கண்ணதாசன் கண்ட கடவுள்

308 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 6, 2022, 11:47:57 AM7/6/22
to Santhavasantham
MM's speech on 'Kaṇṇatācaṉ kaṇṭa Kaṭavuḷ'. The video is huge: 5.5 Gb. Dallas Sounder converted to 51 Mb, just a tidbit above uploads in https://www.tunestotube.com/ . So, loaded as: https://archive.org/details/marabinmaindhan-kannadhasan-speech

கண்ணதாசன் பிறந்த தினம் இன்று -நானந்தக்
   காமதேனு பால் குடித்த கன்று;
வண்ணமயமான மனம் கொண்டு -அவனும்
    வானம் என விரிந்து நின்றான் இங்கு !
பண் அமைதி கொஞ்சும் மனம் கொண்டு -அவன்
    பாட்டருவியாய் எழுந்து வந்து
எண்ணமெலாம் கோயில் கொண்டான் நின்று -அவனை
   எண்ணாமல் ஏது தமிழ் மன்று !
 
சூழலுக்குப் பாட்டெழுதப் பிறந்தான் -அவனோ
    சூழ்ந்திருக்கும் காற்றைப்போல் கலந்தான்;
வாழ்வுக்குப் புது அர்த்தம் வரைந்தான்-கவிஞன்
   வான் சென்றும் நீலமென நிறைந்தான் ;
யாழெனவும் முரசெனவும் அதிர்ந்தான்-புவியில்
   யாவருக்கும் பொதுவாக இருந்தான்
தாழ்வினிலும் உயர்வினிலும் ஒளிர்ந்தான்-அவன்
   தமிழோடு தமிழாகக் கரைந்தான்

எத்திசையும் அவன் பாடல் ஒலிக்கும்-இனியும்
   எதிர்காலம் அவன் தமிழில் திளைக்கும்:
முத்திரைப் பொன் போல் பாடல் படைக்கும்- அவன்
   மன வீணை இசைத்தபடி இருக்கும்;
புத்தகத்தைத் திறந்து வைத்த படிக்கும்-எங்கள்
   பெருங்கவிஞன் வாழ்க்கை அது இருக்கும்;
தத்துவமும் அழகியலும் மணக்கும் - எங்கள்
    தாய்க் கவிஞன் திருவடிக்கு வணக்கம் 🙏

-மரபின் மைந்தன் முத்தையா
கண்ணதாசன் மீதொரு விவரணம்.

Enjoy!
NG

N. Ganesan

unread,
Sep 17, 2022, 7:17:19 AM9/17/22
to Santhavasantham

அனுபவமே கடவுள்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்

அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்

பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்

மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்

பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்

முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்

வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்

இறந்து பாரென இறைவன் பணித்தான்!

அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்

ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி

‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

---------------------------------------------------------------

அனுபவமும், கண்ணதாசனும்:
https://www.dinamani.com/editorial-articles/2016/jun/24/பட்டறிவுப்-பாவலன்-2530016.html


கண்ணதாசன் கண்ட கடவுள்

N. Ganesan

unread,
Oct 1, 2022, 10:12:43 AM10/1/22
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com
மானுக்கு இலக்கணம் புள்ளிக் கலைமான். விலங்கியலில் ஒரு இனத்துக்கு இலக்கணமாக விளங்குவது இருமுறை பெயரிடுவர். போஸ்ட்கம்பம் எனச் சொல்கிறோம் அல்லவா. அதுபோல.

புள்ளிமான் ‘ஆக்ஸிஸ் ஆக்ஸிஸ்’ என்ப. https://en.wikipedia.org/wiki/Chital
இந்தியாவுக்கே உரிய மான்வகை இது. கலைமான் என்று இந்தப் புள்ளிக்கலைமானைக் கம்பரும், கண்ணதாசனும் பாடினர். https://en.wikipedia.org/wiki/Chital
image.png


On Sat, Oct 1, 2022 at 9:01 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்திருளை
அரிகின்றது ஆய்கின்ற எல்லா அறிவின் அரும்பொருளைத்
தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம் தெளிந்து முற்ற
விரிகின்றது எண்ணெண் கலைமான் உணர்த்திய வேதமுமே

புள்ளிக்கலை என்று சங்க இலக்கியம் கூறும்:

சரசுவதியை 64 கலைகள் புள்ளிகளாகக் கொண்ட கலைமான் என்கிறார் கம்பர். சரசுவதி அந்தாதி.
கண்ணே, கலைமானே என்றார் கண்ணதாசனும். https://youtu.be/EfYeT2FsSGo

மானின் பெயர்கள், காரணங்கள் பற்றி இங்கே சொல்லியுள்ளேன்:
http://nganesan.blogspot.com/2021/06/navvi-chinkara-antelope.html

நா. கணேசன்



On Sat, Oct 1, 2022 at 7:47 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Sat, Oct 1, 2022 at 7:39 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///கண்ணே பிணைமானே!/// வேந்தர் ஐயா எழுதியது...

சங்க இலக்கிய வழி பார்த்தாலும், கண்ணே, கலைமானே என்பதில் பிழையில்லை.

விரிவு பின்னர்.

தோகை, குயில் பால்மயங்கு வழுவமைதியைப் பல நூற். காட்டுகளைக் கொண்டு தொகுக்கலாம்.

 

கண்ணதாசன் எழுதிய கடைசிப்பாடல் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். சூப்பர் ஹிட். 

அது கலைமானாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே! 

மாற்றும் தகுதி எனக்கெல்லாம் இருப்பதாக நான் எண்ணியதில்லை. அந்த அளவிற்கு பாட்டையும் காட்சியையும் நான் ரசித்து இருக்கிறேன். 

சக 

Reply all
Reply to author
Forward
0 new messages