ஜெகம் புகழ்ந்திடும் திருவள்ளூர்

1 view
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jan 21, 2026, 11:44:20 AM (8 days ago) Jan 21
to santhavasantham
ஜெகம் புகழ்ந்திடும் திருவள்ளூர்

(இப்பாடலை எனது உறவினர் ஒருவர் அன்புடன் பாடித் தந்திருக்கிறார். அவரது இனிமையான குரலில் கேட்க : https://www.imayavaramban.com/wp-content/uploads/2026/01/tiruvallur-song.mp3)

(குறிப்பு: மனத்தில் தோன்றியவுடன் எழுதித் தந்ததால் சில இலக்கண விதிகளைப் பின்பற்றவில்லை)

(தனன தானன
தனன தானன
தனன தானதனா - தன
தனன தானன
தனன தானன
தனன தானதனா)

 (பல்லவி)
ஜெகம் புகழ்ந்திடும்
திருவள்ளூர் அதைத் 
தினமும் பாடிடுவோம் - அங்குத்
திகழும் நாகணைத் துயிலும் ராகவன்
அருளை நாடிடுவோம் 

(சரணம்)
கொடிய நோயையும்
கரைய வைத்திடும்
கருட வாகனனாம் - மனக்
குறைகள் தீர்த்தருள் 
புரியும் வைத்திய
வீர ராகவனாம் (ஜெகம் புகழ்ந்திடும்) 1.

உடைந்த நெஞ்சையும்
உயர வைத்திடும்
உறுதி நாட்டிடுவான் - நம்முள்
உறையும் வல்லிருள்
மறைய வைத்திடும்
ஒளியும் காட்டிடுவான் (ஜெகம் புகழ்ந்திடும்) 2.

எழில் விளங்கிடும்
விழி இரண்டினில்
அருள் பொழிந்திடுவான் - மலர்த்
திரு வசித்திடும்
உளம் மகிழ்ந்து பொன்
வளம் வழங்கிடுவான் (ஜெகம் புகழ்ந்திடும்) 3.

ஒலி முழங்கிட
ஒளிரும் சங்குடன்
சுழலும் சக்கரத்தான் - எங்கும்
துயர் ஒழிந்திட
நலம் மிகுந்திடத்
திகழும் பொற்பதத்தான். (ஜெகம் புகழ்ந்திடும்) 4.

- இமயவரம்பன் 

Ram Ramakrishnan

unread,
Jan 21, 2026, 11:47:25 AM (8 days ago) Jan 21
to santhav...@googlegroups.com
மிக அருமையாக இசையமைத்துப் பாடியிருக்கிரார்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 21, 2026, at 11:44, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

ஜெகம் புகழ்ந்திடும் திருவள்ளூர்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/F99E6C9B-458F-4A4B-8F55-E969082718AA%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Jan 21, 2026, 11:52:59 AM (8 days ago) Jan 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
நன்றி நண்பரே!

ஆம், பாட்டின் தாள நடையை அப்படியே பின்பற்றி மிக அழகாகப் பாடியிருக்கிறார்.
Reply all
Reply to author
Forward
0 new messages