேழம்  "பிடித்த"தனைக்   கனவேகம்  கொடுப்பதனைக் 
           செவிகொடுத்துக்   கேட்பதுவும்   விழிவிரித்துக்   காண்பதுவும் 
           புவியோரின்  பாக்கியமே, புலவோரின்  போக்கியமே
           கவிஞரெலாம்  சேர்ந்திடுக  கதித்தெழுந்தே அணிதிரள்க!  

            வருக கவி தருக !

             வணக்கம் 
           
      
             
       சகத்திலினித்  துன்பமெலாம்  இன்பம், நாமும் 
                
 


 
         
      
         

  

 
              
         
        

     


              
          
         




         















      நாற்பதாம்  கவியரங்கின்  முதல்  கவிஞராக 
         கவிவேழம்  இலந்தையாரை  அன்புடன் அழைக்கிறேன்!......
                              **********************


       எண்ணத்தில்  உயர்ந்தானை  இணையத்தின் 
                வேந்தனென   இயங்கு  வானை 
       பண்ணொத்த கவிதைதரும்  பாரதியை 
                உள்ளத்தில்  பதித்துள்  ளானை 
       கண்ணொத்த சிவன்கழலைக்  காரைக்கா 
                 லம்மைவழி  காட்டுவானை 
       விண்ணொத்த  புகழின்கவி  வேழமெனத் 
                  திகழ்வானை  வேண்டு கின்றேன்!

   
       மனக்கோயில்  தேவனென  மதயானை 
                   தனைப்போற்றிப்  பூசை  செய்யும் 
       இனத்தாரின்  உளங்கவர்ந்த  இலந்தைநகர் 
                     ஏந்தலெனும்  இராம   சாமீ!
        எனக்கொன்று  பிடித்ததென  எதனைத்தான் 
                      காட்டிடினும்  ஏற்றுக்  கொள்வோம் 
        தனக்குவமை  இல்லாய்நின்  தமிழ்க்குவமை 
                     கண்டிடயாம்  தவிக்கின்றோம், வா!         

    
          
               

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Managing Editor,
Journal of Algal Biomass Utilization (JABU): ISSN: 2229 – 6905 
http://jalgalbiomass.com
President ,IBA-Indian Biomass Association (Regd)
President, KIA,Chennai (Regd)
Off: 044-26208896 Res: 044-24748674
Mobile: 9381044470
Skype ID vavesu1

pushpa christy

unread,
Apr 16, 2014, 10:41:22 PM4/16/14
to santhav...@googlegroups.com
ஆசான் பற்றி இலந்தை ஐயா கவிதை அருமை.
என்றும் நெஞ்சில் அழியாத தீபமேற்றிய ஆசானை நினைவு கொள்ளும் தங்கள்
மனத்தை வணங்கி வாழ்த்துகின்றேன்..
சோதரி
புஷ்பா கிறிஸ்ரி


On Tue, Apr 15, 2014 at 2:15 PM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
Boxbe Automatic Cleanup: keep last 10 emails (gan...@gmail.com) Edit rule | Delete rule | Mark important

                                    இன்னும் நானோர் மாணவனே!

  


pushpa christy

unread,
Apr 16, 2014, 10:46:55 PM4/16/14
to santhav...@googlegroups.com
விருத்தத்தில் விருப்புக் கொண்ட சிவா ஐயாவின் கவிதைகள் 
படித்துச் சுவைத்தேன்.. அருமை...வாழ்த்துக்கள்..
அன்புச் சோதரி
புஷ்பா கிறிஸ்ரி


On Tue, Apr 15, 2014 at 9:30 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (naya...@gmail.com) Add cleanup rule | More info
--

Ramamoorthy Ramachandran

unread,
Apr 17, 2014, 1:36:40 AM4/17/14
to santhav...@googlegroups.com
  எழுதுகோல் தெய்வம்  இந்த எழுத்தும்  தெய்வம் என்ற மகாகவியின் 
எதிரொலி (எதிர்க்காத  ஒலி!)  நம் பேராசான்  பசுபதியின் கவிதையில்
ஒலித்தது. நாட்டுமக்கள் பிணியும்   வறுமையும் 
                       நையப்பா  டென்றொரு  தெய்வதங்  கூறுமே 
                  கூட்டி மானுடச் சாதியை  ஒன்றெனக் 
                         கொண்டு வையம் முழுதும் பயனுறப் 
                  பாட்டிலே யறங்  காட்டனு மோர்தெய்வம்!' 
    
என்ற தர்மாவேசம்  பசுபதியார்  பாடல்களில் கொதித்துக்  கிளம்புகிறது.
அவர் கூறும் வழியில் பாட்டெழுதும் ஆவல் பெருகுகின்றது. 

கவிஞர் அ. கி. வரதராசனார்  வழிவிட்டமைக்கு  நன்றி 
 திரு கிரிகாசன் அடுத்த கவிஞராகக் களம் புகுகிறார்.
 
        வந்தது வந்தது  வானை யளந்திடும் 
           செந்தமிழ்த்   தீச்சுடரே!-இனி 
        வெந்திடும் பார்! அதன்  வீச்சினில் தீயவர் 
            வேட்டையிடுங்  களமே! -வெறிச் 
        சந்தமி குந்திடும் குந்தத்தின் முனைமுகம் 
              சாய்த்திடும்  கயமைகளை! - இதோ 
        நந்தம்  அரங்கினில்  செந்தழல் மூண்டிடும்!
               ஞானம்  எரியோம்பும்!  
          
         கீழவர்  ஈழவர்க்  கின்னல் விளைத்திடக் 
                 கெஞ்சுதல் சரியாமோ?- தமிழ்க்
         கேளிர்என்  றேவெறும் கிறுக்குரை  செய்பவர் 
                  கிளர்ந்தெழும்  நாள்வருமோ?-ஒரு 
          வேழ  மெழுந்தது  போலெழும் வீரர்கள் 
                   வெகுண்டிடப்  பாட்டொலிக்கும் 
          'யாழ்' மகனாம்கிரி  காசன் விரைந்திவ்  
                   வரங்கினி  லேறுகி றார்!- அவர் 
           யாதிவண்  கூறுகிறார்? சொலும் 
           சேதிகள்  தாமெவையோ?      
            
                கிரிகாசன் அரங்கேறுக, வருக, வருக! 
                
            

20

kirikasan

unread,
Apr 17, 2014, 2:23:04 AM4/17/14
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா தலைவர் அவர்களே இதோ என்கவிதை!!

அன்புடன் கிரிகாசன்

kirikasan

unread,
Apr 17, 2014, 2:39:54 AM4/17/14
to santhav...@googlegroups.com

   சக்தி வணக்கம்

திக்கெட்டும் கொட்டியே தீயெழுந்தே பற்றிச் 
சீறிப் பரந்ததய்யா -அது
எக்கெட்டதாயினும எட்டிப் பிடித்தெரித் 
தென்மனம் காக்குமய்யா
சிக்கிட்ட தாகிடின் என்தவறேயல்ல 
செய்தவள் அன்னை யய்யா - இன்று
பக்கத்தில் நீயிருந் தென்மனம் பற்றியும்
பாவினைத் தந்திடம்மா

கைக்கெட்டும் கற்பனைக் காலக் குழம்பனல்
கொட்டும் நிறங்கள் கொண்டேன் - அதில்
வைக்கட்டும் என்றன்னை வார்த்தைகள் சேர்த்தங்கு
வண்ணச் சரம் தொடுத்தேன் 
தொக்கட்டும் என்றே நற் தூயஒளி மலர்த்
தோரணம் தூக்கிவிட்டேன் - இனி
அக்கட்டும் மாலையில் ஆயிரம் மின்னெழில்
தாரகைப்பொன் னிணைப்பேன்

இக்கட்டும் ஏற்படின் என்னயல் வந்துமென்
இன்னுயிர் காத்திடம்மா - என்றும்
எக்கட்பு லம் தன்னை இட்ட ஒளித்தெய்வம் 
ஏற்றமும் தந்திடம்மா
மக்கட்கும் என்கவி மாலை யளிப்பதாய் 
மாசபை பேச்சுரைத்தேன் - இனி
கைக்கிட்டும் பொற்கவி காணவும் வேண்டினேன்
கன்னித்தமிழ் கொடம்மா

 அவை வணக்கம்

அன்பால் சபையேறி அன்னகவி யாதொன்றை
என்பால் எடுத்துவரும் போதெல்லாம் பாராட்டித்
தென்பால் உயர்வளித்தீர் தேனேசந்த வசந்தத்
தின்பால் கவியரங்கில் என்பா தரவந்தேன் 
நன்பா வளம் கொழித்த நல்லறிஞோர் கொள்அவையின் 
முன்பாய் எழுந்தென்பா முறையாய் வழங்கிடினும்
தன்பாற் தவறேந்தி வருங் கவிதையா யினிதை
அன்பாற் பிழைபொறுத்தே அடுத்ததை மனங்கொள்வீர் !


   தலைவர் வணக்கம்

அருங்கவிதை தரும் புலவர் அரங்கமதன் தலைவர்
தருங் கவிதை சுவைத்திடுமத் தருணமெனைத் தூக்கி
பெருங்கடலின் அலையாட்டும்  பாய்மர கப்பல்
இருங்களென் றிருத்தியொரு இன்னிசை ஆட்டம்
மருங்கில் விரி திரையாடி வளங்கும் நல்லின்பம்
நெருங்கி மனம் நிறைவடைய நெகிழ்வுதனைத் தாரும்
இருந்தும் இவன்ஒருகவிதை இயற்கையினைப் பாடி
வருந் தமிழைக் கூறஎன வந்தேன் என் வணக்கம் 

அரங்கக் கவிதை : எனக்குபிடித்த......
**************************************************** 
1. எனக்குப் பிடித்த கடந்த காலம்......!

(மழலை)
ஆராரோ சொன்னவளின் தாலாட்டுப் பிடித்தது
அம்புலியைக் காட்டியுண வூட்டமுது பிடித்தது
நீராடி மேல்மினுக்கி நித்திரைகொள் என்றவள்
நின்ற பசி தீர்ந்துவிட நேர்துயிலும் பிடித்தது
யாரோடி வந்தயலில் அகலவிழியை உருட்டினும்
ஆங்கவரின் கோணல்முகம் அதுஎனக்குப் பிடித்தது
சீராட்டி  மார்போடு யார் அணைத்த போதிலும்
செல்லமெனக் கொஞ்சிய என் அன்னையே பிடித்தது

(சிறுவன்0)
பள்ளிதனுக் கேகும்வழி பாதை தனில் சேர்ந்தயல்
பாடி நடை போடுமயல் பாசமுள்ள தோழரும் 
அள்ளியெடுத்தால் நிறையும் ஆசிரியர் ஆற்றலும்
அன்பொடு நல் தமிழுரைத்த அமுதக் கணம் பிடித்தது
நள்ளிரவில் பேய்கள்கதை நானறியச் சொன்னவர்
நாய்குரைக்க ஆவியென்று நடுங்கியதும் பிடித்தது
கொள்ளிவாற் பிசாசு காணக் கும்மிருட்டில் காட்டிலே
கூடியபின் மின்மினிக்கள் கையில் கொண்டோம் பிடித்தது


(இளைஞன்)
பாலிருக்கப் பழமிருக்கப் பசிஎடுக்கா வேளையில்
பாவைஉள்ளம் ஏதறியப் பட்ட பாடு பிடித்தது
காலிரண்டும் கட்டிவைத்துக் காக்கும் அந்த வேளையில்
காணவென்று கட்டுடைத்த காலமும் பிடித்தது
வாலிருக்கும் போல் நடந்து வாழ்வில்செய் குறும்புகள்  
வார்த்தையின்றி மீளவும் முன் வந்தபோது பிடித்தது
கேலிசெய்தே கூட்டமிட்டுக் கேளிக்கை புரிந்த வர் 
கேடுமற்ற தானபள்ளித் தோழமை பிடித்தது

முதுமை)
நாட்டினில்பன் மொழிபடித்து நானுமதைப் பேசவும்
நல்லினித்த தேன்தமிழை நாடிஉள்ளம் சென்றது
வீட்டினிலோ பேச்சினிலே வேண்டியெழா மோகமோ
நாட்டினிலே நாகரீக மாற்றத்திற் பிடித்தது
ஏட்டினிலே வ0ரைகவிதை எவர் எடுப்பர் இதையென
ஏற்றமின்றிக் காற்றில்விட்ட ஏழ்மையும் பிடித்தது 
கூட்டினுள்ளே உயிரிருக்கும் காலம்வரை தாய்மொழி
குவலயத்தில் வேறுஇல்லை கொள்ளையாய் பிடித்தது


( முதல் பகுதிக்குப் பதிலாக முதலில் கீழ்வருவதை எழுதியிருந்தேன். விலக்க மனமின்றி தருகிறேன்)

2. எனக்குப் பிடித்த கடந்த காலம்

மழலையாக:

ஆராரோ பாட்டிசைக்கப் பிடித்தது - என்
அன்னைகுரல். தாலாட்டப் பிடித்தது
சீராட்டிப் போட்ட தொட்டில் பிடித்தது - அது
செல்லும் விதம் அங்கும் இங்கும் பிடித்தது
நீரோடும் விழிகளாகி அழுதிட -எனை
நெஞ்சோடு அணைத்த விதம் பிடித்தது
மாரோடு சேர்த்தணைப்பால் ஊட்டவும்- அவள்
மடியினிலே கண்டசுகம் பிடித்தது 

கார்மேகத் தொலைவில் காணும் குருவிகள் அவை
கத்துமொலி  கேட்டுறங்கப் பிடித்தது
தேரோடும் வீதியிலே தேவதை - வந்து
தீந்தமிழில் பாடுமொலி பிடித்தது
போராடி நீர்வழிந்தபோதிலும் - அன்னை
புன்னகைத்து பேசும் விதம் பிடித்தது
கூரோடும் விழியுருட்டிக் காண்கையில் -அக்
குறுகியஎன் னுலகம் மட்டும் பிடித்தது

நாளாக நூல்படிக்கப் பிடித்தது அந்த
நறுஞ் சுவைத்தேன் தமிழினிக்கப் பிடித்தது
தோளோடு தோள் இணைத்து நண்பர்கள்  கூடித்
தோன்றும் இள்ம் பருவம் அன்று பிடித்தது
வாளாக விழிகள் குத்தப் பிடித்தது அதில்
வாழ்க்கையெனும் புதிய அர்த்தம் பிடித்தது 
பாழாகி இள்மை கெட்டபோதிலே இந்தப்
பாடும்தொழில் பரவசமாம் பிடித்தது

ஓடும் வாழ்வில் துன்பம் வந்து பிடித்தது என்
உள்ளுணர்வை மோகம் கட்டிப் பிடித்தது
ஆடும் வகை நோயுடலை பிடித்தது - அதில்
அச்சம் வந்து உள் மனதைப் பிடித்தது
தேடும் விழி தெய்வம் காணத் துடித்தது அந்தத்
தேவி சக்தி வந்து என்னைப் பிடித்தது
நாடும் மனம் நல் வழியை பிடித்தது - பின்
நான் விரும்பும் வாழ்வு கண்டேன் பிடித்தது

3. எனக்குபிடித்த இயற்கை

மலைமுகட்டில் நிலவு நின்று மன்னவனாம் புவியை
மறைமுகிலின் திரைவிலக்கி மெல்ல எட்டிப்பார்க்கும்
கலைவடியும் ஒளிபரந்து காண மரத் திலைகள் 
கண்டபடி கதையுரைத்து கலகலத்துச் சிரிக்கும்
அலையெழுந்ததே ஆர்ப்பரிக்கும் அடக்கமற்ற பெண்ணாய்
அதிவிரைந்து கரையடைந்தும் அல்லலுற்று மீளும்
குலை யிழந்த கனியெனவே கொள்ளொருவர் இன்றி
கொடுமை சின்னஞ்சிறு வயதர் குழம்பி மனம்சோரும்

தனமிழந்த ஒருவன்போலத் தாழ்ந்து வீசுங்காற்று
தனிமையிலே இனிதிலையென் றுடல் தடவி ஓடும்
மணமெழுந்த நிலையிலாடி மயங்க எம்மை தொட்டும்
மதுவின் போதை இல்லையென்று புழுதியள்ளி வீசும்
கனமிழந்த நெஞ்சினோடு கனிவுவரும் என்று
கருதிவான வெளியிலோடிக்கலையும் மேகம் சொல்லும்
பனியெழுந்து குளிர்இரவில் பச்சைப்புல்லைச் சேரும்
பகல் பிறக்கப் பனியுலர்வில் புல்நுனி நீர் சிந்தும்

குளிர்ச் சுனையும் கொடிமலரும் குங்குமத்து வண்ணம்
கொண்ட மலர்த் தாமரையும் குள அலையின் சத்தம்
வெளியலையும் வீசுமிளம் விண்பரந்த காற்றும்
விடுதலையென் றுலகமெங்கும் வலம்வருவெண் முகிலும்
தளிர் அழகும் தவளைகளும்  தங்கும் எழிற்சோலை
தனிமையிலும் தருங்கனவும் தாவும்மனங் காணும்
ஒளிர்கனவும் உரைதமிழும் உன்னதமாம் கண்டேன்
உலகமதில் இயற்கைதனை உரைக்கும் `கவி மேன்மேல்


 4. எனக்குபிடித்த உண்ர்வுகள்

செந்நெல் விளைநிலத்தில்  செங்கரும்புத் தோட்டமதில்
என்னை நிலைநிறுத்திப் பார்க்கிறேன்
பொன்னென் கதிர்வளர்ந்து பூமியினைத் தொட்டழகைப்
போய்வருடும் காற்றொலியைக் கேட்கிறேன்
மன்னன் நடந்துவரும் மாஅதிர்வாய் ஆனையொன்று
மண்டபத்துக் கோவிலடி காண்கிறேன்
தென்னங் குலையிளங்காய் தீய்க்கும்வெயில் வேளையிலே
தின்றேகுடித்த சுகம் துய்க்கிறேன்

எண்ணம் நிறைந்தபொருள் எட்டவும்நல் ஏந்திழையார் 
ஏற்றுமவள் கண்ணகியின் ஆலயம்
அண்மையிலோர் தண்சுனையும் ஆடும் அரவிந்தமுடன் 
அல்லியிடை சந்திர விம்பமாகவே
வெண்ணை கொடியிடையார் வேடிக்கையாய் நர்த்தனமும்
வீதி நிறை கோவில் விழா கூட்டமும்
கண்ணை காண்காட்சியிலே கையிழந்து வீட்டதெனக்
கலங்கியவர் கண்டும் மெல்லச்சிரிகிறேன்

வண்ணக்குழம்பெடுத்து வானமெனும் வெண்திரையில்
வட்டநிலாப் பொட்டுவைத்த தூரிகை
எண்ணக் கனவுகளை ஏன்வரைந்து கொண்டதுவோ
இல்லையங்கு நல்வளங்கள் ஏங்கினேன்
மண்ணில்நல் நீரிறைத்து மரம்செடியும் பயிர்வளரும்
மாண்புதனை அதிசயத்தால் காண்கிறேன்
அண்மையென வருமொருத்தி விழிமருளும் தனிமையெனில்
விளைந்ததென்றன் ஆண்மையென்று மகிழ்கிறேன்

சாலையோரம் காற்றெழுந்து சற்றிலைகள் நீவிவிட
சத்தமிட்டே ஆடும்மரம் பேய்களோ
மாலையிருள் முன்கவிய ,மாமரங்கள் ஆடிநிற்க
மஞ்சள் வெயில்  கோலமிட்ட காட்சியோ 
சோலைமரக் கூடலிலே சுற்றி யிருள் கண்மறைக்க
சூடுகொண்ட கொள்ளிவாய் பிசாசெழும்
மேலைவானுக் கேகஉயிர் மெய்யெரிக்கும் சாம்பல்மேட்டில்
மீதினில்ப்பேய் கூடியாடும் தேடினேன்

ஏழையிவன் காணவென்றே எட்டிநடை போட்டுமெந்த
இடத்திலும்யான் கண்டதில்லை ஆயினும்
ஆளையடித் தாட்கள்கொல்லும் அசுரவகைப் பேய்களின்று
அறமழித்து ஆடுவதைக் காண்கிறேன்
வேளையிது சக்திதனை வேண்டுகிறேன் இயற்கையெனும்
விதமிவரைப் படைத்ததுவும் ஏனம்மா
கோழையல்லத் தமிழ் இறக்க கூட்டிஉரம் தீரமிடு
கொண்டநிலம் மீட்கவென்று வாழ்த்திடு


5. எனக்குப் பிடித்த தாய்நிலம்!
  
கள்ளுண்டு வண்டினங்கள் களி மிகுந்துஏகும்
கன்னியர்கள் மின்னும்விழி கருமைகொண்டுகாணும்
எள்ளுண்டு நெல்கொறித்து எலிகளோடிச் செல்லும்
இசைபடிக்க வீணையொலி எங்கிருந்தோ கேட்கும் 
உள் ளிருந்து பல்லியொன்று இச்செனவே கூறும்
ஓடிவந்து திமிர்பிடித்த சேவல் நின்று கூவும்
வள்ளெனவோர் நாய்குரைக்க வாசல் வந்துபார்க்க
வழியறியா கன்றுவந்து அம்மாவைத் தேட

தம்மையருள் செய்யுமென்று தூவிமலர் போற்றி
தண்பொழில் சேர் தெய்வநிலை தன்நிரையில் மாந்தர்
அம்மையவள் சக்திதனை வேண்ட சிவன் பாதி 
ஆக்கியிணை சேர்ந்தநிலை அதிபெருந்தீ சக்தி
தம்மில்இதைபோல மனமொன் றிணையும்போது
தங்குமெழில் வாழ்வுஎன சதிபதிக்கு கூறும்
இம்மையிலே சொன்னஅறம் இதைவிடுத்த மக்கள்
இன்னலென இல்லறத்தில் இடர்விளையக் கண்டார்

செம்மலர்கள் சிலுசிலுத்துச் சிதறலைநீர் கொட்டும்
சேர்கயலும் துள்ளிவிழச் சின்ன அலையோடும்
கும்மியடித் தாடும் இளங் குமரிகளின் கூச்சல்
குடிமனைகள் பலநெருங்கிக் கூட்டமெனக் காணும்
உம்மெனவோர் பாக்கிடித்து உரல் குடையும் ஆச்சி 
உருட்டி அதைவாய் குதப்பி உமிழ்ந்து விடும்காட்சி
அம்மழலைச் சிறுவர்வழி அழுது பள்ளிஏகும்
அரியவளம்கொண்ட தெங்கள்  அன்னைதமிழீழம்

நிம்மதியைத் தாரும்விழி நினப்பினிலே வேட்கை
நிலையடையச் செய்வதன நேர்விழிகொள் நங்கை
தம்மனதை இழந்து விடத் தனிமை தரும்துக்கம்
தாங்கி நகை சிந்துகையில் தரும்வெறுமை ஏக்கம்
இம்மெனவே ஏறிவண்டி இருந்தோட்டும் காளை
எடுத்த அடி தாளமிட எருதோடும் அழகு
செம்மை யடி வான்கலந்த சிறுகுருவிக் கூட்டம்
சிந்தனைகள் பொன்வளங்கள் சேர்க்கும்வழி நோக்கும்

கும்மிருட்டைகொன்ற ஒளி, குருதி சிந்த வானில்
குதித்ததெனக் கீழடிவான் கொடுஞ்சிவப்பில் ஊறும்
வெம்மை விளைந் தெங்குமொளி வீறெழுந்து பாய
வட்டநிலைப் பொற்பரிதி வானெழுந்து தாவும்
செம்மையுறக் கற்பொழியும்  சிற்பியின் கைவேகம்
செதுக்குமுளி நாதமிடச் சில்லெனு முணர்வாகும்
இம்மையிலே பெற்ற வரம் இதுவெனவே எண்ணி
ஏங்கும் மனம் கலைமகனை இருகரங்கள் கூப்பும்

சம்மதமா என்றுமலர் சார்ந்த நிலைகாணா
சரசமிடும் தேனளைவண் டங்கிருந்தே உண்ணும்
கும்..மாளம் போடுங்கவி  கொண்டகிளை தாவ
குடியிருந்த கூடுவிட்டே குருவி பறந்தோடும்
எம்மனங்கள் இன்பமிட இளையதென்றல் வீசும்
இருந்தஅலர்ப் பூஅளைந்து இயற்கைமணம் கொள்ளும்
அம் மணங்கள் தந்துலகில் ஆடவரும் பெண்கள்
ஆசைமனம் பொங்கியெழ அதுவருடிச் செல்லும்

இம்மை கண்ட வாழ்விலெங்கு மினிமை யென்றிருந்தோம்
இயற்கையெனும் இனிய வளமெங்கும் கண் டலைந்தோம்
எம் மதங்கள் பகை,பிரிவு இல்லையென்று வாழ்ந்தோம்
எடுகரங்கொள் இயல்பணியில் என்றும் அன்பு கொண்டோம்
பம்பரமாய்ச் சுற்றும் புவி பேர்புகழைக் காணும்
பார்த்திருக்கப் பூமலர்ந்து பட்டு வெம்மை சாகும் 
சிம்மம் எனும் சீரளிவு சேர்ந்ததனால் குடிகள்
சீரழிந்தே போகும்நிலை சேர்வளங்கள் மீட்போம்

||(நன்றிகள்)

Kavingar Jawaharlal

unread,
Apr 17, 2014, 5:39:55 AM4/17/14
to santhavasantham
நன்று கிரிகாசன் !


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119

Pas Pasupathy

unread,
Apr 17, 2014, 7:57:01 AM4/17/14
to santhav...@googlegroups.com
என் கவிதையைப் பாராட்டிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.


2014-04-17 1:36 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
  எழுதுகோல் தெய்வம்  இந்த எழுத்தும்  தெய்வம் என்ற மகாகவியின் 
எதிரொலி (எதிர்க்காத  ஒலி!)  நம் பேராசான்  பசுபதியின் கவிதையில்
ஒலித்தது. நாட்டுமக்கள் பிணியும்   வறுமையும் 
                       நையப்பா  டென்றொரு  தெய்வதங்  கூறுமே 
                  கூட்டி மானுடச் சாதியை  ஒன்றெனக் 
                         கொண்டு வையம் முழுதும் பயனுறப் 
                  பாட்டிலே யறங்  காட்டனு மோர்தெய்வம்!' 
    
என்ற தர்மாவேசம்  பசுபதியார்  பாடல்களில் கொதித்துக்  கிளம்புகிறது.
அவர் கூறும் வழியில் பாட்டெழுதும் ஆவல் பெருகுகின்றது. 


Swaminathan Sankaran

unread,
Apr 17, 2014, 8:10:54 AM4/17/14
to santhav...@googlegroups.com
இரண்டு பகுதிகளுமே மிக நன்றாக இருக்கின்றன, கிரிகாசன்.

சங்கரன்


2014-04-17 2:23 GMT-04:00 kirikasan <kana...@gmail.com>:
நன்றிகள் ஐயா தலைவர் அவர்களே இதோ என்கவிதை!!

அன்புடன் கிரிகாசன்

--




--
 Swaminathan Sankaran

ramaNi

unread,
Apr 17, 2014, 9:33:52 AM4/17/14
to santhav...@googlegroups.com
இன்னதென்று இனமறியா இனியபல உணர்வுகளை நினைவுகளை
உன்னதமாய் எழுத்தோவியத் தூரிகையில் வரைந்ததுவே உம்கவிதை!
மன்னுதமிழ்ச் சொற்களிலே இசையினிலே உணர்வுகளை அலையலையாய்ச்
சொன்னவிதம் சமுத்திரம்போல் சொக்கவைத்தே அசத்தியதும் சொற்களிலே!

--ரமணி, 17/04/2014

*****

kirikasan

unread,
Apr 17, 2014, 10:20:21 AM4/17/14
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா, தங்கள் வாழ்த்தை மனமுவந்து ஏற்றேன்

kirikasan

unread,
Apr 17, 2014, 2:46:35 PM4/17/14
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா !  அன்புடன்
கிரிகாசன்

kirikasan

unread,
Apr 17, 2014, 2:47:43 PM4/17/14
to santhav...@googlegroups.com
தங்கள் பாராட்டுக்கு என் மனமுவந்த நன்றிகள்!
அன்புடன்
கிரிகாசன்

Pas Pasupathy

unread,
Apr 17, 2014, 5:05:06 PM4/17/14
to santhav...@googlegroups.com

தடங்கல் இன்றிப் பாய்ந்த
கடந்த காலக் கவிதை
நடையில் பொருளில் சிறந்து 
படகாய் இசையில் மிதந்தது! 

பசுபதி


2014-04-17 2:39 GMT-04:00 kirikasan <kana...@gmail.com>:

**************************************************** 
1. எனக்குப் பிடித்த கடந்த காலம்......!

(மழலை)
ஆராரோ சொன்னவளின் தாலாட்டுப் பிடித்தது
அம்புலியைக் காட்டியுண வூட்டமுது பிடித்தது
நீராடி மேல்மினுக்கி நித்திரைகொள் என்றவள்
நின்ற பசி தீர்ந்துவிட நேர்துயிலும் பிடித்தது
யாரோடி வந்தயலில் அகலவிழியை உருட்டினும்
ஆங்கவரின் கோணல்முகம் அதுஎனக்குப் பிடித்தது
சீராட்டி  மார்போடு யார் அணைத்த போதிலும்
செல்லமெனக் கொஞ்சிய என் அன்னையே பிடித்தது


Siva Siva

unread,
Apr 17, 2014, 5:31:25 PM4/17/14
to santhavasantham
நான் இட்ட பாடலைப் படித்துக் கருத்துச் சொன்ன அன்பர்கள் அனைவர்க்கும் என் வணக்கம்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2014-04-16 1:16 GMT-04:00 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>:
சிவா வின் பாடல்கள் அருமை.
2014-04-15 22:00 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:

ந்தவசந்தக் கவியரங்கம்-40 - "எனக்குப் பிடித்த ...."
2014-04-12
 

Siva Siva

unread,
Apr 17, 2014, 5:37:48 PM4/17/14
to santhavasantham
மடை திறந்த வெள்ளமெனப் பாடல்கள் பெருக்கெடுத்து ஓடுகின்றன!

/5. எனக்குப் பிடித்த தாய்நிலம்!
  
கள்ளுண்டு வண்டினங்கள் களி மிகுந்துஏகும்
கன்னியர்கள் மின்னும்விழி கருமைகொண்டுகாணும்
எள்ளுண்டு நெல்கொறித்து எலிகளோடிச் செல்லும்
இசைபடிக்க வீணையொலி எங்கிருந்தோ கேட்கும் 
உள் ளிருந்து பல்லியொன்று இச்செனவே கூறும்
ஓடிவந்து திமிர்பிடித்த சேவல் நின்று கூவும்
வள்ளெனவோர் நாய்குரைக்க வாசல் வந்துபார்க்க
வழியறியா கன்றுவந்து அம்மாவைத் தேட/

இனிய வர்ணனை.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2014-04-17 2:39 GMT-04:00 kirikasan <kana...@gmail.com>:

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 17, 2014, 5:46:41 PM4/17/14
to சந்தவசந்தம்

எண்ணச் சுரங்கத் திருந்து பிடித்தபல 

வண்ண நினைவுகளை வார்ப்பெடுத்துக் 

கண்முன்னே காட்டினார் நன்கு. 


அனந்த் 17-4-2014

... வரும் 4 நாட்களில் வெளியூரில் இருப்பேன், இங்கு வரலியலாமல் போகும்.



2014-04-17 2:39 GMT-04:00 kirikasan <kana...@gmail.com>:

   

அரங்கக் கவிதை : எனக்குபிடித்த......
**************************************************** 
1. எனக்குப் பிடித்த கடந்த காலம்......!

(மழலை)
ஆராரோ சொன்னவளின் தாலாட்டுப் பிடித்தது
அம்புலியைக் காட்டியுண வூட்டமுது பிடித்தது
நீராடி மேல்மினுக்கி நித்திரைகொள் என்றவள்
நின்ற பசி தீர்ந்துவிட நேர்துயிலும் பிடித்தது
யாரோடி வந்தயலில் அகலவிழியை உருட்டினும்
ஆங்கவரின் கோணல்முகம் அதுஎனக்குப் பிடித்தது
சீராட்டி  மார்போடு யார் அணைத்த போதிலும்
செல்லமெனக் கொஞ்சிய என் அன்னையே பிடித்தது

(
செம்மை யடி வான்கலந்த சிறுகுருவிக் கூட்டம்
சிந்தனைகள் பொன்வளங்கள் சேர்க்கும்வழி நோக்கும்


Subbaier Ramasami

unread,
Apr 17, 2014, 8:49:46 PM4/17/14
to சந்தவசந்தம்
கிரிகாசன்,

எதைப்பாராட்டுவது, எதை விடுப்பது என்றே தெரியவில்லை. எல்லாமே அழகு.   
எல்லாவற்றிலும் இயற்கை வர்ணனை எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது.



நள்ளிரவில் பேய்கள்கதை நானறியச் சொன்னவர்
நாய்குரைக்க ஆவியென்று நடுங்கியதும் பிடித்தது-  நல்ல நயம்

செம்மையுறக் கற்பொழியும்  சிற்பியின் கைவேகம்--- கற்பொளியும் வேகம்

பொளிதல் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். அகராதியிலும் பார்த்துவிட்டேன்

கோவில் விழா கூட்டமும்-- விழாக் கூட்டம்
கொள்ளிவாய் பிசாசெழும்- கொள்ளிவாய்ப் பிசாசெழும்
 கோழையல்லத் தமிழ் இறக்--- த்  தேவையில்லை என நினைக்கிறேன்
சிம்மம் எனும் சீரளிவு சேர்ந்ததனால் குடிகள்
சீரழிந்தே போகும்நிலை சேர்வளங்கள் மீட்போம்

சீரளிவு- சீரழிவு - இரண்டுக்கும் வேறுபாடு என்ன

பாழாகி இள்மை கெட்டபோதிலே இந்தப்
பாடும்தொழில் பரவசமாம் பிடித்தது-- மிக அருமை

அண்மையென வருமொருத்தி விழிமருளும் தனிமையெனில்
விளைந்ததென்றன் ஆண்மையென்று மகிழ்கிறேன்-- அருமை


வாழ்த்துகள்

இலந்தை


--

Subbaier Ramasami

unread,
Apr 17, 2014, 10:20:44 PM4/17/14
to சந்தவசந்தம்

good

Chandar Subramanian

unread,
Apr 17, 2014, 11:16:54 PM4/17/14
to santhavasantham
எப்போதும் போலவே உங்கள் பாடலின் சந்தம் மிக அழகு. 

தாலாட்டுப் பாட்டும் தளராத ஓட்டமும்நல்
கோலச் சிரிப்பழகும் கொண்டதெதோ - கோலோச்சும்
ஞாலத்தில் மாந்தர் நயந்து புகழ்வதெல்லாம்
பாலர் பருவமொன்றே பார்


2014-04-17 12:09 GMT+05:30 kirikasan <kana...@gmail.com>:

1. எனக்குப் பிடித்த கடந்த காலம்......!

(மழலை)
ஆராரோ சொன்னவளின் தாலாட்டுப் பிடித்தது
அம்புலியைக் காட்டியுண வூட்டமுது பிடித்தது
நீராடி மேல்மினுக்கி நித்திரைகொள் என்றவள்
நின்ற பசி தீர்ந்துவிட நேர்துயிலும் பிடித்தது
யாரோடி வந்தயலில் அகலவிழியை உருட்டினும்
ஆங்கவரின் கோணல்முகம் அதுஎனக்குப் பிடித்தது
சீராட்டி  மார்போடு யார் அணைத்த போதிலும்
செல்லமெனக் கொஞ்சிய என் அன்னையே பிடித்தது


Ramamoorthy Ramachandran

unread,
Apr 18, 2014, 12:59:17 AM4/18/14
to santhav...@googlegroups.com
வணக்கம்  கிரிகாசன் கவிதை படித்துப் பின்னூட்டம்  கொடுத்தவர்களைப்
பாராட்டுகிறேன். இலந்தையார்  பொளிதல்  என்ற சொல்லுக்குப் பொருள் தேடிப் 
பாராட்டினார். சொற்கள் மரபின் வழிமுறைகள் ; அவற்றை இயன்ற வரை 
தாய்மொழியில் எழுதுவது தமிழ்த்தொண்டு. இதை ஆங்கிலத்தில் diction 
என்று போற்றுவர். 
   பொளிதல் = உளியால்  செதுக்குதல் செதுக்காமல் தானே உருவான 
தெய்வச்சிலை ''தான் தோன்றி '' என்பார்கள். தாந்தோணி என்று அது மருவும் 
டங்கம் என்ற வடமொழிச் சொல் உளிபட்டது என்று பொருள் தரும்  உளி 
படாமல் தோன்றிய சிவன் திருமேனி விடங்கத்திருமேனி  எனப்படும்.
திருநாரையூர்  ''பொள்ளா''ப்  பிள்ளையார் நம்பியாண்டார் நம்பி  வழிபட்ட 
இறைவன். தேவாரம் தந்தவர் பொல்லாப் பிள்ளையார் என்பது சைவம்.

         மன்னிக்கவும் பழக்கதோஷத்தில் பாடம் நடத்தி விட்டேன் . இனி 
அடுத்து வரும் பெருங்கவிஞர் சிங்கப்பூர் பொறியாளர் சிவத்திரு அ. கி. வரதராஜன் 

          சைவத்தின்   சிறப்பியல்பைத்   தாம்உ  ணர்ந்தும்
                 தணியாத  தமிழார்வம்  தன்னைக் கொண்டும் 
           கைவல்யம்  எனும்சிவத்தின்  கருத்தை தேர்ந்தும் 
                  கவிதையிலே சிவனடியார் திறம்கற் பித்தும்
           மெய்த்தொண்டர்  மூவர்தமை  வெண்பா வாலே 
                   விளக்குகின்ற  ''ஒப்பிலா மூவர் '' என்னும் 
            தெய்வப்பா  வந்தாதி    செப்பி    நாடே  
                     சிறப்பிக்கும்   சிவத்தொண்டர் வரத  ராஜன்.

            கைவந்த  பாட்டிலெலாம்   காவி  யத்தின்  
                      கமழ்மணத்தைத்  தேக்குகின்ற  கவிஞ  ராவார்!
             செய்கின்றார் தமிழ்ச்சேவை  இணையம் இ.;. தில், 
                       தேர்ந்து,''எனக்குப்   பிடித்த..'' எனும்  தலைப்பில், நம்தம் 
             ஐயமெலாம்  தீர்த்திடநல்  அறிவை ஊட்ட 
                        அரங்கத்தில் ஏறுகின்றார்! அகிலத்  தாரை 
             உய்விக்கப்  போகின்றார்! .அவரைப் போற்றி 
                        உடன்பொழிக  மழைஎனவே   வேண்டி னேனே!

           அ. கி. வ. வருக  அருமைப்பாப்  பல(ன் )தருக!.      
                அன்புடன் புலவர் இராமமூர்த்தி 



--

kirikasan

unread,
Apr 18, 2014, 3:38:14 AM4/18/14
to santhav...@googlegroups.com

ஐயா என்னையும் இச்சபையில் ஒரு கவிஞனாக ஏற்றுத் தந்ததை பாராட்டிய அனைவருக்கும் மற்றும் அனைத்தினருக்கும் மிக்க நன்றியைக்கூறி (மிகுதி சான்றோரை தனித் தனி அழையாமைக்கு  மன்னித்துக்கொள்ளவும்)
வழக்கம்போல் ஒரு கவிதையினால் என் நன்றியையும் மன உணர்வுகளையும் பகிர்ந்து கொள்கிறேன்
இலந்தை ஐயாவின் வழிகாட்டலை  நன்றியோடு ஏற்று அதற்கான செம்மை யிடுதலை செய்து தருவேன்

  மகிழ்ச்சியே  !

பொன்னெடுத்த மேனியா மின்னெடுத்த கைகளா
புல்லரிப்பதென்ன ஆண்டவா
தன்னடுத்த பாதியை தந்துமைக்கு ஆடுவன் 
தன்னிகர்ந்த தாக ஆடவா
மன்னெடுத்த மாமுடி மல்லனின் கைக்கேடயம்
மங்கையற்கு மாலைமாங்கல்யம்
அன்னதை எடுத்தவோர் ஆனந்தக்களிப்பிலே
அங்கமும் வளைத்துஆடவா

தென்னையும் எடுத்ததாய் தூரமும் வளர்ந்திடும்
தேகரூபமான கற்பனை
தன்னதோர் குறுந்திண்ணை சாய்ந்துதான் கிடப்பினும்
தேவலோக ஆடல் மங்கையர்
இன்னிசைக்கும் பாணர்கள் ஏற்றதை முழக்கிட 
ஊர்வசிக்கும் ரம்பை ஒத்ததோர்
நன்சுவைக்கும் நாட்டியம் நான் நினைத்துக் கொள்கிறேன்
நல்லவர் தம்நாவின் சொற்புகழ்

பன்மையென் றிருக்கையில் பாடினுமிப் பாமரன்
பாதியில் எடுத்த பாதியை
இன்னுமோர் உடைப்பினில் பாதியாக்கி மீதியைப் 
பாதியா யுடைத்துப் பாதியை    
அன்னதோர் மதிப்பிறை ஆகிடச் சிரத்திடை
ஈசனென்று எண்ணிச் சூடுவன்
தன்னலை கொள்கங்கையை தாவிடும்பிர வாகத்தை
கண்ணிலே இருக்கவிட்டவன்

மென்னுருள் அலைக்கிடை கொள்கவித் தடாகத்தில்
மெச்சிடும் சொற்காற்று வீசிட
தென்னவன் தனையருள் தேவையென் றேற்றிய
தன்மையாம் குணத்தில் ஆனதோ
நன்னலைக் குளத்தினில்  நானுமோர் வெண்டாமரை
நர்த்தனத்தில் நாளும் காண்கிறேன்
அன்னையாம் `தமிழ்க்கவி சொல்லென்றே யெனை மடி 
இட்டுமே தாலாட்டும் செய்கையோ!


என்னதான் ஆடினும்,  இன்பமே இன்பமே!!!!

நன்றிகள்!

kirikasan

unread,
Apr 18, 2014, 4:43:40 AM4/18/14
to santhav...@googlegroups.com
இலந்தைஐயா அவர்களுக்கு நன்றிகள் அன்போடு  பாராட்டுகள் ஈந்தமைக்கு

பொளிதல் ஏற்றுக்கொண்டேன்  பொழிதல்  - மழை பொழிதலுக்கு வரும்
சீரழிவு   சரியானது

மற்றும் எழுத்து தவறுகளை கவனத்தில் ``கொள்கிறேன்
பாராட்டுதலுக்கு நன்றிகள்

Vis Gop

unread,
Apr 18, 2014, 7:57:14 AM4/18/14
to santhav...@googlegroups.com
இலந்தையின் கவிநயம் இனிது!

நானில்லா உள்ளத்தில் நாலும் பிறந்துவரத்  
தேனாய்ச் சுவைத்தும் தெவிட்டாது! - யோனிக் 
கலப்பற்ற பிள்ளைநும் கையில் கிடைத்த 
நலப்பே(று) அடைந்தீரே நன்கு!

சீதை சனகனின் செல்லப்பெண்; அஃதேபோல் 
கோதையும் ஆழ்வார் கொழுந்தன்றோ! - பாதை 
அருளுற்றால் கிட்டும் அருஞ்செல்வம்; உள்ளம் 
செருக்கற்றால் எல்லாம் திரு!  

உன்னுள் விளைந்ததுவோ உன்கவிதை; ஆராசான்?
தென்பட்டுத் தோன்றாத சிற்பியவன் - இன்பம் 
இயற்றிக் களைக்காமல் இன்னும் நிறைப்பான் 
சயவீரன் சாகசச் சாது!

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

 ------------------

என்ன பேரோ தெரியாது,

       எங்கே வாசம் அறியேன் நான்

என்ன மொழியோ அவன்மொழியும்

       இதுவும் எனக்குத் தெரியாது,

சின்ன உருவா, பேருருவா

       சிவாப்பா வெளுப்பா தெரியாது.

என்னைக் கவியால் ஈர்க்கின்றான்

       என்னுள் கவிதை வார்க்கின்றான்

 

kirikasan

unread,
Apr 18, 2014, 9:49:56 AM4/18/14
to santhav...@googlegroups.com
பன்மையென் றிருக்கையில் பாடினுமிப் பாமரன்
பாதியில் எடுத்த பாதியை
இன்னுமோர் உடைப்பினில் பாதியாக்கி மீதியைப் 
பாதியா யுடைத்துப் பாதியை    
அன்னதோர் மதிப்பிறை ஆகிடச் சிரத்திடை
ஈசனென்று எண்ணிச் சூடுவன்
தன்னலை கொள்கங்கையை தாவிடும்பிர வாகத்தை
கண்ணிலே இருக்கவிட்டவன்

சாதாரணத்திலும் பார்க்க  பாதியாக இருப்பதை பாதியைஎடுத்து அதைஉடைத்து பாதியாக்கி ஒருபகுதியை எடுத்து அதை மீண்டும் பாதியாக்கி அந்த அளவேயான குறைநிலவுக்கொத்த  மதியை (புத்தியை) தன் தலையில்  கொண்டதால் இவனும் ஈசனின் செயலை ஒத்தவனாகிறான். (வேறு யார் நான்தான்)

Ramamoorthy Ramachandran

unread,
Apr 18, 2014, 10:50:37 AM4/18/14
to santhav...@googlegroups.com
மதியில்  பாதியில் பாதியில்  பாதியை 
  அதிலும் பாதியை  மதிஎன் றணிந்தவர் 
முதிய கிரிஎனும்  மலையில் சிரிப்பினால் 
   முப்பு ரந்தனை முடிகிரி ஹாசனாய்
புதிய பேருடன்  பொழிகிறார்  பாடலை! 
    போற்றிப் பாடி,''பாப்  புய''லென்று  வாழ்த்துவோம்!
எதிலும் வெற்றியே  ஈந்திடு வாயென 
     எங்கள்  சக்தியை  ஏத்திவ ணங்குவோம்!

எழுத்தி லேநடம்  ஆடிடும்  எம்மனை! 
      எண்ணத்  தில்நெருப்  பேற்றிடும் ஏந்திழை! 
கழுத்தில்  ஆடர  வாடிட  ஆடுமுக் 
       கண்ணன்  மேனியில் பாதியைக்  கொண்டவள்! 
பழுத்த  புலமையர்  பாடலை உண்மையாய்ப் 
       பாலித்  தேநில   வாகி   எழுந்தவள்!
வழுத்த  வாயையும் வணங்கத் தலையையும் 
       வைத்துப் பெற்றெடுத்  தாள்இவன் தன்னையே!

எப்ப   டிப்புகழ்   வேனோஅ   வள்திறம்?
      எப்ப  டிப்பணி  வேனோஅ  வள்பதம்?
எப்ப  டிவ்வழி  பாடுகள்  செய்வெனொ?
       எப்படி அலங்  காரமும்  செய்வெனோ? 
எப்ப  டியெனை  அம்மை  அணைப்பளோ?
       எப்ப  டியவள்  இன்னமு  தீவளோ?
எப்ப,  டீ!யென  யானுமே  கேட்பெனோ?
       எப்ப  டீ! அதை  என்தோழீ, சொல்லடி!   
        
 இப்ப  டிப்பல பாக்கள்ப  டைத்திடும்
         எண்ணத் தைஉரு வாக்கு திவன்தமிழ்!
 செப்ப  டிசெயும்  பாப் பல தந்தவன்   
          திறத்தை வாழ்த்தியே ஆசிகள்  கூறுவோம்!

நன்றி  அடுத்த கவிஞர் திரு அ. கி. வ. அவர்களுக்கு 
அழைப்பு விடுத்து  விட்டேன்! நன்றி அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

--

Girija Varadharajan

unread,
Apr 18, 2014, 1:20:03 PM4/18/14
to santhavasantham
சந்த வசந்தக் கவியரங்கம்
தலைப்பு : எனக்குப் பிடித்த .........    ..........
தலைவர் : புலவர் இராம மூர்த்தி.
படைப்பவர் : வரதராசன். அ.  கி.
நாள் : ஏப்ரல் -18 - 2014
=========================================================
எனக்குப் பிடித்த ..........        ..........
 
இறை  வணக்கம் .

ஏலுதல் என்ப  தாக என்னிடம்  ஏதும் இல்லை,
மாலவன் மருகா என்னை  மனமுவந்  தென்றும்  காப்பாய்.
கோலமாய் இங்கு பாக்கள் கூறிட  வழியைக்  காட்டு.
வேலவா அரங்கில் வெல்ல  வேண்டுவேன் உன்றன்  கூட்டு.


அரங்கத் தலைவருக்கு வணக்கம்:

பலவிதத் திறமை கொண்ட  பண்டிதர் இவரும் ஆவார்.
நலமிகக் குழுமம் காண  நடத்துவார் அரங்கம் தன்னை.
தலைவராய் அமர்ந்தார்  இங்கே. தமிழ்மொழி சிறப்பாய்க் கற்றுப்
புலவராய்ப் பெருமை பெற்றார். புகலுவேன் வணக்கம்  முன்னர்.

அவையோருக்கு வணக்கம்.  

மீனவன் தேயம் தந்த  மேதையாம் எங்கள் வேழம்,
ஆனையான் நாமம் பாவில் ஆயிரம் முறைகள்  தோன்றத்
தேனடை தன்னை விஞ்சத்  திகட்டிடாப்  பாக்கள் பெய்வார்.
தானையின் தலைவர் ஆனார்.  தாளினில்  பணிந்து  வீழ்வேன்.

வானமே எல்லை என்று வகுந்தநல்  ஆற்றல்  கொண்டார்,
ஊனினை உருக்க வைக்கும் ஒப்பிலாப் பாக்கள் யாப்பார்.
ஏனையோர்  பலரும் உள்ளார்;  இயம்பிட இடம்தான் இல்லை.
கூனுடை யானும் இங்கு  குனிந்தவர் பாதம் வீழ்வேன்.

பாட்டரங்கப்  பாக்கள் - எனக்குப்  பிடித்த  .......   ........

பிடித்தது  பற்றி இங்கு  பேசிட வருவாய் என்றே
அடித்தனர்  மணியை  ஓங்கி. அரங்கினில் நுழைந்தேன் யானும். 
படித்தவன்  அல்லேன்  ஐயா ,  பயத்தினால்  நடுங்கிப் பாக்கள் 
வடித்திட   வந்தேன் ஏதோ வார்த்தையை  அங்கிங்   கிட்டு.

பாட்டிலே சொல்ல வேண்டும்  பாரினில்  பிடித்த வற்றைக்
காட்டுவுன் திறமை என்றே கட்டளை  தலைவர்  இட்டார்.
நாட்டிலே பலவும்  கண்டேன்; நவின்றிடத் தக்க வற்றை
ஏட்டிலே எழுதி வந்தேன்;  இயம்புவேன் நீவிர் கேட்க.

வம்புறு  பாக்கள் யாவும்  வாரியாய்  வழங்கி நம்மை
உம்பரின் உவப்பை இந்த உலகினில்  உணர  வைத்த
கம்பனைப் பிடிக்கும் என்று களிப்பினில் நித்தம் நீந்தி
அம்பலம் ஏறிச் சொல்வேன்  அவனியே கேட்கும் வண்ணம்.

எட்டைய புரத்தான் பாக்கள்  என்றுமே பிடிக்கும் என்று
பட்டையைக் கிளப்பிச் சொல்வேன்  பாரதிர்  வண்ணம் ஓங்கி.
கொட்டியே தீர்த்தான்  உள்ளக்  குமுறலை பாட்ல் மூலம். 
அட்டியே  இன்றி வாழ்வில் அவன்புகழ் கூறி நிற்பேன்.

சதுரராய் வென்று வென்றார் ; சாதனை  பலவும்   செய்து,
மதுரமாய் இசையை நல்கி மனத்தினைக் குளிரச் செய்யும்
மதுரையின்  மணியார் பாட  மனமெலாம் உவகை பூக்கும்.
அதிரவே சொல்வேன் ஐயா, அவரையும்  பிடிக்கும் என்று.

நடிகரில்  திலகம் ஆன  நாயகன்  நடிப்பின்  மீது
முடிவிலா  இச்சை கொண்டேன்;  மொழிவது  முற்றும்  மெய்யே.
கடினமாய் உழைத்தே  அன்னார்  காட்டிய நடிப்பின்  நேர்த்தி
அடிமனத்  திருந்து  நன்றாய்  ஆட்டியே  படைக்கு  தையா.

புந்தியில்  வைத்து  நாளும்  போற்றுவேன்   அன்று  கல்கி
வந்தியத்  தேவன் தன்னை  வார்த்தநல் நேர்த்தி  கண்டு.
முந்தையக்  காலச்  செம்மை முழுவதும்  அறிந்து கொள்ளத்
தந்தவர்  எழுத்து  கொண்ட  தரத்தினால் பிடிப்ப  துண்மை. 

பொன்னியின்  செல்வன் என்ற  புத்தகம் பிடிக்கும் முற்றாய்
பன்னினேன் உண்மை தன்னைப்  பசப்புதல்  சற்றும்  இன்றி.
சென்னியைக் கல்கி தாளில் சிறப்புற வைத்து நானும்
மன்னிய அன்னார் சீரை  மகிழ்வுறச் சொல்லி நிற்பேன்.

நெல்லையின் நேர்த்தி ஈது; நிகரிதற்  கென்றே ஏதும்
இல்லையென்  றுரைப்பேன் உண்மை. இதன்பெயர்  அல்வா  ஆகும்
எல்லையே இல்லா வண்ணம் எனக்கிது பிடிக்கும் என்ற
சொல்லைநான்  கூறும் போதே சொட்டுது நாவிற் றேனும்.

பிழையற   உம்பால்  சொல்வேன் பிடித்தவை தன்னில் உண்டு
மழையினில் நனைதல் அந்த  மண்தரு   வாசம் போல
இழைகிற  இன்பம் உண்டோ இப்புவி மீது வேறு ?
குழைகிற உள்ளம் கொண்டு  கூறினேன்  இச்சை தன்னை.

தோடியைப் பிடிக்கும் உற்ற  தொல்லைகள் நீண்ட தூரம்
ஓடியே போக்க வைக்கும் ஒப்பிலா ராகம் அன்றோ !
பாடியே வைத்தார் நல்ல பாடகர் பலரும் வட்டில்
நாடியே அதனைக் கேட்பேன்  நலிவுறும்  தருணம்  தோறும்.

பசியெழாப்  போதென் றாலும்  பார்த்ததும்  உண்ண வைக்கும்
உசிலியைப் பிடிக்கும்  என்னும் உண்மையை உணர்ந்து சொல்வேன்.
இசைவிதில் உமக்கும் உண்டோ என்பதில் கவலை இல்லை.
நசையதன்  மீது வைத்து, நாவினுக்  கடிமை  யானேன்.

நவநவ  மாக  யாத்து  நயமெலாம் அதனில் வார்த்துக்
கவிபல  கூறல் வாழும் கணம்தொறும் பிடிக்கும் ஐயா !
அவனியில் இதன்மேல்  வைத்த அளப்பறு பிடித்தம் அந்தச்
சிவனருள்  என்னும்   உண்மை செப்புவேன் நெறியில் நின்று.

படித்தவர்  பலரிங்  குண்டு. பண்பினில்  இமயம் ஆவார்.
துடித்தெழும் சந்தம் கூட்டித்  துலங்குநற்  பாக்கள் பெய்வார்.
நடித்திடல்  என்றும்  செய்யார். நன்மையே உன்னு கின்ற
பிடித்தநற்  குழுவும் ஈதே. பீடுடன்  அதனைச்  சொல்வேன்.

(இடைச்  செருகல்) இன்று கிரிகாசன் பா படித்த பின்னர்.  

கிரிகாசன்  பாட்டில் கிறுகிறுத்துப்  போகார்
அரிதாவார் உண்மை   அறிநீ. - வரிதொறும்
வண்ணமுடன்  அன்னார்  வடித்திட்ட  பாப்பிடிக்கும்
திண்ணமுடன் சொல்வேன்  தெரிந்து.             
 
”ஒன்றி”னைப் பற்றி மட்டும்  உரைத்திடல்  வேண்டு  மிங்கே
என்றிவர் விதியாய் ஏதும்  இயம்பிட வில்லை கண்டேன்.
மன்றினில் உள்ளார்க் கீதும்  மகிழ்வினைக் கூட்டும் மற்று
நன்றிதும்  ஆகும் என்றே  நான்”பல”   கூறி நின்றேன்.

பிடித்தவை பற்றிச் சற்றுப்  பிதற்றினேன்  சிறியேன்  இங்கு
வடித்ததை ஒப்பு வீரோ?  வரதனைச் சினந்து நீவிர்
அடித்திடல் வேண்டாம் ஐயா !  அனைவரின் தாளை  நானும்
பிடித்திதை வேண்டு கின்றேன், பிழையெனில்  பொறுத்தல்  வேண்டும்.

பட்டியல்  போட்டுச்  சொன்னேன்;  பகன்றவை எதுவும்  ஓராள்
கிட்டவும்  வாரா  தில்லக்  கிழத்தியே  அவளும்  ஆவாள். 
கட்டிய  மனையாள் தன்னைக்   கணக்கறப்  பிடிக்கும் என்று
கொட்டியே முழக்கம் செய்வேன் ,  குவலயம்  முற்றும்  கேட்க.


வரதராசன். அ கி.  

--
Thanks and Regards 

Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP:  91852063
Email:  girijavar...@gmail.com
=

Swaminathan Sankaran

unread,
Apr 18, 2014, 6:33:22 PM4/18/14
to santhav...@googlegroups.com
மிகவும் நன்று.

சங்கரன்

K.R.Kumar

unread,
Apr 18, 2014, 7:09:32 PM4/18/14
to santhav...@googlegroups.com
ராஜன்,

அட்டஹாசம் !

முத்தான முத்தாய்ப்பு !

கிரிஜா மாமிக்கு படித்துக் காட்டினீர்களா??!!

அன்புடன்,
குமார்(சிங்கை)

Sent from my iPhone

Siva Siva

unread,
Apr 18, 2014, 7:22:44 PM4/18/14
to santhavasantham
"எனக்குப் பிடித்த...ன" பாடலில் இயல் இசை நாடகத்தை நயமுறச் சொன்னீர்.

நாவன்மையால் இடையில் அல்வா, உசிலி என்று சொல்லி,
முடிவில் தலைப்பைப் பிடித்துவிட்டீர்! :)

வாழ்க.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2014-04-18 13:20 GMT-04:00 Girija Varadharajan <girijavar...@gmail.com>:
சந்த வசந்தக் கவியரங்கம்
தலைப்பு : எனக்குப் பிடித்த .........    ..........
தலைவர் : புலவர் இராம மூர்த்தி.
படைப்பவர் : வரதராசன். அ.  கி.
நாள் : ஏப்ரல் -18 - 2014
=========================================================
எனக்குப் பிடித்த ..........        ..........
 
....
பாட்டரங்கப்  பாக்கள் - எனக்குப்  பிடித்த  .......   ........

பிடித்தது  பற்றி இங்கு  பேசிட வருவாய் என்றே
அடித்தனர்  மணியை  ஓங்கி. அரங்கினில் நுழைந்தேன் யானும். 
படித்தவன்  அல்லேன்  ஐயா ,  பயத்தினால்  நடுங்கிப் பாக்கள் 
வடித்திட   வந்தேன் ஏதோ வார்த்தையை  அங்கிங்   கிட்டு.

பாட்டிலே சொல்ல வேண்டும்  பாரினில்  பிடித்த வற்றைக்
காட்டுவுன் திறமை என்றே கட்டளை  தலைவர்  இட்டார்.
நாட்டிலே பலவும்  கண்டேன்; நவின்றிடத் தக்க வற்றை
ஏட்டிலே எழுதி வந்தேன்;  இயம்புவேன் நீவிர் கேட்க.

--> காட்டுவுன்?
--> பகன்றவை? பகர்ந்தன? 

Girija Varadharajan

unread,
Apr 18, 2014, 7:55:47 PM4/18/14
to santhavasantham
அன்புள்ள சிவசிவா,

”காட்டு  உன்  திறமை “  என்பதை அவ்விதம் எழுதினேன். ”காட்டுன்”  என வந்திருக்க வேண்டுமோ? காட்டுவுன்  திறமை என்பது பிழையாகும் பட்சத்தில் ,      ” காட்டுவாய் திறமை என்று கட்டளை தலைவர் இட்டார் “ -  என்று மாற்றிக்கொள்கிறேன்.   

சொல்லியவை, கூறியவை, என்பது போலப் பகன்றவை என எழுதினேன். இப்பிரயோகம் சரியென்று நம்புகிறேன்.  சரியா தவறா ? - புலவர்கள் விடை சொல்ல வேண்டும்.

அகிவ.


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Thanks and Regards 

Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP:  91852063
It is loading more messages.
0 new messages