(Photo courtesy of X: Sri Keshav @keshav61)
X தளத்தில் இன்று பார்த்த இந்த அருமையான கிருஷ்ண லீலைப் படத்தைத் தழுவி எழுத முயன்ற கவிதை:
உறிக்குத் தாவிய ஒளிர்கழல்
கயல்நேர் கண்ணார் தாம்திகைக்கக்
… களிசேர் தோழர் ஆர்ப்பரிக்க
மயல்சேர் ஆக்கள் பார்த்துவக்க
… மகிழ்சேர் வானோர் வாழ்த்திசைக்கத்
தயிரும் பாலும் சேருறியில்
… தழையும் வெண்ணெய் தான்விரும்பி
உயரே பாய ஓங்கிடுமே
… உலகம் தாவும் பூங்கழலே.
(கயல்நேர் கண்ணார் = ஆய்ச்சியர்; களிசேர் தோழர் = கண்ணனின் நண்பர்கள்; மயல்சேர் ஆக்கள் = கண்ணனுடைய அன்பில்/மோகனத்தில் மயங்கிய பசுக்கள்)
- இமயவரம்பன்