இலந்தையார் தந்த ஈற்றடிகள் சிலவற்றுக்கு
அடியேன் புனைந்த வெண்பாக்கள்.
பண்ணளந்த மன்னன் பரந்தாமன் மூவடியால்
மண்ணளந்த விண்ணளந்த மாயோன்உன் -எண்ணத்துள்
தண்ணமு தாகவே தானமர்ந் துள்ளானே
கண்ணைமூ டிக்கொண்டு காண். 1
யார்க்கும் தெரியாமல் அம்கள்ளை மாந்தியே
வேர்கள் அரித்திட்ட வேம்புபோல் - சோர்வதை
ஊர்க்குறு மாக்கள் உவகை பெருகிட
பார்ப்பாரே பார்ப்பாரே பார். 2
ஞாலமும் கைகூடும் நாம்செய் தவத்தாலே
காலம் கனியும் கடுந்தவத்தால் - சாலவும்
ஞானம் வரும்போது நாம்சென் றழைத்திட
வானம் இறங்கி வரும். 3
எடுக்கும் கபாலி எதையேனும் கொஞ்சம்
கொடுப்பதைக் காவலர் கொள்வார் - விடுவார்
திருடன் அதனால் திருந்தவே இல்லை
நெருப்பை அணைக்காத நீர். 4
இரும்பல மாரி இதற்குள் ஒளிந்த
ஒருசிறு பேழை ஒருகை நுழைந்ததும்
அந்தோ! அதற்கும் அடுத்தோர் குறும்பேழை!
பொந்துக்குள் இன்னுமோர் பொந்து. 5
தொட்டால் சுடுமாம் சுடரார் நெருப்பென்பர்
விட்டு வெளியூர் விரைந்தால் சுடுகிறதே
பாசமாய் வந்த பணிமொழியாள் என்னவள்
நேசமாய் வந்த நெருப்பு. 6
மழலை மொழிகள் விழட்டும் செவியில்
விழுநீர் அருவி விரைந்து தரையிலே
மோதும் ஒலிவந்து மோதும் செவியிலே
காதுக்கு வேண்டாம் கதவு. 7
அளவிலாச் செல்வம் அவருக் கிருக்கும்
வளங்கள் அகன்ற வறியோர் எவரையும்
எண்ணார்; சிறிதும் இரக்கமே இல்லாத
கண்ணெல்லாம் ஆகுமோ கண். 8
அவமானம்
ஆகா! அதைநான் மறந்தேன்!
அவளை நினைந்தேன் அடடா! மறுத்தாள்!
மறந்தேன் அழகுடன் மற்றொருத்தி வாய்த்தாள்!
மறதியும் கூட வரம். 9
வேளை இதுவே விழைகநீர்ச் சேமிப்பு
நாளை உலகினில் நல்லமுதாம் நீருக்குப்
பஞ்சமும் வந்திடும் பாராய் மனத்திலே
கொஞ்சமே னும்மிதைக் கொள். 10
அந்நாளில் ஓர்நாள் அகத்தில் சினம்முற்றி
எந்நாளும் ஆறா இழிசொல்லை வீசினோம்
பேயென்றேன் உன்னை; பெரும்பாய்ச்சல் நாய்தானே
நீயென்றேன் நீயென்றாய் நீ. 11
-கருவூர் இனியன்.
இலந்தையார் தந்த ஈற்றடிகள் சிலவற்றுக்கு
அடியேன் புனைந்த வெண்பாக்கள்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/71c2c6b7-d98d-4802-ac1f-2e7ba49ca386n%40googlegroups.com.
--
இலந்தையார் தந்த ஈற்றடிகள் சிலவற்றுக்கு
அடியேன் புனைந்த வெண்பாக்கள்.
பண்ணளந்த மன்னன் பரந்தாமன் மூவடியால்
மண்ணளந்த விண்ணளந்த மாயோன்உன் -எண்ணத்துள்
தண்ணமு தாகவே தானமர்ந் துள்ளானே
கண்ணைமூ டிக்கொண்டு காண். 1
யார்க்கும் தெரியாமல் அம்கள்ளை மாந்தியே
வேர்கள் அரித்திட்ட வேம்புபோல் - சோர்வதை
ஊர்க்குறு மாக்கள் உவகை பெருகிட
பார்ப்பாரே பார்ப்பாரே பார். 2
ஞாலமும் கைகூடும் நாம்செய் தவத்தாலே
காலம் கனியும் கடுந்தவத்தால் - சாலவும்
ஞானம் வரும்போது நாம்சென் றழைத்திட
வானம் இறங்கி வரும். 3
எடுக்கும் கபாலி எதையேனும் கொஞ்சம்
கொடுப்பதைக் காவலர் கொள்வார் - விடுவார்
திருடன் அதனால் திருந்தவே இல்லை
நெருப்பை அணைக்காத நீர். 4
இரும்பல மாரி இதற்குள் ஒளிந்த
ஒருசிறு பேழை ஒருகை நுழைந்ததும்
அந்தோ! அதற்கும் அடுத்தோர் குறும்பேழை!
பொந்துக்குள் இன்னுமோர் பொந்து. 5
தொட்டால் சுடுமாம் சுடரார் நெருப்பென்பர்
விட்டு வெளியூர் விரைந்தால் சுடுகிறதே
பாசமாய் வந்த பணிமொழியாள் என்னவள்
நேசமாய் வந்த நெருப்பு. 6
மழலை மொழிகள் விழட்டும் செவியில்
விழுநீர் அருவி விரைந்து தரையிலே
மோதும் ஒலிவந்து மோதும் செவியிலே
காதுக்கு வேண்டாம் கதவு. 7
அளவிலாச் செல்வம் அவருக் கிருக்கும்
வளங்கள் அகன்ற வறியோர் எவரையும்
எண்ணார்; சிறிதும் இரக்கமே இல்லாத
கண்ணெல்லாம் ஆகுமோ கண். 8
அவமானம் ஆகா! அதைநான் மறந்தேன்!அவளை நினைந்தேன் அடடா! மறுத்தாள்!
மறந்தேன் அழகுடன் மற்றொருத்தி வாய்த்தாள்!
மறதியும் கூட வரம். 9
வேளை இதுவே விழைகநீர்ச் சேமிப்பு
நாளை உலகினில் நல்லமுதாம் நீருக்குப்
பஞ்சமும் வந்திடும் பாராய் மனத்திலே
கொஞ்சமே னும்மிதைக் கொள். 10
அந்நாளில் ஓர்நாள் அகத்தில் சினம்முற்றி
எந்நாளும் ஆறா இழிசொல்லை வீசினோம்
பேயென்றேன் உன்னை; பெரும்பாய்ச்சல் நாய்தானே
நீயென்றேன் நீயென்றாய் நீ. 11
வீட்டுச் சண்டையை வெளிக் கொணர்ந்த இந்தக் கைவிடை எனக்குப் பிடித்தது
எந்நாளும் ஆறா இழிசொல்லை வீசினோம்
பேயென்றேன் உன்னை; பெரும்பாய்ச்சல் நாய்தானே
நீயென்றேன் நீயென்றாய் நீ. //
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOa5M%2Bj3TmPaR2Gtzpdo4Ket%2BrL-EAU%2BOf-S_wFm1ksZA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/71c2c6b7-d98d-4802-ac1f-2e7ba49ca386n%40googlegroups.com.
என் வெண்பாக்களைப் படித்துப் பின்னூட்டம் அளித்த இலந்தையார், சிவசிவா, இராம் இராமகிருஷ்ணன், சாய் கணேஷ், அரசி பழனியப்பன், காஞ்சிபுரம் தங்கவேல் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
வழக்கம்போல் சிவசிவா அவர்கள் சில வினாக்களைத் தொடுத்துள்ளார். அவற்றையும் எனது மறுமொழியினையும் காண்க.
யார்க்கும் தெரியாமல் அம்கள்ளை மாந்தியே
வேர்கள் அரித்திட்ட வேம்புபோல் - சோர்வதை
ஊர்க்குறு மாக்கள் உவகை பெருகிட
பார்ப்பாரே பார்ப்பாரே பார்.
==> இப்பாடலில் கூறவரும் கருத்து என்ன?
‘மது அருந்துவதை நிறுத்துக. மதுவருந்தி நீ பொதுவெளியில் விழுந்து கிடப்பதைச் சிறுவர்கள் பார்ப்பார்; நகைப்பார்; அதை நீ பார்’ என்பதே இப் பாடலின் கருத்து.
ஞாலமும் கைகூடும் நாம்செய் தவத்தாலே
காலம் கனியும் கடுந்தவத்தால் - சாலவும்
ஞானம் வரும்போது நாம்சென்
றழைத்திட
வானம் இறங்கி வரும்.
3
==> நாம் சென்று அழைத்திட ==> எங்குச் சென்று?
துரியாதீத நிலைக்குச் சென்று வானுறையும் தெய்வத்தை அழைத்திட எனப் பொருள் கொண்டேன்.
எடுக்கும் கபாலி எதையேனும் கொஞ்சம்
கொடுப்பதைக் காவலர் கொள்வார் - விடுவார்
திருடன் அதனால் திருந்தவே இல்லை
நெருப்பை அணைக்காத நீர். 4
==> கபாலி என்று பெயரிட்ட காரணம் என்ன?
எடுக்கின்ற கள்வன் ?
திரைப்படங்களில் திருடன் கபாலி எனும் பெயரில் வந்ததைப் பார்த்ததன் தாக்கமே இந்த கபாலி. எனினும் எடுக்கின்ற கள்வன் என்னும் தொடர் மிகப்பொருத்தம். மூலப் பாவில் மாற்றிக் கொண்டேன்.
இரும்பல மாரி இதற்குள் ஒளிந்த
ஒருசிறு பேழை ஒருகை நுழைந்ததும்
அந்தோ! அதற்கும் அடுத்தோர் குறும்பேழை!
பொந்துக்குள் இன்னுமோர் பொந்து. 5
==> / அந்தோ / - இங்கே இச்சொல் என்ன உணர்ச்சியைக் குறிக்கின்றது?
எதுகைக்காக இடப்பட்டதே யன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே!
-கருவூர் இனியன்.
என் வெண்பாக்களைப் படித்துப் பின்னூட்டம் அளித்த இலந்தையார், சிவசிவா, இராம் இராமகிருஷ்ணன், சாய் கணேஷ், அரசி பழனியப்பன், காஞ்சிபுரம் தங்கவேல் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
வழக்கம்போல் சிவசிவா அவர்கள் சில வினாக்களைத் தொடுத்துள்ளார். அவற்றையும் எனது மறுமொழியினையும் காண்க.
யார்க்கும் தெரியாமல் அம்கள்ளை மாந்தியே
வேர்கள் அரித்திட்ட வேம்புபோல் - சோர்வதை
ஊர்க்குறு மாக்கள் உவகை பெருகிட
பார்ப்பாரே பார்ப்பாரே பார்.
==> இப்பாடலில் கூறவரும் கருத்து என்ன?
‘மது அருந்துவதை நிறுத்துக. மதுவருந்தி நீ பொதுவெளியில் விழுந்து கிடப்பதைச் சிறுவர்கள் பார்ப்பார்; நகைப்பார்; அதை நீ பார்’ என்பதே இப் பாடலின் கருத்து.
ஞாலமும் கைகூடும் நாம்செய் தவத்தாலே
காலம் கனியும் கடுந்தவத்தால் - சாலவும்
ஞானம் வரும்போது நாம்சென் றழைத்திட
வானம் இறங்கி வரும். 3
==> நாம் சென்று அழைத்திட ==> எங்குச் சென்று?
துரியாதீத நிலைக்குச் சென்று வானுறையும் தெய்வத்தை அழைத்திட எனப் பொருள் கொண்டேன்.
எடுக்கும் கபாலி எதையேனும் கொஞ்சம்
கொடுப்பதைக் காவலர் கொள்வார் - விடுவார்
திருடன் அதனால் திருந்தவே இல்லை
நெருப்பை அணைக்காத நீர். 4
==> கபாலி என்று பெயரிட்ட காரணம் என்ன?
எடுக்கின்ற கள்வன் ?
திரைப்படங்களில் திருடன் கபாலி எனும் பெயரில் வந்ததைப் பார்த்ததன் தாக்கமே இந்த கபாலி. எனினும் எடுக்கின்ற கள்வன் என்னும் தொடர் மிகப்பொருத்தம். மூலப் பாவில் மாற்றிக் கொண்டேன்.
இரும்பல மாரி இதற்குள் ஒளிந்த
ஒருசிறு பேழை ஒருகை நுழைந்ததும்
அந்தோ! அதற்கும் அடுத்தோர் குறும்பேழை!
பொந்துக்குள் இன்னுமோர் பொந்து. 5
==> / அந்தோ / - இங்கே இச்சொல் என்ன உணர்ச்சியைக் குறிக்கின்றது?
எதுகைக்காக இடப்பட்டதே யன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே!
Very happy to see your further queries.
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின் – புறம் 94. மாக்கள் என்னும் சொல் சிறுவர்கள் என்ற பொருளில் வந்துள்ளதால் நானும் ‘மாக்கள்’ என்று அமைத்தேன்.
உவகை – உங்கள் கருத்து சரியே.
ஊர்க்குறு மாக்கள் உனையவர் சுற்றியே என மாற்றினேன்.
நீங்கள் பரிந்துரைத்த ‘வந்த ததனுள்ளே மற்றோர் குறும்பேழை’ எனும் அடியை அவ் வெண்பாவில் அமைத்தேன்.
இரும்பல மாரி இதற்குள் ஒளிந்த
ஒருசிறு பேழை ஒருகை நுழைந்ததும்
வந்த ததனுள்ளே மற்றோர் குறும்பேழை!
பொந்துக்குள் இன்னுமோர் பொந்து.
என் கவிதையை மெருகேற்றுவதில் நீங்கள் செய்யும் உதவியை என்றும் மறவேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMX92xq2Xrjp32V_ETfU-d5XTSp651Jt0vh7i-4m4aAVg%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gu1vxdYO9nrn4cfuQWWoZvMAcL3wfZnE_9fUrdwGHBARQ%40mail.gmail.com.
On 1 Jul 2026, at 6:04 PM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCLaiEgxRAtXBCo%3DzcRxXdeyLzMBNpwfiog5ns6_NUw4A%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/A1F286CF-5CCC-4FEA-825A-FCD6B5BD6D37%40gmail.com.
ரொம்ப அற்புதமாக இருக்கிறது, இனியன் சார்சுதா வேதம்
----rgds,Dr. A. GOVINDARAJU,Retired Principal - National Awardee,
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gu1vxdYO9nrn4cfuQWWoZvMAcL3wfZnE_9fUrdwGHBARQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCLaiEgxRAtXBCo%3DzcRxXdeyLzMBNpwfiog5ns6_NUw4A%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/A1F286CF-5CCC-4FEA-825A-FCD6B5BD6D37%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CANcs5oYou4AdC77kFAq9%3D6rXKL_zjWrrOaC9wEhFpyjkZ6mObQ%40mail.gmail.com.